ஹிஜிரி 1437 நோன்புப் பெருநாள் பிறை குழப்பங்களா? வாத பிரதி வாதங்களா?

7 ஆம் தேதி வியாழக்கிழமைதான் பெருநாள்  என்று 4ஆம் தேதியே இந்தியாவி்ல் அறிவித்து விட்டார்கள். அதற்கான ஆதாரம் இதோ என்று பலர் வெளியிட்டுள்ளார்கள்.




6 ஆம் தேதி   புதன்கிழமைதான் பெருநாள்  என்று 4ஆம் தேதி காலை 10 மணிக்கே சவூதியில் அறிவித்து விட்டார்கள். அதற்கான ஆதாரம் இதோ.

இப்படி ஒவ்வொரு நாட்டினரும் அரசின் முடிவை கூறிக் கொண்டிருந்தனர்.

நீங்கள் நோன்பு என முடிவு செய்யும் நாள் தான் நோன்பு ஆகும். நோன்புப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் நோன்புப் பெருநாள் ஆகும். ஹஜ்ஜுப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகும்'' என்று அல்லாஹ்வின் துாதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: திர்மிதீ.  இந்த ஹதீஸை ஆதாரமாகக் காட்டி 07-07-2016  வியாழன் அன்று  நோன்புப் பெருநாள்  என்று மேலப்பாளையம் மண்டல த.மு.மு.க. அறிவித்தது

குன்னுாரில் பார்த்த பிறையை தமிழகம் முழுக்க  ஏற்க முடியாது. அவரவர்கள் அவரவர் பகுதி பிறையைத்தான் ஏற்கணும். அமரஹும் (பிறை பார்த்த அவர்களுக்குத்தான் பெருநாள் என கட்டளை இட்டார்கள்) என்றுதான் நபி(ஸல்) கூறி உள்ளார்கள். அமரனா(எங்களுக்கு கட்டளை இட்டார்கள்  என்று அந்த ஹதீஸ் கூறவில்லை. இப்படி வாதம் வைத்த  TNTJ தெங்கம்புதுாரில் அவர்கள் பார்த்தாகக் கூறியதை தமிழகம் முழுவதும் ஏற்கணும் என்றனர்.  இதை ஒட்டி வந்த வாத பிரதி வாதங்கள். 



தமிழக தவ்ஹீத் கொள்கையாளர்களின் ஒரே தலைமையை(JAQH)  உடைப்பதற்காகவும் , தனக்கு பின்னால் ஒரு அணியை உருவாக்கவும் அண்ணன் பி.ஜே. அவர்களுக்கு கிடைத்த இரண்டு வாய்ப்புகளில் ஒன்று தான் JAQH அமைப்பு க்கு எதிரான மார்க்க ரீதியான பத்வாக்கள், ஆய்வுகள்.!
அதன்படியே 1999 ம் ஆண்டில் அல் முபீன் மாத இதழில் ஆய்வுக்கட்டுரைகள் வெளிவரத் தொடங்கியது.
1) அமீர் ஓர் ஆய்வு
2) பிறை ஓர் ஆய்வு
இரண்டும் JAQH என்ற வலிமையான தலைமையை உடைப்பதற்காக எழுதப்பட்டு, தவ்ஹீத் கொள்கையாளர்கள் இரு கூறாக பிளவுபட்டனர். JAQH Vs அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்பு.
அது ஒரு நீண்ட சூழ்ச்சி மிகு வரலாறு.

சரி இப்போதுள்ள விசயத்திற்கு வருவோம்...!
அண்ணன் பி.ஜே.அவர்கள்
பிறை ஓர் ஆய்வு என்று 1999 
அல் முபீனில் எழுதினார் பிறகு 2009 
ஆன் லைன் பீஜேயிலும் அதனை வெளியிட்டார்கள். 
47 பக்கம் கொண்ட அதில் டிஎன்டிஜே வின் இன்றைய கூற்றுக்கு மாற்றமாக ஏராளமான தீர்வுகள் அதில் கூறி உள்ளார்கள். பிறை ஓர் ஆய்வு சொன்ன தீர்வு என்னவெனில் " தகவல் பிறை கூடாது. தத்தமது பிறை தான் சரி " என ஆய்வு முடிவு எழுதினார். 
அதன் 47 ஆவது பக்கத்தின் முடிவைப் பாருங்கள்.

