இன்று முபாஹலாவுக்கு எந்த ஒப்பந்தமும் தேவை இல்லை.

அன்று முபாஹலாவுக்கும் ஒப்பந்தம் தேவை.

கண்ணியத்திற்குரிய அப்துல் ஹலீம் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. சென்னை, பெரம்பலூர், நக்கசேலம், கும்பகோணம், சோழபுரம் என துபை நண்பர்களை சந்திக்கச் சென்று விட்டு 22.7.07 அன்றுதான் ஊர் வந்தேன். முபாஹ(ப)லா??? என்ற தலைப்பிட்டு ரஸ்மி எழுதியுள்ளதை பார்வேடு செய்திருந்தீர்கள்.
இன்று முபாஹலாவுக்கு எந்த ஒப்பந்தமும் தேவை இல்லை.
பி.ஜெ. களவாடிய உணர்வு 2007 மே 4-10 இதழ் பக்கம் 17இல் முஜிபுர்றஹ்மான் உமரி அவர்களது முபாஹலா அழைப்பு சம்பந்தமாக விருதுநகர் சிக்கந்தர் என்பவரது கேள்வி உள்ளது. அதற்கு பதில் அளித்துள்ள திருவளத்தான் பி.ஜெ. (இன்று) முபாஹலாவுக்கு எந்த ஒப்பந்தமும் தேவை இல்லை என்று எழுதி உள்ளார்.
அன்று முபாஹலாவுக்கும் ஒப்பந்தம் தேவை.
அதே திருவளத்தான் பி.ஜெ.யுடன் முபாஹலாவுக்கு நாம் தயார் என்றோம். அப்பொழுது முபாஹலாவுக்கு வாருங்கள் என்று அழைக்கவில்லை. முபாஹலாவுக்கு ஒப்பந்தம் செய்ய வாருங்கள் என்றே எம்மை அழைத்திருந்தார். அதாவது அன்று முபாஹலாவுக்கும் ஒப்பந்தம் தேவை என்று எழுதி இருந்தார். இதை பி.ஜெ. களவாடிய உணர்வு 2005 செப்டம்பர் 9-15 இதழில் பகிரங்க அழைப்பு என்ற தலைப்பில் காணலாம். பி.ஜெ. ஒரு சந்தர்ப்பவாதி. அவரது வாதத் திறமையால் அப்படியும் இப்படியும் எப்படியும் பேசுவார் எழுதுவார் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.
நாடகத்தை நடத்த முடிவு செய்திருந்தனர்.
14.9.2005 அன்று மேலப்பாளையம் பசார் திடலில் டவுசர் கட்சி தலைவரும் முபாஹலா பூச்சாண்டியுமான பி.ஜைனுல் ஆபிதீன் பேசுவதற்காக பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த மேடையில் டவுசர் கட்சியின் சதி திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன்னேற்பாடாக பகிரங்க அழைப்பு, முபாஹலா ஒப்பந்தம் என்ற நாடகத்தை நடத்த முடிவு செய்திருந்தனர்.
நிகழ்சியையே ரத்து செய்து ஓடி விட்டார்கள்.
ஷஷமுஸ்லிம் டிரஸ்டு, முஸ்லிம் மீடியா டிரஸ்டு யாவும் த.மு.மு.க.வுக்குரியது இது பொய்யாக இருக்குமானால் பழுலுல் இலாஹியாகிய என்மீது யா அல்லாஹ் உனது சாபத்தை இறக்கு. உண்மையாக இருந்தால் மோசடி வழியில் உரிமை கொண்டாடிக் கொண்டிருக்கும் பி.ஜே. மீதும் பி.ஜே.யுடனிருக்கும் டிரஸ்டிகள் மீதும் துணை நிற்பவர்கள் (ரஸ்மி போன்றவர்கள்) மீதும் யா அல்லாஹ் உனது லஃனத்தை-சாபத்தை இறக்குவாயாக ஆமீன்|| இது மாதிரி ஒவ்வொரு விஷங்களுக்கும் பிரார்த்தனை செய்ய - முபாஹலா செய்ய ஒப்பந்தம் ஒன்றும் தேவை இல்லை. எனவே 14 ஆம் தேதி பொதுக் கூட்ட மேடைக்கே மனைவி மக்களுடன் வருகிறேன். பி.ஜே. (ரஸ்மி போன்ற) வகையறாக்கள் வரத் தயாரா என்றேன். 14.9.2005 அன்று மேலப்பாளையம் பசார் திடலில் பி.ஜே. பேச இருந்த பொதுக் கூட்ட நிகழ்சியையே ரத்து செய்து ஓடி விட்டார்கள்.
முபாஹலா நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
14-09-05 அன்று மேற்படி ராஜ்மஹாலில் நோன்பு மற்றும் மார்க்கம் சம்பந்தமாக நிகழ்ச்சி மட்டுமே நடைபெறும். முபாஹலா சம்பந்தமாக எவ்வித கருத்துக்களும் இடம் பெறாது என்று உறுதி அளிக்கிறேன். மேற்படி கூட்டத்திற்கு உறுப்பினர் அட்டை உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர் முபாஹலா நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. என்று எழுதி லுஹா கையெழுத்துடன் மேலும் 6 பேர் கையெழுத்திட்டு போலீஸில் கொடுத்தனர். இந்த கையெழுத்து ஆதாரங்களுடன் எல்லா விபரங்களையும் முன்பே வெளியிட்டு விட்டோம். அவை கீழ் காணும் சைட்டில் இன்றும் உள்ளன.

