இன்பார்மர் வேலை செய்ய இஸ்லாத்தின் பெயரால் அமைப்புகள் தேவையா?

கடைசிப் பக்கத்தை முதலில் படிக்காதீர்கள்.
மவுலவி ஹாமித் பக்ரி அவர்கள் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து பி.ஜே அணி .ரகசியமாக உதவுகிறது, உதவாது என்று ஆளுக் கொருவிதமாகவும்; நாளுக்கொருவிதமாகவும் பி.ஜே அணியின் கீழ் மட்டப் பொறுப்பாளர்கள் மூலம் விளக்கங்களைக்; கூறி பொது மக்களை சமாளித்துக் கொண்டிருந்தார்கள். ஷஷஹாமித் பக்ரி கைது பற்றி பி.ஜே. விளக்கம்|| ஷஷஹாமித் பக்ரியின் கைதுக்குப் பின்னால் உள்ள உதிரத்தை உரைய வைக்கும் சதி|| ஆகிய தலைப்புகளில் நாம் வெளியிட்ட பிரசுரங்கள். ஷஷபக்ரியின் கைதும் படிப்பினைகளும்|| என்ற தலைப்பில் வெளியான ஆடியோ கேஸட்கள், இவர்கள் யார் என்பதை சமுதாயத்திற்கு அடையாளம் காட்டின. இவர்கள் யார் என்பதை அடையாளம் கண்டு கொண்ட சமுதாய முன்னோடிகளில் பலர் போதும் விட்டு விடுங்கள் என்று வேண்டுகோள் வைத்தார்கள். அந்த பெருந்தகைகளை கண்ணியப்படுத்தும் வகையில் அவர்களது வேண்டுகோளை ஏற்றோம். அதனால்தான் சமுதாய விரோத சக்திகள் வெளியிட்ட பிரசுரங்களுக்குப் பதில் பிசுரம் வெளியிடாமல் இருந்தோம்.

இப்பொழுது மவுலவி ஹாமித் பக்ரி விடுதலையான பின்னரும் பி.ஜே. அணிதான் ரகசியமாக முயற்சி செய்து விடுதலை ஆக்கியது. பி.ஜே.அணிக்கும் பக்ரிக்கும் சம்பந்தமில்லை. பி.ஜே.க்கு எதிராக ஹாமித் பக்ரியால் ஒரு வார்த்தை சொல்ல முடியுமா? இமாம் அலி சகோதரி இடமிருந்து பி.ஜே.க்கு எதிராக ஒரு வார்த்தை வருமா? என்று மிரட்டியும் சந்தர்ப்பத்திற்கு தக்கவாறு மீண்டும் சமாளிப்பு வேலைகளிலும் திசை திருப்பல்களிலும் ஈடுபட்டுள்ளார்கள். மேலும் அவர்கள் பிரசுரம் வெளியிட்ட பின்னர் பதில் கூற முடியாமல் அடங்கி ஒடுங்கி விட்டதாகவும் பொய்களை பரப்பி வருகின்றனர்.

எனவே அந்த சமூக விரோத சக்திகள் பற்றி ஹாமித் பக்ரி கூறிய ஒரு வார்த்தை என்ன? என்பதையும், மேலும் அந்த சந்தர்ப்பவாதிகளின் மழுப்பல்கள், சமுதாய நலனுக்காக பாடுபடுபவர்களாக தங்களைத் தாங்களே விளம்பரப்படுத்திக் கொண்டு அவர்கள் செய்து வரும் சமுதாய விரோதச் செயல்கள், மார்க்கத்தில் ஹராம் என்று தெளிவாகத் தெரிந்தாலும் அதைச் செய்வதுடன் செய்யத் தூண்டிடும் இஸ்லாமிய விரோத போக்குகள், வெளி நாட்டவரிடமோ - வெளி நாட்டு நிறுவனங்கள் இடமோ உதவி பெற மாட்டோம் என்ற பொய்யான கோஷங்கள் போன்றவற்றை அடையாளம் காட்டுவதே இந்தப் பிரசுரத்தின்; நோக்கமாகும். அல்லாஹ்வை அஞ்சக் கூடிய சமுதாய நலனில் அக்கரை உள்ள முஸ்லிம்களுக்கு மட்டும்தான் இந்தப் பிரசுரம் பயன் தரும். பெரும்பான்மை பக்கம் சார்ந்திருக்க வேண்டும் என்ற எண்ணமுடைய சந்தர்ப்பவாதிகளுக்கு நிச்சயமாக பயன் தராது.

ஹாமித் பக்ரி விஷயத்தில் பி.ஜே.யின் சதி உள்ளது என்பதை மறுக்காத ஷhர்ஜா பிரசுரம்!
பி.ஜேயின் ஷhர்ஜா அணி - ஏகத்துவ வாசகர் வட்டம் சார்பில் பக்ரி சம்பந்தமாக 17.01.03, 24.01.03 ஆகிய தேதிகளில் சில பிரசுரங்கள் வெளியிட்டார்கள். அவர்கள் பிரசுரங்கள் வெளியிட்ட தேதி வரை ஏகத்துவம் என்ற பத்திரிக்கை வெளி வரவே இல்லை. இப்படி வராத பத்திரிக்கைக்கு அப்பொழுது வாசகர் வட்டம் அமைத்திருந்த அவர்கள் எவ்வளவு பெரிய உண்மையாளர்கள்? என்று அவர்களைப் பற்றி அவர்களே அடையாளம் காட்டி பிரசுரம் வெளியிட்டிருந்தார்கள்.

ஹாமித் பக்ரி விஷயத்தில் பி.ஜே. செய்துள்ள சதிகளையும், அவர் மீது அரசாங்கமே கூறாத குற்றச் சாட்டுக்களை பி.ஜே. கூறி வந்தது பற்றியும் முந்தைய பிரசுரங்களில் அடையாளம் காட்டி இருந்தோம். இதை அவதூறு என்று மறுப்பவர்கள் வெறுமனே சத்தியம் செய்து மறுக்கக் கூடாது. அவர்கள் மறுப்பது பொய்யாக இருந்தால் அவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டும் என்று கூறி மறுக்க வேண்டும். வெறுமனே மறுத்தார்கள் என்றால் அவர்கள் பொய்யர்கள் என்று விளங்கிக் கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டு இருந்தோம்.

நமது பிரசுரத்தில் வெளியிட்ட எதையும் நாம் கூறிபடி பி.ஜே.யின் ஷhர்ஜா அணி மறுக்கவில்லை. அப்படி மறுக்காததன் மூலம் ஹாமித் பக்ரி விஷயத்தில் பி.ஜே.யின் சதி உள்ளது என்பதை அவர்கள் ஒப்புக் கொண்டு விட்டார்கள். அதற்காக பி.ஜே.யின் ஷhர்ஜா அணிக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். ஆத்திரத்தின் வெளிப்பாடாய் முரண்பாட்டின் மொத்த உருவமாய்தான் அவர்களது பிரசுரங்கள் இருந்தன. அந்தப் பிரசுரங்கள் மூலம் அவர்கள் வரலாறு தெரியாதவர்கள் மட்டுமல்ல வரலாறே இல்லாதவர்கள் என்றும் அவர்களைப் பற்றி அவர்களே அடையாளம் காட்டி இருந்தார்கள். அதற்காகவும் அவர்களுக்கு நாம் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்..
காரணம் கற்பித்து திசை திருப்பும் குற்றவாளிகள்
குற்றச் சாட்டுகளுக்கு நேரடியாக பதில் கூறாமல் காரணம் கற்பித்து திசை திருப்புபவர்கள் குற்றவாளிகளே! இது பி.ஜே. அணி கூறி வந்த தத்துவங்களில் ஒன்று. அந்த பி.ஜே.யின் அணியினர் பக்ரி விஷயத்தில் செய்துள்ள துரோகச் செயல்களை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளோம். அதற்கு அவர்களால் நேரடியாக பதில் கூற முடியவில்லை அதனால் பல்வேறு காரணங்களை கற்பித்து திசை திருப்பி வருகிறார்கள். அவர்களின் திசை திருப்பல்கள், திசை திருப்பி அவர்கள் கற்பித்து வரும் காரணங்கள் எந்த அளவுக்கு உண்மைக்குப் புறம்பானவை என்பதை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

அவர்கள் கற்பித்துள்ள காரணங்களில்; பிரதானமாகக் கூறி வருவது பழ்லுல் இலாஹி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்த பின் தான் பி.ஜே. அணி உடைய தவறுகளை கண்டித்து எழுதி வருகிறார் என்பதாகும். இதை பிரசுரத்திலும் குறிப்பிட்டுள்ளார்கள். இப்படி காரணம் கற்பித்தவர்கள், அதே பிரசுரத்தில் ஒழுங்கு நடவடிக்கைக்கு முன்பே நாம் பி.ஜே. அணியை விமர்சித்து வந்துள்ளதை சுட்டிக் காட்டி அவர்களுக்கு அவர்களே முரண்பட்டுள்ளார்கள். அறைகூவல் விடுத்து 7 மாதங்கள் ஆகியும் அறைகூவலை சந்திக்கத் திரானி இல்லாத பழ்லுல் இலாஹி... என்று குறிப்பிட்டுள்ள வாசகமும் அவர்கள் இணைத்துள்ள இணைப்புகளும் நீண்ட காலமாக பி.ஜே. மீது நாம் சுமத்தி வந்துள்ள அந்தரங்க விஷய குற்றச் சாட்டுக்களே ஒழுங்கு நடவடிக்கைக்கு மூல காரணம் என்று சாட்சி அளிக்கின்றன.
புதிய சவாலையும் ஏற்கிறேன்
பொறுப்பான விஷயங்களை மவுலவி பி.ஜே. அவர்களுக்கு எழுதினால் நான் பொறுப்பில் இல்லை என்று தட்டி கழித்து விடுவார். அதனால் அவரால் பொறுப்பில் அமர்த்தப்பட்ட ஜவாஹிருல்லாவுக்கு குறைகளைச் சுட்டிக் காட்டி பல கடிதங்கள் எழுதினோம். கடைசி முயற்சி என்ற தலைப்பிட்டும் கடிதம் அனுப்பினோம் பதில் இல்லை. எடுத்த எடுப்பிலேயே பிரச்சனைகளை மக்கள் மத்தியில் வைத்து விட்டதாக பரப்பப்பட்டதை நம்பி உள்ளவர்கள் நன்கு கவனிக்க வேண்டும். இறுதி முயற்சியாக 06.04.2002.ல் ஒரிஜினல் தலைவரான மவுலவி பி.ஜே. அவர்களுக்கே எழுதினோம், பதில் இல்லை. காரணம் அந்த கடிதத்திற்கு மவுலவி பி.ஜே. அவர்களாலும் எந்த பதிலும்; தர முடியவில்லை. அதனால் எம்மைக் கொச்சைப் படுத்தும் முயற்சியில் ஈடு பட்டார் பி.ஜே. முதல் முயற்சியாக ஷமுஸ்லிம் டிரஸ்ட் செயல்பாடுகள்| என்ற தலைப்பில் அவதூறு பிரசுரம் வெளியிட்டு படு தோழ்வியைத் தழுவினார்.

அடுத்த முயற்சியாக 06.04.2002 ல் நாம் எழுதிய கடிதத்தில் உள்ள குற்றச் சாட்டுகளுக்குப் பதில் என்று 2 வீடியோக்களை வெளியிட்டார்கள். எமக்கு பதில் என்று வெளியிட்ட அந்த கேஸட்டில் எமது எந்தக் குற்றச் சாட்டுக்காவது தக்க சான்றுகளுடன் வேண்டாம் சாதாரணமான பதிலாவது இருந்ததா? என்றால் இல்லை. சவால்கள் இருந்தன. அந்த சவால்களை அப்படியே ஏற்றுத்தான் 10.05.2002. கடிதம் எழுதினோம். அதற்கும் அவர்களால் பதில் கூற முடியவில்லை. அவர்கள் விடுத்த சவாலிலிருந்து அவர்களே பின் வாங்கி ஓடினார்கள். பிறகு பி.ஜே.யின் ஷhர்ஜா அணி பிரசுரத்தில் குறிப்பிட்டுள்ள ஒழுங்கு நடவடிக்கை மற்றும் அறைகூவல் என்னும் புதிய சவால்கள் மூலம் திசை திருப்பினார்கள். அந்த புதிய சவாலையும் ஏற்று ஷபுதிய சவாலையும் ஏற்கிறேன்| என்ற தலைப்பிட்டு கடிதம் அனுப்பி விட்டோம்.
அறைகூவலை சந்திக்கத் திரானி இல்லாதவர்கள் யார்?
...நீங்கள் விட்ட சவால்படி 38 மவுலவிகளுடன் ஒரே மேடைக்கு வாருங்கள். அவர்கள் சாட்சியாகவும் நிரூபிக்கிறேன். இப்பொழுது எதை மார்க்கம் இல்லை என்றும் எதை முட்டாள்தனமான செயல் என்றும் விமர்சிக்கிறீர்களோ! அது தான் மார்க்கம் என்றும் அது தான் தீர்வு என்றும் நீங்கள் செயல்பட்டீர்கள். அதனால் உங்களுக்கு ஆபத்து ஏற்பட்டது. உங்களுக்கு ஏற்பட்ட ஆபத்தை ஒட்டு மொத்த சமுதாயத்திற்கும் ஏற்பட்ட ஆபத்தாக பிரச்சாரம் செய்தீர்கள். (அதற்காக கண்டெடுக்கப்பட்டதுதான் த.மு.மு.க.) ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாய நலனுக்காக உருவானது அல்ல த.மு.மு.க. தவ்ஹீதுவாதிகள் ஷpர்க்வாதிகளின் பின்னால் போகக் கூடாது என்பதற்காக (உருவானது என்று நீங்கள் தவ்ஹீதவாதிகளை தனிமையில் ஏமாற்றி வருவது போல்) உருவானது அல்ல த.மு.மு.க. உங்கள் சுய நலனுக்காக உங்களைக் காத்துக் கொள்ள அவசர கோலத்தில் கண்டதுதான் த.மு.மு.க. அதனால்தான்; த.மு.மு.க. ஒரு நாடகம் என்றீர்கள். இவற்றை உங்கள் வார்த்தைகளைக் கொண்டே நிரூபிக்கிறேன் இன்ஷh அல்லாஹ். த.மு.மு.க. ஒரு நாடகம் என்று நீங்கள் கூறியதை நிரூபித்து விட்டால் த.மு.மு.க. கண்ட பின் வாங்கப்பட்ட சொத்துக்களை அநியாயமாக சிறையில் வாடும் முஸ்லிம்களின் குடும்பங்களுக்குக் கொடுக்க வேண்டும் தயாரா? ... ...இதற்கு ஒப்புக் கொள்ளாமல் வாத ரீதியாக நோட்டீஸ்களோ கேஸட்களோ வெளியிட்டு திசை திருப்பினால். அதுவே நீங்கள் அனைவரும் பொய்யர்கள் என்பதற்கு உரிய ஆதாரமாகும்.. இவை அவர்கள் அறை கூவலை ஏற்று நாம் அனுப்பி உள்ள கடிதத்தில் உள்ள ஒரு பகுதியாகும். (இந்த அடிப்படையில் பி.ஜே.யின் ஷhர்ஜா அணி பிரசுரம் அவர்கள் அனைவரும் பொய்யர்கள் என்பதற்கு ஆதாரமாக அமைந்து விட்டது அல்ஹம்து லில்லாஹ்.)

ஆக சவால் விட்டர்களிடமிருந்து தான் இன்று, இந்த நிமிடம் வரை பதில் வரவில்லை. ஷhர்ஜா பி.ஜே. அணியினர் குறிப்பிட்டுள்ள அறைகூவலை சந்திக்கத் திரானி இல்லாத என்ற வார்த்தை யாருக்குப் பொருந்தும்? என்பதையும் சவாலை சந்திக்க முடியாமல் பின்னங்கால் பிடரியில் அடிபட ஓடியது யார்? என்பதையும் புரிந்து கொள்ளுங்கள். அவர்களிடம் மீடியா இருப்பதால் அவர்கள் கூற்றுக்கள் மக்களை சென்றடைந்து விடுகின்றன. நமது நிலை மக்களை சென்றடைவதில்லை. இதைப் பயன் படுத்திக் கொண்டு அவர்கள் விடுத்த அறைகூவலை 7 மாதங்கள் ஆகியும் ஏற்கவில்லை என பி.ஜே.யின் ஷhர்ஜா அணியினர் பிரசுரம் வெளியிட்டு விட்டார்கள். புதிய சவாலை ஏற்று நாம் எழுதிய கடிதத்தின் காப்பிகளை ஏற்கனவே முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும்; அனுப்பி இருந்தோம். பி.ஜே.யின் ஷhர்ஜா அணி பிரசுரத்திற்குப் பிறகு அந்தக் கடிதத்தை அச்சிட்டு மக்கள் முன் வைத்து விட்டோம். பிரசுரம் கிடைக்கப் பெறாதவர்கள் கயணடரடடையாiளூhழவஅயடை.உழஅ என்ற எமது ஈ-மெயிலில் தொடர்பு கொள்ளவும்.
பி.ஜே.யை இப்படி விமர்சிக்கலாமா?
குற்றச் சாட்டுகளுக்குப் பதில் கூற முடியாதவர்கள், ஷபி.ஜே.யை இப்படி விமர்சிக்கலாமா? ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை இப்படி கடுமையாக விமர்சிக்கலாமா? தலைமையை பிடிக்கவில்லை என்றால் பேசாமல் போக வேண்டியதுதானே| என்று கேட்டும் திசை திருப்பியுள்ளார்கள். நாணயத்திற்கு இரு பக்கங்கள் இருப்பது போல் ஒவ்வொரு மனிதனுக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. எந்த அமைப்பும் விமர்சனத்திற்கு உட்பட்டே ஆக வேண்டும். விமர்சிக்க முடியாத தலைமை என எந்த ஒரு தலைமையும் கூறிவிட முடியாது. இப்படி தத்துவம் கூறி எந்த தலைமையைத்தான் விமர்சிக்காமல் இவர்கள் விட்டு வைத்தார்கள்.

கொமைனியின் மறு பக்கம், ஈராக்கின் இன்னொரு முகம் என்று இவர்கள் விமர்சிக்காத தலைமை உலகில் உண்டா? உலகில் உள்ள முஸ்லிம் ஆட்சித் தலைமையிலிருந்து அமைப்புத் தலைமை வரை இவர்கள் கூறாத குறைகள் உண்டா?. விமர்சிக்காத வார்த்தைகள் உண்டா?. அதனால் தான் எல்லோரையும் விமர்சிக்கும் இவர்கள் உத்தமர்களாக இருப்பார்கள் என்று நம்பி இவர்களுக்குப் பின் மக்கள் அணி அணியாகத் திரண்டார்கள். அப்படிப்பட்ட இவர்களிடம் உள்ள குறைகளை மட்டும் விமர்சிக்க் கூடாதாம்! இவர்களின் இன்னொரு முகத்தை அடையாளம் காட்டக் கூடாதாம்!

விமர்சனம் செய்வதையே மூலதனமாக் கொண்ட இவர்கள் விமர்சிக்காத தலைமையே உலகில் கிடையாது என்று சொல்லி விடலாம். சீட்டுக்கு மாறும் அமைப்பு நோட்டுக்கு மாறும் அமைப்பு வீதியில் இறங்காத கோழைத்தனமான அமைப்பு என்று மற்ற அமைப்புகள் பற்றி விமர்சித்தார்கள். நமது சமுதாயத்தை விமர்சிப்பதற்கென்றே இவர்கள் கண்டு பிடித்த வார்த்தைகளில் ஒன்று முஸ்லிம் பெயர் தாங்கிகள் என்பது. சமுதாயப் பேச்சாளர்களை விமர்சிக்க பயன்படுத்திய வார்த்தை கூலிக்கு மாரடிப்பவர்கள். இப்படிப்பட்ட எல்லா விமர்சனங்களுக்கெல்லாம் சொந்தக்காரர்களாகிய இவர்களாலும் எந்த ஒரு தலைமையும் எந்த ஒரு அமைப்பும் இன்பார்மர் வேலை செய்தவர்கள் என்ற விமர்சனத்திற்கு ஆளாகவில்லை.

