லுஹாவின் பொய் சத்தியத்தின் பின்னால்!

நியாய உணர்வு உள்ள முஸ்லிம்களுக்கு! கா.அ.முஹம்மது பழ்லுல் இலாஹியின் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

நாடறிந்த பேச்சாளர் மவுலவி பி.ஜெய்னுல் ஆப்தீன் உலவி அவர்கள், என் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை இட்டுக் கட்டி இரு பக்க பிரசுரம் ஒன்று வெளியிட்டுள்ளார். 

ஊருக்கு உபதேசிப்பவர்களின் சமுதாய மற்றும் மார்க்க விரோத போக்குகளை சுட்டிக் காட்டித் தட்டிக் கேட்டேன். கூட இருந்தே கழுத்தறுத்த நம்பிக்கை துரோகி பற்றி நான் குறிப்பிடத் தேவையில்லை. அது மாதிரி ஒருவரை யு.ஏ.இ.ல் தேர்ந்தெடுத்தனர். அவர் துணை கொண்டு என்னை மேசடியாளனாக யு.ஏ.இ.ல் சித்தரித்தனர்.

கொடுங்கையூர் நஸ்ருத்தீன் மகன் படிப்புச் செலவுக்கு 2001 ஜுனில் வசூலித்த பணம் வரவில்லை என்று 2002 ஜனவரியில் மோசடியாளனாக சித்தரித்து தோற்றனர். பிறகு 2001 டிசம்பர் 6 பணம் என்றனர். 12.04.02.துபை அமர்விலும் 03.05.02.யு.ஏ.இ தழுவிய அமர்விலும் பதில் கூறி உள்ளேன். 20.04.02ல் ஜவாஹிருல்லாவுக்கு அனுப்பிய கடிதத்திலும் விளக்கம் உள்ளது. முஸ்லிம் டிரஸ்ட்டுக்கு மாதம் 5000 ஆயிரம் வீதம் வாங்கிய பணத்தை அனுப்பவில்லை என்று பிசுரம் போட்டனர். சம்பந்தப்பட்டவரே இடித்துக் கேட்டதும் அவரை பகைத்துக் கொண்டனர். முஸ்லிம் டிரஸ்டுக்கு இடம் வாங்க யு.ஏ.இல் இருந்து பணமே வரவில்லை என்றனர். ஆதாரங்கள் அனுப்பப்பட்ட பிறகு அதை இன்று வரை கண்டு கொள்ளவே இல்லை.

இப்படி யு.ஏ.இ.ல் தோற்றதை லுஹா மூலம் மேலப்பாளையத்தில் புதிய கோணத்தில் அரங்கேற்றி உள்ளார். லுஹாவின் பொய் சத்தியத்தை தட்டிக் கேட்டதற்காக. அவர் எனக்கு எதிராக பி.ஜே.யுடன் அணி சேர்ந்து மேலப்பாளையத்தில் களம் அமைத்து கொடுத்துள்ளார் ஆணித்தரமான கேள்விகளுக்கெல்லாம் அடுத்த நிமிடமே, இல்லை அடுத்த நொடியிலேயே ஆக்கப் பூர்வமான பதில்கள் தரும் அண்ணன் பி.ஜே.அவர்களால், கடந்த ஓராண்டு காலமாக அவருக்கும் அவரது பினாமிகளுக்கும் நான் எழுதி வந்த கடிதங்களுக்கு பதில் கூற முடியவில்லை. இதை அவர்கள் மூலமே மக்கள் அறியும் நிலை வந்த உடன் திசை திருப்ப இப்படி ஒரு பிரசுரத்தை வெளியிட்டுள்ளார்.

இவரை யார் விமர்சித்தாலும் அந்த விமர்சனத்திற்கு பதில் இல்லை என்றால், விமர்சனம் எடுபடாமல் போக இவர் வைக்கும் முதல் குற்றச்சாட்டு மோசடி தான். அப்பொழுது தான் மக்கள் அவரைப் பற்றிய விமர்சனத்தை ஏற்க மறுப்பார்கள். அந்த அடிப்படையில்தான் இந்த பிரசுரத்தை வெளியிட்டுள்ளார்.

அதில், டிசம்பர் 6-க்கு நிதி திரட்டியதாகவும், நான் டிசம்பர் 6-க்கு ஃபழ்லுல் இலாஹி இடம் நிதியாகக் கொடுத்த பெருந் தொகை கிடைத்ததா? என்று நம்மிடம் ஒரு சகோதரர் கேட்ட போது நாம் அதிர்ச்சியடைந்தோம்|| என்று குறிப்பிட்டுள்ளார். 2001 டிசம்பரில் ரமழான் மாதத்தில் பி.ஜே. அதிர்ச்சியடைந்தது உண்மை! அதற்கு இப்பொழுது கூறி உள்ள காரணம் பொய். எதற்காக அதிர்ச்சியடைந்தார் என்பதை பிறகு பார்ப்போம். இப்பொழுது அவர் கூறியுள்ள குற்றச்சாட்டுக்களைப் பார்ப்போம்.

2001,ஏப்ரலில் ஐ.ஏ.ஸி. துபைக் கிளைக்கு என்று தனிப் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப் பட்டார்கள். அதற்குப் பிறகு தலைமைப் பொறுப்பாளரான நான், எந்த வசூலிலும் ஈடுபடவில்லை. எல்லாமே துபைக் கிளைப் பொறுப்பாளர்கள் மூலமே நடந்து வருகிறது. மஸ்ஜிதுர்-ரஹ்மானுக்கு கூட ஜமாஅத் ரீதியான வசூல் துபைக் கிளைப் பொறுப்பாளர்கள் மூலமே நடந்தது. தனி நபர்களை சந்திக்க மஸ்ஜிதுர்-ரஹ்மானுக்காக மட்டும் லுஹாவுடன் சென்று உள்ளேன்.

கடந்த (2001) டிசம்பர் 6-ருக்காக தனியாக நான் எந்த வசூலும் செய்யவில்லை. எந்த ஒரு தனி நபரிடமும் போய் நான் நிதி வாங்கவும் இல்லை. எந்த ஒரு தனி நபரும் என்னிடம் வந்து நிதி தரவும் இல்லை. பி.ஜே.கூறி இருப்பது சுத்தப் பொய்! பழி வாங்கும் நோக்கம் கொண்டது. 

அவர் குறிப்பிட்டுள்ள அந்த நபர் யார் என்று நிரூபிக்க வேண்டும். இது பி.ஜே.யின் கற்பனையில் தோன்றியவரே அன்றி, உண்மை இல்லை.1300-ஆண்டுகளுக்கு முந்தைய அறிவிப்புகளை அதன் கால அளவைக் கொண்டு இது பலவீனமானது, இது இட்டுக் கட்டப்பட்டது என்று கூறக் கூடியவர்கள் சார்புத் தன்மையால் சிந்திக்க மறுக்கலாம். உண்மையை மறைக்கலாம். அல்லாஹ்வை அஞ்சக் கூடியவர்கள் நியாய உணர்வுடன் சிந்தித்தால் இது இட்டுக்கட்டப்பட்டது, காழ்ப்புணர்வு கொண்டது என்று எளிதில் புரிந்து கொள்வார்கள்.

2001- டிசம்பர் 6, என்பது ரமழான் பிறை 20-ம் நாளாகும். டிசம்பர் 6-க்கு கொடுத்தேன் என்று ஒருவர் கேட்பார் என்றால் ரமழான் 20-க்கு பிறகுதான் கேட்க வேண்டும். உள்நாடு என்றால் ஒரு மாதமாவது எதிர் பார்ப்பார்கள். வெளிநாடு என்றால் இரண்டு மாதமாவது எதிர் பார்ப்பார்கள். 10 நாள் கூட எதிர்பார்க்காமல் கேட்டவுடன் அதிர்ச்சியடைய என்ன இருக்கிறது? 10-நாள் இடைவெளியில், கேட்டவுடன் மோசடி| என்று எப்படி முடிவு செய்தார்கள்? குற்றச் சாட்டை சம்பந்தப் பட்டவரிடம் விசாரிக்காமல் முடிவு எடுப்பதுதான் நல்ல மனிதர்களின் பண்பா? ஒரு பணம் வரவில்லை என்றால் அது எங்கே என்று கேட்பார்களா? 10-நாள் கூட எதிர் பார்க்காமல் மற்ற பணத்தை திருப்பி அனுப்பு வார்களா?

நேரில் கேட்டாரா? போனில் கேட்டாரா? குறிப்பிடவில்லை. இதை வைத்துக் கொண்டு, எப்படியும் சமாளிப்பார். 25.06.2002.-அன்று மேலப்பாளையம் மஸ்ஜிதுர்-ரஹ்மானில்| ஒட்டியதிலும், துபைக்கு அனுப்பிய பேக்ஸிலும்; அவர் தேதி குறிப்பிடவில்லை. இப்பொழுது மேலப்பாளையம் அவ்வல் பிரிண்டர்ஸில் அச்சிட்டு வெளியிட்டுள்ள அந்த பிரசுரத்திலும் தேதி இல்லை. தேதி போடாமல் வெளியிட்டதிலும் சதித் திட்டம் உள்ளது. பிற்காலத்தில் இதை 2002-ஜனவரியிலேயே வெளியிட்டு விட்டேன் என்று வாதிப்பார்! 

ஏற்கனவே 17-04-2002.தேதி எழுதிய கடிதத்திற்கு 26-03-2002, என்று முன் தேதி போட்டு அனுப்பிய பெருந்தகைதான் அண்ணன் பி.ஜே!

இந்த பிரசுரங்களை மேலப்பாளையம் மஸ்ஜிதுர்-ரஹ்மானில் ஒட்டிய மவுலவி ஷம்சுல் லுஹா, அவரது தம்பி உஸாமா காஜா பிர்தவ்ஸி, இனாயதுல்லா போன்றவர்களிடம் இது உண்மையா? என்று கேட்டதற்கு, தெரியாது தலைமையிடம் கேளுங்கள்| என்று கூறி இருக்கின்றனர்.  இந்தப் பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக.  ஒரு நிர்வாகத்தின் கீழ் உள்ள இடத்தில் தங்களுக்கு உடன்பாடு இல்லாதவற்றை ஒட்டு வார்களா? இவர்களது பதிலே அது பொய்ப் பிரச்சாரம்| என்பதற்கு உரிய ஆதாரமாகும்.


அடுத்து இந்த நிலையில் தான் சென்ற ரமலானில் அனைத்து தவ்ஹீது ஜமாஅத் கூட்டமைப்புக்கு நாற்பதாயிரம் ரூபாய்களும் த.மு.மு.க.வுக்கு மூப்பதாயிரம் ரூபாய்களும் அவரால் வசூலித்து அனுப்பப் பட்டன|| என்றும் எழுதி உள்ளார். 

