ரிபாஈ மீதான குற்றச்சாட்டுகளுக்கு பி.ஜே.யின் பதில்.

கண்ணியத்திற்குரிய முஸ்லிம் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

உலகில் உள்ள எந்த சமுதாயத்தவர்களாக இருந்தாலும் மொட்டை கடிதங்கள் எழுதுபவர்களை தங்கள் சமுதாயத்தவர்களாக ஏற்பார்களா? சராசரி மனிதர்களாக மதிப்பார்களா? பெட்டைகள், பேடிகள், ஆண்மையற்றவர்கள், போலிகள், போர்ஜரிகள், தரங்கெட்டவர்கள், அயோக்கியர்கள், மானங்கெட்டவர்கள், மடையர்கள், மானம்-ரோஷம்-சூடு-சுரணை இல்லாதவர்கள் என்றுதான் விமர்சிப்பார்களே தவிர எந்த சமுதாயத்தவர்களும் மொட்டை கடித பேர்வழிகளை மனிதர்களாக மதிக்கவே மாட்டார்கள்.

சொல்லவும் வேண்டுமா?

மனிதர்களாகவே மதிக்க மாட்டார்கள் எனும்பொழுது தங்கள் சமுதாயத்தவர்களாக ஏற்பார்களா? என்ற கேள்விக்கு இடமே இல்லை. அதுவும்; இந்து நேசன் வழியில் எழுதினால் யார்தான் ஏற்பார்கள். நிர்வாண சாமியார் ரஜனீஷ் கொள்கையில் உள்ளவர்கள் கூட ஏற்க மாட்டார்கள். அந்த மாதிரியான மொட்டைக் கடிதங்கள் எழுதும் தரங்கெட்டவர்களை தங்கள் தலைவர்களாக, வழிகாட்டிகளாக, ஜமாஅத் தலைவர்களாக ஏற்றிருப்பவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் சொல்லவும் வேண்டுமா?

அவர்கள் இன்னும் திருந்துவதாக இல்லை.

சத்தீய நேசன் என்ற பெயரில் மொட்டை கடிதங்கள் இ-மெயில்களாக வந்து கொண்டிருப்பதை நெட் வசதி உள்ளவர்கள் அறிவார்கள். அவை பிரசுரங்களாகவும் தமிழ் பேசும் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் காட்டப்பட்டு வருகிறது. இந்த மொட்டை கடித பேர்வழிகள் யார் என்பதை முந்தைய இரு வெளியீடுகளில் சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து திருந்தும்படி அடையாளம் காட்டினோம். அவர்கள் இன்னும் திருந்துவதாக இல்லை. இன்னும் கெடுவோம் சமுதாயத்தை இன்னும் கெடுப்போம் என்ன பந்தயம் என்பதுபோல் செயல்பட்டு முஸ்லிம்களை கெடுத்து வருகிறார்கள்.

சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.

எனவே அவர்கள் யார் என்பதை தெளிவாக அடையாளம் காட்ட வேண்டிய கட்டாய கடமை நமக்கு ஏற்பட்டுள்ளது. தாங்களும் கெட்டு பிறரையும் வழி கெடுக்கக் கூடிய அந்த வழிகேடர்கள் யார் என்ற உண்மையை தெரிந்த பின்னர் அவர்கள் பின்னால் அணு அளவு நல் எண்ணம் உள்ளவர்களும் செல்ல மாட்டார்கள். மொட்டை கடித பேர்வழிகள் இவர்கள்தான் என தெளிவாக தெரிந்த பின்னரும் அவர்கள் பின்னால் செல்லக் கூடியவர்கள் யாராக இருப்பார்கள் என்பதை நாம் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.

மறுத்தால் முபாஹலாவுக்கு வரட்டும்.

சத்தீய நேசன் என்ற பெயரில் வந்த மொட்டை கடிதங்களுக்கு சொந்தக்காரர்கள் யார்? ஏகத்துவம்| பத்திரிக்கை ஆசிரியர் லைட் பூலி ஷம்சுல் லுஹா, துணை ஆசிரியர் குளம் இபுறாஹீம் என்கிற செய்யது இபுறாஹீம், எதிலும் எப்பொழுதும் பினாமிகள் பின்னால் ஒழிந்து கொள்ளக் கூடிய பி.ஜே. என்கிற பி.ஜெய்னுல் ஆப்தீன் ஆகிய இவர்கள்தான் அந்த மொட்டை கடித பேர்வழிகள். இதை அவர்கள் மறுத்தால் முபாஹலாவுக்கு வரட்டும்.

அந்த மூவரையும் நமது நிபந்தனைப்படி மறுக்கச் சொல்லட்டும்.

இந்த அழைப்பு அந்த மொட்டை பேர்வழிகளுக்கு மட்டுமல்ல அந்த மொட்டை பேர்வழிகளை நல்லவர்களாக சித்தரித்து போர்ஜரி ஜுவல்லரி நடத்தும் ஒவ்வொருவருக்கும் இந்த அழைப்பு பொருந்தும். அவர்கள் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களாக இருந்தாலும் சாதாரண உறுப்பினராக இருந்தாலும் அபுஅவ்ன்களாக இருந்தாலும் அத்தனை பேர்களுக்கும் பொதுவானதே இந்த சவால். இப்பொழுதுள்ள பி.ஜே. அணியில் உள்ளவர்களில் உண்மையிலேயே அது நல்ல அணி என்று எண்ணி ஆதரிப்பவர்களாக இருந்தால், மொட்டை பேர்வழிகளை ஆதரிக்காதவர்களாக இருந்தால் அந்த மூவரையும் நமது நிபந்தனைப்படி மறுக்கச் சொல்லட்டும்.

முபாஹலாவுக்கு வர மறுத்தால்.

முபாஹலாவுக்கு வர மறுத்தால் 20-07-2004 வரை சத்திய நேசன் எனும் பெயரில் வந்த அந்த மொட்டை கடிதங்களுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. ரிபாஈ பற்றி எழுதி வந்த அந்த கடிதத்திற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ரிபாஇ பற்றி அந்த மாதிரியான குற்றச்சாட்டுகளை நாங்கள் யாரிடமும் எந்த நேரத்திலும் பரப்பியது இல்லை. போன்கள் மூலமோ பள்ளிவாசலில் கூடி இருந்தவர்கள் மூலமோ பிரசுரமாக காட்ட ஆட்களை நியமித்தோ எந்த வகையிலும் பரப்பவே இல்லை. இவை பொய்யாக இருக்குமானால் பி.ஜெய்னுல் ஆப்தீன், லைட் பூலி ஷம்சுல் லுஹா, செய்யது இபுறாஹீம் ஆகியவர்களான எங்கள் மூவர் மீதும் அல்லாஹ்வின் லஃனத் - சாபம் இறங்கட்டும் என்று துஆச் செய்து மறுப்பு வெளியிடட்டும்.

யோசனை கூறி உள்ளவர்களுக்காகவும் சேர்த்து துஆச் செய்யட்டும்.

அவர்களின் கூட்டங்களிலும் ஜும்ஆ உரைகளிலும் இவ்வாறு துஆச் செய்வதோடு மற்றவர்களையும் துஆச் செய்யுமாறு சுற்றறிக்கை வெளியிடட்டும். குறிப்பாக பொய்யென்று தெரிந்த பின்பும்... என்று தலையங்கம் எழுதி ஏமாற்றிய ஏகத்துவம்| இதழிலும் வெளியிடட்டும். அவர்கள் பரப்பாத நிலையில் அவர்கள்தான் பரப்பினார்கள் என்று யார் பொய் சொன்னாலும் அவர்கள் பற்றியும் அவ்வாறு துஆச் செய்யட்டும். இப்பொழுதுள்ள பி.ஜே. அணியை ஆதரிப்பவர்கள் மொட்டை பேர்வழிகளை ஆதரிக்காதவர்களாக இருந்தால் இந்த துஆவை அவர்களும் செய்ய வேண்டும். இங்கு (மேலப்பாளையத்திலிருந்து) வெளியானதாக தெரியக் கூடாது. வெளிநாட்டிலிருந்து வெளியான மாதிரி இருக்கட்டும் என்று யோசனை கூறி உள்ளவர்களுக்காகவும் சேர்த்து துஆச் செய்யட்டும்.

பல்லாயிரம் முறை சொல்லி விட்டோம்.