பி.ஜே.யின் முபாஹலா அழைப்பு ஒரு பித்தலாட்டமே. 6.9.04http://mdfazlulilahi.blogspot.com/2004/09/blog-post_06.html

பி.ஜே.யை பிடித்து வந்து அவர் கூறியுள்ள குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வைத்து விட்டால்
10 லட்சம் ரூபாய் பரிசு 26.9.04

http://mdfazlulilahi.blogspot.com/2004/09/10.html

ஷம்சுல்லுஹாபாய் அவர்களுக்கு பேட்மாநகரம் எஸ். முஹம்மது பாரூக் 21.11.04
http://mdfazlulilahi.blogspot.com/2004/11/blog-post_21.html

முபாஹலாப் பூச்சாண்டி. 3.12.04
http://mdfazlulilahi.blogspot.com/2004/12/blog-post_03.html

தொடை நடுங்கும் தொண்டியான் பி.ஜே. 4.4.05
http://mdfazlulilahi.blogspot.com/2005/04/blog-post_04.html

பின்னங்கால் பிடரியில் அடிபட பின் வாங்கி ஓடும் 'பி'னாமி பேரன். 5.4.05
hவவி:ஃஃஅனகயணடரடடையாi.டிடழபளிழவ.உழஅஃ2005ஃ04ஃடிடழப-pழளவ_05.hவஅட

பி.ஜே. பிரகடனப்படுத்திவிட்ட மகத்தான உண்மை. 5.5.05
http://mdfazlulilahi.blogspot.com/2004/05/blog-post.html

பி.ஜே, பாக்கர் போன்றோர் பொய்யர்களே என்று நம்பும் இளையான்குடி த.த.ஜ. 7.6.05
http://mdfazlulilahi.blogspot.com/2005/06/blog-post_07.html

பி.ஜே, லுஹா பின்னால் உள்ளவர்களே முபாஹலாவுக்கு அழைத்து வாருங்கள். 8.9.05
http://mdfazlulilahi.blogspot.com/2005/09/blog-post_08.html

அதிகாரிகளின் முன்னிலையில் அனைத்துக்கும் முபாஹலா செய்ய நான் தயார். 12.9.05
http://mdfazlulilahi.blogspot.com/2005_09_01_archive.html

பின் வாங்கிய பித்தலாட்ட பி.ஜே. 18.9.05
http://mdfazlulilahi.blogspot.com/2005/09/blog-post_18.html

போர்ஜரிகள் எதுவும் சொல்வார்கள் எதையும் செய்வார்கள். 19.9.05
http://mdfazlulilahi.blogspot.com/2005/09/blog-post_19.html


நீங்கள் நேசிக்கும் தலைமையை நீர் நம்பினால் கீழ் கண்டவாறு துஆச் செய்யுங்கள். 4.10.05
http://mdfazlulilahi.blogspot.com/2005/10/blog-post_04.html

சுருண்டு விட்டார், சுருட்டு தீர்மானம் கொண்டு வந்த அந்த மவுலவி.
http://mdfazlulilahi.blogspot.com/2005/11/blog-post_23.html

நீங்கள் நியாயவான்கள் இறையச்சமுடைவர்கள் என்றால் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து வாருங்கள்.21.12.05
http://mdfazlulilahi.blogspot.com/2005/12/blog-post_21.html

மீண்டும் முபாஹலா பூச்சாண்டி. 16.3.06
http://mdfazlulilahi.blogspot.com/2006/03/blog-post_16.html

முபாஹலாவிலிருந்து பின் வாங்கி யார் பொய்யை பரப்புகிறார்களோ அவர்கள் மீது உன் சாபத்தை இறக்குவாயாக.
அந்த சி.டி.யை ரஸ்மி பெற்றுத் தரட்டும் பார்ப்போம்.
இத்தனைக்குப் பிறகும்தான் திருவாளர் ரஸ்மி ஒருகற்பணையில் முபாஹலா நடக்கிறது... கற்பனையைக் கட்டியுள்ளார். 10-10-2005 அன்று பி.ஜெ. வளைகுடா நாடுகளுக்கு ஒரு மெயில் அனுப்பினார். அதில் மேலப்பாளையம் முபாஹலா சம்பந்தமாக சி.டி. உள்ளதாக குறிப்பிட்டு வளைகுடா மக்களை ஏமாற்றி உள்ளார். பலர் போய் கேட்டும் இதுவரை பி.ஜெ. குறிப்பிட்டுள்ள சி.டி. கொடுக்கவில்லை. மக்கள் மறதியை மூலதனமாகப் பயன்படுத்தி தவ்ஹீத் தொழில் செய்து வருபவர் பி.ஜெ. என்பதற்கு இந்த முபாஹலா சி.டி. ஒரு ஆதாரம். இதில் பி.ஜெ.யும் ரஸ்மியும் உண்மையாளர்களாக இருந்தால் அந்த சி.டி.யை ரஸ்மி பெற்றுத் தரட்டும் பார்ப்போம்.

