பைலா பைலா நீ இல்லாமல் எங்கள் இயக்கம் இல்லை. நீதானே எங்கள் இயக்க எல்லை.



from:kadirkani misc kadirkanimisc@gmail.com
to:Adiyar Nanban <adiyar999@gmail.com>
bcc:fazlulilahi@gmail.com
date:Mon, May 18, 2015 at 7:55 PM
subject:ராஜினாமா செய்வாரா? நடவடிக்கை எடுக்கப்படுமா?
mailed-by:gmail.com
signed-by:gmail.com
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.....


                   அன்புள்ள சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்....

              யாரையும் நாங்கள் தயவு தாட்சணை பார்க்கமாட்டோம்.அது எவ்வளவு பெரிய நிர்வாகியாக இருந்தாலும் தூக்கி எறிந்துவிடும் ஒரு உன்னதமான இயக்கம்தான் இந்த ததஜா. ,அல்லாஹ் ரசூல் வழியில் முழுமையாக எங்களின் நிர்வாகிகள் நடப்பார்கள்.அத்துடன் நாங்கள் ஏற்படுத்தியிருக்கும் பைலாவின் பிரகாரம் தங்களின் பணிகளை செய்வார்கள்,எல்லா இயக்கங்களையும் எமது இயக்கத்தையும் நீங்கள் ஒப்பிட்டுப் பார்த்தால் நூறு சதவீதம் (குர்ஆன்,ஹதீசுக்கு கட்டுப்பட்டவர்கள் அல்ல) தலைமைக்கு கட்டுப்பட்டு நடக்கக்கூடியவர்களைக் கொண்டதுதான் என்பதை புரிந்துகொள்வீர்கள். இதற்கு மாறாக செயல்பட்ட எத்தனையோ நிர்வாகிகளை எல்லாம் தூக்கியெறிந்திருக்கிறோம்,இப்படி சொல்வது யார் தெரியுமா? அவாள் அதுதான் ததஜ.
           ததஜாவின்  பைலாவின் சட்டத்தில் உள்ளதுதான் திருமணச் சட்டம். இந்த திருமணத்தை சொல்லியே எத்தனை பேரை தன் கட்சியை விட்டு நீக்கியிருப்பார்கள்.திருமண விசயத்தில் இவர்களாக போட்ட சட்டங்களெல்லாம் கடையநல்லூரைப் பொறுத்தவரை செல்லுபடி ஆகாது என்பது தெரிகிறது. தலைவர் முதல் தொண்டர்கள் வரை தனக்கே மாற்றமுடியாத சூழ் நிலையில் திருமணத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.அல்லது அந்த திருமணத்தை ஆதரித்துக் கொண்டிருக்கிறார்கள். கட்சியைவிட்டு நீக்குவது தற்போது அது நடக்கவில்லை காரணம் இப்படியே போய் கொண்டிருந்தால் கட்சியில் ஆள் இல்லாமல் போய்விடும் என்ற எண்ணத்தில் தான் தற்போது அவர்கள் எதை தவறு என்று சொல்லி நீக்குகிறார்களோ  அந்த தவறைச் செய்தால் தண்டனை கிடையாது என்ற முடிவுக்கு வந்துள்ளார்கள். அதனால்தான் தற்போது ததஜாவின் பைலாவுக்கு மாற்றமாக தவறு செய்தாலும் கண்டு கொள்ளப் போவதில்லை என்ற தைரியத்தில் தான் இந்தமாதிரியான திருமணங்கள் நடந்தேறிக் கொண்டிருக்கிறது. இன்று சர்வசாதாரணமாக ததஜாவின் சட்டதிட்டங்களுக்கு மாறாக நிர்வாகிகள்,தொண்டர்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள். தொண்டர்களைப் பற்றி பிரச்சினை இல்லை தொண்டர்கள் தவறு செய்தால் அது தவறாகாது. பொறுப்பிலுள்ளவர்கள் தவறு செய்யக்கூடாது என்பது பைலாவின் சட்டம். பொறுப்பில் உள்ளவர்கள் செய்த தவறுகளை ஏற்கனவே பல பதிவுகள் செய்திருக்கிறேன். தற்போது ரியாத்தில் கடையநல்லூர் ததஜ பொருளாளரின் மகள் திருமணத்தைப் பற்றி தகவல் வந்துள்ளது அதைப் பற்றி பார்ப்போம். 

