மெகா மோசடிக்கு எதிராக என்ன முயற்சி செய்தீர்கள்.

-------Original Message-------  From: JameelDate: 07/02/05 16:16:24To: layavan@pjvstmmk.com

 ஏகனின் திருப் பெயரால் . இளையவளே! உமது இணைதளத்தில் பழுலுல் இலாஹி என்பவர் என்னை விமர்சித்து எழுதிய கடிதம் கண்டேன். ரெம்ப சந்தோஷம். உமது ஒப்பற்ற?! சேவையால் சில சகோதரர்கள் என்னிடம் விளக்கம் கேட்டார்கள். அவர்களுக்கு எனது பதிலை தெரிவித்தன் மூலம் இறையருளால் அவர்கள் தெளிவு பெற்றார்கள். உண்மை எது என்பதையும் சத்தியத்தின் பக்கம் யார் இருக்கிறார்கள் என்பதையும் அவர்கள் நன்றாகவே புரிந்து கொண்டார்கள். ஒரு குறிப்பிட்ட சகோதரர்களுக்கு மட்டுமே தெரிந்த என்னை பலரும் அறிய செய்த இளையவனே உமக்கு எனது மனமார்ந்த நன்றிகள். தொடரட்டும் உமது உன்னத சமூக சேவை!? வஸ்ஸலாம்.
                                                அன்புடன் கீழை ஜமீல் முஹம்மது.
-----------------------------------------------------------------------------------------------------------------------
                        பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.                   03-07-2005
இந்த மெகா மோசடிக்கு எதிராக என்ன முயற்சி செய்தீர்கள்.

கண்ணியத்திற்குரிய இளையவன் அவர்கட்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. பி.ஜே.யின் அடிவருடி கீழை ஜமீல் என்பவர் தங்களுக்கு அனுப்பியுள்ள மேற்கண்ட கடிதம் கண்டேன். மோடி (மஸ்த்தான்) வேலை என்பார்களே  அந்த மோடி வேலையைத்தான் அவரது கடிதத்தில் காட்டியுள்ளார். 

சில சகோதரர்கள் என்று மொட்டையாக குறிப்பிட்டுள்ளார். பலர் தங்கள் பெயரை வெளியிடக் கூடாது என்று சொல்லிக் கொண்டு கேள்வி கேட்பது உண்டு. எனவே சில சகோதரர்கள் யார் என்பது தேவை இல்லை. 

என்ன விளக்கம் கேட்டார்கள்? அதற்கு என்ன விளக்கம் கொடுத்தார்? என்பதை குறிப்பிடாமல் சத்தியத்தின் பக்கம் யார் இருக்கிறார்கள் என்பதையும் நன்றாகவே புரிந்து கொண்டார்கள் என்றால் அது மோடி வேலைதான். 

பி.ஜே.யின் அடிவருடி கீழை ஜமீல் உண்மையாளர் என்றால், அவர் மோடி வழியில் இல்லை என்றால், சில சகோதரர்கள் கேட்ட கேள்வி என்ன? இவர் கொடுத்த பதில் என்ன, என்பதை உடனே வெளியிடட்டும். வெளியிடாமல் வேறு ஏதாவது சால்ஜாப்புக் கூறினால் பி.ஜே.யின் அடிவருடி கீழை ஜமீல் யார் என்பது விளங்கி விடும்.

இப்பொழுது ஜமீல் என்ற ஐ.டி.யிலிருந்து தங்களுக்கு மெயில் அனுப்பியுள்ள கீழை ஜமீல் அவர்கள் அபுபக்கர் தம்பி என்ற மெயில் ஐ.டி.யிலிருந்து 24-06-2005 அன்று எனக்கு அனுப்பி இருந்தார்கள். அதற்கு த.த.ஜ. தொண்டன் என்பவரின் லட்சணம் பாரீர் என்ற தலைப்பில் பதில் அனுப்பி இருந்தோம். 

அத்துடன் கீழை ஜமீல் 20,24 ஆகிய தேதிகளில் நமக்கு மெயில் அனுப்பி இருந்தார் என்பதற்குரிய ஆதாரத்திற்காக குறிப்பிட்ட பகுதிகளை காப்பி செய்து இணைத்திருந்தோம். அதைப் பார்த்தவர்களில் சில த.த.ஜ.வினர் ஜமீல் அனுப்பிய விமர்சன வார்த்தைகளை நீக்கியது சரியா? இது மோசடி இல்லையா என்று கேட்டார்கள்.

