ஒரே குடும்பத்தைச் சார்ந்த இரண்டு பேர் பலி

பத்ரில்தான் அல்லாஹ்  முஸ்லிம்களுக்கு போர் செய்ய அணுமதி தந்து விட்டேன் என்று பிரகடனம் செய்தான்

எதிரிகளின் கழுத்துகளுக்கு மேலே வெட்டுங்கள். அவர்களின் ஒவ்வொரு இணைப்பையும் வெட்டுங்கள்!' (8:12) 

கண்ட இடத்தில் கொல்லுங்கள். அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களுக்காக காத்திருங்கள் (9:5)    

பிடரிகளை வெட்டுங்கள் (47:4). இப்படி அல்லாஹ் ஆயத்துகளை இறக்கியுள்ளான். ஆயத்துகள் உண்மைதான். எங்கே இறக்கினான்? எப்பொழுது இறக்கினான்? இதை மட்டும் மறைத்து மறைத்து விடுவார்கள்.



இஸ்லாத்தை விரும்பாதவர்கள் போர்க் களத்தில் இறக்கினான் என்பதை மறைத்து விட்டு. இப்படிப்பட்ட ஆயத்துக்களை மட்டுமே எடுத்துக் கொண்டு. வாளால் பரப்பப்பட்ட மார்க்கம், மதத்தை பரப்புவதற்கு போர் செய்ய துாண்டுகிற மார்க்கம், மனித நேயத்தை மதிக்கத் தெரியாத மார்க்கம், மனித நேயத்தோடு விளையாடுகின்ற மார்க்கம். இப்படியெல்லாம் பரப்புகின்றார்கள்

குர்ஆனில் உள்ள இந்த மாதிரி வசனங்களை நீக்க வேண்டும் என்கிறார்கள். இந்தியாவில் மட்டும் அல்ல உலககெங்கும் உள்ள இஸ்லாத்தை விரும்பாதவர்கள். இஸ்லாம் தீவிர வாதத்தை போதிக்கின்ற மார்க்கம். பயங்கர வாதத்தை போதிக்கின்ற மார்க்கம். திரு குர்ஆனில் எப்படிப்பட்ட வசனங்கள் எல்லாம் இடம் பெற்றிருக்கிறது பாருங்கள். இப்படிச் சொல்லி பாமர மக்களிடம் விஷமத்தனமான பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கின்றார்கள்.

இதற்குரிய விளக்கங்களை இந்த தொடரின் இறுதி நிலைக்கு வந்து விட்ட நாம். இந்த இடத்தில் நினைவுபடுத்தக் கடமைப்பட்டுள்ளோம். ரசூல்(ஸல்) அவர்கள் மதீனா சென்று 2 ஆண்டு காலம் கழித்துதான் இந்த பத்ருப் போர் நடந்தது. மக்காவில் 13 ஆண்டு காலம். மதீனாவில் 2 ஆண்டு காலம். ஆக 15 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அல்லாஹ் முஸ்லிம்களுக்குப் போர் செய்ய அனுமதி என்று சொல்லுகிறான். இந்த போர் செய்ய அனுமதியை எந்த நேரத்தில் எப்பொழுது எதற்காக எந்த சூழ்நிலையில் அல்லாஹ் கொடுக்கிறான்? இதையும் வரலாற்றுப் பின்னணியோடு நினைத்துப் பார்க்க வேண்டும். ஏன்?

முஹம்மது (ஸல்) தன்னை இறைத் துாதர் என்று பிரகடனப்படுத்தினார். அதை ஏற்காத மக்கள் இருந்தார்கள். அவர்களிடத்திலே போர் செய்து கட்டாயமாக மத மாற்றம் செய்தார். பலவந்தமாக வாளை காண்பித்து மிரட்டி, கத்தி முனையில் இந்த இஸ்லாத்தை முஹம்மது (ஸல்) பரப்பினார் என்கிறார்கள். 

