யு.ஏ.இ. த.மு.மு.க. எழுச்சியும் எதிரிகளின் வீழ்ச்சியும்.

                           பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.                     23-07-2005
கண்ணியத்ததிற்குரிய சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. த.மு.மு.க. மாநில செயலாளர் தமீமுல் அன்சாரி, த.மு.மு.க. மாநில மாணவரணி செயலாளர் ஹாஜா கனி ஆகியவர்கள் 18-07-2005 அன்று மாலை 5 மணிக்கு துபை வந்து சேர்ந்தார்கள். 

யு.ஏ.இ.யின் அனைத்து கிளைகளிலிருந்தும் பெரும்பாலான பொறுப்பாளர்கள் வந்து வரவேற்று அழைத்துச் சென்றார்கள். வந்ததிலிருந்தே தாயக செயல்பாடுகள் பற்றி கிளைப் பொறுப்பாளர்கள் ஆர்வமுடன் கேட்கக் கேட்க, வந்தவர்கள் பதில் சொல்லிக் கொண்டே இருக்க திங்கள் சென்று செவ்வாயும் பிறந்து உதயத்தையும் நெருங்கி விட்டது. 

ஆம் அறிவிக்கப்படாத கிளைப் பொறுப்பாளர்கள் மாநாடு விடிய விடிய நடந்து விட்டது. 21-07-2005 வியாழன் அன்று அல் அய்னில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் த.மு.மு.க. மாநில செயலாளர் தமீமுல் அன்சாரி அவர்களும் அதே நாளில் ஷார்ஜாவில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் த.மு.மு.க. மாநில மாணவரணி செயலாளர் ஹாஜா கனி அவர்களும் சிறப்புரையாற்றினார்கள். 

22-07-2005 அன்று காலை யு.ஏ.இ. நிர்வாகிகள் அறிமுக நிகழ்ச்சி, மாலை துபை மர்க்கஸ் திறப்பு நிகழ்ச்சி, இரவு இஷாவுக்குப் பின் கோட்டைப் பள்ளியில் நடந்த பொதுக் கூட்டம். இப்படி ஒரே நாளில் தொடர் நிகழ்ச்சிகள் என யு.ஏ.இ. த.மு.மு.க. எழுச்சி பெற்றுள்ளது. 

த.மு.மு.க. மாநில இளம் தலைவர்கள்.

நான் எந்த அமைப்பிலும் இல்லை. எந்த அமைப்பை சார்ந்தும் இல்லை. அபுஜஹ்லைவிட மோசமானவன் என தன்னைத் தானே அடையாளம் காட்டிக் கொண்டவரை அனைவரும் அறிவீர்கள். அவரது இஸ்லாமிய விரோத போக்கையும் அவர் செய்துள்ள சமுதாய துரோகச் செயல்களையும் அடையாளம் காட்டுவதே எனது இப்போதைய பிரதான பணியாகும் என்று அறிவித்துள்ளவன் நான். 

அப்படி இருக்க த.மு.மு.க. எழுச்சி பற்றி எழுத வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழலாம். எனவே முதலில் காரணத்தைக் கூறி விடுகிறேன். யு.ஏ.இ.க்கு வருகை தந்துள்ள த.மு.மு.க. மாநில இளம் தலைவர்கள் தமீமுல் அன்சாரி, ஹாஜா கனி ஆகியவர்களை இழிவுபடுத்தி எனது பெயரால் ஒரு பிரசுரம் வெளியிட்டுள்ளார்கள். வெளியிட்டுள்ளவர்கள் யார் என்று எழுதுவதைவிட நடந்த நிகழ்சிகளை எழுதி விட்டால் வெளியிட்டவர்களை நீங்களே எளிதில் புரிந்து கொள்வீர்கள் அதனால்தான் யு.ஏ.இ. த.மு.மு.க.வில் ஏற்பட்டுள்ள எழுச்சி பற்றி எழுதியுள்ளேன்.

மறுமையில் அவர்களது இருப்பிடத்தையும் அவர்களே முடிவு செய்துள்ளார்கள்.