"இந்த தாலுகா, இந்த மாவட்டம், இத்தனை மைல், அல்லது இத்தனை நிமிடம் என்று அந்தந்த பகுதியினர் தான் முடிவு செய்து, அந்த தூரத்தைப் பொருட்படுத்தாமல் விட்டு விடலாம்.
இதற்கான அதிகாரம் அந்தந்த பகுதி மக்களுக்கு அல்லது அந்தந்த ஊர் மக்களுக்கு உள்ளது தானே தவிர எங்கோ இருந்து கொண்டு யாரும் கட்டளை பிறப்பிக்க முடியாது.
இது தான் பிறை பற்றிய தெளிவான முடிவு! மேலே நாம் எடுத்துக் காட்டிய ஆதாரங்களைச் சிந்தித்தால் இந்த முடிவுக்குத் தான் யாரும் வர முடியும்."

இப்படி தீர்ப்பு எழுதி விட்டு இப்போது எங்கோ இருந்து கொண்டு ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் கட்டளை பிறப்பிக்கின்றனர்.
அல்முபீன் ஆய்வு கட்டுரை வெளிவந்த காலம் முதல் கன்னியாகுமரி பிறையை மேலப்பாளையம் மக்களே ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை எனக் கூறினார். திடீரென தத்தமது பிறை தமிழக பிறையாக மாறி, இப்போது தகவல் பிறையாக பரிணாம வளர்ச்சி பெற்று ள்ளது.    
தத்தமது பிறையை தமிழக பிறையாக மாற்ற அண்ணனுக்கு
நிர்ப்பந்தம் எங்கு இருந்து வந்தது?

குர்ஆன், ஹதீஸ் மட்டுமின்றி அமைப்பு சட்டம், பைலா அனைத்தையும் தங்களது தொண்டர்களுக்கு மார்க்கம் ஆக்கியுள்ள டிஎன்டிஜே, தங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லாத குராபத் கொள்கையுடைய (?) தலைமை ஹாஜியை மிரட்டுவது என்ன நியாயம். உங்கள் கொள்கை வேறு அவர்கள் கொள்கை வேறு. நீங்கள் உங்கள் ரூட்ல போங்க அவர்கள் அவங்க ரூட்ல போகட்டும். 
அதை விடுத்து மிரட்டுவது,தடித்த வார்த்தை கொண்டு வசைபாடுவது என்ன நியாயம்.?

எல்லாம் சரி....
டியர் டிஎன்டிஜே லீடர் அண்ட் கேடர்ஸ்...
உங்கள் பிறை....!
தத்தமது பகுதி பிறையா.? 
தகவல் பிறையா.? 
என்ன உங்கள் நிலைப்பாடு.? 
கொஞ்சம் சொல்லுங்க.

"தத்தமது பகுதி பிறை" தான் உங்கள் நிலைப்பாடு என்றால.....
சென்னை டூ கன்னியாகுமரி 650 கிலோ மீட்டர் .இவ்வளவு தொலைவில் உள்ள பிறை யை ஒத்துக் கொண்ட நீங்கள் கன்னியாகுமரி , திருநெல்வேலி, தூத்துக்குடி, கோவை மாவட்ட டிஎன்டிஜே மக்களை கேரளா மாநில பிறையை ஏற்றுக் கொள்ள சொல்ல வேண்டிய தானே.!

"தகவல் பிறை " என்றால்.....
ஆதாரப்பூர்வமான தகவல் எந்த நாட்டிலிருந்து வந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டியது தானே.!

முதலில் நீங்கள் ஒரு முடிவுக்கு வாங்க அதற்குப் பிறகு ஹாஜி மேட்டரை பார்த்து கொள்ளலாம்.
- புளியங்குடி S செய்யது அலி

தமிழ்நாடு அரசு தலைமை காஜியிடம் பிறை பார்த்ததாக கூறியவர்களிடம் காஜி கேட்ட முதல் கேள்வி நீங்கள் யார்? என்பதுதான். ஷியா முஸ்லிமான காஜி சுன்னத் ஜமாஅத்தாரின் சாட்சியங்களை ஏற்றுக் கொள்கிறார். டி.என்.பி.ஜேயினரின் சாட்சியத்தை மட்டும் ஏற்றுக் கொள்வது இல்லையே ஏன்?


சாட்சி சொன்னவர்கள் போனில் 7.40க்கு பிறை பார்த்தாக கூறி விட்டு 6.40தா  என்றதற்கு ஆம் என்றனர். இதை சபகுல்லிஸான், டங்கு சிலிப்பு என்றார்கள். வீடியோ பதிவில் 6.52 என்று கூறி உள்ளார்கள். ஆகவே ஆடியோ வீடியோ சாட்சியங்கள் செட்டப்களே.


