ஹாமித் பக்ரியின் கைதுக்குப் பின்னால் உள்ள உதிரத்தை உரைய வைக்கும் சதி.

தமிழ் நாட்டில் முஸ்லிம்களில் யாராவது போலீஸாரால் கைது செய்யப்பட்டாலோ, விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டாலோ உடனேயே, அவன் தீவிரவாதி அவனுக்கும் ஐ.எஸ்.ஐ.க்கும் தொடர்பு இருக்கிறது. முஸ்லிம் அமைப்பை தடை செய்ய வேண்டும், என்று ராமகோபாலன், ஸ்ரீதரன், இல.கணேசன் போன்றவர்கள் அறிக்கை வெளியிடுவார்கள். இப்படி அடிக்கடி அறிக்கை வெளியிடக் கூடிய இவர்கள் ஹாமித் பக்ரி கைது பற்றி எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.
அப்படி இருந்தும் தவ்ஹீது ஜமாஅத்என்ற வார்த்தை.
அதுபோல் தொலைக் காட்சிகள் மற்றும் பத்திரிக்கைகள் போன்ற மீடியாக்களும் அரசும் அரசு அதிகாரிகளும் முஸ்லிம்களில் யார் கைது செய்யப் பட்டாலும் அவர் எந்த முஸ்லிம் அமைப்புக்கும் சம்பந்தமில்லாதவராக இருந்தாலும் இவர் தீவிரவாத முஸ்லிம் அமைப்பை சேர்ந்தவர் என்று முஸ்லிம் ஏதாவது ஒரு அமைப்பை சம்பந்தப்படுத்தி குறிப்பிடத் தவற மாhட்டார்கள். இப்பொழுது கைது செய்யப் பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் தவ்ஹீது ஜமாஅத்தை சேர்ந்தவர்கள். மவுலவி அப்துர் றஹ்மான் ஷpப்லி தவ்ஹீது ஜமாஅத்தின் முன்னணிப் பேச்சாளர்களில் ஒருவர். ஹாமித் பக்ரி தவ்ஹீது ஜமாஅத் மேலாண்மைக்குழு உறுப்பினர். அப்படி இருந்தும் தவ்ஹீது ஜமாஅத்என்ற வார்த்தை தப்பித் தவறிக் கூட எங்கிருந்தும் வராமல் பில்டர் பண்ணப் பட்டிருக்கிறது.
பக்ரியின் கைதுக்குப் பின்னால் தவ்ஹீது ஜமாஅத்தின் சதி இருக்குமோ?
நமது வேண்டுகோளை ஏற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவரும் ஷமணிச் சுடர்| நாளிதழ் ஆசிரியருமான பேராசிரியர் காதர் மைதீன் அவர்கள், ஹாமித் பக்ரி ஆலிமை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறி உள்ளார். முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட செய்திகளை பரபரப்பான தலைப்பாக ஆக்கி கூடுதல் பக்கங்களுடன் கூடுதல் பிரதிகளை அச்சிட்டு சிறப்பிதழாக வெளியிடக் கூடிய பி.ஜே. ஆசிரியராக வேலை செய்யம் ஷஉணர்வு| வார இதழ் பக்ரி கைது பற்றி கண்டு கொள்ளவே இல்லை. பத்திரிக்கை தர்மத்தின் அடிப்படையில், ஹாமித் பக்ரி கைது செய்யப் பட்டார் என்பதை பெட்டி செய்தியாகக் கூட வெளியிடவில்லை. இதனால் பக்ரியின் கைதுக்குப் பின்னால் தவ்ஹீது ஜமாஅத்தின் சதி இருக்குமோ? என்ற சற்தேகம் மக்களிடையே பரவலாக ஏற்பட்டுள்ளது. இந்த சந்தேகத்திற்கான நியாயங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
ஷபி.ஜே. இல்லை. எந்த மேட்டராக இருந்தாலும் என்னிடம் சொல்லுங்கள்.|
02.12.2002. ரமழான் பிறை 27 நடு நிசி நேரம் ஒரு மணி. அப்பொழுது பக்ரி வீடு, அவர் தாயார் வீடான தஃவா சென்டர், ஆயிஷh சித்தீகா பெண்கள் கல்லூரி என 5 இடங்களில் போலீஸார் சோதனை போட்டுள்ளனர். காயல் பட்டிணம் வரலாறு காணாத அளவுக்கு போலீஸ் அந்த ஊரை சுற்றி வளைத்திருந்திருக்கிறது. ஷபெருநாள் நெருங்கும் வேளையில் ஏன் இப்படி| என ஊர்ப் பிரமுகர் ஒருவர் கேட்க போலீஸார், ஷஎங்கள் மேல் அதிகாரிகள் சொன்னதைச் செய்கிறோம்| என்று கூறி உள்ளனர். பிறகு அந்தப் பிரமுகர் சென்னைக்கு போன் போட்டு ஷபி.ஜே. இருக்கிறாரா?| என்று கேட்டுள்ளார். போனை எடுத்த ஏ.எஸ். அலாவுதீன் ஷபி.ஜே. இல்லை. எந்த மேட்டராக இருந்தாலும் என்னிடம் சொல்லுங்கள்| என்று கூறி உள்ளார்.
