ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் எது முதல் வசனம்?
பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம் என்று திரு குர்ஆனில் உள்ள ஒவ்வொரு அத்தியாயத்தின் ஆரம்பத்திலும் உள்ளது. அல்லாஹ்வின் பெயரால் துவங்க வேண்டும் என்பதற்காக உள்ளதா ? அல்லது அந்தந்த அத்தியாயத்தைச் சார்ந்த முதல் வசனமாக அது உள்ளதா ? ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் எது முதல் வசனம் ? பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம் என்று எல்லாரும் சொல்கிறோம் . இது திரு குர்ஆனில் உள்ள ஒவ்வொரு அத்தியாயத்தின் முதல் வசனம் ஆகும். இந்த உண்மையி ன் விபரத்தை பெரும்பாலான மக்கள் விளங்காமல் இருக்கிறோம் . இதற்கு இந்த கேள்வியே சான்று. இந்தக் கேள்வி ஏன் வருகின்றது ? எல்லா ஆயத்களுக்கும் வசன எண் போடப்பட்டு உள்ளது . பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம் என்பதில் வசன எண் போடப்படவில்லை. பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம் என்பது அத்தியாயத்தைச் சார்ந்த வசனம் என்றால் அதற்கும் நம்பர் போட்டு இருக்க வேண்டுமே. எனவே எந்த ஒரு காரியத்தை துவங்கினாலும் பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம் என்று சொல்லித்தான் துவங்குகிறோம் . அது போலத்தான் ஒவ்வொரு சூராவையும் . – அத்தியாயத்தையும் துவங்கும்பொழுது பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்...