இன்பார்மர் வேலை செய்தார்கள், காட்டிக் கொடுத்தார்கள் என்று ஒரு முறை அல்ல, ஒரு தரப்பினர் இடமிருந்து மட்டும் அல்ல, பல முறை பல தரப்பினர் இடமிருந்து இந்தக் குற்றச் சாட்டுகளுக்கு ஆளான ஒரே அமைப்பு ஒரேத் தலைமை எது? இன்பாமர் வேலை செய்ய எத்தனையோ வழிகள் இருக்கின்றது. சமுதாயத்தின்; பெயரால் இஸ்லாத்தின் பெயரால் அமைப்புகளை ஏற்படுத்திக் கொண்டுதான் இன்பார்மர் வேலை செய்ய வேண்டுமா? இன்பாமர் வேலை செய்ய சமுதாயத்தின்; பெயரால் ஒரு அமைப்புத் தேவையா? இதுதான் மானமுள்ள முஸ்லிம்களின் கேள்வி.

சுய நலமும் எதன் பெயரிலாவது பதவி கிடைத்தால் போதும், ஆட்டு மந்தைகள் போல் பெரும்பான்மை கூட்டத்தோடு கூட்டமாக இருக்க வேண்டும், வி.ஐ.பி.க்கள் (பிரபலங்கள்) தொடர்புதான் தங்களுக்குப் பெருமை என்றுள்ள முஸ்லிம் பெயர் தாங்கிகளின் வேடதாரிகளின் கூடாரம்தான் அது. அணு அளவு ஈமான் உள்ள முஸ்லிம் அவன் எந்த அகீதா உடையவனாக இருந்தாலும் இன்பாமர் வேலை செய்யும் அமைப்பில் இருப்பானா?

பி.ஜே. யை கடுமையாக விமர்சிக்கலாமா? மனதை புண்படுத்தலாமா?
தாங்கள் செய்துள்ள சமுதாயத் துரோகச் செயல்களை மறைக்க அடுத்த திசை திருப்பல். நோட்டீஸ் கலாச்சாரம் தேவையா? பி.ஜே. யை இவ்வளவு கடுமையாக விமர்சிக்கலாமா? மனதை புண்படுத்தலாமா? என்பதாகும் அப்படி என்ன கடுமையாக விமர்சித்து விட்டோம். பி.ஜே. மற்றவர்களை விமர்சித்ததை விடவா? கடுமையாக விமர்சித்து விட்டோம். அவர் சுன்னத் ஜமஅhத் மவுலவிகளை விமர்சித்த போது அல்லாமாவுக்கு என்ன அளவுகோல்? அல்லாமா என்றால் சட்டி சோறு திண்பான். சட்டி சோறு திண்றால் அவன் அல்லாமா! என்று பேசினாரே இதை யாராவது கண்டித்தீர்களா? அவர்களைத்தான் முஸ்லிம்களாக மதிக்க மாட்டாரே. அவருக்கு ஆபத்து என்றால் மட்டும் லாஇலாஹ இல்லல்லாஹு... கலிமாச் சொன்ன முஸ்லிம்களே ஓடி வாருங்கள் என்று அவர்களையும் முஸ்லிம்களாக மதித்து அழைப்பார். எனவே சுன்னத் ஜமஅhத் மவுலவிகளை விடுங்கள்.

இவர்களால் இன்றைக்கும் ஹஜ்ரத்; என்ற வார்த்தையால் அழைக்கப்படும் பிரபலமான தவ்ஹீது மவுலவியாக அறியப்பட்ட ஒருவர் இருக்கிறார். அவரை வெத்திலைப் பெட்டி, பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்குக்கு விலை சொல்லும் மொச்சைக் கொட்டை. என்றெல்லாம் விமர்சித்ததார்களே! இதை யாரும் தட்டிக் கேட்டார்களா? சுவைத்து ரசித்தார்களா? இதை விடவா கடுமையாக விமர்சித்து வி;ட்டோம். இதுவெல்லாம் எங்களுக்குத் தெரியாது என்று வரலாறு இல்லாதவர்கள் சமாளிக்கலாம்.

கொல்லன் வேலைக்கு பட்டரை போடுவது போல் புறம் பேச என ஊர்ப் பணத்தில் தனி பட்டரை போட்டு அசிங்கங்களை சொல்லிக் காட்டி கேஸட் தயாரித்தார்களே! இதை யாராவது தவறு என்று கண்டித்தார்களா? அதை வினியோகித்து பூரிப்பு அடைந்தார்களா? அதை வேகமாக யு.ஏ.இ.க்கு வரவழைத்த உத்தமர் யார்? காப்பிப் போட்ட பண்பாளர் யார்? நாம் வெளிட்டுள்ள பிரசுரங்களில் அவர்களது சமுதாய விரோத போக்கைத்தான் சாடி உள்ளோமே தவிர அவர்களைப் போல் அசிங்கங்களை அரங்கேற்றவில்லை. டி.வி. நேர் காணல் நிகழ்ச்சி போல் ஊர் ஊராய்ப் போய் அவன் பொண்டாட்டி இப்படி சொன்னாள் அவன் அவளோடு போனான், இவன் இவளோடு போனான் என்று ஆட்களை அல்லாஹ்வுடைய பள்ளியில் கூட்டி வைத்து அசிங்கங்களை வீடியோ படம் எடுக்கச் செய்த மகான் யார்? இது மாதிரி அசிங்கங்களைப் பேசி படம் பிடிக்கத்தான் திருச்சி சிங்கார தோப்பு பள்ளியை கைப்பற்றினார்களா?

தனி நபர்களை விமர்சனம் செய்வது சரியா குறைகளை சொல்லிக் காட்டலாமா என்று கேட்டும் திசை திருப்புகின்றனர். இதேக் கேள்வி விமர்சகர்களின் மூலப் பிதாவான அவர்களை நோக்கி வந்தது. அப்பொழுது அல்லாஹ் குர்ஆனில் பிர்அவ்ன், நம்ரூத் காரூன், ஏன் ரசூலுல்லாஹ்வின் பெரிய வாப்பா அபூலஹபுக்கு என தனி சூராவே இறக்கி உள்ளான் என்று கூறினார். இப்பொழுது அவர்கள் கூறிய இந்த பதிலையே அவர்களுக்கு கூறினால், அவர்கள் எல்லாம் வழி கெட்டவர்கள். அது வழி கெட்டவர்கள் பற்றிய குறைகளைத்தான் சொல்லலாம். என்னதான் இருந்தாலும் மார்க்கப் பிரச்சாரகர்களின் குறைகளை வெளிப் படுத்தலாமா? அவர்களது இமேஜ் பாதிக்கப்படும்பொழுது பிரச்சாரப் பணி பாதிக்காதா? என்று கேட்டும் திசை திருப்புகின்றனர். இதற்கும் அவர்கள் ஏற்கனவே கூறி உள்ள பதில்களையே நினைவுக்கு கொண்டு வருகிறோம்.

மார்க்கப் பிரச்சாரகர்களின் குறைகளை வெளிப் படுத்தலாமா?
மார்க்கப் பிரச்சாரகர்களிலெல்லாம் தலை சிறந்தவர், முன்னோடியானவர் முஹம்மது நபி(ஸல்)அவர்கள்தாம். அந்த முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் ஏற்பட்ட தவறை அல்லாஹ் மூடி மறைக்கவில்லை. ஸலாத்துக்கு பதில் சொல்லாத ஒரு நிகழ்ச்சியைக் கூட ... இவர் கடுகடுத்தார். அலட்சியம் செய்தார்..(80:1,2) என்று கடுமையாகச் சொல்லிக் காட்டி உள்ளான். ... சில சொற்களை இவர் நம்மீது இட்டுக் கட்டியிருந்தால் அவரை வலது கையால் தண்டித்திருப்போம். பின்னர் அவரது நாடி நரம்பைத் துண்டித்திருப்போம்.. என்று 69:44,45 வது வசனங்களில் சொல்லிக் காட்டி உள்ளான். அல்லாஹ்வால் இஸ்லாமிய பிரச்சாரத்திற்கென்று தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்ட தூதராக இருந்தும் அவர் இமேஜ் பாதிக்கக் கூடாது என்று பார்க்கவில்லை. எதையும் மூடி மறைக்கவில்லை. 6:144 வசனத்தின் மூலம் அல்லாஹ்வுக்காகத்தான் இஸ்லாத்தில் இருக்க வேண்டுமே தவிர நபிக்காகக் கூட இஸ்லாத்தில் இருப்பதை அல்லாஹ் விரும்பவில்லை என்று கூறிய பதில்களே அவர்களின் இந்த திசை திருப்பல்களுக்கும் பொருந்தும். குர்ஆன் ஹதீஸ்கள்படி மார்க்கப் பிரச்சாரகர்களிடம் உள்ள குறைகளை போட்டு உடைக்கத்தான் வேண்டும் என்று அவர்கள் கூறி உள்ள விளக்கப்படி எமது பணிகள் தொடரும்.
ஒழுங்கு நடவடிக்கைக் கூத்துக்கள்
ஷhர்ஜா வந்த த.மு.மு.க. மாநிலச் செயலாளர் தமீமுல் அன்சாரியிடம் பழ்லுல் இலாஹி மீது எடுக்கப்பட் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆதாரம் கேட்கப்பட்டது. ஆதாரம் இல்லை என்று தமீமுல் அன்சாரி கூறி விட்டார். பி.ஜே. அணியினர் மீது நாம் கூறி உள்ள குற்றச் சாட்டுக்களை கேட்டு எழுத தமிழக முஸ்லிம் பேரவையின் 15 பேர் கொண்ட கமிட்டி முடிவு செய்தது. ஆதனால் நாம் துவங்கிய தமிழக முஸ்லிம் பேரவையை இவர்கள் கலைத்து விட்டதாக அறிவித்தார்கள். அதன் மூலம் தங்களுக்குத் தாங்களே சூடு வைத்துக் கொண்டார்கள். கமிட்டி சார்பாக நேரில் கேட்டு வருவதாக தாயகம் சென்று வந்த அபுதாபி பி.ஜே. அணித் தலைவர் இப்பொழுது காயிதே மில்லத் பேரவையில் சேர்ந்து விட்டார். பி.ஜே.யிடம் சரியான பதில் கிடைத்து இருந்தால் மக்களிடம் கூறி இருப்பார்.

1998ல் கோவையில் குண்டு வெடித்தது. அப்பொழுது பி.ஜே.யால் முஸ்லிம்களின் விரோத அமைப்புகள் எனக் கூறப்பட்ட காங்கிரஸ்காரர்களும் கம்யூனிஸ்டுகளும் குண்டு வெடிப்பை நிகழ்த்தியது ஆர்.எஸ்.எஸ். தான் என்று அழுத்தமாகக் கூறினர் பி.ஜே.யால் இஸ்லாமிய எதிரி என்று பிரச்சாரம் செய்யப்பட்ட நடிகர் ரஜினி காந்த்தும் கூட முஸ்லிம்கள் செய்திருக்க முடியாது என்று வாதிட்டார். அப்பொழுதும் முஸ்லிம்கள் தான் குண்டு வைத்தவர்கள் என்பதை உறுதி செய்யும் விதமாக நடந்து கொண்டது பி.ஜே. மட்டும் தான். இதைக் கண்டித்து 19.03.1998 அன்று விமர்சனக் கடிதம் எழுதினோம். அந்தக் கடிதத்திலிருந்து சில பாராக்களை உங்கள் பார்வைக்குத் தருகிறோம்.

ஷதேர்தல் புறக்கணிப்பு வாபஸ்| ஏன் என்ற உங்கள் விளக்கம் சப்பைக் கட்டாகவும் சால்ஜாப்பாகவும் சொதப்பலாகவும் தான் மக்களுக்கு தெரிந்தது. ஷபுறக்கணிப்பு வாபஸ்| மூலம் சமுதாயத்திற்கு என்ன பயன் ஏற்பட்டது? 19 உயிர்களுக்குப் பரிகாரம் கிடைத்து விட்டதா? கொலைகாரர்கள் தண்டிக்கப் பட்டுவிட்டனரா? அழிக்கப் பட்ட முஸ்லிம்களின் 1000 கோடி சொத்துக்கள் திரும்பி வந்து விட்டதா? ஆறுதல் வார்த்தையாவது ஆட்சியாளர்களின் நாவிலிருந்து உதிர்ந்து விட்டதா? 13 சத விகிதம் இட ஒதுக்கீடு தருவதாக வாக்குறுதி பெற்று விட்டோமா? ஆட்சியாளர்களால் இந்த சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட ஷதீவிரவாதிஷ விருது திரும்பப் பெறப்பட்டதா? ஜோடனை செய்யப் பட்டப் பொய் வழக்குகள் வாபஸ் ஆகி விட்டனவா?

ஷஷஒவ்வொரு அமைப்பிற்கும் ஒரு நிலை உண்டு. ஒரு விலை உண்டு. நாம் எது வந்த போதும் நிலை மாற மாட்டோம், விலை போக மாட்டோம், உறுதியாக இருப்போம்|| என்று கூறியவர்கள், ஆண்டுக் கணக்கில் சிறை வாசம் என்ற வெறும் அச்சுறுத்தல் வந்தாலே ஆடிப்போய் விடுவார்கள். எடுத்த முடிவிலிருந்து பின் வாங்கி ஓடிப் போய் விடுவார்கள். ஒரு விலைக்கு மாறா விட்டாலும் சூழ்நிலைக்கு மாறி விடுவார்கள் என்பது போலாகிவிட்டது.

மக்களுக்காக என்று சொல்லிக் கொண்டுதான் ஒரு கட்சியோ அமைப்போ உருவாகிறது. பெரும்பாலான கட்சிகளின்-அமைப்புகளின் பிறப்பும் ஷஷஆபரேஷன் கேஸாக||த்தான் அமைந்திருக்கிறது. அமைப்பின் தலைமைக்கு அல்லது ( பி.ஜே. மாதிரி) பிரபலமான ஒருவருக்கு அல்லது ஒரு சிலருக்கு பாதிப்பு என்று ஏற்படும்போது அத்தனிப்பட்டவர்களின் பாதிப்பை, ஷஷசமுதாயத்திற்கே இழைக்கப்பட்ட பாதிப்பாக|| படம் காட்டி தாங்கள் தனி அமைப்பு காண்பதும், தன்னை வருத்திக் கொள்வதா? சமுதாயத்தை பாதிக்க விடுவதா? என்ற நிலை வரும்போது மிக எளிதாக தனக்கு பாதகம் ஏற்படாமல் சமுதாயத்தை அடகு வைத்து விடுவதும்தான் காலங்காலமாய் நடந்து வருகிறது...( அதைத்தான் இப்பொழுது பி.ஜே. அணி செய்துள்ளது.)

இப்படி உள்ளது, பி.ஜே. அணியில் இருந்த நிலையில் நாம் எழுதிய அந்த விமர்சனக் கடிதம். அதாவதுபி.ஜே.யின் சமுதாய விரோதப் போக்கை ஆரம்பத்தில் இருந்தே கண்டித்தும் விமர்சித்தும் வந்துள்ளோம். எம்மை பி.ஜே. அணியிலிருந்து நீக்கிய பின்னர்தான் பி.ஜே. அணியை விமர்சிப்பதாகக் கூறுவோரின் நம்பகத் தன்மையை புரிந்து கொள்ளுங்கள். இந்தக் கடிதத்தை ஒட்டியும் நம் மீது ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரால் எம்மை நீக்க சதி செய்தார்கள். அப்பொழுது யு.ஏ.இ. பி.ஜே. அணியில் முனாபிகீன்கள் ஊடுருவல் இருக்கவில்லை. நிறைய நியாயவான்களும் சமுதாய உணர்வுள்ளவர்களும் இருந்ததால் அன்றைய ஒழுங்கு நடவடிக்கைக் கூத்துக்கள்;, சதிகள் முறியடிக்கப்பட்டு அவர்கள் மூஞ்சில் கரி பூசப்பட்டது. அந்தக் கடிதத்தில் உள்ள மேலும் சில பாராக்களை பாருங்கள்.
நாடாளு மன்றத்தில் தொழுகைப் போரட்டம்
நாடாளு மன்றத்தில் தொழுகைப் போரட்டம் அறிவித்தீர்கள், விளக்கக் கூட்டங்கள் நடத்தினீர்கள், டெல்லி செல்ல தலைக்கு ரூபய் 2000 என வசூலித்தீர்கள் அந்தத் திட்டம் சப்தமில்லாமல் அடங்கி விட்டது. அரசியல்வாதிகள் போல் வசதியாக மறந்து விட்டீர்கள்.
அயோத்திக்கே போய் கரசேவை
மதுரைக் கூட்டத்தில் பாபரி மஸ்ஜிதுக்காக இந்த (1997ஆம்) ஆண்டுதான் ஜனநாயக ரீதியில் இறுதியான அமைதிப் பேரணி. அடுத்து ஆண்டு அயோத்திக்கே போய் கரசேவை செய்வோம் வருவீர்களா? என்று பி.ஜே. ஆதரவாளர்;கள் அனைவராலும் பொது மக்கள் உசுப்பி விடப்பட்டார்கள். சாத்தியம் எத்தனை சதவிகிதம் என்று கணக்குப் பார்த்துதான் அந்த அறிவிப்புச் செய்தீர்களா? அல்லது மேடைக்கு மட்டும் பேசப்பட்ட பேச்சா?
வீதிக்கு வராமல் ஓடி ஒளிந்து கொண்ட பி.ஜே. அணி.
அண்ணன் செய்த குற்றத்திற்குத் தம்பியோ தந்தை செய்த குற்றததிற்கு மகனோ பொறுப்பாளி ஆக முடியாது பின் விளைவுகளைச் சிந்திக்காத ஒருவர் செய்த தவறுகளுக்கு ஒரு சமுதாயத்தையே வீதிக்கு அழைத்து வந்து உரிமைக் குரல் கொடுக்க கண்டு பிடிக்கப்பட்டதுதான் த.மு.மு.க. மதுரை கோவில் குண்டுவெடிப்பில் உடனேயே போராடி அநியாயமகப் பழி சுமத்தப் பட்டவர்களை விடு வித்து உண்மைக் குற்றவாளிகள் பிடிபடக் காரணமாக இருந்த த.மு.மு.க.வை, கோவைக் கொலைகளுக்கு உடனேயே வீதிக்கு வரவிடாமல் தடுத்த பி.ஜே. ஓடி ஒழிந்து கொண்டதால் இன்றைக்கு முஸ்லிம் சமுதாயம் பலியாகியுள்ளது. உரிமை 2 குரல் 24ல் கீழைப் புகாரி எழுதியிருப்பதை மேடை போட்டு ஒலிக்க வேண்டிய பி.ஜே. ஒடி ஒளிந்து கொண்டது ஏன் என்று கேட்பவர்களுக்கு உங்களிடம் சரியான மழுப்பலில்லாத பதில் உண்டா? இது போன்ற விமர்சனங்களும் அந்தக் கடிதத்தில் இடம் பெற்றிருந்தன. பதவி ஆசை இருந்தால் சாதுக்கள் போல் ஜால்ரா தட்டி இருப்போம். இப்பொழுது சொல்லுங்கள். ஒழுங்கு நடவடிக்கைக்குப் பிறகுதான் விமர்சிப்பதாகக் கூறும் ஷhர்ஜா பி.ஜே. அணியினர் வாயை பினாயில் போட்டுக் கழுவினாலும் சுத்தமாகுமா?
மொட்டைப் பிரசுரம்
எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுகிற மாதிரியான மவுலவி பி.ஜே.ன் விண் டி.வி. பேட்டியையும் வெந்தப் புண்ணில் வேல் பாச்சுகிற மாதிரியான காயல் பட்டிணப் பேச்சையும் வெளியிட்டால், இன்பார்மர் வேலை செய்பவர்கள் யார் என்பதை மக்கள் கன்பார்ம் பண்ணி இருப்பார்கள். ஹாமித் பக்ரி கைது விஷயத்தில் பி.ஜே. நடந்து கொண்ட முறை சரிதானா என்பதையும் விளங்கி இருப்பார்கள். அதை வெளியிட வக்கற்றவர்கள் வகையற்றவர்கள் ஒழுங்கு நடவடிக்கையைக் கூறி திசை திருப்பியது போல், நமது பிரசுரத்தை மொட்டை என்று கூறியும் திசை திருப்பி உள்ளார்கள். யார் வெளியிடுகிறார்கள் என்று கண்டு பிடிக்க முடியாமல் வெளியிடப்படும் பிரசுரம்தான் மொட்டைப் பிரசுரம். நமது பிரசுரங்கள் யாவும் எமது ஈ-மெயிலில் இருந்துதான் அனுப்பி உள்ளோம். இவர்கள் கூறுபவர்களுக்குப் பதில் அளித்து வெளியிட்ட பிரசுரத்தில் எமது யு.ஏ.இ. மற்றும் தாயக முகவரிகளுடன் வெளியிட்டோம். அப்போது இதன் மூலம் எமது அட்ரஸையும் பெயரையும் விளம்பரப்படுத்துவதாக விமர்சித்தார்கள். எனவே குர்ஆன் ஹதீஸ்களுக்கு மட்டுமே கட்டுப் படுவோம் என்ற அடிப்படைக் கொள்கையிலிருந்து விலகிச் சென்று விட்ட அவர்களிடமிருந்து பிரிந்த நாம் வெளியிடுகிறோம் என்பதை புரியும் வண்ணம் தான் வெளியிட்டுள்ளோம். பிரசுரத்தை வினியோகித்தவர்கள் நமது வெளியீடு என கூறியே வினியோகித்துள்;ளனர். அதனால்தான் பத்திரிக்கை வெளி வருவதற்கு முன்பே வாசகர் வட்டம் அமைத்த அறிவாளி(?)களாலும் நாம் வெளியிட்டதாக குறிப்பிட முடிந்துள்ளது.
முல்லா உமருக்கு குரல் கொடுத்து முல்லா பக்ரியை குர்பானி கொடுத்தவர்கள்
ஏற்கனவே உண்மையை ஒப்புக் கொண்டவர்கள்; மக்களை திசை திருப்ப மீண்டும் கூறி வரும் புதிய சமாளிப்புகளில் ஒன்று ஷஹாமித் பக்ரி என்ற தனி நபருக்காக ஒரு சமுதாய அமைப்பை அழிக்க முடியுமா?| என்பதாகும். ஓரு தனி நபருக்காக ஆட்சித் தலைமையை - நாட்டை விட்ட முல்லா உமரின் தியாகத்தை - அமெரிக்காவை எதிர்த்து நின்ற அவர்களின் வீரத்தை மார்க்க ரீதியில் சரி கண்டு வாய் கிழியப் பேசினார்கள். எப்படி என்றால், ஷமஹ்தியாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது| என்ற அளவுக்கு உயர்வு படுத்திப் பேசினார்கள். 110 மாடி கட்டிடத்தை அமெரிக்கா தானாகவே இடித்துக் கொண்டு பலி போடுகிறது என்றும் பேசினார்கள்.
ஏன் இப்படி பேசினார்கள்? அன்று அப்படி பேசினால்தான் வீடியோ, சி.டி. வியாபாரம் நடக்கும். அதனால்தன் அப்படிப் பேசினார்கள். உள்ள உறுதியுடன், நியாய உணர்வுடன் பேசி இருந்தால், முல்லா உமருக்காக உண்மையிலேயே குரல் கொடுத்திருந்தால் முல்லா பக்ரியை குர்பானி கொடுத்து இருப்பார்களா? நீதிக்காக இந்த அற்பமான இயக்கத் தலைமையை விட முடியாத இவர்கள், ஆப்கானிஸ்தானில் இருந்திருந்தால் என்றைக்கோ உஸாமாவை அமெரிக்காவிடம் பிடித்துக் கொடுத்து விட்டு டாலர் வாங்கி இருப்பார்கள்.