பி.ஜே.யின் டாமினேட்டில் - ஆதிக்கத்தில் என் மீது கூறப்பட்ட எந்த குற்றச் சாட்டுகளாக இருந்தாலும் எந்த அமைப்பு சார்புடையதாக இருந்தாலும் அதற்கு முழு பொறுப்புதாரி பி.ஜே. இதை அவரே வெளியிட்ட சவால் பிரசுரம் மூலம் ஒப்புக் கொண்டுள்ளார். அவரது சவாலை ஏற்று 1-12-2002 அன்று அவருக்கு அனுப்பி உள்ள கடிதப்படி மக்கள் மன்றத்தில் சந்திக்கத் தயார் என்று பல்லாயிரம் முறை சொல்லி விட்டோம். அவர்தான் ஓடி ஒழிந்து வருகிறார். அவர் விட்ட சவால்படி அவர் சொன்ன சாட்சிகளுடன் மக்கள் மன்றத்திற்கு வராமல் நழுவுவதற்கு எம்மை துஆச் செய்யுமாறு மொட்டை கடிதத்தில் எழுதினார். மொட்டைக் கடித பேர்வழிகள் யார் என்று 100க்கு 100 உறுதி செய்யாததால் அப்பொழுது பதில் எழுதவில்லை. இப்பொழுது பி.ஜே. வகையறாக்கள்தான் மொட்டை கடித பேர்வழிகள் என்பது உறுதி செய்து விட்டதால் பதில் எழுதுகிறோம்.

அவர்கள்தான் ஓடி ஒழிந்து கொண்டிருக்கிறார்கள்.

நாம் விடுத்துள்ள சவாலை ஏற்று மக்கள் மன்றத்திற்கு பி.ஜே. வகையறாக்கள் வர வேண்டும் என்றுதான் அழைக்கிறோம். அவர்கள் வர மறுத்தால்தான் மேற்கண்டவாறு துஆச் செய்து சுற்றறிக்கை வெளியிட வேண்டும் என்று கூறுகிறோம். அவர்கள் விடுத்துள்ள சவாலை ஏற்க நாம் மறுத்தால்தான் நம்மைப் பார்த்து சுற்றறிக்கை வெளியிடும்படி அவர்கள் கூற முடியும். பழுலுல் இலாஹியாகிய நான் பி.ஜே. விடுத்த எல்லா சவால்களையும் ஏற்றுக் கொண்டேன். அதுவும் அவர் கூறி உள்ள குற்றச் சாட்டுகளுக்கு அவர் கொண்டு வருவதாகக் கூறிய சாட்சிகளையே சாட்சிகளாக ஏற்றுக் கொண்டு வரட்டும் என்றும் ஒப்புக் கொண்டு விட்டேன். அவர்கள்தான் ஓடி ஒழிந்து கொண்டிருக்கிறார்கள்.

பொய்யர்கள் தப்பிக்க எந்த விதத்திலும் வழி வகுக்க மாட்டோம்.

எனவே அவரும் அவரது வகையறாக்களும் எந்த ரூபத்திலும் ஒரே மேடையில் சந்திப்பதிலிருந்து நழுவி ஓடி விட வழி கொடுக்க மாட்டோம். அதாவது நாம் எந்த சுற்றறிக்கையும் வெளியிட்டு மொட்டை கடித பேர்வழிகளான அந்த பொய்யர்கள் தப்பிக்க எந்த விதத்திலும் வழி வகுக்க மாட்டோம் என்பதை தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன். நம்மை ஒரே மேடையில் சந்திக்க முடியாமலும் நமது வெளியீடுகளுக்கு நேரடியாக பதில் சொல்ல முடியாமலும்தான் சந்தி சிரிக்கும் மொட்டை கடித பேர்வழிகளாக மாறி மானம் இழந்து மரியாதை இழந்து கேவலப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மவுலவியே புர்கா போட்டுக் கொண்டு பெண் வேடத்தில் போனார்.

லுஹா தனக்கு போட்டியாக யாரைக் கருதினாலும் அவரது பிழைப்புக்கு யாரால் ஆபத்து என்று கருதுகிறாரோ அவர்கள் மீது இது மாதிரிதான் குற்றச்சாட்டுகள் கூறுவார் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன. ரிபாஈக்கு முன்பாக ஒரு மவுலவியை லுஹா தனக்கு போட்டியாகக் கருதினார். மேலப்பாளையம் மக்கள் அந்த மவுலவிதான் லுஹாவைவிட நன்றாக பேசுகிறார் என்றார்கள். உடனே அவர் பற்றியும் பெண் வைத்திருக்கிறார் அந்த மவுலவியே புர்கா போட்டுக் கொண்டு பெண் வேடத்தில் போனார் என்றெல்லாம் வெளிநாட்டுக்கு போன் போட்டுச் சொல்லிக் கொண்டிருந்தார் லுஹா. அந்த மவுலவி பெயர் பிரபலமாகாததால் அவர் பற்றி லுஹா கூறிய குற்றச்சாட்டுகளை மட்டும் குறிப்பிட்டுள்ளேன். லுஹா தந்த இந்த தகவலை ஏற்று அந்த மவுலவியை அன்று ஓரம் கட்டினோம்.

பி.ஜே. பற்றி லுஹா.

அது மாதிரிதான் 2001 ரமழானில் பி.ஜே.யுடன் லுஹாவுக்கு மோதல் ஏற்பட்டதும் மதுரை மாhட்டில் பி.ஜே. மாணவிகளையே சுற்றி சுற்றி வந்தார். மாநாட்டு மேடைக்கு வராமல் பெண்கள் பகுதியிலேயே கிடந்தார் என்று பரப்பினார். இது பற்றி லுஹா கூறி உள்ளதை முன்பே எழுதி விட்டோம். பி.ஜேக்கு பிடிக்காதவர்களை மோசடியாளர்களாக தவ்ஹீது விரோதிகளாக சித்தரிப்பது பி.ஜே.க்குரிய குணம் என்றால் லுஹாவுக்கு பிடிக்காதவர்களை பெண்களோடு பின்னி விடுவது லுஹாவின் குணம் என்றுதான் விளங்க முடிகிறது. லுஹா ரிபாஈ பற்றி பரப்பியதை உண்மை என்று நம்ப வேண்டும் என்றால் மதுரை மாநாட்டில் பி.ஜே. சைட் அடித்தார், எம். ஐ. சுலைமான் -- இட்டார் பி.ஜே.யின் கேஸட் வியாபார பினாமி பாக்கர் (2001ல்)--- பண்ணினார் என்பது உட்பட லுஹா பரப்பிய எல்லாவற்றையும் நம்ப வேண்டும். லுஹா யார்? அபுஅவ்னே முடிவு செய்து கொள்ளட்டும்.

ரிபாஈ மீதான குற்றச் சாட்டுகளுக்கு பி.ஜே.யின் பதில்.

ரிபாஈ பற்றி இப்பொழுது பி.ஜே. அணி வெளியிட்டுள்ள மொட்டை கடிதத்தில் கூறி உள்ள குற்றச்சாட்டுகளை முதன் முதலில் பரப்பியவர் வெளிநாடுகளுக்கும் போன் போட்டுக் கூறியவர் ஷம்சுல் லுஹா. ரிபாஈ ஊரோடு இருந்தால் தனக்கு போட்டியாக வந்து விடுவார் என்று கருதியதால் ரிபாஈ பற்றி லுஹா இப்படி பரப்பி உள்ளார். அப்பொழுது லுஹாவை உண்மையாளர் என்று நாம் கருதியதால் அதை நம்பினோம். இதற்கு பி.ஜே.யே அப்பொழுது பதில் அளித்துள்ளார்.

குறிப்பாக 2002 செப்டம்பர் 29 ஞாயிறு அன்று மதுரையில் நடந்த அ.த.ஜ.கூட்டமைப்பு மாநில பொதுக்குழுவில் பி.ஜே. அளித்த பதில் விளக்கம். "அந்த பெண்கள் கல்லூரியில் ஜே.எஸ். ரிபாஈ அவர்களும் அந்த ஆசிரியை (பெயரை குறிப்பிட்டு) அவர்களும்தான் ஸ்டிரிக்கானவர்கள் (கண்டிப்பானவர்கள்) எனவே இரண்டு பேரையும் காலி செய்ய அங்குள்ள மாணவிகள் கட்டி விட்ட கட்டு கதைதான் இது. இப்பொழுது மீண்டும் அதே களஞ்சியம் பெண்கள் கல்லூரியில்தான் ரிபாஈ பணியாற்றுகிறார்" என்று குறிப்பிட்டார்.

சுருங்கி செத்தது மதுரையில்தான்.

