சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்களுக்கு சாதகமாக பரப்பி வருகிறீர்கள்.
26.07.2002.ல் நேரில் வந்த அபுதாபி-முஸாபா சகோதரர்கள் சமுதாய மற்றும் சன்மார்க்க கவலையுடன் பேசுவதாக கூறிய அவர்கள் நடு நிலையோடு முயற்சி செய்வதாகக் கூறி ஒரு கோரிக்கை வைத்தார்கள். உணர்வு, அல்முபீனில் வெளியானவற்றுக்கும் துபை ஐ.ஏ.ஸி.க்கு நீங்கள் அனுப்பிய பதில் கடிதம் உட்பட பல அவதூறு பிரச்சாரங்களுக்கும் பதில் கூறும் கடமை எனக்கு இருக்கிறது. இருப்பினும் அவர்கள் கோரிக்கையை ஏற்று அவர்கள்; உணர்வுகளை மதித்து அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை தற்காலிகமாக ஒத்தி வைத்தேன். இதை உறுதி செய்து கொள்ள நேரில் பேசியபடி 04.08.02.அன்று ஷhர்ஜா ஐ.ஏ.ஸி. தலைவர் திருச்சி அப்துர் றஹ்மான் அவர்கள் மூலம் பேக்ஸ் அனுப்பி இருந்தார்கள். நானும் 06.08.02.அன்று கடிதம் மூலம் உறுதி கொடுத்துள்ளேன். இந்த அடிப்படையில் நான் எந்த பதிலும் எழுதாமல் இருக்கும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்களுக்கு சாதகமாக பரப்பி வருகிறீர்கள்.
உங்களிடம் பதில் இருந்தால்தானே.
தமீமுல் அன்சாரி யு.ஏ.இ. போய் தெளிவாக விளக்கி விட்டார் என்று பீற்றி இருக்கிறீர்கள். அவரோ பழ்லுல் இலாஹி பற்றி நான் எந்தக் குற்றச் சாட்டும் கூறவில்லை என்னிடம் அவர் பற்றி கேட்காதீர்கள் என்று பகிரங்கமாக கூறி இருக்கிறார். பழ்லுல் இலாஹி சம்பந்தமாக கேள்வி கேட்கக் கூடாது என்ற டிமாண்டுடன்தான் நிகழ்ச்சிகளை ஒப்புக் கொண்டார். அங்கே வந்தால் கேள்வி கேட்பீர்கள் அதனால் வரமாட்டேன். கேள்வி கேட்பதாக இருந்தால் இன்ன இன்ன கேள்விகள் கேட்கக் கூடாது என்று டிமாண்ட் வைத்து நிகழ்ச்சிகளை ஒப்புக் கொண்ட முதல் ஆள் தமீமுல் அன்சாரி. 2 வது ஆள் எம்.ஐ. சுலைமான். கேள்விகளுக்கு பயந்து ஓடுபவர்களைப் பற்றி நீங்கள் செய்துள்ள விமர்சனங்களையே இவர்கள் மூலம் உங்களுக்கு வழங்கி விடுவோம். உங்களிடம் பதில் இருந்தால்தானே அவர்களால் பதில் கூற முடியுயம்.
பல மன்னிப்பு கேட்டு ஓடி ஒழிந்து கொண்டார்.
அதுபோல உத்தமர் லுஹா தம்பி பந்தல் பேச்சாளர் 97 வரை இந்திய ராணுவத்தை நுலாம் பூச்சி என்று பேசி விட்டு 98 க்குப் பிறகு நுலாம் பூச்சியாகிவிட்ட மாவீரன் காஜா பிர்தவ்ஸி, உங்கள் செட்டப் சி.டி.க் காப்பிகளைக் கொடுத்து அண்ணனுக்கு ஆதரவு திரட்டும் பணியில் ஈடுபட்டார். வாருங்கள் பழ்லுல் இலாஹியிடம் நேரில் பேசுவோம் என்று மேலப்பாளையம் பர்கானி ரசூல் அழைத்ததற்கு பின்னங்கால் பிடரியில் அடிபட உங்களை விட வேகமாக ஓடி உள்ளார். சரி பழ்லுல் இலாஹி தவிர மற்ற மேலப்பாளையவாசிகளிடம் பேச வாருங்கள் என்று அழைத்துள்ளார். அதற்கும் ஓடி ஒழிந்து என் அண்ணன் லுஹா தனித் தனியாகக் கண்டு பேசித்தான் கேன்வாஸ் பண்ணக் கூறி உள்ளார் என்று கூறி பல மன்னிப்பு கேட்டு ஓடி ஒழிந்து கொண்டார்.
