ஒற்றுமை வேடதாரிகளின் முகத்திரை கிழிகிறது.

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம். 

பழ்லுல் இலாஹி மீது கூறிய குற்றச்சாட்டுக்கள் பொய்யானதே ஷம்சுல்லுஹா ஒப்புதல். அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... 

வெளிநாட்டுப் பணம் வாங்கக் கூடாது என்பதை பைலாவாகக் கொண்டு செயல்படுதாக தாயக மக்களை ஏமாற்றி பொதுக்கூட்டங்களிலும் இன்ன பிற வழிகளிலும் விதவிதமாக வசூலித்துக் கொண்டிருப்பவர்கள் பி.ஜே. அணியினர் என்பதையும், 

வெளிநாட்டுப் பணத்திற்காக அவ்வப்போது ஏதாவது காரணங்களைச் சொல்லி வந்து வெளிநாடுகளில் தவம் கிடந்து லட்சக் கணக்கில் வசூலித்துச் செல்பவதையே தொழிலாகக் கொண்டிருப்பவர்களும் அந்த பி.ஜே. அணியினர்தான் என்பதையும் அனைவரும் அறிவீர்கள். 

அந்த வரிசையில் இப்பொழுது வெளிநாட்டுப் பணத்திற்காக வந்து ஷார்ஜாவில் தவம் கிடப்பவர் ஷம்சுல்லுஹா. அவருக்கு 01.11.2003 அன்று கா.அ.முஹம்மது பழ்லுல் இலாஹியாகிய நாம், 'நான் தயார் நீங்கள் தயாரா?' என்ற தலைப்பில் எழுதிய கடிதத்திற்குப் பிறகு நம் மீது கூறிய குற்றச்சாட்டுக்கள் பொய்யானதே என்பதை ஒப்புக் கொண்டுள்ளார். 

முதலில் நாம் எழுதிய கடிதத்தை தலைப்புகளுடன் உங்கள் பார்வைக்குத் தருகிறோம். பொய்யன், பொய் சாட்சி சொல்பவன், மோசடியாளன், பிராடு பம்பாய் புகழ் மேலப்பாயைம் லைட்பூலி ஷம்சுல் லுஹா அவர்களே! 

மஸ்ஜிதுர் றஹ்மானில் கொத்தலெப்பை வேலையையும் இர்ஷாத்தில் ஆசிரியர் வேலையையும்; உங்கள் வருவாய்க்காக ஏற்படுத்திக் கொண்டீர்கள். இப்பொழுது கடையநல்லூர் மதரஸாவுக்கு வசூலிப்பதையும் பார்ட்-டைம் வேலையாக ஏற்று சவூதி கத்தர் சென்று வசூல் வேலை செய்தீர்கள். 

யு.ஏ.இ. வந்த பின் மேலப்பாளையவாசிகளிடம் மேலப்பாளையம் மதரஸா வசூல் என்றும் வெளியூர்வாசிகளிடம் கடையநல்லூர் மதரஸா வசூல் என்றும் கூறி வரும் நீங்கள் ரமழானை ஒட்டி மேலும் ஒரு பார்ட் டைமாக தப்ஸீர் வேலையும் செய்து வருகிறீர்கள். 

உங்களை நான் சுத்த சூபியாக நம்பிக் கொண்டிருந்த காலத்திலேயே ஷம்சுல்லுஹா ஒரு பொய்யன், பொய் சாட்சி சொல்பவன், மோசடியாளன், பிராடு என்று பிரகடனப்படுத்திய வர்களுடனெல்லாம் யு.ஏ.இ. வந்ததும் தொடர்பு கொண்டுள்ளீர்கள். 

இதன் மூலம் ஷம்சுல்லுஹாவாகிய நீங்கள் ஒரு பொய்யன், பொய் சாட்சி சொல்பவன், மோசடியாளன், பிராடு என்பதை ஒப்புக் கொண்டுள்ளீர்கள் என்பது தனி விஷயம். 

ஷார்ஜாவில் மையமாகி இருக்கும் உங்களை முறையாக நேரில் சந்தித்து சில கேள்விகள் கேட்க முயற்சி செய்தேன். நீங்கள் ஓடி ஒளிகிறீர்கள். எனவே இந்தக் கடிதம். ஜமாஅத்தார் யார்? 

நீங்கள் சொன்ன பொய்களுக்கும், செய்த பொய் சத்தியத்திற்கும், பரப்பிய அவதூறுகளுக்கும் மேலப்பாளையவாசிகள் உங்களிடம் விளக்கம் கேட்டால் 'ஜமாஅத்தைக் கேட்கணும்' என்கிறீர்களாம். 

நீங்கள் கூறும் ஜமாஅத்தார் யார்? எதிர்ப்புகள் வந்ததும் கதிகலங்கி கண்ணீர் விட்டுக் கதறி அழுது ஷஇனி விரல் அசைக்க மாட்டேன், நெஞ்சில் கை கட்ட மாட்டேன், ஊருடன் ஒத்துப் போகிறேன்| என்று காலில் விழுந்து, ஸலாம் சொல்லி ஊருடன் ஒத்துப் போய் விட்டு, பெருங் கூட்டம் வந்ததும் வந்து ஒட்டிக் கொண்டார்களே! அந்தப் பிள்ளைகளா?  உங்கள் பாஷையில் சொல்வதென்றால் அந்த மையத்தீன் பிள்ளைகளா? 


பதவி பேரம் பேசி மஸாயில்களில் மாற்று கருத்துடைய முஸ்லிம்களுடன் பழகுவதை பாவமாய்க் கருதும் தவ்ஹீது அமைப்பில் பதவிக் காலம் வரை இருந்து விட்டு, மீலாது மவுலூது அமைப்பில் பதவி கிடைத்ததும் அங்கு போய் நேர்ச்சைப் பொட்டலங்கள் போட்டு விட்டு, அங்கு பதவி முடிந்ததும் மீண்டும் பதவி பேரம் பேசி ஜம்-மய்யத்தில் மய்யமாகி நான்தான் ஆக்டிங் (நடிப்புத்) தலைவர், செயலாளர் என்று பீற்றித் திரிபவர்களா? 

சம்பளத்திற்காக சங்கரன் பந்தலில் இருந்து விட்டு, துபை பணம் வருகிறது என்ற உடன் விலகி நஜாத் வேலைக்கு ஓடி வந்து கட்டுப்படியாகவில்லை என்றதும் மீண்டும் சுன்னத் ஜமாஅத் பள்ளியில் சேர்ந்து விட்டு பெருங் கூட்டமும் பொருளாதாரமும் கண்டவுடன் வந்து ஒட்டிக் கொண்ட உம்மைப் போன்றவர்களா? நீங்கள் கூறும் ஜமாஅத் யார்? 

