போர்ஜரிகளின் வரலாற்றில் ஒரு ஏடு. அவர்கள் எதுவும் சொல்வார்கள் எதையும் செய்வார்கள் .

“PJ முபாஹலாவுக்காக வரவில்லை. என்று கூறி விட்டார்களே“ ”முபாஹலா இல்லை என முன்பே அன்றே எழுதிக் கொடுத்து விட்டோம்”  என்றார் லுஹா.

முபாஹலாவிலிருந்து பழுலுல் இலாஹி நழுவி விட்டார் என்று டவுசர் கட்சியினரால் பரப்பப்படும் பொய்ச் செய்திகள் சம்பந்தமாக விளக்கம் கேட்டுள்ளீர்கள். 

14.9.2005 அன்று  மேலப்பாளையம் பசார் திடலில் டவுசர் கட்சி தலைவரும் முபாஹலா பூச்சாண்டியுமான பி.ஜைனுல் ஆபிதீன் பேசுவதற்காக பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த மேடையில் டவுசர் கட்சியின் சதி திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன்னேற்பாடாக பகிரங்க அழைப்பு, ஒப்பந்தம் என்ற நாடகத்தை ராஜ்மஹாலுக்குள் நடத்த முடிவு செய்திருந்தனர்.  


”முஸ்லிம் டிரஸ்டு, முஸ்லிம் மீடியா டிரஸ்டு யாவும் த.மு.மு.க.வுக்குரியது இது பொய்யாக இருக்குமானால் பழுலுல் இலாஹியாகிய என்மீது யா அல்லாஹ் உனது சாபத்தை இறக்கு. உண்மையாக இருந்தால் மோசடி வழியில் உரிமை கொண்டாடிக் கொண்டிருக்கும் பி.ஜே. மீதும் பி.ஜே.யுடனிருக்கும் டிரஸ்டிகள் மீதும் துணை நிற்கும் லுஹா போன்றவர்கள் மீதும் யா அல்லாஹ் உனது லஃனத்தை-சாபத்தை இறக்குவாயாக ஆமீன்"

இது மாதிரி ஒவ்வொரு விஷங்களுக்கும் பிரார்த்தனை செய்ய - முபாஹலா செய்ய ஒப்பந்தம் ஒன்றும் தேவை இல்லை. எனவே 14 ஆம் தேதி பொதுக் கூட்ட மேடைக்கே மனைவி மக்களுடன் வருகிறேன். பி.ஜே, லுஹா வகையறாக்கள் வரத் தயாரா  என்றேன். 14.9.2005 அன்று மேலப்பாளையம் பசார் திடலில் பி.ஜே. பேச இருந்த பொதுக் கூட்ட நிகழ்சியையே ரத்து செய்து விட்டார்கள். 


என்னுடன் என்றைக்குமே முபாஹலாவுக்கு வரத் தெம்பு இல்லாத டவுசர் கட்சி லுஹா பெயரால் நாங்கள் தயார் என ஒரு நோட்டீஸ் போட்டது. தலைப்புதான் நாங்கள் தயார் என்றிருந்ததே தவிர அதில் உள்ளவை யாவும் அவர்கள் தயார் இல்லை என்பதைத்தான் பறை சாற்றிக் கொண்டிருந்தன. முபாஹலாவுக்கு பயந்த அவர்கள் அதிலிருந்து நழுவி பின் வாங்கி ஓடி விட்டார்கள். 

அதை மறைக்க (முபாலஹா பண்ணக் கூடாது என்ற கொள்கை உடைய) ஜவாஹிருல்லாஹ், ஹைதர் அலி போன்றவர்வர்களையும் முபாலஹாவுக்கு அழைத்து வந்தால்தான் நாங்கள் வருவோம் என்று திசை திருப்பி நழுவி இருந்தனர். 

