5 வேளை தொழாதவர் பீ.ஜை என இப்போது சொல்வதேன் ? உட்பட 10கேள்விகளுக்கு பதில்

பொதுவான முஸ்லிம்களுக்கு.......


இணையதளத்தில் ஒரு நபர் பொதுவான முஸ்லீம் ஏகத்துவத்தின் எழுச்சியை மட்டுமே விரும்புவன் என்ற முறையில் சில கேள்விகளை வைத்துள்ளார். இவர் பொதுவானவராக இருந்தால் இரு தரப்புக்கும் கேள்வி வைத்திருப்பார். 

ததஜவினர் நம்மைப் பார்த்து கேட்ட கேள்வியைத்தான் இவரும் வைத்திருக்கிறார். என்பதனால் இவர் பொதுவான நபர் என்பது முதலில் தவறு இருப்பினும் இந்த கேள்விகளுக்கு பதில் அளிப்பதன் மூலம் உண்மையான பொதுவான முஸ்லிம்களுக்கு செய்தி சென்றடைய நமக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தந்தமைக்காக அவருக்கு நன்றி கூறுகிறோம்.

1.குற்றம் சுமத்தி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள் தாங்கள் குற்றமற்றவர்கள் களங்கத்தை துடைக்க ஏன் பாடுபடவில்லை என்கிறார் 

குற்றத்தை சுமத்தியவர்கள் தான் குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும் ! குர்ஆன் ஹதிஸ் அடிப்படையில் குற்றத்தை நிரூபிக்காமல் வெளியேற்றிவிட்டு நீங்கள் தான் நிருபித்து களங்கத்தை துடைக்க வேண்டும் என்பது எந்த ஊர் நியாயம். குற்றமற்றவர் என்று குற்றம் சாட்டபட்டவர்கள் நிரூபிக்க வேண்டும் என்பதற்காக தானே பொடா சட்டத்தை எதிர்த்தோம். 

உடனடியாக புதிய இயக்கம் ஆரம்பித்தது ஏன்? என்கிறார் இந்த கேள்வியை ஜாக், தமுமுக உடைத்த போது பொய் பிஜே அவர்களை கேட்டு இருக்க வேண்டும் தனி நபரை தூக்கி எறிந்தால் அவர் இயக்கம் கட்ட மாட்டார் அவரோடு சேர்த்து நியாயம்கேட்ட அனைவரையும் தூக்கி எறிந்தால் அவர்கள் அனைவரும் சேர்ந்து கட்டுவதுதான் சரியாகும் ! ஏனென்றால் அப்போது தான் நன்மை ஏவி தீமையை தடுக்கும் குழுவாக செயல்பட முடியும்.

2. வசைபாடிய தமுமுக வோடு எப்படி ஒரே மேடையில் அமரலாம் ?
மற்றவர்களின் குற்றம் குறைகளை மன்னித்து மறந்து ஒரு பொதுப்பிரச்சனைக்காக ஒரு முஸ்லிம் சகோதரத்துவத்துடன் கைகோர்ப்பதை மார்க்க அடிப்படையில் எப்படி தவறு என்று சொல்வார்கள் குர்ஆன் ஹதிஸ் அடிப்படையில் தவறு என்றால் ஏற்றுக் கொள்கிறோம். பகை வளர்க்கும், பிரித்தாலும் பிஜேவின் கொள்கையை ஏன் ஐஎன்டிஜே பின் பற்ற வேண்டும்.

உங்களுக்கும் எங்களுக்கும் மத்தியில் உள்ள பொதுவான விஷயங்களில் பேச யூதர்களையும் கிறிஸ்துவர்களையும் அழைக்கச் சொல்லி அல்லாஹ் திருமறையில் கூறும்போது முஸ்லிம்களோடு ஒரு பொதுவான விஷயத்தில் ஏன் ஒன்று படக்கூடாது ?