எங்களிடம் ஆதாரம் உள்ளது. அவருடைய நடவடிக்கை சரி இல்லை|
ஷபக்ரி வீட்டை சோதனை போடுகிறார்கள் ஊரைச் சுற்றி போலீஸ் நிற்கிறது| என்று பிரமுகர் கூறி உள்ளார். உடனேயே, ஷநீங்கள் போலீஸுக்கு கோ-ஆப்ரேட் பண்ணுங்கள் பக்ரியைப் பற்றி மோசமான செய்திகள் வந்துள்ளன. போலீஸை பகைக்க வேண்டாம்| என்று அலாவுதீன் கூறி உள்ளார். என்னையா ஒரு ஆளை குற்றவாளியா இல்லையா என்று தெரியும் முன்பே குற்றவாளி என்கிறீர்களே! என்று பிரமுகர் கேட்டுள்ளார். ஷஎங்களிடம் ஆதாரம் உள்ளது. அவருடைய நடவடிக்கை சரி இல்லை| என்று அலாவுதீன் கூறி உள்ளார்.
பக்ரி இருக்கிறாரே அவர் ஒரு துரோகி, ஐ.எஸ்.ஐ. உளவாளி: பி.ஜே.
ரமழான் பிறை 28 அதிகாலை 5 மணிக்கு அப்துல் மஜீத் மஹ்ழரி கைது செய்யப் பட்டுள்ளார். உடனே அந்தப் பிரமுகர் சென்னைக்கு போன் போட்டுள்ளார். அப்பொழுது பி.ஜே.யின் பினாமி போனை எடுத்துள்ளார். செய்தியைக் கேட்டதும் ஷஅந்தத் துரோகி ஒழிஞ்சிப் போகட்டும் அவன் ஐ.எஸ்.ஐ. உளவாளி ராஸ்கல் அவனை எல்லாம் .... ... |என்று எழுத முடியாத வாசகங்களால் திட்டிக் கொண்டு இருக்கும்போதே பி.ஜே. போனை வாங்கி ஷபக்ரி இருக்கிறாரே அவர் ஒரு துரோகி, ஐ.எஸ்.ஐ. உளவாளி, அவரையும் இவரையும் போலீஸ் பிடித்ததில் தவறு இல்லை, அவருடைய நடைமுறை சரி இல்லை. நாங்கள் கண்காணித்து வந்தோம். போலீஸ்காரர்கள் சரியான ரூட்டில்தான் போய்க் கொண்டு இருக்கிறார்கள் அவர்களை தடுக்க வேண்டாம்| என்று பி.ஜே. கூறி உள்ளார். 8ம் தேதி கூட்டத்திற்கு வருவீர்களே அப்பொழுது பேசிக் கொள்வோம் என்று கூறி அந்தப் பிரமுகர் போனை வைத்து விட்டார்.


போலீஸ்காரர்கள் சரியான ரூட்டில்தான் போய்க் கொண்டு இருக்கிறார்கள் என்று சம்பவ நேரத்திலேயே பி.ஜே. உறுதியாகச் சொல்லி உள்ளதால், போலீஸுக்கு ரூட் போட்டுக் கொடுத்ததே இந்த பி.ஜே.தான் என்று மக்கள் புரிந்து கொண்டதில் தவறு இல்லை.
ஷஇதற்கெல்லாம் ஆதாரம் இருக்கா?|
இப்படியெல்லாம் போனில் பேசிய பி.ஜே. 8ம் தேதி காயல் பொதுக் கூட்டத்திலும் இது மாதிரி பேசக் கூடும். எனவே முன்னதாகவே அவரை சந்தித்து அவ்வாறு பேசுவதை தவிர்க்கக் கூறுவோம், என முடிவு செய்தனர், காயல் ஐக்கிய ஜமாஅத் பிரமுகர்கள். அந்த முடிவுப்படி பி.ஜே.யை சந்தித்து பேசி உள்ளனர். பேச்சை துவங்கும் போதே ஷஹாமித் பக்ரி என் முன்னால் இருந்தால் அவருடைய கழுத்தைப் பிடித்துக் கடித்துக் கொதறி இருப்பேன். எனக்கு அவர் மேல் அப்படி வெறி. முஸ்லிம் பாதுகாப்புப் படை அவசியமா?| என்று பி.ஜே. பேச்சை துவங்கி உள்ளார். பி.ஜே. மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்துள்ள பக்ரியின் மைத்துனர் ரபீக் ஷஇதற்கெல்லாம் ஆதாரம் இருக்கா?| என்று கேட்டுள்ளார்.
