தெளிவான வெற்றி பெற்றவர்கள் ஆற்றவிருக்கும் பணிகள் எப்படி இருக்க வேண்டும்.

த.மு.மு.க.வின் தலைமைப் பொறுப்பாளர்களாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கும் புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கும் வாழ்த்துக்கள் வந்த வண்ணம் உள்ளதை hவவி:ஃஃறறற.pதஎளவஅஅம.உழஅ என்ற சைட் மூலம் உடனுக்குடன் அறிந்தோம். வெற்றி பெற்றவர்களை வாழ்த்துவதும் வரவேற்பதும் சம்பிரதாயமாகவும் சடங்காகவும் ஆகிவிட்ட காலமிது அப்படிப்படிப்பட்ட காலத்தில் த.மு.மு.க. தலைமையினருக்கு வந்து கொண்டிருக்கும் வாழ்த்துக்களில் நாம் காணும் வார்த்தைகள் சடங்காகவோ சம்பிரதாயமாகவோ இல்லாமல் உளப்பூர்வமானதாக உள்ளதை அறிய முடிகிறது. முந்தைய முறைகளிலே தேர்வு செய்யப்பட்டபோது கூட இது போன்ற உளப்பூர்வமான வாழ்த்துக்களை மீண்டும் தேர்வு பெற்றுள்ளவர்கள் சந்தித்திருக்க மாட்டார்கள்.

உங்கள் முகத்தைப் பார்த்து தரவில்லை.