2001-டிசம்பர் 6, என்பது ரமழானுக்கு 2, அல்லது ஒரு மாதத்திற்கு முந்தையது. ரமழான், டிசம்பர் 6-ல் இருந்து இரண்டு, அல்லது ஒரு மாதத்திற்கு பிந்தையது என்று எண்ணி இந்த குற்றச் சாட்டை எழுதி உள்ளார். இது அவரது கற்பனையில் ஏற்பட்ட கோளாறு. இப்படி 2-அமைப்புக்கு என்று எந்த வசூலும் செய்யவில்லை.

அவர் கூற்றுப்படி டிசம்பர் 6 க்கு வசூல் செய்து விட்டு அதே மாதம் 10 நாள் இடைவெளியில் ரமழானுக்கு என்று 2 அமைப்புக்கு வசூல் செய்ய முடியுமா? இது பீல்டு ஒர்க்கர்களுக்கு (களப்பணி ஆற்றுபவர்களுக்கு)த்தான் தெரியும். ஏழைப் பங்காளன் என்று கூறிக் கொண்டு ஏ.ஸி.யில் இருப்பவர்களுக்குத் தெரியாது. கூட்டமைப்பு சார்பாக வசூலித்து அனுப்புமாறு கடிதம் வந்தது. அப்போது கூட நான் கேட்டுள்ள விபரங்களுக்கு பதில் வராதவரை வசூலிக்க இயலாது என்று எழுதி இருக்கிறேன்.


லுஹா குவைத் வந்தவுடன் மஸ்ஜிதுர் றஹ்மானில் ஒரு நாள் இப்தாருக்கு பிரியாணி போட்டுக் கொடுக்க விரும்புகிறேன் என்றேன். அவர்; அதிக செலவு ஆகும் வேண்டாம் என்றார். திட்டத்தை விட்டு விட்டேன்.

ரமழான் இறுதியில் இப்தார் வகைக்கு என்று 1950 திர்ஹங்கள் ராஷிதியா செய்யது இபுறாஹீம் அவர்களாக கொண்டு வந்து தந்தார்கள். 10,000 ரூபாயை மேலப்பாளையத்திலும் மீதியை த.மு.மு.க. மூலமும் என்று முதலில் கூறினார். பிறகு எப்படிச் செய்தாலும் இப்தாருக்குத்தான் பயன் படுத்தனும் இது உங்கள் பொறுப்பு என்று கூறி விட்டார்.

உடன் சென்னைக்கு போன் போட்டு ஜின்னாவிடம் பணம் ஏற்பாடு செய்யச் சொன்னேன். இப்தார் நிகழ்ச்சி நடத்தணும் ஏற்பாடு செய்து விட்டு சொல்கிறேன். நான் சொல்கிற ஆளிடம் பணம் கொடுங்கள் என்றேன். த.மு.மு.க. ஹைதர் அலி இடம் பேசினேன். காலையில் தகவல் சொல்கிறேன் மாலையில் தகவல் சொல்கிறேன் என்று இறுதியில், ஸ்கூல்கள் லீவு விட்டு விட்டதாக கூறிவிட்டார். நோன்பில் த.மு.மு.க.வுக்கு பணம் கொடுக்கவும் இல்லை திரும்ப தரவும் இல்லை.

பிறகு கூட்டமைப்பு அன்வர் பாயிடம் 40 ஆயிரம் ரூபாய் கொடுங்கள் அவரிடம் நான் பேசிக் கொள்கிறேன் என்றேன். அவர் வாங்கி விட்டு, பிறகு திரும்ப கொடுத்து விட்டுள்ளார். எங்களுக்குள் பிரச்சனை இருக்கிறது. எல்லோரையும் கடுமையாக சாடி லட்டர் எழுதி உள்ளார். அதைப் படித்தால் நீங்களே டென்சன்| ஆகி விடுவீர்கள் என்றும் கூறி உள்ளார். அது போல் பாக்கரும் இன்னொரு சந்தர்ப்பத்தில் கடிதம் பற்றி இதே மாதிரி ஜின்னாவிடம் டென்சன்| ஆகிப் பேசி இருக்கிறார்.

டிசம்பர் 6-க்கு முன்பு குவைத்|துக்கு சென்ற மவுலவி ஷம்சுல் லுஹா அவர்கள் மவுலவி கே.எப்..நிஜாமுத்தீன் இடம் போனில் பேசினார். அப்பொழுது நான் எழுதிய கடிதங்களால் த.மு.மு.க.வினரும் எனக்கு எதிராக ஆகிவிட்டார்கள். கூட்டமைப்பினரும் எனக்கு எதிராக ஆகிவிட்டார்கள் என்ற விபரம் கூறி இருக்கிறார். துபை வந்த பின்னரும் நான் எழுதிய கடிதங்களால் எல்லோரும் என்னை வெறுத்து விட்டதாகக் கூறினார். இதை ஒட்டி 3 பேரும் பல அமர்வுகள் பேசி இருக்கிறோம்.

பிரச்சனை நான் அவர்களது தவறுகளைச் சுட்டிக் காட்டி எழுதிய கடிதங்களை ஒட்டித்தானே தவிர, இப்பொழுது பி.ஜே. இட்டுக் கட்டி எழுதி உள்ள விவகாரம் அல்ல.

இப்தார் நிகழ்ச்சிக்கு என்று வந்த பணத்தை உரிய முறையில் செலவு செய்ய, மேலப்பாளையம் செயலாளர் இனாயதுல்லாஹ் அவர்களைத் தொடர்பு கொண்டு ஏற்பாடு செய்தேன். ரூபாய் 40-ஆயிரம் செலவில் 900-பேருக்கு 13.12.2001 அன்று பிரியாணி போட்டு மஸ்ஜிதுர்-ரஹ்மானில் வழங்கப்பட்டது.

இரவுத் தொழுகைக்கு வரும் பெண்களின் வீடுகளுக்கும் கொண்டு போய் இப்தாருக்கு பிரியாணி கொடுக்கப்பட்டது. இதை, சாப்பிட்டவர்கள் அறிவார்கள். இதற்கு சான்றுக் கடிதம் இன்று வரைத் தரவில்லை. ராஷிதியா செய்யது இப்ராஹீம் அவர்கள் தந்த 1950 திர்ஹங்கள் ரூபாய் 25,000 க்கு உட்பட்டது. என் மச்சானின் பங்கு ரூபாய் மூவாயிரம். மீதிப் பணம் நான் போட்டேன். இந்த விபரம் கூறி, லட்டர் கேட்டதற்கு இன்று வரை ஊமை ஷய்த்தான் இனாயதுல்லாஹ், எழுதித் தரவில்லை.

பித்ரா வுக்கு ரூபாய் 65-ஆயிரம் இனாயதுல்லாஹ் இடம் கொடுக்கப்பட்டது. அதற்கும் இனாயதுல்லாஹ் எழுத்து மூலம் பதில் தரவில்லை. நோன்புப் பெருநாளுக்கு பிறகு இரண்டு முறை இரண்டு மூடைகள் வீதம் அரிசி கொடுத்ததற்கும், இரண்டு முறை ஆடு கொடுத்ததற்கும் ஹஜ்ஜூப் பெருநாளைக்கு குர்பானி ஆடு மாடுகள் கொடுத்ததற்கும் கடிதம் கேட்டேன் எழுதித் தரவில்லை. பல முறை போனில் கேட்டும், இன்று வரை பதில் இல்லை. அரிசி வாங்கியவர்கள், இறைச்சி வாங்கியவர்கள் நிகழ்ச்சியை அறிவார்கள்.

ரமழானில் நிதியை திருப்பி அனுப்பி விட்டு என்னிடம் த.மு.மு.க விளக்கம் கேட்டு எழுதியதாகக் குறிப்பிட்டுள்ளார். டிசம்பர் 17 ம் தேதி நோன்புப் பெருநாள். இவர் இப்பொழுது உண்டு பண்ணி கூறும் குற்றச் சாட்டுப்படி திருப்பி அனுப்பி இருந்தால். டிசம்பர் இறுதியில் விளக்கம் கேட்டு எழுதி இருக்க வேண்டும். டிசம்பரில் எழுதவில்லை, ஜனவரியில் எழுதவில்லை, பிப்ரவரியில் எழுதவில்லை, மார்ச்சில் எழுதவில்லை. ஏப்ரல் மாதம் 5ம் தேதிதான் விளக்கம் கேட்டு கடிதம் எழுதி உள்ளார்கள்.

2002 ஜனவரியில் துபை வந்த லுஹா த.மு.மு.க, பி.ஜே. பற்றிய குறைகளைக் கூறிக் கொண்டிருந்தார். உங்கள் வீட்டிற்கு மவுலவிகள் வந்து உங்களை தூண்டி விட்டு விட்டு எல்லோரும் திரும்ப சேர்ந்து விட்டார்கள். நீங்கள் மட்டும் தனித்து விட்டீர்கள். 2001. மேய். ஜுனில் த.மு.மு.க.வுக்கும். கூட்டமைப்புக்கு நீங்கள் எழுதிய கடிதத்தால் உங்களுக்கு எல்லோரும் எதிரி ஆகிவிட்டார்கள். இப்படிப் பல விபரங்களைக் கூறினார்.

இதை மற்றவர்களிடமும் கூறுங்கள் என்றால் கூறமாட்டார். எனவே லுஹா கூறியதை எல்லாம் இவிடத்தில் உள்ள சகோதரர்கள் முன் மீண்டும் இயல்பாக பேசுவது போல் பேசி அவர்களை சாட்சியாக்;கிக் கொண்டேன். இது போல் ஸைபுல்லா ஹாஜா துபை வந்த போதும் இப்படிப் பேசி சாட்சியாக்கி இருக்கிறேன். மவுலவி நிஜாமுத்தீன் மஹ்ழரி இடமும் பேசி சாட்சிகளை ஏற்படுத்தி இருக்கிறேன்.

இந்த சாட்சிகளுடன்தான் 25.01.2002.அன்று ஷார்ஜாவில் கூட்டம் நடத்தினேன். இவிடத்தில் ஏற்பட்ட சில குழப்பங்களால் கூட்டம் நடத்திய செய்தியும் பி.ஜே.க்கு கடிதம் எழுதிக் கொண்டிருக்கும் விபரமும் வெளியானது. அவர்கள் பற்றிய குறைகளை எழுதிக் கொண்டிருப்பது தெரிந்ததும் தான்!

