சுருண்டு விட்டார், சுருட்டு தீர்மானம் கொண்டு வந்த அந்த மவுலவி.

                     பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.                          23-11-2005
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. அதிரை பாரூக்குக்கு கா.அ.முஹம்மது பழுலுல் இலாஹி எழுதிக் கொள்வது. நீங்கள் அனுப்பிய பி.ஜே. சவால் என்ற மெயில் கண்டேன். ஆயிரம் பேர்கூட கூட முடியாத மண்டபத்தில் பல்லாயிரவர் கூடியதாக எழுதிய உண்மையாளர்தான் பி.ஜே. 

முபாஹலா நிகழ்ச்சி இல்லை ரமழான் நிகழ்ச்சி மட்டுமே என காவல் துறையில் எழுதி கொடுத்தார்கள். ரமழான் நிகழ்ச்சி மட்டுமே நடக்க உள்ளதால் முபாஹலா செய்ய என பழுலுல் இலாஹி ராஜ்மஹால் மண்டபத்திற்கு வரக் கூடாது என்றும் காவல் துறை மூலம் எழுதி வாங்கினார்கள். 

இத்தனைக்கும் பிறகுதான் காத்திருந்ததாகவும் ஒரு மணி நேரம் கூடுதலாக காத்திருந்ததாகவும் செய்தி வெளியிட்டார்கள். வளைகுடா மக்களை நம்ப வைப்பதற்காக அவர்களது குலத் தொழில்படி செட்டப் சி.டி.யும் தயாரித்துள்ளார்கள். அவர்களின் உத்தமத் தன்மையை பத்தினித்தனத்தை நம்ப வைப்பதற்காக தயாரித்துள்ள அந்த சி.டி.யை பொதுவாக வினியோகிக்க தைரியம் இல்லை. குறிப்பிட்டவர்களுக்கு மட்டுமே கொடுத்து வாங்குகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் விடுத்துள்ளதாக உள்ள மொட்டைக் கடித சவாலைத்தான் நீங்கள் எனக்கு அனுப்பியுள்ளீர்கள்.

அந்த மவுலவிகள் யார் என்பதை அனைவரும் அறிவார்கள்.

இவர்கள் எப்படிப்பட்ட உத்தமர்கள் என்பதற்கு இது மட்டுமல்ல இன்னும் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. 2003ல் அ.த.ஜ.கூ. என்ற பி.ஜே. ஜமாஅத் கூட்டம் திருச்சியில் நடந்தது. அதில் பேசிய ஒரு மவுலவி, "சுருட்டு குடித்துக் கொண்டு தாஇகளாக இருக்கிறார்கள். தாஇகளாக இருப்பவர்கள் புகை பிடிக்கக் கூடாது என்று தீர்மானம் கொண்டு வர வேண்டும்"  என்று கூறினார். 

இவர் எந்த மவுலவியை குறி வைத்து பேசினாரோ அந்த மவுலவி அடுத்து எழுந்தார். "தாஇகளாக இருப்பவர்கள் இரவு 11 மணிக்கு மேல் புளு பிலிம் பார்க்கலாமா? பள்ளி வாசலில் கள்ளக் கணக்கு எழுதலாமா? எனவே இதற்கும் தீர்மானம் கொண்டு வர வேண்டும்” என்று பேசினார். அவ்வளவுதான் சுருண்டு விட்டார், சுருட்டு தீர்மானம் கொண்டு வந்த அந்த மவுலவி. 

இந்த இரண்டு மவுலவிகளின் பெயரைக் குறிப்பிட்டு எழுதாவிட்டாலும் இதைப் படித்ததும் அந்த மவுலவிகள் யார் என்பதை அனைவரும் எளிதில் அறிவார்கள். அந்த  இரண்டு தீர்மானத்தையும் மானமிகு அன்றைய தலைவரும் இன்றைய தலைவரும் இன்று வரை கண்டு கொள்ளவே இல்லை. இதுதான் அந்த தீர்மானத்தில் கவனிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான சிறப்பம்சம். 

அண்ணன் பி.ஜே. அளித்த மகாத்தான அந்த தீர்ப்பு.