தாயகத்திலிருந்து வந்துள்ளவர்களை இழிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கில் பிரசுரம் போட்டவர் அவரது தாயை இழிவுபடுத்தி விட்டார். கா.அ. என்பது எனது தந்தையையும் வமிசத்தையும் குறிக்கும். நான் அவருக்கு பிறந்திருப்பதால், நான் அவரது வாரிசு, அவரது வமிசாவளித் தொடர்புள்ளவன் என்பதால், எனது பெயருக்கு முன் கா.அ. என்பதை பயன்படுத்துகின்றேன். 

முஹம்மது பழுலுல் இலாஹி என்பது என்னை பெற்ற தந்தை எனக்கு வைத்த பெயர். தமீமுல் அன்சாரியை காப்பாற்றி விட்ட ... ..  என்ற தலைப்பில் பிரசுரம் வெளியிட்டவர்கள் கா.அ. முஹம்மது பழுலுல் இலாஹி என்பதை பயன்படுத்தி உள்ளார்கள் என்றால் முதலில் அவர்கள் யாரை கொச்சைப்படுத்தியுள்ளார்கள். 

அவர்களது தாயைத்தான் கொச்சைப்படுத்தியுள்ளார்கள். பெற்ற தாயை வேசியாக-விபச்சாரியாக சித்தரிப்பவர்கள், பெற்ற தந்தையை புறக்கணித்து விட்டு வேறு ஒருவரை தந்தையாக ஆக்கிக் கொண்டவர்கள் ஒழுங்கானவர்களாக இருப்பார்களா? ஒழுக்கமானவர்களாகத்தான் இருப்பார்களா? ஆகவே அவர்களுக்கு நல்ல புத்தி வர துஆச் செய்கிறோம். 

இவர்கள் யாருக்கோ பிறந்து விட்டு எனது தந்தைக்கு பிறந்தவர்கள் போல் எழுதியதன் மூலம் அவர்களது தாயை தேவடியாளாக ஆக்கியதோடு நின்று விட்டார்களா? மறுமையில் அவர்களது இருப்பிடம் நரகம் என்பதை அவர்களே முடிவு செய்துள்ளார்கள். இதை நாம் சொல்லவில்லை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சொல்லி உள்ளார்கள். 

தன் இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும்.

'பொய்களிலேயே மிகப் பெரும் பொய், ஒரு மனிதன் தன்னைத் தன் தந்தையல்லாதவருடன் இணைத்து கூறுவது இது புகாரியில் 3509வது ஹதீஸாக இடம் பெற்றுள்ளது. தன் தந்தை அல்லாதவரை (அவர் தன் தந்தையல்ல என்று) விவரம் அறிந்து கொண்டே அவர்தான் என் தந்தை என்று கூறும் ஒரு மனிதன் அல்லாஹ்வுக்கு நன்றி கெட்டவனாகிறான். 

தனக்கு வமிசாவளித் தொடர்பு இல்லாத ஒரு குலத்தைக் குறித்து, தான், அந்தக் குலத்தைச் சேர்ந்தவன் தானென தன்னைப் பற்றிக் கூறிக் கொள்பவன், தன் இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும் இது புகாரியில் 3508வது ஹதீஸாக இடம் பெற்றுள்ளது. 

த.மு.மு.க.  இளம் தளபதிகள் தமீமுல் அன்சாரி அவர்களையும் ஹாஜா கனி அவர்களையும் எனது பெயரால் இழிவுபடுத்த எண்ணியவர்கள் கண்ட பலன் என்ன? பெற்ற தந்தையை தந்தை அல்ல என பிரகடனப்படுத்தி விட்டார்கள். அவர்களது தாய்க்கு வேசி பட்டம் வாங்கி கொடுத்து விட்டார்கள். அத்துடன் முடிந்து விட்டதா? அவர்களது தங்கும் இடம் நரகமாக இருக்கட்டும் என அவர்களே ரிசர்வு செய்து கொண்டார்கள். 

இதுதான் அந்த பிரசுரத்தின் மூலம் அவர்கள் கண்ட பலன். அவர்கள் மட்டுமல்ல இந்த தீமைக்கு துணை நின்ற அத்தனை பேருக்கும் இந்த பாவத்தில் பங்கு உண்டு என்பதில் சந்தேகம் இல்லை. 

