சமுதாய துரோகி யார்? முா்தத் யார்? கூண்டோடு உள்ளே போவீர்கள் ஜாக்கிரதை.

8-2-14 சனி மாலை மேலப்பாளையம் அல்லாமா இக்பால் பசார் திடலில் மனி நேய மக்கள் கட்சியின் மாபெரும் எழுச்சி  பொதுக்கூட்டம்  நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை வகித்த நாம் ஆற்றிய உரை. 


மஸ்ஜிதுஸ்ஸலாஹ் ஜும்ஆவில் பேசியவர் ஜவாஹிருல்லாஹ், அஸ்லம் பாஷா ஆகியவர்களை பெட்டைகள், பொட்டைப் பயலுக, மய்யித்துக்கள்,  நாய்கள் என்றெல்லாம் பேசி உள்ளார். 

இதற்கு பதில் சொல்லணும் என்று செல் போனில் பதியப்பட்டதை போட்டுக் காட்டினார்கள். பதியப்பட்ட செல் குரல் கரகரப்பாக இருக்கிறது. அதனால் நான் பேசவில்லை என மறுக்க முடியும் எனவே பதில் பேச மாட்டேன் என்றேன். 

இப்பொழுது நான் மேடையில் ஏறும்பொழுது ஒரு சகோதரர் எனது கையைப் பிடித்து இழுத்து அல்லாஹ்வின் மீது ஆணையாக மஸ்ஜிதுஸ்ஸலாஹ் ஜும்ஆவில் பேசியதை நான் காதால் கேட்டேன் என்று சாட்சி சொன்னார். ஆகவே சுருக்கமாக பதில் சொல்கிறேன். 


(பிர்தவ்ஸி என்றால் பட்டம் வாங்கியவர். பரதேசி என்றால் பட்டத்தை திருடியவர். அப்துர்றஹ்மான் பிர்தவ்ஸிக்கு எதிராக லுஹா அளித்த விளக்கம் இது) 

அவன் (லுஹாவின் தம்பி காஜா பரதேசி அவனது அண்ணனையே (லுஹாவையே) கரடி என்று கூறியவன். அவன் ஒரு சந்தர்ப்பவாதி சுய நலனுக்காக எதுவும் பேசுவான். இவன் எவ்வளவு பெரிய நல்லவன் என்பதை அவனோடு பார்ட்னராக இருந்த தா.தா.சாவில் உள்ள தண்ணீர்க் குண்ணம் ஜியாவுதீனிடம் கேட்டால் தெரியும். 

இவன் மேல் உயிரையே வைத்திருந்தவர் தண்ணீர்க் குண்ணம் ஜியாவுதீன். அவரை வீட்டிற்குள் வர விடாதீர்கள். ரூமுக்கு வர விடாதீர்கள் என துபையிலுள்ளவர்களுக்கு செய்தி அனுப்பிக் கொண்டிருக்கிறான். புரிந்து கொள்ளுங்கள்.

நமது மனி நேய மக்கள் கட்சி பற்றியும் அதன் தலைவர்கள் பற்றியும் மிக மட்ட ரகமாக பேசியவர்களுக்கு நாம் பதில் அளிக்க வேண்டும் என்பது நமதுார் மக்களின் விருப்பமாக உள்ளது. 

அவர்களது பேச்சுக்கு அவர்களின் பேச்சையே பதிலாகத் தர ஏற்பாடு செய்தோம். அதற்காகத்தான் இங்கே  டி.வி. வீடியோ டெக்கு மற்றும் கேஸட்களையும் வைத்துள்ளோம். 

இங்கே சிறப்புரையாற்றவிருக்கும் தலைவர்களான அப்துஸ்ஸமது, மைதீன் உலவி ஆகியவர்கள் உரைகளை போட்டுக் காட்டி நமது மேடையை அசிங்கப்படுத்த வேண்டாம் என்றதால் நாம் வீடியோ போட்டுக் காட்டவில்லை. 


