சத்தியம் செய்து மறுங்கள் அடுத்த மேட்டருக்கு போவோம்.

அன்சாரி அவா்களே கேள்வி கேட்டதும் ஓடி போனீர்கள், திசை திருப்பினீா்கள், காணாமல் போனீா்கள் இவையெல்லாம் யாருக்குப் பொருந்தும். நியாயவான்கள் அறிவார்கள்.
உங்கள் கூற்றுக்களையெல்லாம் குழுமங்களில் வெளியிட்டார்கள். அதற்கான எனது பதிலை ஏனோ வெளியிடவில்லை. அதனால் எனது பிளாக்கரில் பதிந்து அனுப்பினேன். இதுவரை பதில் இல்லை. எனக்கு எதிரான உங்கள் கூற்றுக்களை குழுமத்தில் இப்பொழுது வெளியிட்டுள்ளார்கள். எனது பதிலை வெளியிடுவார்கள் என நம்பி எனது பதிலை உங்கள்  குழுமத்துக்கு அனுப்பினேன் வெளியிடவில்லை.
மொழி பெயா்க்கப்படும் நுாலின் பெயரை மொழி பெயா்ப்புகளை அதன் மூல மொழியில் வெளியிடுவது தேவையான ஒன்று.
அணிந்துரை என்பது அரபி தெரியாத எந்த தமிழ் மக்களுக்காக எழுதப்பட்டதோ அந்த தமிழ் மக்கள் அறிய வேண்டிய விஷயம் அது.
அந்த அணிந்துரையை அரபியில் வெளியிட்டுள்ளதன் நோக்கம் என்ன.
தமிழ் எழுத பேச தெரிந்தவா்களிடம் தமிழில் எழுதி வாங்காமல் அரபியில் எழுதி வாங்கியுள்ளதன் நோக்கம் என்ன.

அதிலும் குறிப்பாக நிதி உதவி செய்யும் அரபு நாட்டு நிறுவனங்களுடன் தொடர்பு உடையவா்களிடம்  எழுதி வாங்கியுள்ளதன் நோக்கம் என்ன.
சவூதியின் கிளைகளாக இயங்கும் இலங்கையில் உள்ள அதாவது வெளிநாட்டு நிறுவனங்களிடம் போய் எழுதி வாங்கியுள்ளதன் நோக்கம் என்ன.

வெளிநாட்டவா்களிடம் இருந்தும், வெளிநாட்டு நிறுவனங்களிடம்   இருந்தும், வெளிநாட்டு அரசுகளிடம் இருந்தும்  நிதி பெற வேண்டும் என்ற நோக்கம்தான். இதை நானே அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து எழுதி விட்டேன்.
எனவே மவுலவி ஹாமித் பக்ரி மன்பஈ, மவுலவி சைபுல்லாஹாஜா பைஜி போன்றவா்களின் சாட்சியங்கள் தேவை இல்லை. அவா்கள் சாட்சி அளித்தால் ஏற்க மாட்டீா்கள். தலித் பிரமுகா் முருகன் படத்திறப்பு நகழ்ச்சியில் பீ.ஜை. கலந்து கொண்டார் என்பதற்கு மதுரை ரபீக் அளித்த சாட்சியத்தை  வேலிக்கு ஓணான் சாட்சியா என்றது உங்கள் தலைமை.
எனவே கல்விச் சங்கத்தில் அபிடவிட் பணி செய்ததாக கூறப்பட்ட லுஹாவை சத்தியம் செய்து மறுக்கச் சொல்லுங்கள். 

பழைய விஷயங்களை நீங்கள் எழுதியுள்ளதால் அவற்றில் சிலவற்றை மீண்டும் உங்கள் நினைவுக்கு கொண்டு வருகிறேன்.
முபாஹலா சம்பந்தமாக நான் அனுப்பிய பீ.ஜை. கடிதத்தையே எனக்கு எதிரான ஆதாரம் என்று வாதிட்டீா்கள். அதை மறுத்து விளக்கம் கூறி ஜவாஹிருல்லாஹ் அவா்கள் முபாஹலாவுக்கு அழைக்கவில்லை என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து மறுத்தேன்.

ஆனால் பீ.ஜை. கடிதத்தில் உள்ள பீ.ஜை.யின் கூற்றை உண்மைபடுத்திட த.த.ஜ.வைச் சார்ந்த அன்சாரியாகிய தாங்கள் இதுவரை அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து மறுக்கவில்லையே ஏன்? பீ.ஜை. மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?
முஸ்லிம் பெண்களை கண்காணிக்க பல ஜமாஅத்களில் தெருவுக்கு இரண்டு கேமரா வைத்துள்ளார்கள் என்று பீ.ஜை. பேசியுள்ளது இட்டுக்கட்டிய பொய்யாகும். மற்றும் சுனாமிமோசடி உட்பட பல விஷயங்களை பட்டியலிட்டு பீ.ஜை. கூற்று மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு கூறுங்கள் என்றேன்.