சத்திய நேசன், இறைநேசன் போன்று திரைக்குப் பின்னால் ஒளிகிறது என்பது பி.ஜெ.யிஸம். அந்த புத்தி மொட்டைக் கடித பேர்வழிகளான பி.ஜெ.க்கும் பி.ஜெ.யானிகளுக்கும்தான் உண்டு என்பதை பல முறை நிரூபித்திருக்கிறோம்.
முஸ்லிம்களிடம் ஊடுறுவல் செய்து விடக் கூடாது.
நான் சொன்னதும் இலக்கம் பற்றிய கதையல்ல. பாக்கரின் இணக்கம் பற்றிய கதைதான்... ஒருவருக்கு ஒரு ஜமாஅத்தில் எவ்வளவு காலம் தண்டனை கொடுப்பது என்பதை நீங்கள் தீர்மாணிக்க நீங்கள் அந்த ஜமாஅத்தில் இருக்க வேண்டும் என்றும் ரஸ்மி எழுதியுள்ளார். அதாவது பாக்கர் மீதான குற்றச்சாட்டை ரஸ்மி ஒப்புக் கொண்டுள்ளார். இந்த மாதிரி கேடுகெட்டவர்களை அணுசரித்துப் போவதும் அவர்களை தங்கள் வீட்டு பெண்களுடன் பழக விடுவதும்தான் த.த.ஜ.வினரின் தலையெழுத்து. இவர்கள் இஸ்லாமியர்கள் என்ற வேடத்தில் முஸ்லிம்களிடம் ஊடுறுவல் செய்து விடக் கூடாது என்பதற்காகவே முஸ்லிம்களிடம் அடையாளம் காட்டுகிறோம்.
பி.ஜெ. மாதிரி பொய்யை நிலை நாட்ட முயற்சிக்க மாட்டோம்.
ஷ'வழக்குப் போடப்படும் என்றும் ரஸ்மி மிரட்டியுள்ளார். என்ற வாசகத்தை மு.பஸ்லுல் இலாஹி எழுதியது ரஸ்மியாகிய எனது விமர்சன வாசகத்தில் இருந்தே, என்று முபாஹலா செய்ய மு.பஸ்லுல் இலாஹி அவர்கள் தயாராக வேண்டும் என்று எழுதி உள்ளார். வழக்குப் போடப்படும் என்று எழுதியது நான் இல்லை என ரஸ்மி மறுத்து பிறகும் உறுதி செய்தால் முபாஹலா அழைப்பு நியாயம் எனலாம். வழக்குப் போடப்படும் என்பது 6ஆவது விமர்சனமாக உள்ளது. அது ரஸ்மி உடையது என விளங்கி விட்டோம். ரஸ்மியாகிய எனது விமர்சன வாசகத்தில் இருந்தே என்று மறுத்துள்ளதால் அதை ஏற்கிறோம். பி.ஜெ. மாதிரி பொய்யை நிலை நாட்ட முயற்சிக்க மாட்டோம்.
அல்லாஹ்வின் சாபத்தை முன்னிறுத்தி சொல்லட்டும்.
முபாஹலாவுக்கு தயாராக பி.ஜெ. தனது மனைவி மக்களுடன் மேலப்பாளையத்திற்கு வந்து காத்திருந்தார் என்பது உண்மையாக இருக்குமானால் இதில் பொய்யரான பஸ்லுல் இலாஹியை அல்லாஹ் நாசமாக்குவானாக. முபாஹலாவுக்கு தயாராக மனைவி மக்களுடன் மேலப்பாளையத்திற்கு வந்து பி.ஜெ. காத்திருந்தார் என்பது பொய்யாக இருக்குமானால் இதை உண்மை போல் காட்ட இனியும் ரஸ்மி போன்றவர்கள் முயன்றால் அல்லாஹ்வின் சாபத்தை முன்னிறுத்தி சொல்லட்டும். வஸ்ஸலாம்.
6.9.04இல் மதுக்கூர் ஐயூப் என்பவருக்கு எழுதியதை ரஸ்மிக்கு அனுப்புகிறோம். ஐயூப் என சவால் விட்டுள்ள இடங்களில் ரஸ்மி என அமைத்து படித்து ரஸ்மி பதில் தரட்டும்

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.