தவ்ஹீதி என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று சொன்னது அந்தக் காலம்.


தவ்ஹீதி என்று சொன்னால் தலை குனிந்து நில்லடா என்பதாக ஆனது இந்தக் காலம்.


கடலூர் த.த.ஜ. நிர்வாகிகள் இப்பொழுது அனுப்பி வரும் மெயில்களை பார்த்து வருகிறீர்கள். 16.06.2007 தேதியில் பி.ஜெ.யுடன் முபாஹலாவுக்கு தயார் என கடைசியாக வந்த மெயிலை நமது பிளாக்கரிலும் இடம் பெறச் செய்துள்ளோம். http://mdfazlulilahi.blogspot.com/2007/06/blog-post_06.html இதை கிளிக் செய்து பார்த்துக் கொள்ளவும்.

அடுத்து வரும் விமர்சனத்தை படிக்கும் முன் அது நான் எழுதியது அல்ல என்பதை முதலில் உங்கள் மனதில் பதிந்து கொள்ளுங்கள். அது யார் எழுதியது எப்பொழுது எழுதியது என்ற விபரமும் கீழே உள்ளது முதலில் விமர்சனத்தைப் படியுங்கள்.

சமீபத்தில் மவ்லவி -- செய்திருக்கின்ற இறையச்சமில்லாத காரியத்தை உங்களுக்கு தெரியப் படுத்தவே இக்கடிதம் எழுதுகிறேன். -- -- அவர்களை துணைக்கு வைத்து மவ்லவி -- -- நிகழ்த்தி இருக்கிற நேர்மையற்ற செயல்களை சொல்லுவதற்கு முன்

நமது தவ்ஹீத் ஜமாத்தார்களே நம்மை விமர்சனம் செய்வார்களே! மற்றவர்கள் நம்மை சிறுமை படுத்தி பேசுவார்களே! அது நமது பிரச்சாரத்தை பெரிய அளவில் பாதிக்குமே! என்ற உணர்வு கொஞ்சம் கூட இல்லாமல் மவ்லவி -- -- செய்திருக்கிற இச்செயலை எழுதுவதற்கு முன்னால், இதற்கு தொடர்பு உள்ள சில சம்பவங்களை முதலில் விவரிக்கிறேன்.

இனிமேல் எழுதப்போகின்ற செய்திகளை மனிதன் என்ற அடிப்படையில் எந்தவித சுய விருப்பு, வெறுப்பு இல்லாமல் இறையச்சத்தோடு எழுதுகிறேன் என்று அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு மேலே தொடர்கிறேன். 

இந்த  பீடிகையுடன் 01-02-2004 அன்று 9 பக்க அளவில் ஒரு மெயில் வந்தது. ஒரு தவ்ஹீத் பள்ளி தலைவரின் முரண்பாடுகள் பற்றி பெயர் குறிப்பிட்டு விமர்சனம் செய்யப்பட்டிருந்தது. அந்தக் கடிதம் மதிப்பிற்குரிய வெளிநாட்டில் வாழும் மேலப்பாளையம் தவ்ஹீத் ஜமாத்தார்களுக்கு, ராவுத்தர் மேலத்தெருவைச் சார்;ந்த இமாம் எழுதுவது என்று துவங்கி இருந்தது. 

அந்த மெயில் தனியாக ஒரு வெப் சைட்டிலும் போடப்பட்டிருந்தது. நாமும் http://mdfazlulilahi.blogspot.com/2004/02/blog-post.html என்ற நமது பிளாக்கரிலும் இடம் பெறச் செய்திருந்தோம்.

அந்த மெயிலில் விமர்சிக்கப்பட்டவர்களுக்குப் பதிலாக சிலரது பெயர்களை அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. அவர்களில் சிலரைத் தவிர பெரும்பாலானவர்கள் அந்த விமர்சனத்துக்கு உரியவர்களாக மட்டுமல்ல அதைவிட கேடானவர்களாகவும் கேடுகெட்டவர்களாகவும் இருக்கிறார்கள் அல்லது ஆகி இருக்கிறார்கள் என்பதே இன்றைய நிலை.

தர்கா, தரீகா, மத்ஹபுகள் பெயர்களால் நடை பெற்று வரும் ஷிர்க் பித்அத் போன்ற மார்க்க விரோத செயல்களை ஒழிக்கப் புறப்பட்டுள்ளதாகவே தவ்ஹீதுவாதிகள் என்போர் தங்களை சமுதாயத்துக்கு அடையாளம் காட்டினார்கள். 

தங்களது சுய நல போக்குகளால் தக்வா எனும் இறையச்சமற்ற செயல்களால் ஷிர்க் பித்அத் போன்ற மார்க்க விரோத செயல்கள் மட்டுமல்ல ஒட்டு மொத்த மனித சமுதாயத்திற்கே விரோதமான செயல்கள் நடைபெறவும் துணை போய்க் கொண்டிருக்கிறார்கள்.