2 சாட்சிகள் துபையில் உள்ளனர் அவர்களை அழைத்து கேளுங்கள்.
இவருக்கு முன்பே உங்கள் செட்டப் சி.டி.யையும் லுஹாவின் கடிதங்களையும் பரப்பி வந்த அணியினரிடம். மஸ்ஜிதுர் றஹ்மானில் வினியோகிக்கப்பட்டது 900 பிரியாணி என்று பழ்லுல் இலாஹி கூறி இருப்பதும் உண்மை. மஸ்ஜிதுர் றஹ்மானுக்கு கொண்டு வரப்பட்ட பிரியாணி 1250 என்று மீரான் கூறி இருப்பதும் உண்மை. 900 பிரியாணிகளை மட்டும் வினியோகித்து விட்டு மீதிப் பிரியாணிகளை மஸ்ஜிதுர் றஹ்மான் செயலாளர் இனாயதுல்லாஹ் மூடி ஒழித்து வைத்தார். மறுநாள் சுபுஹுவில் ஊசி நாற்றம் எடுத்தப் பின் குப்பையில் போட்டார். (இனாயதுல்லாஹ், லுஹா போன்றவர்களின் மனைவிமார்களுக்கு கொடுத்துவிட எண்ணித்தான் பிரியாணிகளை தார்ப்பாய் போட்டு மூடி ஒழித்து வைத்திருப்பார்கள். அவர்கள் கொடுத்துவிட எண்ணிய மனைவிமார்களுக்கு பழ்லுல் இலாஹி வீட்டிலிருந்து பிரியாணி போய் விடவே மூடிய பிரியாணியை எடுக்க மறந்து இப்படி நாறச் செய்து விட்டார்கள் போலும்.) இதற்கு அப்பொழுது தாயகத்தில் இருந்த 2 சாட்சிகள் துபையில் உள்ளனர் அவர்களை அழைத்து கேளுங்கள்.
அந்த அணியினர் மவுனமாகி விட்டனர்.
பழ்லுல் இலாஹியின் குற்றச்சாட்டுக்களுக்குப் பதில் கூற முடியாமல், பிரசுரம் வெளியிட்டால் சிவில் கிரிமினல் வழக்குப் போடுவோம் என்று மிரட்டினீர்கள். அதனால்தான் பழ்லுல் இலாஹியின் பிரசுரத்தை எனது முகவரியுடன் வெளியிட்டேன். என் மீது சிவில் கிரிமினல் வழக்குப் போடுங்கள் என்பன போன்ற மீரானின் விளக்கங்களை அந்த சி.டி.யில் எடிட் செய்துள்ளனர் என்று கூறியதும் அந்த அணியினர் மவுனமாகி விட்டனர்.
பெருந் தொகை பற்றி பி.ஜே. தந்த ஆதாரம்.
இஸ்லாத்திற்கு முரணாக நீங்கள் இட்ட கட்டளைப்படி தமீமுல் அன்சாரி நடந்தார். பெருந் தொகை பற்றி கேள்வி மேல் கேள்வி கேட்கப் பட்டும் பதில் கூற முடியாமல் திணறினார். ஷhர்ஜா ஐ.ஏ.ஸி.யில் பெருந் தொகை பற்றி தெரியும் என்று கூறியவர் எவ்வளவு என்று கேட்டதற்கு (பிரசுரத்தின் மூலம் இட்டுக்கட்டப்பட்ட பிரபலமான ஷஇந்த பெருந் தொகை) எவ்வளவு என்று ஞாபகம் இல்லை என்று கூறி நழுவி இருக்கிறார். உண்மையாக இருந்தால் ஞாபகத்தில் இல்லாவிட்டாலும் எது எதற்கெல்லாமோ உடனுக்குடன் அண்ணன் பி.ஜே.க்கு போன் போட்டு பேசியவர் இதையும் போன் போட்டு கேட்டு கூறி இருப்பார். திரும்பத் திரும்ப பலரும் நெருக்கவே பெருந் தொகை பற்றி பி.ஜே. தந்த ஆதாரம் என்று சில கடிதக் காப்பிகளை அபுதாபியில் கொடுத்துள்ளார்.

