பீஜேயுடன் முபாஹலா செய்ய கடலூர் மாவட்ட முன்னால் டிஎன்டிஜே நிர்வாகிகளாகிய நாங்கள் தயார்!

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

முபாஹலாவிலிருந்து தப்பிக்க பொய் புரட்டுகளை கூறும் பீஜே யின் முக மூடியை கிழித்தெறிவோம்!

கடலூர் மாவட்ட முன்னால் டிஎன்டிஜே நிர்வாகிகளாய் இருந்த நாங்கள் டிஎன்டிஜே மாநில தலைவர் பீஜே யை முபாஹலாவுக்கு அழைத்தது 11.03.2007 அன்று லால்பேட்டையில் பாக்கர் பற்றிய ஒழுக்ககேடான விசயத்தைப் பற்றி பீஜே விளக்கமாக அதுவும் பாக்கர் விபச்சாரமே செய்து விட்டார் என்ற அளவிற்கு பேசிவிட்டு பிறகு அதில் சமரசம் செய்து கொண்ட விசயத்திலும் அதனை ஒட்டி நடந்த விசயங்களுக்கு மட்டுமே! உண்மையாளர்களாகவும், உண்மையில் அல்லாஹ்வுக்கு அஞ்சக்கூடியவர்களாய் இருப்பவர்கள், தங்கள் மீது குற்றச்சாட்டு என்று வரும்போது அந்த விசயத்தில் தாம் தூய்மையானவர்தான் என்று நிரூபிக்க வேறு எதனையும் முன்வைக்காமல் நிபந்தனையேதுமின்றி முன்வருவார்கள்..

அதனை விடுத்து குற்றம் சாட்டியவர்களிடம் எதாவது குறை இருக்கிறதா? என்று துருவி துருவி ஆராய்ந்து குறையை தேடி கண்டுபிடித்து அல்லது அவதூராய் எதையாவது அவர்கள் மீது பழி சுமத்தி குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்க எத்தனிப்பவர் மகா பொய்யர் என்பதற்கு இதை தவிற வேறு ஏதும் ஆதாரம் தேவையில்லை. குற்றம் சாட்டியவர்கள் மீது மேலும் மேலும் பொய்களையும், அவதூரறுகளையும், வீன் பழிகளையும் மக்களிடம் கூறி தன்னை நியாயப்படுத்திக்கொள்பவர்கள் அல்லாஹ்வின் தன்டனைக்கு தன்னை தயார்படுத்திக்கொள்ளட்டும்.

கடந்த 03.06.2007 அன்று கடலூரில், பல மாவட்டத்து ஆட்களை அழைத்து வந்து நடத்திய கூட்டத்தில் முபாஹலாவைப்பற்றி பேசிய பீஜே, வழக்கம்போல் முபாஹலாவிற்கு அழைத்தவர்கள் மீது பொய்யான, அவதூரான வீண் பழிகளை அள்ளி வீசி அதற்கும் அவர்கள் முபாஹலா செய்யவேண்டும் என்று கூறி இருக்கிறார். மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு ஆகவே, எங்களுக்கு மடியில் கனமும் இல்லை வழியில் பயமும் இல்லை. அதனால் நாங்கள் பீஜே மீது சொன்ன அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும், மேலும் பீஜே வால் இன்று 04.06.2007 ல் எங்களுக்கு அனுப்பப்படடுள்ள வக்கீல் நோட்டீஸில் குறிப்பிட்டுள்ள, நாங்கள் வெளிநாடுகளில் டிஎன்டிஜே பெயரைச்சொல்லி ரூபாய் இருபது லட்சம் வசூல் செய்து சரியாக கணக்கு காட்டாமல் மோசடி செய்துவிட்டதாக பழி சுமத்தியதற்கும், 03.06.2007 பீஜே கடலூர் கூட்டத்தில் எங்கள் மீது கூறிய அவதூருகளுக்கும் இன்ஷாஅல்லாஹ், பீஜே அறிவித்த 16.06.2007 தேதியில் நெல்லிக்குப்பம் தேவநாதன் திருமண மண்டபத்தில் மாலை 7 மணிக்கு பீஜேயுடன் முபாஹலா செய்ய கடலூர் மாவட்ட முன்னால் டிஎன்டிஜே நிர்வாகிகளாகிய நாங்கள் தயார்! என்பதை இதன் மூலம் பீஜே வுக்கும் மற்றும் சகலமானவர்களுக்கும் அறிவிக்கின்றோம். இது சம்மந்தமாக ஒப்புதல் தபாலையும் பி.ஜைனுல்ஆபிதீன், டிஎன்டிஜே மாநில தலைவர், 30.அரன்மனைகாரன் தெரு, மன்னடி, சென்னை-1 என்ற முகவரிக்கு 05.06.2007 ல் கூரியர் தபால் மூலம் அனுப்பி விட்டோம்.

இப்படிக்கு,
கடலூர் மாவட்ட முன்னால் டிஎன்டிஜே நிர்வாகிகள்.
05.06.2007.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.