மதுரை கூட்டத்தில் இருந்த லுஹாவின் முகம் இஞ்சி திண்றதின் முகமாக மாறியது. 30-7-2004 மேலப்பாளையம் கூட்டத்தில் பேசிய பி.ஜே. வசூலுக்கு போன இடத்தில் இது எனக்கு கிடைத்தது என்று எடுப்பவன் பற்றி விமர்சித்ததும்; லுஹா முகம் எப்படி சுருங்கி கறுத்ததோ அதைவிட கூடுதலாக சுருங்கி செத்தது மதுரையில்தான். இதை மறுத்தால் எல்லா வீடியோக்களையும் பாதுகாப்பாக வைத்திருப்பதாக கூறும் பி.ஜே. அந்த மதுரை வீடியோவை வெளியிடட்டும். குறிப்பாக சில மாதங்களுக்கு முன் நாகூர் பள்ளியில் கூடி பி.ஜே.யின் ரகசிய குற்றச்சாட்டுக்களை கேட்டவர்கள் அந்த வீடியோவை வாங்கிப் பார்க்க வேண்டும். பார்த்தால் உத்தமர் பி.ஜே.யின் உத்தம தன்மையை புரியலாம்.

அபுஅவ்னின் தரம் எப்படிப்பட்டது.

பி.ஜே. அணி எழுதியது சாதாரண மொட்டை கடிதங்களா? 20-07-2004 அன்று சத்தீய நேசனிடமிருந்து வந்த மெயிலைக் கண்ட த.த.ஜ.வைச் சார்ந்த அபு அவ்ன் என்பவர் அறிவுரை கூறி மெயில் அனுப்பி இருந்தார். அவரது அந்த அறிவுரை மெயிலில், ... கடிதங்களைக் கண்டோ கோபம் கொள்ள போவதில்லை. ஏனெனில் எனக்கு தெரிந்த உவமானம் 'பன்றி சேற்றில் படுத்துவிட்டு நம் மீது உரசி விட்டு சென்றால்! நாமும் சேற்றில் படுத்து விட்டு பன்றி மீது உரச முடியுமா? ஆகவே அன்பு சகோதரர் சத்தியசீலனே! என்று குறிப்பிட்டு உள்ளார். அந்த அளவுக்கு அது மோசமான கடிதம். கோபம் கொள்ளாத நிலையில்தான் அபு அவ்னிடமிருந்து இந்த பன்றி உதாரண வார்த்தை வந்துள்ளது. கோபம் கொண்டால் என்ன மாதிரி வார்த்தை வரும்? அவரது தலைமையினரை தோற்கடித்து விடுவாரோ! இது அபுஅவ்னின் தரம் எப்படிப்பட்டது என்பதை விளக்குகிறது.

இனம் இனத்தோடுதானே சேரும் என்பார்களே! அது இதுதானோ?

அவர் குறிப்பிட்டுள்ள உதாரணப்படி சத்தீயநேசன் என்பவைகள்தான். சாக்கடையில் படுத்து விட்டு வந்துள்ளன. சாக்கடையில் படுத்து விட்டு வரும் அவற்றைத்தான் அபுஅவ்ன் அன்பு சகோதரர் என்று குறிப்பிட்டுள்ளார். அவற்றுக்கு இவர்தான் சகோதரர் என்று குறிப்பிட்டு தானும் அதே இனம்தான் என்று அடையாளம் காட்டி உள்ளார். அவரும் அதே இனமாக இருப்பதால்தான் அவர் கூற்றுப்படி சாக்கடையில் படுத்து விட்டு வரும் அவைகளை சத்தியசீலனே! என்றும் கண்ணியப்படுத்தியுள்ளார். இனம் இனத்தோடுதான் சேரும் என்பார்களே! அது இந்த இனம்தானோ?

அபுஅவ்ன் யாரைச் சார்ந்தவர்?

'பன்றி சேற்றில் படுத்துவிட்டு நம் மீது உரசி விட்டு சென்றால்! என்ற வாசகம் அவர் விரும்பாத தரப்புக்கு உரியது தன் இனத்திற்கு உரியது அல்ல என்று எண்ணியே எழுதி உள்ளார். உண்மையில் இந்த வார்த்தை யாருக்கு உரியது என்பதை மேலே தெளிவுபடுத்தி விட்டோம். அபு அவ்ன் யாரையெல்லாம் பன்றியாக ஆக்கி விட்டார் பார்த்தீர்களா. அபுஅவ்ன் இன மாச்சர்யம் பார்ப்பவர், தன் இனம் என்றால் அப்படி விமர்சித்திருக்கமாட்டார் என்பதற்கு அவரது இந்த அனுகுமுறையே ஆதாரமாக உள்ளது. 'இன மாச்சர்யம் பார்ப்பவன் நம்மைச் சார்ந்தவன் அல்ல' என்று இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறி உள்ளார்கள். இந்த ஹதீஸின்படி அபுஅவ்ன் முஹம்மது நபி(ஸல்) அவர்களைச் சார்ந்தவரல்ல என்பது தெளிவு. யாரைச் சார்ந்தவர்? புரிந்திருப்பீர்கள்.

தவ்ஹீதுவாதிகள் மனதை புண்படுத்தியதால் உலகம் முழுவதிலிருந்தும் வந்த கண்டனங்கள்.

எமது முந்தைய வெளியீடான பாக்கருக்கு நெஞ்சு வலி வந்தது ஏன்? என்ற தலைப்பிலான மெயிலைக் கண்ட தவ்ஹீதவாதிகளில் பலர் உலக முழுவதிலிருந்தும் கடும் கண்டனங்களை போன்கள் மூலம் தெரிவித்தனர். தவ்ஹீதுவாதிகளை கேவலப்படுத்தி; மனதை புண்படுத்தி விட்டீர்கள். இனிமேல் இது மாதிரி எழுதாதீர்கள். இனி இது மாதிரி எழுதினால் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்று எச்சரித்தார்கள். தவ்ஹீதுவாதிகள் மனதை புண்படுத்திய வார்த்தை என்ன? இனி எது மாதிரி எழுதக் கூடாது என்று எச்சரித்தார்கள் என்பதை இறுதியில் பார்ப்போம்.

ஏகத்துவம் ஆசிரியர் லுஹா(முற்பகல்).

பாக்கருக்கு நெஞ்சு வலி வந்தது ஏன்? என்ற தலைப்பிலான மெயில் துபையில் கிடைக்கப் பெற்றவர்களிலும் கேள்விப்பட்டவர்களிலும் சிலர் ஒருவர் பின் ஒருவராக நேரில் வந்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். அவர்களுக்கு பதில் அளித்த நாம், சம்பவம் நடந்த மறு நாளே நமக்கு செய்தி கிடைத்தது. ஒரு மாதம் ஆகியும் யாரிடமும் கூறவும் இல்லை விசாரிக்கவும் இல்லை. நம்மிடம் கேட்ட ஒவ்வொருவரிடமும் தெரியாது என்றே கூறி வந்தோம். ஏகத்துவம் ஆசிரியர் லுஹா (முற்பகல்), துணை ஆசிரியர் செய்யது (குளம்) இபுறாஹீம், பி.ஜே. ஆகியோர் சத்தீய நேசன் என்ற பெயரில் ரிபாஈ பற்றி இப்பொழுது அனுப்பி உள்ள மெயிலைப் பாருங்கள்" என்று மெயிலைக் காட்டினோம்.

வசமாக மாட்டிக் கொண்டார்கள்.

இவர்கள்தான் சத்தியநேசன்கள் என்பதற்கு என்ன ஆதாரம்? என்று கேட்டார்கள். இவர்களின் பினாமியாக இருந்து முதன் முதலில் சத்தீயநேசன் பெயரில் மெயில் அனுப்பிய குவைத் ரசூல் மைதீனை எப்படியெல்லாம் கண்டு பிடித்தோம் என்று விவரித்து எழுதியதால் மாற்று வழிகளில் இறங்கி விட்டார்கள். பி.ஜே, லுஹா, இபுறாஹீம் ஆகியோர் கொண்ட இந்தக் குழுவை எப்படியெல்லாம் கண்டு பிடித்தோம் என்பதை விளக்கி எழுத மாட்டோம். இருந்தாலும் நேரில் வந்துள்ளதால் உங்களிடம் சில ஆதாரங்களைக் கூறுகிறோம் என்று எந்த எந்த வழிகளிளெல்லாம் இதை கண்டு பிடித்தோம் என்பதில் ஒரு சிலவற்றை விளக்கினோம். ஷஷதாங்கள்தான் அறிவாளிகள் என்று எண்ணி ஏதேதோ செய்து வசமாக மாட்டிக் கொண்டார்கள். மொட்டைக் கடிதம் எழுதும் இவர்களா 'ஏகத்துவம்' பிரச்சாரகர்கள்?" என்று விளக்கம் கேட்டு வந்தவர்களில் ஒருவர் கூறினார்.

ரிபாஈயே வந்து சொன்னாலும் நீங்கள் நம்புவீர்களா?

