அவர்களது மனைவிமார்களே அவர்களை நம்பவில்லை

                         பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.                     10-07-2005

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. பல்வேறு பெயர்களில் மொட்டைக் கடிதங்களை அனுப்பியவர்களில் ஒருவர். பொய் சத்தியம் செய்து தன் மீதே அல்லாஹ்வின் லஃனத்தை வேண்டிக் கொண்ட இவர், அதற்குப் பிறகும் மொட்டைக் கடிதங்களை அனுப்பிக் கொண்டுதானிருக்கிறார். 

அவர் விமர்சிக்கப்படுவதிலிருந்து காக்கப்பட சரண் அடைந்தார். எனவே எழுதுவதை தவிர்த்தோம். சரண் அடைந்த அவர் இப்பொழுது வரம்பு மீறி விட்டதால் 12-01-2005 அன்று அந்நஜாத் ஆசிரியருக்கு அனுப்பப்பட்ட கடிதத்திலிருந்து எடுத்து எழுதி வருகிறோம். 

அதை, த.த.ஜ. தொண்டன் என்பவரின் லட்சணம் பாரீர், பி.ஜே.யின் வளைகுடா வசந்தம், அரபு நாட்டில் பி.ஜே. கைது செய்யப்படுவதிலிருந்து காப்பாற்றி விட்ட த.மு.மு.க ஆகிய தலைப்புகளில்  வெளியிட்டுள்ளோம். அதில் அல்லாஹ்வின் நாட்டம் த.மு.மு.க.வினர் தயவில் உலக மகா பிராடு கைதாகாமல் தப்பி விட்டார் என்பது வரை பார்த்தோம். அதன் தொடருக்கு வருவோம்.

பி.ஜே.தான் ஜவாஹிருல்லாஹ்வை முபாஹலாவுக்கு அழைத்துள்ளார்.

சந்தி சிரித்த சவால் என்பதில் குறிப்பிட்டுள்ள ஆடியோவை அப்படியே வெளியிடச் சொல்லி வற்புறுத்த வேண்டும். (அந்நஜாத் ஆசிரியராகிய) நீங்கள் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் குறிப்பிட்டு கூறுங்கள். ஜவாஹிருல்லாஹ்வை விவாதத்திற்கு கூப்பிட்டதாகவும் விவாதத்திற்கு மறுத்தால், வாதத் திறமையை வைத்து விவாதத்தில் ஜெயிப்பேன் என்று சொன்னால் விவாதம் வேண்டாம். முபாஹலாவுக்கு வரட்டும் என்று கோவை அப்துல் றஹீமுக்கு பி.ஜே. எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். 

அதில் கூட என்ன பித்தலாட்டம் பண்ணி இருந்தார். யாரும் கையெழுத்து போட மாட்டோம் என்று சொல்லவில்லை என்று முபாஹலா பண்ண வேண்டும் என்று எழுதி இருந்தார். இப்படிப்பட்ட மன நோயாளி பி.ஜே.யின் இந்த பித்தலாட்டத்தை பி.ஜே. பிரகடனப்படுத்தி விட்ட மகத்தான உண்மை என்ற இரு பக்க வெளியீட்டில் அடையாளம் காட்டி உள்ளேன். 

முஸ்லிம் லைப்பரரி என்ற சி.டி.யில் இந்த வெளியீடும், பி.ஜே. கோவை அப்துர்றஹீமுக்கு அனுப்பிய கடிதம் றஹீம் 1, றஹீம் 2 ஆகிய பெயர்களில் உள்ளது. அதில் நான் வாதத் திறமையால் வென்று விடுவேன் என்று கூறினால் முபாஹலாவுக்கு வரட்டும் என்று இந்த பித்தலாட்ட பி.ஜே.தான் ஜவாஹிருல்லாஹ்வை முபாஹலாவுக்கு அழைத்துள்ளார். 

இந்த கடித ஆதாரம் இருக்கவே பொய்யன் ஷம்சுல் லுஹா ஜவாஹிருல்லாஹ்தான் முபாஹலாவுக்கு அழைத்த மாதிரி நவம்பர் ஏகத்துவத்தில் எழுதியுள்ளான். பொய்யனின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக.

மக்கள் சொன்னால் அந்த மேடையிலேயே விவாதமும் செய்வோம்.