முபாஹலாவே பி.ஜே, லுஹா அணி பிறர் மீது கூறி வந்துள்ள பொய்க் குற்றச்சாட்டுகள் பற்றியதுதான். அப்படி இருக்க நாம் மட்டுமே அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் கூறி வந்துள்ளது போலவும் எனவே அவர்கள் சார்பான குற்றச்சாட்டுகள் என புதிதாக மேலும் சில பொய்களை எழுதி இருந்தனர்.

அதில் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. என்றெல்லாம் எழுதி இருந்தனர். மடியிலே கனமில்லை. வழியிலே பயமில்லை. எனவே இந்திய அனைத்து துறை அதிகாரிகளின் முன்னிலையிலும் முபாஹலா பண்ணத் தயார் என்றேன். அரண்டு, மிரண்டு விட்டது பி.ஜே. அணி. 


13 ஆம் தேதி மாலை மேலப்பாளையம் காவல் நிலையத்தில் காவல் துறை ஏ.சி, தாசில்தார் முன்னிலையில் சமாதான (பீஸ் கமிட்டி) கூட்டம் நடந்தது. “நாளை ஜைனுலாப்தீன் ரமழான் நிகழ்ச்சியில் பேச வருகிறார். அங்கு நீங்கள் போவீர்களா” என்று ஏ.சி. கேட்டார். ”பி.ஜே. சவால் விட்டுள்ளதால் மனைவி மக்களுடன் போவேன்”  என்றேன். 

“PJ முபாஹலாவுக்காக வரவில்லை. நோன்பு பற்றித்தான் பேச வருகிறார் என்று கூறி விட்டார்களே“ என்றார். ஒப்பந்தம் செய்ய வா என அசிங்கமாக எழுதி எனக்கு வந்த மொட்டைக் கடித காப்பியைக் காட்டினேன்.   

உடனே லுஹா எங்களையும் அசிங்கமாக விமர்சித்து மெயில் வந்துள்ளது. எங்கள் பள்ளியில் ஹோமோ செக்ஸ் நடப்பதாக எழுதி உள்ளார்கள் என்றார் லுஹா. 

ஆதம் ஆதம் என்ற மொட்டைக் கடித பேர்வழிக்கு எனது மெயிலிலிருந்து பதில் அனுப்பிய நான், அதன் கடைசியிலே, மானம் கெட்ட பெட்டைகளே பள்ளிவாசல் மாடியில் லாம் விவகாரம் பண்ணும் கூட்டமே சீச்சீ வெட்கக் கேடு தூ தூ மானக் கேடு என எழுதி இருந்தேன். இதில் எந்தப் பள்ளி? யார்? என்ற பெயர் குறிப்பிட்டு கூறவில்லை. லுஹாவோ எங்கள் பள்ளியில் ஹோமோ செக்ஸ் நடப்பதாக எழுதி உள்ளார்கள் என்று கூறுகிறார். அப்படியானால் லுஹாவின் இந்தக் கூற்றுக்கு என்ன அர்த்தம்?


”நோன்பு பற்றித்தான் பேசப் போகிறோம், கேள்வி பதில் நிகழ்ச்சிதான் என விளம்பரம் செய்து விட்டு  ஒப்பந்தம் செய்ய வா என  மொட்டைக் கடிதங்கள் அனுப்பும் இவர்கள் இங்கு இப்படி சொல்லி விட்டு நாளை நாங்கள் வந்தோம் அவர்கள் வரவில்லை என்று கூறி விடுவார்கள். எனவே எதுவும் எழுத்து பூர்வமாக இருக்க வேண்டும்|| என்றேன்.

”அவர்களிடம் எழுதி வாங்கி வைத்துக் கொள்கிறேன். அப்படி சொன்னால் அந்த காப்பியை உங்களுக்கு தருவேன்|| என்றார். ”எழுதி வாங்குங்கள்” என்றேன்.

