ஒழுக்கக் கேட்டில் விஞ்சி நிற்பவர்கள் யார்? பட்டி மன்றத்திற்கு நான் ரெடி பி.ஜே. சவால்.

ஒழுக்கக் கேட்டில் விஞ்சி நிற்பவர்கள் யார்? பி.ஜே. அணியைச் சார்ந்த லுஹா வகையறாவா? பட்டி மன்றத்திற்கு நான் ரெடி நீங்கள் ரெடியா? பி.ஜே. சவால்.
உண்மை, வணக்கம், கொள்கை, நாணயம் இவை இப்போது இல்லை லுஹாவிடம். இங்கே அன்புடன் விளக்கி உள்ளார் பி.ஜே.

பெறுனர்: 04-02-2004
எஸ்.இ.எம். முஹம்மது மஸ்தான்,
113ஏ. ஹாமீம்புரம் தெற்கு தெரு,
மேலப்பாளையம்.

அன்புச் சகோதரருக்கு பீ.ஜெய்னுல் ஆபிதீன் எழுதிக் கொள்வது. தங்களின் மடல் கிடைத்தது. கடிதத்தில் விளக்கம் அளிப்பதை விட களத்தில் பதில் சொல்லவே நான் விரும்புகிறேன். எந்நக் குற்றச்சாட்டையும் நேரடியாகவே சந்திக்க நான் எப்போதும் தயங்கியதில்லை. இப்போதும் எனக்குத் தயக்கம் கிடையாது.

