குழப்பங்களும் குதர்க்கங்களும்.

இழந்த உரிமைகளை மீண்டும் பெறுவதற்கும், இருக்கும் உரிமைகளைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும், சந்தியில் நிற்கும் நம் சந்ததிகளின், வருங்கால வாழ்வுரிமைகளை அடைவதற்காகவும், அனைத்துத் தரப்பு முஸ்லிம்களால், அனைத்துத் தரப்பு மக்கட்காகவும் சமுதாயத்தேவைகளைக் தங்கு தடையின்றி ஆற்றுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட நம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், தன்னலம் மறந்து சமுதாயச் சேவையை மட்டுமே இலக்காக கொண்டு செயல்படும், தலை சிறந்த நிர்வாகிகளின் சீரிய அர்பணிப்புகளால் இன்று இமயம் போல் எழுந்து நிற்கின்றது.

தமுமுக சமுதாயச் சேவைகளையும் மறுமை வெற்றிக்குத் தேவையான தவ்ஹிதுப் பணிகளையும் ஒருங்கே செய்து தனிமுத்திரை பதித்து வருவதை, இந்திய அரசே உற்று நோக்குகிறது. இந்திய முஸ்லிம்களுக்கே ஒரு ஒப்பற்ற உதாரணமாகச் செயல்பட்டு வரும் தமுமுகவில் 9 ஆண்டுகளாகத் தன் பேச்சாற்றலால், பலதரப்பட்ட மக்களையும் பெரிதும் கவர்ந்த தமுமுகவின் மூத்த தலைவர் சகோ. பி. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் தானாகவே தமுமுக-விலிருந்து விலகியது தவ்ஹிது பிரச்சாரத்தை முன்பை விட இன்னும் வீரியமாகச் செயல்படுத்த நல்ல வாய்ப்பாகவே அமையும் என்று தான் அனைத்து முஸ்லிம்களும் எதிர்பார்த்தனர்.

ஆனால் சகோ. பி.ஜெ. தமுமுக-வை விட்டுத் தானாகவே விலிகிய பின்னர் தன்னைத் தமுமுகவில் இருந்து விலக்கிவிட்டதாகப் பாமர மக்களிடம் பொய்ப்பிரச்சாரம் செய்வது ஏன்? பல சந்தர்ப்பங்களில் தன்னைத் தமுமுக விலக்கிவிட்டதாகவும், இன்னும் பல சந்தர்ப்பங்களில் தான் ஏன் தமுமுகவிலிருந்து விலகினேன் என்பதற்கான காரணங்களையும் ஒன்றன் வின் ஒன்றாக, ஊர் ஊராக, தெருத் தெருவாக தமுமுகவைப் பற்றி அவதூறு பேசுகிறாரே ஏன்?

இதிலிருந்து சகோ. பி.ஜெ. விலகியது ஒரு நாடகமே என்பது நன்றாகவே புரிகிறது. ஏன் இந்த நாடகம்? தமுமுகவை அழித்தே தீருவேன் என்றும் தமுமுகவைப் பாடையில் ஏற்றுவேன் என்றும், தமுமுகவை அழிப்பதில் RSS விட மோசமாகச் செயல்படக் காரணம் தான் என்ன? தமுமுகவை அழிக்க பி.ஜெ. போன்ற தனி நபர்களால் இயலுமா? கட்டாயம் இயலாது. இறைவன் நாடினாலேத் தவிர! தமுமுக இன்னும் விரியமாக வளருமே ஒழிய அழியாது. நிச்சயமாக தமுமுகவை எந்தத் தனிநபராலும் அழிக்க இயலாது இன்ஷhஅல்லாஹ்.

தமுமுக சமுதாயத்துக்குச் சேவை செய்யும் பேரியக்கம் என்பதும் இந்தக் காலக்கட்டத்தில் அதன் சேவை நமக்கு தேவை என்பதும், நாம் உயிர் வாழ்வதே கேள்விக் குறியாகியிருக்கும் இக்காலக்கட்டதில், தமுமக என்ற பேரியக்கம் அவசியத்திலும் அவசியம், என்பதும், எல்லோரும் உணரும் இவ்வேளையில் பி.ஜெ. மட்டும் அதனை அழித்தே தீருவேன் எனக் கங்கனம் கட்டிக் கொண்டு செயல்படக் காரணம் என்ன? அவருக்கு இந்த நிர்பந்தம் எங்கிருந்து வந்தது?