ஒற்றுமைக்கு வழி என்ன? நீங்கள் சம்பளம் பேசி வேலை செய்து வரும் பத்திரிக்கையில் ஒற்றுமைக்கு வழி என்ன? என்ற தலையங்கம் எழுதப்பட்டுள்ளது. இது மக்களை ஏமாற்றும் தலையங்கம். 

அதனால்தான்; குர்ஆன் ஹதீஸ் பத்திரிக்கையில் குர்ஆன் ஹதீஸ் வழியில் ஒற்றுமைக்கு வழி கூறாமல் தவ்ஹீத் ஜமாஅத் கருதுகின்றது என்று சொந்த கருத்து எழுதப்பட்டுள்ளது. உண்மையிலேயே ஒற்றுமையை விரும்பக் கூடியவர்களாக இருந்தால் யாரைப்பற்றியெல்லாம் அவதூறு பரப்பி உங்கள் சுயநலக் கோஷ்டியின் பிழைப்புக்கு வழி தேடிக் கொண்டீர்களோ, அவர்களிடம் போய் மன்னிப்புக் கேட்டு பிரச்சனைகளுக்கு முடிவு கண்டு முற்றுப் புள்ளி வைத்திருப்பீர்கள். 

மனிதர்களின் மறதியின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளவர்தான் உங்கள் சுயநலக் கோஷ;டியின் மூத்தத் தலைவர் பி.ஜே. அதனால்தான் திருச்சியிலிருந்து துவங்கிய 'மனம் திறந்த மடல்' 'ஒற்றுமை' ஆகிய நாடகங்களை தொடர்ந்து நடத்தி புதியப் புதிய ரசிகப் பெருமக்களைப் பெருக்கி வருகிறார். 

சிறுபிள்ளைத்தனமான செயல். ஒரே மேடையில் சந்திக்கத் தயார் என்று ஹாமித் பக்ரி பகிரங்க அழைப்பு விடுத்திருந்தார். அதை ஷசிறுபிள்ளைத்தனமானது| என்று மூத்த தலைவர் பி.ஜே. விமர்சித்திருந்தார். அது சிறுபிள்ளைத்தனமானது என்றால் அந்த சிறுபிள்ளைத்தனமான செயலை அறிமுகப்படுத்தியவர் யார்? இந்த மூத்த தலைவர்தானே! இது நாடறிந்த உண்மையல்லவா. 

இப்பொழுது அதே மாதிரிதான் தலையங்கத்தில் .... முயல்வார்களானால் அந்த முயற்சிக்கு தவ்ஹீது ஜமாஅத் தயாராக இருக்கின்றது என்று எழுதி உள்ளீர்கள். இது பி.ஜேன் பார்வையில் இது சிறுபிள்ளைத்தனமானது அல்லவா?

எதற்குப் பிரச்சனை என்று கருதும் மக்கள். எதற்குப் பிரச்சனை என்று கருதும் மக்கள் இதற்காக எந்த முயற்சியும் செய்யமாட்டார்கள் என்ற தைரியத்தில் எழுதி உள்ளார். என்னுடன் பகிரங்க விவாதத்துக்கு தயார் என்றால் எனக்கு நேரடியாக எழுதி விவாதத்துக்கு தயாரா? என்று கேட்டிருக்கனும் என்று பக்ரியின் சவால் பற்றி பி.ஜே. தனது பிரசுரத்தில் விமர்சித்திருந்தார். 

(அது எவ்வளவு பெரிய மோசடியான மோடி விமர்சனம் என்பதை பக்ரி விளக்கி இருந்தார் அது தனி விஷயம்.) மூத்த தலைவர் கூற்றுப்படி எதற்குப் பிரச்சனை என்று கருதும் மக்கள் ஒற்றுமைக்கு வழி என்ன? என்று நீங்கள் கூறி உள்ள திட்டப்படி எந்த முயற்சியும் செய்ய மாட்டார்கள் என்ற தைரியத்தில் தலையங்கம் எழுதி உள்ளீர்கள். 

உங்கள் திட்டம் உளப்பூர்வமானது என்றால் சம்பந்தப்பட்டவர்களுக்கோ குறிப்பிட்ட பொதுவான அமைப்புகளுக்கோ நேரடியாக எழுதி இருப்பீர்கள். சிறுபிள்ளைத்தனமான தலையங்க நாடகம் நடத்தி இருக்க மாட்டீர்கள். எவனுடைய சுயநலனுக்காக. பிளவு பட்டு நிற்கும் பிரச்சாரகர்கள் அனைவரையும் ஒரே மேடையில் ஏற்றுவதன் மூலம் ஒரு நல்லுறவை ஏற்படுத்தலாம் என்று சில சகோதரர்கள் முயற்சி எடுத்தார்கள். அதை பெரும்பான்மை என்ற ஆணவத்தால் புறக்கணித்தீர்கள். 

பாரதூரமான குற்றச்சாட்டுக்களை ஒருவருக்கெதிராக ஒருவர் சுமத்திய நிலையில் ஒரே மேடையில் பேசுவது பயன் அளிக்க சாத்தியம் இல்லை என்று இப்பொழுது வியாக்கியானம் எழுதி உள்ளீர்கள்.

ஷpர்க் செய்பவர்கள் - முஷ்ரிக்குகள், நிரந்தர நரகத்திற்குரியவர்கள், குராபிகள் அவர்களுடன் திருமண ஒப்பந்தங்கள் வைத்துக் கொள்ளக் கூடாது. 1400 ஆண்டுகளுக்கு முந்தைய மக்கா காபிர்களுக்கு ஒப்பானவர்கள். அவர்களைப் பின்பற்றி தொழக் கூடாது. பாரதூரமான குற்றச்சாட்டுக்களில் இதைவிட மோசமானது உண்டா? 

அவர்களுடன் த.மு.மு.க. என்ற லட்டர் பேடு அமைப்பைக் கண்டு பிடித்து சமுதாய ஒற்றுமை என்ற போர்வையில் ஒரே மேடையில் பேச எப்படி சாத்தியமானது? பேசியது எவனுடைய சுயநலனுக்காக? 

பி.ஜே.பியைவிட மோசமானது காங்கிரஸ் என்று கூறிவிட்டு அந்த காங்கிரஸாருடனும் அவர்களைவிட கொடியவர்கள் என்று உங்களால் விமர்சிக்கப்பட்ட அ.தி.மு.கவினருடனும் ஒரே மேடையில் எப்படி பேச முடிந்தது? 

