ஹஜ்ரத்தை அழைத்தால் தனிமனித வழிபாடு. அண்ணனை அழைத்தால்? சுன்னத் ஜமாஅத் செய்தால் பித்அத் தவ்ஹீதி செய்தால்?

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

பித்அத்கள் அனைத்தும் வழி கேடுகள். வழி கேடுகள் அனைத்தும் நரகில் கொண்டு போய் சேர்க்கும். பித்அத்காரனின் அமல்கள் அழிந்து போகும். போன்ற ஹதீஸ்களை எடுத்துக் கூறி சுன்னத் ஜமாஅத்தினர் செய்து வரும் பித்அத்களை செய்யக் கூடாது என்று கூறி வருகிறோம்.

பித்அத்கள் நடக்கும் இடம் அல்லாஹ்வின் பள்ளிவாசலாக இருந்தால் அந்த அல்லாஹ்வின் பள்ளிவாசலையே புறக்கணிக்க வேண்டும் என்று கூறி அல்லாஹ்வின் பள்ளிவாசல்களையே புறக்கணிக்கக் கூடியவர்கள் பெருகி விட்ட காலம் இது. அல்லாஹ்வின் பள்ளிவாசல்களையே புறக்கணிக்கக் கூடியவர்கள் தங்களுக்கு வைத்துக் கொண்ட பெயர்தான் தவ்ஹீது ஜமாஅத்.

கடவுளை வணங்கினால் அங்கு காணிக்கையும் செலுத்த வேண்டும்.

இப்படி தங்களுக்கு தாங்களே தவ்ஹீதுவாதிகள் என பெயர் சூட்டிக் கொண்ட அவர்களே அல்லாஹ்வின் பள்ளிவாசல்களிலே பித்அத்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள். 

தினமும் சுபுஹு தொழுகைக்குப் பிறகு குர்ஆன் (தர்ஜுமா) மொழி பெயர்ப்பு. இஷாவுக்குப் பின் புகாரி தர்ஜுமா மொழி பெயர்ப்பு படிப்பது. 

திருமணங்களை பள்ளிவாசல்களில் வைத்து நடத்துவது. 

கடவுளை வணங்கினால் அங்கு காணிக்கையும் செலுத்த வேண்டும் என்ற சித்தாந்தத்தை ஒழித்த அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் ஜும்ஆவுக்குப் பின் காணிக்கை வசூல் செய்தல். இப்படி எண்ணற்ற பித்அத்களை செய்து வருகிறார்கள்.

இதை நிறுத்தினால் தஃலீம் தொகுப்பு நுழைந்து விடும்.

அல்லாஹ்வோ அவனது தூதரோ காட்டித் தராத செயல்களான இவை பித்அத்கள் தானே என்று ஒரு தவ்ஹீது பள்ளி தலைவரிடம் கேட்டோம். அதற்கு அந்த தவ்ஹீது பள்ளி தலைவர்? சொன்ன பதில், 

"நான் சொல்லியாச்சு மற்ற பொறுப்பில் உள்ள (இன்னார் இன்னார் என பெயர் கூறி) அவர்களெல்லாம் கேட்க மாட்டேன்கிறார்கள். அணுசரித்துதான் போகணும் என்கிறார்கள். குர்ஆன் ஹதீஸ்கள் தானே படிக்கிறோம். குர்ஆன் ஹதீஸ்கள் படிப்பது நல்லதுதானே. இதை நிறுத்தினால் தஃலீம் தொகுப்பு நுழைந்து விடும் என்கின்றனர்" என்றார்.

குர்ஆன் ஓதுவதும் ஸலவாத்து சொல்வதும் நல்ல காரியம்தானே.

நாமாக உண்டு பண்ணுபவை அனைத்தும் பித்அத்கள் என்று நாம் சொன்னபொழுது மாற்றுக் கருத்துடைய சுன்னத் ஜமாஅத் மவுலவிகள் சமுதாயத்தை அணுசரித்துதான் போகணும் என்றார்கள். 

