சமுதாய பணத்தின் மீது மட்டுமல்ல முஸ்லிம் சமுதாய இளைஞர்களின் பிணத்தின் மீதும்.

சிறைவாசிகளுக்கு சிறையில் நல்ல உணவுக்கு வழி செய்கிறோம், ஈத்களின் போது சிறைவாசிகளுக்கு புத்தாடை வழங்குகிறோம், வழக்குகளை நடத்துகிறோம், சிறைவாசகளின் குடும்பச் செலவுகளுக்கு உதவுகிறோம், சிறையில் உள்ளவர்களை நேரில் சந்திக்கிறோம், மற்றவர்களும் போய் சந்தியுங்கள். அரசின் பார்வையில் குற்றவாளிகளாக இருந்தாலும் மனிதாபிமான அடிப்படையில் இப் பணிகளை செய்கிறோம் என்று கூறித்தான் வசூலை ஆரம்பித்தீர்கள், 

வசூலித்தீர்கள், வளர்ந்தீர்கள், சொத்து சேர்த்தீர்கள். இன்று முஸ்லிம் சமுதாய பணத்தில் குளிக்கும் நீங்கள் அதைச் செய்யாதது ஏன்? முஸ்லிம் சமுதாய பணத்தின் மீது மட்டுமல்ல முஸ்லிம் சமுதாய இளைஞர்களின் பிணத்தின் மீதும் ரத்தத்தின் மீதும்தான் பி.ஜே.யாகிய உங்கள் அணியில் ஒவ்வொருவரும் பதவி வகிக்கிறீர்கள்.
சிறையில் உள்ளவர்களை நேரில் சந்தியுங்கள்.
திருந்துங்கள் உங்களால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேளுங்கள். நீங்கள் கூறி உள்ள பொய்களை பொய் என்று பகிரங்கமாக ஒப்புக் கொள்ளுங்கள். உங்கள் ஆதரவாளர்களின் வாழ் வாதாரத்திற்கு வகை செய்வதற்காக கைப்பற்றிய பள்ளிகளிலிருந்தும் நிறுவனங்களிலிருந்தும் வெளியேறுங்கள்.

மார்க்கத்தை பிழைப்பாக ஆக்காதீர்கள் என்று பிறருக்கு உபதேசிப்பதை விட்டு முதலில் உங்கள் அணி மவுலவிகளை உழைத்து வாழச் செய்யுங்கள். வாக்களித்தபடி அனைத்து வழக்குகளையும் நடத்துங்கள். சிறைவாசிகளுக்கு சிறையில் நல்ல உணவுக்கு வழி செய்ய முடியாவிட்டாலும் ஈத்களின் போதாவது புத்தாடை வழங்குங்கள். சிறைவாசிகளின் குடும்பச் செலவுகளுக்கு உதவுங்கள். சிறையில் உள்ளவர்களை நேரில் சந்தியுங்கள்.


இல்லை 38 மவுலவிகளுடன் ஒரே மேடைக்கு வாருங்கள். நீங்கள் விட்ட சவால்படி அவர்கள் சாட்சியாகவும் நிரூபிக்கறேன். இப்பொழுது எதை மார்க்கம் இல்லை என்றும் எதை முட்டாள்தனமான செயல் என்றும் விமர்சிக்கிறீர்களோ! அதுதான் மார்க்கம் என்றும் அதுதான் தீர்வு என்றும் நீங்கள் செயல்பட்டீர்கள். அதனால் உங்களுக்கு ஆபத்து ஏற்பட்டது. உங்களுக்கு ஏற்பட்ட ஆபத்தை ஒட்டு மொத்த சமுதாயத்திற்கும் ஏற்பட்ட ஆபத்தாக பிரச்சாரம் செய்தீர்கள்.

ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாய நலனுக்காக உருவானது அல்ல உங்கள் அணி.

தவ்ஹீதுவாதிகள் ஷிர்க்வாதிகளின் பின்னால் போகக் கூடாது என்பதற்காக உருவானது அல்ல உங்கள் அணி.

உங்கள் சுய நலனுக்காக உங்களைக் காத்துக் கொள்ள அவசர கோலத்தில் கண்டதுதான் உங்கள் அணி.

அதனால்தான் உங்கள் அணியை ஒரு நாடகம் என்றீர்கள். இவற்றை உங்கள் வார்த்தைகளைக் கொண்டே நிரூபிக்கிறேன் இன்ஷா அல்லாஹ். உங்கள் அணி ஒரு நாடகம் என்று நீங்கள் கூறியதை நிரூபித்து விட்டால் நீங்கள் தனி அணி கண்ட பின் வாங்கப்பட்ட சொத்துக்களை அநியாயமாக சிறையில் வாடும் முஸ்லிம்களுக்கு கொடுக்க வேண்டும் தயாரா?