அதன் மூலம் அவர்களுடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ளவில்லையா? பொருளாதார மோசடியிலிருந்து காட்டிக் கொடுத்தது வரை பொருளாதார மோசடியிலிருந்து காட்டிக் கொடுத்தது உட்பட பல கடுமையான குற்றச்சாட்டுக்களைக் கூறிக் கொண்டவர்கள் ஒரே மேடையில் ஏறுவது சமுதாயத்தையும் நம்மையும் ஏமாற்றுவதாகவே அமையும் என்று எழுதி உள்ளீர்கள். 

 1.பிறர் மீது பி.ஜே. கூறிய பாரதூரமான குற்றச்சாட்டுகளில் இழிவான ஒன்று பெண்களுடன் தொடர்புபடுத்திக் கூறியது. அந்தப் பெருந்தகை "பி.ஜே. மதுரை மாநாட்டின்போது மேடையில் அமராமல் பொம்பளை புள்ளைகள் உள்ள கண்காட்சிப் பகுதியிலேயே நின்றார். -- ... பொம்பளை புள்ளைகளெல்லாம் ஆலிம்ஸா ஆலிம்ஸா என்று அவரைச் சுற்றி வலம் வந்தன" என்று லைட்பூலி ஷம்சுல் லுஹாவாகிய நீங்கள் கூறினீர்கள். 

நீங்கள் கூறிய இந்தக் குற்றச்சாட்டை வலு சேர்க்க உங்கள் கூட்டுடைப்பில் உள்ள மற்ற ரகசிய கூலிகளும் இதை விமர்சித்ததாக கூறினீர்கள். பி.ஜெ. தலைமையின் கீழ் உள்ள கணக்கு கள்ளக் கணக்கு 

 2.பொருளாதார மோசடி பற்றி பேச பி.ஜேக்கும் அவரது அணியினருக்கும் தகுதி இல்லை என்று கூறிய நீங்கள், பி.ஜெ. தலைமையின் கீழ் உள்ள கணக்கு கள்ளக் கணக்கு அதாவது லட்சக் கணக்கில் அட்ஜஸ்ட்மெண்ட் செய்துள்ளார்கள். இதை அன்வர்பாய் மூலம் அறிந்தேன். பொது மக்களின் பணத்தை குறிப்பிட்ட சிலருக்கு பி.ஜெ.யின் தலைமை தாரை வார்த்துள்ளதை அறிந்தேன் என்றும் கூறினீர்கள். 

  பாக்கர் பற்றிய --- அந்தச் செய்தி 3.எம்.ஐ.சுலைமான் களஞ்சியம் பெண்கள் கல்லூரியில் மாணவியை முத்தமிட்டார் என்ற ----- அந்தக் குற்றச்சாட்டுக்களையும் ஓவர்ஸீஸ் கால் மூலம் எத்தி வைத்தீர்கள். 

அதே களஞ்சியம் பெண்கள் கல்லூரியில் ரகீபாவாக இருந்த பெண்ணுடன் பாக்கர் தொடர்பாக இருந்தார் என்ற --- செய்தியை கடல் கடந்து வந்து பரப்பிய புண்ணியவானும் நீங்களே! காட்டிக் கொடுத்தது 

 4.ஏர்வாடி காசிமை காட்டிக் கொடுக்கப்பட்டார். இதை பி.ஜே. மூலம் அறிந்தேன் என்று கூறினீர்கள். . ஜாக்கை மாட்டி விட்ட பி.ஜே, 

 5.ஜாக் பற்றி உளவுத் துறையில் போட்டுக் கொடுத்து மாட்டி விட்டார் பி.ஜே. என்றும் கூறினீர்கள். உள்ளம் முழுவதும் பகைமையும் கசப்பும் நிரம்பியுள்ளவர்கள். தன்னை விமர்சிப்போர்மீது பழி சுமத்துவதில் வல்லவரான பி.ஜே. பிறர் மீது .கூறிய குற்றச்சாட்டுகளைவிட பி.ஜே.மீது லைட் தூக்கும் பூலியாகிய நீங்கள் கூறிய குற்றச்சாட்டுகளே அதிகம். பொருளாதார மோசடியிலிருந்து காட்டிக் கொடுத்தது வரை மட்டுமல்ல அதையும் தாண்டி குடும்ப -- அளவில் ஊடுறுவி -- --- குற்றம் சாட்டிய நீங்கள் எப்படி அவர்களுடன் ஒரே மேடையில் பேச சாத்தியமாகிறது. 

ஓரு அணியில் இருக்க முடிகிறது. ரகசிய கூலிக்கு மாரடிக்கும் கூட்டுடைப்புகளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். உள்ளம் முழுவதும் பகைமையும் கசப்பும் நிரம்பியுள்ளவர்களும், அந்த நிலையில் ஒரு மேடையில் காட்சி அளிப்பவர்களும் தங்களுக்குத் தேவையில்லை என்றால் குற்றம் சாட்டிக் கொள்பவர்களும் தேவை ஏற்பட்டால் ஒட்டிக் கொள்ளும் ஏமாற்றுப் பேர்வழிகளும் நீங்கள்தான் என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும். 

  வாதத்திறமையுடன் கூடிய நடிப்புத் திறமை ஒன்றுபட்டால் ரகசிய வருவாய் பாதிக்கும் பதவிகள் பறிபோகும் என்பதால் ஓன்றுபட விரும்பாத உங்கள் அணியினர் பல ஒற்றுமை முயற்சிகளை வாதத்திறமையுடன் கூடிய நடிப்புத் திறமையால் முறியடித்தார்கள். இப்பொழுது ஒவ்வொரு தரப்பும் ஏற்கக் கூடிய நடுவர்கள் மத்தியில் விசாரிக்கப் படவேண்டும். நடுவர்கள் அளிக்கும் தண்டனையை ஏற்றுக் கொள்ள வேண்டும். என்ற சாத்தியமற்ற நிபந்தனையை எழுதி உள்ளார்கள். அப்பாவிகள் உங்கள் அலங்கார வார்த்தைகளில் மதி மயங்கி ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். இப்படியே காலத்தை தள்ளிவிடலாம் என்பதுதான் உங்கள் அணியின் நோக்கம். 

நடுவர்கள் யார்? என்று முடிவு செய்யும் உரிமை. நடுவர்களாக யாரைச் சொன்னாலும் ஒரு தரப்பு ஏற்பதை மறுதரப்பு மறுக்கும். எனவே இதையே காரணமாகக் காட்டி காலம் தள்ளும் நிலை வேண்டாம். நடுவர்கள் யார் என்று முடிவு செய்யும் உரிமையை உங்களுக்கு விட்டுத் தருகிறோம். உங்களுடை தலையங்கத்தில் உள்ள திட்டத்தை நாம் ஏற்கிறோம். நடுவர்களாக யாரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். 