பித்அத்தே ஸஹனா - நல்ல பித்அத். பித்அத்தே ஸய்யா - கெட்ட பித்அத் என இரண்டாக பிரித்தார்கள். இறந்தவர்களுக்கு குர்ஆன்தானே ஓதுகிறார்கள். பாங்குக்கு முன் ஸலவாத்துதானே சொல்கிறார்கள். குர்ஆன் ஓதுவதும் ஸலவாத்து சொல்வதும் நல்ல காரியம்தானே என்றார்கள். அதே மாதிரிதானே இந்த தவ்ஹீது பள்ளி நிர்வாகிகள் நிலையும் உள்ளது.

பித்அத் என உணர்ந்ததை நிறுத்துவேன் என்று கூறவில்லை.

நல்லதுதானே என சுன்னத் ஜமாஅத்தினர் சொன்னபொழுது குல்லு பித்அத் ழளாலா - எல்லா புதுமை(பித்அத்)களும் வழி கேடுகள் என்றுதான் ஹதீஸ் உள்ளது வழி கேடுகள் அனைத்தும் நரகில் கொண்டு போய் சேர்க்கும்.. 

அல்லாஹ்வோ அவனது தூதரோ காட்டித் தராத எந்த ஒரு செயலாக இருந்தாலும் நரகில் கொண்டு போய் சேர்க்கும் என்றோம். இது தவ்ஹீது பள்ளி நிர்வாகிகளுக்கு பொருந்தாதா எனக் கேட்டோம். 

அப்பொழுதும் அந்த தவ்ஹீது பள்ளி தலைவர்? மற்ற நிர்வாகிகள் மீது பழி சுமத்துவதிலேயேதான் குறியாக இருந்தாரே தவிர. நான் பித்அத் என உணர்ந்ததை நிறுத்துவேன் என்று கூறவில்லை.

யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

ஒவ்வொரு பித்அத்களுக்குப் பின்னாலும் பல சுன்னத்கள் கொல்லப்பட்டிருக்கும். பல சுன்னத்களை ஒழித்து விட்டுத்தான் ஒரு பித்அத் உருவாகும் என்று தவ்ஹீது ஜமாஅத் மவுலவிகள் என்போர் பிரச்சாரம் செய்திருக்கிறார்கள். 

அதுபோல்தான் தவ்ஹீது ஜமாஅத் என்ற இவர்கள் உருவாக்கிய இந்த பித்அத் பர்ளான தொழுகைக்குப் பின் உள்ள அமல்களான தஸ்பீஹ், தஹ்மீல், தக்பீர், திக்ரு என அனைத்து சுன்னத்களையும் கொன்றுக் கொண்டிருக்கின்றன. 

தவ்ஹீது ஜமாஅத்தினர் என்போர் உருவாக்கி வரும் பித்அத்களும் அவை கொன்று வரும் சுன்னத்கள் பற்றியும் பலரிடம் பேசியும் யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

இந்த நிலையில் 06-07-07 அன்று மேலப்பாளையம் ஜாக் (தவ்பா) மர்க்கஸ்ஸில் ஜும்ஆ உரையாற்றிய மவுலவி அபுல்காசிம் பிர்தவ்ஸி அவர்கள். இதே போன்ற கருத்துக்களை பிரதிபலித்தார்கள். அவர்கள் ஆற்றிய உரையின் சுருக்கம்

சுன்னத் ஜமாஅத்தினர் உருவாக்கினால் அதற்குப் பெயர் பித்அத்.

பர்ளான தொழுகைக்குப் பின்னர் சுப்ஹானல்லாஹ், அல்லஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர், லாஇலாஹ இல்லல்லாஹ் என்று சொல்வது சுன்னத்து. இதைச் செய்யாமல் சுபுஹு தொழுகைக்குப் பிறகு குர்ஆன் தர்ஜுமா இஷாவுக்குப் பின் புகாரி மொழி பெயர்ப்பு என உருவாக்கி வைத்திருக்கிறார்கள். சுன்னத் ஜமாஅத்தினர் உருவாக்கினால் அதற்குப் பெயர் பித்அத். தவ்ஹீது ஜமாஅத்தினர் உருவாக்கினால் மட்டும் அதற்குப் பெயர் பித்அத் இல்லையா?

தவ்ஹீது ஜமாஅத்தினர் சொன்னால் பித்அத் இல்லையா?