”முபாஹலா இல்லை என முன்பே (9-9-2005அன்றே) எழுதிக் கொடுத்து விட்டோம்”  என்றார் லுஹா. 9ஆம் தேதியே லுஹா தரப்பு எழுதிக் கொடுத்துள்ளதை பைலிலிருந்து எடுத்த அதிகாரி நமது பார்வைக்கு தந்தார்கள். அதில், ”எங்கள் மாநில தலைவர் இந்த நிகழ்ச்சி சம்பந்தமாக வரவில்லை. அவர் வேறு ஒரு நிகழ்ச்சிக்கு வருகிறார்” என்று குறிப்பிட்டிருந்தார்கள்.



லுஹா தரப்பு எழுதி கொடுத்துள்ள அதில் லுஹா அல்லாத 4 பேர் கையெழுத்து மட்டும் இருந்தது. லுஹா கையெழுத்து அதில் இல்லை. அதுவும் அஸதுல்லா என்பவரது பெயரால் எழுதப்பட்டிருந்தது. இதைக் கண்டு சுதாரித்துக் கொண்ட நாம், “இது தெளிவு இல்லை. தெளிவாக எழுதி தராவிட்டால் ராஜ்மஹாலுக்கு போவேன்“ என்றேன்.  பிறகு லுஹா பெயரால் எழுதி கொடுத்தார்கள். 

அதில், முபாஹலா நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. மேலும் 14-09-05 அன்று மேற்படி ராஜ்மஹாலில் நோன்பு மற்றும் மார்க்கம் சம்பந்தமாக நிகழ்ச்சி மட்டுமே நடைபெறும். முபாஹலா சம்பந்தமாக எவ்வித கருத்துக்களும் இடம் பெறாது என்று உறுதி அளிக்கிறேன்.  மேற்படி கூட்டத்திற்கு உறுப்பினர் அட்டை உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர் என்று எழுதி லுஹா கையெழுத்துடன் மேலும் 6 பேர் கையெழுத்திட்டு கொடுத்தனர். இதன் பிறகு  முபாஹலா நிகழ்ச்சி இல்லாததால் நாம் அங்கு செல்ல மாட்டோம் என எழுதி கொடுத்தோம்.

14ஆம் தேதி நோன்பு நிகழ்ச்சி எனும் பெயரால் ராஜ் மஹாலில் கூடிய டவுசர் கட்சியினர் முபாஹலா செய்யத்தான் சென்றோம் பழுலுல் இலாஹி வரவில்லை என்று சொல்வது வடிகட்டிய பொய்தான். அதில்  அவர்கள் உண்மையாளர்கள் என்றால் ஷம்சுல் லுஹாவின் கைப்பட எழுதி வாங்கி எனக்கு அனுப்புங்கள். நாங்கள் தயார் என ஷம்சுல்லுஹா பெயரால் வந்த நோட்டீஸை லுஹாவிடம் கொடுத்து இதை நான்தான் வெளியிட்டேன் என எழுதி கையெழுத்திட்டுத் தாருங்கள் என்று கேட்டதற்கு எழுதி தர லுஹா மறுத்து விட்டார். 

இந்த கேவலமான நோட்டீஸை கிராபிக் பார்க், சென்னை-5 என்ற இடத்தில் அச்சிட்ட மாதிரி அந்த பெயரை பயன்படுத்தியுள்ளார்கள். 044-28444445 என்ற கிராபிக் பார்க் நம்பருக்கு போன் போட்டு கேட்டதற்கு, “அதை நாங்கள் அச்சிடவில்லைஜி” என்று அவர்கள் மறுத்து விட்டார்கள். இப்படிப்பட்ட போர்ஜரிகள் எதுவும் சொல்வார்கள் எதையும் செய்வார்கள். 