கமாலுத்தீன் மதனிக்கு எதிராக பொய் சாட்சி சொன்ன பொய்யன், மன நோயாளி பி.ஜே.க்காக இந்த பொய்யை எழுதியுள்ளான். எப்படிப்பட்ட பொய்யை சொல்லச் சொன்னாலும் கூலிக்கு மாரடிக்கும் கூட்டத்தைச் சார்ந்h டி.என்.டி.ஜே. மவுலவிக் கூட்டம் வார்த்தை ஜாலத்தால் சத்தியம் செய்து மக்களை ஏமாற்றி விடும். அவர்களுக்கு சத்திய விஷயத்தில் அல்லாஹ்வின் பயம் கிடையாது. அதனால்தான் முபாஹலா என நான் அழைக்கிறேன். 

இவர்கள் பொய்யர்கள் என்பது இவர்களது மனைவி மக்களுக்கு நன்றாகத் தெரியும். அதனால் முபாஹலாவுக்கு அவர்கள் வர மட்டார்கள். வாதமும் முபாஹலாவும் பண்ணனும் என்று அழைத்ததாக திசை திருப்பி மக்களை ஏமாற்றி உள்ளதால், முபாஹலா மட்டும்தான் என்ற எனது நிலைபாட்டை தளர்த்தி விவாதம் என்பது மக்கள் புரிய வேண்டும் என்பதற்காகத்தானே. முதலில் முபாஹலா பண்ணுவோம். 

அந் நஜாத் (அபுஅப்துல்லாஹ்) பிரச்சனையில் ஆரம்பித்து வரிசையாக ஒவ்வொன்றுக்கும் முபாஹலா பண்ணுவோம். முபாஹலா முடிந்த பின் கூடி இருக்கும் மக்களிடம் யார் பொய்யர்கள் என்பது விளங்கி விட்டதா என்று கேட்போம். விளங்கவில்லை என்று கூடி இருக்கும் மக்கள் சொன்னால் அந்த மேடையிலேயே விவாதமும் செய்வோம் என்று அறிவிப்போம். 

பள்ளிவாசலை அபகரித்து விட்ட மவுலவி.

இதை இப்பொழுதே அறிவிக்கக் கூடாது. பித்தலாட்டக்காரர் பி.ஜே.தான் விவாதம் வேண்டாம். முபாஹலா மட்டும் போதும் என்று கூறி அவர்தான் முபாஹலாவுக்கு அழைத்தார் என்ற உண்மையை மக்களுக்கு திரும்பத் திரும்ப எழுதி தெளிவுபடுத்த வேண்டும். 

அவர் அப்துர் றஹீமுக்கு எழுதியுள்ள கடித காப்பியையும் அதற்கு மாற்றமாக முழுப் பூசணியை சோற்றில் மறைத்திடும் பொய்யாக ஏகத்துவத்தில் எழுதியள்ளதையும் ஸ்கேன் பண்ணி வெளியிட்டு முகத்திரையை கிழிக்க வேண்டும். 

முபாஹலா கூடாது என்ற கொள்கையுடைய ஜவாஹிருல்லாஹ்வுடன் முபாஹலா மட்டும் போதும் என்று கூறிய சவடால் பேர்வழியே! நீயும் உன்னுடன் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஜடாமுடி மன்னர்களும் அமானிதமாக ஒப்படைக்கப்பட்ட டிரஸ்டை அபகரித்தீர்கள். 

அதே மாதிரி, அமானிதமாக ஒப்படைக்கப்பட்ட பள்ளிவாசலை அபகரித்து விட்ட மவுலவி கூட்டங்களும் முபாஹலாவுக்கு வராமல் ஓடி ஒளிவது ஏன்? என்று நாக்கை பிடுங்கிற மாதிரியான பல கேள்விகளுடன் தொடர்ந்து மெயில் அனுப்புவேன். அவரது துபை பயணம் பற்றி எழுதி வைத்துள்ள எல்லா விமர்சனங்களையும் வெளியிட்ட பின் விவாதமும் முபாஹலாவும் செய்வது சம்பந்தமாக எழுதுவோம். 

மேடையில் தெளிவாக அறிவித்தால் அவர்களை விட்டு விடுவோம்.

