J।A.Q.H. மேலப்பாளையம் கிளை பொதுக் குழு அழைப்பு.

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.
ஜம்இய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்
மேலப்பாளையம் கிளை பொதுக் குழு அழைப்பு.
சொல்வீராக! சத்தியம் வந்தது. அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும். (அல்குர்ஆன் 17:81)

பெறுனர்:-



அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
இன்ஷாஅல்லாஹ், நமது ஜம்இய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் மேலப்பாளையம் கிளை பொதுக் குழுக் கூட்டம் ராஜ் மஹால் மண்டபத்தில் 13-11-2005 ஞாயிறு அன்று மஃரிபு தொழுகைக்குப் பின் துவங்குகிறது. J.A.Q.H. ன் நெல்லை மாவட்ட முன்னால் தலைவர் கா.அ. முஹம்மது பழுலுல் இலாஹி தலைமையில் நடை பெற இருக்கும் இந்தக் கூட்டம் இரவு 10 மணி வரை நடைபெறும்.

ஆலோசிக்கப்படும் விஷயங்கள்.

1. புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிர்வாகிகள் உடனடியாக ஆற்ற வேண்டிய பணிகள்.

2. J.A.Q.H.ன் சொத்துக்களை மீட்கும் விஷயத்தில் மறைந்த அமீர் காலித் ஸாஹிப் (றஹ்) அவர்கள் மேற் கொண்ட பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்வு காண்பது என்ற திட்டத்தையே தொடர்வதா? சட்டப்படியான நடவடிக்கைகளை மேற் கொள்வதா?

மேற்கண்ட முக்கிய இரு விஷயங்களுடன் மற்ற விஷயங்கள் தலைவர் அனுமதியுடன் ஆலோசனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறந்த ஆலோசனைகளை வழங்க வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
இப்படிக்கு:-
M.M. சிபகதுல்லாஹ்
அமீர்
ஜம்இய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்
மேலப்பாளையம் கிளை

''அவர்களை எதிர்ப்பதற்காக உங்களால் இயன்ற அளவு பலத்தையும், திறமையான போர்க் குதிரைகளையும் ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள்! இதனால் நீங்கள் அல்லாஹ்வின் எதிரிகளையும், உங்களுடைய எதிரிகளையும், அச்சமடையச் செய்யலாம், அவர்கள் அல்லாத வேறு சிலரையும் அச்சமடையச் செய்யலாம். அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள்! அல்லாஹ் அவர்களை அறிவான்.'' (அல் குர்ஆன் 8:60)

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.