கடலூர் மாவட்ட முன்னால் த.த.ஜ. நிர்வாகிகள் வெளிநாடுகளில் டிஎன்டிஜே பெயரைச்சொல்லி ரூபாய் இருபது லட்சம் வசூல் செய்து சரியாக கணக்கு காட்டாமல் மோசடி செய்துவிட்டதாக பி.ஜெ. குற்றச்சாட்டுக் கூறியுள்ளார்

பி.ஜெ. இப்படி குற்றச்சாட்டுக் கூறியதும் கடலூர் மாவட்ட முன்னால் த.த.ஜ. நிர்வாகிகள் கொதித்து எழுந்துள்ளார்கள். இதே மாதிரியான குற்றச்சாட்டுக்களை பி.ஜெ. பிறர் மீது கூறி வந்தபொழுது நீதியை நிலை நாட்ட தக்வா எனும் இறையச்சத்தோடு அவர்கள் தட்டிக் கேட்கத் தவறி விட்டார்கள். இதை கடலூர் மாவட்ட முன்னால் த.த.ஜ. நிர்வாகிகள் இப்பொழுது நினைத்துப் பார்த்து வருந்தாமல் இருக்க மாட்டார்கள்.

2000 செப்டம்பர் 17 ஆம் தேதி ஹாமித் பக்ரி உட்பட சில மவுலவிகள் நமது வீட்டுக்கு வருகை தந்து காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பி.ஜெ.யின் மார்க்க மற்றும் சமுதாய விரோத செயல்களை பட்டியலிட்டார்கள். 

அதற்கு எதிரான நடவடிக்கைகளை செய்ய வேண்டும் என்றார்கள். திட்டம் வகுத்தார்கள். அதை செயல்படுத்த நம்மை முற்படுத்தினார்கள். மவுலவிகளை நம்பி திட்டமிட்டபடி செயல்பட்ட என் மீது பி.ஜெ. மோசடி குற்றச்சாட்டு கூறினார். 

அப்பொழுது யாருமே தட்டிக் கேட்கவில்லை. திட்டம் வகுத்த மவுலவிகள் அனைவருமே பல்டியடித்திருந்த விபரம் ஒண்ணரை ஆண்டுகள் கழித்தே நமக்கு தெரிந்தது.

அதே நேரத்தில் ஹாமித் பக்ரி அவர்களுக்கும் அவர்களுடனிருந்த மவுலவிகளுக்கும் சோதனை வந்தபொழுது பி.ஜெ.யின் மிரட்டல்களுக்கு அஞ்சாமல் அல்லாஹ்வின் அருளால் பகிரங்கமாக குரல் கொடுத்தேன். 

2000 செப்டம்பர் 17 ஆம் தேதி திட்டம் வகுத்த மவுலவிகள் பல்டியடித்திருந்த செய்தி ஒண்ணரை ஆண்டுகள் கழித்தே நமக்கு தெரிந்தது. சமுதாய விரோதச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பொழுது திட்டம் வகுத்தவர்கள் திட்டம் வகுத்தபொழுதே இரட்டை வேடம் போட்டுள்ளார்கள். 

அவர்களை உடனே அல்லாஹ் அடையாளம் காட்டி விட்டான். ஹாமித் பக்ரி அவர்களுக்கும் அவர்களுடனிருந்த மவுலவிகளுக்கும் வந்த சோதனை இவர்களுக்கு வராது என செயல்பட்டு வருகின்றனர்.

தவ்ஹீதி என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று சொன்னது அந்தக் காலம். தவ்ஹீதி என்று சொன்னால் தலை குனிந்து நில்லடா என்பதாக ஆனது இந்தக் காலம் ஆகி விட்டது. தர்கா, தரீகா, மத்ஹபுகள் பெயர்களால் ஷிர்க் பித்அத்களை செய்து வருபவர்கள் அதை மார்க்கம் என்று நம்பித்தான் செய்து வருகிறார்கள். நாமும் ஒரு காலத்தில் அப்படி இருந்தவர்கள்தான். எந்த பிரச்சாரங்கள் மூலம் நாம் வென்றெடுக்கப்பட்டோமோ அதே பிரச்சாரத்தின் மூலம் இவர்களை வென்றெடுக்கலாம்.

ஷிர்க் பித்அத்களுக்கெதிரான பிரச்சாரங்களை சவூதியில் அரசாங்கமே செய்து வருகிறது. எனவே சவூதி போன்ற நாடுகளில் சட்டத்தின் முன் நிறுத்தியும் ஷிர்க் பித்அத்களை தடுக்க முடியும். இன்று நபி என்று வாதிப்பவர்களை எல்லா முஸ்லிம் நாடுகளும் தண்டிக்கும். மார்க்கத்தின் பெயரால் மாந்ரீக வியாபாரம் செய்பவர்களை சவூதி தவிர வேறு எந்த முஸ்லிம் நாடுகளும் தண்டிக்காது. அது போல்தான் ஷிர்க் பித்அத்வாதிகளை இந்திய சட்டத்தின் முன் நிறுத்தி திருத்த முடியாது.

ஆனால் மார்க்கத்தின் பெயரால் பாலியல் அசிங்கங்களை செய்து வருபவர்களை இந்திய சட்டத்தின் முன் நிறுத்தி திருத்த முடியும். 