அதே அமர்வில், பி.ஜே. ஜமாஅத்தில் 'தாஇ|யாக இருக்கும்  அஷ்ரபுத்தீன் பிர்தவ்ஸி என்ற ஒரு மவுலவி பெண்கள் மதரஸாவில் உள்ள அந்நிய பெண்ணிடம் தவறாக நடந்தார் என்பது நிரூபணமானது. விசாரணைக் குழுவிடம் அந்த அஷ்ரபுத்தீன் பிர்தவ்ஸி என்ற மவுலவியும் ஒப்புக் கொண்டு விட்டார். எனவே என்ன தீர்ப்பு என்று கேட்கப்பட்டது. இந்த விவகாரத்திற்கு பி.ஜே. அளித்த தீர்ப்புதான் இன்றும் சிறப்பாக பேசப்பட்டு வருகிறது. பி.ஜே. அளித்த தீர்ப்பு என்ன தெரியுமா? 

"இந்த அஷ்ரபுத்தீன் பிர்தவ்ஸி ஹாமித் பக்ரியை போய் சந்தித்து அவருடன் நட்பாக இருப்பதாக தெரிந்தால், அந்நிய பெண்ணிடம் தவறாக நடந்தார். அதனால் நீக்கப்பட்டார் என அறிவித்து உணர்வு பத்திரிக்கையில் செய்தி வெளியிடுவோம். ஹாமித் பக்ரியை போய் சந்திக்காமல் அவருடன் நட்பு வைக்காமல் ஒதுங்கி விட்டால் கண்டு கொள்ளாமல் விட்டு விடுவோம்"  இதுதான் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் மட்டுமே செயல்படுவதாகக் கூறிக் கொள்ளும் அண்ணன் பி.ஜே. அளித்த மகாத்தான அந்த தீர்ப்பு? 

2003ல் இந்த தீர்ப்பைப் பெற்ற  அஷ்ரபுத்தீன் பிர்தவ்ஸி என்ற அந்த மவுலவிக்கு 2004ல் அண்ணன் துவங்கிய புதிய கட்சியான த.த.ஜ.வில் மாநில பொறுப்பு வழங்கப்பட்டது. பெண்கள் மதரஸாவில் விஷம விளையாட்டு பண்ணிபவர்களை ரமழான் மாதத்தில் அழைத்து கவுரவிக்க வேண்டும் என்பதையே லட்சியமாகக் கொண்ட அமைப்பு ஒன்று  வளைகுடாவில் புதிய பெயரில் இயங்கி வருகிறது. அந்த அமைப்பு சார்பில் 3வது ஆண்டில் இந்த மவுலவி.யும் அழைத்து கவுரவிக்கப்பட்டார்.  பெண்களுக்கான மார்க்க கேள்விகளுக்கு டெலிபோனில் பதில் அளிக்கும் பதவியும் கொடுத்தார்கள். 

இவர் என்ன ஜென்மம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

இனிமேல் விவகார மெயில்கள் அனுப்ப மாட்டேன் மார்க்க மெயில்கள் மட்டுமே அனுப்புவேன் என்ற அதிரை பாரூக் அவர்களே! இப்படிப்பட்ட நீதிமான்? பி.ஜே.யின் சவாலைத்தான் நீங்கள் அனுப்பியுள்ளீர்கள். பி.ஜே.யின் சவாலை ஏற்று 10-12-2005 அன்று காலை 10.30 மணி முதல் 12 மணி வரை காத்திருப்பதாக த.மு.மு.க. தலைமை அறிவித்து விட்டது. 

பிராடு பி.ஜே.யின் பித்தலாட்ட தம்பிகளில் ஒருவராக நீங்கள் இல்லை என்றால், உமர் உமர் என்ற மொட்டைக் கடித பேர்வழியாக ஆகி விட்ட முத்துப் பேட்டை பரகத் அலி மாதிரி நடுநிலை வேஷதாரியாக நீங்கள் இல்லை என்றால், மொட்டைக் கடித மன்னன்களின் தலைவன், பள்ளிவாசல் கணக்கில் செட்டப் கணக்கு எழுதிடும் கள்ளக் கணக்கர்களின் வழி காட்டி, பள்ளிவாசல் விழுங்கிகளின் அண்ணன், பித்தலாட்ட பி.ஜே.யின் பிடரியை பிடித்து இழுத்து வாருங்கள். இழுத்தும் வராவிட்டால் அடித்து விரட்டி கொண்டு வாருங்கள். இழுத்தும் வரவில்லை, அடித்தும் நகரவில்லை என்றால் இவர் என்ன ஜென்மம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். வஸ்ஸலாம்.
அன்புடன்: கா.அ. முஹம்மது பழுலுல் இலாஹி


Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.