05.04.2002. அன்று குற்றம் சுமத்தி பி.ஜே. குறிப்பிட்டு உள்ள விளக்கம் கேட்கும் கடிதம் எழுதியுள்ளார்கள். இப்படி 05.04.2002ல் எழுதிய கடிதம் சரிதான் என்று 26.03.2002 முன் தேதியிட்டு ஒரு கடிதம் அனுப்பி அப்பொழுதும் தான் யார் என்று அடையாளம் காட்டிக் கொண்டார் அண்ணன் பி.ஜே.

தாயகத்தில் இருந்த தாஜுத்தீனை தேடிப் பிடித்து பேசிய ஜவாஹிருல்லாஹ்விடம், தாஜுத்தீன் இலாஹி போட்ட கடிதத்திற்கு பதில் போட்டீர்களா| என்று கேட்டுள்ளார். அதற்கு ஜவாஹிருல்லாஹ் எங்கள் (ஒரு பக்க 5.4.02 தேதிய) கடிதம் முந்தி. அவரது (25 பக்க 6.4.02தேதிய) கடிதம் பிந்தி என்று கூறி இருக்கிறார்.

பிறகு அந்த கடிதத்தை நீங்கள் படித்தீர்களா? என்று ஜவாஹிருல்லாஹ் கேட்டுள்ளார். இல்லை 2 மாதத்திற்கு முன்பே முக்கியஸ்தர்களை கூட்டி சொல்லி விட்டார். எனவே அதில் என்ன எழுதி இருப்பார் என்பது எனக்குத் தெரியும் என்று வி. களத்துார் தாஜ் கூறி இருக்கிறார்.

மோசடிக்காக வந்த கடிதம் என்றால், இப்படி மோசடி செய்துள்ள உங்களை ஏன் நீக்கக் கூடாது என்றுதான் கடிதம் வந்திருக்க வேண்டும். ஸோ, காஸ் நோட்டீஸ் எனப்படும் நடவடிக்கை கடிதம் தான் வந்திருக்க வேண்டும். அவர்கள் எழுதிய கடிதத்திற்கும் பி.ஜே. வெளியிட்டுள்ள பிரசுரத்திற்கும் உள்ள முரண்பாடுகளைப் பாருங்கள்.

இதற்கு பதில் விளக்கம் தரவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். 28.04.2002. அன்று பதில் கடிதம் கூரியர் மூலமும் ஷார்ஜாக் கிளை ஈ-மெயில் மூலமும் அனுப்பப் பட்டது. 03.05.2002. அன்று யு.ஏ.இ. செயற் குழுவிலும் படித்துக் காட்டப்பட்டது. இந்தக் கடிதத்தைத்தான் அவதூறுப் பிரசுரம் என்று மேலப்பாளையம் போலீஸில் கொண்டு போய் கொடுத்து நெல்லை மாநகர இணைச் செயலாளர் மேலப்பாளையம் ஹயாத் அவர்கள் புகார் செய்தார்கள். இத்தனைக்குப் பிறகும் பதில் வரவில்லை என்று பி.ஜே. கூறி இருக்கிறார் என்றால் அவர் எந்த அளவுக்கு உண்மையாளர் என்று மக்கள் புரிந்து கொள்ளட்டும்.

மேலும் எனது பேச்சுக்கள் அடங்கிய ஒலி, ஒளி நாடாக்கள், மற்றும் சி.டி-க்கள் போன்ற வற்றை யாரும் பதிவு செய்யக்கூடாது என்றும் தனக்கு மட்டுமே அதைப் பதிவு செய்யும் உரிமை உள்ளது என்றும் அவர் துபையில் பிரச்சாரம் செய்து வந்தார். ஒலி, ஒளி நாடாக்கள் மூலம் எனக்கு ராயல்டி| தரப்படுவதாகவும் பொய்யைப் பரப்பினார்|.என்று குறிப்பிட்டுள்ளார்.

எப்படி பரப்பினேன்? நோட்டீஸாகவா? கேஸட் மூலமா? மேடையில் பேசினேனா? நிரூபிக்க வேண்டும்! பாக்கர்தான் விஜய் டி.வி.யிலும் வீடியோ, ஆடியோ, சி.டி.க்களிலும் இது மாதிரி விளம்பரம் செய்தார். நான் வெளியிடும் கேஸட்களில் மஸ்ஜிதுர்-ரஹ்மான்,மருத்துவ முகாம், அல் இர்ஷாத், ஆயிஷா சித்தீகா, களஞ்சியம் மற்றும் கடைய நல்லூர் மதரஸாக்களின் விளம்பரமும் அல் முபீன் போன்ற பத்திரிக்கைகளின் விளம்பரம்தான் இருக்கும்.

தொடராக, ...எனவே, துபையில் இத்தகைய தப்புப் பிரச்சாரம் செய்யப்படுவதாகவும் எனது பேச்சுக்களை ஒலி, ஒளி நாடாக்களாக யாரும் விற்கலாம், பதிவு செய்யலாம். எனக்கு எவரும் எவ்வித ராயல்டி| தருவதுமில்லை, நான் பெறுவதுமில்லை என்று உணர்வு| பத்திரிக்கையில் (உரிமை-6, குரல்-14, பக்கம்-8) விரிவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டேன்|.என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பி.ஜே.பாக்காரை பினாமியாகக் கொண்டு உரிமை கொண்டாடியதை ஒட்டித்தான் துபையில் விமர்சனம் நடந்தது. அப்பொழுது பி.ஜே. தன் இமேஜை காத்துக் கொள்ளத்தான் இந்த விளம்பரம் போட்டார். இது பற்றி 25-பக்க கடிதத்தில் விரிவான விபரம் உள்ளது. பதிவு உரிமை மீடியா-வேல்டுக்கே. மீறி பதிவு செய்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேஸட்களில் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டதை போட்டோ காப்பி ஆதாரத்துடன் அனுப்பி இருந்தேன். அந்த ஒரிஜினல் விளம்பரங்கள் இன்றைக்கும் பலரிடம் இருக்கிறது.

காப்பி எடுக்காதீர்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி கொள்ளுங்கள் என்று விஜய் டி.வி.யில் பாக்கர் விளம்பரம் செய்தார். ஒவ்வொரு வீடியோவிலும் விளம்பரம் போட்டார். வழக்கம்போல் பி.ஜே.ன் இமேஜை பாது காக்க, இது பி.ஜே.க்கு தெரியாது| என்று நான்தான் சமாளித்தேன். 

பி.ஜே.யால் தயாரித்து வெளியிடப்படும் சி.டி.யிலேயே இந்த விளம்பரம் வருகிறதே என்று கேட்டனர். இந்தக் கேள்வியும்தான் ஜின்னா மூலம் சொல்லி விடும் நிலையை ஏற்படுத்தியது. அதுவும் எது மாதிரி விளம்பரம் தஃவாக்காக மாற்று மதத்தவர்களுக்கு இலவசமாக கொடுப்பதாக இருந்தாலும் அந்த உரிமையை எங்களிடம் கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள்|| என்று வீடியோவிலும் சி.டி.யிலும் பி.ஜே. விருப்பப்படி பாக்கர் கூறினார்.

இது சரியா இப்படி விளம்பரம் போடுவது ஹராம் இல்லையா என்று 2001 டிசம்பரில் கேட்கப்பட்டது. 2001 டிசம்பரில் பி.ஜே.அதிர்ச்சி அடைந்தது இதைக் கேட்டபோதுதான். இந்த காபி ரைட் பிரைச்சனை வந்ததும் நான் இனி எங்கும் பேச மாட்டேன். ராஜ் டி.வி. ஜெயா டி.வி.நிகழ்ச்சிகள் உட்பட எதிலும் பேச மாட்டேன் என்று கூறினார். பிறகு தன் இமேஜை காத்துக் கொள்ள அவர் குறிப்பிட்டுள்ள (உரிமை-6, குரல்-14, பக்கம்-8) விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இது பாக்கரைக் கொண்டு பி.ஜே. செய்த விளம்பரத்தை ஒட்டியதுதான் என்பது துபை, ஷார்ஜா ஆகிய இரண்டு முக்கிய ஜமாஅத்தார்களுக்கும் தெரிந்த ஒன்று.

இதற்குப் பிறகு தான் மீடியா வேல்டு கேஸட்களில் உரிமை கொண்டாடி வந்த விளம்பரங்களை நிறுத்தினார். மக்களை திசை திருப்ப இப்பொழுது பி.ஜே.ன் புதிய விளம்பரத்தை போட்டுக் கொண்டிருக்கிறார்.; டி.வியிலும் வீடியோவிலும் சி.டி.யிலும் பாக்கர் மூலம் பி.ஜே காப்பிரைட் உரிமை கொண்டாடியது உலகறிய தெளிவான ஆதாரங்கள் கேஸட்களாகவும் சி.டி.களாகவும் இருக்கவே அந்தப் பழியை என் மீது சுமத்தியுள்ளார்.

இதன் மூலம் பி.ஜே.எவ்வளவு பெரிய உண்மையாளர் என்று தன்னைத் தானே அடையாளம் காட்டிக் கொண்டார். நியாயவான்கள் மீடியா வேல்டின் கேஸட்களில், பி.ஜே. கூறும் (உரிமை-6, குரல்-14, பக்கம்-8) விரிவான அறிக்கைக்கு முந்தைய விளம்பரங்களையும் பிந்தைய விளம்பரங்களையும் போட்டுப் பார்த்தால் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டது யார்? புளுகி உள்ளது யார்? என்பதை அறிவார்கள்.

மீடியா வேல்டு என்பது த.மு.மு.க. உடையது. அது பொதுச் சொத்து என்றுதான் பெரும்பாலான மக்கள் இன்றும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது வெளியிட்ட வீடியோவில் அது பி.ஜே.யின் பினாமி பாக்கரின் தனி சொத்து என்று அறிவித்து விட்டார்கள். ஆடியோ வீடியோ விற்பதற்காக துவங்கப்பட்ட பொது நிறுவனமான முஸ்லிம் வீடியோ விஷன் எங்கே?. எதற்காக இழுத்து மூடினீர்கள் கேட்கக் கூடாதா? பொது மக்களிடம் வசூல் செய்து தயாரிக்கப்படும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிழ்ச்சியை முஸ்லிம் மீடியா டிரஸ்ட் சார்பில் நடத்தாது ஏன்? கேட்கக் கூடாதா?