பொய்யன் பி.ஜே.யை மட்டும் முபாஹலாவுக்கு அழைத்திருந்தால் வந்திருப்பான். அந்த ஆளுக்கு அல்லாஹ்வுடைய பயம் எதுவும் கிடையாது. இது பற்றி ஷம்சுல்லுஹா என்னிடம் அடிக்கடி சொல்லி இருக்கிறார். ஒரு முறை நரகத்தைப் பற்றி பி.ஜே. பேசிய வீடியோவை பார்த்துக் கொண்டிருந்தேன். அருகில் (இருந்து எழுதிக் கொண்டு) இருந்த லுஹா நரக தண்டனைகள் பற்றி இப்படியெல்லாம் பேசக் கூடிய இவருக்கு நரகத்தைப் பற்றிய அணுவளவு நம்பிக்கையோ பயமோ இருப்பதாகத் தெரியவில்லை. அவர் செயல்கள் யாவும் அப்படி இருக்கிறது என்றார். 

எனவே (அபுஅப்துல்லாஹ் அவர்களே) உங்களைப் பற்றிய குற்றச்சாட்டாக இருந்தாலும் அவருடன் உள்ள அனைவரையும் சேர்த்துதான் முபாஹலா பண்ண அழைக்க வேண்டும். எந்த குற்றச்சாட்டுகளாக இருந்தாலும் பி.ஜே. கூறியுள்ள அந்த குற்றச்சாட்டு பொய் அதை அவருடன் உள்ள நாங்களே நம்பவில்லை என்று மேடையில் தெளிவாக அறிவித்தால் அவர்களை விட்டு விடுவோம். 

அது பற்றி எங்களுக்குத் தெரியாது, ஞாபகம் இல்லை என்பது போன்ற பொய்களை சொல்லி நழுவப் பார்த்தால் அதையும் உண்மைப் படுத்தி அவர்களை முபாஹலா பண்ணச் சொல்ல வேண்டும். இந்த நிபந்தனையை 2002லேயே எழுதியதால்தான் முபாஹலாவிலிருந்து பின் வாங்கினார்கள். 

இல்லை என்றால் முபாஹலாவுக்கு தயார் என வந்து விட்டு, இது பற்றி எங்களுக்குத் தெரியாது அல்லது ஞாபகம் இல்லை என்று கூறி லுஹா, பாக்கர்  போன்ற கள்ளர்கள் ஒதுங்கி விட்டு நாத்திகன் பி.ஜே.யை முபாஹலா பண்ண விட்டு அன்றைக்கே சமுதாயத்தை ஏமாற்றி இருப்பார்கள். 

அனைத்து விஷயங்களுக்கும் முதலில் முபாஹலா செய்ய வேண்டும்.

இன்னொரு விஷயம் வார்த்தை விளையாட்டால் முபாஹலா பண்ணுவது. இதிலும் நாம் தெளிவாக எழுதி விட்டதால்தான் முபாஹலாவுக்கு வராமல் விவாதம் முடிந்து முபாஹலா என்கிறார்கள். 

விவாதம் ஏற்கனவே முடிந்து விட்டது. அவர்கள் நம்மீது வைத்த குற்றச்சாட்டுகள் வாதம். அதற்கு பதில் அளித்து நாம் வெளியிட்டு விட்ட வெளியீடுகள்  பிரதி வாதம். 

அதுபோல் மொட்டைக் கடித நாயகரும் கள்ளக் கடிதக்காரருமான பி.ஜே. மீதும் அவருடன் உள்ள மற்ற பிராடுகள் மீதும் நாம் வைத்த குற்றச்சாட்டுகள் வாதம். அதற்கு பதில் அளித்து அவர்கள் வெளியிட்ட வெளியீடுகளும் பதில் அளித்து பேசிய பேச்சுக்களும் பிரதி வாதம். 

ஆக 2 தரப்பினருக்கான விவாதம் முடிந்து விட்டது. நடந்து முடிந்து விட்ட விவாதம் மூலம் அறிவுள்ள மக்கள் பி.ஜே. அணிதான் பிராடு என தெளிவாக புரிந்து விட்டார்கள். குஷ்புவுக்கு கோயில் கட்டிய கிராம மக்களை விட மகா மட்டமான மண்டுகளான ரசிக குஞ்சுகள்தான் புரியாதவர்களாக உள்ளார்கள். 