அதில் பெருந் தொகை பற்றி எந்த ஆதாரமும் இருக்கவில்லை. அந்த கடித காப்பிகளிலிருந்து தமீமுல் அன்சாரி பிரதானமாகக் சுட்டிக் காட்டி வைத்த வாதம். சுத்த சூபி ஷம்சுல் லுஹா 3,8000 திர்ஹங்களுக்கு மட்டுமே போன் பேசி இருக்க பழ்லுல் 6000 திர்ஹங்கள் என்று எழுதி உள்ளார் பாருங்கள் என்பது.
அவரால் பதில் கூற முடியவில்லை.
ஒரு நம்பர் பில்லில்தானே 3,800 காட்டுகிறீர்கள். 1999 ல் யு.ஏ.இ. வந்த ஷம்சுல் லுஹா 3 போன் நம்பர்களை அல்லவா உபயோகித்தார். மீதி 2 போன் நம்பர்களின் பில் எங்கே? வாதத்திற்காக 3800 திர்ஹங்கள் என்றே வைத்துக் கொள்வோம். இந்திய ரூபாய் 50,000 ஆகிறதே இவர் சொந்தப் பணம் என்றால் இப்படி பேசி இருப்பாரா? சொந்தப் பணம் என்றால் இப்படி பேசி இருக்க மாட்டேன். ஊர்ப் பணம் என்றால் ஊதாரித்தனமாக செலவு செய்வேன் என்ற தொணியில் லுஹாவே கடிதம் எழுதி உள்ளார். இது என்ன வகையில் நியாயம் என்று கேட்க அவரால் பதில் கூற முடியவில்லை.
பி.ஜே. இடமும் விசாரணை நடத்துவது.
பெருந் தொகை பற்றி தலைமை தந்த ஆதாரம் என்று தமீமுல் அன்சாரி கொடுத்ததில் 09.07.02. அன்று துபை ஐ.ஏ.ஸி. உங்களுக்கு எழுதிய கடிதமும் உள்ளது. அதில் 26.06.2002. அன்று நடந்த கூட்டத்pல் பழ்லுல் இலாஹி இடம் (மட்டும்) விளக்கம் கேட்க தீர்மானிக்கப்பட்ட மாதிரி எழுதி உள்ளனர். துபை ஷhர்ஜா நிர்வாகிகள் கூட்டத்தில் பேக்ஸை ஒட்டி பி.ஜே. இடமும் விளக்கம் கேட்பது, உங்கள் பாணியில் சொல்வது என்றால் பி.ஜே. இடமும் விசாரணை நடத்துவது பழ்லுல் இலாஹி இடமும் விளக்கம் கேட்பது என்றுதான் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.
தீர்மானத்தையும் மாற்றி எழுதி இருக்கிறார்கள்.
மேலும் பி.ஜே. இடம் கேட்க வேண்டிய கேள்விகள் பழ்லுல் இலாஹி இடம் கேட்க வேண்டிய கேள்விகள் என்று கேள்விகளும் எழுதி வைக்கப்பட்டுள்ளது. பழ்லுல் இலாஹி இடம் கேட்டு பி.ஜே.க்கு தெரிவிக்க வேண்டும். பி.ஜே.இடம் கேட்டு பழ்லுல் இலாஹிக்கு தெரிவிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. என்னிடம் விளக்கம் கேட்டது போல் உங்களிடமும் விளக்கம் கேட்டுத்தான் கடிதம் எழுதி இருக்க வேண்டும். மசூரா அடிப்படையிலேயே செயல்படுவது போல் கடிதத்திலே குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் மசூராவுக்கு முரணாக மட்டுமன்றி நிறைவேற்றிய தீர்மானத்தையும் இருட்டடிப்பு செய்து திரித்து உங்களை திருப்தி படுத்தும் விதமாக எழுதியுள்ளார்கள். ஷhர்ஜா நிர்வாகிகளும் கலந்து கொண்ட மசூராவின் தீர்மானத்தையும் மாற்றி எழுதி இருக்கிறார்கள்.
அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தைவிட பி.ஜே.ன் திருப்தியையே குறிக்கோள்.