கடந்த 25-4-2004ம் தேதி தினகரன் என்ற நாளிதழில் வெளிவந்த அவர் பற்றிய குற்றச்சாட்டுக்கு சகோ. பி.ஜெ. அவர்கள் இதுவரை எவ்வித பதிலும் கூறவில்லை, செய்தியை மறுக்கவும் இல்லை. இதிலிருந்து நிர்பந்தம் எங்கிருந்து வந்தது, என்பது நன்றாகவே புரிகிறது. சகோ. பி.ஜெ. அவர்களுக்கும் AIADMK-க்கும் உள்ள உறவு தான் என்ன? அவர் வெளியிடும் உணர்வு என்ற வார இதழில் தற்சமயம் AIADMKயை பகீரங்கமாக ஆதரிக்க காரணம் தான் என்ன? இவற்றையேல்லாம் ஆராயாமல் சில சகோதரர்கள் பி.ஜெ. பின்னால் சென்று கொண்டுள்ளனர். இந்த அப்பாவிச் சகோதர்கள் மீண்டும் கட்டாயம் தமுமுகவில் இணைவார்கள் இன்ஷhஅல்லாஹ்..

சகோ. பி.ஜெ. அவர்களின் திட்டம் பொய்த்துவிட்டதால் அவர்களின் கோபம் எல்லை மீறி, அவர் தன் தகுதியை மறந்து பேசி வருகிறார். சகோ. பி.ஜெ. அவர்கள் தமுமுகவிலிருந்து விலகிய உடன், அனைத்து தமுமுக அபிமானிகள் தமுமுகவிலிருந்து விலகி தன் பின்னால் வந்து விடுவார்கள், பெரும்பாண்மையான சகோதரர்கள் தன் பின்னால் வந்து விட்டால் அவருக்கு பிடிக்காத பேரா. ஜவாஹிருல்லாஹ் அவர்களையும், சகோ. ஹைதர்அலி அவர்களையும் தமுமுகவிலிருந்து நீக்கிவிட்டு, தன் பேச்சை மட்டுமே கேட்டுச் செயல்படும் நபர்களை தமுமுக நிர்வாகிகளாக நியமித்துத் தான் விரும்பிய வண்ணம் தமுமுகவை ஆட்டுவிக்கலாம் என்ற எண்ணத்தில் உருவான சகோ. பி.ஜெ. அவர்களின் திட்டம் பழிக்கவில்லை ( ரானஸல் சகோ. பி.ஜெ. அவர்களுக்கு, பதவி, அதிகாரம் போன்றவை சுத்தமாகப் பிடிக்காதே)! அவர் இந்த ஒரு விசயத்தில் தப்புக் கணக்கு போட்டு விட்டார். சகோ. பி.ஜெ. அவர்கள் கடப்பாறையை விழுங்கி விட்டு, அதை ஜீரணிக்க சுக்குக் கசாயம் சாப்பிட்டு வருகிறார். அந்த கோபத்தில் வெளிப்பாடு தான், தன் நாவண்மையால் 'தவ்ஹிது' என்ற ஒற்றைச் சொல்லைப் பயன்படுத்தியே பாமர மக்களை குழப்பி வருகிறார். குழம்பிய குட்டையில் மீன் பிடித்தவரை லாபம் எனக் கருதி தங்கள் சுயநலத்திற்காக, விபரம் அறிந்தவர்களும் அவர் பின்னே செல்கின்றனர். நாளையச் சமுதாயம் தங்களைப் பற்றி என்ன பேசும் என்ற சிந்தனையற்று. தமுமுகவைப் பற்றியும், அதன் தலைவர் பற்றியும் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை வீசும் பி.ஜெ. அவர்கள் கடந்த 10 ஆண்டுகளாகத் தமுமுக-வில் பலதரப்பட்ட மக்களோடு (பல பட்டரைகளோடு) இருக்கும் போது ஏன் இதுபற்றி கூறவில்லை? சகோ. பி.ஜெ.வுக்கும், பேரா. ஜவாஹிருல்லாஹ் அவர்களுக்கும் கருத்து வேறுபாடு இருப்பின் அல்லது குற்றச்சாட்டு ஜவாஹிருல்லாஹ் மீது இருப்பின். நிர்வாகக் குழுவையோ, பொதுக்குழுவையோ பி.ஜெ. அவர்கள் கூட்டி விவாதித்து தக்க பரிகாரம் தேடி இருக்க வேண்டும். சமுதாய அக்கறை இருக்கும் பட்சத்தில், இது கூடத் அவருக்குத் தெரியாதா? அதைச் செய்யாமல், தானாக ராஜினாமா எழுதிக் கொடுத்து விட்டு, வெளியில் வந்து வேறு ஒரு அமைப்பின் பொருப்பில் இருந்து கொண்டு தமுமுகவை குற்றம் சுமத்துவது சரியல்ல. பேரா. ஜவாஹிருல்லாஹ் அவர்கள் கடந்த சில வருடங்களாக உணர்வு, ஒற்றுமை இரண்டுக்கும் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். அவர் கல்லூhயிpல் கல்விப்பணியையும் செய்து கொண்டு உணர்வு ஒற்றுமை இரண்டுக்கும் தேவையான ஆக்கங்களையும் தயாரிக்க எவ்வளவு கஸ்ட்ப்பட்டிருப்பார் என்பது அனைவருக்கும் தெரியும். ஒருவரிடமிருந்து இருக்கும் பொருப்பை அதன் முதலாளியே திரும்பப் பெறுவதாக இருந்தாலும் கூட, அதில் ஒரு நாகரீகம் இருக்கும், மனிதாபிமானம் இருக்கும். பெரிய மார்க்க மேதையான பி.ஜெ. அவர்களுக்கு இது கூடத் தெரியாதா?

