டவுசர் கட்சி முயற்சி படு தோழ்வி. ஆன்மீக ரவுடியின் அட்டகாசங்களுக்கு இனி மரண அடிதான்.

                      பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.                           06-11-2005
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. டவுசர் கட்சி தலைவர் துபை வந்திருந்தார். அப்போது ஜட்டி கூட்டத்தினர் ஏற்பாடு செய்து பகிரங்கமாக அறிவித்த அனைத்து பொதுக் கூட்டங்களும் தடையாயின. தவ்ஹீது பிரச்சாரம் செய்ய வராமல் தான் என்ற அகம்பாவத்தை நிலை நாட்ட வந்தவருக்கு அல்லாஹ் கொடுத்த தண்டனை அது. 

அல்லாஹ் அளித்த தண்டனையை உணர்ந்து திருந்தாத டவுசர் கட்சி தலைவர் "பழுலுல் இலாஹி இந்தியா வரட்டும் ஒரு கை பார்த்து விடுவோம்"  என பல்வேறு சவடால்களை விட்டு விட்டு வந்தார். 

அல்லாஹ்வின் பேரருளால் நாம் தாயகம் வந்து 80 நாட்கள் ஆகி விட்டன. சவடால் பேர்வழியால் எதையும் சாதிக்க இயலவில்லை. பழுலுல் இலாஹி பொதுக் கூட்டங்களில் பேசினால் பள்ளித் திருடர்களின் முகத் திரையை கிழித்து விடுவார் என்பது பகல் கொள்ளையர்களுக்கும் டிரஸ்ட் மோசடியாளர்களுக்கும் தெரியும். 

எனவே நாம் கலந்து கொள்ள இருந்த ஒவ்வொரு கூட்டத்தையும் நடத்த விடாமல் தடுக்கும் வேலையை பொது சொத்துக்களை அபகரித்து வாழ்ந்து வருபவர்கள் செய்து வந்தார்கள். எங்கள் ஜட்டித் தலைவரை துபையில் பேச விடாமல் விரட்டியடித்த பழுலுல் இலாஹியை எந்த ஒரு பொதுக் கூட்டத்திலும் பேச விட மாட்டோம் என கொக்கரித்தார்கள். 

பழுலுல் இலாஹி பேசினால் கலவரம் வரும் சட்ட ஒழுங்கு பிரச்சனை என்று காவல் துறையை மிரட்டி வந்தார்கள். எனவே ஆன்மீக ரவுடிகளான டவுசர் கட்சியின் அட்டகாசங்களை விளங்கியுள்ள காவல் துறை நாம் கலந்து கொள்ளவிருக்கும் பப்ளிக் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்க தயங்கி வந்தது. 

வெறி பிடித்தவர்களாக ஆகி விட்டார்கள்.

எனவே மண்டபங்களில் கூட்டம் போடுவோம் என்று பலர் சொன்னார்கள். டவுசர் கட்சியின் சவடால்களை முறியடிப்பதையே நோக்கமாகக் கொண்ட நாம் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. இந்த நிலையில் ரமழான் வந்தது. புனிதமிக்க ரமழானில் கூட டவுசர் கட்சி தலைவர் வளைகுடாவுக்கு வண்டி வண்டியாய் பொய்களை ஏற்றிக் கொண்டிருந்தார். 

அவரது ஜட்டிப் பிள்ளைகள் அவர்களது குலத் தொழிலான மொட்டை மெயில்கள் அனுப்பும் பணியை செய்து வந்தார்கள் இதற்கெல்லாம் ரமழான் கழிந்து பதிலடி கொடுப்போம் என்று விட்டு விட்டோம். ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்றவர்கள் பெருநாளன்று உடனடியாக சினிமா, பாட்டுக் கச்சேரி போன்ற ஹராமான காரியங்களால் ஈர்க்கப்படுகிறார்கள். 

எனவே அதை தடுப்போம் என்ற நோக்குடன் அண்ணல் நபி(ஸல்) அனுமதித்த வழியில் பெருநாள் கொண்டாடும் நிகழ்ச்சியை த.மு.மு.க. சார்பில் நகரின் முக்கிய 7 இடங்களில் ஏற்பாடு செய்தார்கள். முஸ்லிம்களின் விரோதியான பள்ளித் திருடர்களும் அதே நாளில் அதே இடங்களில் நாங்கள் சடுகுடு விளையாட அனுமதி வேண்டும் என வம்பு செய்துள்ளனர். 