ஆப்கானிஸ்தானுக்கு ஆதரவான வீடியோ-சி.டி. வியாபார சீசன் முடிந்தது. 110 மாடி கட்டிடத்தை உஸாமா இடித்தது தப்பு. அமெரிக்காவை எதிர்த்து நின்றது மார்க்க ரீதியாகத் தவறு என்று அல்லாஹ்வின் பள்ளியில் நின்று பல்டி அடித்தார்கள். ஹாமித் பக்ரி விஷயத்தில் இவர்கள் சமாளிப்புப்படி ஹாமித் பக்ரி என்ற ஒரு நபர் மட்டும் கைது செய்யப் படவில்லை. அவருடன் ஒன்று இரண்டு என்று ஆரம்பித்து 20 பேர் கைது செய்யப்பட்டடிருக்கிறார்கள். அப்படி இருக்க தனி நபர் என்ற இவர்களின் வாதம் எந்த அளவுக்கு உண்மை என்று மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்..
சமுதாய அமைப்பு என்பது எதற்கு?
வாதத்திற்காக ஹாமித் பக்ரி என்ற ஒரு தனி நபர் மட்டும் என்றே வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு ஆளாக இப்படி தனி மனிதன் என்று கழட்டி விட்டால் சமுதாய அமைப்பு என்பது எதற்கு? பத்திரிக்கைகள், கேஸட்கள், சி.டி.க்கள் விற்று பிழைப்பு நடத்தவா? ஒவ்வொரு மனிதனும் சமுதாயத்தின் ஒரு அங்கம் என்பது மேடைப் பேச்சுக்கு மட்டும்தானா? பாக்கர் என்ற ஒரு தனி நபருக்காகத்தானே லட்டர் பேடு இயக்கமாக இருந்த த.மு.மு.க. என்ற அமைப்பே கண்டெடுக்கப் பட்டதாக வெளிரங்கமாகக் கூறினார்கள். இந்த வெளிரங்கப்படி பாக்கரை விட பக்ரி எந்த வகையில் குறைந்தவர், எந்த வகையில் தனி நபர்?

சீனி நைனா முஹம்மது கைதும் கமாலுத்தீன் மதனி பெயரால் வந்த அறிக்கையும்
அந்தரங்கப்படி பிஜே என்ற ஒரு தனி மனிதரைக் காக்க உருவான தற்காப்பு அமைப்புதான் த.மு.மு.க. சமுதாயத்திற்காக உருவானது அல்ல. சமுதாயத்திற்கு என்று உருவாகி இருந்தால் அதில் பி.ஜே.யின் சந்தர்ப்ப வாதங்கள் இருக்காது. சீனி நைனா முஹம்மது கைது செய்யப்பட்டப்பொழுது அவரை ஜாக் தலைவர் என்று பத்திக்கையில் குறிப்பிட்டிருந்தார்கள் அப்பொழுது சீனி நைனா முஹம்மது ஜாக் தலைவராக இல்லை நான் தான் ஜாக் தலைவர் தீவிரவாதிதத்திற்கும் ஜாக்குக்கும் சம்பந்தமே மில்லை என கமாலுத்தீன் மதனி பெயரால் பத்திரிக்கையில் அறிக்கை வந்தது.

சீனி நைனா முஹம்மது பற்றி இப்படி அறிக்கை வந்தள்ளதைக் கண்டித்து வானுக்கும் பூமிக்குமா குதித்து எதிர்ப்புத் தெரிவித்தார் மவுலவி பி.ஜே. அமைப்பில் உள்ளவன்; கைது செய்யப்பட்டதும் அவனுக்காக உதவி செய்யாமல் சம்பந்தமில்லை என அறிக்கைவிட்டால் எவன் அமைப்பில் இருப்பான்? சமுதாயத்திற்காக இயக்கமா? இயக்கத்திற்காக சமுதாயமா? என்று பல இடங்களில் சொல்லிக் காட்டி உள்ளார். குறிப்பாக சமாதானக் கூட்டங்களில் இதை அதிகம் அதிகம் சொல்லிக் காட்டினார் அப்படிப்பட்ட மவுலவி பி.ஜே. ஹாமித் பக்ரி விஷயத்தில் நடந்து கொண்ட முறை சரிதானா? என்று இங்கு நாம் கேள்வி எழுப்பவில்லை. சீனி நைனா முஹம்மது பற்றிய அறிக்கையில் உள்ள உண்மை நிலையையே அறியத் தர விரும்புகிறோம். உண்மை நிலை என்னவென்றால் கமாலுத்தீன் மதனி அவர்கள் இடம் இப்படி ஒரு அறிக்கை வாங்கி பத்திரிக்கைகையில் கொடுக்கச் சொன்னவரே மவுலவி பி.ஜே.தான் இதைத்தான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

அண்ணன் உத்தரவுப்படி மேலப்பாளையத்தில் இருந்து நானும் லுஹாவும் கார் எடுத்துக் கொண்டு கோட்டாறுக்குப் போய் கமாலுத்தீன் மதனி இடம் அறிக்கை எழுதி வாங்கினோம். நாங்களே பத்திரிக்கை அலுவகங்களுக்குக் கொண்டு போய்க் கொடுத்தோம். இணைப்பாக அதே பொருள்பட லுஹா பெயராலும் ஒரு கொசுறு அறிக்கையும் கொடுத்தோம். சினிமாவில் வரும் இரட்டை வேடங்களை விமர்சித்து விலாவாரியாக விமர்சிக்கும் பி.ஜே. தன் இமேஜைக் கூட்ட சீனி நைனா முஹம்மது பற்றிய அறிக்கையில் இரட்டை நிலைகளை மேற்கொண்டார். இது மாதிரிதான் பல விஷயங்களில் பல சமயங்களில் இரட்டை நிலைகளை மேற்கொண்டுள்ளார்.

பாக்கர் கைது செய்யப்பட்டதும் போராட்டக் களத்தில் குதித்த மவுலவி பி.ஜே. சீனி நைனா முஹம்மதுக்காக போராட்டக் களம் கண்டாரா? பாக்கர் கைதுக்கு முன்னால் கைது செய்யப்பட்ட யாருக்காவது போராடி இருக்கிறாரா? கோவையில் 1993ஆண்டு; கைது செய்யப்பட்டவர்கள் 2003 விடுதலையானதும் அர்;களுக்காக போராடியதாக செய்தி வெளியிட்டார்கள். கைது செய்யப்பட்ட1993ல் போராடவில்லை. 94ல் இல்லை.95ல் இல்லை. 96ல் மட்டும் சந்தர்ப்ப சூழ்நிலைக்காக போராட்டம் நடத்தினார், அத்தோடு சரி. இப்பொழுது விடுதலையானதும் இவர்கள் முயற்சியால் வெளியான மாதிரி செய்தி வெளியிட்டுள்ளார்கள். சமீபத்தில் எஸ்.ஐ.எம் தடை செய்யப்பட்ட போது (கண் துடைப்புக்காக கண்டித்து எழுதுவோம்) அதற்காக போரட்டம் நடத்தக்கூடாது. என்று பி.ஜே. கூறியதாக லுஹா தந்த தகவலையும் இங்கு நினைவு படுத்தக் கடமைப் பட்டிருக்கிறோம். பாக்கர் கைதுக்குப் பிறகு (பி.ஜே.யாகிய) தான் தான் கைது செய்யப்படுவோம் என்ற பயம் பி.ஜே.க்கு வந்தது. அதன் பிறகுதான் தன்னைக் காத்துக் கொள்ள பி.ஜே. பேரணி, உண்ணா விரதம், சாலை மறியல் என அடுத்தடுத்து போராட்டங்களைத் தொடர்ந்தார்.

தன்னைக் காக்க கமாலுத்தீன் மதனி பெயரால் அறிக்கை விட்ட பி.ஜே
இப்படி தன்னைக் காத்துக் கொள்ள பி.ஜே. போராட்டங்களைத் தொடர்ந்தபோது பி.ஜே.ன் போக்கில் உடன்பாடு இல்லாத கமாலுத்தீன் மதனி என்ன செய்தார்? இவர்களைப் போல் நாங்கள் விசாரித்த அளவில் தொடர்பு இருக்கிறது. ஜாக் அவருக்காக போராடாது என்று அறிக்கை விட்டாரா? மார்க்கப் பிரச்சாரம் என்ற பெயரால் காயல் பட்டிணத்தில் பி.ஜே. பேசிய மாதிரி தொண்டியில் கூட்டம் போட்டு பேசினாரா? என்ன நடந்தது. ஜாக் அமைப்பின் சார்பில் வெளியிடுவது போல் கமாலுத்தீன் மதனி பெயரால் பி.ஜே.யே அறிக்கை தயாரித்து பிரசுரமாக அச்சிட்டு வெளியிட்டார். தனக்கு ஆபத்து என்றால் என்ன மாதிரி வேலையும் செய்யத் தயங்காத இவரது இந்தச் செயல் பழம் பெரும் அரசியல்வாதிகளையும் மலைக்க வைத்து விட்டச் செயலாகும்.

பக்ரிக்கு பி.ஜே.தான் கெடுதல் செய்தார்.
பக்ரியை வெளியில் எடுக்க பி.ஜே. ஒன்றும் செய்யவில்லை என்பதற்கு ஆதாரம் காட்டவில்லை என்று எழுதி பக்ரிக்கு பி.ஜே. உதவியது போன்ற மாயையை ஏற்படுத்தி உள்ளனர். உதவி செய்ததற்கு ஆதாரம் காட்டுவார்களா? செய்யாததற்கு ஆதாரம் கேட்பார்களா? பி.ஜே.யின் மண்டலப் பொறுப்பாளர் மண்டைக்கு இது கூடத் தெரியாதா?. பக்ரிக்கு பி.ஜே. அணி உதவவில்லை என்று நாம் குற்றச் சாட்டு வைக்கவில்லை. அணியினர்தான் மாட்டி விட்டுள்ளார்கள் என்றே கூறி உள்ளோம்.
இவர்கள் பற்றி அடையாளம் காண வேறு என்ன வேண்டும்.
பி.ஜே.தான் மாட்டி விட்டுள்ளார் என்று நம்பவும் முடியவில்லை நம்பாமலும் இருக்க முடியவில்லை என்று சிலர் கூறி வருகின்றனர். அவர்களின் கவனத்திற்கு ஒன்றைக் குறிப்பிடுகிறோம். இந்தியாவை இன்னும் உலுக்கிக் கொண்டிருக்கும் கோத்ரா ரெயில் எரிப்பு வெளியில் இருந்தவர்கள் தீ வைத்து இருக்க முடியாது என்று ஆராய்ச்சியாளர்கள் அறிக்கை அளித்துள்ளார்கள். குஜராத் பார்முலாவை இந்தியா முழவதும் பின் பற்றுவோம் கோத்ரா மாதிரி இருக்காது என்று கூறியதன் மூலம்; முஸ்லிம் விரோத அமைப்பினரும் தங்கள் சூழ்ச்சிதான் கோத்ரா சம்பவம் என்பதை ஒப்புக் கொண்டு விட்டார்கள். இந்த உண்மையை உணர்விலும் எழுதி விட்டார்கள்.
அதே நேரம் த.மு.மு.க. மூத்த தலைவர் என்று உணர்வில் எழுதி தன்னைத் தானே மூத்த தலைவர் என விளம்பரப்படுத்திய பி.ஜே. அவர் எதிரியாக கருதும் அமைப்பின் மீது குற்றம் சாட்டுவதற்காக, அந்த அமைப்பினர் போன்;ற முஸ்லிம்கள்தான் கோத்ராவில் தீ வைத்ததாக மேடை போட்டு; பேசி உள்ளார் என்றால் இவர்கள் பற்றி அடையாளம் காண வேறு என்ன வேண்டும்.

ஹாமித் பக்ரியை ஜாமீனில் எடுப்பதற்கான முயற்சிகளை காயல்பட்டிணம் சகோதரர்கள் மேற்கொண்டு வருகிறார்கள் என்றும் பிரசுரத்தில் குறிப்பிட்டுள்ளார்கள். இதன் மூலம் அவர்களே ஹாமித் பக்ரிக்கு பி.ஜே. எந்த முயற்சியும் செய்யவில்லை என்பதை அவர்களை அறியாமல் ஒப்புக் கொண்டு விட்டார்கள். அடுத்து பிரசுரம் வெளியிட்டால் பக்ரியை வெளியில் எடுக்க பி.ஜே. அணியிpனரைத் தவிர காயல்பட்டிணத்தில் உள்ள எல்லாரும் முயற்சி செய்தார்கள் பி.ஜே. அணியினர்தான் கெடுதல் செய்தது என்ற உண்மையையும்;; அவர்களை அறியாமல் ஒப்புக் கொள்ள வைத்து விடுவான் அல்லாஹ். நமது பிரசுரத்தில் சமுதாயப் பிரமுகர் சமுதாயப் பிரமுகர் என்று தான் உள்ளது. ஏன் அந்தப் பிரமுகர்கள் பெயர் போடவில்லை என்று கேட்டும் திசை திருப்பி உள்ளனர்.
ஏன் பிரமுகர்கள் பெயர் போடவில்லை?
ஹாமித் பக்ரி விஷயத்தில் சமூக விரோத சக்திகள் நடந்துக் கொண்ட முறை கேடான செயலைக் கண்டித்துள்ளார் மவுலவி அலி அக்பர் உமரி. உடனே அவர், பக்ரி மாதிரி உன்னையும் உள்ளே தள்ளி விடுவோம் என்று பி.ஜே.யின் அடியாட்களான சமூக விரோதிகளால் மிரட்டப்பட்டிருக்கிறார். ஹாமித் பக்ரிக்காக நியாயம் கேட்ட காயல்பட்டிணம் பிரமுகரை கொலை செய்து விடுவோம் என்று பி.ஜே.யின் அடியாட்களான சமுக விரோதிகள் மிரட்டி உள்ளனர். எனவே சமுதாய உணர்வு உள்ளவர்களை மிரட்டும் சமூக விரோதிகளாலும் கொலைகாரப் பாவிகளாலும் கொலை செய்ய உத்தரவு போட்டு விட்டு அழுகின்நவர்களாலும் பிளைட்டில் போய் பிணத்தை அடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களாலும் எனக்கு தகவல் தந்த சமுதாய பிரமுகர்களின் உயிருக்கு ஆபத்து வந்து விடக் கூடாது என்பதால் தான் பெயர் போடவில்லை.

தயங்குவது யாரோ? நிரூபிக்கத் தயார் தானோ?
பி.ஜே.யின் எந்த ஒரு நிலைப் பாட்டையும் ஷஉணர்வு| வார இதழில் விரிவாகவும் விளக்கமாகவும் எழுதுவார்கள். தங்கள் நிலைப் பாட்டை விளக்க சிறப்பு நிகழ்ச்சி நடத்தி வீடியோ ஆடியோ சி.டி.க்களை கிளைகளுக்கு அனுப்பி மக்களிடம் சேர்ப்பார்கள். அப்படிப்பட்வர்கள் ஹாமித் பக்ரி பற்றி தங்களின் உண்மையான நிலைப் பாட்டை மக்களிடம் சேர்க்காமல் பின் வாங்கியது ஏன்? துபை ஜம் இய்யத்து தவ்ஹீதில் பனைக்குளம் ஷhகுல் என்ற பெரியவர் பேசிய பேச்சை வெளியிட்டாலும் ஹாமித் பக்ரி கைது பற்றி பி.ஜே.யின் நிலை என்ன என்பதை மக்கள் விளங்கி இருப்பார்கள். அதையும் வெளியிடத் தயங்குவது ஏனோ? தொகுதிக்கு ஒரு கட்சி என முடிவு எடுத்து வீதிக்கு 3 கட்சிகளை ஆதரிக்கும் குழப்பமான தேர்த்தல் நிலைப் பாட்டைக் கூட நிலை குலையாமல் யானைக் காது பிரசுரம் வெளியிட்டு விளக்கிய பி.ஜே. பக்ரி விஷயத்தில் நிலை குலைந்தது ஏன்?
சாதாரண நேரத்தில் கூட அவரது கூட்டம் குக்கிராமத்தில் நடந்தாலும் உடனடியாக அதன் வீடியோக்களை வேகமாக வினியோகிப்பார்கள். அதுவும் டி.வி. பேட்டி என்றால் அதிக விளம்பரத்துடன் ஆரவாரமாக வெளியிடுவார்கள். அப்படிப் பட்டவர்கள் விண் டி.வி.ல் ஹமித் பக்ரி கைதைத் தொடர்ந்து பி.ஜே. அளித்த பேட்டியை வெளியிடாதது ஏன்? கைதான சூடு ஆறும் முன்பே பக்ரியின் ஊரான காயல் பட்டிணத்திற்குப் போய் பேசிய மவுலவி பி.ஜே.யின் பேச்சை அப்படியே வெளியிடாமல் எடிட் செய்தது ஏன்? கிளைப் பொறுப்பாளர்கள் மூலம் ஆளுக்கொருவிதமாகவும்; நாளுக்கொருவிதமாகவும் விளக்கங்களைக்; கூறி மக்களை ஏமாற்றத்தானே? இல்லை எனில் பி.ஜே.ன் டி.வி. பேட்டியையும் காயல்பட்டிணம் பேச்சையும் வெளியிட வேண்டும். தயக்கமா? தயார் தானா?

