அபுதாவூது வெளியிடுவதாக எத்தனைக் காலமாக ஏமாற்றி வருகிறார்கள்

தவ்ஹீதின் பெயரால் இன்னும் எத்தனைக் காலந்தான் ஏமாற்றுவார்கள் இந்த நாட்டிலே.

முகவை அப்பாஸ் அவா்களின் கிடுக்குப் பிடி கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறுகிறார்  பீ.ஜை.னுல் ஆபிதீன். கல்விச் சங்கத்தை லட்டா் பேடு இயக்கம் என்று  விமா்சித்துள்ளார். லட்டா் பேடு இயக்கம் என்றாலே அது மக்கள் இல்லாத ஏமாற்று இயக்கம் . சந்தா்ப்பங்களை பயன்படுத்தி செல்வந்தா்களிடமும் அரசியல்வாதிகளிடமும் பணம் பறிக்கும் இயக்கம் என்றுதான் பொருள். அப்படிப்பட்ட ஏமாற்று இயக்கதின் பெயரால் பீ.ஜை.னுல் ஆபிதீன் மொழி பெயா்த்த திர்மிதியை வெளியிட வைத்ததன் நோக்கம் என்ன?

சென்னையில் தொழில் அதிபராக இருக்கும்  கீழக்கரையைச் சார்ந்த செல்வந்தா் ஒருவா்  வெளியிடுவதற்காகத்தான் பீ.ஜை.னுல் ஆபிதீன் திர்மிதியை மொழி பெயா்த்தார். இந்த தகவலை  2000இல் அவரது  வீட்டில் வைத்து  அவா்தான் என்னிடம் கூறினார். திர்மிதியை  மொழி  பெயா்த்த பின் கீழக்கரை செல்வந்தா் தர இருக்கும் ராயல்டியை நம்பித்தான் அல்ஜன்னத்தில் ரூபாய் 25 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார்.   இப்பொழுது பீ.ஜை.னுல் ஆபிதீன்அவா்களே சொந்தமாக வெளியிட இருந்ததாக கதை விட்டுள்ளார். இந்த கதை எதற்கு?

பீ.ஜை.னுல் ஆபிதீன் அவா்களால் இன்று லட்டா் பேடு இயக்கம் என்று விமா்சிக்கப்படும் ஏமாற்று இயக்கதின் பெயரால் ஏன் திர்மிதியை வெளியிட வைத்தார். அதன் நோக்கம் என்ன? கீழக்கரை செல்வந்தா் தர இருந்த  ராயல்டியை விட கூடுதலான ராயல்டியை  ஹாமித் பக்ரியும் ஸைபுல்லாஹ்வும் தந்தார்களா?  என்ற கேள்விகளிலிருந்தெல்லாம் தப்பிக்க பெரிய கதையை அளந்து விட்டுள்ளார்.
பீ.ஜை.னுல் ஆபிதீன் ஆலோசனைப்படிதான் கல்விச் சங்கம் செயல்பட்டது. லுஹா மொழி பெயா்ப்பில் அபூதாவூது வெளியிட ஷேர்- திட்டம் அறிவித்தார்கள்.

லுஹாவும் பழுலுல் இலாஹியாகிய நானும் நெருங்கிய நண்பா்களாக இருந்த அந்த நேரத்தில்தான் சொன்னேன். லுஹா ஒரு சோம்பேறி ஆயிரத்தி தொள்ளாயிரத்தி ஒன்னுமில்லாத காலத்தில் இருந்து அபூதாவூதை மொழி பெயா்த்துக் கொண்டேதான் இருக்கிறார். எனவே லுஹாவை நம்பி  ஷோ் சேராதீா்கள் என்றேன்.

துபை I.A.C. யில் உள்ளவா்கள் ஷோ் சேரவில்லை. ஷார்ஜாவிலுள்ள I.A.C. யினர் சோ்த்த ஷேரை எனது வற்புறுத்தலால் திரும்பக் கொடுத்தார்கள். அபுதாபியில் ஹபீப்றஹ்மான் தலைமையில் இருந்தவா்கள் லுஹா மொழி பெயா்ப்பார் என்று நம்பி பணத்தைக் கொடுத்தார்கள் ஏமாந்தார்கள்.

அபூதாவூது மொழி பெயர்ப்பு வகைக்கு என்று அட்வான்ஸாக பெருந் தொகை ஒன்று ஷம்சுல் லுஹாவுக்கு கல்விச் சங்கத்தில் இருந்து கொடுக்கப்பட்டதே. அந்த பெருந் தொகையைப் பெற்ற பெருந்தகை மொழி பெயர்த்தாரா? அல்லது அந்த மவுலவி வீடு முடிக்கும் வகைக்கு பண முடிப்புக் கொடுக்க அபூதாவூது மொழி பெயர்ப்பு என டிராமா போட்டீர்களா? வருஷம் என்ன ஆயிற்று அபூதாவூது மொழி பெயர்ப்பு எங்கே போயிற்று? என்று நான்தான் பீ.ஜை.னுல் ஆபிதீன் அவா்களுக்கு கடிதம் எழுதினேன். பதிலே இல்லை.

அபுதாவூது மொழி பெயா்த்து தருவதாகக் கூறி கல்விச் சங்க பணத்தை ஆட்டை போட்டவா் லுஹா. அவா்தான் த.த.ஜ. மேலாண்மைக்குழு தலைவா். பீ.ஜை.னுல் ஆபிதீன் அவா்களும் ஷம்சுல் லுஹாவும் சோ்ந்து அபுதாவூது வெளியிடுவதாக எத்தனைக் காலமாக ஏமாற்றி வருகிறார்கள் பாருங்கள். இதோ பீ.ஜை.னுல் ஆபிதீன் அவா்கள் அபுதாவூது விஷமாக 1990இல் கைப்பட எழுதிய கடிதங்கள். முரண்பாடுகளை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.




தவ்ஹீதின் பெயரால் இன்னும் எத்தனைக் காலந்தான் ஏமாற்றுவார்கள் இந்த நாட்டிலே.
தமிழ் நாட்டிலே .
சத்தியம் தவறாத உத்தமா் போலவே நடிக்குறா.
சமயம் பார்த்து கொள்ளை அடிக்கிறா.

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.