பிறை பார்ப்பதற்காக இலங்கையில் ஆதம் மலை மாதிரி உயரமான இடங்களுக்கு செல்கிறார்கள். அப்படியானால் நபி(ஸல்) உஹது மலை மாதிரி உயரமான இடங்களுக்கு சென்று பிறை பார்க்க கட்டளை இட்டிருப்பார்கள். ஆகவே பகீரத முயற்சிகள் தேவை இல்லை. அது நபி வழியும் இல்லை. ஆகவே மலையேறியோ, விமானம் ஏறியோ, சாட்டி லைட் மூலமோ பார்த்த பிறை செல்லாது என்று பத்வா-தீர்ப்பு வழங்கியவர்கள்தான் இந்த பீ.ஜே. கூட்டம்.


இவர்களின் இந்த பத்வாவுக்கு  மாற்றமாக பிறை பார்க்க என (பகீரதனின்) கடும் முயற்சியை மேற் கொண்டுள்ளதாக அவர்களே கூறி உள்ளார்கள். கடற்கரை ஓரமாக 2 கி.மீ. துாரம் போய் நோன்பு துறந்து விட்டு பார்த்தாக கூறுகிறார்கள். அவர்களின் பத்வாவுக்கு அவர்களே முரண்பட்டுள்ளார்கள். இதையெல்லாம் காஜி சொல்லவில்லை.


டி.என்.பி.ஜேயினர் பொய் சொல்லலாம். பொய் சாட்சி சொல்லலாம். பொய் சத்தியம் செய்யலாம் என்ற கொள்கை உடையவர்கள். ஏற்கனவே பல பொய் சத்தியங்களையும், பொய் சாட்சியங்களையும் சொன்னவர்கள். இதைச் சொல்லியே அவர் நிராகரித்துள்ளார்.


காஜி ஷியா முஸ்லிம் என்றாலும் பேணுதல் உடையவர். காஜி என்பதற்காக அரசு கொடுத்த சைரன் வைத்த காரை, அரசு ஒதுக்கிய கோட்ரஸ் வீட்டை, அரசு கொடுத்த சம்பளத்தை, அரசு கொடுத்த தலைமை அலுவலகத்தை, அரசு அதிகாரி என்ற கிரீன் கார்டு சலுகைகள் என அனைத்தையும் வேண்டாம் என்றவர்தான் காஜி.


பீ.ஜே. யார் தனக்கு அரசாங்க செலவில் ஏ.கே. 47 போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக எப்படியெல்லாம் முயற்சி செய்தார்? அதில் ஒன்று, தான் உபயோகித்த கார் கண்ணாடியை தானே ஆள் வைத்து உடைத்து விட்டு புகார் செய்தார். அரசு செலவில் பாதுகாப்பு பெற்றார். அரசியல்வாதியை விட கேவலமான இந்த செயலை செய்து விட்டு அரசியல் ஆசை இல்லை என்கிறார்.


காஜிக்கு மேலிடத்து பிரஷ்ஷர் என தங்களுக்குள்ளேயே பேசி ஆடியோ வீடியோ  சாட்சியங்களை வெளியிட்டவர்களே கீழ் காணும் விஷயங்களுக்கு உங்கள் தலைமையிடம் பேசி ஆடியோ வீடியோ சாட்சியங்களை வெளியிடுங்கள். 


நாகூர் ஆலிம் ஜார்ஜ் கொலை, இமாம் கமருஜ்ஜமான் கொலை. முஸ்தபா ரஷாதி என்ற ஆலிமை இந்து மயானத்தில் புதைத்தது பற்றி தடா றஹீம் கூறியது பற்றி அல்ல. உங்கள் 


தலைமையே உங்கள் தலைமை பற்றி கூறியது. வஹ்ஹாபியே வஹ்ஹாபியைப் பற்றி கூறியது. பழனி பாபாவை கொலை செய்ய பத்வா கொடுத்து விட்டு கொலை செய்யப்பட்டதும் கண்ணீர் விட்டு அழுது ஷஹீது என புகழ்ந்தவர்தான் பீஜே.


பழனி பாபாவை கொலை செய்ய பீ.ஜே. பத்வா கொடுத்து விட்டார் என்று சொன்னவர் ஷம்சுல்லுஹாதான். இதை சத்தியம் செய்து மறுக்கச் சொன்னால் லுஹா எளிதில் மறுத்து விடுவார். மறுப்பதாக இருந்தால் லுஹாவாகிய  என் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்று கூறி லுஹா மறுக்கட்டும் என்று லுஹா ஊரைச் சார்ந்தவர் லுஹா வீட்டுக்கு அருகில் கூட்டம் போட்டு அறிவித்து வருடங்கள் உருண்டோடி விட்டன. பேசியவனும் வஹ்ஹாபிதான். இதுவரை லுஹா சாபம் கேட்டு மறுக்கவில்லை. டி.என்.பி.ஜேயினர் உண்மையாளர்கள் என்றால் இது விஷயமாக லுஹாவையும் பிஜேயையும்  சாபம் கேட்டு மறுக்கச் செய்து வீடியோ வெளியிடுங்கள்..