வரலாற்றை படிக்காமல் எதார்த்தத்தை புரியாமல், உண்மையை அறியாமல். இஸ்லாத்தின் மீது தப்பும் தவறுமான பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் 15 ஆண்டு காலம் இந்த பிரச்சாரத்தை செய்தார். இந்த கொள்கையை ஏற்றுக் கொண்டவர்களில் ஒருவர் சுமையா(ரலி). அம்மார்(ரலி) அவர்களின் தாயார். அவர்களை ஒரு பெண் என்று கூட பார்க்கவில்லை. மக்காவில் உள்ள அத்தனை பேரும் கொடுமைப்படுத்தினார்கள். இறுதியாக அபு ஜஹ்ல் என்பவன் அவர்களது மர்மஸ்தானத்தில் ஈட்டியால் குத்திக் கொலை செய்தான்.

இந்த சம்பவம் நடந்த உடன் இறைவனின் துாதர்(ஸல்) அவர்கள். தான் சொன்ன கொள்கையை ஏற்றுக் கொண்ட ஒரு பெண்ணுக்கு இப்படிப்பட்ட ஒரு அநியாயம் மக்காவில் நடந்து இருக்கிறது. ஆகவே இந்தக் கொள்கையை யாரெல்லாம் ஏற்றுக் கொண்டு இருக்கிறீர்களோ. அவர்கள் அனைவரும் வாளை ஏந்தி வாருங்கள். எல்லோரும் அவர்களுக்கு எதிராகப் போர் செய்து பழி தீர்ப்போம் என்று யுத்தப் பிரகடனம் செய்தார்களா? இல்லை. 

தன்னையும் தன்னுடைய மார்க்கத்தையும் தனது துாதரையும் ஏற்றுக் கொண்ட ஒரு பெண். ப(ம)க்கா மாநகரில் அரக்கர்களால் அநியாயமாக கொல்லப்பட்டு விட்டார், இதற்காக அல்லாஹ் தனது துாதருக்கு வசனத்தை இறக்கினானா? இந்த கொடுமைக்கு எதிராக போர் செய்யுங்கள் என்று கட்டளை பிரப்பித்தானா? இல்லையே.

சுமையா(ரலி) அவர்களின் கணவர் அம்மார்(ரலி) அவர்களின் தந்தை யாஸிர்(ரலி). அதே மக்கத்து பெரு வீதியில் படு கொலை செய்யப்பட்டார்கள் எப்படி? அவரது இரண்டு கால்களையும் இரண்டு ஒட்டகங்களில் கட்டினார்கள். அந்த ஒட்டகங்கள் இரு வேறு எதிர் எதிரான திசைகளை நோக்கி விரட்டி விட்டார்கள். உடல் இரண்டு கூறுகளாக கிழிக்கப்பட்டு கொல்லப்பட்டார். ஒரு கொள்கையை ஏற்றுக் கொண்டதற்காக. ஒரே குடும்பத்தைச் சார்ந்த இரண்டு பேர் பலி இடப்பட்டு இருக்கிறார்கள். சொந்தப் பிரச்சனையில் ஒருவர்  கொல்லப்பட்டாலே மதப் பிரச்சனையாக ஆக்கி நாட்டை கலவரக் காடாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அல்லாஹ்வுடைய துாதரின் கண் எதிரே இரண்டாவது உயிர் பறிக்கப்பட்டது சொந்தப் பிரச்சனையா?. துாதர் அல்லாஹ்விடம்தான் பிரார்த்தனை செய்தார். மக்களை துாண்டி விடவில்லை.  அப்பொழுதாவது அவர்களது பிடரி நரம்பை வெட்டுங்கள். அவர்களை பிடியுங்கள். அவர்களுக்கு எதிராக போர் செய்யுங்கள் என்று அல்லாஹ் கட்டளை இட்டானா? இல்லை

அதே குடும்பத்தைச் சார்ந்த அவர்களது மகன் அம்மார்(ரலி) அவர்களை பாலைவனச் சுடுமணலில் படுக்க வைத்தார்கள். நெஞ்சின் மீது பாறாங்கல்லை வைத்தார்கள். நினைவிழக்கும் வரை தண்ணீரில் மூழ்கடித்தார்கள். இப்படி தினமும் தொடர்ந்தது. ஒரு நாள் அல்ல. இரண்டு நாட்கள் அல்ல. 10 வருட காலம் சித்திரவதை செய்தார்கள். அப்பொழுதாவது இந்த வசனத்தை இறக்கி போர் செய்ய துாண்டினானா அல்லாஹ்? இல்லை.