இன்று எதிர் அணியாக ஆகி தங்களைத் தாங்களே எதிரிகளாக ஆக்கிக் கொண்டவர்கள் பரப்பிய செய்திகளில் ஒன்று பொதுக்ழுவில் உங்களுக்கு ஆதரவு இல்லை. பொதுக்குழுவைக் கூட்டினால் நீங்கள் தூக்கி எறியப்படுவீர்கள். த.மு.மு.க.வின் தலைமைப் பொறுப்பு உங்களுக்காக தரப்படவில்லை. உங்கள் முகத்தைப் பார்த்து தரவில்லை.
மக்களை திசை திருப்பிடும் பேச்சு திறன் உங்களிடம் கிடையாது.
ஸலாஹுத்தீன் ஐயூபி போன்றவர்களின் வீர வரலாறும் உண்மை வரலாறும்தான் உங்களுக்கு கூறத் தெரியும். இது அல்லாத கவர்ச்சியான பேச்சோ, எழுத்தோ, சமயத்திற்கு தக்கவாறு சமாளித்து பேசி மக்களை திசை திருப்பிடும் பேச்சு திறனோ உங்களிடம் கிடையாது. எனவே முந்தைய முறைகளில் நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது உங்கள் மீது உள்ள இது போன்ற நம்பிக்கையினால் நீங்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இதைத்தான் பாடைப் புகழ்; லுஹாவும் கூட தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
பொது மக்கள் பார்வைக்கு கொடுக்கப்பட வேண்டிய பொதுக்குழு அது.
எனவே முந்தைய முறைகளில் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது எப்படியோ, இப்பொழுது அவர்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்பதை அப்படியே எழுதுவார்கள் என்று எதிர் பார்த்தோம். வர்ணனை செய்யப்பட வேண்டிய அந்த நிகழ்ச்சியின் சிறப்பு பற்றி மக்கள் உரிமை 10 சதவிகிதம் கூட எழுதவில்லை. தற்பெருமையாக ஆகி விடக் கூடாது, மற்றவர்கள் மிகைப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறி விடக் கூடாது என்று தவிர்த்து சுருக்கி விட்டார்களா தெரிவில்லை. இளையவன் வெப் சைட்டும் சார்புத் தன்மையால் எழுதி உள்ளார் என்ற முத்திரைக்கு அஞ்சி அந்த பொதுக்குழுவின் சிறப்பை முழுமையாக எழுதவில்லை போலும். பதியப் பட்ட ஒலி,ஒளி நாடாக்களை பொது மக்கள் பார்வைக்கு கொடுக்கப்பட வேண்டிய பொதுக்குழு அது.
சிறப்பு வாய்ந்த பொதுக்குழு மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்
யு.ஏ.இ.யிலிருந்து விடுப்பில் சென்ற நிலையில் சிறப்பு அழைப்பாளராக அந்த பொதுக்குழுவில் கலந்து கொண்ட சகோதரர் ஒருவர், ஷஷ9 ஆண்டுகள் பொறுப்பில் இருந்து விட்டோம். நீங்கள் அமானிதமாக தந்த பொறுப்பை அமானிதத்தை ஒப்படைக்கிறோம் என்று கூறி பொறுப்பாளர்கள் சென்றதும். ஏற்பட்ட கொந்தளிப்பு இருக்கிறதே, இது மாதிரி உணர்ச்சி கொந்தளிப்பை இது வரை நான் பார்த்ததில்லை|| என்று கூறினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அவருக்கே ஏற்பட்ட உணர்ச்சி கொந்தளிப்பை கட்டுப் படுத்த முடியாமல் செல் போனை ஆன் செய்து வெளி நாட்டில் உள்ள அவரது நண்பருக்கு அந்த கொந்தளிப்புக் குரல்களை கேட்க வைத்துள்ளார். அத்தகைய சிறப்பு வாய்ந்த பொதுக்குழு மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் புதிய நிர்வாகிகள்.
உமியும் அரிசியும்.
அடித்த காற்றில் அடிப்படை உறுப்பினராகக் கூட இல்லாமல் பறந்து போய் விட்ட உமிகளை கொண்டு வரும் திட்டத்தைக் கூறி பொறுப்பில் உள்ளவர்கள் விலக வேண்டும் என்ற சதி திட்டத்தை தன் திட்டமாகக் கூறிய பரகத் அலி அவர்களுக்கும் பொதுக்குழு பதில் அளித்து உள்ளது. அரிசியை நீ கொண்டு வா. உமியை நான் கொண்டு வருகிறேன் 2 பேரும் ஊதி ஊதி தின்போம் என்ற திட்டத்திற்கு பதில் கொடுக்க வேண்டியவர்கள் சரியான பதில் கொடுத்து விட்டார்கள்.
அந்த தெளிவான வெற்றியை ஏன் கொடுத்தான்.
இன்னா பதஹ்னா லக பத்ஹம் முபீனா. இந்த ஆயத்தை தெரியாத தமிழர்களே இல்லை என்று ஒரு காலம் இருந்தது. மேலப்பாளையம் சட்டமன்ற தொகுதியாக இருந்தபோது முஸ்லிம் லீக் சார்பில் 1967ல் எம்.எல்.ஏ.வான சொல்லின் செல்வர் எம். எம். பீர் முஹம்மது ஸாஹிப் அவர்கள் மூலம் தமிழ்நாட்டின் எல்லா பகுதிகளிலும் ஒலித்த ஆயத்து இது. இந்த ஆயத்திலே இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு தெளிவான வெற்றியை கொடுத்துள்ளதை குறிப்பிட்டுக் கூறி உள்ள அல்லாஹ். அந்த தெளிவான வெற்றியை ஏன் கொடுத்தான் என்பது பற்றியும் சொல்லிக் காட்டி உள்ளான். இதைத்தான் த.மு.மு.க.வின் புதிய நிர்வாகிகள் தங்கள் சிந்தனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். அதை தெளிவான வெற்றி என்று ஏன் குறிப்பிட்டுள்ளான் என்பதையும் சிந்தனைக்கு எடுத்துக் கொண்டு அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த வேண்டும்.
களங்கப்படுத்த முடியாத தெளிவான வெற்றியை பெற்றுள்ளார்கள்.
பொதுக்குழுவில் போட்டி இல்லை, பொறாமை இல்லை, எதிர்ப்பு இல்லை என்பது மட்டுமல்ல, ஏக மனம் என்ற பெயரால் ஆதிக்கம் செலுத்தி சாதிக்க சதி செய்யும் சக்திகள் எதுவும் இல்லாத சிறப்பான பொதுக்குழு இது. முழுக்க முழுக்க அவர்கள் மீதும் அவர்கள் திறமைகள் மீதும் பொதுக்குழுவினர் வைத்துள்ள சிறப்பான மகாத்தான நம்பிக்கை மூலம் நேரடியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். தங்களைத்தாங்களே களங்கப்படுத்திக் கொண்டிருப்பவர்களால் களங்கப்படுத்த முடியாத தெளிவான வெற்றியை பெற்றுள்ளார்கள்.
அல்லாஹ்வின் திரு பொறுத்தத்தை மட்டுமே நாடியதாக இருக்க வேண்டும்.
களங்கப்படுத்த முடியாத தெளிவான மகாத்தான இந்த வெற்றியை அவர்களுக்கு கொடுத்தவன் அல்லாஹ். அந்த அல்லாஹ் தந்த இந்த வெற்றியின் மூலம் அவர்கள் ஆற்றவிருக்கும் பணிகள் எப்படி இருக்க வேண்டும். அல்லாஹ்வின் திரு பொறுத்தத்தை மட்டுமே நாடியதாக இருக்க வேண்டும்.