அல்லது புரிந்தும் புரியாத மாதிரி நடிக்கிறார்கள். நடிகர்களுக்கு ரசிகர்களாக இருப்பவர்கள் அவர்களைப் போல் இல்லாவிட்டால் எப்படி ரசிகர்களாக இருக்க முடியும். நடந்து முடிந்து விட்ட விவாதங்கள் மூலம் ரசிகர்களுக்கு தெளிவு கிடைக்காததால்தான் முபாஹலாவுக்கு அழைக்கிறோம். 

எனவே முபாஹலா மட்டும் போதும் என்ற நிலையிலிருந்த நாம் இரண்டும் பண்ணுவோம் என்பதை ரசிகர்களுக்காக ஏற்கிறோம். எனவே அனைத்து விஷயங்களுக்கும் முதலில் முபாஹலா செய்ய வேண்டும். முபாஹலா முடிந்த பின்னரும் தெளிவு கிடைக்கவில்லை என்று சொன்னால் மீண்டும் விவாதம் என்ற அடிப்படையில் அழைப்பேன் இன்ஷா அல்லாஹ். 

அவர்களது மனைவிமார்களே அவர்களை நம்பவில்லை.

பி.ஜே. மனைவி கமர். கமர் என்ற அரபி சொல்லுக்கு ஆங்கில வார்த்தையான மூன் என்ற இந்த பெயரில்தான் பப்ளிகேஷன் வைத்துள்ளார். அந்த மூன் அவர்கள் அதாவது பி.ஜே.யின் துணைவியார் கமர் அவர்கள் கோவை அப்துர்றஹீமுக்கு பி.ஜே. கொடுத்த முபாஹலா கடிதம் சம்பந்தமாக தெரிந்த பின் இனி முபாஹலாவுக்கெல்லாம் நான் வர மாட்டேன். முஸ்லிம் டிரஸ்ட், உணர்வு எல்லாம் த.மு.மு.க. உடையதுதானே அப்படி இருக்க நான் எப்படி முபாஹலா போவேன் என்று சொன்னதாக பி.ஜே. மைத்துனர் ஷம்சு மூலம் கிடைத்த தகவலும் உள்ளது. 

எனவேதான் அவர்களது மனைவிமார்களே அவர்களை நம்பவில்லை என நாளை வெளியிடவிருக்கும் நொண்டிக்குதிரைக்கு சறுக்கியதுதான் சாக்காம் என்ற தலைப்பிலான வெளியீட்டில் குறிப்பிட்டுள்ளேன். 

முஸ்லிம்களை ஏமாற்றி பிழைக்க ஒரு ஒட்டுப் போட்டுள்ளார்.

அரசியல் ஈமானை இழக்கச் செய்து விடும் என்று அரசியலே வேண்டாம் என்றவர், கொள்கைப் பிரச்சனையால் அதுவும் தவ்ஹீது கொள்கைப் பிரச்சனையால் த.மு.மு.க.வை விட்டு வெளியேறியதாக  விளம்பரம் தேடி வந்தார். 

த.மு.மு.க.வில் உள்ள முஸ்லிம் என்ற பெயரில் அதிருப்தி கொண்டு கொள்கை ரீதியாக ஏனைய முஸ்லிம்களிடமிருந்து வேறுபட்டவர்கள் என்று காட்டவே தமிழ்நாடு முஸ்லிம் ஜமாஅத் என்று கூட பெயர் வைக்காமல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்று பெயர் வைத்துக் கொண்டார். 

கொள்கை ரீதியாக தனித்தவர்கள் என்று காட்டிக் கொள்வதாகவே அறிவித்தார். இப்பொழுது அவரது அமைப்பின் பெயரில் உள்ள ஓட்டையை உணர்ந்து விட்டார் என்று சொல்ல முடியாது. முஸ்லிம்களை ஏமாற்றி பிழைக்க ஒரு ஒட்டுப் போட்டுள்ளார். 

இந்த வார உணர்வின் 14 ஆம் பக்கம் டி.என்.டி.ஜே. நிர்வாகிகள் கவனத்திற்கு என்ற ஒரு விளம்பரம் வெளியிட்டுள்ளார். அந்த தலைப்பும் அதில் உள்ள அடிக்குறிப்பும் முரண்பாடாக உள்ளது. மேற்கண்ட விண்ணப்ப படிவம் பல்லாயிரக் கணக்கில் அச்சிடப்பட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளில் நமது செயல் வீரர்கள் கணக்கெடுத்து வருகிறார்கள் என்று அடிக் குறிப்பு உள்ளது. இதுவே விளம்பர விரும்பி பி.ஜே. தனது அணிக்கு விளம்பரம் தேடிக் கொள்ளவே அதை வெளியிட்டுள்ளார் என்று விளக்குகிறது. 