  தூண்டி விட்டு மாட்டி விட்ட தீவிரவாதி யார்? 1.ஜாக்கிலிருந்து 27.11.1994ல் பி.ஜே. ராஜினாமா செய்தது ஏன்? திசை மாறிய பி.ஜேக்கு ஏற்படும் சிக்கல் ஜாக்குக்கு வரக் கூடாது என்றா? ஜாக் நடவடிக்கை சரி இல்லை என்றா? 

2.தமிழ்நாட்டில் முஸ்லிம்கள் ஏராளமாக சிறை செல்ல மூலகாரணமாக இருந்து தூண்டி விட்டும் மாட்டி விட்டும் ஓடி ஒதுங்கிய தீவிரவாதி யார்? 

 3.ஜாக் பற்றி எதைக் கேட்டாலும் என் மனைவிக்கு எல்லாம் தெரியும் என்றும். ஜாக்குடைய கணக்கை கேட்டதற்கு தமிழ்நாட்டுடைய ஒட்டு மொத்த கணக்கும் என் மனைவி இடம் இருக்கு என்றும் கமாலுத்தீன் மதனி சொன்னதாக பி.ஜே. குரூப் சொல்வது உண்மையா? பொய்யா? 

 4.பி.ஜே.யும் அவரைச் சார்ந்தவர்களும் குணங்குடி ஹனீபாவின் த.மு.மு.கவில் போய்ச் சேர்ந்தது அவர்களின் தற்காப்புக்கா? சமுதாய நலனுக்கா? 

  மஸ்ஜிதுர் றஹ்மானின் தற்காலிக நிர்வாகிகள். 5.நாம் வெளிநாட்டில் இருப்பதால், மஸ்ஜிதுர் றஹ்மான் நிர்வாகத்தை உங்களிடம் தற்காலிகமாக ஒப்படைத்தோமா? இல்லையா? 

 6.உங்கள் தலைமையில் உள்ள தற்காலிக நிர்வாகிகளிடம் நாம் எப்பொழுது வந்து கேட்டாலும் நிர்வாகத்தை ஒப்படைத்து விடவேண்டும் என்ற உண்மை நிலையை கூறி விட்டேன் என்று நான் கேட்டபொழுதெல்லாம் நீங்கள் கூறினீர்களா? இல்லையா? 

 7.என் வீட்டில் இருந்த மஸ்ஜிதுர் றஹ்மான் பத்திரத்தை வழக்கு வகைக்குத் தேவை என என் தாயாரிடம் பொய் சொல்லி வாங்கிச் சென்றீர்களா? இல்லையா? 

  8.பம்பாயில் ஷம்சுல்லுஹா. இப்படி வரிசையாக அனைத்தையும் பேச வேண்டும். இவை பற்றி தீர்வு காண ஆதாரங்களாக உள்ள கீழ் காணும் ஆடியோ வீடியோ கேஸட்களின் பிரதிகளை நடுவர்களிடமும் வாதத் தரப்புகளிடமும் கொடுக்க வேண்டும். ஆதாரமான ஆடியோ வீடியோக்கள். 

 உங்கள் தரப்பிடம் அமானிதமாக ஒப்படைக்கப்பட்ட 01.05.1997 திருச்சி அரிஸ்ட்டோ ஹோட்டல் நிகழ்ச்சியின் ஆடியோ லைட்பூலி ஷம்சுல் லுஹாவாகிய உங்களிடமிருந்து எனக்கு கிடைத்தது. ஒப்பந்தத்தை மீறி நீங்கள் எனக்குத் தந்தீர்கள். காப்பி எடுத்து விட்டு ஒரிஜினலை தந்துவிட்டேன். உங்கள் வீட்டில் இருக்கும் அந்த ஒரிஜினலிருந்து பிரதிகளை மேலே குறிப்பிட்டவர்களிடம் கொடுக்க வேண்டும். 

கமாலுத்தீன் மதனி இடம் அமானிதமாக ஒப்படைக்கப்பட்ட 27.08.1996 ஜான்டிரஸ்ட் நிகழ்ச்சியின் ஆடியோ அப்படியே அவரிடம் உள்ளது. அதன் பிரதிகளை மேலே குறிப்பிட்டவர்களிடம் கொடுக்க சம்பந்தப்பட்ட உங்கள் அணியினர் சம்மதம் தெரிவித்து கொடுக்கச் செய்ய வேண்டும். 


  பம்பை விகார வீடியோ. பழ்லுல் இலாஹியின் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் என்று யு.ஏ.இக்கு பெரியவர்? பி.ஜே. அனுப்பிய அந்த 2 வீடியாக்கள். மஸ்ஜிதுர்றஹ்மான் பவுண்டர் பழ்லுல் இலாஹியை நீக்குகிறோம் என்று முட்டாள்தனமான தீர்மானத்தை நிறைவேற்ற நீங்கள் நடத்திய நிகழ்ச்சியின் வீடியோ, 

தம்பி மீரானை ஜும்ஆவுக்குப் பின் திடீரென அழைத்துப் பேசி நீங்களும் சுலைமானும் நடித்துப் பதிந்த வீடியோ, வெளிநாட்டிலிருந்து வந்தவர்களுக்கு ஷம்சுல்லுஹா பம்பாயில் பெண்களை கூட்டிக் கொடுத்து பணம் வாங்கினார் என்பது சம்பந்தமாக பேசப்பட்ட நிகழ்ச்சியின் வீடியோ ஆகியவற்றை எடிட் செய்யாமல் அந்தப் பிரதிகளை அப்படியே கொடுக்க வேண்டும். 

  பம்பாய் அனுபவத்தின் வெளிப்பாடு. பம்பாய் சம்பந்தமாக ஏற்கனவெ பேசிவிட்டோமே மீண்டும் ஏன் பேச வேண்டும் என்று கேட்கலாம். கடந்த முறை துபை வந்த நீங்கள் பிஜேயை தலைமையாகக் கொண்டவர்கள் சுயநலக் கோஷ;டிகள் என்று அவர்களது சுயரூபங்களை எம்மிடம் வெட்ட வெளிச்சமாக்கினீர்கள். உங்கள் கூற்றின் அடிப்படையில் பி.ஜேக்கும்(6.4.02) அவரது பினாமிகளுக்கும் (10.5.02) நேரடியாக கடிதம் எழுதினேன். 