3. துரத்தியடித்த பின்னர் ஜமாத்தே இஸ்லாமி மாநாட்டில் கர்ஜித்ததேன் ?
துரத்தி கர்ஜிப்பு என்ற வார்த்தைகள் மூலமாக உங்களுடைய பொதுவான முஸ்லிம் என்ற பொய் முகம் கிழிகிறது.

ஜமாத்தே இஸ்லாமி மாநாட்டில் கலநத கொள்வது குர்ஆன் ஹதிஸ்படி குற்றமா? ஆடுகோழி தடைச்சட்டம் போன்ற பிரச்சனைகளுக்காக பிற மதத்தை சேர்ந்தவர்களுடன் டிஎன்டிஜே காலத்தில் மேடையேறி உள்ள போது முஸ்லிம்களோடு மேடை ஏறுவதில் என்ன தவறு ?

4. சம்சுதின் காஸிமிக்கும் ததஜ விற்கும் உள்ள உறவு தெரிந்தபின்னும் மக்கா பள்ளி சென்று மைக் பிடித்ததேன் ?
சம்சுதீன் காஸிமிக்கும் ததஜவிக்கும் உள்ள உறவை இதஜ ஏன் கடை பிடிக்க வேண்டும்? பீஜே என்ன நபியா ? அல்லாஹ்வின் கட்டளைப்படி மூன்று நபித் தோழர்களை புறக்கணித்து சமூக பகிஷ்கரிப்பு செய்ததுபோல் அவருக்கு பிடிக்காதவர்களோடு நாங்களும் பேசாமல் இருப்பதற்கு, மக்கா பள்ளியில் மைக்பிடித்ததில் மார்க்க ரீதியாக என்ன தவறு என கூறாமல் தனிநபர் விரோத போக்கை ஏன் எங்கள் மீது திணிக்கின்றீர்கள் ?

5. பிஜே தொழுகையை பற்றி இப்போது சொல்வதேன் ?
“உள்ளுக்குள் இருந்த போராடுவதற்கு என்று ஒரு நிலை இருக்கிறது. நாம் சொல்லி சுட்டிக் காட்டிக் கொண்டுதான் இருந்தோம் ! சொல்லித்திருந்தாதநிலை வரும்போது, இதற்கு மேல் உள்ளேயிருந்த சொல்ல முடியாது என்றே நிலை வரும் போது வெளியிருந்து சொல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது

.” மேலே சொன்ன வார்த்தைகள் ஜாக், தமுமுக தலைவர்களை வெளியில் வந்து விமர்சிக்கின்றிர்களே அப்போது ஏன் சொல்லவில்லை ? என்ற கேள்விக்கு பி.ஜெ சொன்ன பதில் ! அண்ணனின் வார்த்தைகளை அப்படியே இரவலாக பெற்று உங்களுக்கு கேள்விக்கு பதிலாக்குகிறோம்.

6. கொல்லைப்புற வழியாக வந்து மேலாண்மை செய்வதை இப்போது சொல்வதேன் ? 
இந்த கேள்விக்கும் மேற்சொன்ன பதிலையே பதிலாக்குகிறோம் உங்கள் பாணியில் குற்றம் சாட்டப்பட்டவர்தான் களங்கத்தை துடைக்க வேண்டும் என்றால் பதவி ஆசை இல்லை என்று நிரூபிக்க மேலாண்மை பதவிகளை விட்டுவிட்டு மீண்டும் மனம் திறந்த மடல் எழுதி விட்டு ஒதுங்கி இருக்கட்டும்.

7. இத்தனை ஆண்டுகளாக தக்லீதுக்கு துணை போனீர்களா?
தற்போது மோசடி மன்னனாக பாலியல் கொடூரனாக, வழிகேடனாக, மார்க்கம் அறியாத மூடனாக, குறைகுடமாக தெரியும் பாக்கர் 2009 ஜனவரி வரைக்கும், புதிய தலைவர் எம்.ஐ. சுலைமானுக்க பீஜே எழுதிய கடிதத்தில் இந்த இயக்கத்தின் முன்மாதிரி என்றும் கூறுமளவுக்கு ரோல்மாடலாக பிஜேவின் கண்ணுக்கு பாக்கர் தெரிந்தது தக்லீது என்றால் நாங்களும் தக்லீதில் தான் இருந்திருக்கின்றோம் பாக்கரை காரணியாக்கி தக்லீதில் இருந்த தப்பவைத்த அல்லாஹ்விற்கே புகழ்அனைத்தும்.