நமது கொடி கறுப்பு வெள்ளை. இறைத்துாதா் முஹம்மது நபி(ஸ்) அவர்கள் போருக்கு செல்லும்பொழுது கறுப்புக் கொடியை பயன்படுத்தி இருக்கிறார்கள். வெள்ளைக் கொடியை பயன்படுத்தி இருக்கிறார்கள். இந்த அடிப்படையில்தான் நமது கொடியில் கறுப்பையும் வெள்ளையையும் இணைத்து இருக்கிறோம். 
இருட்டில் இருக்கும் மனிதர்களே வெளிச்சத்திற்கு வாருங்கள் என்று அழைக்கும் வண்ணம். இருட்டில் இருப்பவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் அமைப்பு என்று காட்டுவதற்காகத்தான் இந்த கறுப்பு வெள்ளை என்று சொன்னவர்கள். இன்று நம்மை இஸ்லாத்திற்கு அப்பால்பட்டவர்கள் என்று விமர்சித்துள்ளார்கள்.
கறுப்பு வெள்ளைக்கு அன்று விளக்கம் அளித்தவர்கள். இன்னொன்றையும் சொன்னார்கள். பச்சைக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று. மற்றவர்களை சொல்லவில்லை. யார் பச்சைக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று சொன்னார்களோ அவர்கள் தங்கள் கொடியிலே பச்சையை போட்டிருக்கிறார்கள். 
இதன் மூலம் அவர்கள் (அதாவது தா.தா.சா.வினர்) அவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்கள். அதை நிரூபிக்கத்தான் இந்த வீடியோக்களை போட்டுக் காட்ட இருந்தோம். வேண்டாம் போய் விட்டார்கள். வழி கெட்டு போய் விட்டார்கள். வழி கெட்டு போனவரையா இங்கு போட்டு காட்டப் போகிறீர்கள் என்றார்கள். அதனால் நாம் போட்டுக் காட்டவில்லை. 
தற்காப்பு பொய்  சொல்வது மனித இயல்பு. பிறர் மீது பழி சுமத்த வேண்டும் என்பதற்காக பொய் சொன்னால் அவன் பாவி. ஒரு கடையில் போய் ஆயிரம் ரூபாய்க்கு சில்லரை தாருங்கள் என்று கேட்டால். கடைக்காரா் இல்லை என்பார். சில்லரை இருக்கும், அது அவரது வியாபாரத்துக்கு தேவை அதனால் இல்லை என்பார். அதை பாவமான பொய்யாக எடுத்துக் கொள்ள முடியாது. 
இன்னொருவன் ஆயிரம் ரூபாயை வாங்கி கல்லாப் பெட்டியில் போட்டு விட்டு சில்லரை இல்லை என்கிறான். ஆயிரம் ரூபாய் முழு நோட்டை கொடுத்தவர். அதை திரும்பத் தாருங்கள் என கேட்கிறார். உடனே கடைக்காரன் அல்லாஹ்வின் மீது ஆணையாக நீ ஆயிரம் ரூபாய் தரவில்லை என்கிறான். இப்படிப்பட்டவர்கள்தான் தா.தா.சாவினர். 
சில்லரையை வைத்துக் கொண்டு இல்லை என்பது மனித இயல்பு. பணத்தை வாங்கி விட்டு இல்லை என சத்தியம் பண்ணுவது. பொய் சத்தியம் பண்ணுவது. பொய் சாட்சி சொல்வது இதுவெல்லாம் தா.தா.சாவினரின் தலைவர் (லுஹா) உடைய வேலை. 
நாம் வெறுமனே குற்றச்சாட்டாக சொல்லி விட்டு போக மாட்டோம் நாமெல்லாம் அல்லாஹ்வை நம்புகிறோம். ஒவ்வொரு விஷயத்திற்கும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். இங்கே இருக்கக் கூடிய மஸ்ஜிதுர்றஹ்மான் உடைய (தலைவர் பதவியை கேட்டு வாங்கிய) முன்னாள் தலைவர். மேலாஆண்மைக் குழு தலைவர்.  அல்லாஹ்வுடைய பள்ளிவாசலில் வைத்து பொய் சத்தியம் செய்தவர். பொய் சாட்சி சொன்னவர். 
ஆதாரத்தோடு வீடியோ போட்டுக் காட்ட முடியும். தலைவர்கள் வேண்டாம் என சொன்னதால் விஷயத்தை நானே சொல்லி விடுகிறேன். இது பொய்யாக இருக்குமானால் நீங்களெல்லாம் துஆச் செய்யணும். எவன் பொய் சத்தியம் செய்து பொய் சாட்சி சொல்லி உள்ளானோ அவன் மீது அல்லாஹ் உடைய லஃனத் இறங்கணும். 