தவ்ஹீதுவாதிகள் என்போர் தங்களது சுய நல போக்குகளால் தக்வா எனும் இறையச்சமற்ற செயல்களால் இதனைக் கண்டும் காணாதது போல் இருக்கிறார்கள். இதற்கு துணை போய்க் கொண்டிருக்கிறார்கள். தர்கா வழிபாடு நிறைந்த மேலப்பாளையத்தில் உள்ள ஒரு தர்காவில் மார்க்கத்தின் பெயரால் சிறுமிகள் பலாத்காரம் காலம் காலமாக நடந்து வருகிறது. ஒத்து வராத சிறுமியை கொன்ற சம்பவமும் நடந்துள்ளது.

அண்டை மாநிலங்களில் நடக்கும் சம்பவங்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தி சி.பி.சி.ஐ.டி. விசாரணை வேண்டும் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று போராடிய த.த.ஜ.வினர் இதனைக் கண்டு கொண்டதே இல்லை. 

தர்கா பக்தியின் பெயரால் குரு செய்து வரும் சிறுமிகள் பலாத்காரத்தை அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் மற்றவர்களும் கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு அந்த குரு அள்ளி அள்ளி வழங்குகிறார். த.த.ஜ.வினர் கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு நேரடியாக அள்ளி அள்ளி வழங்குதில்லை. வேறு வழியில் வழங்குகிறாா்.

த.த.ஜ.வில் நிர்வாகிகளாக உள்ளவர்கள் பெரும்பாலோர் வியாபாரிகளாகவே உள்ளனர். வியாபாரிகளாக உள்ள அவர்கள் தங்களது வியாபாரத்துக்கு பின் பலமாக இருக்கட்டும் என்றுதான் தவ்ஹீது அமைப்புகளில் பள்ளிகளில் நிர்வாகிகளாக உள்ளனர். 

தங்களது வியாபாரங்களில் ஏற்படும் பிரச்சனைகளை ஒட்டி அதிகாரிகளை சந்திக்க நேரிடும்பொழுது தாங்கள் இன்ன தவ்ஹீது பள்ளியின் நிர்வாகி என்றே அறிமுகம் ஆவார்கள். இப்படிப்பட்ட தவ்ஹீது வியாபாரிகளிடம் பக்தியின் பெயரால் சிறுமிகளை பலாத்காரம் செய்து வரும் மத குரு சாமான்கள் வாங்குவார். 

தங்களது சீடர்களை இவர்களிடம் வாங்கச் செய்வார். இந்த அற்ப ஆதாயத்துக்காக தவ்ஹீது பள்ளியின் நிர்வாகிகளாக உள்ள தவ்ஹீது வியாபாரிகள் இதனை கண்டு கொள்வதே இல்லை.

சமீபத்தில் பீடி கட்டுகளின் மீது மண்டை ஓடு போன்ற எச்சரிக்கை படங்கள் இடம் பெற வேண்டும் என்று மத்திய அரசு சட்டம் கொண்டு வர இருந்தது. பீடி கம்பெனிகள் போராட்டம் நடத்தின. அப்பொழுது பீடித் தொழிலுக்கு ஆதரவாக அனைத்து பள்ளிவாசல்களின் கூட்டமைப்பு சார்பாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அல்லாஹ்வின் பள்ளிவாசல்கள் பணத்தில் பீடி கம்பெனிகளுக்கு ஆதரவான சுவரொட்டிகளா? எனவே இதை கண்டிக்க வேண்டும் என்று அன்று காலையிலேயே ஒரு தவ்ஹீது பள்ளியின் நிர்வாகியை போனில் அணுகினோம்.

சரி சுவரொட்டியின் வாசகம் எப்படி இருக்க வேண்டும் என்று எழுதிக் கொண்டு மஃரிபுக்கு வாருங்கள். இன்றே ஏற்பாடு செய்து நாளை காலையிலேயே ஒட்டி விடச் செய்வோம் என்றார். சொன்னபடி மஃரிபுக்குச் சென்றோம். காலையிலே வேகமாகப் பேசிய அந்த நிர்வாகி பள்ளி நிர்வாகிகளில் ஒருவரின் பெயரைச் சொல்லி அவர் ஒத்து வரவில்லை என்றார். ஏன் என்றதற்கு அவரது நண்பர் ஒருவர் பெயரைச் சொல்லி அவர் பீடித் தொழில்தான் செய்கிறார் எனவே இவர் எதிர்ப்பு தெரிவிக்கிறார் என்றார்.

அப்படியானால் பீடித் தொழிலுக்கு ஆதரவாக அனைத்து பள்ளிவாசல்களின் சார்பாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதை அங்கீகரிக்கிறீர்களா? என்றேன். நாம் தனி அமைப்பு காண்போம் அதன் மூலம் இது போன்ற பணிகளை செய்வோம் என்றார். இருக்கிற அமைப்புகள் காணாதா இனியும் ஒரு தனி அமைப்பா? வேண்டாம் என கூறி விட்டோம்.


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.