இந்த இழி பிறவி ஓர் உதாரணம்

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு ! 10:16 PM  செங்கிஸ்கான்........  

மேற்குறிப்பிட்ட பழமொழி ஏட்டளவுக்கு பழமையாக இருந்தாலும் இன்றைய சமகால சூழ்நிலையில் பலருக்கு கனகச்சிதமாக பொருந்தும் குறிப்பாக ஏகத்துவம் பேசி கொண்டு ஏகாதிபத்திய உணர்வோடு செயல்படும் பிதற்றல் ஜென்மங்களுக்கு நிறையவே பொருத்தமாக இருக்கும் 

அல்லாஹ்வின் ஆற்றலை பற்றி பிறருக்கும் உரைக்கும் போது அற்புதமாக பேசும் இவர் ஏகத்துவம் பேசும்போது மட்டும் அல்லாஹ்வின் ஆற்றலை மீறி அல்லாஹ்வுக்கே உண்டான தனித்தன்மையான உள்ளங்களை உளவு பார்க்கும் தன்மையை தனக்குண்டாக்கி ஏகத்துவத்திலிருந்து வெளியேறியவர்கள் என்ற பட்டியல் தயாரித்த மாமேதை பரிசுத்த மகான் ? இன்றைய பிதற்றல் ஜென்மத்தின் (பீ.ஜையின்) அவதூறு பிரச்சாரத்தை பற்றிதான் இந்த கட்டுரை :

காலங்கள் பல சென்றாலும் நிகழ்வுகள் நித்தம் நம்மை பின் தொடர்ந்து வரும் ! மறுமை நாளில் அல்லாஹ்வின் நீதிமன்றத்தில் அனைவரும் நிறுத்தப்படும் நாள் மிக சமீபத்தில் தான் உள்ளது. விசுவாசிகள் இதை நன்கு அறிந்து இருப்பார்கள்.

ஏகத்துவத்தை பிறருக்கு எடுத்து சொல்வதில் மட்டும் கவனம் செலுத்தும் பிதற்றல் ஜென்மம் அதன்பால் சார்ந்து வாழ்வதை அறவே புறந்தள்ளி வருவதை உலகம் நன்கு அறிந்ததுதான். 

இஸ்லாத்தின் கட்டாய கடமைகளின் பிரதான கடமையான தொழுகையைக்கூட சரிவர நிரைவேற்ற முடியாத இந்த பிதற்றல் ஜென்மத்தின் சமீபத்திய கூற்று பிறரை பின்தொடர்ந்து ஆராய்வது தான் 

நபிகள் நாயகம் (ஸல்...) அவர்கள் பிறரின் குறைகளை ஆராய்வதை விரும்பாதவர்கள் அதிலும் அவதூறை முற்றிலும் விரும்பாதவர்கள். நபிகளாரை போற்றி பேசும் இந்த பிதற்றல் ஜென்மம், மறந்தும் கூட அவர்களின் நெறிமுறைகளை பின்பற்றுவதில்லை. 

மாறாக பிறரின் தவறுகளை ஆராய்வதில்தான் தன்னுடைய வாழ்வின் பெரும் பகுதியை செலவளித்து இருக்கிறார். இதற்கு கடந்த கால வரலாறுகள் சான்று பகரும்.

இப்ராஹீம் நபியின் வீர வரலாற்றை பலர் நன்கறிந்திருப்பார்கள். அவர்களின் பாணி காபிர்களின் (நிராகரிப்பாளர்களின்) இடத்திற்கே சென்று ஏகத்துவத்தை போதிப்பது தான் இப்ராஹிம் நபியின் வரலாற்றை பேச சொன்னால் மணி கணக்கில் பேசும் இந்த பிதற்றல் ஜென்மம் அவர்கள் பானியில் பிறர் செயல்படுவதை விரும்பாதவர் காரணம் தன்னுடைய ஏகத்துவம் அன்டு கோ. மட்டும்தான் பிற மக்களுக்கு போதிக்க வேண்டும் மற்றவர்கள் போதிக்க, இல்லை இல்லை இருக்கவே கூடாது என்பதில் மிகவும் கவனமாக செயல்பபட்டு வருபவர்தான் இந்த பிதற்றல் ஜென்மம்.

இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் சமுதாய பணி கண்டு தாங்க முடியாத இந்த பிதற்றல் ஜென்மம் தன்னால் பழி சுமத்தி வெளியாக்கப்பட்டவர்கள் தடம் தெரியாமல் போய் விடுவார்கள் என்ற உள்ளக் களிப்பில் தன்னை மறந்து இருந்த நிலையில் எதிர்பாராதவிதமாக உதித்தது. இந்திய தவ்ஹீத் ஜமாஅத் 

இதனை சற்றும் பொறுக்க முடியாத இந்த பிதற்றல் ஜென்மம் எப்படியாவது இதன் வளர்ச்சியை தடுத்து நிருத்த தன்னால் முடிந்த அனைத்து சூழ்ச்சியையும் ? செய்ய துணிந்தார் கேவலம் மிஞ்சியது அவமானம்தான் டிசம்பர் 6ஐ கொச்சைபடுத்தி பார்த்தார் அதிலும் தோல்விதான் மீடியாக்கள் சூழ்ந்து நடந்த போராட்டம் என்பதால் உலகம் கண்டு கொண்டது இந்த இழிசெயல் பிறவியின் எழுத்து விபச்சாரத்தை.

தற்போது மற்ற சகோதரர்களின் மேடை ஏறி ஏகத்துவத்தை மொழிந்துவிட்டு வந்திருப்பவரை பார்த்து பொருக்க முடியாமல் தனக்கே உண்டான பாணியில் கொச்சை படுத்தியிருக்கிறார். இந்த இழி பிறவி, 

சிலை வணக்கம் கூடாது என்று சிற்பங்கள் இருக்கும் இடத்தில் சென்று உறைப்பது வீரமா ! 

அல்லது நம்மவர்களின் செலவில் மேடை அமைத்து நமக்கு மத்தியில் பேசுவது வீரமா ! 

 ஆணவமும் காழ்ப்புணர்வும் ஆதிக்க மனப்பான்மையும் அதிகரிக்கும்போது ஆற்றல்மிகு மூளையும் திறனற்று போய்விடும் என்பதற்கு இந்த இழி பிறவி ஓர் உதாரணம் 
இனியாவது பிறர் புறத்தை நுகர்ந்து பார்க்காமல் சரிவர நடக்குமா இந்த பிதற்றல் ஜென்மம் பொருத்திருந்துத்தான் பார்க்க வேண்டும்.
தோலுரிப்பது தொடரும்....
இப்படிக்கு
இறையடியான்

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.