பேரா. ஜவாஹிருல்லாஹ் அவர்களிடம் இருந்த பொருப்பை தன்னிச்சையாக எடுத்துக் கொண்டதை விட, கேவலமான விவாதம் வேறு வைக்கிறார் பி.ஜெ. ஜவாஹிருல்லாஹ் இரண்டு இதழ்களுக்கும், கடந்த ஆண்டுகளில் ஆசிரியராக, பொருப்பில் இருந்தார் என்பதற்கு ஆதாரம் காட்ட இயலுமா? எனக் கேட்கிறார், சகோ. பி.ஜெ. அவர்கள், தவ்ஹீது பிரச்சாரம் செய்வதை விட பட்டிமன்றம் நடத்தினால் நல்ல வருமானமாவது கிடைக்கும். சரி போகட்டும். பேரா. ஜவாஹிருல்லாஹ் தான் ஆசிரியராக இரண்டு இதழ்களுக்கும் பணியாற்றவில்லையே பின்பு எதன் அடிப்படையில் அவருக்கு நோட்டிஸ் அனுப்பீனீர்கள்? முரண்பாடுகளின் மொத்த உருவமே பி.ஜெ.தானே என்று நன்றாக புரிகிறது. இது போன்ற பொய் பித்தலாட்டங்களை பேசுவது தான் தவ்ஹிது கொள்கையா?

உணர்வு வார இதழ்:-

நாம் அனைவரும் அறிந்த வரையில் தமுமுக ஆரம்பிக்கப்பட்ட பின்னர், தமுமுக-வுக்கென ஒரு வார இதழ் வேண்டும் என்று அனைவரும் யோசித்தனர். ரானனில் அனைத்து இதழ்களும் நம் சமுதாயச் செய்திகளை இருட்டடிப்பு செய்து வருவதால் தமுமுகவுக்கென ஒரு இதழ் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற ஏகோபித்த தீர்மானத்தின்படி உணர்வு இதழ், அதனை தொடர்ந்து ஒற்றுமை இதழும், தமுமுக்வுக்கென ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம் மிடியா டிரஸ்ட் மூலமாக வெளிவந்தன. ஆனால் பி.ஜெ. அவர்கள் தமுமுகவை விட்டு விலகிய பின்னர் தான், உணர்வு வார இதழ் தமுமுகவுக்கு ஆரம்பிக்க படவில்லை எனக்கூறிவருகிறார்.