பிறகு நம்மிடம் கேள்வி கேட்க வந்தவர்களிடம் காரைக்கால் சம்பவம் பற்றி கேட்டோம். எல்லாருமே மனிதர்கள் மறதியாளர்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் பதில் சொன்னார்கள். மக்களின் மறதிகளை பயன் படுத்தி அரசியல்வாதிகள் ஏமாற்றுவதாகக் கூறிய பி.ஜே.க்கு மக்கள் மறதியாளர்கள் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை. அதனால்தான் அவர் விமர்சித்த அரசியல்வாதிகளைவிட மோசமாக நடந்து கொள்கிறார் என்று கூறிய நாம், பி.ஜே. அணியின் மொட்டை கடிதத்தில் கூறப்பட்டுள்ளதை வாதத்திற்காக உண்மை என்று வைத்துக் கொள்வோம். ரிபாஈ பற்றி யார் இப்படி எழுதினாலும் பி.ஜே. எழுதலாமா? நல்ல மனிதராகத்தான் இருக்க மாட்டார். நன்றி உள்ள மனிதராகவுமா இருக்கக் கூடாது?

காரைக்காலை ஒட்டி பி.ஜே. மொட்டை கடிதத்தில் எழுதி உள்ளது உண்மைதான் என்று ரிபாஈயே வந்து சொன்னாலும் நீங்கள் நம்புவீர்களா? என்று கேட்டோம். நம்ப மாட்டோம் என்றார்கள். நானோ நீங்களோ பி.ஜே.யின் மொட்டை கடிதத்தில் எழுதி உள்ளதை நம்பினால் நம்மை நாமே பொய்யர்கள் என்று கூறுகிறோம் என்றுதான் அர்த்தம். என்று கூறி விட்டு பழைய சம்பவங்களையும் நினைவு கூறினோம்.

ரிபாஈ கன்னத்தில் அடித்த போலீஸ்.

பார்சல் வெடிகுண்டு வழக்கை ஒட்டி ரிபாஈ கைது செய்யப்பட்டார். ரிபாஈ கைது செய்யப்பட்ட உடன் தனது மைத்துனர் ஷம்சுவை நமக்கு போன் போட்டு தகவல் சொல்லச் செய்தவர் பி.ஜே. துபையில் பணி புரிந்த நமது நண்பர் மைதீன் அவர்கள் தனது சகோதரியை காரைக்கால் மதரஸாவில் சேர்ப்பது சம்பந்தமாக விபரம் கேட்கச் சென்றபோதுதான் கல்லூரி முதல்வர் ரிபாஈ கைது செய்யப்படுகிறார். அப்பொழுது முதல்வர் ரிபாஈ அலுவலகத்தில் மைதீன் அவர்கள் இருந்ததால் மைதீன் அவர்களையும் போலீஸார் கைது செய்து விடுகிறார்கள். ரிபாஈயை கண்டபடி அடித்து கன்னத்திலும் அடித்த போலீஸார் கேட்ட கேள்வி என்ன?

போலீஸார் கேட்ட கேள்வி.

பி.ஜே. என்ற பி.ஜெய்னுல் ஆப்தீன் என்னடா செய்கிறான்? இதைத்தானே கேட்டார்கள். என்ன சொன்னார் ரிபாஈ? அவர் மார்க்க அறிஞர் அவருக்கு மார்க்கத்தை தவிர வேறு எதுவும் தெரியாது. இது தானே ரிபாஈ திரும்பத் திரும்பக் கூறிய பதில். ஜெய்னுல் ஆப்தீன் என்ன செய்கிறான்? சொல்லு உன்னை விட்டு விடுகிறேன் என்று பல முறை பல விதத்தில் கேட்டும் ரிபாஈ தன்னை காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக பி.ஜே.யை காட்டிக் கொடுத்தாரா? இல்லை. இதுவெல்லாம் ரிபாஈ நமக்கு சொன்ன தகவலா? நேரில் இருந்து பார்த்த நமது நண்பர் மைதீன் வந்து சொன்ன தகவலா. இப்பொழுது சொல்லுங்கள் பி.ஜே.யின் கேஸட் வியாபார பினாமி பாக்கர் பற்றி இப்பொழுது வெளியிட்டது தப்பா? என்று கேட்டோம். எல்லாருமே தப்பில்லை என்றார்கள்.

வரம்பு மீறி இட்டுக்கட்டியுள்ள வார்த்தை.

நம்மிடம் போனிலும் நேரிலும் விமர்சன ரீதியாக பேசக் கூடியவர்களில் பலர் தங்கள் பெயர் வெளி வரக் கூடாது என்கிறார்கள். நாமும் அவர்களது பெயர்களை வெளியிடுவதில்லை. நம்மிடம் என்ன விமர்சித்தார்களோ அந்த விமர்சனங்களை மட்டும் நமது வெளியீடுகளில் குறிப்பிட்டு நாம் அளித்த விளக்கங்களை எழுதி வருகிறோம். அவர்கள் நம்மிடம் பேசினார்கள் என்பதை நாம் வெளியிடக் கூடாது என்றால் அவர்களும் நம்மிடம் பேசியதாக வெளியில் கூறக் கூடாது. பாக்கர் விஷயமாக நம்மிடம் பேசி சரி கண்டு சென்றவர்களில் ஒருவர் பழுலுல் இலாஹியை உடு உடு என விட்டு விட்டேன் அவரால் பதில் சொல்ல முடியவில்லை என்று கூறி இருக்கிறார். இது வரம்பு மீறி இட்டுக் கட்டியுள்ள வார்த்தையாகும்.

அனைவரிடமும் தெளிவுபடுத்தி இருக்கிறோம்.

நம்மை நேரில் விமர்சித்தவர்களில் ஒரு சகோதரர்தான் நீங்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். நீங்கள்தான் பி.ஜே. சொல்லுக்கு மறு சொல் இல்லை, பி.ஜே. சொன்னால் அதற்கு அப்பீல் இல்லை என்று நம்பி செயல்பட்டு பிறரையும் நம்ப வைத்தீர்கள். ஒவ்வொருவர் மீதும் பி.ஜே. வைத்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நம்ப வைத்த நீங்கள் அதற்கு பரிகாரமாக பகிரங்க மன்னிப்பு கேட்கிறேன் என்ற தலைப்பில் விளக்கம் வெளியிடனும் என்றார். அவரது கருத்தை ஏற்றுதான் பகிரங்க மன்னிப்பு கேட்கிறேன் என்ற தலைப்பில் எழுதினேன். அந்த அளவுக்கு நேரில் விமர்சிப்பவர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பு அளிக்கிறோம்.

இதைத் தவிர வேறு காரணம் இல்லை.

முஃமின்களின் குறைகளை வெளிப்படுத்துவது மார்க் விரோதமான செயலாகும். ஆகவே யாரும் இது மாதிரி நோட்டீஸ் போடாதீர்கள் என்று கூடிய கூட்டத்தில் மைக் கிடைத்த வேகத்தில் ஒருவர் பேசி இருக்கிறார். மார்க்க உணர்வுதான் அவரை மேடையில் பேச வைத்தது என்பது உண்மையானால் நம்மிடம் நேரில் பேசியபோது இது மார்க்க விரோத செயல் என்று கூறி இருக்க வேண்டும். கம்யூட்டரில் உள்ளதைப் பார்த்து படித்த அவர், பாக்கருக்கு போன் போட்டேன் அவர் எடுக்கவே இல்லை. ஏன் இவருக்கு ஒரே இதே பிரச்சனை. பேசாட்டுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணிவிட்டு போக வேண்டியதுதானே. ஏன் பண்ணவில்லை. இஸ்லாம் ஓர் இனிய மார்க்க நிகழ்ச்சியில் யாரெல்லாம் 2 கல்யாணம் பண்ணி இருக்கிறார்கள் என்று கேள்வி கேட்டால் பாக்கர் கையை தூக்கி விடக்கூடாது. இதைத் தவிர வேறு காரணம் இல்லை|| என்று பல முறை கூறினார்.

எனக்குள்ள ஒரே அப்ஜெக்ஷன்.

மேலும், "இதை வெளியிடுங்கள் வெளியிடாதீர்கள் என்று நான் சொல்ல மாட்டேன். (பாக்கருக்க நெஞ்சு வலி வந்தது ஏன்? என்ற தலைப்பில் உள்ள) இதில் எனக்குள்ள ஒரே அப்ஜெக்ஷன் (கொள்கையில் உறுதி உள்ள மாப்பிள்ளை என்ற தலைப்பில் உள்ள) வக்கில்லாதவன் சம்சா டீ கொடுத்தால் அது எளிய திருமணம் இல்லை என்று எழுதி இருப்பது. இது வக்கில்லாதவர்கள் மனதை பாதிக்கும்" என்றார்.

அண்ணன்மார் திருமணம் வக்கில்லாத நிலையில் நடந்தது.