மார்க்கப் பிரச்சாரகர்களான ஹாமித் பக்ரி அப்துர் றஹ்மான் ஷpப்லி போன்றவர்களை தீவிர வாதிகள் என்று பெயர் வாரியாக ஷம்சுல் லுஹா அறிவித்ததை குறிப்பிட்டிருந்தோம். பக்ரி விஷயத்தில் நிமிடத்திற்கு ஒரு விதமாகப் பேசி வருபவர்களில் ஒருவரான மவுலவி காஜா பிர்தவ்ஸி அவரது அண்ணன் இப்படி பேசவில்லை என்றும் மறுத்து வருகிறார். ஏனவே லுஹா சார்பில் மவுலவி காஜா பிர்தவ்ஸி நமது நிபந்தனை;படி மறுக்க வேண்டும். மறுப்பாரா?
பிரிவினைக்கு மூல காரணம் யார்?
தங்களை ஒற்றுமைக்கு பாடுபடுபவர்களாகக் காட்டி வரும் பி.ஜே.யின். ஷhர்ஜா அணியினர் எம்மை பிரச்சனை பண்ணுபவராக பிரிவினை வாதியாக சித்தரித்துள்ளனர். ஏற்கனவே ஒரு மர்க்கஸ் இருக்கவே தனி மர்க்கஸ் கண்ட ஷhர்ஜா பி.ஜே.அணியினர் பிரிவினைவாதிகளா? நாமா? இஸ்லாமிய பிரச்சாரம் செய்ய ஷhர்ஜா ஐ.ஏ.ஸி.க்கு தமீமுல் அன்சாரி, எம்.ஐ. சுலைமான் போன்றவர்களை போகக் கூடாது என்று தடுத்த iஷத்தான்கள் யார்?
அபு அப்துல்லாஹ் பேசும் மேடையில் பேசக் கூடாது, கமாலுத்தீன் மதனி பேசும் மேடையில் பேசக் கூடாது என்று தமிழகத்தில் உள்ளது போல். யு.ஏ.இ.ல் பக்ரியின் கைதும் படிப்பினைகளும், சமுதாயத்திற்காக இயக்கமா? இயக்கத்திற்காக சமுதாயமா? என்ற தலைப்புகளில் பேசியதால் நாஸரை புறக்கணிக்க வேண்டும். அவரை வைத்து இஸ்லாமிய பிரச்சாரக் கூட்டங்கள் நடத்தக் கூடாது. அவர் ஏற்பாடு செய்யும் மேடையில் பேசக் கூடாது. நாஸரை வைத்து மாற்று மத கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடத்தக் கூடாது என்று கட்டளை இட்டது எந்த iஷத்தான்?

14- 03-03 ல் ஷhர்ஜா இஸ்லாமிய இஜ்திமாவில் பேச ஒப்புக் கொண்ட பேச்சாளர் எந்த iஷத்தானுக்கு கட்டுப்பட்டு வரவில்லை? குட்டி iஷத்தானுக்கா? தலைமை iஷத்தானுக்கா? இஸ்லாமிய பிரச்சாரத்திற்கு போக விடாமல் தடுப்பவன் iஷத்தானாக அல்லாமல் வேறு யாராக இருக்க முடியும். மேடைப் பேச்சு என்பது எல்லோராலும் முடியாத ஒன்று. அல்லாஹ் மனிதர்களுக்கு அளிக்கும் ஆற்றல்களில் ஒன்று. அந்த ஆற்றலைப் பயன் படுத்திட, iஷத்தான்கள் போட்ட தடையை மீறிப் போய் இஸ்லாமிய பிரச்சாரம் செய்திருந்தால், இந்த உலகின் அற்பமான பதவி பறிக்கப்பட்டிருக்கும். மறுமையில் ஈடு இணை இல்லாத பெரும் பாக்கியம் கிடைத்திருக்கும். மறுமையின் பாக்கியத்தை இழந்தாலும் இந்த உலகின் அற்பமான பதவியை விடமாட்டோம்; என்பதுதான் அந்த இயக்கத்தவர்கள் நிலை. இதை அந்தப் பேச்சாளரின் செயல் தெளிவாகக் காட்டி உள்ளது.
உணர்வு வார இதழில் 14- 03-03 தேதிய ஷhர்ஜா இஸ்லாமிய இஜ்திமா பற்றிய விளம்பரத்தை போட மறுத்து விட்டனர். அவர்களுடன் உறவாக உள்ள பத்திரிக்கையிலும் போடக் கூடாது என்று தடுத்துள்ளனர். அதற்கு காரணமான iஷத்தானின் பிடியிலிருந்து விடுபட்டு விட்ட அல்-ஜன்னத்திலும் .அந்த iஷத்தானின் கட்டுப் பாட்டில் இல்லாத அஸ்-ஸிராதிலும் விளம்பரம் போட ஒப்புக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது. இஸ்லாமிய இஜ்திமா விளம்பரத்தை போட மறுத்தவர்கள் இவர்களால் சன்ன பஸ்வேஜ்வரா என்று விமர்சிக்கப்பட்ட கொள்கை உடைய பத்திரிக்கையின் விளம்பரத்தை உணர்வில் போட்டார்கள். வலுவான எதிர்ப்பு வந்த உடன் கவனக் குறைவு என வழமையான வார்த்தையால் சமாளிக்கவும் செய்தார்கள்.

எல்லா அமைப்புகளுடனும் உறவாக இருப்போம் என்ற நல்ல முடிவை மார்க்க ரீதியாக விமர்சிக்க முடியாமல் தர்க்க ரீதியாக அறிவுக்கு முரண்பட்டதாக சித்தரித்து மணிக் கணக்கில் நேரம் ஒதுக்கி பிரிவினையை நியாயப் படுத்தி வருகிறார் தப்ஸீர் எழுதப் போவதாகக் கூறிய பி.ஜே. இவருக்கு ஆபத்து என்றதும் ஷpர்க்வாதிகள் என்று இவரால் விமர்சிக்கப்பட்டவர்களை மேடை ஏற்றினார். மெய்நிலை கண்ட ஞானி முஹைதீன் அப்தில் காதிர் ஜீலானி கத்தஸல்லாஹு ...என்று பேச வைத்தார். முஸ்லிம்களே சொந்தக் காலில் நிற்போம் என்றார். சின்ன சோதனைதான் வந்தது. கிருஷ;ணசாமி என்ற லக்டி காலை மாட்டிக் கொண்டு, சொந்தக் காலில் நிற்போம் என்ற கொள்கையை காற்றில் பறக்க விட்டார். இது அரசியல் உறவு அல்ல தொப்புல் கொடி உறவு. அரசியல் கட்சிகள் மேடையில் ஏற மாட்டோம் அரசியல்வாதிகளை மேடையில் ஏற்றவும் மாட்டோம் என்ற வார்த்தை ஜாலத்தால் கிருஷ;ணசாமி உறவை சமாளித்தார்.

கருணாநிதி இவர்களைப் பார்த்து ஐ.எஸ்.ஐ. உளவாளிகள் என்று சொன்னார். அவ்வளவுதான் அரசியல்வாதிகள், ஊழல்வாதிகள், கடவுளே இல்லை என்பவர்கள் உட்பட அனைவரையும் கட்டி அணைத்தார். ஒரு முஸ்லிம் ஜெயலலிதாவை ஆதரிப்பானா? ஆதரிக்க முடியுமா? ஆதரிப்பவன் முஸ்லிமாக இருக்க முடியுமா? என்று பேசியதையெல்லாம் மறந்தார். சமுதாயப் பணத்தை லட்சக் கணக்கில் செலவு செய்து அத்தனை பேரும் பேச மேடை போட்டுக் கொடுத்தார். தன் சுய நலத்திற்காக யாரையும் மேடையில் ஏற்றுவார். யாருக்கும் மேடை போட்டுக் கொடுப்பார். இஸ்லாமிய பிரச்சாரம் என்றால் தத்துவம் பேசி தன் பிரிவினை வாதத்தை நியாயப் படுத்துவார்.

தன்னைக் காக்க த.மு.மு.க.வை அறிமுகம் செய்த போது எந்த அமைப்பிலும் இருங்கள் த.மு.மு.க.விலும் இருங்கள் என்றார். அவரே எதிர்பாரா அளவில் அது வளர்ந்ததும் த.மு.மு.க.வில் இருப்பவர்கள் வேறு அமைப்பில் இருக்கக் கூடாது என்கிறார். அது போல் கூட்டமைப்பு ஆரம்பிக்கும் போது, அதன் பெயரிலேயே தெளிவுபடுத்தி விட்டோம் இது தனி அமைப்பு அல்ல கூட்டமைப்புதான் என்று. எனவே நீங்கள் எந்த அமைப்பில் இருந்தாலும் எந்த பெயரில் இருந்தாலும் ஜாக்கில் இருந்தாலும் கூட்டமைப்பில் இருக்கலாம் என்றார். வீடியோக்கள் ஆதாரம் இருக்கவே அவரது வாக்குறுதிக்கு மாற்றமாக பேசி வருகிறார். குர்ஆன் ஹதீஸுக்குத்தான் கட்டுப்படுவோம் என்பதில் உறுதியாக நின்றவர்கள் அவரது பேச்சுத் திறனில் மதி மயங்கி ஆதாரம் கேட்காமல் தலையாட்டி பொம்மைகளாக ஆகி விட்டார்கள். அதனால் குர்ஆன் ஹதீஸுக்கு மாற்றமாக பிரிவினை வாதத்தை மிகத் தெம்பாக பேசி வருகிறார். சிறந்த மேடைப் பேச்சாளரான அவர் சமுதாய நலனுக்காக அரசியலும் பேசுகிறார் என்று சமுதாயம் எண்ணியது. அவரோ சுய நலனுக்காக அரசியல் பண்ணுகிறார் என்பதையும் மக்களை ஈர்க்க மார்க்கப் பிரச்சாரம் அரசு அதிகாரிகளை கவர அரசியல் பேச்சு என்பதையும் சமுதாயம் இப்பபொதுதான் புரியத் துவங்கி உள்ளது.
iஷத்தானின் பிடியிலிருக்கும் வரை ஒற்றுமைக்கு வழி பிறக்குமா?
ஜாக் பற்றி கீழ்த் தரமான விமர்சனம் செய்தவர்கள். நமது ஒரு தலைமை இரண்டாகப் பிரிய காரணமாக இருந்தார்கள் என குறிப்பிட்டுள்ளார்கள். அவர்கள் பிரிவினை வாதி இல்லை என்றால் முதல் தலைமையான ஜாக்கில் அல்லவா எப்பொழுதும் இருந்திருக்க வேண்டும். இப்பொழுதும் இருக்க வேண்டும். அவர்கள் இப்பொழுது இருப்பது எங்கே? அவர்கள் இருப்பது இரண்டாந்தரத் தலைமையின் கீழ் என்று அவர்கள் வெளியிட்டுள்ள பிரசுரமே சாட்சி அளிக்கிறது. ஜாக்கைக் கீழ்த் தரமாக விமர்சனம் செய்தவர், ஜாக்கை டிரஸ்ட்டாக பதிந்து விட்டார்கள் என்ற பொய்யை துணிச்சலாக பரப்பியவர், அது உண்மை அல்ல என்று நிரூபிக்கப்பட்டதும் டிரஸ்ட் மாதிரி என்று பிதற்றியவர் யார்? ஊர்ப் பணத்தில் டிரஸ்ட் அமைத்து தலைவராக இருக்கும் உத்தமர்தான் என்பது உலகறிந்த உண்மை. அவருக்குத்தான் இந்த விமர்சனங்கள் பொருந்தும். அவரை நேரடியாக சாட முடியாமல் இப்படி மறைமுகமாக சாடி உள்ளது பிரசுரத்தை பிரிண்ட் செய்தவரின் மனசாட்சி செய்த நற் செயல். பெரம்பலூர் நாஸர் அலி கானை வைத்து கூட்டம் நடத்தக் கூடாது. நாஸர் பேசும் கூட்டங்களுக்கு போகக் கூடாது. இப்படி எந்த iஷத்தான் கட்டளை இட்டுள்ளானோ! அந்த iஷத்தான் தான் அபூ அப்துல்லா தொடங்கி, புரட்சி மின்னல் அப்துல்லா, முஹம்மது இக்பால் மதனி., கமாலுத்தீன் மதனி, மைதீன் உலவி., ரஹ்மதுல்லா இம்தாதி, ஹாமித் பக்ரி வரை பிரச்சனைகளுக்கும் பிரிவினைகளுக்கும் மூல காரணமானவன். அந்த iஷத்தானின் பிடியிலிருந்தும் கட்டுப் பாட்டிலிருந்தும் விலகாத வரை ஒற்றுமை முயற்சி என்பது வெளி வேஷமும் (டிராமா எனும்) நாடகமாகவும்தான் இருக்குமேயே தவிர உண்மையான ஒற்றுமைக்கு வழி பிறக்கவே செய்யாது.
தலைமைக்கு கட்டுப்படுதல் பற்றிய சந்தர்ப்ப வாதங்கள்
அமைப்பு என்றால் குறைகள் இருக்கத்தான் செய்யும் என்று கூறியும் சமாளிக்கிறார்கள். கடந்த காலத்தில் முந்தைய அமைப்புகளை குறை கூறித் தானே தனியாக புது அமைப்பு கண்டீர்கள். எந்த அமைப்பை எந்தத் தலைமையை குறை சொல்லாமல் விட்டு வைத்தீர்கள்? என்று கேட்டால் பதில் இல்லை. அமைப்பு என்றால் குறைகள் இருக்கத்தான் செய்யும் எனில் மூத்த அமைப்பும் முந்தைய தலைமையும் தானே சிறந்தது. அமீர் உனது பொருளை அபகரித்தாலும் அவருக்கு கட்டுப்படு என்ற ஹதீஸைக் கூறி த.மு.மு.க. தலைமை நிர்வாகிகளுக்கு கட்டுப்பட வேண்டும் என்று கூறுகிறார்கள். அபு அப்துல்லாஹ்விடமிருந்து பிரிந்த போது இந்த ஹதீஸைக் கூறி ஒற்றுமை முயற்சி செய்யப்பட்டது. அப்பொழுது இந்த ஹதீஸ் ஜமாஅத் (மாதிரி) அமைப்புகளுக்குத்; தான் பொருந்தும். இது மாதிரி நிர்வாகிகளுக்குப் பொருந்தாது என்று கூறினார்கள். இப்படியாக ஒவ்வொருவருடனான பிரிவின் போதும் இந்த ஹதீஸ் கூறப்படுவதும் அதற்கு இது அல்ல அர்த்தம் இந்த ஹதீஸ் ஜமாஅத் மாதிரி அமைப்புத் தலைமைக்குத் தான் பொருந்தும் என்று விளக்கம் கூறி வந்தார்கள். பிறகு அவர்கள் வளர்த்ததாக கூறிக் கொள்ளும் ஜாக் என்ற அமைப்பின் ஜமாஅத் தலைமையிலிருந்து பிரிந்தார்கள். அப்பொழுது இந்த ஹதீஸ் அமைப்புத் தலைமைக்கு (ஜமாஅத் தலைமைக்கு)ப் பொருந்தாது. இந்த ஹதீஸ் ஆட்சித் தலைமையைத்தான் குறிக்கிறது என்று விளக்கம் அளித்து அமீர் என்ற தலைப்பில் ஒரு புத்தகமே வெளியிட்டார்கள்.இப்பொழுது தங்கள் தலைமையைக் காத்துக் கொள்ள அந்த ஹதீஸுக்கு பொதுவான தலைமைக்குக் கட்டுப்படுதல் என்ற சந்தர்ப்ப வாத விளக்கம் கூறி வருகிறார்கள்.

பெட்டிப் பாம்பாகி விட்ட பினாமியின் பிரசுரம்
அ.த.ஜ.கூ.அமைப்பு பினாமி தலைவர் ஸைபுல்லா ஹாஜா ஒரிஜினல் தலைவர் உத்தரவுப்படி எம்மை மேலாண்மைக் குழுவில் இருந்து நீக்கி விட்டதாக லட்டர் பேடு பிரசுரம் ஒன்று யு.ஏ.இ. க்கு அனுப்பி உள்ளார். இதை வேகமாக வினியோகிக்க முற்பட்டவர்கள், சிலரிடம் வினியோகித்த உடனேயே எதிர் கேள்விகளைச் சந்தித்துள்ளனர். பழ்லுல் இலாஹியை கூட்டமைப்பில் இருந்து ஏற்கனவே நீக்கி இருந்தால் முதலிலேயே அறிவிப்பாக வெளியிடாதது ஏன்?. அவரது குற்றச்சாட்டுகளுக்குப் பதில் கூற முடியாமல்தான் அவரை நீக்கி விட்டதாக பிரசுரம் வெளியிட்டு திசை திருப்பும் வேலையில் ஈடுபடுகிறீர்களா?. அவர் அ.த.ஜ.கூட்டமைப்பு என்று போடவில்லை. அனைத்து தவ்ஹீது ஜமாஅத் என்றுதான் போட்டுள்ளார். எனவே கூட்டமைப்பு வேறு இது வேறு என்று வார்த்தை வித்தியாசத்தைக் காட்டி அவரால் மறுக்க முடியும். பழ்லுல் இலாஹியை கூட்டமைப்பில் இருந்து நீக்கி விட்டதாக அறிவிப்பு வெளியிடுவது பெரிய விஷயமல்ல.

இதைப் பெரிதாகக் காட்டி ஸைபுல்லா இடமிருந்து பிரசுரம் வரவழைத்து வெளியிடுகிறீர்கள். அது போல் பி.ஜே. இடமிருந்து பக்ரி பற்றி நான் இப்படி பேசவில்லை என்று எழுத்து மூலம் மறுப்பு வரவழைத்து வெளியிடாதது ஏன்? உங்களாலும் பழ்லுல் இலாஹியின் குற்றச் சாட்டை அவர் கூறி உள்ள நிபந்தனைப்படி மறுக்க முடியவில்லையே ஏன்? ஸைபுல்லா ஹாஜாவும் பி.ஜே. இப்படி பேசவில்லை என்று ஒரு வார்த்தை குறிப்பிடவில்லையே ஏன்? இப்படி கேள்வி மேல் கேள்விகளால் துளைத்துள்ளனர். பினாமியின் பினாமிகள் பிரசுரத்தை சுருட்டிக் கொண்டு ஓடிவிட்டார்கள். தங்கள் அறைக்குள் ஒட்டி வைத்து அழகு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சிலர் மட்டும் முக்காடு போட்டுக் கொண்டு நடு நிலை வேஷமிட்டு பேச்சு வாக்கில் கொடுப்பது போல் பெட்டியில் உள்ள பிரசுரத்தை எடுத்துக் காட்டுகிறார்கள். ஆக பினாமி தலைவரின் பிரசுரம் பெட்டிப் பாம்பாக ஆகி விட்டது. ஸைபுல்லாவின் கடிதத்தில் நமது எந்தக் குற்றச் சாட்டுக்களுக்கும் மறுப்பு இல்லை. நமது குற்றச் சாட்டை உண்மைப் படுத்தி கூட்டமைப்பு சார்பிலேயே சான்று தருகிற மாதிரிதான் உள்ளது. அதற்காக ஸைபுல்லாவுக்கு நன்றி கூறுகிறோம்.