பின்பு யாருக்காக உணர்வு வார இதழ் ஆரம்பிக்கப்பட்டது? தமுமுகவுக்கு என உணர்வு வார இதழ் ஆரம்பிக்கபடவில்லை எனில் பி.ஜெ. என்ற தனிமனிதனுக்காக ஆரம்பிக்கப்பட்டதா? ரானனில் நாம் அறிந்த வரையில் ஜாக் மூலமாகத் தான் தவ்ஹிதுப் பணிகளைச் செய்து வந்தோம். பின்னர் ஜாக்லிருந்து பிரிந்து தமுமுக ஆரம்பிக்கப்பட்டு, தவ்ஹிது பணிகளையும், சமுதாயப்பணிகளையும் ஒருங்கே செய்து வந்தோம். தமுமுகவுக்கேன முஸ்லிம் மீடியா டிரஸ்ட் என்ற பிரிவை தொடங்கி அதன் மூலம் உணர்வு வார இதழும், அதனைத் தொடர்ந்து ஒற்றுமை (FORT NIGHTLY) யும் ஆரம்பிக்கப்பட்டன. ஆக இரண்டு இதழ்களும் தமுமுகவுக்கென ஆரம்பிக்கப்பட்டன. பின்னர் தமுமுக-வில் இருந்து விலகி தவ்ஹிது பணிகளை மட்டும் செய்வதற்காக 'அனைத்து தவ்ஹிது கூட்டமைப்பு' என்ற அமைப்பை உண்டாக்கி அதன் தலைவராக சகோ. ஹாமித் பக்கிரியும், அவருக்கு பின் சகோ. சைபுல்லா ஹாஜா அவர்களும் செயல்பட்டு வருகின்றார். ஆக உணர்வு, ஒற்றுமை இரண்டு இதழ்களுக்கும், அனைத்துத் தவ்ஹிது கூட்டமைப்புக்கும் துளி கூட சம்பந்தம் இல்லை என்பது எலலோருக்கும் நன்றாகத் தெரியும்.

சகோ. பி.ஜெ. அவர்கள், தான் எப்போதும் 'அனைத்துத் தவ்ஹிது கூட்டமைப்பில் மட்டுமே நிர்வாகி, என்று நினைத்துக் கொண்டு செயல்பட்டதால் ஏற்பட்ட குளறுபடிகள்தான், இத்தனைக்கும் காரணம் என அனைவராலும் உணர முடிகிறது. அதாவது தமுமுக அனதை;துத் தரப்பு முஸ்லிம்களின் சங்கமம். ஆனால் அனைத்துத் தவ்ஹிது கூட்டமைப்போ அப்படி அல்ல! தவ்ஹிது வாதிகள் மட்டுமே அதில் அங்கத்தினர். தவ்ஹிது கூட்டமைப்பில் வலியுறுத்த வேண்டிய கொள்கைகளைத் தமுமுகவில் வலியுறுத்தியது தான் இவ்வளவுக்கும் காரணம். இதன் விளைவுதான் (PEACE) கண்காட்சி. இது சம்பந்தமாக வந்த பிரச்சனைகளும்.

அதாவது அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும், இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிட்டதாகவும், தான் சார்ந்த அமைப்பு மட்டுமே இஸ்லாமிய அமைப்பு என்றும் பேசி வருகிறார்.

(1) I.F.T. (ஜமாத்தே இஸ்லாமி)-யின் ஸ்தாபகர் அபுல்கலாம் ஆசாத் மௌதூதி அவர்கள் மத்ஹப்புகளை ஆதரிப்பவர், என்றும், குர்ஆன் ஹதிஸ் ஆகியவற்றுடன் இமாம்களையும் ஆதரிக்கும் அடிப்படைவாதிகள் எனவே அவர்கள் தவ்ஹிதுவாதிகள் அல்லர் என்றும்.

(2) I.R.G.C. குர்ஆன் ஹதிஸ் போன்றவற்றுடன் ஸலப்ப ஸாலிஹீன்னையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதாவது குர்ஆன், ஹதிஸ் போன்ற்றவற்றில் மாற்றம் இருப்பின் ஸல்ப ஸாலிஹீன்களையும் ஏற்றக் கொள்ள வேண்டும். அவர்கள் 'முத்தலாக்' ஐ பகீரங்கமாக ஆதரிப்பவர்கள் என்றும்.

(3) DR. ZAKIR NAIK:- கூற்றுப் படி இஸ்லாத்தின் அடிப்படை நான்கு. அவை குர்ஆன் ஹதிஸின் ஏகோபித்த முடிவையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். பலதரப்பட்ட அமைப்புகள் கலந்து கொண்டதால் தான் PEACE கண்காட்சியில் கலந்து கொள்ள மறுத்து விட்டதாகக் கூறுகிறார். அனைத்து தவ்ஹீது கூட்டமைப்பின் நிர்வாகி என்ற முறையில் சகோ. பி.ஜெ. அவர்கள் PEACE கண்காட்சியில் பேச மறுக்க அவருக்கு உரிமை உண்டு. ஆனால் பலதரப்பட்ட இஸ்லாமியர்களின் சங்கமமாக தமுமுக-வின் VOLENTERS களை PEACE கண்காட்சிக்குப் போவதைத் தடுக்க பி.ஜெ. அவர்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை என்பதை ஏன் மறுகிறார்?