வக்கில்லாதவன் என்று நாம் எழுதவில்லை. வக்கில்லாத நிலையில் என்றுதான் எழுதி உள்ளோம். லுஹாவின் தம்பி பூலி காஜா கல்யாணத்திற்கு போகும்போது பெரிய விருந்து வைக்கப் போவதாக கூறினான். அப்பொழுது பெரிய விருந்தெல்லாம் வைக்காதே உன் அண்ணன்கள் திருமணத்தில் எப்படி நடந்தீர்களோ அப்படி நடந்து கொள்ளுங்கள் என்றோம். அப்பொழுது அவன் சொன்னான், என் அண்ணன்மார் திருமணம் வக்கில்லாத நிலையில் நடந்தது. அதனால் விருந்து வைக்கவில்லை. நான் வெளிநாட்டில் உள்ளேன். எனது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் எனது திருமணத்தை ஒட்டிதான் விருந்து கொடுக்க முடியும்|| என்றான்.

அர்த்தமற்றதாகி விடும், பொய்யாகி விடும்.

அப்பொழுது நாம் சொன்னோம் உன் அண்ணன்மார் திருமணத்தை வக்கற்ற நிலை திருமணம் என்று நீங்கள் அறிவிக்கவில்லை. இஸ்லாம் கூறும் எளிய திருமணம் என்றே கூறினீர்கள். அது உண்மையாக இருக்குமானால் நீயும் விருந்தை தவிர்த்து விடனும். உன் குடும்பத்தாருக்கு விருந்து வைக்கனும் என்ற எண்ணம் இருந்தால் வேறு ஒரு நாளில் வை. திருமணத்தில் வைத்தால் உன் அண்ணன்மார் திருமணத்தை இஸ்லாம் கூறும் எளிய திருமணம் என்று கூறியது அர்த்தமற்றதாகி விடும், பொய்யாகி விடும் என்று கூறினோம். அதற்குப் பிறகும் திருமணத்தில் விருந்து வைக்கத்தான் போகிறேன் என்று உறுதியாக நின்றான்.

சாட்சியும் உண்டு.

எனவே அவனுக்கு கடன் கொடுக்க ஒப்புக் கொண்டவர்கள் கடன் கொடுக்கவில்லை. ஊர் சென்ற அவனுக்கு அடுத்த வேலை சோற்றுக்கே திண்டாட்டம் என்று ஆனதும் சம்சா, டீ. யுடன் முடித்துக் கொண்டான். அவன் அண்ணன்மார் திருமணத்திற்கு அவன் உபயோகித்த வக்கில்லாத நிலையில் என்ற வார்த்தையைத்தான் அவன் திருமணத்திற்கு உபயோகித்து உள்ளோம் என்று விளக்கம் கூறினேன். நீங்கள் சொல்லி எனக்கு தெரிகிறது. இந்த விளக்கத்தை எத்தனை பேரிடம் போய் சொல்வீர்கள் என்றார். இதுதான் மேடையில் விமர்சித்தவருடன் நடந்த உரையாடல். இதற்கு சாட்சியும் உண்டு.

பாக்கரின் குடும்ப உணர்வுதான்.

பாக்கருக்க நெஞ்சு வலி வந்தது ஏன்? என்ற தலைப்பில் உள்ள விளக்க இதழ் வெளியானதும் மேடையில் மார்க்க விரோத செயல் என்று அவர் விமர்சித்தது மார்க்க உணர்வின் வெளிப்பாடு அல்ல என்பதை உறுதியாக கூறுவோம். இதற்கு முன்பு வெளியான பி.ஜே, லுஹா பற்றிய விமர்சன இதழ்களைக் கண்ட அவர், மற்றவர்களை அவர்கள் இழிவு படுத்தினார்கள். உங்கள் மூலம் அல்லாஹ் அவர்களை இழிவு படுத்துகிறான்|| என்றுதான் கூறினார். மார்க்க உணர்வின் வெளிப்பாடு என்றால் அவற்றையும் எதிர்த்து மேடையிலும் பேசி இருக்க வேண்டும். என்னிடமும் விமர்சித்திருக்க வேண்டும். எனவே மைக்கை பிடித்து பேசியது பாக்கரின் குடும்ப உறவு என்ற உணர்வுதான் என்பதைத் தவிர இவரது அந்தப் பேச்சை இஸ்லாமிய உணர்விலானது என்று எந்த வகையிலும் கூற முடியாது.

அநியாயமாக பாதிக்கப்பட்ட ரிபாஈக்காக பேசி இருக்க வேண்டும்.

இஸ்லாமிய உணர்வு மேலோங்கி இருந்தால் அன்றைய தினம் அறிவிக்கப்பட வேண்டிய இஸ்லாமிய மாநாடு பற்றி அறிவித்திருப்பார். அவர் பொறுப்பாளராக இருக்கும் அமைப்புக்கு மாநாடு பற்றி இ.மெயில் மூலமும் கூரியர் மூலமும் கடிதங்களும் பிரசுரங்களும் வந்துள்ளன. அதை அவர் அறிவிக்கவில்லை. அவரது குடும்ப உணர்வு அதை அறிவிக்க விடவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவனும் என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்லக் கூடிய அவர் அநியாயமாக பாதிக்கப்பட்ட ரிபாஈக்காக பேசி இருக்க வேண்டும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள காரைக்கால் கைது சம்பவம் பற்றி உடனடியாக நன்கு தெரிந்தவர்களில் ஒருவரான அவர் ரிபாஈ பற்றி பி.ஜே. அணி வெளியிட்டுள்ள மொட்டை கடிதத்தை கண்டித்து விமர்சித்திருக்க வேண்டும். அதில் ரிபாஈ பற்றி எழுதி உள்ளது பொய் என்பதை அடையாளம் காட்டி இருக்க வேண்டும்.

கண்டபடி திட்ட வேண்டும் என்ற திட்டத்தைக் கூறியவரே அவர்தான்.

கொள்கை கோட்பாடு என்பதை விட குடும்பம் என்ற உணர்வு மேலோங்கி நின்றுள்ளது என்பதற்கு இந்த ஒரு நிகழ்வை மட்டும் அடிப்படையாகக் கொண்டு கூறவில்லை. தவ்ஹீது கொள்கைப் பிரச்சனையால் பி.ஜே. நீக்கப்பட்டார் என்ற வதந்தீ செய்தியாக வந்தடைந்ததும் அதை உண்மை என்று நம்பினோம். எனவே பி.ஜே.க்கும் நமக்கும் ஆயிரம் கருத்து வேறுபாடு இருக்கலாம். தவ்ஹீது கொள்கையை காரணமாகக் காட்டி அவர் நீக்கப்பட்டிருந்தால் நமது எதிர்ப்பைக் காட்ட வேண்டும் என்று கூறி எப்படி எதிர்பைக் காட்டுவது என்று கலந்தாலோசித்தோம். அப்படி கலந்தாலோசித்தவர்களில் இவரும் ஒருவர். ஜவாஹிருல்லாஹ், ஹைதர் அலி ஆகியவர்களுக்கு போன் போட்டு ஒவ்வொருவரும் கண்டபடி திட்ட வேண்டும் என்ற திட்டத்தைக் கூறியவரே இவர்தான். இவரது அந்த யோசனையை ஏற்றுதான் பலருக்கும் நான் போன் செய்தேன்.

பாக்கர் மறைத்தாலும் மறைக்கலாம்.

பிறகு தவ்ஹீது கொள்கைப் பிரச்சனையால் பி.ஜே.யை த.மு.மு.க.வை விட்டு வெளியேறும்படி ஜவாஹிருல்லாஹ், ஹைதர் அலி சொன்னதாக வந்துள்ள செய்தி உண்மையா என்று பாக்கருக்கு போன் போட்டு கேட்டார் அவர். அப்படியெல்லாம் இல்லை, பி.ஜே. தானாகத்தான் விலகினார். அவர் எடுத்த முடிவுதான் அது. அவரை யாரும் வெளியேறும்படி சொல்லவில்லை என்று பாக்கர் பதில் கூறி உள்ளார். பிறகு பாக்கர் மறைத்தாலும் மறைக்கலாம் உணர்வு வரட்டும் பார்ப்போம் என்றும் அவர்தான் சொன்னார்.

திட்டிப் பேசிய முதல் ஆளாக நான் இருந்திருப்பேன்.

இதற்கு பிறகுதான் உணர்வை பார்த்து விட்டு ஜவாஹிருல்லாஹ், ஹைதர் அலி ஆகியவர்களை திட்டி போன் போடுவோம் என்ற முடிவுக்கு வந்தோம். பாக்கர் தவ்ஹீது கொள்கைப் பிரச்சனையால்தான் பி.ஜே. வெளியேற்றப்பட்டார் என்று அப்பொழுது சொல்லி இருந்தால் அந்த நிமிடமே ஜவாஹிருல்லாஹ், ஹைதர் அலி ஆகியவர்களை திட்டிப் பேசிய முதல் ஆளாக நான் இருந்திருப்பேன்.