            ரியாத்தில் கடையநல்லூர் ததஜவில் பொருளாளராக இருக்கக்கூடிய சேயன் இஹ்ஸானுல்லாஹ் மகள் திருமணம் மிகவும் தடபுடலாக 17-05-2015 நடந்தது. அன்று தடபுடலாக விருந்தும் நடந்திருக்கிறது.அவரும் அவருடைய துணைவியாரும் வீடு வீடாக சென்று திருமண பத்திரிக்கையும்,விருந்து அழைப்பும் கொடுத்துள்ளார்கள். மாப்பிள்ளை முற்றிலும் சுன்னத் ஜமாஅத்தைச் சார்ந்தவர்.அவர் தன்(சுன்னத் ஜமாஅத்)கொள்கையில் சரியாக இருக்கிறார். ததஜாவின் திருமணச் சட்டத்தின் படி திருமணம்நடத்தாத ததஜாவின் பொருளாளர் இஹ்ஸானுல்லாஹ் இன்னும் ததஜாவின் பொறுப்பில்தான் இருக்கிறார். எல்லாம் முரண்பாடாக நடத்திவிட்டு கடைசியில் ததஜா போல் நாடகமாடியுள்ளார்.இவர் என்னவோ முழுமையாக குர்ஆன், ஹதீஸை பின்பற்றுகிறமாதிரி ரியாத்திலும், கடையநல்லூரிலும் சைபுல்லாஹ்வைப் பற்றி என்ன வெல்லாமோ திட்டினார்,பேசினார் என்பது ததஜாவைச் சார்ந்த சகோதரர்களுக்கு நன்றாக தெரியும்.இந்த யோக்கியரின் நிலையைப் பாருங்கள்.கடையநல்லூர் ததஜ கிளைகள் இவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் சாதிப்பதின் காரணம் என்ன? ஏற்கனவே சைபுல்லாஹ் விசயத்தில் மூக்குடைபட்டுவிட்டோம் இனிமேல் யாரையும் மாநிலத்திற்கு போட்டுக்கொடுக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் இருக்கிறாரா மேலாண்மை அப்துன்நாசிர்.அல்லது இவரை இழந்துவிடக்கூடாது என்பதாக இருக்கலாம்.அல்லது டவுண் கிளை பொருளாளர் ஹைதர் அலி மகள் திருமணத்தைப் பற்றி கேட்டுவிட்டால் பதில் சொல்லமுடியாமல் போய்விடுமே, அல்லது மேலாண்மை நாசரின் திருமணத்தைப்பற்றி கேட்டுவிடுவாரோ,அல்லது இதேப்போல் எத்தனை திருமணம் நடந்ததோ அதையும் கேட்டுவிடுவாரோ என்ற அச்சமாக இருக்கலாம். 

          இந்தமாதிரி திருமணத்தை தட்டிக்கேட்கும் நிலையிலுள்ள டவுண் கிளை செயலாளர் ஹாஜா மைதீனால் கேட்கமுடியுமா என்றால் இயலாது காரணம் பொறுப்பில் உள்ளவர்கள் ரியல் எஸ்டேட் தொழில் நடத்தக்கூடாது என்று ததஜ பைலா இருக்க அதை செய்துகொண்டிருக்கும் செயலாளர் இஹ்ஸானுல்லாவை  எதிர்த்து கேட்க இயலாது அவர் திருப்பிக்கேட்டால் பதில் சொல்லமுடியாது என்ற அச்சத்தால் இருக்கலாம். ஆக குர்ஆன்,ஹதீஸ்தான் எங்களின் உயிர் மூச்சு என்று சொல்லிக்கொண்டு அதை நடைமுறைப் படுத்தாமல் ,தங்களின் கட்சிக்கென்று ஒரு பைலாவை (சட்டத்தை) ஏற்படுத்திக் கொண்டு அந்த பைலாவின் பிரகாரம் கட்சியில் மக்களை சேர்ப்பது,நீக்குவது போன்ற செயல்களை செய்து வந்தார்கள்.இப்போது பைலாவையும் விட்டுவிட்டு மெல்லவும் முடியாமல்,விழுங்கவும் முடியாமல் திணறிக் கொண்டிருப்பதைப்  பார்க்கிறோம்.

           இதேப்போல்தான் சைபுல்லாஹ்உடன் ஒன்றாக இருந்த நேரத்தில் ததஜாவின் ரியாத் கடையநல்லூர் பொருளாளராக இருந்த மேத்தன் அபூஸாலிஹ் என்பவர் தன் மகள் திருமணத்தை தானே நடத்திவைத்து தவ்ஹீதை நிலைநாட்டினார்.அதிகப்படியாக அவர் செய்தது தன் மகளுக்காக விருந்து வைத்ததுதான் காரணம்.இந்த திருமணம் பைலாவுக்கு மாற்றமாக இருப்பதினால் அபுஸாலிஹ் தன்னுடைய பொறுப்பைவிட்டும் ராஜினாமா செய்து தன் நேர்மையை நிலைநாட்டினார்.

    சேயன் இஹ்ஸானுல்லாஹ் இவரே முன்வந்து ராஜினாமா செய்வாரா? அல்லது நிர்வாகத்தினால் நடவடிக்கை எடுக்கப்படுவாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.அல்லது   இதற்கும் நக்கலடித்து பதில் கொடுப்பார்களா
   
      மேற்சொன்னவற்றிற்கு ஆதாரம் அட்டாச் பைலில் பார்க்கவும்  
      
             இப்படிக்கு 
    காதிர் கனி எம் ஐ எஸ் சீ                              
              

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.