இதில் யார் பொய்யர்களோ அவனுக்கே அல்லாஹ் உடைய லஃனத் இறங்கணும் என துஆச் செய்யுங்கள். இதை நான் சொல்லி விட்டேன். இதே மாதிரி அவர்கள் பதில் கூட்டம் போட்டு சொல்லணும். சொல்வார்களா? தா.தா.சாவினர் சவால் விடுகிறேன். 
முர்தத் என்று பேசி உள்ளார்கள். யார் முா்தத்? நாங்கள் சங்கரன் பந்தலில் உள்ள சுன்னத் ஜமாஅத் மதரஸாவில் வேலை செய்கிறோம். அங்கு தரும் சம்பளம் தந்தால் நாங்கள் தவ்ஹீது பிரச்சார வேலை செய்கிறோம். இப்படி சம்பளம் பேசி சுன்னத் ஜமாஅத் கொள்கையை விட்டு விட்டு 1986 ஏப்ரலில் தவ்ஹீது வேலைக்கு வந்தார்.
பிறகு ரூபாய் 750 சம்பளம் காணாது. இதைவிட கூடுதலாக சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசலில் ரூபாய் 1000 சம்பளம் கிடைக்கிறது என்று கொள்கையை விட்டு விட்டு அதே எண்பத்தி ஆறாம் ஆண்டே சுன்னத் ஜமாஅத் பள்ளியில் போய் சேர்ந்து விட்டார் லுஹா. யார் முர்தத்? 
1990 வரை சுன்னத் ஜமாஅத் பள்ளியிலேயே வேலை செய்தார். கோட்டாறு தவ்ஹீது பள்ளியில் அதை விட கூடுதலாக ரூபாய் 1500 சம்பளம் பேசி 1990ஆறாம் மாதம்தான் மீண்டும் தவ்ஹீது பணிக்கு வந்தார் லுஹா. 
அதற்கு பிறகு சவூதி போய் விட்டார். 1994இல் சவூதியில் இருந்து திரும்பி வந்தார். அப்பொழுதுதான் பள்ளி உருவாகுகிறது. இவற்றை ஏன் சொல்கிறேன் தெரியுமா? 
மேடை போட்டும் பள்ளிவாசல்களிலேயும் த.மு.மு.க. பற்றியும் மனித நேய மக்கள் கட்சி பற்றியும் தலைவர்கள் பற்றியும் சொல்ல முடியாத வார்த்தைகளை பேசி இருக்கிறார்கள். அதற்காகத்தான் நாம் பதில் சொல்கிறோம். அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால், இவர்களுக்கு பதில் பேச தெம்பு இல்லை. 
இன்றைக்கு நிறைய பேர் என்னிடம் உங்களால் பதில் பேச முடியுமா? மேல்படியாருக்கு (ஷம்சுத்தீன் காசிமிக்கு)  என்ன நடந்தது தெரியுமா? என்றார்கள். மேல்படியார் (ஷம்சுத்தீன் காசிமி)  என்ன முடிந்தால் என் மீது வழக்கு போடு. நீ யார் என்று நான் நிரூபிப்பேன் இன்ஷாஅல்லாஹ். 
என் மீது வழக்கு போடுவேன் என்று நீ சொன்னாய். உன்னால் வழக்கு போட முடியவில்லை. வழக்கு போடுங்கள் பார்ப்போம். என் மீது வழக்கு போட்டீர்கள் என்று சொன்னால் அப்பொழுது கூண்டோடு உள்ளே போவீர்கள். அந்த அளவுக்கு வீடியோ ஆடியோ கேஸட்கள் ஆதாரங்களை இன்னும் வைத்துதான் இருக்கிறேன். 
அதில் ஒன்றை போட்டுக் காட்டலாம் என்று நினைத்தேன். அதைப் போட்டால் அசிங்கமாக ஆகி விடும். நமது மேடை அசிங்கமாக ஆகி விடும். அவர்கள் பேச்சை போட்டால் அதனால் போடவில்லை. 
சவூதியில் இருந்து வந்த லுஹா என்ன சொன்னார். என்னால் மனைவியை பிரிந்து இருக்க முடியவில்லை. ஆகவே மாதம் 4000 ரூபாய் தாருங்கள். இப்படி சம்பளம் பேசித்தான் ஊரோடு இருந்தார். நான் கொள்கைப் புலி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.  லுஹா கொள்கைப் புலி கூலிப் புலி.