பர்ளான தொழுகைக்குப் பின்னர் உள்ள திக்ருகளை சுன்னத் ஜமாஅத் இமாம்கள் சப்தமிட்டு சொல்கிறார்கள். ஏன் சப்தமிட்டு சொல்கிறீர்கள் என்று கேட்டால் படித்து கொடுப்பதற்காக என்கிறார்கள். 

தவ்ஹீது ஜமாஅத்தினர் கூட்டங்கள் முடிந்ததும் சுப்ஹானகல்லாஹும்ம.. என்ற துஆவை ஒருவர் சொல்ல பின் தொடர்ந்து மற்றவர்கள் சொல்கிறார்கள். 

சுப்ஹானகல்லாஹும்ம.. என்ற துஆ சுன்னத். ஒருவர் சொல்ல மற்றவர்கள் பின் தொடர்ந்து சொல்வது ஏன் என்று கேட்டால் படித்துக் கொடுக்கிறோம் என்கிறார்கள். 

20 ஆண்டுகளாகவா படித்துக் கொடுக்கிறீர்கள்? சுன்னத் ஜமாஅத்தினர் படித்துக் கொடுக்கிறோம் என்று சொன்னால் பித்அத். படித்துக் கொடுக்கிறோம் என்று தவ்ஹீது ஜமாஅத்தினர் சொன்னால் பித்அத் இல்லையா?

அண்ணன்கள் வராமல் தவ்ஹீது ஜமாஅத்தினர் திருமணம் இல்லை.

அப்துர்றஹ்மான் இப்னு அவ்ப் அவர்கள் திருமணம் பற்றி சொல்லப்படாத தவ்ஹீது திருமணங்களே கிடையாது. ஸஹாபாக்களின் திருமணத்திற்கே இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அழைக்கப்படவில்லை. எனவே ஹஜ்ரத்கள் அழைக்கப்படத் தேவை இல்லை என்று பிரச்சாரம் செய்தவர்கள் தவ்ஹீது ஜமாஅத்தினர். இன்று அண்ணன்கள் வராமல் தவ்ஹீது ஜமாஅத்தினர் திருமணம் இல்லை என்றாகி விட்டது.

ஹஜ்ரத் வர வேண்டும் என்று சுன்னத் ஜமாஅத்தினர் சொன்னால்.

ஊருக்கு ஊர் அண்ணன்கள் இருக்கிறார்கள். அந்த அண்ணன்கள் வந்தால்தான் தவ்ஹீது ஜமாஅத்தினர் திருமணம் நடக்கும் என்றாக்கி விட்டார்கள். ஹஜ்ரத் வர வேண்டும் என்று சுன்னத் ஜமாஅத்தினர் சொன்னால் அதை தனி மனித வழிபாடு என்கிறார்கள். அண்ணன் வர வேண்டும் என்று தவ்ஹீத் ஜமாஅத்தினர் சொன்னால் அது தனி மனித வழிபாடு இல்லையா? ஹஜ்ரத்தை அழைத்தால் தனிமனித வழிபாடு. அண்ணனை அழைத்தால் தனி மனித வழிபாடு இல்லையா?

பெண்கள் கல்லூரியில் ஓதிய மாணவியைத்தான்.

நாங்கள் திருமணத்திற்கு வரவேண்டும் என்று சொன்னால் எங்கள் மதரஸாவில் ஓதிய மாணவராகவோ மாணவியராகவோ இருக்க வேண்டும் என்று சுன்னத் ஜமாஅத்தினர் சொன்னதில்லை. நாங்கள் திருமணத்திற்கு வரவேண்டும் என்று சொன்னால் எங்கள் பெண்கள் கல்லூரியில் ஓதிய மாணவியைத்தான் திருமணம் முடிக்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்கள்.

இஸ்லாத்தில் இல்லாத திருமண குத்பா செய்வது பித்அத்தா இல்லையா?

