ஈமானுடையவர்களே இவனிடத்தில் உஷாராக இருங்கள்.

பி.ஜே. தன்னை பெரிய தமிழ் பண்டிதர்போல் காட்டிக் கொண்டு தனது இமேஜை கூட்டிக் கொள்ள குர்ஆனையும் விட்டு வைக்கவில்லை. அவரது தர்ஜுமாவின் 4ஆவது வெளியீட்டில் 1211ஆம் பக்கம் (முதல் வெளியீட்டின்) 1341 ஆம் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதைப் பாருங்கள்.

அரபு மொழியில் "யார் உங்களை அடித்தார்களோ அவர்களை நீங்களும் அடியுங்கள்" என்பன போன்ற சொற்றொடர்கள் சர்வ சாதாரணமாகவே பயன்படுத்தப்படும். அதுதான் அம்மொழியில் நல்ல நடைக்கு அடையாளமாகவும் இருக்கும். ஆனால் தமிழ் மொழியில் மிக மிக அரிதாகவே இது போன்ற சொற்றொடர்களைப் பயன்படுத்துவோம். எனவே "உங்களை அடித்தவர்களை நீங்களும் அடியுங்கள்" என்று இதைத் தமிழ்ப்படுத்துவது தான் தமிழுக்கு நெருக்கமான நடையாகும். "யார் உங்களை ஏமாற்றினார்களோ அவர்கள்" என்பதை உங்களை ஏமாற்றியவர்கள் என்று நாம் தமிழ்ப்படுத்தியுள்ளோம்
என்று எழுதியுள்ளார். குர்ஆனில் உள்ள வசனத்தை குறிப்பிட்டுக் காட்டி அதை இப்படி எளிதாக்கியுள்ளேன் என்று எழுதவில்லை. குர்ஆனில் இல்லாத ஒரு வசனத்தை இவராகவே கற்பனை செய்துகொண்டு அதை இப்படி எழுதினால் (உம்மா வழியில்) தமிழுக்கு நெருக்கம். (வாப்பா வழியில் தமிழுக்கு தூரம்) என எழுதியுள்ளார். தனது மே(ல்)தாவித் தனத்தைக் காட்ட குர்ஆன் தர்ஜுமாவை பயன்படுத்தியுள்ளார்.

பி.ஜே. குறிப்பிட்டுள்ளது பொய்யானது அறிவிலித்தனமானது.

பி.ஜே. கற்பனை செய்துள்ள வசனத்தையே எடுத்துக் கொள்வோம். அதுவே பி.ஜே.யின் அறிவில் கோளாறு ஏற்பட்டுவிட்டது என்பதற்கு சான்றாக உள்ளது. அவர் கற்பனை செய்துள்ள இரண்டு வசனங்களுக்கும் இடையில் பெரிய வித்தியாசமே உள்ளது. "அடித்தவர்களை அடியுங்கள்" என்பதை கட்டளையாகவோ அனுமதியாகவோ எடுத்துக் கொள்ளலாம். இதில் கட்டளை அனுமதி ஆகிய 2 நிலைதான் உள்ளது. கண்டிப்பு எதுவும் இதில் இல்லை. "யார் அடித்தார்களோ அவர்களை அடியுங்கள்" என்பதில் அடித்தவர்களைத்தான் அடிக்க வேண்டும். மற்றவர்களை அடித்து விடக் கூடாது என்ற அழுத்தமும் அந்த வசனத்தில் அடங்கி இருக்கிறது. இந்த நடை எல்லா மொழிகளிலும் உள்ளது போல் தமிழ் மொழியிலும் உண்டு. தமிழ் மொழியில் மிக மிக அரிதாகவே பயன்படுத்துவோம் என பி.ஜே. குறிப்பிட்டுள்ளது பொய்யானது அறிவிலித்தனமானது என்பது அறிவுள்ளவர்களுக்குத் தெரியும்.

குர்ஆன் நடையை கொச்சைப்படுத்தியுள்ளார் பி.ஜெ.