உங்களுக்குத் தெரியுமா?

தவ்ஹீது கொள்கைப் பிரச்சனையால் பி.ஜே. த.மு.மு.க.வை விட்டு வெளியேற்றப்பட்டார் என்று பி.ஜே. தரப்பிலிருந்து எனக்கு கிடைத்த செய்தியை சந்தேகிக்க வைத்ததே பாக்கரிடம் இவர் கேட்டு சொன்னதுதான். அதனால்தான் தவ்ஹீது கொள்கைப் பிரச்சனையால் பி.ஜே.யை த.மு.மு.க.வை விட்டு வெளியேறும்படி ஜவாஹிருல்லாஹ், ஹைதர் அலி சொன்னதாக வந்துள்ள செய்தி உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டு வளைகுடாவில் உள்ள ஒரு சில நண்பர்களுக்கு மட்டும் மெயில் அனுப்பி கேட்டேன். உணர்வு வந்தது உண்மை தெரிந்தது. அந்த உண்மையை எப்படியெல்லாம் உணர்ந்தோம் என்பதை முந்தைய வெளியீடுகளில் விளக்கி உள்ளோம்.

உண்மை அது கசப்பாயினும் சொல்லி விடுங்கள்.

உண்மை அது கசப்பாயினும் சொல்லி விடுங்கள் என்ற இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கட்டளைப்படி நாம் அறிந்த உண்மையை எத்தி வைக்கும் பணியை நான் செய்தேன். ஜவாஹிருல்லாஹ், ஹைதர் அலி ஆகியவர்களுக்கு போன் போட்டு; கண்டபடி திட்ட வேண்டும் என்று சொன்னது நீதியை நிலை நாட்டி மார்க்கத்தை பேண வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் கூறி இருந்தால், உண்மை தெரிந்த பின் பொய்யர்களை அடையாளம் காட்ட நாம் செய்யும் நற்பணியில் பங்கு கொண்டிருக்க வேண்டும். பங்கு கொள்ளாமல் ஒதுங்கி விட்டார்.

அந்த கோழைத்தனமான முடிவின் சொந்தக்காரர்.

ஒதுங்கிய அவர் என்ன சொன்னார்? ஒரு சாராரான பி.ஜே. தரப்பு குறைகளை அடையாளம் காட்டுவது இன்னொரு சாராரான த.மு.மு.க.விற்கு சாதகமாக உள்ளது என்றார். அதற்கும் விளக்கம் வெளியிட்டோம். பாக்கருக்கு நெஞ்சு வலி வந்தது ஏன்? என்பதை படித்த பின் ஒரு சாராரின் குறைகளை அடையாளம் காட்டுவது இன்னொரு சாராருக்கு சாதகமாக உள்ளது என்று நான் சொன்னது ஜவாஹிருல்லாஹ் என்ற கோழையை உங்களை அறியாமல் ஆதரிக்கிறீர்கள் என்றார். எந்த வகையில் கோழை என்று கேட்டேன். தேர்தல் புறக்கணிப்பை வாபஸ் பெற்றது ஜவாஹிருல்லாஹ்வின் கோழைத்தனமான முடிவு என்று நீங்கள்தானே அப்பொழுது சொன்னீர்கள் என்றார். பி.ஜே. சொல்வதெல்லாம் உண்மை என்று நம்பிய அந்தக் காலத்தில் பி.ஜே. தந்த தகவல்படி சொன்னது அது. அந்த கோழைத்தனமான முடிவின் சொந்தக்காரர் பி.ஜே.தான் என்பதை இப்பொழுது என்னால் நிரூபிக்க முடியும் என்றேன். மேலும் அவரிடம் விரிவாகப் பேசியதை கீழே தருகிறோம்.

ரசூல் மைதீன்தான் முதல் சத்தீநேசன்.

குவைத்தில் பணியாற்றும் திருவல்லிக்கேணி ரசூல் மைதீன் அவர்கள், மேலப்பாளையம் ரசூல் மைதீன், மேலப்பாளையம் தவ்ஹீது பிரச்சாரக்குழு என்று பொய்களை எழுதி மாட்டிக் கொண்டார். இதை எப்படி கண்டு பிடித்தோம் என்று சுட்டிக் காட்டி அவரை அடையாளம் காட்டினோம். அதற்குப் பிறகு சத்தீயநேசன் எனும் பெயரில் மொட்டை கடிதங்களை மெயில்களாக அனுப்பிக் கொண்டிருந்தார். அப்பொழுதும் திருவல்லிக்கேணி ரசூல் மைதீன்தான் அந்த (முதல்) சத்தீயநேசன் என்பதை கண்டு பிடித்தோம்.

வழி கெட்ட  ஷய்த்தான்கள்தான் இதற்கு வழிகாட்டிகள்.

எப்படி கண்டு பிடித்தோம் என்ற விபரத்தை எழுதிய நாம், அவர் சுயமாக எழுதவில்லை அவரது பின்னால் வழி கெட்ட ஷய்த்தான்கள்தான் இதற்கு வழிகாட்டிகள் என்பதை உணர்த்தி. ... நீங்கள் என் மீது கூறி உள்ள குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது. இது உங்கள் யூகமா? அல்லது உண்மைக்கு புறம்பானவர்களிடம் இருந்து பெற்ற தகவலா? பிறர் கூறி நீங்கள் கேட்டிருந்தால் அவர் யார்? என்பதை எனக்கு தெரிவிக்க வேண்டும். என்று எழுதி இருந்தோம். இதற்குப் பிறகு சத்தீயநேசன் என்ற பெயரில் அப்பொழுது மெயில் அனுப்பியது திருவல்லிக்கேணி ரசூல் மைதீன்தான் என்பதை அவர் ஒப்புக் கொண்டார். அவரை மொட்டைக் கடிதம் எழுதுமாறு தூண்டி வழி கெடுத்த iஷத்தான்கள் யார் என்பதை மட்டும் மறைத்து விட்டார்.

வாதத்திறமையைக் கொண்டு தப்பி விடக் கூடாது.

திருவல்லிக்கேணி ரசூல் மைதீன் சத்தீயநேசனாக இருந்ததை நிறுத்திய பின்னரும் அதே சத்தீயநேசன் பெயரில் மொட்டைக் கடித மெயில்கள் வந்த வண்ணம் இருந்தது. நான் சத்தீயநேசன் என்ற பெயரில் எழுதிய போது நீங்கள் பதில் சொல்லாமல் பெயரையும் முகவரியையும் கேட்டு மெயில் எழுதினீர்கள். இப்போது அதே பெயரில் யாரோ உங்களைப் பற்றி எழுதிக் கொண்டு உள்ளாரே, அவருக்கு பதில் சொல்லாமல் இருக்கிறீர்களே? என்ன ஆயிற்று? பதில் இல்லையா? என்று கேட்டு சாட்டிங் செய்திருந்தார். எங்க அப்பன் குதிலுக்குள் இல்லை என்கிற இந்தக் கேள்வி வந்தபொழுதே இந்த மொட்டைக் கடிதத்தின் தலைமையகத்தை இன்னும் தெளிவாக நாம் அறிந்து விட்டோம். இருந்தாலும் அடையாளம் காட்டப்படும்பொழுது எந்த ரூட்டிலும் வாதத்திறமையைக் கொண்டு தப்பி விடக் கூடாது என்பதற்காக விட்டு வைத்தோம். நமது கண்டு பிடிப்பு சரிதான் என்பதை இன்டர்நெட் துறையிலுள்ள பல நிபுணர்களிடமும் கலந்து மூன் பப்ளிகேஷனிலிருந்து வந்ததையும் உறுதி செய்து கொண்டோம்.

இவர்களை இளையவனும் கண்டு பிடித்து விட்டார்.

இதற்கிடையே இளையவனும் அவருக்கு அல்லாஹ் அளித்துள்ள வலைமனை நிபுணத்துவத்தைக் கொண்டு இவர்களை கண்டு பிடித்து விட்டார். இவ்வளவு கீழ்தரமானவர்களாக ஆகிவிட்ட அவர்களை உடனே அடையாளம் காட்ட அவர் விரும்பவில்லை. கீழ்த்தரமான செயல்களை செய்து அவர்களை அவர்களே கீழ்தரமாக ஆக்கிக் கொண்டு, எவ்வளவுதான் கீழ்தரமானவர்களாக ஆகி விட்டாலும் சமுதாயத்தில் உள்ள அப்பாவிகள் அவர்களை கண்ணியவான்களாக கருதி வருகிறார்கள். அந்த கண்ணியத்தை அவர்கள் காப்பாற்றிக் கொள்ளட்டும் என்று வாய்ப்பளித்த இளையவன் எச்சரிக்கை மெயில் அனுப்பி இருந்தார்.