அடுக்கிக் கொண்டு போகிறார் பி.ஜே.
இதற்குப் பதில் அளித்த பி.ஜே,ஷமுதன் முதலில் ஹஜ் சென்றவர் அபு சலீமை சந்தித்தது முதல் குற்றம். அவரிடம் பேசி விட்டு வந்து ஊரில் தனியாக ஒரு இயக்கத்தை ஆரம்பித்து ஆட்களை சேர்த்தது 2 வது குற்றம். பல கோயில்களைத் தகர்க்கத் திட்டம் தீட்டியது 3 வது குற்றம். இப்படி குற்றச் சாட்டுகளை நம்பர் போட்டு அடுக்கிக் கொண்டு போகிறார் பி.ஜே.
இமாம் அலி என்ற தீவிரவாதியுடன் தொடர்பு கொண்டது.
பல தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டு ரகசிய கூட்டம் போட்டு செயல்பட ஆரம்பித்தது. கள்ள பாஸ்போர்ட்டில் உம்ரா சென்றது. அப்பொழுது அந்த தலைவனைச் சந்தித்தது. தங்கள் கூட்டத்தைப் பற்றி விவாதித்துக் கொண்டு வந்தது. சிலோன் விவாதத்திற்காக சென்ற இடத்தில் பணத்தைப் பெற்றுக் கொண்டு வந்தது. பணம் வாங்க அப்துர்; றஹ்மான் ஷpப்லியுடன் சென்றது. இமாம் அலி என்ற தீவிரவாதியுடன் தொடர்பு கொண்டது. அவனையும் இந்த இயக்கத்தில் இணைத்துக் கொண்டது. தஃவா சென்டரை (இஸ்லாமிய கல்விச் சங்கத்தைக்) நான் கலைக்கச் சொன்னபோது. வேறு பெயரில் செயல் படுத்தியது. இன்னும் ஊர் ஊராகச் சென்று அதை விரிவு படுத்த எண்ணியது| என்று பி.ஜே. குற்றச் சாட்டைத் தொடர்ந்து கூறி உள்ளார்.
ஸைபுல்லா, ஷம்சுல் லுஹா, எம்.ஐ.சுலைமான்.
தஃவா சென்டரை கலைக்கச் சொன்னது ஏன்? அதில் தான் பி.ஜே. குரூப் புகார் செய்துள்ள தேச விரோதச் செயல் நடந்துள்ளது என்றால், தஃவா சென்டரை இப்பொழுது சீல் வைத்து விட்ட போலீஸ், தானாக கண்டு பிடித்து சீல் வைத்து இருந்தால், பக்ரிக்கு அடுத்த பொறுப்பில் இருந்த ஸைபுல்லா, ஷம்சுல் லுஹா, எம்.ஐ.சுலைமான் போன்றோரையும் கைது செய்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் விசாரணைக்காவது அவர்களை அழைத்துச் சென்றிருக்க வேண்டும்.
தலைமையைக் கைப்பற்ற பக்ரி முயற்சி செய்தார்.
பி.ஜே. போலீஸுக்கு அடி வருடியாக ஆகிவிட்டார் இனி ஜிஹாத் பற்றி பேச மாட்டார். அவருக்கு அவர்தான் வளரணும். இஸ்லாத்தைப் பற்றி பி.ஜே.க்கு கவலை இல்லை. என்று பல சகோதரர்களிடம் தனியாக கூட்டம் போட்டு பக்ரி பேசி உள்ளார். அவரை 10 மாதமாக நாங்கள் வாட்ச் பண்ணினோம். எனக்கு எதிராக அதிகம் செயல் பட்டுள்ளார், தலைமையைக் கைப்பற்ற பக்ரி முயற்சி செய்தார்| என்று பக்ரி பற்றி பி.ஜே. குற்றம் சாட்டி உள்ளார்.
குழந்தை மனசு என்று பக்ரி பற்றி ஒரு வார்த்தை கொடுத்துள்ளார்.
பி.ஜே.போலீஸுக்கு அடி வருடியாகி விட்டார் அவருக்கு அவர்தான் வளரணும். இஸ்லாத்தைப் பற்றி பி.ஜே.க்கு கவலை இல்லை, என்ற உண்மையைக் கூறி பி.ஜே.க்கு எதிராக செயல் பட்டது தான் பக்ரி மீது தேச விரோத குற்றச் சாட்டு கூறக் காரணம் என்பதை பி.ஜே.யுடன் நெருங்கிப் பழகியவர்கள் புரிந்து கொண்டார்கள். 10 மாதமாக நாங்கள் வாட்ச் பண்ணினோம் என்று இந்த சபையில் கூறிய பி.ஜே. தான் 3 மாதத்திற்கு முன்பு குழந்தை மனசு என்று பக்ரி பற்றி ஒரு வார்த்தை கொடுத்துள்ளார்.
இது பி.ஜே.க்கே உரிய சமாளிப்புதான்.