பதில் கூற முடியாத பி.ஜே. அவரது இயல்புப்படி என் மீது அபாண்டமான அவதூறுகளைப் பரப்பினார். அதில் ஒன்று நான் ஒருவரிடம் பெருந்தொகை வாங்கியதாகக் கூறிய அவதூறு. இது பற்றி தமீமுல் அன்சாரி,; ஜவாஹிருல்லா ஆகியவர்களிடம் நியாயவான்கள் கேட்டார்கள். 

கொடுத்தவர் சொல்லலக் கூடாது என்று சத்தியம் செய்துவிட்டார் என்று பி.ஜெ. சொன்னதாக பதில் .கூறினர். நீங்களும் அதே பதிலைக் கூறி உண்மைப்படுத்தி உள்ளீர்கள். இது உங்கள் பம்பாய் அனுபவத்தின் வெளிப்பாடு 

  சிகப்பு விளக்குச் சேவகர் ஷம்சுல்லுஹா. உங்களை சிகப்பு விளக்குச் சேவகர் ஷம்சுல்லுஹா என்று விமர்சித்தவர்களை நேரில் அழைத்துப் பேச உங்களுக்கு திராணி இருக்கவில்லை. பயந்து நடுங்குனீர்கள். உங்கள் வஸ்வஸாவை சூபித்தனமாக நம்பிய நான்தான் மஸ்ஜிதுர் றஹ்மானுக்கு பணம் கொடுத்தால் லுஹா ரசீது தருவதில்லை உட்பட உள்ள பல குற்றச்சாட்டுக்கள் கூறியவர்களை அழைத்துப் பேசினேன். என் வீட்டில் நடந்த அந்த நிகழ்ச்சியில் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களுக்கு ஷம்சுல்லுஹா பம்பாயில் பெண்களை கூட்டிக் கொடுத்து பணம் வாங்கினார் என்று கூறியவரிடம் ஆதாரம் கேட்டேன். சொன்னவர் சொல்லக் கூடாது என்று சத்தியம் செய்து விட்டார் அதனால் சொல்ல மாட்டேன் என்றார். 


இப்படிக் கூறுவதை இஸ்லாத்தின் பார்வையில் ஏற்க முடியாது. சொன்னவரைக் கொண்டு நிரூபியுங்கள் என்று கூறி அதைப் பொய்ப்படுத்தினேன். எனது விஷயத்தில் இதே மாதிரி கூறுவதைக் கொண்டு நீங்கள் உண்மைப்படுத்துகிறீர்கள். அப்படியானால், உங்கள் கூற்றின் அடிப்படையில் நீங்கள் அது மாதிரி டாபர்மாமா வேலை செய்திருப்பீர்கள் என்ற முடிவுக்கு வரவேண்டி உள்ளது. எனவே நீங்கள் கூறும் நடுவர்கள் மத்தியில் மீண்டும் பேசணும் என்கிறேன். 

  இஸ்லாமியக் கல்லூரியா? இல்லறக் கல்லூரியா? அது மட்டுமல்ல நீங்கள் நடத்தும் பெண்கள் கல்லூரியில் முதலிரவுக்குச் செல்லும் புதுப் பெண்களுக்கு மருதாணிப் போட்டு அலங்காரம் செய்துவிடும் வேலை நடக்கிறது. அப்பொழுது என்ன பேசப்படும். சர்ப். நஹு பாடம் நடத்தப்படுமா? என்ன பாடம் நடத்தப்படும்? நீங்கள் நடத்துவது இஸ்லாமியக் கல்லூரியா? இல்லறக் கல்லூரியா? 


கல்லூரிக்கு பேராசிரியை வேலைக்கு வந்த பெண்ணின் அங்க அவயங்களை கடல் கடந்து வந்து உம்மைப் போன்ற சிந்தனை உடையவர்களுடன் வர்ணித்துப் பேசும் வக்கிரக புத்தி உடையவராக நீர் இருப்பதாலும், உங்கள் உடன் பிறந்த தம்பி உங்களைப் பற்றி இது மாதிரி கூறி உள்ள வக்கிரக குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலும். பம்பை பற்றி மீண்டும் பேச வேண்டும் என்கிறேன்.

  புரோகிதர்களின் பிழைப்புத் தலம். மஸ்ஜிதுர்றஹ்மான் நிர்வாக சம்பந்தமாக பேசக் கூறுவது நாம் நிர்வாக உரிமை கொண்டாடுவதற்கு அல்ல. ஜகாத் கொடுப்பவர்தான் தலைவராக இருக்க முடியும். காலமெல்லாம் ஜகாத் பணத்திற்காக அலைந்து கொண்டிருப்பவர், தலைவர் பதவியை கேட்டு வாங்கியவர் லுஹா என்பதை நிரூபிப்பதன் மூலம் உம்மை நீக்க வேண்டும் என்பதற்காகவும் அல்ல. 

புரோகிதரிடம் தற்காலிகமாக ஒப்படைக்கப்பட்ட மஸ்ஜிதுர் றஹ்மான் புரோகிதர்களின் பிழைப்புத் தலமாக ஆகிவிட்டது. எனவே நிர்வாகிகள் ஒத்துழைக்கக் கூடாது என்று பிரகடனப்படுத்தவே. அதற்குப் பிறகும் ஒத்துழைத்தால் அதற்குரிய கூலியை உங்கள் பிரச்சாரப்படி நரக தண்டனையை சம்பந்தப்பட்டோர் பெற்றுக் கொள்ளட்டும் அவ்வளவுதான். 

  செம்மறி ஆட்டுக் கூட்டம். மஸ்ஜிதுர்றஹ்மான் மூலம் நாம் உருவாக்க விரும்பியது கொள்கைக் கூட்டத்தை. நீங்கள் சேர்த்து வைத்திருப்பது கூட்டத்தோடு கூட்டமாக ஓடும் செம்மறி ஆட்டுக் கூட்டத்தை. அதனால்தான் கூலி வாங்குபவனை பின் பற்றக் கூடாது பள்ளிவாசல் யாருக்கும் பிழைப்புத் தலம் அல்ல. மார்க்கத்தை பிழைப்பாக ஆக்கக் கூடாது என்று பிரச்சாரம் செய்யும்போதும் தலையை ஆட்டுகிறார்கள். 

இப்படி மேடைக்கு மேடை பேசிவிட்டு அதற்கு மாற்றமாக காசடித்து விட்டு 'நாங்கள் கேட்கவில்லை அவர்களாகத் தருகிறார்கள்' என்று நீங்கள் கூறும் வியாக்கியானத்திற்கும் தலையை ஆட்டுகிறார்கள். 

