Posts

மேலப்பாளையம் பிரமுகர்கள் பற்றி நெல்லை தினகரன்.

Image

லுஹாவின் கள்ளக் கணக்கு.

Image
பணம் அனுப்பி செலவு செய்து 10 மாதம் ஆன பின்பும் கணக்கு எழுதவில்லை என்று எழுதியுள்ள லுஹா. ரமழானில் 2 லட்சம் வந்ததாக தன் கைப்பட எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ள லுஹா கணக்கில் வரவு ஒரு லட்சம் என்றே எழுதி வைத்துள்ளார் என்பதற்குரிய ஆதாரம்.

பி.ஜெ.யின் செயல்கள் எல்லாமே பணத்துக்குத் தாண்டா.

Image
பிரச்சாரம் செய்ய தாஇகள் இருக்கிறார்கள் பொருளாதாரம்தான் இல்லை. வெளி நாட்டவர் இடமோ. வெளி நாட்டு இயக்கங்கள் இடமோ எந்த ஒரு பைசாவும் நன்கொடை வாங்குவதில்லை என்று பைலாவாகக் கெண்டு செயல்படுகிறோம். சவூதியில் இருந்து 10 கோடி ரூபாய் தந்தாலும் வாங்க மாட்டோம். ஆகவே நீங்கள் நன்கொடை தாருங்கள் என்று டி.வி. விளம்பரக் காட்சிகளிலும் தோன்றி வசூலுக்காக பி.ஜெ. விளம்பரம் காட்சிகளில் நடித்து வருகிறார். வெளிநாட்டவர்களிடமோ வெளிநாட்டு நிறுவனங்களிடமோ உதவி பெற மாட்டோம். இது எங்கள் பழைய கொள்கை. ஜாக்கிலிருந்து வெளியேற இதுவும் ஒரு காரணம் என்றும் சந்தர்ப்பத்திற்கு தக்கவாறு பி.ஜெ. கூறி வருகிறார். அவர் மொழி பெயர்த்த திர்மிதியில் தமிழக மவுலவிகளிடம் அரபியில் அணிந்துரைகள் வாங்கியது எதற்காக. பி.ஜெ.யின் செயல்கள் எல்லாமே அரபு நாட்டு பணத்துக்குத் தான். என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் வேண்டுமா?

பி.ஜெ.யின் மனம் திறந்த மடல்.

சகோதரர் பி. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் தமுமுகவின் மாநில அமைப்பாளர் உட்பட அனைத்து பொருப்புக்களிலிருந்தும் விலகிக் கொண்டபோது அவர் எழுதிய 'மனம் திறந்த மடல்' மனம் திறந்த மடல். என் மீது அன்பு கொண்ட அனைத்து சகோதரர்களுக்கும் பி. ஜைனுல் ஆபிதீன் எழுதும் மனம் திறந்த மடல். அஸ்ஸலாமு அலைக்கும். கடந்த இருபது ஆண்டுகளாக என்னால் இயன்ற பொதுப் பணிகளைச் செய்து வந்தேன். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில அமைப்பாளராகவும் ஐந்த ஆண்டுகளாக நான் இருந்து வருகிறேன். எதிர் வரும் ஜனவரி மாதம் பத்தாம் தேதியிலிருந்து தமுமுகவின் மாநில அமைப்பாளர் பொறுப்பு உட்பட நான் வகித்து வந்த அனைத்துப் பொறுப்புக் களிலிருந்தும் இன்ஷhஅல்லாஹ் விலகிக் கொள்கிறேன். இது குறித்து மனம் விட்டு பேசவே இந்த மடலை வரைகிறேன். விலகும் நேரத்தில் இதை அறிவிக்காமல் முன் கூட்டியே அறிவிப்பதற்குக் காரணம் இருக்கிறது. தமுமுகவின் மீது எனக்கு அதிருப்தி ஏற்பட்டு, ஆனால் நான் விலகுவதாகப் பிரச்சாரம் செய்ய சிலர் காத்துக் கிடக்கின்றனர். தமுமுக எனும் சமுதாயப் பேரியக்கம் இன்று அவசியத்திலும் அவசியம் என்பதை உங்களைவிட நான் அதிகமாகவே நம்புகிறேன். இந்தக் கழக...
Image
மாத சம்பளம் பேசி தவ்ஹீது வேலைக்கு வந்தவர்கள்.
Image
தமிழக தவ்ஹீது எழுச்சி வரலாற்றில் பத்திரிக்கைகளில் வந்த செய்திகள்.

தடை செய்யப்பட்ட இஸ்லாமிய மாநாடு

Image
மதுரை தமுக்கம் மைதானத்தில் 1992இல் நடை பெற இருந்த இஸ்லாமிய மாநாடு தடை செய்யப்பட்டது. அதன் பிறகு அதே அல்லாஹ் அருளால் இடத்தில் 2000இல் நடத்திக் காட்டினோம். 1992ஆம்  ஆண்டு  தமுக்கம் மைதானத்தில் JAQH சார்பில்  துவங்கிய தவ்ஹீது மாநாட்டை    போலீஸ்  சூப்ரடென்ட்  ( SP ) கலீமுல்லாகான்  தலைமையிலான போலீஸ் படை வந்து தடுத்து நிறுத்தியது.   அதை ஒரு மானப் பிரச்சனையாக எடுத்துக் கொண்டு தடை செய்யப்பட்ட அதே இடத்தில்  தவ்ஹீது  மாநாட்டை  யாரும்  நடத்தவில்லை.  தடை செய்யப்பட்ட அதே தமுக்கம் மைதானத்தில்  எதிர்ப்புகளை முறியடித்து  பீ.ஜே.யுடன் இணைந்து தவ்ஹீது மாநாட்டை  2000ல் வெற்றிகரமாக  நடத்தி முடித்தோம்.