சபையில் இருந்த ஊர்ப் பிரமுகர் அவரைப்பற்றி இப்பொழுது பல குற்றச் சாட்டுக்கள் சொல்லக் கூடிய நீங்கள் உணர்வில் ஒரு செய்திப் போட்டு இவரைப் பற்றி எழுதி இருக்கலாமே என்று கேட்டுள்ளார். அதற்கு பி.ஜே. அவர் மார்க்கப் பணி செய்து கொண்டுள்ளார். அது அழிந்து விடக் கூடாது அது மட்டுமல்ல. அவருடைய செயல் பாட்டில் ஆயிஷh சித்தீகாவும் ஒன்று அதுவும் பாதித்து விடக்கூடாது என்று தான் நாம் பப்ளிக் பண்ணவில்லை என்று கூறி உள்ளார். இப்பொழுது மட்டும் அந்தப் பணிகள் பக்ரி செய்யவில்லையா? என்று கேட்டு விடாதீர்கள் இது பி.ஜே.க்கே உரிய சமாளிப்புதான். இந்த வார உணர்வில் கூட உங்களுடன் ஹாமித் பக்ரி, அப்துல் மஜீத் மஹ்ழரி பேசுவதாக விளம்பரம் வந்துள்ளதே என்று கேட்டதற்கு அது என் பார்வைக்கு வராமல் வந்து விட்டது என்று சமாளித்துள்ளதை ஏற்கனவே அறிந்து இருக்கிறோம்.
ஜுன் மாதம் குற்றாலத்தில் ரகசிய கூட்டம் போட்டுள்ளார்.
அப்படியானால் எங்க ஊர் ஆட்களிடம் இவர் இந்த மாதிரி தீவிரவாதத்தை வளர்க்கிறார் என்று சொல்லி இருக்கலாம் இல்லையா? அல்லது இயக்க ரீதியாகக் குற்றம் சாட்டி அவரிடமே விசாரித்து இருக்கலாமே என்று ஊர்ப் பிரமுகர் கேட்டதற்கு பதில் கூறிய பி.ஜே. ஷ8 ஆம் தேதி மீட்டிங்குக்கு வரும்போது சொல்லிக் கொள்ளலாம் என்று தீர்மானித்தோம். அதனால் சொல்லவில்லை. அதற்குள் இப்படி நடந்து விட்டது| என்று மழுப்பி உள்ளார். கைது சோதனை எல்லாம் டிசம்பர் 6 ஐ காரணம் காட்டித்தானே தவிர நீங்கள் சொல்லுகின்ற மாதிரி தீவிரவாதத்தை காரணம் காட்டி அல்ல என்று கூறியதற்கு பதில் சொல்லாமல் அடுத்தக் குற்றச் சாட்டுக்குத் தாவிய பி.ஜே, ஷஇவர் ஜுன் மாதம் குற்றாலத்தில் ரகசிய கூட்டம் போட்டுள்ளார்.| என்று கூறி உள்ளார்.
பி.ஜே.ன் உத்தரவுப் படி தான் நடத்தப் பட்டிருக்க வேண்டும்.
இந்த ஜுன் மாதத்தில் தான் பி.ஜே,யும் கூட்டமைப்பு மவுலவிகளும் அவர்களைச் சார்ந்தவர்களும் குற்றாலத்திற்கு அருகில் உள்ள கடையநல்லூரை மையமாகக் கொண்டு நெல்லை, வ.உ.சி. மாவட்டங்களில் 20 நாட்களுக்கு மேல் முகாமிட்டிருந்தனர். காயல் பட்டிணமும் சென்று வந்தனர். ஜுன் அந்த மாத முகாமின் போது தான், உளவுத் துறையால் கண்காணிக்கப்படுகிறது என்று கலைக்கப்பட்டு வேறு பெயரில் செயல்படும் அமைப்பின் தலைவரும் 2 முறை குற்றாலத்திற்கு அருகில் உள்ள கடையநல்லூருக்குச் சென்று வந்தார். ஷhர்ஜாவில் உள்ள காஜா பிர்தவ்ஸி தன் அண்ணன் லுஹாவுடன் பல முறை குற்றாலத்திற்கு அருகில் உள்ள கடையநல்லூருக்குச் சென்று வந்தார். என்பது குறிப்பிடத் தக்கது. எனவே ஜுன் மாதத்தில் குற்றாலத்தில் கூட்டம் நடத்தப் பட்டிருப்பது உண்மையாக இருக்குமானால் அது பி.ஜே.ன் உத்தரவுப் படி தான் நடத்தப் பட்டிருக்க வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
எந்த மடையனாவது நம்புவானா?