26.06.02. மசூராவில் பி.ஜே. இடம் பேக்ஸை ஒட்டி என்ன என்ன கேள்விகள் கேட்டு எழுத வேண்டும் என்று கூறப்பட்டபோது, இப்படிக் கேட்டால் பி.ஜே. இடமிருந்து பதில் வராது. நாம் அல் முபீன் பத்திரிக்கை நடத்த வேண்டும். அவர்கள் எழுதாவிட்டால் பத்திரிக்கை நடத்த முடியாது. சந்தா வாங்கியவர்களுக்கு நாம் என்ன பதில் சொல்வது. எனவே பதில் வருகின்ற மாதிரியான கேள்விதான் எழுத வேண்டும் என்று துபை ஐ.ஏ.ஸி.யினர். கூறியுள்ளார்கள். இப்படிக் கூறியவர்கள், என்னிடம் கேட்டதாக எழுதி உள்ளதில் நீங்கள் சமாளிப்பதற்கு வசதியாக வார்த்தைகளை அமைத்து எழுதி இருப்பதைக் கண்டு நான் ஆச்சரியப் படவில்லை. அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தைவிட பி.ஜே.ன் திருப்தியையே குறிக்கோள் என எழுதி உள்ளவர்கள் கடிதத்தைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
தில்லு முல்லு வேலைகள் செய்வதில் பி.ஜே.யாகிய நீங்கள்தான் கெட்டிக்காரர்.
துபை ஷhர்ஜா ஆகிய 2 அமைப்பின் சார்பில் மசூரா செய்து விட்டு கடிதத்தை மட்டும் துபை ஐ.ஏ.ஸி. தனித்து எழுதியதில் இருந்தும் கடிதத்தை கேள்வி பதில் மாதிரி வடிவமைத்துள்ளதில் இருந்தும் உள் நோக்கம் உள்ளதை அறியலாம். இப்படி உங்களுக்கு பாதகம் இன்றி கடிதம் அமைய வேண்டும் என்ற கவலையுடனும் பயபக்தியுடனும் எனது விளக்கங்களை இருட்டடிப்பு செய்தும் எழுதினார்கள். அவர்களையும் அறியாமல் இடம் பெற்ற உண்மையை விளக்கிடும் வரிகளை உங்கள் பேக்ஸில் தெளிவு இல்லை என்று இருட்டடிப்பு செய்து விட்ட நீங்கள். இதன் மூலம் இது மாதிரி தில்லு முல்லு வேலைகள் செய்வதில் பி.ஜே.யாகிய நீங்கள்தான் கெட்டிக்காரர் என்றும் நிரூபித்துள்ளீர்கள்.
எழுத்து மோசடி செய்துள்ளீர்கள்.
பொது மக்களிடம் வசூல் செய்து நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளைக் கூட அதுவும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு தஃவாவுக்காகக் கூட காப்பி எடுக்க மீடியா வேல்டிடம் அனுமதி வாங்க வேண்டும் என்ற விளம்பரம் வந்தது. இது பி.ஜே.க்கு தெரியாது என்று சமாளித்தோம். ஹோல் சேல் வியாபாரத்திற்காக பி.ஜே. வீட்டில் தயாரிக்கப்படும் சி.டி.க்களிலும் இந்த விளம்பரம் வந்தது. இது பற்றி எதிர்;ப்பு விமர்சனங்கள் வந்தன. இதை ஒட்டித்தான் யாரும் காப்பி போடலாம் என்று உணர்வில் விளம்பரம் வந்தது. இது அப்பொழுதே உங்கள் எல்லோருக்கும் தெரியும். இது போன்ற வார்த்தைகளை உங்களுக்கு சாதகமாக எவ்வளவு சுருக்க முடியுமோ அவ்வளவு சுருக்கினார்கள். அவைகளையும் பேக்ஸில் காணவில்லை என்று எழுத்து மோசடி செய்துள்ளீர்கள்.
அல்லாஹ்வைவிட பி.ஜேயாகிய உங்களுக்கு பயப்படக் கூடியவர்களாக.
நீங்கள் ஒரு உண்மையாளராக இருந்தால் இத்தனை வரிகள் தெளிவு இல்லை அந்தப் பகுதியை மட்டும் மீண்டும் அனுப்புங்கள் என்று கேட்டு பதில் எழுதி இருப்பீர்கள். கலைக்கப்பட்ட போது துபை ஐ.ஏ.ஸி.யின் நிர்வாகிகளாக இருந்தவர்கள் அல்லாஹ்வுக்கு பயப்படக் கூடியவர்களாக இருந்தால், நாங்கள் ஈ-மெயிலும் அனுப்பி இருக்கவே 2 இடத்தில் வரிகள் தெளிவாக வரவில்லை என்று இருட்டடிப்பு செய்து இருப்பதை சுட்டிக் காட்டித் தட்டிக் கேட்டு கண்டித்தும் எழுதி இருப்பார்கள். இவர்கள் அல்லாஹ்வைவிட பி.ஜேயாகிய உங்களுக்கு பயப்படக் கூடியவர்களாக இருப்பதால், கண்டித்து எழுதினால் நீங்கள் உறவை துண்டித்து விடுவீர்கள் என்று பயந்து எழுதாமல் இருந்துவிட்டார்கள்.