பள்ளிவாசலில் இமாமாக இருந்த மவுலவி முஸ்தபா ரஷாதி அவர்களை இமாம் அலி, ஹைதர் அலி போன்றவர்களுடன் ஜிஹாதில் ஈடுபடுத்தியவர் பீ.ஜே. குண்டு வெடிப்பில் முஸ்தபா ரஷாதி இறந்த பின்னரும் உயிரோடு இருக்கின்ற மாதிரி காட்ட சில காலம் ஆள் வைத்து பணம் அனுப்பி ஏமாற்றியதும் பி,ஜெ.அன்கோ என்றும் அந்த வஹ்ஹாபி பகிரங்கமாக அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து சாபம் கேட்டு உள்ளான். 


இதற்கு வாதம் வைத்து பிதற்றாமல் நேரடியாக சத்தியம் செய்து பொய் என்றால் தன் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்று  பீ.ஜேயை சொல்ல வைத்து வீடியோ வெளியிடுங்கள்.


மேலும் இந்த கூற்றுக்கள் உண்மையானால் ஜிஹாது என்ற பெயரால் இந்த மாதிரி செய்த சமுதாய துரோகிகளை யா அல்லாஹ் நீ நாசமாக்கு. பொய்யாக இருந்தால் இட்டுக்கட்டியவர்களை நாசமாக்கு. TNTJ யின் தலைமையில் உள்ள பீ.ஜே, லுஹா, தென்காசி சுலைமான், அப்துர்றஹ்மான் பிர்தவ்ஸி, அல்தாபி உட்பட யார் பொய் சத்தியம்  செய்து பொய் சாட்சி சொல்லி இருந்தாலும். அவர்களை யா அல்லாஹ் நீ நாசமாக்கு என்று துஆச் செய்யும்படி TNTJ யின் தலைமையை அறிக்கை விடச் செய்யுங்கள். செய்து விட்டால்  உங்கள் சாட்சியத்தை எல்லா முஸ்லிம்களும் ஏற்றுக் கொள்வார்கள்.
அஹ்லுஸ்ஸுன்னத்வல் ஜமாஅத் 

கூடவே அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாத் இதையும் சேர்த்து கொண்டால் நல்லது...எம் உயுரினிலும் மேலான நபி (ஸல்) இட்டு கட்டி பிதத் மூலமும் ஷிர்க் மூலமும் வழி கெடுக்கும் மார்க்கத்தை வளைக்கும் உலமா ஷைத்தான்களையும் நாசமாக்கு....என்பதையும் சேர்த்து  அறிக்கை வெளியிடட்டும் பார்ப்போம்