... அரபு மொழியில் ஷஷதனது கைகளையும், தனது கால்களையும், தனது முகங்களையும், தனது தலையையும் கழுவினான்" என்று குறிப்பிடுவார்கள். அவ்வாறு குறிப்பிடுவது அம்மொழியில் சிறந்த நடை. ஆனால் தமிழ் மொழியில் இவ்வாறு குறிப்பிட்டால் மிகவும் கொச்சையாகத் தோற்றமளிக்கும் என்று எழுதி எழுத்து நடையின் பெயரால் குர்ஆன் நடையை கொச்சைப்படுத்தியுள்ளார். கொச்சைப்பட்டுப்போன பி.ஜே. யாருடைய வார்த்தைகளை? அல்லாஹ்வின் வார்த்தைகளை அப்படியே மொழி பெயர்த்தால் கொச்சையாக இருக்குமாம். எனவே இந்த மே(ல்)தாவி நல்ல நடையில் திருத்தி எழுதியுள்ளாராம். தனது கைகள், கால்கள், முகம் மற்றும் தலையைக் கழுவினான்" என்று கூறுவதுதான் நல்ல மொழி நடை எனப்படும். தனது என்ற சொல் நான்கு இடங்களில் இடம் பெற்றிருந்தாலும் தமிழுக்கு ஒரு தனது என்பதே போதுமானது. 'அவனது' 'அவளது' 'அவர்களின்' 'அவர்களுடைய' என்பன போன்ற சொற்கள் ஒரு வாக்கியத்தில் பல தடவை பயன்படுத்தப்பட்டாலும் ஒரு தடவைதான் அதைக் குறிப்பிட்டுள்ளோம் என்றும் எழுதியுள்ளார். இந்த அடிப்படையில், உங்கள் செல்வங்களிலும் உங்கள் உயிர்களிலும் சோதிக்கப்படுவீர்கள்.. என்ற 3:186வது வசனத்தை உங்கள் செல்வங்களிலும் உயிர்களிலும் சோதிக்கப்படுவீர்கள்.. என்று மொழி பெயர்த்துள்ளார்.

என்ன பொருள் வருகிறது புரிகிறதா?
உங்கள் மனைவியர் உங்கள் விளை நிலங்கள் ஆவார்கள். எனவே உங்கள் விருப்பப்படி உங்கள் விளை நிலங்களுக்குச் செல்லுங்கள்.. இது அல்குர்ஆன் 2:223வது வசனமாகும். இதில் 4 தடவை உங்கள் என்ற சொல் வருவதால் மே(ல்)தாவி பி.ஜே. அறிவுப்படி ஒரு தடவை மட்டும் உங்கள் என்ற சொல்லை இடம் பெறச் செய்து மனைவியர் விளை நிலங்கள் ஆவார்கள். எனவே உங்கள் விருப்பப்படி விளை நிலங்களுக்குச் செல்லுங்கள் என்று படித்தால் என்ன பொருள் வருகிறது புரிகிறதா? ஈமானுடைய ஒவ்வொருவரும் உஷார் அடைய வேண்டிய தருணம் இது புரிந்து கொள்ளுங்கள்.

பொய்யர், பித்தலாட்டக்காரர், பிராடு, வரட்டு கவுரவம் பிடித்தவர்.

சாதாரணமாக சொல்லும்போது உன் மனைவி மக்கள் உடன் பிறப்புக்கள் என்பார்கள். ஒரு விஷயத்தில் இவர்கள் அவனுக்கு பயன்படவில்லை என்ற நிலையில், விவகாரமாக பேசும்போதும், ஒவ்வொன்றும் உன்னுடையதாக இருந்தும் அவை உனக்கு பயன் தரவில்லை என்பதையும் பயன் தராது என்பதையும் உணர்த்தும் போதும், உபதேசிக்கும் போதும், ஓன்றை கவனமுடன் கேட்க வேண்டும் மனதில் ஆழமாக பதிய வைக்க வேண்டும் என்ற நோக்கில் அழுத்தத்துடன் சொல்லும்போதும்,. உன் மனைவி உன் மக்கள் உன் உடன் பிறப்புக்கள் உன் செல்வம் இதுவா உனக்கு உதவியது என்றுதான் சொல்லுவார்கள். அதாவது ஒரு வாக்கியத்தில் ஒரு சொல்லை பல தடவை பயன்படுத்தத்தான் செய்வார்கள். எனவே ஒரு வாக்கியத்தில் ஒரு சொல் பல தடவை பயன்படுத்தப்படுவது என்பது எந்த மொழியிலும் கொச்சையாக ஆகாது. மே(ல்)தாவி பி.ஜே. ஒரு பொய்யர், பித்தலாட்டக்காரர், பிராடு, வரட்டு கவுரவம் பிடித்தவர் என்பதை முன்பு பல வழிகளிலும் நிரூபித்திருக்கிறோம். குறிப்பாக அவரது உரையிலிருந்தும் ஆதாரத்துடன் நிரூபித்திருக்கிறோம். இப்பொழுது அவரது தர்ஜுமாவில் அவர் வைத்துள்ள இந்த மே(ல்)தாவித் தனமான வாதம் மூலமும் நிரூபிக்க உள்ளோம். பாருங்கள் இன்ஷாஅல்லாஹ். அவரது தர்ஜுமாவின் 4ஆவது வெளியீட்டில் 295ஆம் பக்கம்


தமிழுக்கு ஒரு சொல் போதுமானது என்று எழுதியது என்ன ஆயிற்று?