குர்ஆன் ஹதீஸ் ஆதாரம் என்று சொல்லிக் கொண்டு எந்த ஆதாரமும் இல்லாத திருமண குத்பா என்ற ஒன்றை தவ்ஹீத் ஜமாஅத்தினர் நடத்தி வருகிறார்கள். திருமண குத்பா என்று ஒன்று உண்டா என்று கேட்டால். இல்லை நிச்சயமாக இல்லை எந்த ஆதாரமும் இல்லை என்பார்கள். 

அப்படியானால் அதை நிறுத்த வேண்டியதுதானே என்றால் அதற்கு மனம் ஒத்து வரவில்லை. எனவே திருமண குத்பா என்று ஒன்று இல்லை என்று சொல்லிக் கொண்டே திருமணங்களில் நீண்ட நெடிய பிரசங்கம் செய்கிறார்கள். 

இது பித்அத் இல்லையா? திருமணங்களில் சுன்னத் ஜமாஅத்தினர் துஆ ஓதினால் பித்அத் என்கிறோம். இஸ்லாத்தில் இல்லாத திருமண குத்பா செய்வது பித்அத்தா இல்லையா?

9994848514 இதுதான் அவரது செல் நம்பர்.

ஜாக் மர்க்கஸ் இமாம் மவுலவி அபுல்காசிம் பிர்தவ்ஸி அவர்களின் சிந்திக்க வைக்கும் மேற்கண்ட ஜும்ஆ உரையை ஒட்டி அவரிடமே கேள்வி கேட்டோம். உங்கள் உரை நன்றாக இருந்தது. நீங்கள் உங்கள் பள்ளியில் சமீபத்தில் நடந்த ஒரு திருமணத்தில் திருமண குத்பா என்று ஒரு நீண்ட நெடிய பிரசங்கத்தை நீங்களே செய்தீர்கள். 

இது இந்த ஜும்ஆ உரைக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி இனி நீங்கள் திருமண குத்பாவுக்கு என்று அழைத்தால் போக மாட்டீர்கள் அல்லவா என்று கேட்டோம். போக மாட்டேன் என்ற பதில் சொன்னாரா? என்ன பதில் சொன்னார் என்பதை அவரிடமே கேட்டுக் கொள்ளலாம்.. 9994848514 இதுதான் அவரது செல் நம்பர்.

கலந்து கொள்ளக் கூடாது. புறக்கணிக்க வேண்டும்.

இஸ்லாத்தில் இல்லாத பித்அத்தான அல்லிப் பைன துஆ போன்ற பித்அத் நடக்கும் சுன்னத் ஜமாஅத்தினர் திருமணத்தில் கலந்து கொள்ளக் கூடாது. புறக்கணிக்க வேண்டும். ஆனால் தவ்ஹீது ஜமாஅத்தினர் என்போர் கலந்து கொள்கிறார்கள். 

பித்அத் நடக்கும் திருமணத்தில் கலந்த கொண்டால் அந்த பித்அத்தை அங்கீகரிப்பதாகவே ஆகும். அந்த திருமணத்தை புறக்கணிக்கா விட்டால் எப்படி அந்த பித்அத்தை ஒழிக்க முடியும். எனவே பித்அத் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக் கூடாது. புறக்கணிக்க வேண்டும் என்றும் ஜாக் மர்க்கஸ் இமாம் மவுலவி அபுல்காசிம் பிர்தவ்ஸி அவர்கள் பேசினார்கள்.

சரியான பதில் சொல்லாமல் மழுப்பியுள்ளார்கள்.

அபுல்காசிம் பிர்தவ்ஸி உரையை ஒட்டி வேறு சிலர் மூலம் தவ்ஹீது ஜமாஅத்தினர் என சொல்லிக் கொள்ளும் மவுலவிகளிடமும் நிர்வாகிகளிடமும் கேள்வி கேட்க வைத்தோம். 


திருமண குத்பா என்று ஒன்று இல்லை என்பது உண்மைதான் என்றிருக்கிறார்கள். அப்படியானால் இனி நீங்கள் திருமண குத்பா உரையாற்ற அழைத்தால் போக மாட்டீர்கள் என்று பிரகடனப்படுத்துவீர்களா? 