உங்களைத் திருத்திக் கொள்ள அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக.
அப்படிபட்ட அவர்களுக்கு 22.07.2002ல் நீங்கள் எழுதிய கடிதத்தை பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்று அல்லாஹ்வின் பெயர் கொண்டும் உங்களால் துவங்க முடியவில்லை. முஸ்லிம்களின் முகமனான அஸ்ஸலாமு அலைக்கும் என்ற முகமனும் எழுத முடியவில்லை. இந்த நிலையில்தான் அல்லாஹ் உங்களை வைத்திருக்கிறான். இனி மேலாவது நீங்கள் தன் நிலை உணர்ந்து அல்லாஹுக்கு பயந்து உங்களைத் திருத்திக் கொள்ள அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக. ஆமீன்.
இருட்டடிப்பு செய்து சி.டி.யாக வெளியிட்டுள்ளீர்கள்.
எனது குற்றச் சாட்டுக்களுக்கு நேரடியாக பதில் சொல்ல வக்கு வகையில்லாத நீங்கள் செட்டப் கடிதங்களை பிடித்து தொங்குவதும் செட்டப் சி.டி. வெளியிடுவதுமாக உள்ளீர்கள். ஏற்கனவே வெளியிட்ட வீடியோவின் எடிடிங்கில் மாட்டிக் கொண்டீர்கள்;. எனவே இப்பொழுது உங்கள் பொறுப்பில் கம்யூட்டரில் எடிட் செய்து. மன்னிக்கவும் இருட்டடிப்பு செய்து சி.டி.யாக வெளியிட்டுள்ளீர்கள்.
மார்க்க கேஸட்களில் ஒன்றையாவது இலவசமாக அனுப்பி இருப்பீர்களா?
மஸ்ஜிதுர் றஹ்மானில் பதியப்பட்ட இரண்டு விவகார நிகழ்ச்சிகளின் வீடியோக்களை அப்படியே வெளியிடத் தயாரா? இதுவே நீங்கள் போலிகள் என்பதற்கு உரிய ஆதாரம். நீங்கள் இருட்டடிப்பு செய்த மிக்ஸிங் சி.டி.களை காப்பி போட்டு ஆங்காங்கே இலவசமாக அனுப்பி வருகிறீர்கள். உங்கள் வாழ் நாளில் இந்த மாதிரி பொறுப்புடன் மார்க்க கேஸட்களில் ஒன்றையாவது இலவசமாக அனுப்பி இருப்பீர்களா?
உங்கள் வியாபாரம் பாதிக்கக் கூடாது என்பதற்காக.
என்னை கேஸட் வியாபாரி என்கிறீர்கள். நான் உங்களைப் போல் என் மகன் செய்கிறான் என்று பொய் சொல்லவில்லை. உங்கள் உரைகள் மக்களால் விலைக்கு வாங்கும் நிலை வந்த பிறகுதான் நீங்கள் உங்கள் உரைகளை ஹோல் சேலாக விற்கத் துவங்கினீர்கள். என்னைப் போன்றவர்கள் 1986 ல் இருந்து சேகரித்து 1995 முடிய இலவசமாகவே கொடுத்து வந்திருக்கிறோம். 96 முதல் 99 வரை பெரும்பாலும் இலவசமாகவே கொடுத்தோம். உங்களால் வியாபாரமாக ஆக்கப்பட்ட பிறகுதான் உங்கள் வியாபாரம் பாதிக்கக் கூடாது என்பதற்காக இலவச வினியோகத்தைக் குறைத்தோம்.
இது உங்கள் அனுபவத்தின் வெளிப்பாடு.
பெருந் தொகை தந்ததாக நீங்கள் கூறியுள்ள ஆள் யார் எங்களிடம் தெரிவியுங்கள் நாங்கள் நேரில் விசாரிக்கிறோம் என்று கேட்டுள்ளார்கள். உங்கள் பொய்யை மறைக்க அந்த ஆளைக் கூறினால் இந்த அரசாங்கத்தில் நான் காட்டி கொடுத்து விடுவேன் என்று கூறி உள்ளீர்கள். உங்கள் பழக்கத்தை தமிழ்நாட்டில் நீங்கள் செய்து வரும் செய்கையைப் பதிலாகக் கூறி உள்ளீர்கள் போலும். இது உங்கள் அனுபவத்தின் வெளிப்பாடு.