தொல்லைகளை தாங்க முடியாமல், வேதனைகளை தாங்க முடியாமல். மக்களெல்லாம் நாடோடிகளாக ஆனார்கள். தங்களுடைய கொள்கையைக் காப்பாற்ற சொந்த நாட்டை விட்டு அபீஸீனியாவுக்கு ஓடிய ஒரு கொடுமை. இது உலக வரலாற்றில் எங்கும் பார்க்க முடியாதது. அந்த கொடுமைக்குப் பிறகாவது. துாதர் போர் செய்ய துாண்டினார்களா? அல்லாஹ்தான் போர் செய்ய துாண்டுகின்ற வசனத்தை இறக்கினானா? இல்லை. 

மக்காவில் கடுமையான எதிர்ப்பு. எந்த அளவுக்கு முற்றியது இறைவனின் துாதரான முஹம்மது(ஸல்) அவர்களை கொலை செய்கின்ற அளவுக்கு முற்றி விட்டது. மக்கத்து மக்கள் கொலை செய்ய துணிந்து விட்டார்கள். அப்பொழுதுதாவது மக்களை துாண்டி விட்டார்களா?

தாயிபுக்கு சென்றார்கள். அங்கு என்ன நடந்தது? தாயிபு நகரத்து மக்கள் தாஹா நபியை ஓட ஓட விரட்டி அடித்தார்கள். மனிதர்களை மனிதர்கள் அடிப்பார்கள் என்பது சகஜம். தன்னுடைய பிரதிநிதி மீது கை வைத்து விட்டார்கள் என்றால் சாதாரண மனிதன் கூட சும்மா இருக்க மாட்டான். 

ஆனால் படைத்த அல்லாஹ். தன்னுடைய பிரதிநிதியான துாதரை ஓட ஓட அடித்து விரட்டி விட்டார்கள். அதைப் பார்த்த அல்லாஹ் போர் என கட்டளை இட்டானா? இல்லை

வருடக்கணக்கில் கணவாயில் சமூக பகிஷ்காரம் செய்து வைத்து இருந்தார்கள். பொருளாதார தடை விதித்து உணவு கூட கிடைக்க முடியாதபடி சித்திரவதை செய்தார்கள். அப்பொழுதுதாவது அல்லாஹ்வின் துாதர்(ஸல்) பொறுத்தது போதும் பொங்கி எழுங்கள் என்று சொன்னார்களா? . அல்லாஹ்தான் போர் செய்யுங்கள என்று ஆணை இட்டானா? இல்லை.


சொந்த ஊரை விட்டு விட்டு ஓட வைத்தார்கள். உங்கள் பொருளாதாரங்களை எடுத்துக் கொண்டு செல்லக் கூடாது. போகின்றவர்கள் போய்க் கொள்ளுங்கள். எல்லா பொருளாதாரங்களையும் விட்டு விட்டுத்தான் போக வேண்டும் என்று அறிவித்தார்கள்எல்லோரும் சம்பாதித்த சொத்துக்கள், வீடு, நிலங்கள், தோட்டங்கள் என எல்லாவற்றையும் விட்டு விட்டு மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்ய வைத்தார்கள்

அப்பொழுதுதாவது அல்லாஹ் மதீனாவிலிருந்து படைகளை திரட்டிக் கொண்டு மீண்டும் மக்காவுக்கு வாருங்கள். வந்து நீங்கள் போர் செய்ய வேண்டும் என்று உத்தரவு போட்டானா? அபீஸீனியா சென்று விட்டவர்களையும் அங்கு சும்மா இருக்க விட்டார்களா? இல்லை. மக்காவிலிருந்து புறப்பட்டுப் போய் குழப்பங்கள் செய்தார்கள். அங்கேயும் நிம்மதியாக வாழ விடாமல் விஷமத்தனம் செய்தார்கள். இந்தக் காபிர்கள் எப்படிப்பட்ட கொடூர மனம் படைத்தவர்கள் என்பதை அல்லாஹ்வே சொல்லிக் காட்டி உள்ளான். எப்படி சொல்லிக் காட்டி உள்ளான்?
http://mdfazlulilahi.blogspot.ae/2016/10/blog-post_16.html 

அடுத்த தலைப்பு
(கோவை போன்ற ஊர்) கொடுமைக்காரர்கள் பற்றி அல்லாஹ் என்ன சொல்லி உள்ளான்?

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.