பித்அத்தான குத்பா உரையாற்றப்படும் திருமணங்களை புறக்கணியுங்கள் என்று அறிவிப்பீர்களா? என்று கேட்டதற்கு சரியான பதில் சொல்லாமல் மழுப்பியுள்ளார்கள். சிலர் சில காரணங்கள் கூறி நியாயப்படுத்தியுள்ளார்கள். தவ்ஹீது ஜமாஅத்தினர் என சொல்லிக் கொள்வோர் கூறியுள்ள காரணத்தைப் பாருங்கள்.

திருமண குத்பாவை அணுசரித்துதான் போக வேண்டும்.

திருமண குத்பா பித்அத்துதான் அதனால் திருமண உரையாற்ற வர மாட்டோம் என சொல்ல முடியாது. திருமணத்தின் மூலம் பிரசங்கம் நடத்தியே பழக்கப்பட்டு விட்ட நமது தவ்ஹீது ஜமாஅத்தினரிடம் நாங்கள் வர மாட்டோம் என்று சொன்னால் எதிர் தரப்பை கூப்பிடுவார்கள். 

அதனால் அவர்கள் வளர்ச்சி பெறுவார்கள். தவ்ஹீது ஜமாஅத் வளர்ச்சி பாதிக்கும். மேல்மட்ட நிர்வாகிகள் இல்ல திருமணங்களை புறக்கணித்தால் அமைப்பு உடையும். எனவே ஜமாஅத் நலனையும் கருத்தில் கொண்டு திருமண குத்பாவை அணுசரித்துதான் போக வேண்டும்.

ஆகா என்ன அற்புதமான குர்ஆன் ஹதீஸ் ஆதாரம்?

கீழ் மட்டத்தில் உள்ள தொண்டர்கள் குடும்பத்தார்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில்தான் நம்மை அழைக்கிறார்கள். நாம் போய் திருமண குத்பா உரை ஆற்றாவிட்டால் அவர்கள் குடும்பத்தார் சுன்னத் ஜமாஅத் மவுலவிகளை அழைத்து விடுவார்கள். 

அவர்கள் வந்து ஷிர்க்குகளையும் அரங்கேற்றி விடுவார்கள். எனவேதான் இந்த சிறிய பித்அத்தான திருமண குத்பாவை அணுசரித்துதான் போக வேண்டியுள்ளது என்றிருக்கிறார்கள். பித்அத் என்று தெரிந்தால் தூக்கி வீசுவோம். உண்மையை போட்டு உடைப்போம் என்றவர்களின் விளக்கத்தைப் பார்த்தீர்களா? ஆகா என்ன அற்புதமான குர்ஆன் ஹதீஸ் ஆதாரம்?

காணிக்கை சித்தாந்தத்திற்கு மீண்டும் உயிர் கொடுத்து வருகிறார்கள்.

நமது முன்னோர்கள் இந்துக்களாக இருந்து முஸ்லிமாக ஆனவர்கள். கப்ரு அவ்லியா இல்லா விட்டால் மாடசாமி, கந்தசாமி என சாமி சிலைகளை வணங்கப் போய் விடுவார்கள். 

சந்தனக் கூடு இல்லாவிட்டால் தேர் இழுக்கப் போய் விடுவார்கள். தர்கா உண்டியல் வைக்கா விட்டால் கோயில் உண்டியலில் போய் காணிக்கை போட்டு விடுவான். 

கருகமணியை மறுத்தால் மஞ்சல் கயிறு கட்டி விடுவான். இப்படி காரணம் கூறி, எனவே அணுசரித்துதான் போகணும் என்றவர்களுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம். 

லெப்பைகளின் வயிற்றுப் பிழைப்புக்காக கண்டு பிடிக்கப்பட்டதுதான் தர்கா காணிக்கை உண்டியல் என எதிர்த்தவர்கள் தவ்ஹீது ஜமாஅத்தினர். தவ்ஹீது மவுலவிகளின் வயிற்றுப் பிழைப்புக்காக ஜும்ஆ வசூல் உண்டியல் காணிக்கையை கண்டு பிடித்துள்ளார்கள். கடவுளை வணங்கி விட்டு அங்கு காணிக்கையும் செலுத்த வேண்டும் என்ற காணிக்கை சித்தாந்தத்திற்கு மீண்டும் உயிர் கொடுத்து வருகிறார்கள்.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.