  வெளி நாட்டிற்கு பிளைட் ஏறியது ஏன்? 'நாங்கள் கேட்கவில்லை அவர்களாகத் தருகிறார்கள்' என்று மாப்பிள்ளை வீட்டார் கூறினால் பெண் எடுக்காவிட்டால் தருவானா? தரமாட்டான். அப்படி என்றால் அது வரதட்சணைதான் என்று பிரச்சாரம் செய்கிறீர்கள். அரபு நாடுகளுக்கு வந்து தப்ஸீர் வேலை செய்யாமல் ஊரோடு இருந்தால் கை மடக்கு தருவார்களா? தர மாட்டார்கள். 

அப்படியானால் அது நீங்கள் செய்த பிரச்சாரத்திற்குரிய கூலிதானே? ரமழான் வந்ததும் ஐவேளை தொழ வைத்த பள்ளியை அம்போ என விட்டு விட்டு வெளியூறுக்கு வண்டி ஏறுவது ஏன்? என்று சுன்னத் ஜமாஅத் மவுலவிகளைப் பார்த்து கேட்டீர்களே! நீங்கள் வெளி நாட்டிற்கு பிளைட் ஏறியது ஏன்? தமிழ்நாட்டில் தப்ஸீர் பண்ண இடமா இல்லை? 

  ரகசிய கூலிகள். தப்ஸீர் செய்ததற்கு கூலி வாங்க மாட்டேன். எந்தப் பெயராலும் அன்பளிப்பும் வாங்க மாட்டேன். டிகட் மட்டும் போதும் என்று அறிவிப்பீர்களா? 

இந்த தப்ஸீர் பணியே உங்கள் புரோகித இன வருவாய்க்காக உண்டாக்கப்பட்டதுதானே. புரோகித இனத்தைச் சாராத பெரம்பலூர் நாஸர் அலிகான் கூலி வாங்காமல் பிரச்சாரம் செய்தார். ரகசிய கூலிக்கு மாரடிக்கும் உங்கள் கூட்டத்தின் வருவாய் பாதித்தது. அவரை வைத்து நிகழ்ச்சி நடத்தக் கூடாது என்று தடை போட்டது கூட்டுடைப்பு. அதன் மூலம் கடந்த ஆண்டு சுலைமானுக்கு உங்கள் வார்த்தைப்படி ராயல்டி சுலைமானுக்கு வருவாய். இந்த ஆண்டு உங்களுக்கு. 

  நேரடி பேரத்தை விமர்சித்த மறைமுக பேரம். ரமழான் வந்ததும் தராவீஹ் பெயரால் பேரம் பேசி வருவாய் பண்ணுகிறார்கள் என்று விமர்சித்து மேடைகளில் முழங்கிய உங்கள் கூட்டம் கியாமுல் லைல் பெயரால் வருவாய் பண்ணுகிறது. அவர்களாவது உங்கள் கூற்றுப்படி நேரடியாகப் பேசுகிறார்கள். நீங்கள் ஆள் வைத்து செட்டப் பண்ணி அவர்களாக தருகிற மாதிரி ஏற்பாடு செய்து மறைமுக பேரம் பேசி சம்பாதிக்கிறீர்கள். கியாமுல் லைலுக்கு இமாமத் செய்யும் எங்களுக்கு பணமோ வேறு அன்பளிப்போ வேண்டாம் என்று கூறுவீர்களா? 

கூட்டுடைப்பில் உள்ளவர்கள் இமாமத் வேலை செய்து சம்பாதிக்க மாட்டோம் என்று அறிவிப்பீர்களா? குறைந்த பட்சம் மஸ்ஜிதுர்றஹ்மான் இமாம் வாங்க மாட்டார், இந்த ஆண்டு முதல் கியாமுல் லைல் தொழ வைத்ததற்கும் பணமோ வேறு அன்பளிப்போ தர வேண்டாம் என்று அறிவிக்கத் தயாரா? 

  சொல் ஒன்று செயல் ஒன்று. ஜமாஅத் சார்பில் வசூலிக்கப் போனால் தனி அன்பளிப்பு வாங்கக் கூடாது. தந்தாலும் ஜமாஅத் கணக்கில் சேர்க்கணும் என்று மேடைகளில் கர்ஜிப்பீர்கள். தரும்போது கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் வசூலுக்காக மாட்டி இருக்கும் ஸ்பெஷல் ஆடையில் திணிப்பீர்கள்( அந்த அளவுக்கு ஏற்கனவே நிறைந்திருக்கும்) காசு தரும்வரை மோசமான ஆள் விஷமி இவனிடம் ஜாக்கிரதையாக இருக்கணும் என்பீர்கள். 

ரகசிய கூலி கிடைத்ததும் தலைவா என்பீர்கள். தானாக வரும் அன்பளிப்பு காணாது என்று உங்களுக்கு என்று தனி வசூலுக்கும் ஏற்பாடு செய்வீர்கள். சொல் ஒன்றும் செயல் ஒன்றுமாக இருக்கும் உங்களின் வழி காட்டி யார்? நீங்களே அடையாளம் காட்டி இருக்கிறீர்கள். வார்த்தை விளையாட்டால் பொய் சொல்ல வழி காட்டி யார்? கடந்த முறை 

நீங்கள் என் ரூமில் இருந்த போது பி.ஜே. பேசிய வீடியோ ஓடிக் கொண்டிருந்தது. அதில் "20 வருடமாக மேடையில் பேசி விட்டு காசு வாங்கியது கிடையாது" என்று கூறும் காட்சி வந்தது. எழுத்துப் பணியில் இருந்த உங்கள் கவனம் திரும்பியது. ரீ-பிளே செய்யச் சொல்லி பார்த்த நீங்கள், "இவர் எந்த வார்த்தையால் இப்படி சொல்கிறார்" என்று என்னிடம் கேட்டீர்கள். 

இதன் மூலம் மேடையில் பேசி விட்டு காசு வாங்கி உள்ளார் என்பதை உறுதி படுத்தி, பி.ஜே. சொல்வது பொய் என்பதை உங்களை அறியாமல் எனக்கு தெளிவுபடுத்தினீர்கள். இது ஏற்கனவே எனக்குத் தெரிந்த விஷயம்தான். நீங்களே பி.ஜேக்கு 5,000 10,000 கெர்டுத்ததாக எனக்கு கணக்கு அனுப்பி உள்ளீர்கள் அவர் வாங்கவில்லை என்பது உண்மையானால் நீங்கள் பொய் கணக்கர் என்பது தனி விஷயம். இப்படி வார்த்தை விளையாட்டால் பொய் சொல்லலாம் என்ற கொள்கையில் உள்ளீர்கள். 