கூட்டமைப்பு கணக்கு 2002 செப்டம்பரில் காட்டப்படும் என்று நிர்வாகிகள் என்னிடம் தெரிவித்துள்ளனர் என்று சமாளித்து உள்ளார். கூட்டமைப்பில் அவர் எப்படி மேலாண்மைக் குழு உறுப்பினரோ அதே சம அந்தஸ்த்தில் உள்ள மேலாண்மைக் குழு உறுப்பினர்தான் நான். 2002 செப்டம்பரில் கணக்கு காட்டப்படும் என்று அவரிடம் கூறிய நிர்வாகிகள் அதே பதிலை எனக்கு எழுதி இருக்கலாம். 2002 செப்டம்பரில் காட்ட இருப்பது செட்டப் கணக்கு என்பது தனி விஷயம்.

நான் கேட்டு எழுதி இருப்பது கூட்டமைப்பின் ஒட்டு மொத்த கணக்குகளை அல்ல. 2000 ஆகஸ்ட் 19.20.மதுரை மாநட்டிற்கு கடுமையாக உழைத்தவர்கள் மதுரைவாசிகள். அவர்கள் மாநாட்டு மீதப் பணத்தை முபாரக் மஸ்ஜிதுக்காக கேட்டனர். ஹாமித் பக்ரி வேறு ஏற்பாடு செய்து தருகிறேன் என்று வாக்குறுதி அளித்தார். எனவே கூட்டமைப்பில் ஒப்படைத்தேன்.

அக்டோபர் 2000க்கு பிறகு மாநாட்டு மீதிப் பணம் இரண்டரை லட்சத்திற்கு மேல் கூட்டமைப்புக்கு கிடைத்து உள்ளது. 2000 நவம்பர் கடைசியில் போன் போட்ட பி.ஜே.யும் ஹாமித் பக்ரியும். பணம் செலவு ஆகி விட்டது. ஜெயா. டி.வி. நிகழ்ச்சி பெயரால் கூடுதல் வசூல் பண்ணுங்கள் என்று கூறினார்கள்.

கூடுதல் வசூல் பண்ண முடியாது என்று ஜெயா.டி.வி நிகழ்சிக்கு தேவையான 1,400,000ல் சவூதி 3பாகம் துபை ஒரு பாகம் என பிரித்து துபை பங்கு ரூ.35.000ஆயிரம் மட்டும் லுஹா மூலம் அனுப்பிக் கொடுத்தேன். பிறகு போன் செய்த கூட்டமைப்பு பொருளாளர். நீங்கள் கொடுத்து விட்ட பணத்தை எல்லாம் தாஇ|களுக்கு (மவுலவிகளுக்கு) என்று வாங்கிப் போய் விட்டார்கள். செலவுக்கு பணம் இல்லை ஏற்பாடு செய்து அனுப்புங்கள் என்றார்.

எந்த ஏற்பாடும் செய்ய வில்லை. இப்பொழுது தான் 2000 டிசம்பர் 6க்கு பணம் அனுப்பி உள்ளோம். பிறகு டி.வி. நிகழ்ச்சிக்கு பணம் அனுப்பி உள்ளோம். எனவே ஏற்பாடு செய்ய முடியாது என்று கூறிவிட்டேன். சில மாதங்கள் கழித்து நிதி கேட்டு தம்மாம். ஜித்தா. தாயிப் ரியாத் அபுதாபி குவைத் கத்தார் அல்ஹஸ்லா ஜூபைல் ஆகிய பகுதிகளுக்கு கூட்டமைப்பில் இருந்து ஈமெயில் அனுப்பி இருந்தனர். அத்துடன் எனக்கும் ஈமெயில் வந்தது. அதில் 3மாதங்களுக்கு மேலாக தாஇ|களுக்கு சம்பளம் கொடுக்க முடிய வில்லை என்று எழுதி இருந்தார்கள்.

மற்ற நாட்டில் உள்ளவர்கள் நிதி திரட்டி அனுப்பினார்களா இல்லையா? என்பது எனக்குத் தெரியாது. 2 மாதத்திற்குள் இரண்டரை லட்சம் ரூபாய் செலவு செய்யும் அளவுக்கு எத்தனை தாஇ|கள் கூட்டமைப்பில் உள்ளனர்.யார்? யார்? தாஇ|கள். அவர்கள் இதுவரை என்ன என்ன பணிகள் செய்து உள்ளனர். கூட்டமைப்பு என்ன செய்திருக்கிறது, என்ன செய்கிறது. மேலாண்மைக் குழு உறுப்பினராகிய எனக்கே தெரியாத நிலையில் வசூல் செய்ய முடியாது என்பதுடன் இன்னும் அவர்களிடம் உள்ள குறைகளை கடுமையாக விமர்சித்து பதில் எழுதி விட்டேன். 

இந்தக் கடிதமும் தான் கூட்டமைப்பினர் என்னை வெறுக்க காரணமாக இருந்தது. இந்தக் கடிதத்தை ஐ.ஏ.ஸி. ஷார்ஜாக் கிளை பொறுப்பாளர்களிடமும் துபை கிளை நிர்வாகக் கூட்டத்திலும் படித்துக் காட்டி விட்டுத்தான் அனுப்பினேன்.

எந்த அமைப்பின் பெயர் இல்லாமலும் என்ன பணி என்று குறிப்பிடாமலும் பொறுப்புதாரிகள் பெயர் போடாமலும் மொட்டையாக பல்வேறு நலப் பணிகளில் பயன் படுத்துவதற்காக துபாயில் நிதி திரட்டும் பொறுப்பு ஃபழ்லுல் இலாஹி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பணிகளைப் பற்றி ஃபழ்லுல் இலாஹி விளக்கி கூறுவார். நம்பகமான ஐவர் குழுவின் மேற்பார்வையில் நிதி வசூல், செலவு ஆகிவை நடை பெறுகின்றன|| இப்படி கைப்பட கடிதம் எழுதி அனுப்பி நிதி வசூலிக்கக் கூறியவர் யார் தெரியுமா? மக்களால் சுய நலமில்லாதவர் என்று நம்பப்படும் பி.ஜே.தான். நான்தான் இப்படி மொட்டையாக வசூலிக்க முடியாது என்று மறுத்து கடிதத்தை திருப்பி அனுப்பினேன். இதனாலும் அவருக்கு என் மீது கோபம்.

ஒரு ஆலிம்ஸா-வுக்கு வீடு வாங்க நிதி திரட்டி அனுப்ப வேண்டி லுஹா எனக்கும் மற்றும் சிலருக்கும் கடிதம் எழுதினார். துபை மேலப்பாளையம் தவ்ஹீது-ஜமாஅத்தைக் கூட்டி, இதுமாதிரி ஆலிம்களுக்கு வீடு வாங்க, என்றெல்லாம் வசூலிக்க கூடாது| என்று கூறி வசூலை நிறுத்தியவன் நான்.

எதிர்பாராத விதமாக ஜகாத்-பணமாகவும், ஸதகா-பணமாகவும் 3250-திர்ஹங்கள் கிடைத்தது. அந்த ஆலிம் கடனாளியாக உள்ளதை அறிந்து கூடுதலாக நான் 650-திர்ஹங்கள் போட்டு 50,000- (ஐம்பதாயிரம்) ரூபாயாக லுஹா மூலம் கொடுத்தேன்.இவர் கூறியுள்ளபடி சுய நலனுக்காக நிதி திரட்டுபவனாக இருந்தால் வாய்ப்புகளை பயன் படுத்தி எதன் பெயரிலாவது வசூல் செய்து இருப்பேனா? விமர்சித்து வசூலிக்க முடியாது என்று எழுதி இருப்பேனா?

எதன் பெயரிலாவது வசூலித்து தன் இன மவுலவிகளுக்கு உதவுவதே இவர்களின் இயல்பு. இதை புரியாத அப்பாவி மக்கள் இவர்களது கவர்ச்சி விளம்பரங்களைப் பார்த்து ஏமாந்து உதவி வருகிறார்கள். பள்ளிவாசல் மதரஸாக்களுக்காக நிதி கேட்பவர்கள் பொதுவாகத்தான் நிதி கேட்டு விளம்பரம் செய்வார்கள். ஏனெனில் அவர்களுக்கு வேறு எந்த நோக்கமும் இருக்காது.

நாங்கள் எதற்காக வசூல் செய்கிறோமோ அதற்கே செலவு செய்வோம் என்று விளம்பரம் போடக்கூடிய ஒரே கூட்டம் உலகில் இவர்கள் மட்டுமே. சுய நலனுக்காக நிதி திரட்ட எண்ணிய அவர்களுக்கு தடையாக இருந்த என்னை, சுய நலனுக்காக நிதி திரட்டுபவராக சித்தரித்து உள்ளார். அவர்கள் கல்விச் சங்கம் துவங்கி காரியம் கைகூடாமல் கலைத்ததாக கூறியது பெரிய சான்று!

மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மான், மருத்துவ முகாம், அல் இர்ஷாத் மகளிர் இஸ்லாமிய கல்லூரி, போன்றவற்றுக்கு உதவி கேட்டு ஆயிரக் கணக்கில் கடிதம் அனுப்பி இருக்கிறேன். எந்தக் கடிதத்திலாவது நிதி அனுப்ப வேண்டிய முகவரி என்று என் பெயர் போட்டு இருக்கிறேனா? இது போல் வீடியோ, ஆடியோக்களில் நிதி கேட்டு நான் போட்ட விளம்பரங்களில் அனுப்ப வேண்டிய முகவரி என்று என் பெயர் சொன்னேனா?

எல்லா விளம்பரங்களிலும் மஸ்ஜிதுர் ரஹ்மான் முகவரியைக் கூட பயன் படுத்தாமல், இப்பொழுது பொய் சத்தியத்தால் புகழ் பெற்றுள்ள லுஹாவின் பெயரும் லுஹா வீட்டு முகவரியும்தான் இடம் பெறச் செய்துள்ளேன். மோசடி ருசி கண்டவன் தன் பெயரைப் போடாமல் அடுத்தவன் பெயரைப் போடுவானா? நியாய உணர்வு உள்ளவர்கள் சிந்திக்க வேண்டும். அல்லாஹ்வை அஞ்சக் கூடியவர்கள் பள்ளியிலும் இர்ஷாத்திலும் உள்ள கேஸட்களை போட்டுப் பார்த்து நியாயத்தை நிலை நாட்ட வேண்டும்.