மறுமையை முன்னிறுத்தி சமுதாயச் சீர்திருத்தத்துக்காக நானும் சேர்ந்து உருவாக்கிய தவ்ஹீது இயக்கத்தில் (தவ்ஹீது ஜமாஅத்தில்) கூட, சுயநலனையும், பதவி நோக்கத்தையும், பணம் திரட்டும் குறிக்கோளையும் நான் காண்கிறேன். சம்பளம் இல்லாவிட்டால் அவர்கள் இப்பணியை செய்ய மாட்டார்கள் என்பதையும் உணர்கிறேன் என்று எழுதியதையும் பார்தோம். இது உண்மைதான் என்பதை நிரூபிப்பதற்காக முக்கிய அறிவிப்பிலிருந்து துவங்கி முனைப்போடு செயல்பட்டுக் கொண்டிருப்பதையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் உலகில் அடைய வேண்டிய உரிமைகளுக்காகத் துவங்கப்பட்ட த.மு.மு.கவின் தலைமை நிர்வாகிகளிடம் அல்லாஹ்வின் மீது ஆணையாக இந்த நிலையை நான் காணவில்லை.
மறுமைக்கான (தவ்ஹீது பிரச்சார) பணியைக் கூட சில பேர் (தவ்ஹீது கொள்கைப் பிரச்சனை என்று கூறி) இவ்வுலக ஆதாயத்துக்காக ஆக்கி விட்ட நிலையில் இவ்வுலகிற்காக மட்டுமே உரிய பணிகளை கூட இவர்கள் மறுமைக்காக ஆக்கி கொண்டதை நான் பார்க்கிறேன் என்று தரப்பட்ட நற்சான்று உண்மைதான் என்பதை நிரூபிக்க வேண்டிய வாய்ப்பைத்தான் பொதுக்குழு தந்துள்ளது என்பதை உணர்ந்து அவர்கள் ஆற்றவிருக்கும் பணிகள் இருக்க வேண்டும்.
எதற்கும் ஒரு எல்லையுண்டு.
முந்தைய முறைகளிலே த.மு.மு.க. தலைமையினர் செய்ய விரும்பாத விரும்பத்தகாத செயல்களை ஒரு தீய சக்தியின் நிர்ப்பந்தத்திற்கு பணிந்து செய்துள்ளார்கள். இதை சமாதானக் குழுவைச் சார்ந்த லெப்பை தம்பி சொல்லிக் காட்டும் எதற்கும் ஒரு எல்லையுண்டு. இனி எங்களால் பொறுத்துக் கொள்ள இயலாது. ஏன்று அவர்கள்; கூறி உள்ள இந்த வார்த்தைகளும் அவர்களது சமீப கால செயல்பாடுகளும் உணர்த்துகின்றன.
பி.ஜே. இடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
அநியாயமாகவும் நீண்ட நெடு நாட்களாவும் சிறையில் வாடும் முஸ்லிம்களின் விடுதலைக்கு முஸ்லிம் அமைப்புகள் அனைத்தும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்ற கோரிக்கையை த.மு.மு.க. தலைமை ஏற்றுக் கொண்டுள்ளதும் அநியாயமாகவும் நீண்ட நெடு நாட்களாவும் சிறையில் வாடும் முஸ்லிம்கள் பி.ஜே. இடம் மன்னிப்பு கேட்க வேண்டும் அதற்குப் பிறகுதான் அவர்களது விடுதலைக்கு பாடுபடுவது பற்றி யோசிக்க முடியும் என்று பி.ஜே. ஜமாஅத் கூறி உள்ளதும் குறிப்பிடத்தக்க சான்றாகும்.

ஏற்கனவே ஜவாஹிருல்லாஹ் சொல்லிக் காட்டியுள்ளபடி பி.ஜே. அணியினர் மட்டுமல்ல பி.ஜே.யே அநியாயமாக பாதிக்கப்பட்டால் அவருக்காகவும் பாடுபட வேண்டும். அல்லாஹ் தந்துள்ள தெளிவான வெற்றி பெற்றவர்கள் ஆற்றவிருக்கும் பணிகள் இப்படித்தான் இருக்க வேண்டும். அதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன். கா.அ. முஹம்மது பழுலுல் இலாஹி

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.