உங்கள் அன்னையர், உங்கள் புதல்வியர், உங்கள் சகோதரிகள், உங்கள் அன்னையின் சகோதரிகள், சகோதரனின் புதல்விகள், சகோதரியின் புதல்விகள், உங்களுக்குப் பாலூட்டிய அன்னையர், பால்குடிச் சகோதரிகள், உங்கள் மனைவியரின் அன்னையர், நீங்கள் தாம்பத்திம் நடத்திய மனைவிக்குப் பிறந்த உங்கள் பொறுப்பில் உள்ள மனைவியின் புதல்விகள், ஆகியோர் (மணமுடிக்க) விலக்கப்பட்டுள்ளனர்... 4:23வது வசனத்திற்கு மே(ல்)தாவி பி.ஜே. செய்துள்ள மொழி பெயர்ப்பின் ஒரு பகுதி இது. இந்த ஆயத்தின் மேற்கண்ட ஒரு பகுதியில் மட்டும் உங்கள் என்ற சொல்லை ஆறு தடவை இடம் பெறச் செய்துள்ளார். மீதமுள்ள பகுதியில் மேலும் மூன்று தடவை உங்கள் என்ற சொல்லை இடம் பெறச் செய்துள்ளார். ஒரு சொல் நான்கு இடங்களில் இடம் பெற்றிருந்தாலும் தமிழுக்கு ஒரு சொல் போதுமானது என்று எழுதியது என்ன ஆயிற்று? அவரது இமேஜைக் கூட்ட செய்துள்ள வரட்டு வாதம்தானே.

எந்த கை, கால், முகம் சம்பந்தமாக உதாரணம் காட்டி எழுதியுள்ளாரோ அந்த கை, கால், முகம் சம்பந்தமான ஆயத்தை பி.ஜே. எப்படி மொழி பெயர்த்துள்ளார் என்பதையும் பாருங்கள். அவரது தர்ஜுமாவின் 4ஆவது வெளியீட்டில் 330ஆம் பக்கம்


பி.ஜே. எழுதியுள்ளது மேல்தாவித் தனமானமான செயல்தானே.

நம்பிக்கைக் கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காக தயாராகும்போது உங்கள் முகங்களையும், மூட்டுக்கள் வரை உங்கள் கைகளையும், கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள்! உங்கள் தலைகளை (ஈரக்கையால்) தடவிக் கொள்ளுங்கள்! குளிப்புக் கடமையானவராக நீங்கள் இருந்தால் (குளித்து) தூய்மையாகிக் கொள்ளுங்கள்! நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால், அல்லது உங்களில் ஒருவர் கழிப்பறையிலிருந்து வந்தால், அல்லது (உடலுறவின் மூலம்) பெண்களை தீண்டினால் தண்ணீர் கிடைக்காத போது தூய்மையான மண்ணைத் தொட்டு அதில் உங்கள் முகங்களையும், கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. மாறாக நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப் படுத்தவும், தனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தவுமே விரும்புகிறான். இதுதான் 5:6வது வசனத்திற்கு பி.ஜே. செய்துள்ள மொழி பெயர்ப்பு. அப்படியானால், ஒரு வாக்கியத்தில் ஒரு சொல் பல தடவை பயன்படுத்தப்பட்டாலும் ஒரு தடவைதான் அதைக் குறிப்பிட்டுள்ளோம் என்று பி.ஜே. எழுதியுள்ளது எப்படிப்பட்ட செயல்? தர்ஜுமா மூலம் அவரது இமேஜைக் கூட்ட செய்துள்ள மேல்தாவித் தனமானமான செயல்தானே அன்றி வேறில்லை.

ஈமானுடையவர்களே இவனிடத்தில் உஷாராக இருங்கள்.

5:6வதான இந்த வசனத்தில் நான்கு இடங்களில் நீங்கள் என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளார். ஐந்து இடங்களில் உங்கள் என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளார் உங்களில், உங்களுக்கு போன்றவற்றை சேர்த்தால் எட்டு இடங்களில் உங்கள் என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளார். அவருக்கு மூளை வரண்டு போய் விட்டதா? பைத்தியமாக ஆகி விட்டாரா? ஷைத்தானாக மாறி விட்டாரா? ஷைத்தான் பி.ஜே.யாக மாறி விட்டானா? அல்லாஹ்வின் வார்த்தைகளை அப்படியே மொழி பெயர்த்தால் கொச்சையாக இருக்கும் என கிறுக்கித்தனமாக எழுதிவிட்டு அதை நிலை நிறுத்த .. தூய்மையான மண்ணைத் தொட்டு அதில் உங்கள் முகங்களையும், உங்கள் கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்! என்று வரும் தொடரில் உள்ள இரண்டில் ஒரு உங்கள் என்பதை மட்டும் நீக்கி விட்டு உங்கள் முகங்களையும், கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்! என மொழி பெயர்த்துள்ளார். கொச்சைப் பட்டுப் போன மே(ல்)தாவியின் மனோ இச்சையைப் பார்த்தீர்களா? ஏன் இந்த வரட்டு வேதாந்த வேலை. அல்லாஹ்வின் வார்த்தைகளை நிராகரித்தால் அவன் காபிர். அல்லாஹ்வின் வார்த்தைகளை நீக்கினால் அவன் யார்? அவனுடைய ஈமானின் நிலை என்ன? ஈமானுடையவர்களே இவனிடத்தில் உஷாராக இருங்கள்.

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.