மோடி மஸ்த்தான் வேலை காட்டவில்லை.
யு.ஏ.இ.ல் மண்டலத்தின் பெயரால் பதவி கொடுத்து உங்கள் ஊழல் பற்றி வாய் திறக்காமல் இருக்கச் செய்து உள்ளீர்கள். குறிப்பாக 15 பேர் கமிட்டி அமைத்து, கமிட்டி சார்பாக உங்கள் அணியில் உள்ள தவறுகளில் குறிப்பாக உங்கள் பினாமி இடம் கொடுத்த 47,500ல்.15.000 முஸ்லிம் பெண்மணிக்கு போக மீதி 32.500க்கு முஸ்லிம் டிரஸ்ட்வகை 10,000 த.மு.மு.க.22,.500 ரசீது வரவில்லை. இந்தப் பணம் எங்கே போனது? உங்களை மாதிரி ஒருவர்- ஒரு பெருந் தொகை என மோடி மஸ்த்தான் வேலை காட்டவில்லை. யார் மூலம் எவ்வளவு என்று தெளிவாக குறிப்பிடப் பட்டுள்ளது.
வரவு வைக்காமல் கடன் இருப்பதாக கேட்டு எழுதியது ஏன்?
முஸ்லிம் டிரஸ்ட்டுக்கு யு.ஏ.இ.ல் இருந்து குறிப்பாக துபையிலிருந்து பணம் அனுப்பட்டதற்கு டி.டி. ஆதாரம் இருக்க யு.ஏ.இ.ல் இருந்து பணமே வரவில்லை என்று நீங்கள், பாக்கர், அலாவுதீன் உட்பட 5 பேர் கையெழுத்திட்டு கடிதம் அனுப்பி உள்ளீர்களே! அப்படியானால் அந்தப் பணம் எங்கே போனது? உணர்வு ஒற்றுமை வகை;கு அனுப்பப்பட்ட 49,000 ரூபாய் பெற்றதாக ஈ- மெயில் அனுப்பிவிட்டு, பல மாதங்கள் ஆகியும் அதை கணக்கில்; வரவு வைக்காமல் கடன் இருப்பதாக கேட்டு எழுதியது ஏன்?
உறுதியுடன் நின்றவர்களை ஓரம் கட்டினீர்கள்.
முஸ்லிம் மீடியா டிரஸ்ட் சார்பாக உணர்வு, ஒற்றுமை விற்பதுபோல் முஸ்லிம் டிரஸ்டில் தயாரித்த வீடியோ ஆடியோக்களை முஸ்லிம் டிரஸ்ட்டில் விற்பதை நிறுத்தி விட்டு, ஆடியோ-வீடியோ விற்பனைக்காக துவங்கிய முஸ்லிம் வீடியோ விஷனை மூடி விட்டு, தனியார் நிறுவனமான பாக்கரின் மீடியா வேல்டு வளர தாரை வார்த்தது ஏன்? இது போன்ற கேள்விகளை முதலில் கேட்போம். தலைமையைப் பற்றிய மற்ற மற்ற ஊழல் குற்றச்ச சாட்டுகளை அடுத்தடுத்து கேட்போம். இப்படி செய்த முடிவில் உறுதியுடன் நின்றவர்களை ஓரம் கட்டினீர்கள்.
உங்கள் அரசியல் சாணக்கியத் தனத்தை காட்டி உள்ளீர்கள்.
நெஞ்சில் பேட்ஜ் குத்தினாலேயே பெருமையாகக் கருதி மயங்கும் உலகில் மண்டலமோ? கமண்டலமோ? எதன் பெயரிலாவது பதவி கிடைத்தால் போதும். உங்கள் மோசடிகளை தலைமைக்கு கட்டுப் படுதல் என்ற பெயரால் கண்டு கொள்ள மாட்டோம் என்றுள்ளவர்களுக்கு தலைவர் செயலாளர், பொருளாளர் என பதவி கொடுத்தீர்கள். அதன் மூலம் உங்கள் ஊழல் பற்றி தட்டிக் கேட்க உருவான கமிட்டியை செயலற்றதாக ஆக்கி உங்கள் அரசியல் சாணக்கியத் தனத்தை காட்டி உள்ளீர்கள்.

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.