ஷஷஇந்த நாட்டுச் சட்டத்திற்கு எதிர்ப்பாக பக்ரி செயல் பட்டு வந்தார். இப்படி செயல் படக் கூடியவர்களை போலீஸ் கண்காணித்துக் கொண்டுதான் உள்ளது. அவருடைய அனைத்து செயல்களுக்கும் போலீஸ் எங்களிடம் ஆதாரம் தந்து விட்டது. எங்களிடம் தந்து உள்ள ஆதாரப்படி 17 பேர்களை போலீஸ் கைது செய்யும் என்று பி.ஜே. கூறி உள்ளார். கருணாநிதியைக் கைது செய்த போது தி.மு.க. தலைமையிடம் அதற்குரிய ஆதாரத்தை போலீஸ் கொடுக்கவில்லை. வை.கோ.வைக் கைது செய்த போது ம.தி.மு.க. தலைமையிடம் அதற்கு உரிய ஆதாரத்தை போலீஸ் கொடுக்கவில்லை. இப்படி மத்தியில் ஆளும் பீடத்தில் உள்ள பெரிய கட்சிகளின் தலைமையிடம் உரிய ஆதாரத்தை கொடுக்காத போலீஸ், கருணாநிதி, வை.கோ. போன்றவர்களின் கண்களில் விரலை விட்டு ஆட்டிப் படைக்கும் ஜெயலலிதாவின் போலீஸ். ஹாமித் பக்ரி கைது விஷயத்தில் மட்டும் பி.ஜே. கட்சி தலைமையிடம் ஆதாரம் தந்து விட்டு கைது செய்துள்ளது என்பதை எந்த மடையனாவது நம்புவானா? இந்த கூற்றில் இருந்து என்ன நடந்துள்ளது? இவர்கள் யார்? என்பதை; புரிய வைத்த அல்லாஹுக்கே எல்லாப் புகழும்.
ரகசிய ஆட்களுக்கும் பி.ஜே. அணிக்கும் என்ன தொடர்பு?
பி.ஜே, அலாவுதீன், ஷம்சுல் லுஹா, அவர் தம்பி காஜா பிர்தவ்ஸி போன்ற கூட்டமைப்பினரும் யு.ஏ.இ.ல் மண்டலத்தின் பெயரால் பதவி பெற்ற பதவி வெறியர்களும் போட்டிப் போட்டுக் கொண்டு ஹாமித் பக்ரி தீவிரவாதிதான் என்று பிரச்சாரம் செய்வதால்தான் ராமகோபாலன், ஸ்ரீதரன், இல.கணேசன்கள் போன்ற இந்து முன்னணி, பி.ஜே.பி. ஆர். எஸ்.எஸ். காரர்களெல்லாம் தங்கள் பணி எளிதாகி விட்டது என்பதால் பி.ஜே. பார்ட்டியை தடை செய்ய வேண்டும் என்று கூறாமல் இருக்கிறார்கள்; என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஸைபுல்லாஹ் ஹாஜாவுடன் (இஸ்லாமிய கல்விச் சங்க வசூல் வகைக்காக) பக்ரி துபைக்குச் சென்றார். ஸைபுல்லாஹ் இல்லாமல் நிறைய பேர்களை அவர் தனிமையில் சந்தித்துள்ளார். இப்படி சந்தித்தவர்கள் எங்களிடம் சொல்லி உள்ளார்கள். என்று பி.ஜே. கூறி உள்ளார். தனிமையில் சந்திக்கப் பட்டவர்கள் ரகசிய ஆட்கள் என்றால், அவர்கள் பி.ஜே. அணியிடம் சொல்லும் அளவுக்கு அவர்களுக்கும் ரகசிய ஆட்களுக்கும் பி.ஜே. அணிக்கும் என்ன தொடர்பு?
உயர் பதவிக்கு ஹாமித் பக்ரியை தேர்ந்து எடுத்தது எப்படி?
3 மாதத்திற்கு முன்பே அனைத்து இயக்கங்களில் இருந்தும் அவரை நாங்கள் நீக்கி விட்டோம் என்று பி.ஜே. கூறி உள்ளார். அவராகத்தானே ராஜினாமா செய்தார் அது எப்படி நீக்கியதாக ஆகும் என்று மதுரைக் கூட்டத்தில் கலந்து கொண்ட தவ்ஹீது ஜமாஅத் பிரமுகர் கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த பி.ஜே, ஷநாங்கள் சொல்லித்தான் அவர் ராஜினாமா செய்தார். எங்களுக்கு பாதிப்பு வந்து விடக்கூடாது என்பதற்காக நாங்கள்தான் ராஜினாமா செய்ய வைத்தோம்| என்று பி.ஜே. கூறி உள்ளார். இதுவும் உண்மையாக இருக்கும் என்றால், தலைவர் மீது நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு கூடுதல் அதிகாரம் உடைய மேலாண்மைக் குழு எனும் உயர் பதவிக்கு ஹாமித் பக்ரியை தேர்ந்து எடுத்தது எப்படி?
ஷம்சுல் லுஹா துபை வந்தபோது கூறியது குறிப்பிடத் தக்கது.