8. பி.ஜேவுக்கு ஜால்றா அடித்த உங்களுக்கு இப்போது வில்லனாக தெரிவது ஏன்?
உங்களின் இந்த கேள்விக்கும் மேலே உள்ள பதிலே போதுமானது. “பாக்கர் மட்டும் இல்லையென்றால் நான் வெறும் பயான் செய்பவனாக இருந்திருப்பேன் பாக்கர் தான் இந்த இயக்கத்தை கட்டமைத்தவர் பாக்கர் தான் வசூல் மன்னன். இந்த மர்கஸ் ஆபிஸ் தாஃவா சென்டர் அனைத்தும் உருவாக அவர் தான் காரணம்” என்றெல்லாம் ஜால்ரா அடித்து காரியம் முடிந்ததும் பாக்கர் வில்லனாக தெரிவது ஏன்? என்பதையும் நீங்கள் சிந்திக்க வேண்டாமா?

9. கேள்வி : தற்போது வசைபாடும் நீங்கள் அப்போது உடந்தை தானே ?
ஜமாத்தை வைத்து சம்பாதித்தார், ஹஜ் சர்வீஸ் நடத்தி சம்பாதித்தார், சிடி விற்று சம்பாதித்தார். தமுமுக காலத்திலிருந்து உள்ள குற்றச்சாட்டையெல்லாம் வெளியேற்றும் வரை சொல்லாத பிஜே பாக்கரின் பொருளாதார பாலியல் குற்றங்களுக்கு துணை போனாரா? என்ற கேள்வியும் எழுப்பினால் தான் பொதுவான சிந்தனை என்பதையும் கூறிக் கொள்கிறோம்.

10. கேள்வி : கழுத்தை பிடித்து தள்ளும் வரை கண்ணில் திரை (பர்ஸக்) இருந்ததா?
ஒரே கேள்வியை திரும்ப திரும்ப வேறு வார்த்தைகளில் கேட்டால் ஒரே பதில்தான் வரும். பிஜேவை கழுத்தை பிடித்து தமுமுக தள்ளிய பிறகுதான் நாம் கேட்டோம். இப்போதும் அதேபோல தான் கேட்கிறோம் எனவே உங்களின் சிந்தனைக்கு போடபட்டுள்ள பர்ஸக்கை அகற்றிவிட்டு பாடுங்கள் உண்மை புரியும்.

இன்ஷா அல்லாஹ் நாங்கள் அல்லாஹ்விற்கு பயந்து பதில் கூறியுள்ளோம் ! நீங்கள் அல்லாஹ்விற்கு பயந்து இரு சாரரிடமும் கேள்வி எழுப்புங்கள் அப்போது தான் உண்மை புரியும் ஒரு சாரரின் வாதங்களை மட்டும் கேட்டுவிட்டு முடிவெடுப்பது முன் முஃமினின் பண்பல்ல ! 

தீயவன் ஒரு செய்தியை கொண்டு வந்தால் தீர விசாரித்து கொள்ளுங்கள் இல்லையேல் அறியாமையால் ஒரு கூட்டத்தாருக்கு தீங்கிழைத்து விட்டு பின்னர் வருந்தக்கூடும் (அல்குர்ஆன்)

இன்ஷா அல்லாஹ் தமிழகத்தில் பல ஜமாஅத்துக்கள் உருவாக காரணமாகவும் தவ்ஹீத் வாதிகளை தனிதனியாக துண்டுதுண்டாக்கி “தானே நூலை விற்று பின் துண்டாக்கிய வளை போல்” என்று அல்லாஹ் கூறுவதைப் போன்று 