லுஹாவாகட்டும் (பீ.ஜெய்னுல் ஆபிதீனாகிய) நானாகட்டும் நீங்களாட்டும் மனிதர்கள் என்ற முiறையில் தவறு செய்பவர்கள் தான், தவறு செய்பவர்களில் குறைந்த தவறு செய்தவர் யார் என்ற அடிப்படையில் தான் எவரைப் பற்றியும் முடிவு செய்ய முடியும். அப்படித் தான் நானும் முடிவு செய்தேன் இதைக் கவனத்தில் கொள்ளாமல் குற்றச்சாட்டு சுமத்துவோர் மலக்குகளாக இருக்க வேண்டும் உங்கள் ஊரில் லுஹா சுலைமான் இப்ராஹீம் உள்ளிட்டவர்கள் ஒரு பக்கமும் ரிஃபாயீ இனாயத்துல்லா அப்பாஸ் உள்ளிட்டோர் ஒரு அணியாகவும் ஆனார்கள்
இவ்விரு சாராரின் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நான் ஆராய்ந்த போது லுஹா வகையறாவை விட ரிஃபாயீ வகையறாவிடம் அதிகமான தவறுகள் இருந்ததை நான் அறிந்தேன் இந்தநிகழ்ச்சிக்கு முன்வரை எனக்கும் ரிஃபாயிக்கும் எந்த பகைமையும் இருந்ததில்லை. நீங்களும் இது குறித்து உண்மையை அறிந்து கொள்ள விரும்பினால் மேலப்பாளையம் தவ்ஹீது மக்கள் அனைவரையும் கூட்ட (தொண்டியைச் சார்ந்த) நான் தயாராக இருக்கிறேன்.
கொள்கை, வணக்கம், தியாகம், உண்மை, நாணயம் போன்ற விஷங்களில் இரு தரப்பினரும் எவ்வாறு நடந்து கொண்டனர் என்பது குறித்து பொது விவாதம் நடத்துவோம். லுஹா வகையறாக்கள் மீது குற்றம் சுமத்தி விசாரிப்பது போல் இதுவரை பொறுட்பாளர்களாக இருந்த ரிஃபாயி வகையறாக்களும் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டால் ரிஃபாயி வகையறாவை விட லுஹா வகையறாவின் தவறுகள் குறைவு என்பதை நான் நிரூபிக்கத் தயார். லுஹா சுலைமான் இப்றாஹீம் மற்றும் வகையறாக்கள் மீது யார் வேண்டுமாலும் குற்றம் சாட்டலாம் அதுபோல் ரிஃபாயி இனாயத்துல்லாஹ் அப்பாஸ் வகையாறக்கள் மீது யார்வேண்டுமானாலும் குற்றம் சாட்டலாம் அதுபோல் மேலப்பாளையம் பொதுக்குழு கூட்டப்பட்டது குறித்து (தொண்டியைச் சார்ந்த) என்னையும் விசாரிக்கலாம் உங்கள் கடிதத்தில் கூறியதை மக்கள் மத்தியில் வைத்து என்னிடம் கேட்கலாம்.
உங்களுக்கும் முதுகுக்குப் பின்னால் இருந்து கொண்டு தவ்ஹீதை அரசியலாக்க முயல்வோர் அனைவருக்கும் எனது அறைகூவல்.
இதற்க்கு ரிஃபாயியும். இனாயத்துல்லாவும் ஒப்புக் கொண்டால் அவர்களிடம் ஒப்புதல் கடிதம் பெற்று எனக்கு அனுப்பவும் நான் வரக் கூடிய தேதியை உடன் தெரிவித்து அதற்கான ஏற்பாட்டிலும் இறங்குகிறேன் இன்ஷh அல்லாஹ்.
ரிபாயி தரப்பில் அவர் விரும்பக்கூடிய மேலப்பாளையத்தைச் சேர்ந்த தவ்ஹீதுவாதிகள் அனைவரையும் அவரே அழைக்கலாம் லுஹா தரப்பில் அவர் விரும்பக்கூடிய மேலப்பாளையத்தைச் சேர்ந்த தவ்ஹீதுவாதிகளை அவரே அழைக்கலாம்.
குறிப்பு: இதற்கு உங்களால் ஏற்பாடு செய்ய இயலவில்லையானால் நீங்கள் தப்புப் பிரச்சாரம் செய்வதை நிறுத்திக் கொள்ளுங்கள். தப்புப் பிரச்சாரம் செய்தால் உங்களுக்கும் எனக்கும் மறுமையில் ஒரு வழக்கு இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களைப் போல் அரை குறையாக விபரம் தெரிந்து கொண்டு புழுதி வாரித் தூற்றும் ஒவ்வொருவருக்கும் இதன் நகல் கொடுக்கப்படும்.
அன்புடன். . P.ஜைனுல் ஆப்தீன்
குறிப்பு: 1.
http://chennai.sancharnet.in/star2003/ என்ற வெப்சைட்டில் இருந்த ஆர்.எம்.ஏ. இமாம் உடைய கடிதத்தை வெளியிடப்பட்டது. அதில் அல்லாஹ்வின் பயம் இன்றி பி.ஜே. எழுதிய கடிதம் உரியவருக்கு அனுப்பாமல் மஸ்ஜிதுர் றஹ்மானுக்கு அனுப்பி உள்ளார் என்று குறிப்பிட்டிருந்தார். அந்தக் கடிதத்தை பலர் கேட்டுள்ளார்கள். அந்தக் கடிதம் வெப்சைட்டில் இல்லை. எனவே பி.ஜே. எழுதி உள்ளதை அப்படியே மேலே டைப் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பு: 2.
இந்த கடிதத்தின் மூலம் பி.ஜே. அவரை அறியாமலேயே அவரது ஆதரவாளர்களுக்கு தன்னைப் பற்றியும் தனது வகையறாக்கள் பற்றியும் சில முக்கிய குறிப்புகளை தெளிவு படுத்தி இருக்கிறார். ஆழ்ந்து கவனிக்க!
(அ) திரும்ப திரும்ப, திரும்ப திரும்ப, திரும்ப திரும்ப தவறு செய்பவர்கள்தான் பி.ஜே. வகையறாக்கள் என்று வாக்கு மூலம் தந்துள்ளார் பி.ஜே.
(ஆ) மேலப்பாளையம் தவ்ஹீதை கூறு போட்ட கும்பல் தலைவர்தான் பி.ஜே.
(இ) துருவி துருவி தனி மனிதக் குறைகளை ஆராயும் அறிஞர் பெருமகன்தான் பி.ஜே.
(ஈ) உண்மை, வணக்கம், கொள்கை, நாணயம் இவை இப்போது இல்லை லுஹாவிடம். இங்கே அன்புடன் விளக்கி உள்ளார் பி.ஜே.
(உ) இங்கே அறைகூவல் விடுத்திருப்பது, பிறர் முதுகுக்குப் பின்னால் இருந்தே பழகிப் போன அண்ணன் பி.ஜே. தான்.
(ஊ.) மற்றவர்களை தான் விமர்சிக்கும் போது மறுமைக்கு அஞ்சாத மகான்? பி.ஜே, மற்றவர்கள் தன்னை விமர்சிக்கும் போது மறுமை எனக் கூறி மீண்டும் ஒரு முறை பயப்படுத்தி உள்ளார் பயில்வான் பி.ஜே!
குறிப்பு: 3.
தவ்ஹீது சம்பந்தமானவை என்றால் அரபியிலும் தவ்ஹீதுக்கு அப்பாற்பட்டவை என்றால் தமிழிலும் கையெழுத்துப் போடுவது பி.ஜே.ன் வழக்கம். இங்கு அவர் தமிழில் கையெழுத்திட்டிருப்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.
குறிப்பு: 4.
கொள்கை, வணக்கம், தியாகம், உண்மை, நாணயம் இவற்றில் குறைவு உடையவர்கள்தான் லுஹா அணியினர் என்பதை அடையாம் காட்டி நாணயக் குறைவில் கூடுதல் குறைவு என்ன வாழ்கிறது என்று மக்கள் சிந்திக்கும் நிலையை ஏற்படுத்தி விட்டார்.
குறிப்பு: 5.
குர்ஆன் ஹதீஸ்கள்தான் மார்க்கம் என்பதை நிலை நாட்ட ஒரே மேடையில் சந்திக்கத்தயார், இஸ்லாம்தான் உண்மை மார்க்கம் என்பதை நிலை நாட்ட எந்த மதத்தவர்களுடனும் பொது விவாதத்திற்கு தயார் என்ற உயர்வான நிலையில் இருந்தவர், தனி மனிதர்களிடம் உள்ள குறைகளை ஆய்வு? செய்து பொது விவாதம் பண்ணும் நிலைக்கு இறங்கி விட்டார்.
குறிப்பு: 6.
இவர் திருந்தவில்லை என்றால் இது போன்ற இழி நிலைகள் இவர் மூலமே இவருக்கு இன்னும் தொடரலாம்.
குறிப்பு: 7.
இவரது கூற்றை ஆராயாமல் ஆராதிக்கும் ஒவ்வொருவருக்கும் இதன் நகல் கொடுக்கப்படும்.
For your information: Email Id and address of Samsul Luha is :-
almubeen@hotmail.com , masjidurrahman@hotmail.com
0091-462-2352721 , 2352014, 2350130, 2351234
14. பஷPர் அப்பா தெரு, மேலப்பாளையம், திருநெல்வேலி, 627005.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.