இளையவன் அனுப்பிய எச்சரிக்கை.

அதில், மேலே குறிப்பிட்டுள்ள அந்த கோடிங் உங்களது ஐடியின் வரலாறு. நீங்கள் எங்கிருந்து அனுப்பி உள்ளீர்கள். நீங்கள் யார் என்பதை அறிந்து கொண்டோம். தயவு செய்து உங்கள் உண்மை பெயருடன் வெளியிடுங்கள். மக்கள் நீங்கள் யார் என்பதை அறியட்டும் அல்லது நாங்கள் வெளியிடுவோம். என்று எச்சரித்திருந்தார். இதற்குப் பிறகும் அவர்கள் திருந்துவதாக இல்லை. யானை தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொள்ளும் என்பார்களே அதுபோல்தான் அவர்கள் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொள்ளும் பணியை தொடர்ந்தார்கள். சத்திய நேசன் என்ற பெயரில் இன்னவர்கள்தான் எழுதுகிறார்கள் என்று அறிந்து கொண்ட எல்லாரும், எழுதட்டும்; எவ்வளவு தூரம் எழுதுவார்கள். என்று பார்ப்போம். பின்பு அடையாளம் காட்டுவோம். பொறுமையாளர்களை அல்லாஹ் நேசிக்கிறான் என்று இருந்தார்கள். நாமும் பொறுமையுடன் இருந்தோம்.

அல்லாஹ் அவர்களுக்கு கொடுத்துள்ள கூலி.

இந்நிலையில் பாக்கர் கையும் களவுமாக பிடிபட்டு விட்டதாக செய்திகள் மேலப்பாளையம் த.த.ஜ. தரப்பிலிருந்து வந்தன. இட்டுக் கட்டி நம்மிடமிருந்து பதிலை எதிர் நோக்கி திட்டமிட்டு பொய் கூறுகிறார்களோ என்று எண்ணினோம். பிறகு பல வழிகளிலும் கேள்விகளாக வந்த செய்திகள் மூலம் உண்மை என்பதை அறிந்து கொண்டோம். அதை நாம் கண்டு கொள்ளவில்லை. குறுகிய காலத்தில் அல்லாஹ் அவர்களுக்கு கொடுத்துள்ள கூலி என்று விட்டு விட்டோம்.

இன உணர்வுடன் வந்த அபு அவ்ன் மெயில்.

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடிப்பது போல 20-07-2004 அன்று இவர்களை தெரிந்து கொள்ளுங்கள் என்ற தலைப்பில் சத்தீயநேசன்கள் ஒரு மெயில் அனுப்பினார்கள். முன்னதாக பகிரங்க மன்னிப்புக் கேட்கிறேன் என்ற தலைப்பில்தான் நமது இதழை வெளியிட இருந்தோம். அந்த மெயிலைக் கண்ட பின்தான் பாக்கர் - யாஸ்மின் விவகாரத்தை பற்றி விசாரித்து உறுதி செய்து வெளியிட முடிவு செய்தோம். இன உணர்வுடன், தங்களுக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயம் என்கிற அபு அவ்ன் மெயில் வந்த பின் த.த.ஜ. மாநில செயலாளர் டைரக்கர் பாக்கர் பற்றியதை வெளியிட்டே ஆக வேண்டும் என்ற முடிவுக்கு வந்து வெளியிட்டு விட்டோம்.

நான் எழுதவில்லை என்று சத்தியம் செய்து விடலாம்.

மேடையில் விமர்சித்த அந்த சகோதரர் இடம் பி.ஜே.யின் முபாஹலா அழைப்பு பற்றியும் விளக்கினோம். ஜவாஹிருல்லாஹ் போன்றவர்களை முபாஹலாவுக்கு அழைக்கும் பி.ஜே. என்னோடு முபாஹலாவுக்கு வர பயப்படுவது ஏன் தெரியுமா? இன்று சத்திய நேசன் என்ற பெயரில் மொட்டை கடிதங்கள் எழுதும் அணித் தலைவரான இதே பி.ஜேதான் 1988 உண்மை நேசன் எனும் பெயரில் மொட்டை கடிதம் எழுத தூண்டினார். பீல்டில் உள்ளவர்கள் யாரும் எழுதக் கூடாது. எதிர் தரப்புக்கு தெரியாத ஆளை வைத்து எழுதனும். அவன் பீல்டில் உள்ளவர்களைத்தான் அடையாளம் காட்டுவான். பீல்டில் உள்ளவர்கள் எழுதாததால் நான் எழுதவில்லை என்று சத்தியம் செய்து விடலாம் என்று யோசனை கூறினார்.

அல்லாஹ்வின் சாபத்திற்கு பி.ஜே. பயப்படவில்லை.

அதுபோல் இன்னொரு முறை மொட்டைக் கடிதம் எழுதத் தூண்டிய பி.ஜே. பிரச்சனை வந்தால் முபாஹலாவுக்கு வர்றியா என்று கேட்கணும். முபாஹலா என்றால் சுன்னத் ஜமாஅத் காரன் பயந்து ஓடி விடுவான் என்றார். இந்த செய்தியைக் கேட்ட மேடையில் விமர்சித்த அந்த சகோதரர், ஷஷஅல்லாஹ்வின் சாபத்திற்கு சுன்னத் ஜமாஅத்தினர் பயப்படுகிறார்கள் பி.ஜே. பயப்படவில்லை என்றுதான் அர்த்தம்|| என்றார். வார்த்தை விளையாட்டால் சத்தியம் பண்ணவும் முபாஹலா பண்ணவும் கற்றுக் கொடுத்த பி.ஜே. என்ன மாதிரியெல்லாம் வார்த்தை விளையாட்டால் சத்தியம் செய்வார், முபாஹலா பண்ணுவார் என்பது எனக்குத் தெரியும். ஜவாஹிருல்லாஹ்வை முபாஹலாவுக்கு அழைத்தபோது செய்த வார்த்தை விளையாட்டை உடனே சுட்டிக் காட்டி இருக்கிறேன். எனவே அவரது வார்த்தை விளையாட்டுகளை நான் பிடித்து விடுவேன் என்பதால்தான் எனக்கு பயந்து நடுங்குகிறார் என்றேன்.

இவ்வளவு விளக்கங்களையும் விரிவாக கேட்டுச் சென்ற அவர் பாக்கருக்கு நெஞ்சு வலி வந்தது ஏன்? என்ற விளக்க இதழ் வெளியிடுவது மார்க்க விரோதமானது என்று நேரில் ஒரு வார்த்தையாவது சொல்லி இருந்தால் நாம் இவ்வளவு எழுதி இருக்க மாட்டோம். ஒதுங்கி இருக்கிறோம் என்று கூறி விட்டு சார்புத்தன்மையுடன் யார் நடந்து கொண்டாலும் அவர்களை அடையாளம் காட்ட எப்பொழுதும் நாம் தயங்க மாட்டோம். பாக்கருக்கு நெஞ்சு வலி வந்தது ஏன்? என்ற இதழைக் கண்டவர்கள் பழுலுல் இலாஹி ஆதாரமின்றி வெளியிட மாட்டார் என்றாலும் மேடை ஏறினால் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று சொல்லும் பாக்கரா இப்படி? என யோசித்த வண்ணம் இருந்துள்ளனர். இவரது மேடைப் பேச்சு சம்பவம் நடந்துள்ளது உண்மைதான் என்ற உறுதியை அளித்து சந்தேகத்தை நீக்கி விட்டது. ஷஷதாங்கள்தான் அறிவாளிகள் என்று எண்ணி ஏதேதோ செய்து வசமாக மாட்டிக் கொண்டார்கள். மொட்டைக் கடிதம் எழுதும் இவர்களா ஷஏகத்துவம்| பிரச்சாரகர்கள்?|| என்று சொன்னவரும் அவர்தான் என்பதையும் நினைவுபடுத்திக் கொள்கிறோம்.

அடையாளம் காட்ட வேண்டிய நேரத்தில் அடையாளம் காட்டுவோம்.