தன்னுடைய அகம்பாவத்தினாலும் தன்னைத் தவிர தலைவன் இல்லை என்ற அகந்தையாலும் பிரித்தாலும் சூழ்ச்சி மூலம் மக்களை பிரித்து மார்க்கத்தை பிரித்து, இயக்கத்தை பிரித்து, தனி கொள்கை, தனிப்பள்ளி, தனி இயக்கம் ஏன் தனி மத்ஹப் என்ற நிலையை எல்லாம் கடந்து 

தனிமதம் என்கிற ரீதியில் செல்லும் அண்ணனால் விரைவில் அங்கிருந்தே உலக தவ்ஹீத் ஜமாஅத், பேரண்ட தவ்ஹீத் ஜமாஅத் எல்லாம் உருவாகும் தமிழீழ விடுதலைக்காக, தன்னை தவிர யாரும் போராடக்கூடாது. என்று கொள்கை சகோதரர்களை எல்லாம் கொன்றொழித்துவிட்டு தானும் அழிந்த பிராபாகரன் போல் பிஜே செயல்படும் வரை புதிய இயக்கங்கள் தோன்றுவதை தடுக்க முடியாது.

கொள்கைக்காக தான் இயக்கங்கள் ஆனால் நீங்கள் சிந்தித்துபாருங்கள் தமிழகத்தில் கொள்கைச் சகோதரர்களிடையே ஏற்பட்ட பிரிவுகள் அனைத்திற்கும் ஒருவர் தான் மூலகாரணமாக இருந்துள்ளார் இதன் மூலம் பிரிவினையின் ஊற்றுக்கண் பிஜே என்பதை உணரலாம். 

தன்னோடு இருக்கும்வரை உத்தமர்கள். பிரிந்தபின் கொள்கை சகோதரர்களையெல்லாம் கொள்கை தவறியவர்கள் என்றும், தவ்ஹீத்வாதிகள் அனைவரையும் தடம்புரண்டோர் என்றும் அல்லாஹ்வின் அதிகாரத்தை கையிலெடுத்து பட்டியலிடுவது யார் என சிந்தியுங்கள் ? 

ஒரே கொள்கையை சொல்வதற்கு இரண்டு இயக்கங்கள் தேவையா ? 

இதே கேள்வியை ஜாக்கிலிருந்து அண்ணன் பேச்சைக் கேட்டு வெளியேறிய போதும் தமுமுகவிலிருந்து வெளியேறிய போதும் கேட்டிருந்தால் அது சிறப்பாக இருந்திருக்கும் கொள்கை ரீதியாக விமர்சிக்காமல் தனி மனித விமர்சனங்களை, தனி மனித தாக்குதலை துவங்குவது ததஜ தான் என்பது சமுதாயத்தை உற்று நோக்கும் நடுநிலையாளர்களுக்கு நன்கு தெரியும். 

பதிலுக்கு பதில் என்கிற ரீதியில் சில நேரங்களில் இதுபோன்ற நிலை ஏற்படுகிறது நாம் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை எதிரிதான் தீர்மானிக்கிறார்கள் என்கிற தத்துவப்படி சில நேரங்களில் நாமும் அதே ஆயுதத்தை கையில் எடுக்கும் உணர்ச்சி மிகு சூழல் ஏற்பட்டு விடுகிறது. 

இன்ஷா அல்லாஹ் இனிவரும் காலங்களில் இயன்ற வரை தவிர்க்க முயற்சிக்கிறோம். நம்முடைய இலக்கு மார்க்கத்தை மாமறைகுர்ஆனை மக்களுக்கு தூயவடிவில் எடுத்து சொல்வதுதான் அந்த பணி தொய்வின்றி நடைபெற்று வருகிறது. நம் அனைவருக்கும் நேர் வழியில் தொடர்ந்து நடக்க அல்லாஹ் நல்லருள் புரியட்டும் ! ஏகத்துவம் மட்டுமே எழுச்சி பெறட்டும் !

- இப்னு ஹூசைன் 

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.