அதனால்தான் உங்கள் வழிகாட்டி இடமிருந்து அந்த வார்த்தையை கற்றுக் கொள்ள ஆர்வப்பட்டீர்கள். நான் தயார் நீங்கள் தயாரா? இவை மட்டுமல்ல மேலும் முழு விபரங்கள் பி.ஜே. விடுத்த சவாலை ஏற்று 'புதிய சவாலையும் ஏற்கிறேன்' என்று 1.12.2002ல் பி.ஜே.க்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளேன். 

பகிரங்கமாக சவால் விட்ட அவரிடமிருந்து இதுவரை பதில் இல்லை. இன்பார்மர் வேலை செய்ய இஸ்லாத்தின் பெயரால் அமைப்புகள் தேவையா? என்ற பிரசுரத்திலும் விபரங்கள் உள்ளன. அவற்றில் உள்ளபடி நிகழ்ச்சியை மேலப்பாளையத்தில் ஏற்பாடு செய்யுங்கள். இது சம்பந்தமான முறையான ஒப்பந்தத்தை நீங்கள் துபைக்கு அடுத்து உள்ள ஷார்ஜாவில் பிராடு பிர்தவ்ஸியான உங்கள் தம்பி இடம் தங்கி இருக்கும் இந்த நேரத்திலேயே எழுதிக் கொண்டு வாருங்கள். 

நான் கையெழுத்திட தயார். நான் தயார் நீங்கள் தயாரா? நீங்கள் தயார் என்றால் இந்தக் கடிதம் பெற்ற 2 மணி நேரத்தில் உங்களால் பதில் தர முடியும். இருந்தாலும் 24 மணி நேரம் தருகிறேன். தெம்பு இருந்தால், திராணி இருந்தால், மானம் - ரோஷம் - சூடு - சுரணை இருந்தால், 

நீங்கள் பம்பாயில் அந்த மாதிரி தொழில் செய்து பணம் வாங்கவில்லை என்பது உண்மையானால் ஒரே மேடையில் சந்திப்பது சம்பந்தமான ஒப்பந்தத்தை எழுதிக் கொண்டு வாருங்கள். 

  பிராடு பிர்தவ்ஸி. உங்களிடமிருந்து பதில் வரவில்லை என்றால் பரீட்சை எழுதி பாஸாகாமல் பொய்யாக பிர்தவ்ஸி என போட்டு சமுதாயத்தை ஏமாற்றித் திரியும் உங்கள் தம்பி காஜா பிராடு பிர்தவ்ஸி இடம் இதன் பிரதி கொடுக்கப்படும். பிள்ளை இல்லாத வீட்டில் துள்ளி குதிக்கும் கிழடுகள் மாதிரி பந்தலில் நின்று வாய்ப்பந்தல் போட்டானே பொய்யன். குறுக்கு வழியில் உயர்வு பெறும் பேராசையால் பாச்சான் பீயை தின்றானே அவனுக்காவது மேலே குறிப்பிட்டவை இருந்தால், அவன் உடலில் ஒழுங்கான ரத்தம் ஓடுமானால், நீங்கள் பம்பாயில் அந்த மாதிரி தொழில் செய்து பணம் வாங்கவில்லை என்பதை நம்பக் கூடியவனாக இருந்தால் ஒரே மேடையில் சந்திப்பது சம்பந்தமான ஒப்பந்தத்தை உங்களிடமிருந்து எழுதி வாங்கி கொண்டு வரட்டும். 

அவனிடமிருந்தும் 24 மணி நேரத்தில் பதில் வரவில்லை என்றால் உங்களை நல்லவராக கூறிக்கொண்டிருப்பவர்களுக்கு அனுப்புவோம். அவர்களுக்கும் மேலே குறிப்பிட்டவை இருந்தால், நீங்கள் பம்பாயில் அந்த மாதிரி தொழில் செய்து பணம் வாங்கவில்லை என்பதை நம்பக் கூடியவர்களாக இருந்தால், நீங்கள் காட்டி உள்ள கணக்கு கள்ளக் கணக்கு இல்லை, பள்ளி பணத்தை பேங்கில் போட்டுள்ளீர்கள், 

ரியல் எஸ்ட்டேட் செய்பவரின் ரொடேஷனில் பள்ளிப் பணம் இல்லை என்றும் நம்பக் கூடியவர்களாக இருந்தால் ஒரே மேடையில் சந்திப்பது சம்பந்தமான ஒப்பந்தத்தை இங்கு இருக்கும்போதே எழுதி ஒப்பந்தம் செய்து விட்டு வா என்று உங்களை வற்புறுத்தட்டும். அதற்குப் பிறகும் நீர் தயார் இல்லை என்றால் பம்பாய் வியாபாரியான உம்முடன் இருப்பவர்களும் நீரும் உமக்காக வசூலிப்பவர்களும் ஒன்றே என்பதை அறியும் வண்ணம் இதை வெளியிடுவோம். 

 இவண்:- கா.அ.முஹம்மதுபழ்லுல்இலாஹி, 22A சமாயினா ஷேக் முஹம்மது மூப்பன் தெரு, மேலப்பாளையம், 627005. mdfazlulilahi@hotmail.com 

  அராஜக ஆட்சியாளர்களின் அழகிய முன்மாதிரிகள். இந்தக் கடிதத்திற்குப் பிறகு வழக்கமான முறைப்படி அனுதாபம் தேட பொட்டச்சி மாதிரி லுஹா சிலரிடம் அழுது புலம்பி உள்ளார். ஊராக இருந்தால் இவர் பாடை அழுகைக்கு குத்பா மேடையை பயன்படுத்தி இருப்பார். பழ்லுல் இலாஹி பெருந்தொகை வாங்கியதாகக் கூறுவது பொய்யாக இருக்குமானால் லுஹாவை அல்லாஹ் நாசமாக்குவானாக என்று சொல்வீர்களா? என்று கேட்டதற்கு நான் மட்டும் ஏன் நாசமாய்ப் போக வேண்டும். அது தாஇ களெல்லாம் சேர்ந்து முடிவு செய்து வைத்த குற்றச்சாட்டுதானே என்று கூறி இருக்கிறார். 

தாஇகளெல்லாம் சேர்ந்து மார்க்க மஸாயில் முடிவு செய்வது சரி. குற்றச்சாட்டை முடிவு செய்வது என்றால்? என்றதற்கு அவர் எங்களையெல்லாம் கேவலமாக எழுதி விட்டார் அதனால்தான் என்று கூறி இருக்கிறார். இதே மாதிரி அந்த அணியில் உள்ள சிலர் பழ்லுல் இலாஹி அப்படிப்பட்டவரல்ல என்பது எங்களுக்குத் தெரியும். தவ்ஹீது மவுலவிகளை விமர்சித்து விட்டார் அதனால்தான் என்று கூறி உள்ளனர். 

