கடையநல்லூர் ஜாக் பள்ளி த.த.ஜ.விடமிருந்து மீட்கப்பட்டது?

ஆகா அருமையான தவ்ஹீதுவாதிகள்.
கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் ஜாக்குக்கு சொந்தமானதுதான் என 3.7.07 அன்று தென்காசி கோர்ட்டு தீர்ப்பு வழங்கி விட்டது. சட்டத்தின் துணையுடன் முறையாக மீட்கும் நிகழ்ச்சி 29.7.07 அன்று நடைபெற்றது. ஜாக் மாநில தலைவர் எஸ். கமாலுத்தீன் மதனி இஷா பாங்கு சொன்னார்கள். இஷா தொழுகை முடிந்ததும் மவுலவி கே.எஸ். ரஹ்மதுல்லாஹ் இம்தாதி ஒற்றுமை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதன் மூலம் த.த.ஜ.விடமிருந்து கடையநல்லூர் ஜாக் பள்ளி மீட்கப்பட்டு ஜாக் நிர்வாகத்தின் கீழ் வந்தது.

பள்ளிவாசல் மீட்பு சிறப்பு நிகழ்ச்சியாக மாலை 4 மணி முதல் இஜ்திமா நடத்த திட்டமிட்டிருந்தார்கள். த.த.ஜ.வினர் காலை 10 மணிக்கே கடையநல்லூர் ஆண்கள் கல்லூரி மாணவர்களையும் மேலப்பாளையம் அல் இர்ஷாத் பெண்கள் கல்லூரி மாணவிகளை பள்ளி உள்ளே கொண்டு வந்து வைத்து கலவரம் செய்ய திட்டமிட்டிருந்தனர்.

பொறுமையுடனும் நிதானத்துடனும் காவல் துறை அதிகாரிகளின் சீரிய ஒத்துழைப்புடனும் மீட்புப் பணி நடந்தது. ஜாக் ஒரு வாரம் த.த.ஜ. ஒரு வாரம் என ஜும்ஆ நடந்து வந்தது. ஈராண்டுக்கு முன் முழுமையாக அபகரித்தது த.த.ஜ. கோர்ட்டு தீர்ப்பு உண்மையான உரிமையாளர்களான ஜாக்கின் பக்கம் ஆகி விட்டது. எனவே மீண்டும் ஜாக் ஒரு வாரம் த.த.ஜ. ஒரு வாரம் என பேரம் பேசினர்.

இறுதியில் இரண்டு தளத்தை பூட்டி விட்டு போய் விட்டனர். திறந்திருந்த தளத்தில் ஜாக் நிகழ்ச்சி நடத்தியது. உயிரே போனாலும் கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக்கை விட்டுக் கொடுக்க மாட்டோம். எத்தனை நாளுக்கு போலீஸ் நிற்கும். அல்லாஹ்வின் மீது ஆணையாக மீண்டும் கைப்பற்றியே தீருவோம் என த.த.ஜ.வினர் சத்தியம் செய்துள்ளனர்.

150க்கும் மேற்பட்ட த.த.ஜ.வினர் பள்ளியின் மாடியில் நின்று கொண்டு தற்கொலை செய்து கொள்வோம் என்று மிரட்டிக் கொண்டே இருந்துள்ளனர். சட்ட ரீதியாக மீட்ட பள்ளியை ஜாக் தக்க வைத்துக் கொள்ளுமா? தீர்ப்பு கிடைத்த பின்னரும் திருச்சி சிங்காரத் தோப்பு பள்ளியை த.த.ஜ.விடம் விட்டு வைத்துள்ளது போன்ற நிலை மீண்டும் வருமா?

மேலப்பாளையத்தில் நடந்த கந்தூரி விழா ஊர்வலத்தில் சிலம்பாட்டம் ஆடி வந்தவர்கள் இனாயதுல்லாஹ் என்பவரை தீப் பந்தத்தால் தாக்கி உள்ளதாக இனாயதுல்லாஹ் மேலப்பாளையம் போலீஸில் புகார் செய்துள்ளார். கந்தூரி விழா ஊர்வலத்தில் சிலம்பாட்டம் ஆடி வந்தவர்கள் யார் என்றால் தங்களை தவ்ஹீதுவாதிகள் என்று சொல்லிக் கொண்டவர்களாம். நீங்களெல்லாம் தவ்ஹீதுவாதிகள் ஆயிற்றே என்று கேட்டதற்கு சிலம்பாட்டம் என்பது எங்கள் தொழில் என்றார்களாம் ஆகா அருமையான தவ்ஹீதுவாதிகள்.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.