துஆச் செய்ய வேண்டும்.
உங்கள் கூற்றுக்கு பொய் சாட்சி சொல்பவர்களும் சரி நீதியை நிலை நாட்ட எனது கூற்றை உண்மைப் படுத்துபவர்களும் சரி. இந்த விவகாரத்தில் இருந்து ஒதுங்க எண்ணி தெரியாது, மறந்து விட்டது என்று சமாளிக்க எண்ணுபவர்களும் சரி. எதைச் சொன்னாலும் எதிர் தரப்பு ஏற்றுக் கொள்ளாவிட்டால், இதில் நாங்கள் பொய்யர்கள் என்றால் அல்லாஹ்வின் சாபம் எங்கள் மீது இறங்கட்டுமாக என்று துஆச் செய்ய வேண்டும்.
வார்த்தையால் பொய் சத்தியம் செய்து ஏமாற்றலாம்.
M.I. சுலைமான் போன்றவர்களைப் பற்றிய செக்ஸ் செய்திகளை தக்க சாட்சியுடன் நிரூபிக்கத் தயாரா? என்று சவால் விட்டுள்ளீர்கள். ஷம்சுல் லுஹாவை விலைக்கு வாங்கிய பின்னரே உங்களால் இப்படி சவால் விட முடிந்தது. எனவே இது பற்றிய எனது சாட்சியாகிய லுஹாவை விசாரியுங்கள் என்று எழுதத் தேவையில்லை. அவர் மறுப்பதாக நீங்கள் வாதித்தால், உள்ளத்தில் உள்ளபடி அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து மறுக்க வேண்டும். வல்லாஹி - அல்லாஹ்வின் ஆணையாக என்ற வார்த்தைகளால் சத்தியம் செய்யக் கூடாது. வல்லாஹி - அல்லாஹ்வின் ஆணையாக என்ற வார்த்தையால் பொய் சத்தியம் செய்து ஏமாற்றலாம் என்ற கொள்கையில் நீங்கள் இருக்கிறீர்கள்.
லுஹா கைப்பட கடிதம் எழுதி எனக்கு அனுப்ப வேண்டும்.
பாக்கர் போன்றவர்களைப் பற்றி 06.04.2002. தேதிய கடிதத்தில் உள்ள செய்திகளையும் லுஹா கூறியதாக பிரசுரத்திலும் பக்ரி கடிதத்திலும் இந்த கடிதத்திலும் குறிப்பிட்டுள்ளவற்றை நான் இலாஹிக்கு தெரிவிக்கவில்லை. அப்படி தெரிவித்து இருந்தால் பூலி ஷம்சுல் லுஹா மீது அல்லாஹ்வின் லஃனத்து-சாபம் இறங்கட்டுமாக ஆமீன் என்று பகிரங்க மேடையில்; துஆச் செய்யத் தயார் என்று லுஹா கைப்பட கடிதம் எழுதி எனக்கு அனுப்ப வேண்டும்.
உண்மைப் படுத்த முன் வர வேண்டும்.
பெருந் தொகை தந்ததாக கூறுகிறீர்களே அந்த பெருந்தகையையும் மேடைக்கு கொண்டு வர வேண்டும். அவரும் முபாஹலா பண்ண வேண்டும். இப்படி ஒரு சம்பவமே இல்லாததால் செட்டப் ஆள் ஏற்பாடு செய்வீர்கள். செட்டப் ஆள் கிடைக்காத நிலையில் அந்த நபர் வர மறுக்கிறார் என்று சமாளிப்பீர்கள்.

எப்படியானாலும் உங்களின் இந்தக் கூற்றையும் பெருந் தொகை பற்றியதையும் உண்மைப் படுத்தி உங்கள் தலைமையில் உள்ள நிர்வாகிகள் அனைவரும் பெருந் தொகை பற்றி பிரச்சாரம் செய்த கூட்டமைப்பு நிர்வாகிகளும் இதை பிரசுரமாக முதன் முதலில் மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மானில் ஒட்டியவர்களும் இதை உண்மைப் படுத்த முன் வர வேண்டும்.
இதில் அவர்கள் பொய்யர்கள் என்றால் உங்கள் தலைமையில் உள்ள நிர்வாகிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் மஸ்ஜிதுர் ரஹ்மான் நிர்வாகிகள் அனைவர் மீதும் அல்லாஹ்வின் லஃனத்து-சாபம் இறங்கட்டுமாக ஆமீன் என்று பிரார்த்திக்கத் தயார் என்று அனைவரும் கையெழுத்திட்ட கடிதம் வர வேண்டும்.
நீங்கள் அனைவரும் பொய்யர்கள்.
நான் 30,000 அனுப்பி அதை திரும்ப அனுப்பியதாக கூறுகிறீர்களே! அதற்கு கொண்டு வந்து தந்தவர் என்று கூறப்படுபவரும் திருப்பி அனுப்பியதாகக் கூறப்படும் உங்கள் தலைமையில் உள்ள நிர்வாகியும் இதை உண்மைப் படுத்திட வேண்டும்.