அராஜக ஆட்சியாளர்ளை விமர்சித்தால் போடப்படும் பொய் வழக்குக்கு இவர்கள்தான் அழகிய முன் மாதிரியோ? எந்த ஹதீஸ், ஆயத்துகளில் இதற்கு ஆதாரம் எடுத்தார்களோ? குர்ஆன் ஹதீஸ் என்பது ஊருக்கு உபதேசிக்கத்தானோ? இவர்களால் தூண்டப்பட்டு சிறை சென்று இன்றும் சிறையில் வாடுபவர்களின் நோன்புத் துஆ எப்படி இருக்கும் பாதிக்கப்பட்டவனின் பிரார்த்தனைக்கு அஞ்சிக் கொள் என்ற நபி மொழியும் ஊருக்கு உபதேசிக்கத்தானோ? கெடுபவர்களும் கெடுப்பவர்களும் அடையும் கடைசி நிலை. இப்பொழுது புரிந்து கொள்ளுங்கள். மீண்டும் பல்டி அடிக்கலாம், பல்டி அடித்தால் பழ்லுல் இலாஹி பெருந்தொகை வாங்கியதாகக் கூறுவது பொய்யாக இருக்குமானால் லைட்பூலி ஷம்சுல்லுஹாவை, லைட்பூலிகாஜாவை, இதை பரப்புகிறவர்களை, நோட்டீஸ் போட்டவர்களை, வினியோகித்தவர்களை, துணை நின்றவர்களை அல்லாஹ் நாசமாக்குவானாக என்று சொல்லச் சொல்லுங்கள் சொல்ல மாட்டார்கள். இவர்களை விமர்சித்தால் பிற சமதாயத்திற்கு தெரிந்து விட்டது என்பார்கள். இவர்கள் மட்டும் பிறர் மீது அபாண்டங்களை அள்ளி வீசி பிரசுரங்கள் போடுவார்கள் பத்திரிக்கையில் எழுதுவார்கள், மேடையிலே கடித்துக் கொதறுவார்கள். இப்படிப்பட்ட சுயநலமிகளான இந்த பிராடுகள் அணி பிறர் மீது கூறி உள்ள குற்றச்சாட்டுகளுக்கு முறையான தீர்வு காணாமல், நீதியை நிலை நாட்ட முயற்சிக்காமல் அவர்கள் பின் அணி சேர்பவர்கள், அணி சேர்ப்பவர்கள் அனைவரும் அவர்களைப் போன்ற சுயநலமிகளாக, பிராடுகளாக, பதவி பித்தர்களாகத்தான் இருக்க முடியுமே தவிர எப்படி உண்மையான முஸ்லிம்களாக இருக்க முடியும்? இவர்கள் கெடுவதற்கும் இன்னும் கெடுவேன் என்ன பந்தயம் என்பதுபோல் செயல்படுவதற்கும் நியாயத்தை தட்டிக் கேட்காமல் அணி சேர்பவர்களே காரணம். அந்த அணியினரும் அணி சேர்ப்பவர்களும் திருந்தாவிட்டால் மறுமையில் உன்னாலே நான் கெட்டேன் என்னாலே நீ கெட்டாய் நிலைதான்; என்பதில் சந்தேகம் இல்லை. 


  லுஹா கூறும் மடத்தனமான செயலும் மடையனும். கடைசிச் செய்தி:- "நான் நல்லவர் என்று நம்பி நண்பர் என்ற முறையில் இவரிடம் சொன்னேன். ( 6.4.02ல் பி.ஜேக்கு எழுதி உள்ள லட்டரிலும் 10.5.02ல் கூட்டமைப்புக்கு எழுதி உள்ள லட்டரிலும்) ஓன்றுவிடாமல் எழுதி விட்டார்" என்று லுஹா வாக்கு மூலம் கொடுத்துள்ளார். என்னிடம் மட்டும் சொல்லவில்லை புறம்பேசியான லுஹா மற்றவர்களிடமும் புறமாக துபையில் பேசித் திரிந்ததை துபையில் நிரூபிக்கத் தயாராக உள்ளோம். அவர்தான் ஓடி ஒளிகிறார். எனக்கும் அவருக்கும் உள்ள பிரச்சனையில் மடத்தனமாக பெண் விவகாரத்தை எழுதி உள்ளான் மடையன் என்றும் லுஹா கூறி உள்ளார். எனக்கும் லுஹாவுக்கும் உள்ள பிரச்சனையில் அவரை ஒட்டிய பெண் விவகாரத்தை 7 ஆண்டுகள் அரபி கல்லூரியில் பயிலாத ஆலிம் அல்லாத அவாம் ஆகிய நான் எழுதியது மடத்தனம் என்றால். லுஹா தந்த தகவல்படி நான் எழுதிய கடிதத்திற்கு பதில் அனுப்பிய மார்க்க அறிஞர் மாமேதை பி.ஜே, ஆலிம்ஸாஹிப் அவர்கள், காரைக்காலில் அவன் பெண் வைத்திருந்தான் திருச்சியில் இவன் பெண் வைத்திருந்தான் என்று சம்பந்தமில்லாமல் பேசி சாட்சிகளாக இந்துக்களை திருச்சி சிங்காரத் தோப்பு பள்ளிவாசலுக்குள் கொண்டு வந்து வைத்து வீடீயோ பண்ணி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தாரே அது அறிவார்ந்த செயலா? லுஹா எதை மடத்தனமான செயல் என்றும் யாரை மடையன் என்றும் விமர்சித்துள்ளார் புரிந்து கொண்டீர்களா? 

  பிண வீட்டிலும் அல்பாத்திஹா, மண வீட்டிலும் அல்பாத்திஹா. இமாம் அலியையும் அவருடன் சுடப்பட்டவர்களையும் அடக்குவதற்கு பி.ஜே. இன்டோர் மீட்டிங்கில் பணம் வசூலித்தார் என்று அவசர குடுக்கையாக குத்பா மேடையில் பகிரங்கப்படுத்தியவர் லுஹா. இதனை நாம் வெளிப்படுத்தியதாக பரப்புவது பொய் என்பதையும், பிண வீட்டிலும் அல்பாத்திஹா, மண வீட்டிலும் அல்பாத்திஹா என்று பேசியவர்கள் இமாம் அலி பிணத்தின் பெயரால் வசூலித்து செய்த பாத்தியாவைப் பாத்தியா என்ற தலைப்பில் உள்ள சி.டி.யில் அந்தப் பணம் கூட்டமைப்பு தலைவர் ஸைபுல்லா ஹாஜா இடம்தான் உள்ளது என்று இமாம் அலி சகேதரிதான் கூறி உள்ளார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். வஸ்ஸலாம்.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.