சமுதாய இயக்கங்கள் பெயரால் நிதி வசூல் செய்து நாணயமாக நடக்காதவரிடமிருந்து எதையும் பெறாதீர்கள் என்று இவர் (பி.ஜே.) தலைவராக இல்லாத 2 அமைப்புகளிடம் டிசம்பர் 2001 லேயே வற்புறுத்தியதாக குறிப்பிட்டுள்ளார். இப்படி கூறியதாகக் கூறும் இவரைத் தலைவராகக் கொண்டதுதான் முஸ்லிம் டிரஸ்ட். இது அரபு நாட்டில் என் போன்றோர்கள் மூலம் வசூலித்து உருவாக்கப்பட்டது. வசூலிக்கும் வரை எங்களை டிரஸ்டிகள் என்று கூறினார். வசூலித்த பிறகு எங்களை டிரஸ்ட்டில் சேர்க்க முடியாது என்று கூறினார். இப்பொழுது 2002ல் கணக்கு கூட காட்ட மாட்டோம் என்றும் அறிவித்து விட்டார். அந்த முஸ்லிம் டிரஸ்ட்டின் இப்போதைய அலுவலகத்திற்கு 1997ல் இருந்து மாத வாடகை ரூபாய் 5,000த்தை என் மூலம் வாங்கி வருகிறார். 2002 மார்ச் வரை என் மூலம் வாங்கி உள்ளார். இப்படி என் மூலம் வாங்கிய அவர். 06.04.2002 தேதிய எனது கடிதத்திற்கு பிறகு சில மாதங்களாக வாடகை வரவில்லை| என்று மறுத்தார். அது பொய் என்று நிரூபிக்கப்பட்டு, சந்தி சிரித்தது. இதை இப்பொழுது வசதியாக மறந்து விட்டார்.

அப்பொழுது கூட, ஜவாஹிருல்லாஹ் நேரில் வாங்கியதை மறுப்பதற்காக,த.மு.மு.க. தலைமைப் பொறுப்பாளர்கள் 5 பேர் கையெழுத்திட்ட கடிதத்தில் கவனக் குறைவான தகவல்||என்று பல்லிழித்து சமாளித்தார்களே தவிர, இந்த குற்றச் சாட்டுக்காக வாங்கக் கூடாது என்று முடிவு செய்தோம் என்று கூறவில்லை. இது உண்iயாக இருந்தால் அன்றே இப்படி கூறி இருப்பார்கள் என்பதை நடு நிலையாளர்கள் உணர வேண்டும்.

31.03.02 தென்காசி இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சிக்காக நிதி கேட்டு எழுதியவர்கள்.பி.ஜே.கேட்கச் சொன்னதாக எழுதி இருந்தார்கள். மவுலவி லுஹா அவர்களும் போனில் சொன்னார்கள். எம்.எஸ்.சுலைமான் பேசுவார் என்றார். அவரும் போனில் பேசினார் லட்டரும் போட்டார். கடந்த மாதம் வரை 25 ஆயிரம் ரூபாய் 20 ஆயிரம் ரூபாய் 10 ஆயிரம் ரூபாய் என்று கூட்டமைப்பின் கீழ் இயங்கும் நிறுவனத்திற்கு என் மூலம் வாங்கித்தான் உள்ளார்கள். அதுவும் லுஹா மூலமே அனுப்பினேன்.

பிரசுரத்தில் என்னைப் பற்றி குறிப்பிடும் போது த.மு.மு.கவில் இருந்த என்ற வார்த்தையை பயன் படுத்தி உள்ளார்.இது அவருக்குப் பொருந்தும். அவர் ஆசிரியராக பணி புரியும் உணர்வு வார இதழில் வளைகுடா நாடுகளின் அமைப்பாளர் யு.ஏ.இ. நாட்டின் அமைப்பாளர் என்று எனது பொறுப்புகளின் செய்தி போட்டதை மறந்து, மறைத்து துபை என்ற மாநில பொறுப்புக்கு சுருக்கி உள்ளார். அதிலும் இருந்த என்று குறிப்பிட்டு உள்ளார். தமிழ்நாடு என்ற மாநில அளவில் அமைப்பாளராக இருந்த அவருக்குத்தான் இருந்த என்ற வார்த்தை பொருந்தும் எனக்கு பொருந்தாது.

இவர் ஆசிரியராக பணி புரியும் உணர்வில் ஷசிறு கிராம த.மு.மு.க பொறுப்பாளர் நீக்கப்பட்டாலும் செய்தி போட்டு விடுகிறார்கள். நான் த.மு.மு.க வில் இருந்து நீக்கப்பட்ட செய்தி என்று வந்தது? 03-05-2002-யு.ஏ.இ.; செயற்குழுவில் தெளிவாக அறிவித்தேன். என்னை நீக்கி விட்டு, புதிய பொறுப்பாளரை போட நினைத்தால், என்னை நீக்கியதை போட்டோவுடன் தமிழிலும், ஆங்கிலத்திலும் செய்தி போட வேண்டும். அதே உணர்வில், அதற்கு பக்கத்தில் புதிய பொறுப்பாளர் யார் என்பதையும் போட்டோவுடன் தமி;ழ், ஆங்கிலத்தில் ஷமூன்று வாரங்கள்| தொடர்ந்து செய்தி போட வேண்டும். என்று சொன்னேன். அதைச் செய்யத் தயக்கம் ஏன்?

அடுத்து வழக்கமான சவாலும் விட்டுள்ளார். எந்தக் கேள்விக்கும் நொடிப் பொழுதில் பதில் தரும் அண்ணன் பி.ஜே.எனது குற்றச் சாட்டுகளுக்கு சவால் விட இவ்வளவு காலம் தேவைப் பட்டிருக்கிறது. அவரிடம்; நா நயம் இருந்தால், நாணயம் இருந்தால் எப்பொழுதோ சவால் விட்டிருப்பார். சாட்சிகளை சரியான விலைக் கொடுத்து வாங்கிவிட்டு, ஷசவால்| விட அவருக்கு இவ்வளவு காலம் தேவைப் பட்டிருக்கிறது. நிரூபிப்பேன்! இவர்களைப் போல ஷசெட்டப்| சாட்சிகளைக் கொண்டு வரமாட்டேன். இன்றைக்கு விலைக்கும், சூழ்நிலைக்கும் மாறிவிட்ட அதே சாட்சிகளைக் கொண்டு வருவேன். குறிப்பாக லுஹா வைக் கொண்டே நிரூபிப்பேன்.

எந்த லுஹா? பள்ளி வசூலுக்காக துபை வந்த இடத்தில், இனி பி.ஜே. முகத்தில் முழிக்கவே மாட்டேன், ஷநான்| என்ற அகம்பாவம்! எல்லோரையும் விமர்சிப்பார். அவர் செய்யும் தப்புத் தவறுகளுக்காக நியாய உணர்வு உள்ள நடு நிலையாளர்கள் யாராவது தட்டிக் கேட்டால் எதிரியாகி விடுவார். மீடியாக்கள் அவரிடம் உள்ளதால் பொய்களை துணிந்து கூறி அசிங்கப்படுத்தி விடுவார். இது அவரது இயல்பு. இதற்கு பயந்தே பெரும்பாலானவர்கள் அவர் விஷயத்தில் வாய் திறப்பதில்லை.

இவர் என்ன தப்ஸீர் எழுதுகிறார். தொழுகையில், அமல்களில் பேணுதல் இல்லாதவர். அவரோடு எந்த உறவும் கிடையாது, அவரை வைத்து ஊரில் கூட்டம் போட மாட்டேன், பக்கத்து ஊர்களுக்கு வந்தால் எடுத்துக் கட்டி போகமாட்டேன் என்று முடிவுரை கூறி பி.ஜே.பற்றி, எவ்வளவு வெறுப்பு ஏற்படுத்த முடியுமோ, அவ்வளவு வெறுப்புகளை ஏற்படுத்திய ஷலுஹா| வைக் கொண்டு, விமர்சன கடிதங்களுக்கெல்லாம் மூலப் பிதாவான அந்த லுஹாவைக் கொண்டு பி.ஜே. பற்றிய அனைத்து குற்றச்சாட்டுகளையும், ஊழல்வாதியாக, மோசடிக்கு துணை நிற்பவராக நிரூபிப்பேன். இன்ஷhஅல்லாஹ்.

முன்னதாக, இல்லாத ஷபஸாது| களைப் பேசி, குர்ஆன்-ஹதீஸ்-களுக்கு முரணாக அறுவறுப்பான ஷஇரண்டு வீடியோக்கள்| 2002-ல் வெளியிட்டார்கள். இவர்களது பேச்சுத் திறமை வாதத் திறமைகளின் அடிப்படையில் எதிர் தரப்பில் ஆதாரம் இல்லை என்ற தைரியத்தில் வெளியிட்டார்கள். அந்த 2 வீடியோக்களில் இருந்து நான் நிரூபித்துக் காட்டி விட்ட இவர்களின் பொய்களுக்கும், பொய்-சத்தியத்திற்கும் பொய்க் குற்றச் சாட்டுகளுக்கும் என்ன பதில்? அதில் உள்ள பொய்கள், பொய்-சத்தியங்கள் என்று ஒன்றிரண்டைத்தான் சுட்டிக் காட்டினேன். ஆஹா! ஓஹோ!! என வெளியிட்ட அந்த கேஸட்டுகள் ஷபெட்டிப் பாம்பாக| அடங்கிவிட்டன!

பார் பார் என்று அனுப்பிய அந்த கேஸட்களை இப்பொழுது அவர்களே பார்க்காதீர்கள் என்கிறார்கள். அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்கள் வெளியிட்ட அந்த கேஸட்டை பார்க்காதீர்கள் என்று அவர்களே ஏன் சொல்கிறார்கள். அந்த கேஸட்டில் அவர்கள், ஷவெளியிட்டு விடுவோம்! வெளியிட்டு விடுவோம்!| என்று பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கும். 38 மவுலவிகள் கலந்து கொண்ட ஷஅரிஸ்ட்டோ-ஹோட்டலின்| அந்த ஆறு ஆடியோக்களையும் வெளியிடட்டும்.

ஷலுஹா|வின் சத்தியம், பொய்-சத்தியமா என்பதை மட்டும் அல்ல, லுஹாவும், அவரைச் சார்ந்தவர்களும் அனுபவம் இல்லாமல், ஷவயதுக் கோளாறால்| இந்த சமுதாயத்திற்கு செய்த ஷபெரும்-கேட்டை| அது விளக்கும்! தமிழகத்தில் ஆயிரக் கணக்கான முஸ்லிம்-குடும்பங்கள் பிச்சை எடுக்க காரணமாக இருந்தது யார்? நிம்மதியாக வாழ்ந்த முஸ்லிம்- குடும்பங்கள் கோர்ட்டு ஜெயில் என்று அலைந்து கொண்டிருக்க மூல காரணம் யார்?. பல முஸ்லிம் பெண்கள் விதவைகள் ஆகிட காரணம் யார்?. அனைத்திற்கும் பதில் சொல்லும். ஷவெளியிடக் கூடாது| என்று ஹாமித்-பக்ரியிடம் ஒப்படைக்கப்பட்ட அந்த ஆறு ஆடியோக்களின் ஒரிஜினல் ஷமாஸ்ட்டர்| இன்று லுஹாவிடம்தான் உள்ளது. தெம்பு இருந்தால், திராணி இருந்தால் வெளியிடட்டும்!