நான் நடந்ததைத்தான் உண்மையைத்தான் சொல்கிறேன். இது பொய்யாக இருக்குமானால் என் மீது அல்லாஹ்வுடைய தண்டனை இறங்கும். இது உண்மையாக இருக்குமானால் அவருக்கு இறங்கட்டும் என எல்லோரும் துஆச் செய்யுங்கள்.
அவர் உண்மையாளர் என்றால் இதே இடத்தில் மேடை போட்டு நான், என்னால் மனைவியை பிரிந்து இருக்க முடியவில்லை என்று சொல்லவில்லை என என்னைப் போல் கூற வேண்டும். இந்த மாதிரி வேலைக்கு வந்தவர்தான் பள்ளிவாசலைக் கைப்பற்றினார். 
அது மட்டுமா திரும்பவும் விஸிட் விஸாவில் சவூதிக்கு வேலை தேடி போய் விட்டார். யார் முர்தத்? அங்கே வேலை கிடைக்கவில்லை. திரும்பவும் நம்மிடம் வந்து சேர்ந்தார். நமது தலைவர்கள் இதைப் பேச வேண்டாம் என்கிறார்கள். 
பொருளாதார மோசடி பற்றி அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் கூட என்ன செய்தார்கள் தெரியுமா? நீங்கள் எல்லாரும் பேஸ் புக் பார்க்கிறீா்களா தெரியாது. பேஸ் புக்கை பார்த்து விட்டு வந்த சகோதரர்கள் வருத்தப்பட்டார்கள். அந்த மாதிரி எழுதி இருக்கிறார்கள். பேஸ் புக்கில் சுனாமி மோசடி என்று எழுதியுள்ளார்கள். சுனாமி வசூல் பணத்தில் தொப்பி சட்டை வாங்கி போட்டவர்கள் அவர்கள்தான். தா.தா.சாவினர்தான். 

சுனாமி வசூல் பணத்தில் இருந்து உணர்வு என்ற பெயரால் இரண்டு லட்சத்தை செலவு கணக்கு காட்டினார்கள். சுனாமி வசூலில் அவர்கள் செய்த மோசடி அவர்கள் மூலமே களவாடிய பத்திரிக்கையில் வெளியானது.

அது மட்டுமல்ல அபூதாவுது மொழி பெயர்க்கிறேன் என்று சொல்லி அரபு நாட்டில் வந்து வசூல் பண்ணினார்கள். கொடுக்காதீர்கள் என்றேன். யார் மொழி பெயர்க்கப் போகிறார்கள் என்று கேட்டேன். லுஹா என்றார்கள். கொடுக்காதீர்கள் என்றேன். 