பி.ஜே. துபையில் இருந்தவரை துபை என்ற பெயரையே அவர் களவாடிய பத்திரிக்கையில் எழுத பயந்தார். துபையிலிருந்து தாயகம் திரும்பிய பின்னர்தான் பொய்களை அவிழ்த்து விட்டார்கள். அது மாதிரி ராஜ்மஹால் நிகழ்ச்சி பற்றிய செட்டப் காட்சி சி.டி.களை தயாரித்து வெளிநாட்டிலும் வெளியூர்களிலும் விற்பனைக்கு விடலாம். அந்த சி.டி.க்கள் கிடைத்தாலும் உடனடியாக அனுப்பித் தாருங்கள். 


இப்பொழுதுள்ள சூழலில் நான் ஒன்று சொல்ல அவர்கள் ஒன்று சொல்ல எது உண்மை என தெரியாமல் தவிக்கும் அனைவருக்கும் எனது வேண்டுகோள். ”முபாஹலாவிலிருந்து நழுவிட பழுலுல் இலாஹி சதி செய்திருந்தால், சதி செய்து நழுவி இருந்தால் பழுலுல் இலாஹியை நாசமாக்கு.

முபாஹலாவிலிருந்து நழுவிட பி.ஜே, லுஹா அணி திசை திருப்பல் நாடகம் நடத்தியிருந்தால், இனியும் நழுவிக் கொண்டு நாடகம் நடத்திக் கொண்டிருந்தால் பி.ஜே.யையும் அவருடன் இருக்கும் டிரஸ்டிகளையும் த.த.ஜ. நிர்வாகிகளையும் லுஹாவையும் லுஹாவுடனிருக்கும் மஸ்ஜிதுர் றஹ்மான் நிர்வாகிகளையும் யா அல்லாஹ் நீ நாசமாக்கு” என இனி ஒவ்வொரு வேலையும் துஆச் செய்யுங்கள். 

முபாஹலாவிலிருந்து நழுவி யார் ஏமாற்றி இருந்தாலும், ஏமாற்றப்பட்டு குழம்பி பாதிப்புக்குள்ளாகி இருப்பது மக்கள்தான். எனவே பாதிப்புக்குள்ளான அந்த மக்கள் மேற்கண்டவாறு துஆச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அதுபோல் மொட்டைக் கடித பேர்வழிகளின் மீதும் மொட்டைக் கடித கட்சியினர் மீதும் அல்லாஹ்வின் லஃனத்து -சாபம் இறங்கட்டுமாக என்றும் துஆச் செய்யுங்கள். பழுலுல் இலாஹி பெயராலும், ஜவாஹிருல்லாஹ் பெயராலும் போர்ஜரி நோட்டீஸ் வெளியிட்டவனையும் இ.மெயில் அனுப்பியவனையும் யா அல்லாஹ் நீ நாசமாக்கு என துஆச் செய்யுங்கள். 


யா அல்லாஹ்! உன்னுடைய பள்ளியில் தொழ வந்த பையன்களிடம் எவன் லாம் விவகாரம் பண்ணினானோ அவனை நீ நாசமாக்கு. இதை கண்டு கொள்ளாமல் இருக்கும்; பள்ளி நிர்வாகிகளையும் நாசமாக்கு.

யா அல்லாஹ்! உனது பள்ளியாம் மஸ்ஜிதுர்றஹ்மானில் வைத்து யார் பொய் சத்தியம் செய்து பொய் சாட்சி சொல்லி உள்ளார்களோ அவர்களை நீ நாசமாக்கு என துஆச் செய்யுங்கள்.

மவுத் ஹயாத் எல்லாருக்கும் பொதுவானது. எனவே பொய்யர்களின் மீதும் பொய்களைக் கூறியே சமுதாயத்தில் பிளவு ஏற்படுத்தி வருபவன் மீதும் அல்லாஹ்வின் லஃனத்தை வேண்டுங்கள்.

1986லிருந்து வரிசையாக அனைத்துக்கும் முபாஹலா செய்ய நான் பின் வாங்கியது இல்லை. நாடகம் போட்டு நடித்து ஏமாற்றியவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக.
   அன்புடன்: கா.அ. முஹம்மது பழுலுல் இலாஹி
                                              19-09-2005 


Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.