எந்தப் பைத்தியக் காரணாவது தேடப்படக் கூடிய தீவிரவாதியின் சகோதரியை திருமணம் செய்வானா? இவர் செய்துள்ளார். அப்பவே இவரை போலீஸ் சந்தேகப்பட ஆரம்பித்து விட்டது என்று பி.ஜே. சொல்லி உள்ளார். நீங்கள்தான் திருமணம் செய்து வைத்துள்ளதாக சொல்கிறார்களே என்று சபையில் உள்ளவர்; கேட்டதும். அப்படித்தான் எல்லோரும் சொல்றாங்க ஆனால் எனக்கு அவர் திருமணம் செய்ததது தெரியாது. மவுலவி ஜே.எஸ். ரிபாஈ சொல்லித்தான் எனக்குத் தெரியும் என்று பி.ஜே.கூறி உள்ளார். ஷஇருக்கிற நிறுவனங்களுக்கே உஸ்தாதாக்கள் பற்றாக் குறையாக உள்ளது. இந்த நிலையில் சென்னையில் பிரச்சனை ஏற்பட்டு விட்டதால் மேடத்திற்காக (அதாவது இமாம் அலியின் சகோதரிக்காக) மதுரையில் பெண்கள் கல்லூரி துவங்கச் செய்து நான் என்ற அகம்பாவத்தைக் காட்டினார் பி.ஜே| இப்படி ஷம்சுல் லுஹா துபை வந்தபோது கூறியது குறிப்பிடத் தக்கது.
யூகித்து சொன்னதாக சமாளிப்பவன் பொய்யனே.
இதை அவதூறுப் பிரசுரம் என்று மறுப்பவர்கள் வெறுமனே சத்தியம் செய்து மறுக்கக் கூடாது. அவர்கள் மறுப்பது பொய்யாக இருந்தால் அவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டும் என்று கூறி மறுக்க வேண்டும். வெறுமனே மறுத்தார்கள் என்றால் அவர்கள் பொய்யர்கள் என்று விளங்கிக் கொள்ளுங்கள். ஹாமித் பக்ரி கைது செய்யப்பட்ட நாளிலிருந்து அந்தரங்கமாக பி.ஜே. தரப்பு உதவுகிறது, வெளியில் எடுக்க ரகசிய முயற்சிகள் நடந்து கொண்டிருக்கறது என்று அல்லாஹ்வின் மீதே சத்தியம் செய்து பொய் கூறி வந்தார்கள் அந்தப் பொய்யர்கள். எனவே அவர்கள் பொய்யர்கள் என்றால் அவர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டும் என்று நமது முந்தைய பிரசுரம் வெளியானதும் தாங்கள் கூறி வந்த பொய்க்கு தவறான தகவல், யூகித்து சொன்னோம் என்று சமாளித்து உள்ளார்கள். தகவல் தொடர்புகள் எளிதாக உள்ள காலத்தில் யூகித்து சொன்னதாக சமாளிப்பவன் பொய்யனே என்று மக்கள் விளங்கிக் கொண்டார்கள் எனவே தான் இந்தப் பிரசுரத்தில் உள்ளவற்றை மறுப்பதாக இருந்தால் மேலே கூறி உள்ள நிபந்தனைப்படிதான் அந்த பொய் சத்தியப் பேர்வழிகள் மறுக்க வேண்டும் என்று கூறுகிறோம்.
வழக்கு நடத்த உதவி கேட்கிறார்கள் யாரும் கொடுக்காதீர்கள்.
மேலப்பாளையம் காஜா நஜ்முத்தீன் என்பவரின் வழக்குகள் விசாரணைக்கு வந்ததும் வக்கீல் வைப்பதாக கூறி வந்துள்ளதுபி.ஜே. அணி. இப்பொழுது வழக்குகள் விசாரணைக்கு வந்துள்ள நிலையில் வக்கீல் வைக்காமல் வசதி இல்லை என ஏமாற்றி விட்டது. எனவே தன் சகோதரனுக்கு சட்ட ரீதியாக உதவுமாறு அவரது அண்ணன் பலரை அணுகி உள்ளார். இது பற்றி அதிராம் பட்டிணம் ஜமால் என்பவர் அல் உம்மா தீவிர வாதிகளுக்கு உதவி கேட்கிறார்கள் உதவாதீர்கள் என்று பிரச்சாரம் செய்து வருகிறார். மேலப்பாளையம் காஜா பிர்தவ்ஸி என்பவர் கிச்சான் புகாரிக்கு வழக்கு நடத்த உதவி கேட்கிறார்கள் யாரும் கொடுக்காதீர்கள் என்று பேசித் திரிகிறார் என்பதையும் இங்கு உங்கள் கவனத்திற்கு தர கடமைப் பட்டிருக்கிறோம்.
இதில் இவர் இரண்டாந்தரம்.