ஏனென்றால் 1990இல் இருந்து இதே மோசடி வேலைதான் நடந்து வருகிறது. பேஸ்புக்கில் விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வண்ணம் 1990லிருந்து அவர்கள் கைப்பட எழுதிய கடிதத்தை வெளியிடக் கொடுத்தேன். (த.மு.மு.க.செய்யது) போட்டு விட்டார். அதுவரை பேக் புக்கில்எழுதியவர்கள் ஓடி விட்டார்கள். 
பிறகு கல்விச் சங்கத்திலிருந்து லுஹா ஒரு லட்சம் ரூபாய் வாங்கி இருக்கிறார். இதுவரை அபுதாவூதை மொழி பெயர்த்து கொடுக்கவில்லை. ஆக அவர்கள் கொள்கைவாதிகள் அல்ல, வியாபாரிகள். 
1994லேயே நான் இனி தவ்ஹீது பிரச்சாரம் செய்ய மாட்டேன் என்று சொன்னவர்தான் தா.தா.சாவினரின் தலைவர். இது அரசியல் மேடை இதில் ஏன் இதை பேசுகிறேன். கொள்கையின் பெயரால் கொள்ளை அடித்த அவர்கள். நமது அரசியல் நிலைப்பாட்டை கொள்கையின் பெயரால் எதிர்ப்பு பிரச்சாரம் செய்கிறார்கள். அதனால்தான் இந்த மேடையில் பதில் தருகிறோம். 
கொள்கைவாதி நான் இனி தவ்ஹீது பிரச்சாரம் செய்ய மாட்டேன் என்று சொல்ல மாட்டான். கொள்கை வியாபாரிதான் சொல்வான் இனி நான் தவ்ஹீது பிரச்சாரம் செய்ய மாட்டேன் என்று.  அப்படிச் சொன்ன தவ்ஹீது வியாபாரிதான் தா.தா.சாவினரின் இன்றைய தலைவர். இதை இதே இடத்தில் மீட்டிங் போட்டு மறுக்கணும் நிபந்தனைப்படி.
எதையும் மறுப்பதாக இருந்தால் பொய் சத்தியம் செய்து மறுத்து விடுவார்கள். அவர்களிடம் உள்ள பழக்கம் அது. சத்தியம் பண்ணு என்றால் ஈசியாக சத்தியம் பண்ணி விடுவான் தா.தா.சாக்காரன். இது பொய்யாக இருந்தால் அல்லாஹ்வுடைய லஃனத்து இறங்கட்டும் என சொல் என்றால் பயப்படுவான். 
நிறைய குறிப்புகள் தந்து இருக்கிறார்கள். நாம் ஒன்றும் அவர்களுக்கு பயந்து கொண்டு பேசாமல் விடவில்லை. எங்கள் தலைவர்கள் வேண்டாம் என்று சொல்வதால் நிறுத்துகிறேன். இன்னும் நிறைய வண்டவாளங்கள் இருக்கிறது. ஒரு மணி நேரம் பேசணும் என்று சகோதரர்களெல்லாம் சொன்னார்கள். உங்களுடைய வண்டவாளங்கள், அசிங்கங்கள். (இந்த நேரத்தில் ஒருவர் சீட்டு எழுதி தருகிறார்)
தலைவர்கள் வேண்டாம் என்கிறார்கள். தொண்டர்களோ குறிப்பு தந்து கொண்டு இருக்கிறார்கள். சமுதாய துரோகி யார்? என்பதற்கு பதில் சொல்லுங்கள் என்று எழுதி தந்திருக்கிறார்கள். 
துரோகி யாரு? எவன் அந்தரங்கமாக பேரம் பேசி விட்டு வெளியில் வந்து நாடகம் போட்டானோ அவன்தான் சமுதாய துரோகி. சுருக்கமாக சொல்லி விடுகிறேன். அந்தரங்கமாக தாயே உன்னடி சரணம். அம்மா தாயே உன் பாதம் சரணம் என்று போய் விட்டு, மேடையில் வந்து ஹேய் என வீர வேஷம் போடுகிறானோ அவன்தான் சமுதாய துரோகி. 