மஸ்ஜிதுர் றஹ்மான் அருகில் உள்ள இடத்தை ரூ10 லட்சம் கொடுத்து வாங்க வசூல் செய்ய லுஹா துபை வந்தார். துபை வந்த அவர் த.மு.மு.க வுக்கும் பி.ஜே.யிக்கும் எதிராக எங்களிடம் பேசினார். அப்பொழுது அவர் உங்கள் கடிதங்களுக்கு ஷமன்னிப்பு| கேட்டு எழுதிவிடுங்கள் என்றார். அதற்கு மவுலவி நிஜாமுத்தீன்-மஹ்ழரி, ஷமன்னிப்பு கேட்கக் கூடாது! அதில் எனக்கு உடன்பாடு இல்லை. மன்னிப்பு கேட்பதற்கு, பழ்லு-இலாஹி என்ன தப்பு செய்தார்? என்று கேட்டார். அதற்கு லுஹா, ஷமன்னிப்பு கேட்டு விட்டு உள்ளிலிருந்து போராடுவோம்| என்றார். அதற்கு நான், ஷஇதை நம்ப மாட்டேன்! இப்படித்தான் என் வீட்டில் இருந்து பேசிவிட்டு எல்லா மவுலவிகளும் ஷசரண்| அடைந்தீர்கள்| என்றேன். அதற்கு லுஹா, ஷஅப்பொழுது நானும் உங்கள் மேல் வெறுப்பாக இருந்தேன்;. காரணம்:- நான் கொடுக்க வேண்டிய கடன் ஷஒண்ணரை-லட்சத்திற்கு| பொறுப்பு ஏற்ற நீங்கள், அதை அனுப்பவில்லை. அதனால் வெறுப்பில் இருந்தேன்| என்றார்!

என்ன கடன் என்றால் 1995ல் மஸ்ஜிதுர் ரஹ்மானுக்கு அஸ்த்திவாரம் போட்ட நாம் கட்டுமான பொறுப்பை லுஹாவிடம் ஒப்படைத்தோம். சவூதியில் சூப்பர் மார்க்கட்டிலும் பிறகு மர்க்கஸ் தஃவாவிலும் வேலை செய்த அவருக்கு 500 ரியால்தான் சம்பளம். அதற்கு சமமான மாதம் 4,500 ரூபாய் அஹ்மது அல் அஹ்மது மூலம் ஏற்பாடு செய்தோம். பள்ளி கட்டிட வகைக்கு ஒப்புக் கொண்ட அஹ்மது அல் அஹ்மது அவர்கள் அதற்கு உரிய முழுத் தொகை கொடுத்து விட்ட நிலையிலும் பள்ளி கட்டடிடப் பணி முழுமை அடையவில்லை.

இதை ஒட்டி மூன்று லட்ச ரூபாய் பள்ளி பணத்தில் லுஹா கையாடல் பண்ணிவிட்டார். அதில் இருந்து மரக்கடை வைத்துள்ளார் போன்ற குற்றச் சாட்டுகள் வந்தது. அப்பொழுது லுஹா, கணக்குப் படி ஒண்ணரை லட்சம்தான் காணவில்லை மூன்று லட்ச ரூபாய் என்பது பொய். அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் எந்த கையாடலும் பண்ணவில்லை என்று சத்தியம் செய்தார். ஒரு மவுலவி அல்லாஹ்வின் பெயரால் சத்தியம் செய்து விட்டார். இனி அவர் அவமானப்படக் கூடாது என்று ஷஒண்ணரை லட்சத்திற்கு நான் பொறுப்பு. என் கணக்கில் பற்று எழுதி கணக்கை காட்டுங்கள்| என்றேன். இதுதான் நான் பொறுப்பு ஏற்ற கடன்.

இதைச் சொல்லிக் காட்டியவுடன் நான் சொன்னேன். 1997-ல் பொறுப்பு ஏற்றேன்- அத்தோடு நின்றீர்களா? இல்லை! குடும்ப செலவுகளை ஒட்டி அவ்வப் போது பத்து, இருபது (10, 20,) என வாங்கினீர்கள். (என்ன செலவு என்று அவரிடம் விபரித்தேன்) பிறகு தேவையில்லாமல் காவல் துறையை வம்புக்கு இழுத்து வீராப்பு பேசி, ஜெயிலுக்கு போனீர்கள். அதை ஒட்டியும் செலவுகளை ஏற்படுத்தினீர்கள்! இப்படி அடுத்தடுத்த செலவுகளை இழுத்து வைத்தீர்கள்.

பள்ளிப் பணியை ஒழுங்காக செய்யவில்லை. முழுப் பணம் தந்தும் பள்ளிக் கட்டிடத்தை முழுமையாக கட்டி முடிக்கவில்லை. இந்தக் காரணத்தால் மாதம் 4,500 ரூபாய் கொடுப்பதை அஹ்மது அல் அஹ்மது நிறுத்தினார். பிறகு வேலை தேடி சவூதி சென்றீர்கள். வேலை கிடைக்கவில்லை. போன் போட்டு, நிஜாமுத்தீன் மஹ்ழரி இடம் பேசி, ஷமாதம் 5000-ரூபாய் தந்தால் ஊரால் இருப்பதாக கூறினீர்கள். நிஜாமுத்தீன் ஆலிமும் ஒப்புக் கொண்டார். இப்படி அவசரத்தில், நிஜாமுத்தீன் ஒப்புக் கொள்வதும், பிறகு அதை என் தலையில் கட்டி, என் பொறுப்பாக ஆகிவிடுவதும் நடப்பு. இப்படி ஒப்புக் கொள்ளும் போது, ஷவேறு எந்த உதவியும் கேட்கக் கூடாது| என்ற ஒப்பந்தத்துடன் ஒப்புக் கொண்டேன்.

உங்கள் தம்பி அப்துல்-ஜப்பாருடன் பாகப் பிரிவினை பிரச்சனையில் சண்டை செய்தீர்கள். அப்துல்-ஜப்பாரை சமாதானம் செய்ய உங்களுக்காக நான், அப்துல்-ஜப்பாரிடம் மன்னிப்புக் கேட்டேன். பிறகு பாக வகை;கு அப்துல்-ஜப்பாருக்கு கொடுக்க கடன் கொண்டு ஷஒரு லட்சம்| ரூபாய் அனுப்பினேன். பிறகு அதை தள்ளுபடி செய்யக் கோரினீர்கள். சரி என்றேன். தள்ளுபடி செய்ததை எழுத்து மூலம் கேட்டீர்கள், எழுதியும் தந்தேன்!

1998ல் இருந்து 1999ஜூன் வரை மாதம் 5,000 ரூபாய் வீதம் கணக்கு பண்ணி 30,000 (முப்பதாயிரம்) 30,000 (முப்பதாயிரம்) என்று 2முறை அனுப்பி தந்தேன். 1999 த.மு.மு.க. வாழ்வுரிமை மாநாட்டு வசூலுக்கு துபை வந்த நீங்கள் 6000 (ஆறு ஆயிரம்) திர்ஹங்களுக்கு மேல் போன் பண்ணி விட்டு போய்விட்டீர்கள். உஸாமா பர்னிச்சர் போன் தான். உங்கள் தம்பி காஜாவா போன் பில் கட்டினார். பில்லை கொண்டு வந்து தந்து விட்டுப் போய் விட்டார்.

கத்தாரிலிருந்து வந்து 2610 திர்ஹங்கள் தந்து உடன் இர்ஷhத்துக்கு ரூபாய் 50 ஆயிரம் அனுப்பச் சொன்னீர்கள். உடன் அனுப்பி கொடுக்கப் பட்டது. அதற்கு அப்பொழுது 4300திர்ஹங்கள். அதில் அதிகப் பற்று 1690 திர்ஹங்கள். இனாயத்துல்லாவுக்கு நெக்லஸ் வாங்கிக் கேட்டீர்கள். 1450 திர்ஹங்களுக்கு இனாயத்துல்லாவுக்கு நெக்லஸ் வாங்கித் தந்தேன். அந்த பணத்தை என்ன செய்தீர்கள். ஆக 2ம் சேர்ந்து அதிக பற்று 3140 மூவாயிரத்தி நூற்றி நாற்பது திர்ஹங்கள்.

வந்ததோடு கம்யூட்டர் வாங்கி கேட்டீர்கள். ஷஷவாங்கிக் கொடுங்கள் நான் வசூலித்து தருகிறேன்|| என்றார் நிஜாமுத்தீன் மஹ்ழரி. ஓசியில் வாங்குவதே வாங்குவோம் அப் டூ டேட் வாங்குவோம் என்று வாங்கினீர்கள் 3518 திர்ஹங்கள் ஆனது. வசூல் ஆனது 1,300 மட்டும். இதில் அதிக பற்று 2218 திர்ஹங்கள். 1999ல் வந்து 2மாதத்தில் இப்படி 10,000 (பத்தாயிரம்) திர்ஹங்களுக்கு மேல் என்னை கடனாளி ஆக்கி விட்டுப் போய் விட்டீர்கள். ஒப்புக் கொண்டபடி சம்பளம் அனுப்ப முடியாத நிலையை உருவாக்கி விட்டு போய் விட்டீர்கள். இதற்குப் பின்தான் ஒப்புக் கொண்டபடி சம்பளம் அனுப்ப முடியாமல் போனது. இப்படி நீங்கள் கேட்டதற்கு எல்லாம் 1995-லிருந்து அதிக பற்றாக அனுப்பியதால் என் வீட்டைக் கூட கட்ட முடியாமல் தத்தளித்தேன். என் வீட்டை இன்ஜினியர் கடனுக்கு கட்டித் தந்தது உங்களுக்குத் தெரியும். எனக்கு எவ்வளவு கடன் இருக்கிறது என்பது எனக்குத்தான் தெரியும்!

இதை 2000ல் ஊரால் இருந்த போதும் சொன்னேன். பி.ஜே. இடமும் கூறி இருக்கிறேன். பிறகு (தஃவா- மாற்று மதத்தவர்களுக்கு இஸ்லாத்தை சொல்லுகிறோம் என்ற பெயரால் வசூலித்து மவுலவிகளுக்கு உதவும்) காயல்பட்டணம் இஸ்லாமிய கல்விச் சங்கம் மூலம் மாதம் 5000வாங்கி கொள்வதாக பி.ஜே. இடம் கூறி பி.ஜே.மூலம் எனக்குத் தெரிவித்தீர்கள்.