இதனால் காவல்துறை சிலம்பாட்டத்தை இக்பால் திடலில் மட்டும் நடத்த வேண்டும் என்றனர். மவுலவி ஜே.எஸ்.ரிபாஈ தலைமையில் நடந்த சிலம்ப நிகழ்ச்சியை பழுலுல் இலாஹியாகிய நாம் துவக்கி வைத்தோம். பழுலுல் இலாஹியை வைத்து பொதுத் திடலில் நிகழ்ச்சி நடந்து விட்டதே என்று வெறி பிடித்தவர்களாக ஆகி விட்டார்கள். 

கோவை டி.எஸ்.பி. பேசுகிறேன்

அல்லாமா இக்பால் குழுவினர் அம்பை ரோடு வி.எஸ்.டி. பள்ளியில் துவங்கி பெரிய தெரு, மஸ்ஜித் தக்வா, அத்தியடி தெரு, ஆகிய இடங்களில் நிகழ்ச்சி நடத்தி விட்டு அபுல்கலாம் ஆஸாத் ரோடு வழியாக தப்ஸ் அடித்து பாடிக் கொண்டு வந்து அல்லாமா இக்பால்(பசார்)திடல் வந்தடைந்தனர். 

அவர்கள் பாடிய பாடலில் நம்பின மனிதனுக்கு நன்றிகள் செய்வதில்லை. நன்றிகள் செய்வது போல் நடிப்பதில் குறையுமில்லை என்ற பாட்டு ஆன்மீக ரவுடியை லுஹாவை  குறி வைத்து எழுதி கொடுத்துள்ளீர்கள் என்று சிலர் கூறினர். 

இல்லை என்றோம். அப்படியானால் செல் போனில் பேசினீயடா என்ற வார்த்தை எப்படி இடம் பெற்றது. ஆன்மீக ரவுடியான அவர்தானே செல் போனில் கோவை டி.எஸ்.பி. பேசுகிறேன் என்று மிரட்டினார் என்று கேட்டார்கள். 

செல் போனில் பேசினீயடா என்று அவர்கள் பாடல் இல்லை.  செல் போனில் பேசுறீயடா என்றுதான் உள்ளது. அந்த பாடலை பஷீரப்பா தர்கா டிரஸ்டி பர்கானி அப்துல் காதர் அவர்கள்தான் எழுதி கொடுத்துள்ளார்கள் என்றோம். 

இருந்தாலும் இந்த பாடலை இங்கு பாட விடலாமா என்று கேட்டார்கள். எனவே ஹதீஸ் அடிப்படையில் மவுலவி ஜே.எஸ்.ரிபாஈ பாஸி ரஷாதி அவர்கள் பெருநாள் குத்பா உரையில் கூறிய விளக்கத்தை மீண்டும் எடுத்துக் கூறி பேசினோம். 

அப்பொழுதும் பழுலுல் இலாஹி பப்ளிக் திடலில் பேசி விட்டானே என ஜட்டிப் பேர்வழிகள் வயிறு எரிந்து போனார்கள். டவுசர் கட்சி படு தோழ்வி அடைந்தது. ஆன்மீக ரவுடியின் அட்டகாசங்களுக்கு இனி மரண அடிதான் என்பதை அந்த நிகழ்ச்சி உணர்த்தியது.

தாக்கி பேசுவதாக இருந்தால் கூட்டத்தை ரத்து செய்வோம்.

05-11-2005 அன்று மஸ்ஜித் தக்வா சார்பாக மேலப்பாளையம் இக்பால்(பசார்)திடலில்  பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்கள். அதை தடுப்பதற்காக டவுசர் கட்சி தலைவரும் அவரது ரசிகர்களான ஜட்டிகளும் தலைகீழாக நின்று பாடு பட்டார்கள். 

பழுலுல் இலாஹி பேசினால் கல்லை எடுத்து வீசுவோம் என்று ஆன்மீக ரவுடிகளின் அடியாட்கள் மிரட்டல் விட்டார்கள். கூட்டம் ஆரம்பிக்கும் நேரத்தில் திடலுக்கு வந்த அதிகாரிகள் யாரையும் (டவுசர், ஜட்டிகளை) தாக்கிப் பேசக்கூடாது. தாக்கி பேசுவதாக இருந்தால் கூட்டத்தை ரத்து செய்வோம் என்றார்கள். கூட்டம் நடந்ததா? நடந்தது என்ன இன்ஷா அல்லாஹ் விரைவில்.  
அன்புடன்:கா.அ.முஹம்மது பழுலுல் இலாஹி

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.