மேலும் சகோதரர். பி.ஜெ. அவர்கள் 'உண்மையை மட்டும் சொல்வோம்' என்ற சிடியில் கடைசியில் 49:9 என்ற குர்ஆன் வசனத்;தை கூறி. அநிதி இழைக்கபட்டவர்கள், அநீதியிழைத்தவர்கள் மீது போர் புரியும் படி தன் தொண்டர்களை ஏவுகின்றார். யார், யாருக்கு அநீது இழைத்தார்கள் என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரியும். சரி சகோ. பி.ஜெ. அவர்கள் அநீதி இழைக்கப்பட்டவராகவே நாம் எடுத்துக் கொண்டால் சகோ. பி.ஜெ. தானே போர் பிரகடணம் செய்து போருக்கு முன்னின்று வழி நடத்தி செல்ல வேண்டும்? அது தானே நபி(ஸல்) அவர்கள் நமக்கு காட்டித் தந்த வழிமுறை! அதனைவிட்டு விட்டு சகோ. பி.ஜெ. அவர்கள் நான்கு சுவறுக்கள் தன் மனைவி மக்களுடன் பத்திரமாக இருந்து கொண்டு, அப்பாவி இளைஞர்களை தூண்டி விடுகிறாரே இது எந்த வகை தவ்ஹிது? தன் சுயலனுக்காக தனி மனிதனுக்காக ஒற்றுமையாக இருக்கும் ஒரு சமுதாயத்தை கூறு போட்டு பிரித்து. போரிடத் தூண்டுகிறாரே இது தான் தவ்ஹீது பிரச்சாரர் செய்யும் தலையாய பணியா?

கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை இவர் போன்றவர்களின் தூண்டுதலினால் நாம் பட்டபாடு போதும், இழந்த இழப்புகளும் போதும். தமிழகத்தில் கோவையில் நடந்த கலவரங்களும், இழந்த உயிரிழப்புக்களும், பொருள் இழப்புக்களும், இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் நம்மால் ஈடுகட்ட இயலாது. கணவனை இழந்த மனைவிமார்கள், பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள், அவர்கள் வடித்த கண்ணீர் இன்னும் காயவில்லை. கணவனை இழந்த இளம் சகோதரிகள் படும் அவமானங்கள் நாம் அறியாததல்ல! வாழ வேண்டிய வயதில் சிறையில் வாடும் அந்த அப்பாவி இளைஞர்கள், இழந்த இளமையைத் யார் மீட்டுத் தருவார்கள்?

எனவே சகோதரர்களே சகோ. பி.ஜெ. ஒரு நல்ல மார்க்க மேதை. அவரது பணி தவ்ஹீதுப் பிரச்சாரம் செய்வது மட்டுமே! அவரது தவ்ஹீது பிரச்சாரத்தை பட்டி தொட்டியெல்லாம் பரவச் செய்து மூடப்பழக்க வழக்கங்களில் மூழ்கிக் கிடக்கும் அப்பாவி முஸ்லிம்களையும், மாற்று மதத்தவரையும், நிரந்தர சுவனத்துக்கு ஏற்ற மூமீன்களாக மாற்றட்டும். அதே போல் தமுமுக என்ற பேரியக்கத்தை முன்பை விட இன்னும் வீரியமாகப் பரவச் செய்து நாம் இந்நாட்டின் மன்னர்கள் என்பதை நீருபிக்கும் வண்ணம் நம் உரிமைகளையும் வாய்ப்புக்களையும் பெற்று தமுமுக என்ற பேரியக்கத்தின் மூலமாக இம்மை வெற்றியையும் தவ்ஹிது மூலமாக மறுமை வெற்றியையும் பெற வல்ல ஏக இறைவன் நம் அனைவருக்கும் நல்வழி காட்டுவானாக
ஆமீன்..

ABIRAMAM ABDULLAH
ROYAL SAUDI NAVAL FORCES
POST BOX # 2
RIYADH: 11342
K.S.A.

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.