முஸ்லிம் லீக்கில் நாலரை லட்சம் உறுப்பினர்கள்
பினாமியின் பிரசுரத்தை வினியோகித்தவர்கள் மு.லீக் பற்றி குறிப்பிட்டு ஸமது சாகிப் இருந்தால் தெரியும் என்றும் கூறியுள்ளனர். முஸ்லிம் லீக் பற்றி பழ்லுல் இலாஹி நிலை என்ன என்பது இன்றைய தலைவருக்கு மட்டுமல்ல அன்றைய தலைவருக்கும் தெரியும். இது பினாமிக்குத் தெரியாது. பினாமியின் பிரசுரம் பெட்டிப் பாம்பாக ஆகி விட்டாலும் பிரசுரத்தின் பின் குறிப்பிட்டு எழுதி விட்டதால் இது சம்பந்தமாக விளக்கம் கூறும் கடமை நமக்கு ஏற்பட்டுள்ளது. நாம் என்ன விளக்கத்தைக் கூறினாலும் சமாளிப்பையே மூலதனமாகக் கொண்டவர்கள் நமது விளக்கத்தை சமாளிப்பு என்று மறுக்கலாம். எனவே பழைய நிகழ்வைப் பதிலாகத் தருகிறோம்.

ஷமுஸ்லிம் லீக்கில் நாலரை லட்சம் உறுப்பினர்கள், சிறந்த தலைவர் அப்துஸ்ஸமது| என்று குமுதம் பத்திரிக்கையில் முஸ்லிம் லீக்கின் தலைவராக ஸமது சாகிப் பேட்டிக் கொடுத்திருந்தார். இதை கிண்டல் செய்து ஷஉணர்வு| இதழில் எழுதினார்கள். உடனேயே இதனைக் கண்டித்து நாம் எழுதினோம். இறை நேசன் என்ற புனைப் பெயரில் உணர்வில் ஆசிரியராக இருக்கும் பி.ஜே.க்கு 19.08.1997 அன்று நாம் எழுதிய கடிதத்தில் உள்ள வாசகத்தைப் பாருங்கள்.

...நம் சமுதாயத்தவர்களுக்குள் பகைமை உணர்வை அகற்றப் புறப்பட்ட(தாக கூறிக் கொள்ளும்) தாங்கள். தெளிவாகச் சொல்லப்ப் போனால் நேற்று வந்த தாங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தலைவர்களை சீண்டுவது எந்த நோக்குடன். ஆ.கா.அ. அப்துஸ்ஸமது அவர்கட்கு தான்தான் சிறந்த தலைவர் என்ற எண்ணம் இருக்கலாம். உள்ளத்தில் ஒன்று உதட்டில் ஒன்று என்பதைவிட உள்ளதைக் கூறியதிலிருந்தே அவர் சிறந்த தலைவர்தான்.

ஷமுஸ்லிம் லீக்கில் நாலரை லட்சம் உறுப்பினர்கள் என்பதை நம்பினால் நம்புங்கள்| என்று ஏகடியமாக எழுதி உள்ளீர்கள். இன்று பிறந்த பி.ஜே. அணிக்கு நம்ப முடியாமல் இருக்கலாம். சமுதாயத்திற்காக பாடுபடப் போகிறேன் எனக் கூறிக் கொண்டு தன்னைத் தவிர தன் குடும்பத்தில் யாரையுமே உறுப்பினராக இணைத்திடாத, இணைக்கத் தயங்கும் பி.ஜே. அணியினருக்கு நம்ப முடியாமல் இருக்கலாம். நூற்றாண்டு பாரம்பரிய மிக்க மு.லீக் அப்படி அல்ல ஒவ்வொரு முஸ்லிம் லீகனும் தன்னை மட்டுமல்ல தன் வீட்டில் வயதுக்கு வந்தவர்கள் முதல், வயதானவர்கள் வரை ஆண்-பெண் அனைவரையும் முஸ்லிம் லீக்கில் உறுப்பினராக சேர்ப்பான். இந்த உணர்வு இன்றைய பி.ஜே. அணியில் எந்த ஒரு உறுப்பினருக்காகவாவது உண்டா? ..

இப்பொழுதுதான் பி.ஜே.யின் தலைமையில் உள்ள குறைகளை நாம் விமர்சிப்பதாகக் கூறுவோர் எப்படிப்பட்டவர்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். முஸ்லிம் லீக் பற்றி பழ்லுல் இலாஹி நிலை என்ன என்பதை விளக்கும் வண்ணம் அமைந்துள்ள இந்த கடிதத்தின் நகல் அப்பொழுது அப்துஸ்ஸமது ஸாஹிப் அவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

யு.ஏ.இ. வரும் முஸ்லிம் லீக் தலைவர்களை மரியாதை நிமித்தம் நாம் சென்று சந்திப்பது வழக்கம். அது போல் பேராசிரியர் காதர் மைதீன் அவர்களை சந்தித்த போது ஆடை அணிவித்து கவுரவித்தோம். இதை ஒரு குறையாக குறிப்பிட்டிருந்தார்கள். கூட இருந்தே குரல் வளையை அறுத்தவர்கள் வாழும் உலகில் நன்றிக்குரிய செயலை செய்த முஸ்லிம் லீக் தலைவருக்கு ஹாமித் பக்ரி அன்பளிப்பாக ஆடை அணிவித்து நன்றி கூறியதை ஷpர்க் செய்து விட்ட மாதிரி விமர்சிக்கின்றனர்.

சொந்தக் காலில் நிற்போம் என்றவர்கள், பொது மேடைகளில் மக்கள் முன் அன்பளிப்பு செய்து கவுரவிப்பதையும் பெரும் பாவம் போல் சித்தரித்து நாங்கள் செய்ய மாட்டோம் என்று இதை ஒரு கொள்கையாக பேசி வந்தார்கள். அப்படி பேசியவர்களால் அவர்களது முதல் மாநில மாநட்டை சொந்தக் காலில் நின்று நடத்த முடிந்ததில்லை. எல்லா அரசியல் கட்சி தலைவர்களின் தயவை நாடினார்கள். பொது மேடைகளில் மக்கள் முன் அன்பளிப்பு செய்து கவுரவிப்பதை பெரும் பாவம் போல் சித்தரித்தவர்கள் ஆடை அணிவிப்பதற்கு பதிலாக கூனிக் குறுகி நெலிந்து குலைந்து பார்சல் கொடுத்து அவர்கள் சொன்ன கொள்கையில் இருந்து வளைய வைத்ததை மறந்து விட்டார்கள்.

முஸ்லிம் லீக்கைப் பொறுத்த வரை ஆடை அணிவிக்கும் போது அல்லாஹு அக்பர் என்று தக்பீர் சொல்வார்கள். இந்த தக்பீரின் உள்ளார்ந்த அர்த்தம் என்ன தெரியுமா? இந்த ஆடை அணிவித்து கவுரவிப்பதால் உனக்கு கர்வம் ஏற்பட்டு விடக் கூடாது. நீ பெரிதல்ல நான் பெரிதல்ல இந்த ஆடை பெரிதல்ல இந்தக் கூட்டம் பெரிதல்ல அல்லாஹ்தான் பெரியவன் என்பதுதான். இதுவெல்லாம் வரலாறு இல்லாதவர்களுக்குத் தெரியாது. சொன்னாலும் புரியாது.

யு.ஏ.இ. அளவில் பொறுப்பில் இருந்து கொண்டு சுய லாபத்திற்காக வளைகுடா அமைப்பாளர் என்று போட்ட சுய நலமி என்று விமர்சித்துள்ளனர். வட்ட பொறுப்பாளர்கள் கூட விஸிட்டடிங் கார்டு, லட்டர் பேடு அடித்து பந்தா பண்ணிடும் பி.ஜே.யின் அந்த அமைப்பில் நாம் இது மாதிரி எதுவும் செய்தது கிடையாது. வளைகுடா அமைப்பாளர் என்று உணர்வு பத்திரிக்கையில்தான் போட்டார்கள். அப்படி போட்டதால் என்ன சுய நலத்தை அடைந்தார் என்பதற்கு அதன் ஆசிரியர்தான் பதில் சொல்ல வேண்டும். இந்த பிரசுரத்தில்தான் வெளியீடு வளைகுடா அமைப்பாளர் எக்ஸ் என்று போடப் போகிறேன்.


மேலும் 19.08.1997 தேதிய அந்தக் கடிதத்தில், ...மாநில துணைச் செயலாளர் பாக்கர் அவர்கள் மேடை தோறும் சமுதாய செல்வந்தர் ஒருவர் பெயரைக் குறிப்பிட்டு (விமர்சித்து) பேசிக் கொண்டே இருக்கிறார். உங்கள் பார்வையில் இதுதான் பகைமையை நீக்கும் செயலா? இளையான்குடி எஸ்.பி. ஒரு தடவை பேசிய அசிங்கத்தை மேடை தோறும் கூறி அசிங்கப் படுத்துவதுதான் நீங்கள் கூறும் கண்ணியமா? பேச மேடையும் எழுத பேப்பரும் கிடைத்து விட்டது என்பதால் சமுதாய முன்னோடிகளையும், சமுதாய பிரமுகர்களையும் விமர்சித்து வீண் பிளவு ஏற்படுத்தாதீர்கள்... என்றும் கண்டித்து எழுதி இருந்தோம். என்ன நடந்தாலும் கண்டு கொள்ளாமல் ரோஷம் இன்றி கைகட்டி வாய் பொத்தி பதவிக்காக அந்தரங்கத்தில் அழுது தொழும் கொத்தடிமைகள் போல் நாம் என்றும் இருந்தது இல்லை. சுட்டிக் காட்ட வேண்டியவைகளை சுட்டிக் காட்டி இருக்கிறோம் தட்டிக் கேட்க வேண்டிவைகளை தட்டிக் கேட்டு இருக்கிறோம்.
பிழைப்புத்தலங்களாகிவிட்ட வணக்கத்தலங்கள்.
எங்களால்தான் தமிழ் நாட்டில் இஸ்லாமிய எழுச்சி ஏற்பட்டது. ஆனால் இதைச் சொல்லி நாங்கள் பெருமை அடிக்க மாட்டோம் என்று கூறி பெருமை அடிக்கும் கூட்டமைப்பின் ஒரிஜினல் தலைவர் யார் என்பதை எல்லோரும் அறிவீர்;கள். அந்த ஒரிஜினல் தலைவரை திருப்திபடுத்துவதற்கு யு.ஏ.இ.ல் உள்ளவர்களுக்கு கடிதம் எழுதுவது போல் எமக்கு எதிராக லட்டர் பேடு பிரசுரங்கள் வெளியிட்டு வருகிறார்கள் சைபுல்லாஹ் ஹாஜா, சம்சுல் லூகா ஆகிய புண்ணியவான்கள்.

பொறுப்பின் அருமை பினாமிகளுக்குத் தெரியாது. ஏற்ற பொறுப்பை அனாநிய்யத்துக்கு கட்டுப்படாமல் பொறுப்புணர்வுடன் செயல்படுபவர்களை நான் என்ற அகம்பாவம் என சித்தரிப்பது அனாநிய்யத்துடையவரின் பழக்கம். அதைத்தான் மேற்படி பினாமியின் லட்டர் பேடு பிரசுரத்தின் பின் எழுதி உள்ளனர். மேலப்பாளையம் மஸ்ஜிதுர்றற்மான் ஆகட்டும் திருச்சி சிங்காரத் தோப்புப் பள்ளியாகட்டும் இன்னுமுள்ள மர்க்கஸ்களாகட்டும் பொறுப்புணர்வு உள்ளவர்கள் உருவாக்கியது இஸ்லாமிய பிரச்சாரத்திற்காக. அவை எங்களுக்கு வணக்கத்தலம் அதனால்தான்; பொறுப்புணர்வு உள்ளவர்கள் பிரச்சாரப் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தினோம். சட்ட ரீதியாக எங்கள் கையிலேயே இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தவில்லை.

ஸைபுல்லா ஷம்சுல்லூகா போன்ற பினாமிகளுக்கு அவை பிழைப்புத்தலம். அதனால்தான் அவை சட்டரீதியாக தங்கள் கையிலேயே இருக்க வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்தி கைப்பற்றி பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். கொள்கைக்காக வேலையை விட்டவர்கள் கொள்கைவாதிகள். வேலைக்காக கொள்கைப் பிரச்சாரத்தில் இருந்து ஒதுங்கி பிழைப்பு நடத்தியவர்கள் (அதாவது கொள்கையை விட்டவர்கள்) இந்த பினாமிகள்தான். மஸ்ஜிதுர்றஹ்மான் மூலம் மாத வருவாய்க்கு வழி ஏற்படுத்திக் கொடுத்த பின்னர்தான் சொந்த ஊரான மேலப்பாளையத்தில் இருந்து பணியாற்ற ஒப்புக் கொண்டார் லுஹா. பார்ட் டைம் வருமானமாக இஸ்லாமிய கல்லூரி அமைந்த பின்தான் ஸைபுல்லா சொந்த ஊரான கடையநல்லூரில் இருக்கிறார். எதிர்ப்புகள் கடுமையாக இருந்த கால கட்டத்தில் சொந்த ஊரில் ரத்தம் சிந்தியவர்கள் பட்டியலில் கமாலுத்தீன் மதனி, கே.எஸ். ரஹ்மதுல்லாஹ் இம்தாதி போன்றவர்கள் உண்டு. இந்தப் பினாமிகளும் பினாமிகளின் மூலப்பிதாவுக்கும் இந்தப் பட்டியலில் இடம் உண்டா?
அரபிகள் இடமோ அரபு நாட்டு நிறுவனங்கள் இடமோ நன்கொடை வாங்காத உத்தமர்கள்.
பிரச்சாரம் செய்ய தாஇகள் இருக்கிறார்கள் பொருளாதாரம்தான் இல்லை. வெளி நாட்டவர் இடமோ. வெளி நாட்டு இயக்கங்கள் இடமோ எந்த ஒரு பைசாவும் நன்கொடை வாங்குவதில்லை என்று பைலாவாகக் கெண்டு செயல்படுகிறோம். சவூதியில் இருந்து 10 கோடி ரூபாய் தந்தாலும் வாங்க மாட்டோம். ஆகவே நீங்கள் நன்கொடை தாருங்கள் என்று டி.வி. விளம்பரக் காட்சிகளிலும் தோன்றி வசூலுக்காக ஒரிஜினல் தலைவர் விளம்பரம் செய்தார். இப்பொழுது பினாமித் தலைவராக இருக்கும் ஸைபுல்லா ஹாஜா தமிழகத்தில் தாஇயாகப் பணியாற்றுவதற்கு சவுதியில் இருந்து சம்பளம் வாங்கக் கூடியவர். இவரை தலைவராக ஆக்கியதன் மூலம் உங்கள் வெளிநாட்டு கொள்கை என்ன ஆயிற்று என்று கேட்டால், ஷ2002 செப்டம்பரில் தலைவராக பதவி ஏற்ற நாளிலிருந்து ஸைபுல்லா ஹாஜா சவுதி சம்பளம் வாங்குதை நிறுத்தி விட்டார்| என்று கூறுகிறார்கள். நாம் விசாரித்த அளவில் 2003 மாhச் முடிய சவுதி சம்பளம் வாங்கி இருக்கிறார் ஸைபுல்லா ஹாஜா. வெளிநாட்டு உதவிகளை வாங்க மாட்டோம் என்று சொல்லுவது விளம்பரத்திற்காக. அந்தரங்கமாக வரும் வெளி நாட்டுப் பணங்களை வாங்காமல் இருக்கமாட்டார்கள்,என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்.

வெளிநாட்டு உதவிகளை பெறக் கூடாது பெற மாட்டோம் என்ற கொள்கை உடைய அ.த.ஜ.இகூ. தலைவர் ஸைபுல்லா ஹாஜா சவூதி ஊதியம் இப்பொழுது வாங்கவில்லை என்பது உண்மையானால்! எம்மை நீக்கியதாக கடிதத்தை வெளிட்ட மாதிரி, இப்பொழுது நான் சவுதி சம்பளம் வாங்கவில்லை என்று எழுத்து மூலமாக அறிக்கை வெளியிடட்டும்.. அப்படி வெளியிடாவி;ட்டால் தமிழகத்தில் தாஇயாகப் பணியாற்ற இப்பொழுதும் சவுதி சம்பளம் வாங்கி; வருகிறார் என்பது உறுதி. அது மட்டுமல்ல வெளி நாட்டு உதவி வாங்க மாட்டோம் என்பது வசூல் விளம்பரத்திற்காகத்தான் என்பதும் உறுதி என்பதை விளங்கிக் கொள்ளுங்கள். இருட்டில் வாங்கிவிட்டு இல்லை என்போர் எந்த அளவு நாக்கு சுத்தமானவர்களாகவும் கை சுத்தமானவர்களாகவும் இருப்பார்கள்?
திசை திருப்ப மாநாடு
ஹாமித்பக்ரிக்கு செய்த துரோகத்தால், அவர் விஷயத்தில் நடந்து கொண்ட முறையால்; இழந்த செல்வாக்கை மீட்க, மக்களிடம் ஏற்பட்டுள்ள அதிருப்தியை சரி கட்ட திடீரென மாநாடு என அறிவித்து இவர்களை அடையாளம் கண்டு கொண்ட மக்களின் கவனத்தை திசை திருப்பி விட்டு ஒத்தி வைத்துள்ளார்கள்.

1992ல் மதுரை மாநாடு தடை செய்யப்பட்டப் பின் 2000 வரை மாநாடு பற்றி சிந்திக்கவே இல்லை. ஒரு படி மேலே போய் இனி தவ்ஹீது பிரச்சாரம் செய்ய மாட்டேன் என்று கூறியவருக்கு 2000ல் நடந்த மாநாடு 2003ல் நீண்ட இடை வெளியாகத் தெரிகிறதாம். அந்த மாநட்டு வசூல் விளம்பரத்திலும் வெளிநாட்டவரிடமோ வெளி நாட்டு நிறுவனங்கள் இடமோ உதவி பெற மாட்டோம் என்ற வாசகம் உள்ளது. விளம்பர நோக்குடன் கூடிய இந்த வாசகம் இடம் பெற்றுள்ள மாநாட்டு பிரசுரங்கள் வெளி நாட்டிலும் வெளி நாட்டு நிறுவனங்களிலும் தான் முதலில் வெளியாகியுள்ளது.

கூட்டமைப்பு என்று ஒன்று இருக்கிறது அதன் சார்பில்தான் மாநாடு என்றார்கள். அதற்கு தலைவர் செயலாளர் பொருளாளர் என்று பொறுப்பாளர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் எல்லாம் டம்மிகள் இல்லை என்றால், சுதந்திரமான பொறுப்பாளர்கள் என்றால் அவர்கள் பெயராலோ,அமைப்பு பெயராலோ மாநாட்டுக் குழு பெயராலோ பிசுரம் வெளியாகி இருக்கும். பி.ஜே.க்கு சொந்தமான மூன் (கமர்) பப்ளிக்கேஷனை ஓசியில் விளம்பரப்படுத்தும் வகையில் அதன் லட்டர் பேடில் பிரசுரம் வெளியாகி இருக்கிறது.