உங்கள் கேள்வி நியாயமானது ஜமீல் என்ற மனிதருடைய லட்டரில் உள்ள வார்த்தைகளை நீக்கியது மோசடி என்றால் குர்ஆன் மொழி பெயர்ப்பிலிருந்து அல்லாஹ்வின் வார்த்தைகளை நீக்கியுள்ளது மெகா மோசடி அல்லவா? 

ஜமீல் அவர்களுடைய வார்த்தை குறிப்பிட்ட எல்கைக்கும் காலத்திற்கும் உட்பட்டது. அல்லாஹ்வின் வார்த்தைகள் எந்த எல்கைக்கும் உட்படாதது. இந்த மெகா மோசடிக்கு எதிராக என்ன முயற்சி செய்தீர்கள் என்று கேட்டோம் பதில் இல்லை. 

ஜமீல் அவர்களிடமிருந்து வந்த இரு மெயில்களையும் வந்த அன்றே பலருக்கும் பார்வேடு பண்;ணிவிட்டோம். அதை இளையவன் அவர்களும் அப்படியே சைட்டில் போட்டார்கள். த.த.ஜ. தொண்டன் என்பவரின் லட்சணம் பாரீர் என்ற வெளியீடு சென்ற பின்தான் அதை மாற்றி வெளியிட்டார்கள். 

ஜமீல் அவர்கள் என்ன விமர்சனம் செய்தார் என்பதை குறிப்பிட்டுத்தான் பதில் வெளியிடுவோம். (பி.ஜே.யின் நீண்ட நாளைய நண்பர் நடிகர் டி.ராஜேந்தர் என்ற தலைப்பிலான பதிலில் கீழை ஜமீலின் விமர்சனம் இடம் பெற்றுள்ளது) அவரிடமிருந்து மெயில் வந்தது என்ற ஆதாரத்திற்காகத்தான் சுருக்கமாக வெளியிட்டோம் என்று விளக்கினோம் ஏற்றுக் கொண்டார்கள். 

பி.ஜே. மொழி பெயர்ப்பிலிருந்து நீக்கி விட்ட அல்லாஹ்வின் வார்த்தைகள் சம்பந்தமான கேள்விக்கு அவர்களால் பதில் தர முடியவில்லை. 

எனவே சில சகோதரர்கள் விளக்கம் கேட்டதற்கு இறையருளால் தெளிவு கொடுத்ததாக தங்களுக்கு பெருமையாக எழுதியுள்ள கீழை ஜமீல் அவர்களிடம், குர்ஆன் மொழி பெயர்ப்பிலிருந்து அல்லாஹ்வின் வார்த்தைகளை நீக்கியது மெகா மேசாடிதான் என்ற குற்றச்சாட்டுக்கும் அடுத்துள்ள கேள்விகளுக்கும் விளக்கம் பெற்றுத் தர வேண்டுகிறேன். 

முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் ஸலாம் சொல்ல வேண்டும் என்று கூறும் பி.ஜே. அணியினர் முஸ்லிம்களுக்கு ஸலாம் சொல்வதில்லையே ஏன்? கீழை ஜமீல் உங்களுக்கு அனுப்பிய மெயிலிலும் உங்களுக்கு ஸலாம் சொல்லவில்லை. எனக்கு போன் போட்டாலும் ஸலாம் சொல்வதில்லை. 

துக்கம் விசாரிக்க வந்தவர்களிடம் பகைமை பாராட்டுவது இவையெல்லாம் நபி வழியா? ஷைத்தானின் வழியா? மேலும் நபிகள் நயாகம்(ஸல்) அவர்கள் அதிகமதிகம் யாரைப் பயந்தார்கள்? என்ற தலைப்பிலான வெளியீட்டிற்கும் கீழை ஜமீல் அவர்களிடமிருந்து விளக்கம் பெற்றுத் தர வேண்டுகிறேன். 
          அன்புடன்: கா.அ.முஹம்மது பழுலுல் இலாஹி



Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.