பீ.ஜை.யின் கூற்றை உண்மைபடுத்திட த.த.ஜ.வைச் சார்ந்த அன்சாரியாகிய தாங்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யவில்லை. பதில் சொல்லப்பட்ட கேள்விகளையே திரும்பவும் எழுதி திசை திருப்பினீா்கள்.

உன்மையை பேசுவோம் என்று ஜவாகிருல்லாஹ் அவர்கள் பேசி வெளியிட்ட சிடியில் பீ.ஜை. யை முபாஹலா செய்ய அழைக்கிறாரே என்று எழுதிய அன்சாரி அவா்களே உங்கள் கூற்று உண்மையானால் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு கூறுங்கள் என்றோம். முத்துப் பேட்டை அன்சாரியாகிய தாங்கள் உங்கள் கூற்றுக்காகவும் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யவில்லை.
அதுபோல்தான் த.த.ஜ.வைச் சார்ந்த கீழக்கரை நசீருத்தீன் அவா்களும் அவரது கூற்றுக்கும் பீ.ஜை.யின் கூற்றுக்கும் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யவில்லை.

த.த.ஜ.வைச் சார்ந்த பரங்கிப் பேட்டை சாஜிதுா்றஹ்மான் அவா்கள் புதிய முபாஹலாவுக்கு தயாரா என்று கேட்டார். பழுலுல் இலாஹியுடனான முபாஹலாவிலிருந்து பின் வாங்கிவிட்டு பழுலுல் இலாஹி பின் வாங்கி ஓடி விட்டார் என்று பீ.ஜை. உணா்வில் எழுதியதை உண்மைப்படுத்தி சத்தியம் செய்யுங்கள். பிறகு புதிய முபாஹலா பற்றி பேசுவோம் என்றேன். பரங்கிப் பேட்டை சாஜிதுா்றஹ்மான் அவா்கள் பீ.ஜை.யின் கூற்றை உண்மைப்படுத்தி சத்தியம் செய்யவில்லை.
த.த.ஜ. மாநில தலைமையில் உள்ள இரு மவுலவிகள் அல்லாஹ்வின் பள்ளியில் வைத்து பொய் சத்தியம் செய்து பொய் சாட்சி சொல்லியுள்ள விஷயத்தையும் மறுத்து . பரங்கிப் பேட்டை சாஜிதுா்றஹ்மான் அவா்கள் சத்தியம் செய்யவில்லை.
த.த.ஜ.வைச் சார்ந்த ரசூல்மைதீன் என்பவா் லுஹா பீ.ஜைனுல் ஆபிதீன் அவா்கள் மீது கூறிய குற்றச்சாட்டுக்களெல்லாம் நட்பு ரீதியானது என்று வாதம் வைத்தார். பிறகு பீ.ஜை. மீது லுஹா கூறியுள்ள குற்றச்சாட்டுக்களை மறுக்கிறேன் என்றார். லுஹாவிடம் கேட்டுவிட்டுத்தான் மறுக்கிறேன் என்றார். சும்மா மறுத்து விட்டு போவது பொய்யா்களின் செயல். உங்கள் கூற்றையும் லுஹாவின் கூற்றையும் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து மறுங்கள் என்றேன். சத்தியம் செய்யவில்லை.

இப்பொழுது சொல்லுங்கள் கேள்வி கேட்டதும் ஓடி போனீர்கள், திசை திருப்பினீா்கள்,காணாமல் போனீா்கள் இவையெல்லாம் யாருக்குப் பொருந்தும்.

த.த.ஜ.வினருக்கு த.த.ஜ.வின் தலைமை மீது நம்பிக்கை இருந்தால் தாங்கள் உண்மையாளா்கள் என்றால் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்வதில் என்ன தயக்கம்.

நீங்களும் உண்மையாளா் என்றால் த.த.ஜ.வின் தலைமை மீதும் நம்பிக்கை இருந்தால் ஏற்கனவே நான் உங்களுக்கு கூறியுள்ள பதில்களை அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து மறுங்கள். அடுத்த மேட்டருக்கு போவோம்.



Comments

muslim said…
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
உங்கள் பதிவுகள் அருமையாக உள்ளது. பீஜே சம்பந்தமாக கடந்த கால நிகழ்வை படித்து வருகிறேன். பீஜே இரண்டு முகம் கொண்ட நயவஞ்சகர் என்பதை அறியமுடிகிறது. குர்ஆன் ஹதீஸ் தான் மார்க்கம் என வாய்க்கிழிய கூறும் ஒரு பொய்யரை மேலும் அடையாளப்படுத்துங்கள்.

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.