பி.ஜே. இருக்கும் அமைப்புகளைப் பொறுத்தவரை பி.ஜே.தான் மம்மி மற்றவர்களெல்லாம் டம்மி. பி.ஜே.யின் அனுமதி இன்றி யாரும் அணுவும் அசைய மாட்டார்கள், எதிராக எதுவும் பேச மாட்டார்கள். சர்வாதிகாரியான அவரின் கீழ் அடிமைத்தனமாய் இருந்தாக வேண்டும். பி.ஜே. இருக்கும் எந்த அமைப்பாக இருந்தாலும் இந்த பார்முலாவுக்கு ஒத்து வந்தாக வேண்டும். இதற்கு ஒத்து வராத எந்த அமைப்பாக இருந்தாலும் அந்த இடத்தில் அவர் இருக்க மாட்டார் என்பதை மீண்டும் உலகறியச் செய்துள்ளது திடீர் மாநாட்டுப் பிரசுரம்.

ஒத்தி வைத்த மாநாட்டின் உள் நோக்கம் எதுவாக இருந்தாலும் ஒரு இயக்க மாநாடாக அறிவிக்கவில்லை. இஸ்லாமிய மாநாடு என்றே அறிவித்துள்ளார்கள். எனவே பின்னர் நடக்கும் போது நன்கொடை கொடுப்பவர்கள். கீழ் காணும் நிபந்தனைகளை வைக்க வேண்டும். அல்லாஹ்விடம் நன்மையை நாடி நன்கொடை கொடுப்பவர்களால் மட்டுமே இந்த நிபந்தனைகளை வைக்க முடியும். ரசிகர்கள் போல் செயல்படுபவர்களால் முடியாது.
கமாலுத்தீன் மதனி, அபு அப்துல்லாஹ், ஹாமித் பக்ரி என்று எல்லோரையும் அழைக்க வேண்டும். பொதுமக்களிடம் வசூலிக்கும் பணத்திற்கு பொதுமக்களிடம் கணக்கு காட்டுவோம் என்று கூறி வந்தவர்கள் அல்லாவுக்கு பயந்து செலவு செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்கள். நன்கொடை வேண்டும் எந்த அமைப்பாக இருந்தாலும் அள்ளித் தாருங்கள் அல்லாஹ்வின் அருளைப் பெறுங்கள் என்கிற மாதிரிதான் அறிவிப்பு செய்வார்கள். ஏனென்றால் வசூலிக்கும் போதே தவறான எண்ணம் அவர்கள் உள்ளத்தில் இருக்காது.

எனவே அல்லாஹ்வுக்கு பயந்து செலவு செய்யப்படும் என்று அறிவித்தவர்கள் மநாட்டு வரவு செலவுகளை பகிரங்கமாக வெளியிட வேண்டும். மீதப் பணம் என்ன செய்யப்படும் என்பதை முன்னரே அறிவித்து விட வேண்டும். மேடையில் பேசியவர்களுக்கு கொடுக்கப்படும் பணத்தை பெயர் வாரியாக வெளியிட வேண்டும். அப்பபொழுதுதான் பேசியதற்காக கொடுக்கப்பட்ட பணம் ஐநூறில் (500) இருந்து ஆயிரம் (1000) ரூபாய்க்குள் இருப்பதையும், மேடையில் பேச காசு வாங்க மாட்டேன் என்பவருக்கு போக்கு வரத்து செலவு பெட்ரோல் செலவு என்ற பெயரால் கொடுக்கப் பட்ட பணம் ஐயாயிரத்தில் இருந்து (5000) பத்தாயிரம் (10,000) ரூபாய்க்கு மேல் கொடுக்கப்பட்டு வருவதையும் மக்கள் அறிய முடியும்.
அரபி எழுத்துக்களும் பி.ஜே.யும்
த.மு.மு.க. உணர்வு மூலம் பி.ஜே.க்கு ஒரு நல்ல நிலை ஏற்பட்டப் பிறகு ஜாக் மேடையில் பேசமாட்டேன் என்று முடிவு எடுத்து பேச மறுத்தார். எந்த முடிவு எடுத்தாலும் கேட்கிறவர் நம்பும்படியாக தகுந்த காரணங்களை கற்பித்துக் கூறுவதில் வல்லவர் பி.ஜே. என்று அடிக்கடி லுஹா கூறுவார். அது போல் இதற்க்கும் பொறுத்தமாக கூறிய காரணங்களில் ஒன்று. ஜாக் நடத்தும் நிகழ்ச்சிகளில் அரபியில் போர்டு வைக்கிறார்கள். அதன் மூலம் அதைக் காட்டி வெளிநாட்டில் வசூல் செய்வார்கள் என்தாகும். ஜே.ஏ.கியூ.ஹெச் எனும் ஜம்இய்யத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் என்ற அதன் இடு குறிப் பெயரே அரபில் ஆனது. அனைத்து தவ்ஹீது ஜமாத் கூட்டமைப்பு என்ற பெயரோ பி.ஜே. கூற்றுப்படி தமிழக மக்கள் புரிந்திடும் வண்ணம் இட்ட பெயராகும். அந்த அ.த.ஜ.கூ. லட்டர் பேடுகள் ஏன் அரபியில் இருக்கிறது?

அரபிகள் இடமோ அரபு நாட்டு நிறுவனங்கள் இடமோ நன்கொடை வாங்கக் கூடாது என்பதை பைலாவாகக் கொண்ட அமைப்பின் லட்டர் பேடுகளில் அரபி வாசகம் எதற்கு? லட்டர் பேடுகளில் மட்டும் அல்ல இவர்கள் சார்பு நிறுவனங்கள் பில்புக்குகளிலும் அரபி வாசகங்கள் உள்ளன. இவற்றுக்கு காரணம் கூறி சமாளித்து விடுவார்கள். இப்தார், .பித்ரா, குர்பானி நிகழ்ச்சிகளில் அரபியில் பேனர் கட்டியது எதற்கு? .இதைக் காட்டி அரபு நாட்டு நிறுவனங்களிலும் அரபிகளிடம் வசூலிக்கும் நோக்கத்தைத் தவிர வேறு என்ன? பரக்கத்துக்காக அரபியில் போர்டு வைத்தோம் என்ற சமாளித்தாலும் ஆச்சரியம் இல்லை. எப்படி மறுத்தாலும் சமாளித்தாலும் கூட்டமைப்பும் அதன் சார்பு நிறுவனங்களும் வெளி நாட்டவரிடமும் வெளிநாட்டு நிறுவங்களிடமும் நன்கொடை வாங்கி உள்ளதை நிரூபிக்க நாம் தயார். சந்திக்க அவர்கள் தயாரா?

பாதிக்கப்பட்டவனின் பிராத்தனைக்கு அஞ்சிக் கொள்
இந்த ஹதீஸுக்குரிய விளக்கங்களை தவ்ஹீதவாதிகள் என்று சொல்லிக் கொள்வோர்க்கு விளக்கத் தேவை இல்லை. அந்த அளவுக்கு இந்த ஹதீஸ் பல மேடைகளிலும் விளக்கப்பட்டிருக்கிறது.இந்தியாவில் போலீஸ் - கேஸ் என்று சென்று விட்டால் ஏற்படும் பணச் செலவுகள் பற்றி சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. சாதாரண பெட்டிக்; கேஸ் என்று சென்றாலே ஐயாயிரம் பத்தாயிரம் என்று செலவு செய்து ஆக வேண்டும். இன்டர் நேஷனல் கிரிமினல்களாக சித்தரித்து பிடிக்கச் செய்யப்பட்ட இந்த அப்பாவிகளுக்கு ஏற்பட்ட செலவு என்ன தெரியுமா? பிடிக்கச் செய்யப்பட்ட நாளில் இருந்து ஒவ்வொருவரின் குடும்பத்தார்களும் 50 ஆயிரம் முதல் 2 லட்சம்; வரை வீடு வாசல்கள் தாய், மனைவி, மக்கள்களின் நகைகள் என விற்று செலவு செய்து இருக்கிறார்கள். தங்கள் தந்தையை பிள்ளையை காப்பாற்றனும் என்று பாதிக்கப்பட்டவர்கள் குடும்பம் செலவு செய்திருக்கிறது. 20 குடும்பத்தாரின் மொத்த செலவை மிக மிக குறைத்துப் பார்த்தாலும் 25 லட்சத்தை தாண்டும். செலவுகள் இன்னும் தொடர்கின்றன.

இப்படி சமுதாயத்தவர்களின் பணம் சீரழியக் காரணமாக இருந்தவர்களை சமுதாயம் சபிக்காமல் இருக்குமா? பாதிக்கப்பட்;டவர்களின் பிராத்தனைகள்தான் இவர்களை சும்மா விடுமா? மாட்டி விட்டவர்கள், அவர்களுக்கு சார்பாக மாட்டி விட்டவர்களின் செயலை ஆதரித்து செயல்படுவர்கள். ஆகியவர்களிடமிருந்து மறுமையில் நன்மைகளைப் பிடுங்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு அல்லாஹ் கொடுப்பான். நன்மை இல்லை என்றால் இவர்களின் பாவம் அவர்கள் மீது சுமத்தப்படும் என்பதில் சந்தேகம் இல்லை. அதுவும் சிறையில் இருந்து கண்ணீருடன் செய்த பிராத்தனையும் அவர்கள் குடும்பத்தார்களின் பத்வாவும் ஒரு போதும் சும்மா விடாது. அநியாயமாக பாதிக்கப் பட்டவர்கள் லட்சக் கணக்கில் செலவு செய்து உள்ளார்கள் என்றால் அவர்களின் விடுதலைக்காக முஸ்லிம் லீக் ஆற்றிய பணி என்ன? என்பதையும் நாம் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். இல்லை எனில் சமூக விரோதிகள் தங்கள் திசை திருப்பல்களுக்கு இதையும் பயன் படுத்திக் கொள்வார்கள்.

அப்பாவிகள் மீது போடப்பட்ட வழக்கு பொய்யானது, கேஸ் நிற்காது என்றாலும் போடப்பட்ட வழக்கு சர்வதேச தீவிரவாதம் என்ற அடிப்படையிலானது. பொடாவில் போட இருப்பதாக அறிவித்தார்கள். கோவை நகர அளவு தீவிரவாத முத்திரை குத்தி 1993 ல் கைது செய்யப்பட்டவர்கள் 2003 ல் தான் விடுதலையானார்கள். இந்த அடிப்படையில்தான் இதை உண்டு பண்ணி மாட்டிவிட்ட சமூக விரோதிகள், 10 ஆண்டுகளுக்கு மேல் ஜெயிலில் இருந்தே ஆக வேண்டும் என்று பரப்பினர். எனவே பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர் எத்தனை லட்சங்கள் செலவு செய்தாலும் அதிகாரிகளின் இருக்மான பிடி எளிதில் தளர்ந்து இருக்காது.

பாரம்பரிய மிக்க அரசியல் அமைப்பான முஸ்லிம் லீக் ஆர்ப்பாட்டம் போன்ற தெருக் கூத்துக்கள் இன்றி அமைதியாக ஆட்சியாளர்களை அணுகியது. இவர்களைப் பற்றி நற் சான்றுகளை வழங்கியது. அதன் பயன் பொடாவில் போடாமல் பல்லாண்டு காலம் சிறையில் வாடாமல் குறுகிய காலத்தில் இறையருளால் விடுதலையானார்கள். இது அப்பாவிகள் விடுதலையில் முஸ்லிம் லீக் செய்துள்ள குறிப்பிடத் தக்க பெரிய பணியாகும்.
10 மாததிற்க்கு முன்பே பி.ஜே. லுஹா ஸைபுல்லாஹ் ஆகியவர்களுக்கு தெரியும்.
ஹாமித் பக்ரி தீவிரவாதத்தில் ஈடுபட்டிருப்பது பற்றி பி.ஜே.க்கு 10 மாததிற்க்கு முன்பே தெரியும். லுஹா ஸைபுல்லாஹ் ஆகியவர்களை சாட்சியாக வைத்து பி.ஜே. சொல்லி விட்டார். இப்படியும் பரப்பி வருகிறார்கள். வாதத்திற்காக இது உண்மை என்றே வைத்துக் கொள்வோம். (வாதத்திற்காகத்தான்) 10 மாதத்திற்கு முன்பே தெரிந்த நிலையில் முற்றிலுமாக விலகி இருப்பார்களா? 8 மாதம் கழித்து மேலாண்மைக் குழு பொறுப்பு வழங்கி இருப்பார்களா? எல்லோரும் பரப்பரப்புடன் படித்த ஜாக்குக்கு எழுதிய ஒற்றுமை கடிதம் தான் ஹாமித் பக்ரி பெயரால் வெளியிட்டு இருப்பார்களா? அல்லது ஜாக் சிக்கலில் மாட்டிக் கொள்ளட்டும் என்று எழுதச் செய்தார்களா?

அவர்கள் கூற்றுப்படி வாதத்திற்காக உண்மை என்று வைத்துக் கொள்வோம். பி.ஜே.ன் அனுமதி இன்றி இந்த செயல்பாடு நடந்து இருக்காது. இப்பொழுது மேடைகளில் எதை ஹராம் மார்க்க விரோதம் என்று ஆயத்து ஹதீஸ்களைக் கூறிப் பேசுகிறாரோ, அதுபோல் தனிமையில் அந்த செயல்தான் இஸ்லாம் கூறும் சரியான வழி என்று கூறி ஆர்வம் ஊட்டி வலியுறுத்தி இருப்பார். இப்படி அந்தரங்கமாக, தான் ஈடுபடாத ஈடுபட விரும்பாத, ஈடுபடப் பயந்த தொடை நடுங்கக் கூடிய பணிகளைச் செய்யுமாறு பிறரைத் தூண்டி விடுவதும் மாட்டிக்கொண்டால் இதுமாதிரி நாடகமாடி ஓடி ஒழிவதுமான இந்தச் செயல் அவருக்கு புதிது அல்ல. கை வந்த கலை. இது அவருடன் நெருக்கமாக இருக்கும் அனைவருக்கும் தெரியும்.

வாதத்திற்காக தீவிரவாதி என்றே வைத்துக் கொள்வோம். (வாதத்திற்காகத்தான்) அவர்கள் தீவிரவாதிகளாக இருந்தால் அது பற்றி ஆய்ந்து அறிக்கை தர வழக்கு போட என அராசங்கம் இருக்கிறது. இவர்களுக்கு என்ன வந்து விட்டது. இவர்கள் தீவிரவாதிகள் தான் என்று அவசர அவசரமாக பிரச்சாரம் செய்ய? இந்த கேள்வியை இந்துச் சகோதரர்கள் கேட்கிறார்கள். பதவி பித்து பிடித்த முஸ்லிம் பெயர் தாங்கிகள் கேட்காமல் இருக்கலாம்.

பழனிபாபா, இமாம் அலி மரணத்தை ஒட்டிய அழுகைகள் தரும் விளக்கம்.
பிரபலமான 6.4.02 தேதிய கடிதம் எழுவதற்கு மூல காரணம் சம்சுல் லுஹா. அவர் துபை வந்திருந்த போது போட்ட தூபத்தின் .வெடிப்புத்தான் அந்தக் கடிதம் என்பது பலருக்குத் தெரியும். அந்தக் கடிதத்தில் உள்ள பெரும்பாலான குற்றச் சாட்டுக்ளுக்கு முக்கிய சாட்சியே லுஹாதான் என்பதையும் பலர் அறிவார்கள். அந்த லுஹாவின் பொய் சத்தியத்தை சுட்டிக் காட்டி தட்டிக் கேட்டதும் சாதுக்களின் இயல்புப்படி எதிரி ஆனார். அவரது பிழைப்புத் தலமாக ஆகிவிட்ட மஸ்ஜிதுர்றஹ்மானை சட்டப்படி தக்க வைத்துக் கொள்ள சட்ட ரீதியான வேலைகளை ஏற்கனவே செய்து முடித்து விட்ட அவரால் பிரச்சனைகள் வெடித்தது. அதில் அவரும் பாதிப்புக்குள்ளானார். எனவே பொது மக்களை தன் பக்கம் ஈர்க்க அவரும் அவரது தம்பி மவுலவி காஜாவும் வேஷம் போட்டார்கள். அதில் அவர்கள் போட்ட முக்கிய கோஷம் என்ன தெரியுமா?

ஷபழனி பாபாவை கொலை செய்ய உத்தரவு இட்டவர் பி.ஜே. பி.ஜே.யும் ஜின்னாவும் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள் என்று பள்ளிவாசல் போனில் இலாஹி பேசுகிறார். நம்ம பள்ளி போன் ஏற்கனவே நோட்டேடாக இருக்கிறது| இப்படி மக்களிடம் கூறி மக்கள் நம்மை வெறுக்கவும் லுஹாவை ஆதரிக்கவும் வழி வகுத்தார்கள். 1986ல் யாரும் இல்லாத காலத்தில் பிரச்சாரப் பணியை மேற் கொண்ட போது பிற் காலத்தில் ஒரு பெருங் கூட்டம் வரும் என்று எதிர்பார்த்து நாம் ஈடுபடவில்லை. ஆதரவை எதிர்பார்த்து நமது செயல்பாட்டை மாற்ற மாட்டோம். உண்மையை போட்டு உடை என ஊருக்கு உபதேசித்து விட்டு தனக்கு என வரும் போது மாறும் ஊருக்கு உபதேசிகள் போல் ஆக மாட்டோம்.

அவர்களின்; கோஷத்திற்க்கு வருவோம் மஸ்ஜிதுர்றற்மான் என்பது அல்லாஹ் உடைய பள்ளி. அங்கு தொழுகை மற்றும் மார்கப் பிரச்சாரம் மட்டும் நடந்தால் போன் எப்படி நோட்டேட்; ஆகும். அவர்கள் கூற்றுப்படி நோட்டேட் என்றால் நோட்டேட் ஆகும் அளவுக்கு லுஹா என்ன செய்கிறார் என்று அவர்கள்தான் விளக்க வேண்டும்? ஜின்னாவும் பி.ஜே.யும் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள் என்று .சொன்னதாக பரப்பியவர் அவர்கள் அப்படிப் பட்டவர்கள் இல்லை என்று மறுத்து ஒரு வார்த்தை சொன்னார்களா? என்றால் இல்லை.

ஜின்னாவும் பி.ஜே.யும் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள் என்று .சொன்னதாக பரப்பியவர்களில் ஒருவரான லுஹாதான் பி.ஜே.யின் பல்வேறு பத்வாகள் பற்றிய தகவல்களையும் நமக்கு தந்துள்ளார். அதில் இங்கே நாம் குறிப்பிட விரும்புவது பழனி பாபாவுக்கு பி.ஜே.பத்வா கொடுத்து விட்டார் என்பதாகத் தந்த தகவல் ஆகும். பி.ஜே.யால் பத்வா வழங்கப்பட்ட பழனி பாபா கொல்லப்பட்டதும் பி.ஜே. கண்ணீர் வடித்தார். பழனி பாபாவுக்காக பி.ஜே. அழுவது போன்ற அந்தக் காட்சி வீடியோவாக ஆக்கப்பட்டு வினியோகிக்கப் பட்டது.

இதே மாதிரி தான் இமாம் அலிக்காகவும் பி.ஜே. அழுதுள்ளார். இதனால் பலருக்கும் ஏற்பட்ட மாதிரி நமக்கும் சந்தேகம் ஏற்படுகிறது. இந்த சந்தேகத்திற்கு வலு சேர்க்கும் வண்ணம் இமாம் அலி கொள்ளப்பட்ட செய்தி உணர்வில் அவர்களது நடை முறைக்கு மாற்றமாக ஏனோ தானோ என வந்தது. இதை அடுத்தடுத்த வாரங்களில் வந்த உணர்வு மூலமே அல்லாஹ் மேலும் வெளிப்பட வைத்துவிட்டான்.