நிர்வாகிகள் கேவலப்பட்டாலும் பி.ஜே.க்கு விளம்பரம் முக்கியம்.

பல்லாயிரக் கணக்கில் விண்ணப்ப படிவம் அச்சிடப்பட்டது டி.என்.டி.ஜே. நிர்வாகிகளுக்கு தெரியாது. நிர்வாகிகளின் கவனத்திற்கு தெரியாமல் செயல்படும் செயல் வீரர்களை கொண்டதுதான் டி.என்.டி.ஜே. தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என்ற, தான் தோன்றித்தனமான அமைப்புதான் டி.என்.டி.ஜே. இதைத்தான் அந்த விளம்பரம் உணர்த்துகிறது. 

பொது மக்களுக்கு செய்தியாக தெரியும் பத்திரிக்கை மூலம்தான் தொண்டர்கள் செயல்பாடு நிர்வாகிகள் கவனத்திற்கு போவது போல விளம்பரம் வெளியிட்டுள்ளார். அதுபோல் வேறு கேவலம் ஒரு அமைப்புக்கு உண்டா?  

மகன் செத்தாலும் மருமகள் விதவையாகணும் என்பது போல நிர்வாகிகள் கேவலப்பட்டாலும் பி.ஜே.க்கு விளம்பரம் முக்கியம் என்பதால் அதை வெளியிட்டுள்ளார். அதில் முஸ்லிம்களின் சமூக அரசியல் இயக்கம் என்ற ஒட்டும் போட்டுள்ளார். இதுவே பி.ஜே.யும் பி.ஜே. அணியில் உள்ள தலைமை பொறுப்பாளர்களும் அரைகுறைகள். கூத்தாடிடும் குறை குடங்கள். மறை கழன்ற மர மண்டை கூட்டங்கள் என்பதற்குரிய ஆதாரமாகும். ஈ.மெயிலில் அனுப்பும்போது இதை இன்னும் விரிவாக விமர்சிப்போம். 

என்ன வியாக்கியானம் எழுதி அவர்கள் தலையில் மசாலா அரைக்கப் போகிறாரோ?

பி.ஜே.யின் பின்னால் உள்ளவர்கள் கருத்துக் குருடர்கள் என்று மட்டும்தான் எண்ணி இருந்தேன் கண்ணும் குருடு என்பதை இந்த விளம்பரம் மூலம்தான் அறிந்தேன். இங்குள்ள பி.ஜே.யானிகளிடம் உங்கள் அமைப்பு அரசியல் அமைப்பாக ஆகி விட்டதா? என்று கேட்டேன், மற்றவர்களையும் கேட்க வைத்தேன். ஒரு காலமும் ஆகாது. அது தவ்ஹீது அமைப்புதான் என்றனர். 

இந்த வார உணர்வு பார்த்தீர்களா? என்று கேட்டேன். பார்த்தேன் என்றார்கள். 14 ஆம் பக்கத்தில் உள்ளதை படித்தீர்களா? என்றேன் படித்தேன் என்றார்கள். அரசியல் இயக்கம் என போட்டுள்ளதே என்றதற்கு அப்படியா? என்றார்கள். திரும்ப பார்த்த பிறகுதான் அவர்கள் கண்ணுக்கு அது தெரிந்துள்ளது. 

மறை கழன்ற அவர்களது தலைமையிடம்  விளக்கம் கேட்போம் என்றார்கள். விளக்கம் என்ற பெயரால் வியாக்கியானங்கள் கூறியே சமுதாயத்தை வழி கெடுத்து வரும் வழி கேடர் பி.ஜே. இதற்கு என்ன வியாக்கியானம் எழுதி அவர்கள் தலையில் மசாலா அரைக்கப் போகிறாரோ?

நிர்வாகிகள் மூஞ்சியில்தான் காரி துப்புவார்கள்.