நிறைய குறிப்புகள் வந்து கொண்டு இருக்கிறது. நமது தலைவர்கள் இப்படியெல்லாம் விமர்சிப்பதை விரும்பவில்லை. ஒன்றை மட்டும சொல்லி முடித்து விடுகிறேன். யாரை இவர்கள் தலைவராக ஏற்றுக் கொண்டு இருக்கிறார்களோ, அந்த தலைவர் மீது  அவர்களின் தலைவர் மீது .தா.தா.சாவின் தலைவர் மீது அசிங்கமான குற்றச்சாட்டுக்கள் கூறியவர்தான் லுஹா. 
ஜவாஹிருல்லாஹ் அவர்கள் மீது ஒரு குற்றச்சாட்டு வைத்தார்கள் தா.தா.சாவினர். ஜவாஹிருல்லாஹ் அவர்களிடம் நான் கேட்கவே இல்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக அது பொய் என்று நான் மறுத்தேன். புரிகிறதா?
இன்றைக்குள்ள அந்த தா.தா.சாவின் தொண்டர்களிடம் அவர்கள் தலைவர்கள் மீது உள்ள குற்றச்சாட்டுக்களை மறுக்கட்டும் பார்ப்போம். தொண்டர்களுக்கே தெரியும். அவனும் திருடன் இவனும் திருடன். 
பீ.ஜைனுல் ஆபிதீன் பற்றி அசிங்கமான குற்றச்சாட்டுக்களைச் சொன்னவர் ஷம்சுல்லுஹா. நமது தலைவர்கள் சொல்லிக் காட்ட வேண்டாம் என்கிறார்கள். அசிங்க அசிங்கமான குற்றச்சாட்டு. அவற்றை மேடையிலே சொல்ல முடியாது. பினாயில் போட்டு கழுவினாலும் நாற்றம் போகாது. பதில் சொல்பவர்கள் நிபந்தனைப்படி பதில் சொல்லணும். 
பொதுக் கூட்டங்களிலும், ஜும்ஆ மேடைகளிலும்  பெட்டைகள் என்றும் பேடிகள் என்றும் நாய்கள் என்றும் பேசி இருக்கிறார்கள். அந்த வேதனையில் நமது சகோதரர்கள் பதில் சொல்லணும் என்கிறார்கள். எங்களை மேடையில் பேச முடியுமா என சவால் விட்டுள்ளார்கள். அதனால்தான் பதில் சொல்லி உள்ளோம். நமது தலைவர்கள் போதும் என்கிறார்கள். இன்னும் 4 பக்க குறிப்புகள் உள்ளது.

அதனால்தான் நான் அப்துல்வாஹிதிடம் சொன்னேன். இதற்கு தனிக் கூட்டம் போட்டு நாம் மட்டும் பேசுவோம். தலைவர்களை வைத்துக் கொண்டு பேச முடியாது என்று சொன்னேன். தலைவர்களுக்கு கட்டுப்பட்டு  இத்துடன் முடிக்கிறேன். 


Comments

muslim said…
கொள்கை வியாபாரிகளை அடையாளப்படுத்தாமல் அவர்கள் மானம் காப்பது முறையா? ஆடியோ காஸட் ஆதாரம் இருப்பதாஅவும் கூறும் நீங்கள் அதை வெளியிடலாமே. ததஜ வை கண்மூடிப் பின்பற்றும் இளைஞர்களை காப்பாற்றலாமே.நீங்கள் விரும்பினால் எனக்கு அனுப்பி வையுங்கள். ஏற்புடையதை மட்டும் பதிவேற்றம் செய்தம் செய்து புரோகிதத்தை தோலுரிப்போம்.

இக்பால்

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.