இதை ஏற்று அவர்கள் அனைவரும் இதில் நாங்கள் பொய்யர்கள் என்றால் எங்கள் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டும் என்று பிரார்த்திக்கத் தயார் என்று கடிதம் அனுப்ப வேண்டும். இதற்கு ஒப்புக் கொள்ளாமல் வாத ரீதியாக நோட்டீஸ்களோ கேஸட்களோ வெளியிட்டு திசை திருப்பினால். அதுவே நீங்கள் அனைவரும் பொய்யர்கள் என்பதற்கு உரிய ஆதாரமாகும்.
இந்த சமுதாயத்தின் சாபக் கேடானவர்களின் மீது.
இப்படி டிமாண்ட் வைத்துள்ளதின் நோக்கம் நீங்கள் உண்மையை ஒப்புக் கொள்ள வேண்டும். அதாவது முஸ்லிம் சமுதாயத்திற்கும் தவ்ஹீது ஜமாஅத்திற்கும் நீங்கள் செய்த துரோகத்தை ஒப்புக் கொண்டு உங்களால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நீக்க முன் வர வேண்டும். அல்லது இந்த சமுதாயத்தின் சாபக் கேடானவர்களின் மீது அல்லாஹ்வின் லஃனத்து -சாபம் இறங்க வேண்டும்.

இந்த நிகழ்ச்சி சி.டி. வீடியோ வியாபார நோக்குடன் ரூமுக்குள் வைத்து நடத்தக் கூடாது. பொது மக்கள் முன் பகிரங்க மேடையில் மேலப்பாளையத்தில் நடத்த வேண்டும். இந்நிகழ்ச்சி பற்றி சமுதாயத்தின் அனைத்து பத்திரிக்கைகளிலும் விளம்பரம் செய்ய வேண்டும். நீங்கள் உங்களை உண்மையாளர்களாகக் காட்ட எந்த நிதியிலிருந்து இலவச சி.டி.யும் கேஸட்களும் வெளியிட்டீர்களோ! அந்த நிதியிலிருந்து இந்த நிகழ்ச்சிக்கு ஆகும் அனைத்துச் செலவுகளையும் செய்ய வேண்டும்.
15.12..2002 க்குள் இதற்குரிய பதிலை எதிர் பார்க்கிறேன்.
உங்கள் தரப்பிலிருந்து மேலே கூறி உள்ளபடி ஒப்புதல்; கடிதம் கிடைத்த உடன் அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் சரியான கால அவகாசத்தடன் நிகழ்ச்சி பற்றிய தேதியை நிர்ணயிப்போம். முன்னதாக இந்த பிரச்சனைகளை ஒட்டி மஸ்ஜிதுர் றஹ்மானில் பதியப்பட்ட 2 வீடியோக்களின் காப்பிகளை எடிட் செய்யாமல் அப்படியே வீடியோ கேஸட்டாக அனுப்பித் தர வேண்டும்.

சி.டி. வேண்டாம். அதில் எடிட் செய்ததை கண்டு பிடிக்க முடியாது. அதிலும் நீங்கள் செய்துள்ள தில்லு முல்லுகளையும் மேடையில் போட்டுக் காட்டி உங்களை அடையாளம் காட்ட அந்த 2 வீடியோக்கள் தேவை. 15.12..2002 க்குள் இதற்குரிய பதிலை எதிர் பார்க்கிறேன்.
உங்கள் ஃபத்வாக் (தீர்ப்பு) களுக்குப் பயந்து ஓட மாட்டோம்.
எதற்கும் ஒத்து வராமல் உங்கள் வரட்டுக் கவுரவம் தொடருமானால், செய்ய வேண்டிய விமர்சனங்களையெல்லாம் செய்து விட்டு, மெஜாரிட்டி மைனாரிட்டி பார்த்து வருமானத்திற்காக மானத்தை இழந்து மன்னிப்பு கேட்டு மண்டி இட்ட ஈனப் பிறவிகளான ஷம்சுல் லுஹா, காஜா பிர்தவ்ஸி போன்ற பேடிகளைப் போல பெட்டைகளைப் போல உங்களிடம் வந்து ஒட்ட மாட்டோம். உங்கள் ஃபத்வா ( கொலை தீர்ப்பு) களுக்குப் பயந்து ஓட மாட்டோம், ஒதுங்க மாட்டோம், ஓய மாட்டோம். உங்களை அடையாளம் காட்டாமல் விட மாட்டோம். அல்லாஹு அக்பர்.
இப்படிக்கு:- கா.அ.முஹம்மது பழ்லுல் இலாஹி,
01.12.2002. துபை.

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.