பி.ஜே. கூற்றுப்படி தீவிரவாதியின் சகோதரியை திருமணம் செய்வது பைத்தியக்காரத்தனம். அப்படியானால் தீவிரவாதியின் சகோதரியின் குடும்பச் செலவுக்கு உதவியது, வேலை ஏற்பாடு செய்து கொடுத்து இணைந்து பணி ஆற்றியது. அவரை வு.ஏ. ல் காட்டி விளம்பரம் செய்தது. அங்கு பிரச்சனையானதும் அவரது வேலை வாய்ப்புக்காக புதிய நிறுவனம் துவங்கச் செய்தது. அந்த புதிய நிறுவனத்திற்கு உதவி செய்த ராமநாதபுரம் நிர்வாகிளுடன் நிற்கின்ற போட்டோவை உணர்வில் போட்டு விளம்பரப் படுத்தியது. அது மட்டுமா தேடக் கூடிய தீவிரவாதி இமாம் அலி தங்க வீடு ஏற்பாடு செய்து கொடுத்து தேவைக்கு பணமும் கொடுத்து வந்தது போன்ற பி.ஜே.ன் செயல்கள் தீவிர வாதமா? சந்தர்ப்பவாதமா? முட்டாள் தனமானதா? என்று மக்கள் கேட்கிறார்கள். சிலர் வாங்கிப் பலி இடுவார்கள். சிலர் தாங்களே கொழுக்க வளர்த்துப் பலி கொடுப்பார்கள். இதில் இவர் இரண்டாந்தரம்.
50ஆயிரம் ரூபாய் வசூல் ஆனது
கூட்டமைப்பின் பொதுக் குழுவில் ஒற்றுமை பற்றி விவாதம் நடந்து கொண்டிருக்கும் போது பெங்களூரில்
4 பேர் சுடப்பட்ட செய்தி வந்தது. உடனேயே ஜனாஸாவை நாம் வாங்கி அடக்கம் பண்ணுவோம் என்று தீர்மானிக்கப்பட்டது. அதற்காக பி.ஜே. உரையாற்றினார். 50ஆயிரம் ரூபாய் வசூல் ஆனது என்பது வரையிலான விபரத்தை 04.10.2002. ஜும்ஆவில் லுஹா கூறியுள்ளதை முன்பு அறிந்து இருக்கிறோம். மீதி விபரங்களை இப்பொழுது பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.
இதற்காகத்தான் நாம இந்த ஜனாஸாவை வாங்குகிறோம்.
அந்தப் பொதுக் குழுவில் ஜனாஸாவை வாங்க கூட்டமைப்பு தலைவர் ஹாமித் பக்ரியை அனுப்புவோம் என்று பி.ஜே. தீர்மானித்தார். உடனே ஹாமித் பக்ரி நான் போய் வாங்கினால் லீகலா ஏதும் பிரச்சனை வராதா? என்று கேட்டார். லீகலா எந்தப் பிரச்சனையும் வராது என்று பி.ஜே. கூறினார். அது எப்படி என்று பொதுக் குழுவுக்கு வந்திருந்தவர்கள் கேட்டார்கள். பாக்கர் லீகலா பிரச்சனை ஏதும் வருமா? அதைப் பற்றி உங்களுக்குத்தானே தெரியும் சொல்லுங்கள் என்று பி.ஜே. சொன்னார். உடனே பாக்கர் அவர் ஸ்டைலில் மைக்கப் பிடித்து பேச ஆரம்பித்தார். இறந்த உடலை யார் வேண்டுமானாலும் வாங்கலாம். சொந்தக் காரர்கள், நண்பர்கள், சங்கங்கள், இயக்கம் போன்ற யார் வேண்டுமானாலும் வாங்கலாம். நாம இந்த உடலை வாங்கலைன்னா அவங்க (போலீஸ்) கண்ணிய மற்ற முறையில் அந்த உடலை அடக்கலாம். நம்ம முறைப்படி அடக்க வேண்டும் இதற்காகத்தான் நாம இந்த ஜனாஸாவை வாங்குகிறோம் அதற்காக அனைத்து தவ்ஹீது ஜமாஅத் கூட்டமைப்புத் தலைவர் ஹாமித் பக்ரியை நாம் அனுப்புகிறோம் என்று பாக்கர் கூறினார்.
பக்ரியை சிறைக்கு அனுப்ப அன்றே சுழி போட்டு விட்டார்.