5.7.2016 செவ்வாயன்று வைத்த பிறையே சரி என்கிறார் நாகர்கோயில் அஹ்மது பஷீர்
S.Ahamed Basheer
Nagercoil.
8883132446
♦ ஸலாமுன் அலைக்கும் ♦
♦ அன்பார்ந்த அல்லாஹ்வின் நல்லடியார்களே!
♦ அல்லாஹ்வின் அத்தாட்சிகளாகிய சூரியன், சந்திரன் மூலமாகத்தான் இந்த உலகமே இயங்கி கொண்டிருக்கிறது.
♦ சந்திரனின் தேய்ந்து, வளரும் நிலைகளின் பல படித்தரமாக இருக்கும் பிறையை பார்ப்பது பற்றிய பதிவுதான் இது.
♦ இந்த பதிவானது ஓரு குறிப்பிட்ட இயக்கத்தையோ, பிரிவினையோ, ஜமாத்தையோ சார்ந்தது அல்ல. மேலே என்னுடைய பெயர் விவரங்களை குறிப்பிட்டு இருக்கிறேன்.
♦ நான் ஒரு முஸ்லிம் என்னுடைய முஸ்லிம் சமூகத்திற்கு பிறை பற்றிய மார்க்க அறிவுரையை வழங்குவது கடமை என்ற நோக்கத்துடன் மட்டுமே இந்த பதிவை பதிவு செய்கிறேன்.
♦ என்னுடைய இரண்டு வருட உழைப்புதான் இந்த பதிவு. ஆம் 2 வருடமாக வானில் பிறையை பாரத்து ஆராய்ந்து வருகிறேன்.
♦ இந்த பதிவானது படிக்க வேண்டிய புத்தகமாகிய குர்ஆன் மற்றும் குர்ஆனுக்கு முரண்படாத நபிமொழிகளை வைத்து உருவானவை.
♦ இந்த பதிவானது பிறரை குறை கூறி மனதை புண்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக பதியப்பட்டது அல்ல. மக்களை நேர்வழிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக மட்டும்தான்.
♦ ஜூம்மா தொழுகையை உலக  மக்கள், உலகம் முழுவதும் ஒரே நாளில் எப்படி தொழுகின்றார்களோ அது போல் ஈத் பெருநாள் தொழுகையையும் மக்கள் அனைவரும் ஒரே நாளில் தொழ வேண்டும் என்ற சிறு முயற்சிதான்.
♦ பிற மாரக்கத்தை சார்ந்தவர்கள் நமது இஸ்லாமிய மார்க்கத்தைப் பார்த்து மிகவும் ஏளனமாக வசை பாடுகின்றார்கள். இதை பார்க்கும் போது நெஞ்சு வலிக்கிறது, கண்கள் கலங்குகின்றன.
♦ நான் சரியான நாளினை தேர்ந்தெடுத்து அல்லாஹ்வை பெருமை படுத்தும் விதமாக ஈத் தொழுகை தொழுகின்றேன். என்னுடைய தாயாரோ தவறான நாளில் அல்லாஹ் பெருமை படுத்துவதாக நினைத்து, சிறுமை படுத்தி ஈத் தொழுகை தொழுவதைப் பார்த்து நெஞ்சம் பதருகிறது.
♦ அல்லாஹ்வின் நல்லடியார்களே! நாம் பிறையை பார்ப்பதற்கு முன் பிறை எந்த திசையில் உதிக்கிறது? என்பதை பாரக்க வேண்டும். மேலும் இஸ்லாமிய கால கணக்கின் படி ஒரு  நாளின் துவக்கம் எப்போது? என்றும் தெரிய வேண்டும்.
وَالشَّمْسِ وَضُحٰٮهَا  ۙ‏ 
சூரியன் மீதும், அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக-
(அல்குர்ஆன் : 91:1)
وَالْقَمَرِ اِذَا تَلٰٮهَا  ۙ‏ 
(பின்) அதனைத் தொடர்ந்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக-
(அல்குர்ஆன் : 91:2)
♦ இதில் சூரியனை தொடர்ந்து வரும் சந்திரன் மீது சத்தியமாக என்று வசனம் கூறுகின்றது. இதில் சூரியனை தொடர்ந்துதான் சந்திரன் வருகிறது என்பது நமக்கு தெளிவாக விளங்குகின்றது. சூரியன் எந்த திசையில் உதிக்கின்றது? கிழக்கு திசையில் உதிக்கின்றது. சூரியனை பின் தொடர்ந்து வரும் சந்திரனும் எந்த திசையில் உதிக்க வேண்டும்? கிழக்கு திசையில்தான் உதிக்க வேண்டும்.
இப்போது சந்திரன்(பிறை) கிழக்கு திசையில்தான் உதிக்கிறது என்பது நமக்கு தெளிவாக தெரிகின்றது.