இந்த வார உணர்வை துபை ஜே.டி. இன்று வரை வெளியிடவில்லை. வெளியிடவா? வேண்டாமா? என்று யோசித்து வருவதாக அறிகிறோம். மாலிக் ஏஜென்ஸி கடைகளில் மட்டும்தான் இந்த வார உணர்வு உள்ளது. ஜே.டி. மூலம் வெளியாகும் தமிழ் பகுதிக்கு வரவில்லை. துபையில் பி.ஜே. ஓட ஓட விரட்டப்பட்டதற்கு மாற்றமாக பொய்யான செய்திகளை புனைந்து எழுதியுள்ளதால் அதைப் பார்க்கும் துபைவாசிகள் ஜே.டி. நிர்வாகிகள் மூஞ்சியில்தான் காரி துப்புவார்கள். இதை நாம் ஏற்கனவே எதிர் பார்த்ததுதான். இதை எப்படி வெளியிடுவார்கள் என்று. இப்பொழுது  வெளியிடவா? வேண்டாமா? என்று யோசித்து வருவதாக அறிகிறோம்.

வாங்கிச் சென்ற சாமான்களுக்கு கணக்கு வெளியிடுவாரா?

வசூல் மோசடியாளர் பி.ஜே. ஆயிரத்தி நூற்றி தொண்ணூறு(1190) திர்ஹங்கள் விலையுள்ள 6230 என்ற கேமரா உள்ள மொபைல்(செல்)போன் ஒன்றும், 6100 என்ற நம்பருடைய ஹை போன் 645 திர்ஹத்தில் ஒன்றும், 745 திர்ஹத்தில் ஒன்றும் மொத்தம் மூன்று மொபைல் போன்கள் வாங்கிச் சென்றுள்ளாராம். ஜே.டி. தலைமை நிர்வாகிகளில் ஒருவர் கூறியதாக ஜே.டி. செயற்குழு உறுப்பினர் ஒருவர் கூறினார். 

இதற்கெல்லாம் பணம் கொண்டு வந்தாரா? எந்த பணத்தில் இவ்வளவு விலைக்கு போன்கள் வாங்கினார். ஊர் உலகத்தில் உள்ளவர்களிடமெல்லாம் கணக்குக் கேட்டுத் திரியும் இந்த கள்ளக் கணக்கர், இது மாதிரி அவர் வாங்கிச் சென்ற சாமான்களுக்கு கணக்கு வெளியிடுவாரா? 

இன்னும் அவர் என்ன என்ன சாமான் வாங்கிச் சென்றார் என்ற விபரங்களுடன் மெயிலில் கணக்கு கேட்டு வெளியிடுவோம். மொத்தத்தில் அவர் துபை வருகை அவர் ஒரு வழி கேடர் என்பதையும் அவரைப் போல் வழி கெட்ட  பதவி பித்தர்கள்தான் அவர் பின்னால் உள்ளார்கள் என்பதையும் நிரூபித்து விட்டது. நொ(தொ)ண்டிக் குதிரைக்கு சறுக்கியதுதான் சாக்காம் பார்த்துக் கொள்ளவும். வஸ்ஸலாம். 

குறிப்புகளையும் கிழித்து எறிந்து விட்டோம்.

இவைதான் 12-01-2005 அன்று அந்நஜாத் ஆசிரியருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் எழுதப்பட்டுள்ளவை. இதில் குறிப்பிட்டுள்ளபடி பல விஷயங்களை வெளியிட குறிப்புகள் எழுதி வைத்திருந்தோம்.  

மொட்டைக் கடிதங்களை அனுப்பியவர்களில் ஒருவர். நடுநிலையாளரிடம் சரண் அடைந்தார். இரண்டு நாளாக தொடர்ந்து நடுநிலையாளர் பேசித் தீர்ப்போம் வாருங்கள் அல்லது உங்கள் இடத்திற்கு நான் வருகிறேன் என்றார். 

எனவே 13-01-2005 அன்று நாமே அவரது இடத்திற்குச் சென்றோம். இரண்டு தரப்புகளுக்கும் உள்ள  பிரச்சனைகளை எழுதுவதை இரண்டு தரப்பும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

எனவே உடனடியாக நிறுத்தியதுடன் நம்மிடமிருந்து மேற்கண்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்புகளையும் கிழித்து எறிந்து விட்டோம். நம்மிடம் பேசிய நடுநிலையாளர், என்னிடம் பேசி பதியப்பட்ட ஆடியோ கேஸட்டை வெளியிடவில்லை வெளியிட மாட்டார்கள் என்றார். 