உங்கள் கடனுக்கு ஒப்புக் கொண்டு கொடுக்காததால் எதிராக இருந்ததாக கூறுகிறீர்கள். நான் ஒரு ரெஸ்ட்ராரண்ட் ஊழியன். 1500 திர்ஹங்கள் சம்பளம். ஒண்ணரை ஒப்புக் கொண்டது 1997ல் 10 மாத சம்பளத்தை தியாகம் பண்ண எண்னினேன். ஒண்ணரை ஒப்புக் கொண்ட பிறகு செய்த இடைப்பட்ட உதவிகளைப் பார்த்தால் நான் ஒப்புக் கொண்ட ஒண்ணரையைத் தாண்டும். இப்படி யெல்லாம் செலவுகளை இழுத்துவிட்ட நிலையில், அந்த ஷஒண்ணரை-லட்சம்| தரவில்லை என்று கோபித்துக் கொண்டிருப்பது, என்ன வகையில் நியாயம். ஒப்புக் கொண்டதற்காக தருவேன். தர மாட்டேன் என்று சொல்லவில்லை. எனது 1500 திர்ஹம் சம்பளத்தில் எதை யெல்லாம் நான் சரிகட்டுவேன் என்றேன்.

அப்பொழுது லுஹா சொன்னார். நான் தப்பாக எண்ணி விட்டேன்:- ஷஉங்களுக்கு எப்படியோ பணம் வருகிறது அதிலிருந்துதான் கேட்டவுடன் தருகிறீர்கள்| என்று எண்ணினேன்! நீங்கள் எப்படியோ சரி கட்டுகிறீர்கள் என்று தான் எல்லோரும் நினைக்கிறார்கள், நானும் நினைத்தேன். என்றார். எப்படியோ சரி கட்டி இந்த மவுலவிகள் கேட்பதை கொடுத்து விட்டால் நல்லவர் இல்லை எனில் மோசடியாளன்.

பிறகு அவரது கணக்கில் உள்ள கோளாறுகளைச் சொல்லிக் காட்டினேன். ஏற்கனவே ஒண்ணரை-லட்சம் ஒப்புக் கொண்டு அது இருக்கவே, மேற் கொண்டு ஒண்ணரை-லட்சம் சேர்த்து என் கணக்கில் பற்று காட்டி உள்ளீர்கள். நீங்கள் அனுப்பி உள்ள கணக்கில் நான் அனுப்பிய பணங்கள், பல வரவு வைக்காமல் விடப்பட்டுள்ளது. நான் சாதாரணமாக பார்த்தாலே இரண்டு லட்சத்திற்கு மேல் கண்ணுக்கு தெரிந்து விடப்பட்ட தொகை தெரிகிறது. நான் சொல்லும் ஒவ்வொரு செலவுக்கும் பணம் அனுப்பி தந்துள்ளேன். செலவு எழுதிய நீங்கள், வரவு வைக்கவில்லை.

1999 பிப்ரவரியில் 50, அடுத்து 51- அனுப்பினேன். 51-வரவு வைத்து, 50-விடப்பட்டுள்ளது. 50-வரவு வைத்து, 51-வரவு வைக்காவிட்டால் கூட, 51-ஞாபகத்திற்கு வராது. அடுத்தடுத்து அனுப்பும் போது வித்தியாசப்படுத்த இப்படி அனுப்புவேன். இப்பொழுது ஷஒற்றுமை, உணர்வுக்கு| 49- அனுப்பினேன். இதுவும் வித்தியாசப் படுத்தி அறியவே! அதனால்தான் 28,000 கடன் என அவர்கள் எழுதியதும் 49,000. அனுப்பியது ஞாபகத்திற்கு வந்தது.

2001 ஜனவரியில் நோன்பில் ஒரு லட்சம் ஒரு லட்சம் என்று 2தடவை அனுப்பினேன். பின் குறிப்பில் 2- லட்சம் வந்தது. கணக்கு அஸதுல்லா பாயிடம் உள்ளதால் செலவு விபரம் எழுத வில்லை என்று எழுதி உள்ளீர்கள். ஆனால் கணக்கில் ஒரு லட்சம் மட்டும் வரவு வைத்துள்ளீர்கள். உங்கள் கணக்கு வந்ததும் இது மாதிரி விடுபட்டவைகளை, உங்கள் தம்பி காஜாவையும் உங்களையும் இனாயத்துல்லாவையும் அமானித மோசடியாளர்கள் என்று கூறிய மஸ்ஜிதுர்-ரஹ்மான் துணைத் தலைவர் கூலி-இக்பாலையும் கூட்டி வைத்து காட்டினேன். உங்கள் தம்பி வாய் மூடிச் சென்றார்.

இந்த விபரத்தை எல்லாம் கேட்டு விட்டு ஊர் சென்ற லுஹா எழுதிய வார்த்தை, ஷஎத்தனையோ விஷயங்களில் விட்டுக் கொடுத்திருக்கிறீர்கள் அல்லாஹ்வுக்காக இந்த ஒரு விஷயத்தில் விட்டுக் கொடுக்க வேண்டுகிறேன்.| என்று தான் எழுதினாரே தவிர, சரியான கணக்குத் தரவில்லை. 3லட்சம் வரை என் கணக்கில் பற்றுக் காட்டியவர் இறுதியில் 80 ஆயிரத்தில் கொண்டு நிறுத்தினார். ஏற்கனவே லுஹா மாதிரி ஒரு மவுலவிக்கு என் குடும்பத்தார்களிடம் கடன் வாங்கி கடன் கொடுத்திருந்தேன். அந்த நேரத்தில் அதில் இருந்து 75,000. வந்தது. அதை நான் கடன் வாங்கியவர்களிடம் கொடுக்காமல் லுஹாவிடம் கொடுத்தேன். அதாவது விட்டுக் கொடுத்தேன்.

மேடை தோறும் தெருத் தெருவாக பொய்-சத்தியம் பற்றி பேசிய லுஹா, ஷவரதட்சணை வாங்கிவிட்டு அல்லாஹ்வின் பள்ளியில் போய் வாங்கவில்லை என்று பொய்-சத்தியம் செய்கிறீர்களே! அல்லாஹ்வின் வேதனைக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்! என்று பேசிய லுஹா, மற்ற பள்ளிகளை விட மஸ்ஜிதுர்-ரஹ்மான் தான் உண்மையிலேயே அல்லாஹ்வின் பள்ளி என்று பேசிய லுஹா, மஸ்ஜிதுர்-ரஹ்மானில் வைத்து சர்வ சாதாரணமாக மிட்டாய் சாப்பிடுகிற மாதிரி பொய்-சத்தியம் செய்கிறார்! இந்த வீடியோவைப் பார்த்த துபை-மேலப்பாளையம், தவ்ஹீது-ஜமாஅத்தினர் 17-05-2002 அன்று லுஹாவுக்கு லட்டர் எழுதினார்கள். பதில் வரவில்லை.

20.06.2002ல் கூடிய துபை-மேலப்பாளையம், தவ்ஹீது-ஜமாஅத்தினர். 1997-ல் இருந்து மேலப்பாளையம், ஷஜாக்| அமீர் ஷபள்ளி கட்டிடம் இடையில் நிற்க் லுஹாவின் 3-லட்சம் மோசடிதான்! காரணம்:- பணத்தை கையாடல் பண்ணி ஷமரக்கடைஷ வைத்துள்ளார். பணம் கொடுத்தால் ஒழுங்காக ரசீது தருவதில்லை. இன்ன, இன்ன ஆளுக்கு ரசீது தரவில்லை என்று கூறினார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு லுஹா கணக்குகளை காட்டவில்லை. அல்லாஹ்வின் மீது சத்தியம்தான் செய்தார்;, சத்தியம் செய்து விட்டதால் விட்டு விடனும் என்று நீங்கள் கூறினீர்கள். விட்டு விட்டோம். இப்பொழுது அவர் பொய்-சத்தியம் செய்துள்ளார் என்பதை அறிந்து விட்டோம்! எனவே அன்று செய்தது ஏன் பொய்-சத்தியமாக இருக்காது என்று என்னிடம் கேட்டனர். இந்த விபரத்தைக் கூறி நான் கேள்வி கேட்டதும் தான் பி.ஜே.யுடன் கை கோர்த்து என்மீது ஷஅவதூறு| பிரசுரம் வெளியிட்டுள்ளார்.

அவரது ஷபொய்-சத்தியம்| வெளிப் பட்டுவிட்டதால், இனி அவரை நான் நம்பி உதவ மாட்டேன் என்பதால் இப்படி ஷஅபாண்டம்| சுமத்தி, அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். ஷபணம் தந்தால், நேசிப்பேன் தராவிட்டால், வெறுப்பேன்| என்ற நிலையில் உள்ளவர்தான் லுஹா. நிர்வாகக் குழு உறுப்பினர்கள் என்னிடம் ஷவிளக்கம்| கேட்டு எழுதாமல், அவரது பொய் சத்திய கேஸட்டை போட்டுப் பார்க்காமல் ஒத்து நின்று விட்டார்கள். எனவே இதை பகிரங்கமாக எழுதி உள்ளேன். லுஹா அரசியல் பண்ணுவதின் நோக்கமே, பள்ளி நிர்வாகத்திற்காகத்தான்! பள்ளி நிர்வாகத்தை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபடுவது இப்பொழுது நமது நோக்கம் அல்ல. இருப்பவர்களே இருங்கள்! பள்ளியின் பக்கத்தில் உள்ள இடத்தை வாங்குவதற்கு 10-லட்சம் தேவை என்றார். அதற்காக குவைத் சென்றார். வரவும், செலவும் சரி. மிச்சம் இல்லை என்று கூறிவிட்டார். இதைப் பற்றி அல்லாஹ்வே அறிந்தவன்!

2002, ஜனவரி-2-ம் தேதி துபை வந்த பின் துவங்கிய வசூல் மூலம் யு.ஏ.இ.யில் இருந்து மட்டும் இட வகைக்கு ரூ-10, லட்சத்திற்கு மேல் வந்திருக்க வேண்டும். 13-05-2002, தேதிய அவர் எழுதிய கடிதப்படி 9-லட்சத்தை நெருங்கிவிட்டது.அதில் 50, ஆயிரம் மட்டும்தான் இந்தியா வசூல் என்று அவர் கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார். எனவே யு.ஏ.இ. வந்த நாளிலிருந்து இப்பொழுது வரை ரூ-10, லட்சத்தை தாண்டி இட வகைக்கு சேர்ந்து இருக்க வேண்டும். ஷகடந்த காலத்தில் நம்பி விட்ட மாதிரி விட முடியாது. அவரது சத்தியத்தை இனி நம்ப முடியாது.இடம் வாங்காவிட்டால், நான் பொறுப்புதாரி அல்ல. லுஹாவும் அவருடன் இருக்கும் நிர்வாகிகளும்தான் அல்லாஹ்விடம் பொறுப்பாளிகள்! எனவே இடத்தை வாங்கி விடவேண்டும்.

