நெஞ்சில் அடித்து அழுத லுஹாவும் பி.ஜே. கடிதத்தைக் காட்டி கணக்கு கேட்ட பொருளாளரும்

மஸ்ஜிதுர் றஹ்மான் வரவு செலவுகளை பொருளாளரிடம் கொடுத்து செய்யாமல் தன் கை வசமே வைத்து செலவு செய்தார் லுஹா. அதை ஒட்டி ஒரு கடிதம் பி.ஜ. இடமிருந்து வந்தது.

லுஹா கணக்கை சரியாக பராமரிக்கவில்லை. அனைத்து வரவு செலவுகளும் அனைத்து நிர்வாகிகளுக்கும் தெரிவதில்லை. பள்ளிவாசல் நிதியை அல்லாத பணிகளுக்கு பயன்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டுகளை குறிப்பிட்டு 28-08-2001 அன்று பி.ஜே. எழுதிய இயல்பான ஒரிஜினல் கடிதம்.
பள்ளி பொருளாளர் மவுலவி J.S. ரிபாஈ ரஷாதி பள்ளிக்கு வரும் பணம் பொருளாளராகிய  என்னிடம் தராமலும் பேங்கில் போடாமலும் லுஹா தன் கையில் வைத்து செலவு செய்கிறார். பள்ளிப் பணத்தை அல்லாத வகைக்கு செலவு செய்கிறார் என்று  இந்தக் கடிதத்தை நிர்வாகக் குழுவில் படித்துக் காட்டி கணக்குக் கேட்டார். லுஹாவோ கணக்குக் காட்டாமல் நெஞ்சில் அடித்து அழுதுள்ளார். 

பள்ளிவாசலுக்கு என வந்த பணத்தை பள்ளி அல்லாத வகைக்கு பயன்படுத்த்துகிறீர்கள் என்று கூறி கணக்கு கேட்டால் கணக்கு காட்டாமல் தாயாரம்மா தாயாரே என்று நெஞ்சில் அடிப்பார்களே அது போல் நெஞ்சில் அடித்து லுஹா அழுதார் என்று பீ.ஜைனுல் ஆபிதீன் சென்னையில் பரப்பினார்.
  
மஸ்ஜிதுர்றஹ்மான் நிர்வாகக் குழுவினர் கணக்கு கேட்டதற்கு கணக்கு காட்டாமல் நெஞ்சில் அடித்து லுஹா  அழுதார் என்ற செய்தி தீயாகப் பரவியது. 


நெஞ்சில் அடித்து அழுத செய்தி பரவிய சில நாட்களில் பணத்திற்காக எதுவும் செய்யும் அயோக்கியன் என்று லுஹாவால் விமர்சிக்கப்பட்டவர் பி.ஜே. முன்னிலையில் லுஹாவை தகாத வார்த்தைகள் பேசி மான பங்கப்படுத்தினார். 

துபை வந்து பி.ஜே.யின் அசிங்கங்களை வெளிப்படுத்தினார். அந்த லுஹாவை பி.ஜே. எனக்கு எதிராகப் பேரம் பேசி  விலைக்கு வாங்கினார். அதன் பின்

03-08-2002 அன்று துபை ஐ.ஏ.ஸி.க்கு லுஹா 13 பக்க கடிதம் அனுப்பி இருந்தார். அந்த கடிதத்ததுடன் இணைத்து அனுப்ப 2002 ஜுலையில் எழுதிவிட்டு லுஹாவை காப்பாற்ற 2001யில் எழுதுதியது போல் 28-08-2001 என பொய்யா முன் தேதி இட்டு பி.ஜே. தனது கைப்பட எழுதிய செட்டப் கடிதம். பக்கம்1.



இந்தக் கால கட்டங்களில் பி.ஜே. எந்தக் கடிதங்களையும் கைப்பட எழுதக் கூடியவராக இருக்கவில்லை. பொய் தேதி போட்டு எழுதியதால் கைப்பட எழுதியுள்ளார்
கைப்பட பி.ஜே. எழுதியுள்ளது போலியான தேதியிட்டு எழுதிய பொய்க் கடிதம் என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் இட்டுச் சொல்கிறேன். எனது சத்தியத்தை ஏற்காதவர்கள் எனக்கு எதிராகத் துஆச் செய்யலாம். 


28-08-2001  தேதி இட்டுள்ள பி.ஜே. கைப்பட எழுதியுள்ள இந்த கடிதம்  28.08.2001ல்தான் எழுதப்பட்டது என்றால் லுஹாவையும் பி.ஜே.யையும் சத்தியமிட்டு மறுக்கச் சொல்லுங்கள். சத்தியம் செய்ய மறுத்தால் இதில் யார் பொய்யர்களோ அவர்கள் மீதும் அவர்களைச் சார்ந்து நிற்பவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாக துஆச் செய்யுங்கள் 



Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.