ஆனால் எனது தரப்புக்கு பாதகம் ஏற்படும் வகையில் எடிட் செய்து திருவாரூர் கொடிக்கால்பாளையம் புலி வலம் பகுதிகளில் வினியோகம் செய்துள்ளனர். வெப் சைட்டில் போடப்பட்டுள்ள சந்தி சிரித்த சவால் என்பதை எடுத்துவிடச் சொல்கிறேன் என்றார். இன்று வரை இந்த நிமிடம் வரை அது எடுக்கப்படவில்லை.

போன் போட்டு சப்தம் போட்ட பிறகு ஆதமின் பேரன் என்ற அந்த மொட்டை மெயிலை நிறுத்தினார்.

பி.ஜே. தரப்பின் சார்பாக மொட்டைக் கடிதம் அனுப்பிக் கொண்டிருந்தவர் நிறுத்தி விட்டதாகக் கூறிக் கொண்டு அனுப்பிக் கொண்டே இருந்தார். அசிங்கமாக எழுதிய அவருக்கு நான் பதில் அளிக்க முடியவில்லை என்று குறிப்பிட்டு அந்த அசிங்க மெயிலை பலருக்கும் திரும்பத் திரும்ப அனுப்பிக் கொண்டே இருந்தார். 

பிறகு அதை கண்டிப்பது போல் அபுஅவ்ன் என்ற ஐ.டி.யிலிருந்து அவரே எழுதினார். இப்படியாக பல வேடம் போட்ட அவர் விமர்சிக்ப்படுவதிலிருந்து அவரது அண்ணன் காக்கப்பட்ட மகிழ்ச்சியில் சில நாட்களாக சும்மா இருந்தார். 

இலங்கையிலிருந்து பி.ஜே. நாடு கடத்தப்பட்டதும் விபச்சார புத்திரன் என்பதற்கு பயன்படுத்தப்படும் ஆதமின் பேரன் என்ற பெயரில் மொட்டை மெயில் அனுப்பினார். போன் போட்டு சப்தம் போட்ட பிறகு ஆதமின் பேரன் என்ற அந்த மொட்டை மெயிலை நிறுத்தினார். 

ஏதோ மன ரீதியான தொடர்பு இருக்கிறது.

பதவி இறக்கப்பட்டார் என்ற வார்த்தையைக் கேட்டால் தன்னைப் பற்றி கூறுவதாக எண்ணி நிலை குலைந்து விடுவார். என்ன செய்கிறோம், எங்கு இருக்கிறோம், யாரை பதவி இறக்கம் செய்து விட்டதாக கூறுகிறார்கள் என்றெல்லாம் சிந்திப்பதற்கு அவரது மூலை வேலை செய்யாது. என்னைப் பற்றித்தான் சொல்றாங்க, என்னைப் பற்றித்தான் சொல்றாங்க|| என்று சப்தம் போட்டு ஆட ஆரம்பித்து விடுவார். 

அவரது உடம்பில் ஆடை இருக்கிறதா என்று கூட தெரியாது. எத்தனை பேர்; பிடித்தாலும் கட்டுப்படுத்த முடியாது அந்த அளவுக்கு அவருக்கு பிரஷ்ஷர் ஏறி விடும். 

த.த.ஜ. தலைவராக இருந்தவர் துணைத் தலைவராகவும் பொதுச் செயலாளராக இருந்தவர் துணைப் பொதுச் செயலாளராகவும் பதவி இறக்கப்பட்டார்கள் என்ற செய்தியை படித்ததும் இவருக்கு பிரஷ்ஷர் ஏறி விட்டது. உடனே அவரது பெயராலேயே 2 விமர்சன மெயில்கள் அனுப்பினார். 

பிறகு மீண்டும் அவரது புதிய மதத்தின்படி மொட்டைக் கடிதங்களை அனுப்ப ஆரம்பித்து விட்டார். பதவி இறக்கப்பட்டார் என்ற வார்த்தைகளுக்கும்  ஏதோ மன ரீதியான தொடர்பு இருக்கிறது. இதை கற்பனையாகச் சொல்லவில்லை.

சரியான டாக்டரிடம் காட்டுவது அண்ணனின் கடமை.