♦ சந்திரனை (பிறையை) எந்த நேரத்தில் நாம் வானில் பார்க்க வேண்டும் என்பதினை பார்ப்போம். அதாவது ஒரு நாளின் துவக்கம் எப்போது என்று பார்ப்போம்.                                       لَا الشَّمْسُ يَنْبَغِىْ لَهَاۤ اَنْ تُدْرِكَ الْقَمَرَ وَلَا الَّيْلُ سَابِقُ النَّهَارِ‌ وَكُلٌّ فِىْ فَلَكٍ يَّسْبَحُوْنَ‏ 
சூரியன் சந்திரனை (நெருங்கிப்) பிடிக்க முடியாது; இரவு பகலை முந்தமுடியாது. இவ்வாறே எல்லாம் (தம்) வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன.
(அல்குர்ஆன் : 36:40)
♦ இதில் இரவு பகலை முந்த முடியாது என்று வசனம் வருகிறது அப்படியென்றால் ஒருநாளில் முந்திக் கொள்வது பகலா? இரவா? பகல்தான் முந்திக் கொள்கிறது. அப்படியென்றால் ஒரு நாளின் துவக்கம பஜ்ர் தான்.
♦ அல்லாஹ் சூரியனையும், சந்திரனையும் காலக் கணக்கினை அறிவதற்காக படைத்துள்ளேன் என்கிறான்.
فَالِقُ الْاِصْبَاحِ‌ وَ جَعَلَ الَّيْلَ سَكَنًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ حُسْبَانًا‌  ذٰلِكَ تَقْدِيْرُ الْعَزِيْزِ الْعَلِيْمِ‏ 
அவனே பொழுது விடியச் செய்பவன்; (நீங்கள் களைப்பாறி) அமைதிபெற அவனே இரவையும் காலக் கணக்கினை அறிவதற்காகச் சூரியனையும், சந்திரனையும் உண்டாக்கினான் - இவையாவும் வல்லமையில் மிகைத்தோனும், எல்லாம் அறிந்தோனுமாகிய (இறைவனின்) ஏற்பாடாகும்.
(அல்குர்ஆன் : 6:96)
♦يَسْـــَٔلُوْنَكَ عَنِ الْاَهِلَّةِ ‌ قُلْ هِىَ مَوَاقِيْتُ لِلنَّاسِ وَالْحَجِّ  وَلَيْسَ الْبِرُّ بِاَنْ تَاْتُوا الْبُيُوْتَ مِنْ ظُهُوْرِهَا وَلٰـكِنَّ الْبِرَّ مَنِ اتَّقٰى‌ وَاْتُوا الْبُيُوْتَ مِنْ اَبْوَابِهَا وَاتَّقُوا اللّٰهَ لَعَلَّکُمْ تُفْلِحُوْنَ‏‏‏ 
(நபியே! தேய்ந்து, வளரும்) பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்: “அவை மக்களுக்குக் காலம் காட்டுபவையாகவும், ஹஜ்ஜையும் அறிவிப்பவையாகவும் உள்ளன. (முஃமின்களே! ஹஜ்ஜை நிறைவேற்றிய பிறகு உங்கள்) வீடுகளுக்குள் மேற்புறமாக வருவதில் புண்ணியம் (எதுவும் வந்து விடுவது) இல்லை; ஆனால் இறைவனுக்கு அஞ்சி நற்செயல் புரிவோரே புண்ணியமுடையயோராவர்; எனவே வீடுகளுக்குள் (முறையான)வாசல்கள் வழியாகவே செல்லுங்கள்; நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அல்லாஹ்வை, அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.
(அல்குர்ஆன் : 2:189)
♦ இதில் தேயந்து வளரும் பிறையை பார்ப்பது, பிறை உதிக்கும் முன் வாசலாக கிழக்கு திசையையும், பிறை மறையக்கூடியதாக பின் வாசலாக மேற்கு திசையையும் சிந்திக்கும் வெளிப்பாடாக குறிப்பிடுகிறான். பிறையை கிழக்கு திசையில் பாரப்பதுதான் புண்ணியம், மேற்கு திசையில் பார்ப்பதால் ஒரு புண்ணியமும் இல்லை என்பதினையும் அல்லாஹ் மிகத் தெளிவாக நமக்கு விளக்குகிறான்.
هُوَ الَّذِىْ جَعَلَ الشَّمْسَ ضِيَآءً وَّالْقَمَرَ نُوْرًا وَّقَدَّرَهٗ مَنَازِلَ لِتَعْلَمُوْا عَدَدَ السِّنِيْنَ وَالْحِسَابَ‌ مَا خَلَقَ اللّٰهُ ذٰلِكَ اِلَّا بِالْحَـقِّ‌ يُفَصِّلُ الْاٰيٰتِ لِقَوْمٍ يَّعْلَمُوْنَ‏ 