நல்ல விளம்பரங்களைப் பெற்றுத் தரக் கூடிய நிகழ்ச்சிகளையெல்லாம் தன் பெயரில் செய்யும் பி.ஜே. இமாம் அலியின் ஜனாஸாவை ஒரு முஸ்லிம் சகோதரனின் ஜனாஸாவாகப் பார்க்கவில்லை. ஒரு தீவிரவாதியின் ஜனாஸாவாகத்தான் பார்த்துள்ளார். அதனால்தான் தவ்ஹீது ஜமாஅத்தை ஈடுபடுத்துவது போல் காட்டி பக்ரியை சிறைக்கு அனுப்ப அன்றே சுழி போட்டு விட்டார். 3 மணி நேரம் நடந்த காயல் கலந்துரையாடலில், இந்த விபரத்தை நம் சகோதரர்களிடம் நீங்கள் கூறி விடுங்கள் என்று முதலிலும். முடிக்கும்போது பப்ளிக் மீட்டிங்கில் சப்ஜக்டைத் தவிர எதுவும் பேச மாட்டேன். எதுவும் கேட்பதாக இருந்தால் இங்கேயே கேளுங்கள். உங்கள் மனைவிகள் இடம் கூட இது சம்பந்தமாக பேசக் கூடாது என்று காயல் பிரமுகர்களிடம் சத்தியம் வாங்கி உள்ளார் பி.ஜே.
மக்கள் நம்ப வேண்டும் என்பதற்காக.
இப்படி சத்தியம் வாங்கிய அவரே, லஷ;கரே-இ-தய்யிபாவுடன் உனக்கு என்ன தொடர்பு கோயில்களுக்கு குண்டு வைத்தால் இழந்த உரிமையை உன் சமுதாயம் அடைந்து விடுமா? ஐ.எஸ்.ஐ. உளவாளியா செயல் பட்டால் போலீஸ் உன்னை சும்மா விட்டு விடுமா? ரகசியக் கூட்டம் போடுகிற நீ உன்னைச் சுற்றி ஒரு ரகசியக் கூட்டம் வரும். அது மட்டுமா டெலிபோனில் பேசுகிறாய். டெலிபோன் யார் கையில் இருக்கு தெரியுமா? உன் இஷ;டத்திற்கு டெலிபோனில் பேசினால் அவன் என்ன பார்த்துக்கிட்டு இருப்பானா? உங்களை கூண்டோடு ஒழிச்சிடுவான். இந்த மாதிரி அரை மணி நேரம் பேசி சத்தியத்தை முறித்து. பி.ஜே. ஏற்பாட்டில் பக்ரி கைது செய்யப் படவில்லை என்று மக்கள் நம்ப வேண்டும் என்பதற்காக பேசி உள்ளார்.
உங்கள் நிலை என்ன? இன்றே இப்பொழுதே முடிவு செய்யுங்கள்.
ஷ5 இடங்களை சோதனை போட்டதில் உருப்படியான எந்த ஆதாரமும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. பி.ஜே. குரூப்ஸ்தான் எங்களுக்கு ஆதாரங்களை சேகரித்து தந்து கொண்டிருக்கிறது| என்று போலீஸ் அதிகாரிகள் காயல் பிரமுகர் இடம் கூறி உள்ளார்கள். ஆக பி.ஜே. குரூப்ஸ்தான் ஹாமித் பக்ரி தீவிர வாதி என்கிற மாதிரி ஆதாரங்களை உண்டு பண்ணி கொடுத்துக் கொண்டிருக்கிறது என்பது தெளிவு. இனியும் தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர் என்ற பாவ அட்டையை சுமந்து அவர்களின் பாவச் செயலில் உங்கள் பங்களிப்பைச் செலுத்தப் போகிறீர்களா? இஸ்லாத்தில் பற்றுள்ள முஸ்லிம்கள் உணர்வு வாங்குவதை நிறுத்தி விட்டார்கள். உங்கள் நிலை என்ன? இன்றே இப்பொழுதே முடிவு செய்யுங்கள்.

ஷஹாமித் பக்ரி கைது பற்றி பி.ஜே. விளக்கம்| என்ற நமது முந்தைய பிரசுரத்தை ஈ-மெயில் மற்றும் போஸ்ட் மூலம் பரவலாக அனுப்பியவர்களுக்கும், தாயகத்தால் அச்சிட்டு வினியோகித்தவர்களுக்கும், பள்ளிவாசல்களுக்கு அனுப்பி வைத்தவர்களுக்கும், ஷஜும்ஆ| வுக்குப் பின் பள்ளிவாசலில் படித்துக் காட்டிய ஜமாஅத்தார்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அது போல் இந்தப் பிரசுரத்தையும் பிரதிகள் எடுத்து வினியோகிக்க வேண்டுகிறோம்.
வெளியீடு:- அனைத்து தவ்ஹீது ஜமாஅத் மேலாண்மைக் குழு உறுப்பினர்.
ஹாமித் பக்ரி மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கும் த.மு.மு.க.வுக்கும் சம்பந்தமில்லை. என்பதை ஜவாஹிருல்லாஹ்வின் அறிக்கை உறுதி செய்து விட்டது. ஹாமித் பக்ரி மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுளுக்கு முழு பொறுப்புதாரி; பி.ஜே.தான் என்பதை பி.ஜே. அவர்களே ஒப்புக் கொண்டுள்ளதுடன் நிரூபிக்கத் தயார் என்றும் சவால் விட்டுள்ளார்.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.