பி.ஜே.யின் சுயநலப் போக்கைக் கண்டித்து 2001லிருந்து பல்வேறு கடிதங்களை அனுப்பி வந்தோம். இறுதியாக 25-01-2002 அன்று ஷார்ஜாவில் கூடிய கூட்டத்தில் முடிவு செய்தபடி 6.4.2002ல் பி.ஜே.க்கு ஒரு கடிதம் அனுப்பினோம். 

அதை ஒட்டி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பி.ஜே. எனக்கு எதிராக சதி செய்வதில் ஈடுபட்டார். இதையொட்டி யு.ஏ.இ. தழுவிய கூட்டம் 3-5-2002ல் நடந்தது. அதில் பேசிய நாம், ....|  என்று ஒரு வார்த்தை குறிப்பிட்டேன் அவ்வளவுதான். ஆட ஆரம்பித்து விட்டார் 

தனது தலையில் அடித்தார், வயிற்றில் அடித்தார், நெஞ்சில் அடித்தார். .அவரது கீழாடை கீழே விழுந்து விடக் கூடாது என்பதற்காக அருகில் நின்றவர்களில் ஒருவர் அதை பிடித்துக் கொண்டு நின்றார் என்றால் புரிந்து கொள்ளுங்கள். 

நான் ... என்று சொல்லவில்லையே .... விட்டவர்களெல்லாம். என்றுதானே கூறியுள்ளேன் அது எப்படி அவரைக் குறிக்கும் என்று கேட்டேன். .... விட்டவர் என்ற வார்த்தை அவரைத்தான் குறிக்கிறது. எனவே நீங்கள் மன்னிப்பு கேட்கணும்|| என்றார்கள் கூட்டத்தில் இருந்தவர்கள். 

எனவே, இந்த வார்த்தை அவரது மனதை புண்படுத்தி இருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்றேன். இதைத்தான் அவரது மொட்டைக் கடிதத்தில் அவர் மீது குற்றம் சாட்டி மன்னிப்பு கேட்டதாக எழுதி இருந்தார்.  

.. என்ற வார்த்தைக்கும் அவருக்கும் மன ரீதியான தொடர்பு இருக்கிறது. எனவே அவரை சரியான டாக்டரிடம் காட்டுவது அண்ணனின் கடமை. எனவே கடமை தவறாத அண்ணனாக  இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். 

 மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்கிறோம்.
பதவி இறக்கம் செய்யப்பட்டார்கள்... ஆகிய வார்த்தைகளால் மன நலம் பாதிக்கப்பட்டு விட்டவர்  தனது சார்பான மொட்டை மெயில்களை என்ன என்ன பெயர்களில் அனுப்பினாலும் எங்கிருந்து அனுப்பினாலும் பாண்டுகளை மாற்றி மாற்றி எத்தனை விதமாக அனுப்பினாலும். அந்த  மொட்டை மெயில்களுக்கும் அவருக்கும் உள்ள தொடர்பை கண்டு பிடித்து விடுவோம். 

அவருக்கும் மொட்டை மெயில்களுக்கும் சம்பந்தமில்லை என்று காட்டுவதற்காக ..  இவைதான் எனது மெயில்கள் இனி இவற்றுக்கு அனுப்ப வேண்டாம்|| என்றார் எனவே அனுப்பவில்லை. அதற்குப் பிறகு அனுப்பிய மொட்டையிலும் மாட்டிக் கொண்டார்.  

குறிப்புக்காக ஒன்றைக் கூறுகிறோம். சமீபத்தில் அவருடன் போனில் பேசிய வார்த்தை ஆதம் என்ற பெயரில் வந்த மொட்டை மெயிலில் இடம் பெற்றுள்ளது. மொட்டைப் பேர்வழிகள் என்னதான் திட்டமிட்டு செயல்பட்டாலும்; இது போன்ற குறிப்புகள் மூலமும் மாட்டிக் கொள்வார்கள். 

இந்த தலைப்பைக் கண்ட பிறகு ... சம்பந்தமான விளக்கம் கேட்பார்கள். அவர்களுக்கு ... தனது பதிலை தெரிவிப்பதன் மூலம் இறையருளால் அவர்கள் தெளிவு பெறூர்கள்? என்று நம்புகிறோம்.  மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்கிறோம். வஸ்ஸலாம்.
                                    வெளியீடு கா.அ. முஹம்மது பழுலுல் இலாஹி


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.