தவ்ஹீது கொள்கைப் பிரச்சாரத்தை பிழைப்பாக ஆக்கிட பொய்யர்களாக ஆகி இப்பொழுது மொட்டைக் கடித நாயகர்களாகவும் ஆகிவிட்ட இவர்களை நாம் அடையாளம் காட்ட துவங்கியபோது அதை எதிர்த்து விமர்சித்து உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி 4 பிரமுகர்களையும் அழைத்துக் கொண்டு ஒருவர் வந்தார். இரவு 11 மணிக்கு துவங்கிய பேச்சு வாhத்தை சுபுஹு தொழும் வரை நீடித்தது. நமது விளக்கத்தை கூறிய நாம் பொய்யர்களை அடையாளம் காட்டுவதில் உறுதியாக இருந்தோம். சத்திய நேசன் பெயரால் பொய்யர்கள் செய்து வரும் அட்டகாசத்தைக் கண்ட அவர் தனது கூற்றை வாபஸ் பெற்றதுடன் இந்த iஷத்தான்களை எங்களால் எதிர்க்க முடியவில்லை. நீங்கள் துணிந்து விட்டீர்கள். இந்த iஷத்தான்களை அடையாளம் காட்டும் உங்கள் பணியை தொடருங்கள் என்றும் கூறினார். எனவே iஷத்தான்களை மட்டுமல்ல இந்த iஷத்தான்களுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ துணை நிற்கும் அமைப்புகளாக இருந்தாலும் தனி நபர்களாக இருந்தாலும் அவர்களையும் நாம் அடையாளம் காட்ட வேண்டிய நேரத்தில் அடையாளம் காட்டுவோம்.

லுஹாவுடைய ஈமானின் நிலை.

2002 துவக்கத்தில் பி.ஜே.யை எதிர்த்து கடிதம் எழுத தூண்டி விட்டுச் சென்ற ஷம்சுல்லுஹாவின் பொய் சாட்சியத்தை, பொய் சத்தியத்தை அடையாளம் காட்டியதால்தான் நட்பை முறித்து துக்க நாள் என்று அறிவித்தார். அவரது இன்றைய நிலை என்ன? தேர்தலில் களப்பணி ஆற்றினால் ஈமான் போய் விடும் என்று எழுதிய லுஹாவுடைய ஈமானின் நிலை என்ன? அவரது வாயிலிருந்தே வெளிப்பட்டுள்ளது. ஓவ்வொரு மனிதனும் எவ்வளவுதான் பதவியின் உச்சத்திற்கு சென்று விட்டாலும் அவனது கலாச்சார வார்த்தை அவனை விட்டுப் போகாது. என்னதான் உயரிய சொற்களில் படித்து பாண்டித்தியம் பெற்றவராக இருந்தாலும் கோபத்தில் அவரது கலாச்சசார வார்த்தைதான் வெளிப்படும்.

லுஹா யாருடைய கலாச்சாரத்தில் உள்ளார்.

மேலப்பாளையம் முஸ்லிம்கள் கோபத்தில் சாவபள்ளி இல்லையா? என்பார்கள் ஏனென்றால் பள்ளிகளை ஒட்டியே கபரஸ்தான்கள் இருப்பதால் அவ்வாறு சொல்லும் வழக்கம் உள்ளது. இது மேலப்பளையம் பகுதியில் உள்ள முஸ்லிம் தாய்மார்களின் கலாச்சாரம் சொல். அந்த பகுதியில் உள்ள இந்துச் சகோதரர்கள் முஸ்லிம் குடி இருப்புகளுடன் சேர்ந்து வாழ்ந்தாலும் கோபத்தில் அவர்கள் கூறும் வார்த்தை பாடையில் ஏற்றுவோம் என்பதுதான். இது அவர்களின் கலாச்சாரச் சொல். லுஹா யாருடைய கலாச்சாரத்தில் உள்ளார் புரிந்திருப்பீர்கள்.

இளையவனை விமர்சிக்காதது ஏன்?

ஈ-மெயிலில் சத்தீய நேசன் என்ற பெயரில் எழுதுபவர்களை மொட்டைக் கடிதப் பேர்வழிகள் என்று விமர்சிக்கும் நீங்கள் வெப்சைட் இளையவனை விமர்சிக்காதது ஏன்? இது தரங்கெட்டவர்களாக ஆகிவிட்ட மொட்டை கடித பேர்வழிகளை தலைவர்களாக ஏற்று அவர்களுக்காக சப்பைக்கட்டு கட்டக் கூடியவர்கள் கேட்ட கேள்வி.

இப்னு மர்யம் முதல் இறைநேசன் வரை.

உணர்வு வார இதழில் ஆசிரியராகச் சேர்ந்த பி.ஜே. இறை நேசன் என்ற புனைப் பெயரைத்தான் ஆசிரியர் என்ற இடத்தில் போட்டு வந்தார். இறை நேசன் என்றால் யார் என்ற கேள்விகளுக்கு அவர் பதில் எழுதிக் கொண்டிருக்கவில்லை. பத்திரிக்கை ஆசிரியர் என்ற முறையில் மட்டுமன்றி கட்டுரையாளர் என்ற அடிப்படையில் இப்னு மர்யம், முஹம்மது, அபுமுஹம்மது, முஸ்லிம், அபுமுஸ்லிம், அபுயாஸிர், அபு நபீலா இப்படி எண்ணற்ற புனைப் பெயர்களைக் கொண்டு மீடியாக்களில் எழுதினார். இப்னு மர்யம் முதல் இறைநேசன் வரையிலான அவரது புனைப் பெயர்களை யாரும் விமர்சிக்கவில்லை. அது மாதிரிதான் வெப்சைட் ஆசிரியர் இளையவன் என்று விளகக்கம் கூறினோம்.

அபு ஜஹ்லைவிட மோசமானவர்கள்.

நமது இந்த விளக்கத்தை கேட்ட அவர்கள், வெப்சைட் ஆசிரியர் புனைப் பெயரில் எழுதலாம் என்றால் ஈ-மெயிலில் சத்தீயநேசன் என்ற புனைப் பெயரில் ஏன் எழுதக் கூடாது என்கின்றனர். பத்திரிக்கைள், டி.வி.க்கள் வரிசையில் விஞ்ஞான முன்னேற்றம் கண்ட மீடியாக்களில் ஒன்றுதான் வெப்சைட். மீடியாக்களில் ஆசிரியர்களாக இருப்பவர்கள் புனைப் பெயர் வைத்துக் கொள்வது நடை முறையில் எல்லாரும் ஏற்றுக் கொண்ட ஒன்று. வெப்சைட் என்பது பத்திரிக்கை அந்தஸ்த்தில் உள்ளது. ஈ-மெயில் என்பது கடித அந்தஸ்த்தில் உள்ளதுதான். எனவே சத்தீய நேசன் என்பவர்கள் மொட்டைக் கடித பேர்வழிகளே. இனி எத்தனை பெயர்களில் வந்தாலும் சமுதாயத்தின் பார்வையில் அவர்கள் யார் என்பதை அறிய மீண்டும் தலைப்பை படிக்கவும். சுருக்கமாகச் சொன்னால் அபு ஜஹ்லைவிட மோசமானவர்கள்.

எமது முந்தைய வெளியீடான பாக்கருக்கு நெஞ்சு வலி வந்தது ஏன்? என்ற தலைப்பிலான மெயிலைக் கண்ட தவ்ஹீதவாதிகளில் பலர் உலக முழுவதிலிருந்தும் கடும் கண்டனங்களை போன்கள் மூலம் nதிரிவித்தனர். தே.. .மவன் என்று வெட்கமில்லாமல் மேடைகளில் பேசியதோடு அல்லாமல் தே... தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களை தவ்ஹீது ஜமாஅத் என்று எழுதி உண்மையான தவ்ஹீதவாதிகளின் மனதை புண்படுத்தி கேவலப்படுத்தி; விட்டீர்கள். இனிமேல் இது மாதிரி எழுதாதீர்கள். அவர்களை பி.ஜே. அணி என்றோ, நீங்கள் குறிப்பிடக் கூடிய பி.ஜே. வகையறா என்றோ பி.ஜே.யிஸத்தினர் என்றோ. பிஜே.யானி ஜமாஅத் என்றோ குறிப்பிடுங்கள். இனி அவர்களை தவ்ஹீது ஜமாஅத் என்ற எழுதினால் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்று எச்சரித்தார்கள். எனவே உண்மையான தவ்ஹீதவாதிகள் மனதை புண்படுத்தியதற்காக எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்

மார்க்கத்தை பேணுவது சம்பந்தமான பைஅத்தை - உறுதி மொழியை அல்லாஹ்விடமோ அவனது தூதர் இடமோதான் செய்ய வேண்டும். மனிதர்களிடம் செய்தால் அவரை இறை நிலைக்கு அல்லது இறை தூhதர் நிலைக்கு கொண்டு போய் விட்டார்கள் என்றுதான் அர்த்தம். எனவே அவர்கள் தனி மதத்தினரே என்று பி.ஜே. அளித்துள்ள விளக்கப்படி அவர்களை பி.ஜே. மதத்தினர் என்று அழைப்போம். வஸ்ஸலாம்.
கா.அ.முஹம்மது பழுலுல் இலாஹி
6-8-2004

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.