அவன்தான் சூரியனைச் (சுடர்விடும்) பிரகாசமாகவும், சந்திரனை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்; அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை - அவன் (இவ்வாறு) அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவரிக்கின்றான்.
(அல்குர்ஆன் : 10:5)
♦ எந்த பிறையை பார்ப்பது என்பதினை புகாரி புத்தகத்தின் மூலம் அல்லாஹ்வின் தூதர் கூறியதாக உள்ள செய்தியினை பார்ப்போம்.
♦ பிறை பார்க்காமல் நோன்பு பிடிக்காதீர்கள். பிறை பார்க்காமல் நோன்பை விடாதீர்கள். பிறை மறைக்கப்பட்டால் கணக்கிட்டு பூர்த்தியாக ஆக்கிக் கொள்ளுங்கள். புஹாரி 1906.
♦ இதில் நாம் தெளிவாக சிந்திக்க வேண்டும். பிறை மறைக்கப்பட்டால் பிறை 29,30 ஆக கணக்கிட்டு பூர்த்தியாக்க முடியுமா? 1 ஆம் பிறையை கணக்கில் வைத்து பூர்த்தியாக்க முடியுமா? பிறை 29,30 தைத்தான் நாம் பூர்த்தியாக்க முடியும். இதன் மூலம் நாம் விளங்கி கொள்வது என்னவென்றால் ரசூல் பார்க்கச் சொன்னது கடைசி பிறையைத்தான். கடைசிப் பிறையைப் பாரத்தால் நாம் முதல் பிறை எப்போது வரும் என்பதை எளிதில் கணக்கிட முடியும்.
♦ அல்லாஹ் குர்ஆனில் எந்த பிறையை பாரக்கச் சொல்கிறான் என்பதைப் பார்ப்போம்.
وَالْقَمَرَ قَدَّرْنٰهُ مَنَازِلَ حَتّٰى عَادَ كَالْعُرْجُوْنِ الْقَدِيْمِ‏ 
இன்னும் (உலர்ந்த வளைந்த) பழைய பேரீத்த மட்டையைப் போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை (தங்குமிடங்களை) ஏற்படுத்தியிருக்கின்றோம்.
(அல்குர்ஆன் : 36:39)
♦ இந்த வசனத்தில் அல்லாஹ் பிறையின் கடைசி வடிவத்தை (shape) குறிப்பிட்டுள்ளான். இதை அரபியில் உர்ஜூனுல் கதீம் என்பர். இந்த கடைசிப் பிறையை நாம் எப்படி பார்ப்பது? கண்டுபிடிப்பது?
♦ நாம் மாதத்தின் தேய் பிறையாகிய 22ஆம் பிறையிலிருந்து , பஜ்ரு தொழுகை தொழுது முடித்தவுடன் ஒரு குறப்பிட்ட இடத்தில், ஒரு குறிப்பிட்ட நேரத்தில், வானத்தில் கிழக்கி திசை நோக்கிப் பார்த்தோமானால் பிறை தெரியும். தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் பார்த்து வந்தோமானால் பிறையின் கடைசி நிலை, அதாவது கண்ணுக்கு தெரியும் கடைசிப் பிறையை பஜ்ரு தொழுகைக்கு பிறகு, சூரிய உதயத்திற்கு முன் கிழக்கு திசையின் அடி வானத்தில் கடைசிப் பிறையை காணலாம்.
♦ கடைசிப் பிறையை அடி வானில் நாம் கண்டவுடன் எளிதில் கணித்து விடலாம். அடுத்த நாள் நமக்கு பிறை தெரியாது என்று.
♦ நாம் தினமும் கண்களால் பார்த்து வந்த பிறை முழுவதுமாக உலகிற்கு மறைக்கப்படும். இந்த நாளினைத்தான் அமாவாசை, New Moon, CONJUNCTION DAY, அரபியில் கும்மா என்றும் அழைக்கின்றனர்.
♦ இந்த நாளைத்தான் ரசூலும் மறைக்கப்பட்டால் பூரத்தியாக்கி கணக்கிட்டுக் கொள்ளுங்கள் என்கிறார்.
♦இந்த மறைக்கப்பட்ட நாளாகிய (அமாவாசை) க்கு அடுத்த நாள் , அடுத்த மாதத்தின் 1 ஆம் பிறை இயற்கையாகவே காலக் கணக்கினால் ஆரம்பமாகி விடுகின்றது.
♦இந்த முறையில் நாம் பிறை பார்ப்பதே மிகவும் சிறந்த முறையாகும்.
♦ முஹம்மது நபி அவர்கள் நமக்கு கற்று தந்த முறையும் இதுதான்.
♦ இந்த முறையை பின்பற்றினால் உலகம் முழுவதும் முஸ்லிம் மக்கள் எப்படி ஜூம்மா தொழுகையை ஒரே நாளில் தொழுகின்றார்களோ அதே போல் ஈத் பெருநாள் தொழுகையையும் ஒரே நாளில் உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம் மக்கள் தொழலாம்.