1996-ல் ஷபள்ளி கட்ட|என முழுப் பணத்தயும் வாங்கிவிட்டு, பாதியில் விட்ட மாதிரி இடத்தை வாங்காமல், எதன் பெயரிலாவது வசூல் பண்ணி மவுலவிகளுக்கு கொடுக்க வேண்டும் என்ற கொள்கை உடையவர்கள்.இந்த பணத்தையும் வேறு வழி பண்ண போடும் ஷநாடகமாக| இருக்குமோ என்ற அச்சம் பலருக்கு ஏற்படுள்ளது. இப்பொழுது இடம் வாங்காவிட்டால் அந்த பாவத்தில் எங்களுக்கு பங்கு இல்லை. அவரும், அவருக்கு துணை நிற்பவருமே அந்த பாவத்திற்கு பொறுப்பாளிகள்.
லுஹா எனக்காக பி.ஜே.யிடம் பேசியதாக கூறி வருகிறார். அவர் எழுதி உள்ள கடிதத்தில் பி.ஜே.க்காக என்னிடம் தான் பரிந்துரை செய்துள்ளார். பி.ஜே.க்கு எழுதியுள்ள குற்றச்சாட்டுகள் பொய் என்று லுஹா எழுதவில்லை. பி.ஜே.விஷயத்தில் வேகம் காட்ட வேண்டாம் என்றே எழுதி உள்ளார். இப்பொழுது அவர் செய்துள்ள பொய் சத்தியத்தை சுட்டிக் காட்டி தட்டிக் கேட்டதால் எதிரணி ஆகிவிட்டார். ஷஷஎல்லோரையும் விமர்சிப்பார். அவர் செய்யும் தப்புத் தவறுகளுக்காக நியாய உணர்வு உள்ள நடு நிலையாளர்கள் யாராவது தட்டிக் கேட்டால் எதிரியாகி விடுவார். மீடியாக்கள் அவரிடம் உள்ளதால் பொய்களை துணிந்து கூறி அசிங்கப்படுத்தி விடுவார். இது அவரது இயல்பு. இதற்கு பயந்தே பெரும்பாலானவர்கள் அவர் விஷயத்தில் வாய் திறப்பதில்லை||. இது பி.ஜே.பற்றி லுஹா கூறியது. இது இ;ப்பொழுது லுஹாவுக்கும் பொருந்தும்.

இதற்குஅஞ்சாமல் அவரால் சமுதாயத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டி தட்டிக் கேட்டேன். அதனால் என்னை மோசடியாளனாக சித்தரிக்க யு.ஏ.இ.யில் களம் அமைத்து தோற்றார். யு.ஏ.இ.யில் தோற்று விட்டதை லுஹா ஒத்துழைப்புடன் மேலப்பாளையத்தில் அரங்கேற்றி உள்ளார்.

மவுலவிகளை இழிவு படுத்திவிட்டார்| என்று தூண்டி விட்டு வருகின்றனர். தமு.மு.க. தலைமையினரை புகழ வேண்டும் என்ற எஜமான விசுவாசத்தில் பி.ஜே.ன் ராஜினாமா அறிக்கையில். ஷஷமறுமையை முன்னிறுத்தி சமுதாய சீர்திருத்தத்துக்காக நானும் சேர்ந்து உருவாக்கிய தவ்ஹீது இயக்கத்தில் கூட சுய நலனையும் பதவி மோகத்தையும், பணம் திரட்டும் குறிக்கோளையும் நான் காண்கிறேன். சம்பளம் இல்லாவிட்டால் அவர்கள் இப்ணியைச் செய்யமாட்டார்கள் என்பதையும் உணர்கிறேன்||. என்று ஒட்டு மொத்த தவ்ஹீதுவாதிகளை இழிவு படுத்தினார். இதை எதிர்த்தவன் நான். மஸ்ஜிதுர்-ரஹ்மான் நிர்வாகக் குழு கூட்டத்தில் ஷலுஹா| நெஞ்சில் அடித்து அழுதார் என்று சென்னையில் செய்தி பரப்பப்பட்டது, அதை எதிர்த்து ஷமவுலவி லுஹா| வுக்காக சண்டை யிட்டவன் நான். மவுலவிகளை இழிவு படுத்தி கேஸட் வெளியிட்டவர்கள் அவர்களது இழி செயலை மறைக்க திசை திருப்பி வருகிறார்கள்.

சிலர் தரம் தாழ்ந்து வம்பு பேசுகிறார்கள். இதன் மூலம் அவர்களின் தரத்தை அவர்கள் வெளிப் படுத்துகிறார்கள். சிலர் இவ்வளவு நாளாக சொல்லாதது ஏன்? என்று இயல்பாக கேட்கிறார்கள். 6-04-2002-ல் பி.ஜே.யிக்கு எழுதிய கடிதத்தை கவனித்து பார்த்தால், நீண்ட நாடகளாக உள் கட்சி போராட்டம் நடந்து வருவது தெரியும்.

மேலப்பாளையத்தில், தவ்ஹீது-இயக்கம் என்ற ஒரு அமைப்பை ஸ்தாபித்தவன் (துவக்கியவன்) என்ற முறையில் அதன் ஸ்தாபகர் ஆக உள்ளேன். ஷபவுண்டர்| என்று ஆங்கிலத்தில் எழுதுவார்கள். அந்த அடிப்படையில்தான் மஸ்ஜிதுர்-ரஹ்மானின் பவுண்டர் நான். ஷபவுண்டர்| என்பது தேர்வு அடிப்படையில் வரும் பதவி அல்ல நீக்குவதற்கு, செயலின் அடிப்படையிலானது.

இப்பொழுது லுஹாவுக்கு ஆரம்பத்தில் இருந்து இதுவரை ஷசம்பளம்| கொடுக்கப் படவில்லை என்று காரணம் காரணம் உண்டு பண்ணி மஸ்ஜிதுர்-ரஹ்மானிலிருந்து மாதம் 5000- வீதம் பணத்தை கொடுக்க முடிவு செய்துள்ளதாகவும், பி.ஜே.யின் பரிந்துரையுடன் ஒண்ணரை லட்சம் வரை கழித்து விட்டதாகவும்; அறிகிறேன். மேலே குறிப்பிட்டுள்ள 3 லட்சத்திற்கும் மேற்பட் பணங்கள் அதிக பற்றாக லுஹாவிடம் இருக்கிறது. மாதம் 3000-மூவாயிரம் ரூபாய் வீதம் இர்ஷhதிலிருந்து பெற்று வருகிறார். இப்பொழுது மாதம் 3000--மூவாயிரம் ரூபாய் அல்-முபீனிலும் சம்பளம் பெறுகிறார். இந்நிலையில் பள்ளிப் பணத்தில் ஷசம்பளம்| கொடுக்கப் படவில்லை என்ற போர்வையில் 1,50,0000 கழித்தது முறையா? மேலப்பாளையத்தில் எந்த பள்ளியிலும் இல்லாத அளவுக்கு கூடுதல் சம்பளம், மஸ்ஜிதுர்-ரஹ்மானிலிருந்துஇருந்து கொடுக்க வேண்டுமா?

மேடையில் பேச காசு வாங்க மாட்டோம் என்று கூறுகிறார்கள். தெருப் பிரச்சார கூட்டங்களுக்கு கூட்டம் ஏற்பாடு செய்தவர்களை செலவு செய்யவிடாமல், ஆயிரம் கொண்டு வா! ஆயிரத்தி- ஐநூறு கொண்டுவா! என வாங்கிவிட்டு, பேச்சாளர்களுக்கு என்று பணம் எடுக்கிறார் லுஹா. என்ற குற்றச்சாட்டை அவரிடம் கேட்டேன். அவர் கூறிய பதில் சில தெருவில் பணம் தருவார்கள் சில தெருவில் பணம் தர மாட்டார்கள் என்றார். எது எப்படியோ இனி பொதுக் கூட்டம் நடத்தினால் கூட்டம் நடத்துபவர்களையே செலவு செய்யச் சொல்ல வேண்டும். அல்லது கூட்ட செலவு விபரங்களை பள்ளியில் ஒட்ட வேண்டும். மாதா மாதம் பள்ளியிலிருந்து யார் யாருக்கு எவ்வளவு சம்பளம் என்பதையும் பள்ளியில் ஒட்ட வேண்டும் செய்வாரா உத்தமர் லுஹா?

என் மூலம் எட்டு ஆண்டுகளுக்கு முன் துபை வந்த லுஹா-வின் தம்பி காஜா-பிர்தவ்ஸி, உஸாமாவின் பெயரால் ஷhர்ஜாவில் உள்ள பர்னிச்சர் மார்ட்டில் பார்ட்னர்;! 1979-ல் துபை வந்த நான், இன்றும் ஒரு ஷரெஸ்ட்டாரெண்டின்| ஊழியன்தான். சிறிய கேண்டீனில் கூட பார்ட்னராக இல்லை. எனக்குப் பிறகு துபை வந்தவர்கள், என் மூலம் துபை வந்தவர்கள், இவர்களெல்லாம் இன்று ஊரில் பல ஷபில்டிங்| களுக்கு உரிமையாளர்கள்! என் நிலை என்ன? 1979-க்கு பிறகுதான் என் தகப்பனார் பெயரில் இருந்த வீட்டை விற்றோம். 1983-ல் ஒரு வயலை விற்றோம். நான் வீடு கட்டி இருப்பது பூர்வீக இடத்தில்! இதற்கெல்லாம் காரணம் காலமெல்லாம் இந்த மவுலவிகளுக்கு நான் போட்டுக் கட்டியதே. இப்பொழுதாவது தங்களை அடையாளம் காட்டிக் கொண்டார்களே அல்ஹம்து லில்லாஹ்.
அன்புடன்:-
தகவல் தொடர்புகளுக்கு: கா.அ.முஹம்மது பழ்லுல்; இலாஹி,
கா.அ.முஹம்மது மீரான் முஹைதீன்,
இலாஹி இல்லம், துபை,யு.ஏ.இ.
60. சமாயினா Nஷக் முஹம்மது மூப்பன் தெரு, 22.ஏ.சமாயினாNஷக் முஹம்மது மூப்பன் தெரு,
மேலப்பாளையம். 627005. மேலப்பாளையம். 627005.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.