அரசாங்கத்தால் தீவிரவாதி என்று வட நாட்டில் சுடப்பட்டவர் பற்றிய செய்தி உணர்வில் வந்தது. கையில் சுட்டிருக்கலாம், காலில் சுட்டிருக்கலாம், உயிரோடு பிடித்து இருக்கலாம் என்று அவர்களுக்கே உரிய இயல்புப்படி உணர்வைத் தூண்டி எழுதியிருந்தார்கள். பி.ஜே.யால் சோறு ஊட்டி வளர்க்கப்பட்ட இமாம் அலி சுடப்பட்ட செய்தி கேட்டதும் நூற்றுக் கணக்கணோர் கூடி இருந்த சபையில் கண்ணீர் விட்டு அழுதது. அவரை அடக்கம் செய்ய என அந்த இடத்திலேயே 50 ஆயிரத்திற்கு மேல் வசூல் செய்தது. இவை யாவும் உளப்பூர்வமானது என்றால் இவர்களால் யார் என்று அறியப்படாத வட நாட்டில் சுடப்பட்டவருக்காக நியாயம் கேட்டு எழுதியதை விட கூடுதலாக இமாம் அலிக்காக எழுதியிருப்பார்கள். எனவே இமாம் அலி விஷயத்தில் டிராமாக்காரர்கள் பங்கு உள்ளது என்ற கூற்றை மறுக்க முடியவில்லை.

த.மு.மு.க தலைமையினர் பி.ஜே. அணியின் மவுலவிகளை காக் காசுக்கு மதிப்பதில்லை. இதுவும் லுஹாவே கூறிய தகவல்தான். த.மு.மு.கவில் காக் காசுக்கு மதிப்பில்லாத மவுலவிகளில் ஒருவரான லுஹா, ஹாமித் பக்ரிக்காக த.மு.மு.க போராடாது என்று பெரு நாள் அன்று குத்பா உரைகளில் அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன? அவசரம் என்ன? அதில் பக்ரியை தீவிரவாதிகள் என்று உறுதி செய்து தீவிரவாதித்திற்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று அறிவித்த தோடு பக்ரிக்கு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்ப்பு இருப்பதாக குத்பா உரையில் குறிப்பிட்டு உள்ளார். அதே மாதிரி அவரது தம்பி காஜா பிர்தவ்ஸியும் இங்கு பரப்பி வருகிறார்.

ஹாமித் பக்ரியை தீவிரவாதி என்று பிரகடனப்படுத்தியது இஸ்லாத்தின் மீது உள்ள பற்றால்தான், வேறு நிர்ப்பந்தமோ - தற்காப்பு முயற்சியோ - சுய நலமோ எதுவும் அவர்களுக்கு இல்லை, அவர்கள் தீவிரவாதத்திற்கு எதிரானவர்கள் என்பது உண்மையானால், பி.ஜே.யும் ஜின்னாவும் தீவிரவாதிகளாகவும் ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்ப்பு உடையவர்களாகவும். எந்தக் காலத்திலும் இருந்ததில்லை. 1992 ல் இலங்கை சென்ற போதும் தொடர்பு வைக்கவில்லை. 1995 ல் த.மு.மு.க. துவங்கிய பின்னரும் பி.ஜே. நேரடியாகவோ மறைமுகமாகவோ தீவிரவாதத்தில் ஈடு படவில்லை. அந்நிய சக்திகளுடன் குறிப்பாக ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்பு வைக்கவில்லை. இதுவெல்லாம் உண்மை என்று யாரிடமும் சொல்லவும் இல்லை. இது பொய்யாக இருக்குமானால் ஷம்சுல் லுஹாவின் மீதும் காஜா பிர்தவ்ஸியின் மீதும் அல்லாஹ்வின் லஃனத்து சாபம் இறங்கட்டும் என்று கூற முன் வர வேண்டும். மக்கள் அனுதாபத்தைப் பெற மேடைகளில் நின்று அழுது திசை திருப்பக் கூடாது.

தங்கள் தேவைக்கு குர்ஆன் ஹதீஸ் என்பார்கள். பி.ஜே.அணியின் பைலாவில் உள்ள குர்ஆன் ஹதீஸ்களுக்கு முரண்பாடனதைச் சுட்டிக் காட்டினால், மார்க்க விரோதச் செயல்களை சுட்டிக் காட்டினால் அரசியல் அமைப்புக்கும் இஸ்லாத்திற்க்கும் சம்பந்தம் இல்லை என்பார்கள். இதனால் மட்டும் பி.ஜே.யின் அணி ஒரு சந்தர்ப்ப வாத அமைப்பு என்று கூறவில்லை. உண்மையிலேயே தனி நபரின் சுய நலன்களுக்காக தற்காப்புக்காக உருவான அமைப்பு. இஸ்லாமிய விரோத அமைப்பு. பாபரி மஸ்ஜித் மீட்பு போராட்டங்கள் இட ஒதுக்கீடு கோரிக்கைகள் உட்பட அனைத்தும் சந்தர்ப வாதங்கள். என்பதை பி.ஜே. விட்ட சவாலின்படி பகிரங்க மேடையில் நிருபிக்கத் தயார்.

மார்கத்தில் ஹராம் என தெளிவாகத் தெரிந்தாலும் அதைச் செய்யுமாறு பரிந்துரை செய்ய துணிந்து விட்டவர்கள்.
கவிதைகள் மூலம் கூறப்படும் கருத்துக்கள் பயன் தராது எனவே கவிதைகள் நமது இதழ்களில் இடம்; பெராது என்றார்கள். பிறகு கவிதை வெளிட்டார்கள்? இவர்கள் வேட்டு வைத்து வரும் ஒற்றுமையின் பெயரால் வரும் இதழ் விடியல் வெள்ளிக்கு போட்டி இதழாக வருவதால் கவிதை வெளியிட மாட்டோம் என்ற கொள்கையை கை கழுவி விட்டார்கள். உலக அளவில் புகழ் பெற்றுள்ள அறிஞர் கர்ளாவி சிறிய மியூசிக்குகள் கூடும் என்றார். அதனால் அவரை கர்ண கொடூரமாக விமர்சித்தார்கள். அப்படி விமர்சித்த இவர்கள் சார்பில் ஒளிபரப்பாகும் டி.வி. நிகழ்ச்சிகளில் சிறிய மியூசிக்குகளில் துவங்கி ஜிகா சீரியல் வரை வந்து விட்டார்கள்.
ஹிஜாப்-பர்தா பற்றி வாய் கிழிய பேசி வருகிறார்கள். இவர்கள் தயாரித்து டி.வி.ல் ஒளி பரப்பிய சின்ன சினிமாவின் டைட்டிலில் 3 பெண்கள் தலையை திறந்து இருப்பது போல் காட்டினார்கள் இதை கண்டித்து எழுதினால் பதவி போய் விடும் என்ற நிலையில் உள்ளவர்கள் ஷவரை படம்| என்று சமாளித்தார்கள். பெண்கள் தலையை திறந்து இருக்கிற மாதிரி ஷவரை படம்| கூடும் என்ற அளவுக்கு இவர்கள் ஈமான் ஆகி விட்டது.

மேலும் அந்த சின்ன சினிமாவில் பள்ளியை நடிப்புத் தலமாக ஆக்கி தொழுகையையும் நடிப்பாக ஆக்கி உள்ளார்கள். தந்தை மகள் பேசும் காட்சியிலும் பெண் கேட்டு வரும் காட்சியிலும் வரும் பெண்களின் தலை முடி பாதி தெரியும்படி நடிக்க வைத்துள்ளார்கள். இது மாதிரி தனது மனைவியை, மகளை நடிக்கச் செய்வார்களா? வரதட்சணைக் கொடுமையை உணர்த்த தயாரித்த நிகழ்ச்சி அதன் நோக்கத்தைப் பாருங்கள் என்று வக்காலத்து வாங்குகிறார்கள். இஸ்லாத்தை விட இவர்கள் நேசிக்கும் தலைமை பெரிதாகி விட்டது. அதனால் தான் நோக்கத்தைப் பாருங்கள் என்று கூறி இஸ்லாமிய கலாச்சாரத்தைச் சீரழிக்கும் காரியத்துக்கு வக்காலத்து வாங்குகிறார்கள். இப்படி வக்காலத்து வாங்குபவர்கள் அடுத்து விபச்சாரக் கொடுமையை உணர்த்த படம் எடுக்க வேண்டும் என்று விரும்புகிறார்களோ? என்னவோ?

இன்னும் சிலர் இந்த டி.வி. தொடர் பி.ஜே.க்கு தெரியாமல் வந்திருக்கும் என்கின்றனர். இதன் மூலம் பி.ஜே. தவிர மற்றவர்கள் எல்லாம் இஸ்லாமிய கலாசாரத்தை இஸ்லாத்தை பேணாதவர்கள் என்கின்றனரோ? இதுதான் பி.ஜே.க்கு தெரியாமல் வந்திருக்கும் என்று வைத்துக் கொள்வோம். வட்டிக்கு தமிழக அரசு கொடுக்கும் கடன் பற்றிய செய்தியை சமுதாயத்திற்கு கிடைத்த பெரும் சலுகை போல் மிகைப் படுத்திக் காட்டி முக்கியச் செய்தியாக ஆக்கி முதல் பக்கத்தில் பாதி பக்கத்தை உணர்வு வார இதழில் ஒதுக்கி இருந்தார்கள்.

வட்டி இஸ்லாத்தில் ஹராம். நிரந்தர நரகத்திற்குரிய செயல் என்று பாமரனும் அறிவான். அந்த வட்டிக்கு துணை போகும் இந்தச் செய்தி பி.ஜே.க்கு தெரியாமல் வந்ததா? பி.ஜே. இறை நேசன் என்ற புனைப் பெயரில் ஆசியராக வேலை செய்வது உணர்வு வார இதழில். அந்த உணர்வில், ஹாமித் பக்ரி கைது செய்யப் பட்ட வாரத்தில்; இஸ்லாமிய பெண்கள் கல்லூரிக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்ற பி.ஜே.ன் அறிக்கை வெளியாகி இருந்தது. பி.ஜே.ன் அறிக்கை வெளியான அந்த இதழில்தான் வட்டிக்கு துணை போகும் இந்தச் செய்தியும் இடம் பெற்றது.

எதன் பெயரிலாவது பதவி கிடைத்தால் போதும் என்றுள்ளவர்களை விடுங்கள். சாதாரண தொண்டன் என்கிறார்களே! அவர்களில் யாராவது இஸ்லாமிய உணர்வுடன் கண்டித்தார்களா? செய்தியாகத்தானே வெளியிட்டார்கள் என்று சமாளித்தார்கள். உள்ளபடியே செய்தியாகத்தான் வெளியாகி இருந்ததா? இல்லை என்று மறுக்கும் வண்ணம் அதே இதழின் இன்னொரு பக்கத்தில் ஜவாஹிருல்லாஹ் பெயரால் நன்றி அறிக்கையும் முஸ்லிம் இளைஞர்களுக்கு வட்டிக்கு கடன் கொடுக்கும் திட்டத்தை அறிவித்த தமிழக அரசுக்கு பி.ஜே.யின் த.மு.மு.க. பாராட்டு என்றும்; செய்தி உள்ளது.

இது மட்டுமா? அந்த திட்டப்படி வட்டிக்கு பணத்தை வாங்க மனுச் செய்வது எப்படி என்ற விபரமும் இன்னொரு இதழில் வெளியிட்டிருந்தார்கள். வழக்கமான கூற்றுப்படி இது பி.ஜே.ன் பார்வைக்கு படாமல் வந்து விட்டது என்று வைத்துக் கொள்வோம் மார்க்கம் என்று தெரியாத மற்றவர்கள்தான் இந்தச் செய்திகளை போட்டார்கள் என்று எடுத்துக் கொள்ள முடியுமா? அதில் வட்டி ஹராம் என்றும் குறிப்பிட்டு விட்டுதான் வட்டிக்கு பணம் வாங்குவது எப்படி என்ற விபரத்தை வெளியிட்டு உள்ளார்கள். மார்கத்தில் ஹராம் என தெளிவாகத் தெரிந்தாலும் அதைச் செய்யுமாறு பரிந்துரை செய்யத் தயங்க மாட்டோம் என்றுதான் அதன் மூலம் பிரகடனம் செய்துள்ளார்கள்.

இதைச் சுட்டிக் காட்டி எம்மைப் போன்ற பலரும் பல முறை எழுதியும் பலன் இல்லை. த.மு.மு.க. தலைவர்களின் படங்களை உணர்வில் போட மாட்டோம் என்பார்கள். ஆசை வந்ததும் போடுவார்கள்? சுட்டிக் காட்டினால் கவனக் குறைவு என சமாளிப்பார்கள். மக்கள் மறந்ததும் மீன்டும் போடுவார்கள். வட்டிக்கு எதிராக பலர் சுட்டிக் காட்டியும் குறைந்த பட்சம் அது மாதிரி கூட சமாளிக்கவில்லை. அவர்களது இஸ்லாமிய விரோத போக்குகளுக்கு இதை விட வேறு என்ன சான்று வேண்டும்?

எனவே சின்னத் திரையில் சின்ன சினிமா போட்டு பெண்களின் ஹிஜாபைக் கேலித் கூத்தாக்கியமைக்கு பகிரங்க மன்னிப்பு கேட்டு வருத்தம் தெரிவிக்க வேண்டும். முஸ்லிம்களுக்கு வட்டிக்கு கடன் வழங்கும் திட்டத்தைப் பாரட்டியதற்கும், வட்டிக்கு கடன் வாங்குவது எப்படி என்று வழி காட்டியதற்கும் மன்னிப்பு கேட்டு வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

ஹாமித் பக்ரி விஷயத்தில் நடந்து கொண்ட முறைக்கும், ஜாக் பற்றி பொய்யான தகவல் கூறியதற்க்கும், கமாலுதீன் மதனியைப் பற்றி அவதூறு பரப்பியமைக்கும், வீடியோ கேஸட் தயாரித்தமைக்கும் பி.ஜே. மற்றும் அவருக்கு துணை நின்றவர்கள் அனைவரும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. இல்லை எனில் பி.ஜே. விட்ட சவால்படி அவர் குறிப்பிட்ட மவுலவிகளுடனும் ஆதாரங்களுடனும் ஒரே மேடைக்கு வர வேண்டும். அவர் விட்ட சவால் படி பாக்கர் விவகாரம் முதல் அனைத்தையும் நிரூபிக்கத் தயார் என்று 1-12- 2002. அன்று கடிதம் அனுப்பி விட்டோம்.

முனாழராவானாலும் முபாஹலாவானாலும் அதில் உடன்பாடு இருந்தாலும் இல்லாவிட்டாலும் எந்த சவாலையும் எந்த ரூபத்திலும் சந்திக்க பச்சைக் குழந்தையைக் கூட தூக்கிக் கொண்டு ஓடியவர்கள் நாங்கள். சவால் என்றால் அதை இலங்கை சென்றும் சந்திக்க தயங்க மாட்டோம் என்று தங்களைப் பற்றி பெருமையாகப் பேசி பீற்றியவர்களிடமிருந்துதான் இந்த நிமிடம் வரை பதில் இல்லை. 40 க்கு 40, 50க்கு 50, 19 என்றெல்லாம் வருடக் கணக்கில் எழுதி பத்திரிக்கையின் பக்கங்களை வீணடிப்பவர்களிடம் பதில் இருந்தால் நமது கடிதங்களை பத்திரிக்கையில் போட்டு பக்கம் பக்கமாக வரிக்கு வரி பதில் எழுதி இருப்பார்கள்.

எனவே மாநிலத் தலைமையை விடுங்கள் அவர்களின் ஏஜெண்டுகளாக மண்டலம்,கிளை, லேபர் கேம் அமீர் மற்றும் தஃவா சென்டர்கள் பெயர்களால் பொறுப்பில் உள்ளவர்கள் பி.ஜே. அணியின் வெளிரங்கத்தை மட்டும் பார்த்து விட்டு பி.ஜே.யின் அந்தரங்கம் தெரியாமல் இருந்தால் அவர்கள் அப்பாவி முஸ்லிம்கள்தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அந்தரங்கத்தையும் தெரிந்து கொண்டு; இருந்தால் அவர்களை அப்பாவி முஸ்லிம்கள் என்று சொல்ல முடியுமா?

இனியும் பி.ஜே. அணியில் இருந்து கொண்டு தன்னை உண்மையிலேயே சமுதாய உணர்வுள்ள முஸ்லிம் என்றும், பி.ஜே.யின் அணி நல்ல அமைப்பு என்று உறுதியான நம்பிக்கையுடன்தான் அதில் இருக்கிறேன். பதவி பெருமை போன்ற எந்த சுய நலமும் இல்லாமல் இருக்கிறேன் என்று சொல்லக் கூடியவர்கள் இருக்கலாம். அதில் அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால், ஷபி.ஜே. எந்தக் காலத்திலும் இமாம் அலி போன்றோருக்கு ஆர்வமூட்டி உதவி செய்து பிரச்சனை ஏற்பட்டதும் அம்போ என விட்டு விட்டு ஒடி ஒழிந்து இல்லை. இமாம் அலி குடும்பத்தார்க்கு மோசம் செய்யவில்லை.

த.மு.மு.க. பி.ஜே.யின் தற்காப்புக்குகாக உருவானது அல்ல. ஒட்டு மொத்த சமுதாய நலன் கருதி உருவானதுதான.; த.மு.மு.க. தற்காலிமானது அது ஒரு டிராமா என்று பி.N.ஜ. எந்தக் காலத்திலும் கூறவே இல்லை. இன்று உயிருடன் இருப்பவர்களில் யாருக்கும் பி.ஜே. பத்வா கொடுக்க வில்லை. ஏற்கனவே கொல்லப் பட்டவர்களில் யாருக்கும் பி.ஜே. பத்வா கொடுக்க வில்லை. அரசால் தீவிரவாதம் என்று கூறப்படும் செயல்களை இஸ்லாம் கூறும் ஜிஹாத் என்று என்றைக்கும் கூறியது இல்லை, யாரையும் தூண்டியதும் இல்லை. அவரால் தூண்டப் பட்டவர்களை வழக்கு நடத்த உதவுவேன் என்று வாக்குறுதி அளித்து பாதியிலேயே விட்டு ஒதுங்கியதும் இல்லை. 1994ல்இனி தவ்ஹீது பிரச்சாரம் செய்ய மாட்டேன் என்று சொல்லியதும் இல்லை.

பாக்கர் பொருளாளராக இருந்த த.மு.மு.க. தலைமையின் வரவு செலவு கணக்குகளில் எந்தக் காலத்திலும் அட்ஜஸ்மண்ட் செய்யப்படவே இல்லை, யாரையும் காட்டிக் கொடுத்தது இல்லை| என்று அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கூறுகிறேன் என்று சத்தியம் செய்யச் சொல்லாதீர்கள். சத்தியம் செய்து உங்களை அசத்தி விடுவார். சத்தியம் சிலருக்கு சர்க்கரைப் பொங்கல். சோற்றில் போட்டு திண்பார்கள் என்பார்களே. அது போல் இவர்கள் சத்தியத்தை ஜுஸ் பண்ணி குடித்துக் கொண்டிருப்பவர்கள். எனவே இதில் நான் சொல்வது பொய் என்றால் அல்லாஹ்வின் சாபம் லஃனத்து என் மீது இறங்கட்டுமாக என்று சொல்லச் சொல்லுங்கள். இப்பொழுது தெரிந்து விடும் அவரது வண்டவாளம்.

இப்படி நிபந்தனை வைப்பதன் நோக்கம் அவர்கள்; உண்மையை ஒப்புக் கொள்ள வேண்டும். அதாவது முஸ்லிம் சமுதாயத்திற்கும் இஸ்லாமிய பிரச்சார அமைப்புகளுக்கும் அவர்கள் தலைமை செய்த துரோகத்தை ஒப்புக் கொண்டு அவர்களால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நீக்கும்படி அவர்களது தலைமையை வற்புறுத்த வேண்டும். அல்லது இந்த சமுதாயத்தின் சாபக் கேடானவர்களின் மீதும் அதற்கு துணை நிற்பவர்கள் மீதும் அல்லாஹ்வின் லஃனத்து -சாபம் இறங்க வேண்டும்.
பக்ரி தீவிரவாதிதான் என்பதற்கு உரிய ஆதாரம் பி.ஜே. இடம் உள்ளது.
அறிஞர் ஹாமித் பக்ரி கைது செய்யப்பட்ட நாளிலிருந்து பி.ஜே. அணி ரகசியமாக உதவுகிறது, உதவாது என்று யு.ஏ.இ.ல் உள்ள பி.ஜே. அணி பொறுப்பாளர்கள் ஆளுக்கொருவிதமாகவும்; நாளுக்கொருவிதமாகவும் விளக்கங்களைக்; கூறி மக்களை ஏமாற்றிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் கூறி வந்தவைகளில் உள்ள முரண்பாடுகளை நமது பிரசுரங்களில் சுட்டிக் காட்டி இருந்தோம். அதன் பிறகு அது வரை அவர்கள் கூறி வந்த பொய்களை தவறான தகவல் என்ற வார்த்தை விளையாட்டால் சமாளித்து மவுனியானார்கள். மீண்டும் ஆளுக் கொரு விளக்கத்தைக் கூறி மக்களை திசை திருப்பிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி திசை திருப்பிக் கொண்டிருப்பவர்கள் தங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அல்லது அவருக்கே இந்நிலை வந்திருந்தால் இது மாதிரி திசை திருப்பும் வேலையில் ஈடுபட்டிருப்பார்களாh?