♦ ஒருவேளை நாம் இந்த பிறை பார்க்கும் முறையை தவறவிட்டால் பின் விளைவுகள் இப்படித்தான் இருக்கும்.
♦ ஷவ்வால் முதல் பிறை 05-07-2016 செவ்வாய் அன்றுதான். இந்த நாளில் தான் அல்லாஹ்வை நாம் பெருமை படுத்தும் விதமாக ஈத் தொழுகை தொழுவது சரியானது ஆனது, சிறந்ததும் ஆகும்.
♦ இதற்கு மாற்றமாக நேற்று 2ஆம் பிறையிலும் (06-07-2016), 3ஆம் பிறையாகிய (07-07-2016) இன்றும் ஈத் தொழுகையை மக்கள் தொழுகின்றார்கள்.
♦ மாதங்களை முன் பின் ஆக்குவதை அல்லாஹ் மிகப் பெரிய குஃப்ர் (நிராகரிப்பை) அதிகப்படுத்துகிறது என்கிறான்.
اِنَّمَا النَّسِىْٓءُ زِيَادَةٌ فِى الْكُفْرِ‌ يُضَلُّ بِهِ الَّذِيْنَ كَفَرُوْا يُحِلُّوْنَهٗ عَامًا وَّيُحَرِّمُوْنَهٗ عَامًا لِّيُوَاطِــُٔــوْا عِدَّةَ مَا حَرَّمَ اللّٰهُ فَيُحِلُّوْا مَا حَرَّمَ اللّٰهُ‌  زُيِّنَ لَهُمْ سُوْۤءُ اَعْمَالِهِمْ‌  وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الْـكٰفِرِيْنَ 
மாதங்களை அவர்கள் தங்கள் விருப்பப்படி முன்னும் பின்னும் ஆக்குவதெல்லாம் குஃப்ரை (நிராகரிப்பை)யே அதிகப்படுத்துகிறது; இதனால் நிராகரிப்பவர்களே வழி கெடுக்கப் படுகின்றனர். ஏனெனில் ஒரு வருடத்தில் அதை அனுமதிக்கப் பட்டதாகக் கொள்கிறார்கள். மற்றொரு வருடத்தில் அதைத் தடுத்து விடுகின்றனர். இதற்கு காரணம் (தாங்கள் தடுத்துள்ள மாதங்களின் எண்ணிக்கையை) அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கைக்குச் சரியாக்கி, அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களை தாங்கள் ஆகுமாக்கிக் கொள்வதற்காகத்தான். அவர்களின் (இத்)தீச்செயல்கள் அவர்களுக்கு (ஷைத்தானால்) அழகாக்கப்பட்டுவிட்டன; அல்லாஹ், காஃபிர்கள் கூட்டத்தை நேர் வழியில் செலுத்த மாட்டான்.
(அல்குர்ஆன் : 9:37)
♦ அல்லாஹவின் அத்தாட்சிகளை நிராகரிப்பவர்களுக்கு கேடுதான். மேலும் அவர்கள் நரகவாசிகளே!
اِنَّ فِى اخْتِلَافِ الَّيْلِ وَالنَّهَارِ وَمَا خَلَقَ اللّٰهُ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ لَاٰيٰتٍ لِّـقَوْمٍ يَّتَّقُوْنَ‏ 
நிச்சயமாக இரவும், பகலும் (ஒன்றன் பின் ஒன்றாக) மாறி வருவதிலும், வானங்களிலும், பூமியிலும் அல்லாஹ் படைத்துள்ள (அனைத்)திலும் பயபக்தியுள்ள மக்களுக்கு (நிரம்ப) அத்தாட்சிகள் இருக்கின்றன.
(அல்குர்ஆன் : 10:6)
اِنَّ الَّذِيْنَ لَا يَرْجُوْنَ لِقَآءَنَا وَرَضُوْا بِالْحَيٰوةِ الدُّنْيَا وَاطْمَاَنُّوْا بِهَا وَالَّذِيْنَ هُمْ عَنْ اٰيٰتِنَا غٰفِلُوْنَۙ‏ 
நிச்சயமாக எவர்கள் நம்மைச் சந்திப்பதை(ச் சிறிதும்) நம்பாது, இவ்வுலக வாழ்க்கையை (மிகவும்) விரும்பி, அதில் திருப்தியடைந்து கொண்டும் இன்னும் எவர்கள் நம் வசனங்களைப் புறக்கணித்துக் கொண்டும் இருக்கிறார்களோ -
(அல்குர்ஆன் : 10:7)
اُولٰٓٮِٕكَ مَاْوٰٮهُمُ النَّارُ بِمَا كَانُوْا يَكْسِبُوْنَ‏ 
அவர்கள் சம்பாதித்த (தீமைகளின்) காரணமாக அவர்கள் தங்குமிடம் நரகம் தான்.
(அல்குர்ஆன் : 10:8)
♦ அல் குர்ஆனை பொருள் உணர்ந்து படிப்பீர்! சிந்திப்பீர்! செயல்படுவீர்! பரப்புவீர்!


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.