வேலிக்கு ஓணான் சாட்சியா?; அண்ணன் ஜமாஅத்தின் பொதுக்குழு தமாஷ்-3

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...
உணர்வு பத்திரிக்கைக்கு 2 லட்சம் சுருட்டியது எந்தவகை பரிசுத்தம்?

சுனாமிகாசில் 8 மாத காலத்திற்குப் பின் தனது தக்லீத் தம்பிகளுக்கு  ததஜ  பனியன், தொப்பிக்கு போட்டு அழகு பார்க்க 20,000 ரூபாய் சுருட்டியது எந்தவகை பரிசுத்தம்?


ஒரு தவறையும் செய்து விட்டு, அந்த தவறை விட்டும் நாங்கள் தான் தூய்மையனாவர்கள் என்று காட்டுவதில் அண்ணன் ஜமாத்தை மிஞ்ச ஆள் இல்லை. மக்களிடம் காசு வாங்கும் போது சொல்வதை காற்றில் பறக்கவிட்டு கணக்கு காட்டுவதில் கை தேர்ந்தவர்களும் இவர்களே! இவர்கள் காட்டும் கணக்குகள் முடிவானவையா? அல்லது முடிக்கப்படுபவையா? என்பதை பார்பபதற்கு முன்னால் பொதுக்குழு பக்கம் பார்வையை செலுத்துவோம். 


ததஜவை பொருத்தவரை அதிகமான மக்கள் ஆதரிக்கும் ஒரு இயக்கமாக இருக்கின்றது. அதற்கான முக்கிய காரணம், கணக்கு வழக்குகளில் இறைவன் அருளால் இன்றுவரை பிசகாமல் நிற்பதே ஆகும். அந்தவகையில் இந்த ஆண்டுக்கான கணக்கை பொருளாளர் அன்வர்பாஷா வெளியிட்டு விட்டு, இதில் குளறுபடி இருந்தால் தெரிவியுங்கள் என்று தணிக்கைக்குழு தலைவர் எம்.ஐ. சுலைமானிடம் கூற, அவரோ கணக்கு வழக்கு சூப்பர் என்று நற்சான்று வழங்கினார் என்று சொல்கிறது அண்ணன் ஜமாஅத். 

திண்டுக்கல்லில் ஒரு படத்திறப்பு விழா பொதுக்கூட்டத்தில் அண்ணன் கலந்து கொண்டார் என்று ஒரு சாரார் குற்றம் சாட்ட, அதை அண்ணன் நிரூபிக்கத் தயாரா என கூவ, அந்த நிகழ்ச்சியில் அண்ணனோடு பங்கெடுத்த மதுரை ரபீக் என்ற சகோதரர் படத்திறப்பு விழா மேடையில் பீஜே கலந்து கொண்டு உரையாற்றினார் என்று சாட்சியம் கூற, ரபீக் இதஜவில் இருப்பதால் வேலிக்கு ஓணான் சாட்சியா என்று ஒதுக்கித் தள்ளினார் அண்ணன். ஆனால் அன்வர்பாஷாவின் கணக்குக்கு சுலைமான் சாட்சியாம்!

உண்மையில் சூப்பர் தான். நாங்கள் அரசு ஆடிட்டரை அழைத்து வருகிறோம்; அண்ணன் ஜமாஅத் ஐந்தாண்டு கணக்கை காட்டத்தயாரா? என்று சில சகோதரர்கள் கேட்டபோது, நீக்கப்பட்டவர்களுக்கு நாங்கள் கணக்கு காட்டவேண்டியதில்லை என்பதுதான் அண்ணனின் தம்பிகளின் புலம்பலாக இருந்தது. சரி அதெல்லாம் போய் தொலையட்டும். இப்போது நாம கேட்குற சில கணக்குகளை அண்ணன் ஜமாஅத்திற்கு நினைவு படுத்துகிறோம். அதற்கு இந்த உலகமகா பரிசுத்த ஜமாஅத் பதில் சொல்லட்டும். 

ஏழைகளுக்காக வழங்கப்பட்ட பித்ரா நிதியில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு தொகையை சுருட்டி ஜகாத் நிதியில் சேர்ப்பது எந்தவகை பரிசுத்தம்?

ஃபித்ரா தொகையில் மாவட்டங்களுக்கு வழங்கிய 56 ,84 ,600 ஐ முழுமையாக விநியோகிக்க முடியாமல் மாவட்டங்கள் இந்த தொகையிலிருந்து  82 ,067 ஐ மாநிலத்திற்கு திருப்பி அனுப்பி விட்டதாம். அந்த 82 ,067  ரூபாயை மட்டும் மீதி இருப்பாக காட்டிய அண்ணன் ஜமாஅத்,  ஏற்கனவே தலைமையில் மிச்சமான தொகை  82 ,067 மறைத்து விட்டது. அது எங்கே? என்று கேட்டோம். பதில் காணோமே? 

இந்த ஆண்டு பித்ராவில் 
சூளைமேடு;  திண்டிவனம்; சூரமங்கலம்; புத்தன்துறை; மெயின்பஜார்&காந்தல்; திருவல்லிக்கேணி ஆகிய கிளைகளின் கணக்குகளில் அபகரிக்கப்பட்ட வார இதழில் காணப்பட்ட குளறுபடி கடைசிவரை அண்ணனால் சரிசெய்யப் படாமலேயே  பைலை மூடியது எந்தவைகை பரிசுத்தம்?

சுனாமியால் உயிரையும் உடைமையும் இழந்து நிர்கதியாக நின்ற மக்களுக்கு உதவப்போகிறோம் என்று சொல்லி வசூலித்த அண்ணன் ஜமாஅத், அந்த தொகையிலிருந்து 

உணர்வு பத்திரிக்கைக்கு 2 லட்சம் சுருட்டியது எந்தவகை பரிசுத்தம்?

சுனாமிகாசில் 8 மாத காலத்திற்குப் பின் தனது தக்லீத் தம்பிகளுக்கு  ததஜ  பனியன், தொப்பிக்கு போட்டு அழகு பார்க்க 20,000 ரூபாய் சுருட்டியது எந்தவகை பரிசுத்தம்?
எதற்கெடுத்தாலும் வியாக்கியானம் கொடுக்கும் அண்ணன் இந்த கேள்விக்கு மட்டும் கொஞ்சம் மார்க்க அடிப்படையில் பதில் சொல்லி தனது பரிசுத்த ஜமாத்தை தூக்கி நிறுத்தட்டுமே!

அப்படியே அண்ணனுக்கு துணிவிருந்தால், குடந்தை மாநாட்டுக் கணக்கு, டீச்சருக்கு அண்ணன் கணக்குப் பாடம் நடத்திய வல்லம் மாநாட்டுக் கணக்கு, தீவுத்திடல் மாநாட்டுக் கணக்கு, பாபர் மஸ்ஜித்துக்காக ஆறுமாதம் கழித்து ஆற அமர சென்னையிலும் மதுரையிலும் நடத்திய முற்றுகை வரவு-செலவு கணக்கு ஆகியவைகளை பகிரங்கமாக அபகரிக்கப்பட்ட வார இதழில் வெளியிட்டு தனது ஜமாத்தின் தூய்மையை இன்னும் பலப்படுத்தட்டுமே!

பொதுக்குழு தமாஷ் தொடரும் ஓரிறை நாடினால்.

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.