பக்ரிக்கு பி.ஜே. அணி உதவாது என்று அதன் தலைமை அறிவித்த பின்னரும் ரகசியமாக உதவுவதாக துபை ஜேட்டி(ஜம் இய்யத்து தவ்ஹீத்தினர்) கூட்டத்தில் அதன் செயலாளர் அதிரை ஜமாலும் காஜா பிர்தவ்ஸியும் கூறி வந்தார்கள். ஜேட்டி தலைவர் பனைக்குளம் ஷhகுல்; அவசர விடுப்பில் தாயகம் சென்று வந்த பின் ஹாமித் பக்ரியை தீவிரவாதியாக சித்தரித்து பி.ஜே. அவருக்கு அளித்துள்ள விரிவான விளக்கத்தைக் கூறி பக்ரிக்காக பி.ஜே. அணி எதுவும் செய்யாது என்று திட்டமாக அறிவித்து விட்டார். இதன் மூலம் ஜேட்டி செயலாளர் அதிரை ஜமாலும் காஜாவும் கூறி வந்தவை யாவும் பொய் என்று சபையில் நிரூபனமானது.

இதற்குப் பிறகுதான் ஷhர்ஜா மண்டலம் அதன் தலைவர் திருவாரூர் சம்சுத்தீன் வந்ததும் அறிஞர் ஹாமித் பக்ரி பற்றி பி.ஜே. அணி நிலை என்ன என்பதை தெரிவிப்பதாக பிரசுரம் வெளியிட்டார்கள். அப்படியானால் துபை ஜட்டித் தலைவரை ஷhர்ஜா மண்டலம் நம்பவில்லையா? நம்பிய நிலையில் பிரசுரம் வெளியிட்டார்கள் என்றால் ஷhர்ஜா மண்டல பி.ஜே. அணியினர் எப்படிப்பட்டவர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். அதை பிரிண்ட் செய்தவர் யார் என்று தெரிந்தால் அவரை உலக மகாப் பொய்யர் என்று திட்டமாக முடிவு செய்து விடுவீர்கள். ஹாமித் பக்ரிக்கு பி.ஜே. அணி உதவுகிறது. ஹாமித் பக்ரி விடுதலைக்கு பி.ஜே. செய்து வரும் முயற்ச்சிகளை சம்சுதீன் வந்து கூறுவார் என்று பிரசுரம் வெளிட்டவர்கள் சம்சுத்தீன் வந்தப் பிறகு மூச்சுப் பேச்சு இல்லாமல் முடங்கி விட்டார்கள். சம்சுத்தீன் வந்து நாட்கள் உருண்டோடி விட்டன. இன்று வரை பிரசுரத்தைக் காணோம் ?

ஹாமித் பக்ரி விஷயத்தில் பி.ஜே. நிலை என்ன? என்பது பற்றி ஜட்டிக் கூட்த்தில் பேசிய சம்சுத்தீன்; ஹாமித் பக்ரியுடன் சிறையில் இருந்தவர்களும் குற்றாலக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களும் நான் இருக்கும் போது பி.ஜே. அலுவலகம் வந்தனர். தாங்கள் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டு மன்னிப்புக் கேட்டு சென்றனர். ஹாமித் பக்ரியும் குற்றத்தை ஒப்புக் கொண்டு மன்னிப்புக் கேட்டுக் கடிதம் எழுதி உள்ளார். ஹாமித் பக்ரி தீவிரவாதிதான் என்பதற்கு உரிய ஆதாரம் பி.ஜே.யிடம் உள்ளது என்று கூறி உள்ளார்.

அவரது கூற்றுகளுக்கு ஆதாரம் கேட்டதற்க்கு . இதைஎல்லாம் வெளிட்டால் ஹாமித் பக்ரிக்கு பாதமாக ஆகிவிடும் எனவேதான் வெளியிடவில்லை என்று சமாளித்துள்ளார். விசாரணைக்கு அழைத்துச் சென்ற உடனேயே வீதிக்கு வீதி தீவிரவாதி என்று அறிவித்தவர்கள், அவசர அவசரமாக டிவிக்கு பேட்டி கொடுத்தவர்கள்? இந்த சமூகவிரோதக் கும்பல்தான். மக்கள் மறதியைப் பயன் படுத்திடும் இன்றைய அரசிவல்வாதிகளையும் மிஞ்சியவாகளாக இவர்கள் ஆகி விட்டதால் இப்படி சொல்லி உள்ளார். ஹாமித் பக்ரி தீவிரவாதிதான் என்பதற்கு உரிய ஆதாரம் காவல் துறை இடம் உள்ளது என்று கூறாமல் பி.ஜே. இடம் உள்ளது என்று கூறி பி.ஜே. அணி எப்படிப்பட்ட அமைப்பு என்று அடையாளம் காட்டிய திருவாரூர் சம்சுத்தீன் அவர்களுக்கு நன்றி, நன்றி, நன்றி.

மேலும் சமூக விரோத கும்பலின் ஏஜெண்டுகள் ஷபக்ரி விடுதலையாகி இவ்வளவு நாள் ஆகி விட்டது. அவர் பி.ஜே.க்கு எதிராக ஒரு வார்த்தை சொன்னாரா? எதுவும் சொல்லவில்லை, சொல்லவும் மாட்டார், சொல்லவும் முடியாது| என்று கூறி வருகிறார்கள். மிரட்டல் தொனியில் உள்ள இந்தப் பேச்சும் உறுதி செய்து விட்டது. பி.ஜே.தான் சதி செய்து உள்ளே தள்ளியது. அதைக் கூறினால் மீண்டும் பழைய மாதிரி செய்து விடுவோம் அதனால் பயந்து எதையும் கூறமாட்டார் என்கிற மாதிரி பி.ஜே.யை அடையாளம் காட்டி வருகிறார்கள். அதற்காக அவர்களுக்கும் நன்றி.

ஷhர்ஜா பி.ஜே. அணி .பிரசுரத்திற்கு பதில் பிரசுரம் வெளியிட வேண்டாம் என்று நம்மிடம் வேண்டுகோள் வைத்த மாதிரி, இப்பொழுது சென்னையில் இருக்கும் ஹாமித் பக்ரியிடமும் பலர்;. சமுதாய நலன் கருதி நீங்கள் எதுவும் பேசாதீர்கள். ஏற்கனவே பல பிளவுகள் ஆகி விட்டது பொறுமை செய்யுங்கள். உங்களுக்கு கெடுதல் செய்தவர்களுக்கு எதிராக பொதுக் கூட்டமும் பேச வேண்டாம் தனிப் பேட்டிகளும் கொடுக் வேண்டாம் என்று பலர் வேண்டுகோள் வைத்துள்ளனர். அன்புக்கு கட்டுப்பட்டு அமைதி காக்கும் பக்ரியை சீண்டி வருகின்றனர். பொறுமைக்கும் எல்லை உண்டு என்பதை மட்டும் சொல்லிn வைக்கிறோம். பக்ரி வாய் திறந்தால் என்னஆகும் என்பதற்கு ஒரு உதாரணம். அவர்கள் கூற்றுப்படி ஹாமித் பக்ரி கூறிய ஒரு வார்த்தை என்ன என்பதைப் பார்ப்போம்.
சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது அசத்தியம் அழிந்தே தீரும்.
சமுதாய விரோத சக்திகளின் சதிச் செயல்களால் மூன்றரை மாதங்கள் (103நாட்கள்) அநியாயமாக சிறையில் வாடிய அறிஞர் ஹாமித்பக்ரி 13.03.03. வியாழக்கிழமை விடுதலையாகி சென்னையில் இருந்தார். அவர் சென்னையில் இருந்தால் வட மரைக்காயர் தெருவில் உள்ள அஹ்லே-ஹதீஸ் பள்ளிக்குத்தான் ஜும்ஆ தொழச் செல்வார். வழக்கம் போல் 14.03.03. வெள்ளிக்கிழமை அங்கு ஜும்ஆ தொழச் சென்றார். இந்த பள்ளிக்கு அருகில்தான் தற்போதையை த.மு.மு.க.வின் தலைமை அலுவலகம் உள்ளது.

பி.ஜே. அணியின் தலைமைப் பொறுப்பாளர்கள் சென்னையில் இருந்தால் அனைவரும் ஜும்ஆ தோறும் இந்த பள்ளிக்கு வந்து விடுவார்கள். ஜும்ஆவுக்குப் பின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். இது த.மு.மு.கவுடன் தொடர்புள்ள அனைவருக்கும் அங்கு தொழ வருபவர்களுக்கும் தெரியும். த.மு.மு.க அலுவலகத்தில் பணியாற்றக் கூடியவர்கள் அனைவரும் இந்தப் பள்ளிக்கு வந்து விடுவார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது.

14.03.03. வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை முடிந்ததும் அறிஞர் ஹாமித் பக்ரியைக் கண்ட முஸ்லிம்கள் கைகுலுக்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். உணர்ச்சிக் கொந்தளித்தவர்கள் கட்டித் தழுவி கண்ணீர் சிந்தினார்கள். அறிவிப்பு செய்யப்படாத ஒரு சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சியே நடந்தது. ஹாமித்பக்ரியை சூழ்ந்திருந்த மக்களைப் பார்த்தவர்கள் ஷஅறிவிப்பு செய்யாமலேயே இவ்வளவு கூட்டம் என்றால் அறிவிப்பு செய்திருந்தால் வடமரைக்காயர் தெருவே மக்கள் வெள்ளத்தால் காணாமல் போயிருக்கும், ஹாமித் பக்ரி மக்கள் வெள்ளத்தில் மிதக்கிறார், மக்கள் வெள்ளத்தில் நீந்துகிறார்| இப்படி பலரும் பலவாறாக இதை சிறப்பித்துக் கூறினர்.

அதே நேரம் ஜீம்ஆ தோறும் இந்தப் பள்ளிக்கு வரக் கூடிய பி.ஜே. அணி தலைமைப் பொறுப்பாளர்கள் யாரையுமே காணாத மக்கள் அது பற்றியும் பேசினர். மாநாடு என்றாலும் ஒரிரு பொறுப்பாளர்களாவது அலுவலகத்தில் இருப்பார்களே! எங்கே ஒருவரையும் காணோம்! தலைமை நிர்வாகிகளைத்தான் காணோம், வழக்கமாக மற்ற தொழுகைக்கு வரக் கூடிய தலைமை அலுவலக பணியாளர்கள் யாரையும் காணவில்லையே என்று ஒருவருக் கொருவர் கேள்வி எழுப்பினர். இந்தக் கேள்விக்கும் மக்கள் மத்தியில் இருந்தே வந்த பதில் ஷவழக்கம் போல் வந்தார்கள் பக்ரி ஆலீம்ஸா பள்ளிக்குள் இருப்பதைக் கேள்விப்பட்டதும் திரும்பச் சென்று விட்டார்கள்| என்பதாகும். ஆம் சத்தியத்தைக் கண்ட அசத்தியம் வெட்கித் தலை குனிந்து தலை மறைவாகியுள்ளது.

ஹாமித் பக்ரி விடுதலை ஆனதை வரவேற்று சென்னை வாழ் காயல் சகோதரர்கள் வால் போஸ்ட்டர் ஒட்டி இருந்தார்கள். எல்லாப் பகுதிகளிலும் அப்படியே இருந்தது. வட மரைக்காயர் தெருப் பகுதியில் மட்டும் கிழக்கப்பட்டிருந்தது. வால் போஸ்ட்டரை கிழிக்கும் இழி செயல் அந்தப் பகுதியில் மட்டும் நடந்துள்ளது.

ஹாமித் பக்ரி தங்கி இருந்த இடம் தேடி வந்து ஆறுதல் கூறி நலம் விசாரித்த மக்கள் ஏராளம் ஏராளம். அந்த வரிசையில் காயல் பட்டிணம் பிரமுகர்களுடனான சந்திப்பு நடந்தது. பி.ஜே. பற்றி சிறந்த பேச்சாளர் என்று அறிமுகமான ஒரு முகம்தான் உங்களுக்குத் தெரியும். பி.ஜே.க்கு இன்னொரு முகம் இருக்கிறது அதைச் சொன்னால் (எனக்கு பத்வா கொடுத்து) என்னை ஆள் வைத்து கொலை செய்து விடுவார். அவரது இன்னொரு முகம் எனக்குத் தெரியும் இலாஹிக்குத் தெரியும். இதுதான் ஹாமித் பக்ரி கூறிய ஒரு வார்த்தை.

இந்த வார்த்தையைத்தான் சவாலை ஏற்று எழுதிய கடிதத்தில் எதற்கும் ஒத்து வராமல் உங்கள் வரட்டுக் கவுரவம் தொடருமானால், செய்ய வேண்டிய விமர்சனங்களையெல்லாம் செய்து விட்டு, மெஜாரிட்டி மைனாரிட்டி பார்த்து வருமானத்திற்காக மானத்தை இழந்து மன்னிப்பு கேட்டு மண்டி இட்ட ஈனப் பிறவிகளான பேடிகளைப் போல பெட்டைகளைப் போல உங்களிடம் வந்து ஒட்ட மாட்டோம். உங்கள் ஃபத்வாக் ( கொலைத் தீர்ப்பு) களுக்குப் பயந்து ஓட மாட்டோம், ஒதுங்க மாட்டோம் என்று எழுதி இருந்தோம்.
அறைகூவலை சந்திக்கத் திரானி இல்லாத பழ்லுல் இலாஹி
அவர்களது சவாலை ஏற்று இருந்தும் அறைகூவலை சந்திக்கத் திரானி இல்லாத பழ்லுல் இலாஹி என்ற கடும் வார்த்தையை வரம்பு மீறி முதன் முதலில் குறிப்பிட்டுள்ளவர்கள் ஷhர்ஜா பி.ஜே. அணியினர். தெரியாமல் எழுதி இருப்பார்கள் என்ற நல் எண்ணம் வைத்து சவாலை ஏற்று எழுதிய கடிதத்தை அனுப்பி வைத்தோம்..

வரம்பு மீறிய தடித்த வார்த்தையை இன்று வரை வாபஸ் பெறவில்லை. இன்றும் முக்காடு போட்டுக் கொண்டு நடு நிலை வேஷமிட்டு பேச்சு வாக்கில் கொடுப்பது போல் பெட்டியில் உள்ள பிரசுரங்களை எடுத்துக் காட்டும் வேலையையும் பிரசுரங்களை ஆங்காங்கு வைத்து விட்டு வரும் பணியையும் விடவில்லை.

எனவே அவர்களைப் பார்த்துக் கேட்கிறேன். அந்தப் பிரசுரத்தை கம்யூட்டர் டைப் செய்தவரையும் வினியோகித்தவர்களையும் பார்த்துக் கேட்கிறேன். உங்களுக்கு தெம்பு இருந்தால் திரானி இருந்தால்; மானம் - ரோஷம் - சூடு - சுரணை இருந்தால் நீங்கள் அணிந்துள்ள கீழாடை மானத்திற்காகத்தான் என்பது உண்மையானால் பிரசுரத்தில் குறிப்பிட்டுள்ள அறைகூவலை ஏற்று பி.ஜே.க்கு அனுப்பி உள்ள கடிதத்தில் உள்ளபடி சவாலை சந்திக்க உங்கள் தலைமையின் பிடரி மயிரை பிடித்து இழுத்து வாருங்கள். இந்த வார்த்தை உங்களுக்கு மட்டுமல்ல முன் பின் என்ன நடந்தது என்று தெரியாமலேயே என்னைப் பற்றி சமூக விரோதக் கும்பல் வெளியிட்ட அவதூறுப் பிரசுரங்களை அச்சிட்டு, காப்பி எடுத்து வினியோகித்தவர்கள் அமைப்பாக இருந்தாலும் தனி நபராக இருந்தாலும் அத்தனை பேருக்கும் இது பொருந்தும்.

சவாலை ஏற்று எழுதி உள்ள கடிதத்தில் உள்ளபடி முறையான ஒப்பந்தத்தை எழுத்து மூலமாக தரட்டும் பத்திரிக்கையில் வெளியிடட்டும் மேடையில் பேசி காசு வாங்கி விட்டு இல்லை என்போரின் முகத்திரையை முறையாகக் கிழிப்போம். குணங்குடி ஹனீபாவின் த.மு.மு.க.வில் பி.ஜே.க்கு அமைப்பாளர் பதவி பி.ஜேயின் சுய நலனுக்காகத்தான் கொடுக்கப்பட்டது என்பதை நிரூபிப்போம். நிரூபித்து விட்டால் ஆரம்ப காலத்தில் தோன்றியதுதான் தக்வாவின் அடிப்படையிலானது என்ற குர்ஆனின் கூற்றுப்படி ஆரம்ப கால தலைமையின் கீழ் வந்து விட வேண்டும் தயார்தானா?

அறைகூவலை ஏற்று எழுதி உள்ள கடிதத்தில் உள்ள இன்னொரு பகுதி இங்கே மீண்டும் நினைவுக்கு கொண்டு வருகிறோம். உங்கள் கூற்றுக்கு பொய் சாட்சி சொல்பவர்களும் சரி நீதியை நிலை நாட்ட எனது கூற்றை உண்மைப் படுத்துபவர்களும் சரி. இந்த விவகாரத்தில் இருந்து ஒதுங்க எண்ணி தெரியாது, மறந்து விட்டது என்று சமாளிக்க எண்ணுபவர்களும் சரி. எதைச் சொன்னாலும் எதிர் தரப்பு ஏற்றுக் கொள்ளாவிட்டால், இதில் நாங்கள் பொய்யர்கள் என்றால் அல்லாஹ்வின் சாபம் எங்கள் மீது இறங்கட்டுமாக என்று துஆச் செய்ய வேண்டும்.. ... (இதற்கு) தயார் என்று அனைவரும் கையெழுத்திட்ட கடிதம் வர வேண்டும்.

...இந்த நிகழ்ச்சி சி.டி. வீடியோ வியாபார நோக்குடன் ரூமுக்குள் வைத்து நடத்தக் கூடாது. பொது மக்கள் முன் பகிரங்க மேடையில் மேலப்பாளையத்தில் நடத்த வேண்டும். இந்நிகழ்ச்சி பற்றி சமுதாயத்தின் அனைத்து பத்திரிக்கைகளிலும் விளம்பரம் செய்ய வேண்டும். நீங்கள் உங்களை உண்மையாளர்களாகக் காட்ட எந்த நிதியிலிருந்து இலவச சி.டி.யும் கேஸட்களும் வெளியிட்டீர்களோ! அந்த நிதியிலிருந்து இந்த நிகழ்ச்சிக்கு ஆகும் அனைத்துச் செலவுகளையும் செய்ய வேண்டும். உங்கள் தரப்பிலிருந்து மேலே கூறி உள்ளபடி ஒப்புதல்; கடிதம் கிடைத்த உடன் அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் சரியான கால அவகாசத்தடன் நிகழ்ச்சி பற்றிய தேதியை நிர்ணயிப்போம்... ...

மீண்டும் தெம்பு இருந்தால் ... பாராவை படித்துக் கொள்ளவும். வஸ்ஸலாம்.
கா.அ.முஹம்மது பழ்லுல் இலாஹி,
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக வளைகுடா அமைப்பாளர் எக்ஸ்

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.