அந்த தீயவர்களை அல்லாஹ் நாசமாக்குவானாக ஆமீன்.

.தங்களது தங்குமிடத்தை நரகமாக ஆக்கிக் கொண்டவர்கள் வெளியிட்டுள்ள பிரசுரத்தை முழுமையாக படித்தவர்கள். இது டவுசர் கட்சிக்காரர்களின் வெளியீடு என்று விளங்கிக் கொண்டார்கள். முழுவதுமாக படிக்காமல் மேலோட்டமாக எழுத்து அமைப்பை, இறுதியில் உள்ள பெயரை மட்டும் பார்த்தவர்களுக்கு, இதை நான்தான் வெளியிட்டுள்ளேன் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 

அவர்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகத்தை நீக்குவது எனது கடமையாகும்.  இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தம் இல்லை என்பதை உறுதி செய்கிறேன்.  தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள இளைய தளபதிகளாம் தமீமுல் அன்சாரி, ஹாஜா கனி ஆகியவர்களை இழிவுபடுத்தி பிரசுரம் வெளியிட்டவர்கள், வினியோகித்தவர்கள், அதில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அந்த தீயவர்கள் அனைவர்களையும் அல்லாஹ் நாசமாக்குவானாக ஆமீன். 

உணர்வு, ஏகத்துவம் என எதுவும்  அந்த மர்கஸ்ஸுக்குள் நுழையவே முடியாது.

ஏன் இந்த பிரசுரம் வெளியிட்டுள்ளார்கள்? அதன் பின்னணி என்ன? என்பதையும் பாருங்கள். பாதியளவுக்கு தொடை தெரியும் டவுசர் போட்டுத் தொழலாம் என்ற கொள்கை உடைய டவுசர் கட்சித் தலைவர் பி.ஜே. என்பதை அனைவரும் அறிவீர்கள். அவர் துபை வந்தபோது பகிரங்கமாக அறிவிக்கப்பட்ட எந்த நிகழ்ச்சிகளையும் நடத்த முடிந்ததில்லை. 

இலங்கை போனார் அங்கிருந்து நாடு கடத்தப்பட்டார். கத்தார் போக முயன்றார். அங்கு இனி ஜென்மத்திலும் நுழைய முடியாது என்றாகி விட்டது. சவூதி நியு செனாயா மர்க்கஸ் முதீர் ஷெய்கு அபு முஹன்னது அவர்கள், டவுசர் கட்சித் தலைவர் பி.ஜே.யின் எல்லா நூல்களையும், ஆடியோ, வீடியோ, சி.டி.க்களையும் தனது மர்க்கஸ்ஸிலிருந்து அப்புறப்படுத்தி, ஸஹாபாக்களை மதிக்காதவன் என் கால் தூசிக்கு சமம் என கூறி விட்டார். 

இனி உணர்வு, ஏகத்துவம் என எதுவும்  அந்த மர்க்கஸ்ஸுக்குள் நுழையவே முடியாது.

ஊதி விட்டுள்ளார்கள். அது புஸ் வாணம் ஆகி விட்டது.

இந்த நிலையில் இளைய தளபதிகள் தமீமுல் அன்சாரி, ஹாஜா கனி ஆகியவர்கள் துபை வருகிறார்கள் என்றதும் டவுசர் கட்சிக்காரர்கள் கெடுதல் பணியில் ஈடுபட்டார்கள். தமீமுல் அன்சாரியை துபை வர விடாமல் ஆக்கி விட வேண்டும், கத்தாரில் பி.ஜே.க்கு வெளியான விஸா ரத்தானது போல் தமீமுல் அன்சாரிக்கு  விஸாவை ரத்து செய்து விட வேண்டும். கடைசியாக  ஏர்போர்ட்டில் வைத்தாவது திருப்பி அனுப்பவிட வேண்டும் என்ற சதி வேலையில் ஈடுபட்டு தலைகீழாக நின்றார்கள். 

கடந்த முறை தமீமுல் அன்சாரி வந்திருந்தபோது கிரசண்ட் ஸ்கூலில் நடந்த கூட்டக் கேஸட்டை தேடிப் பிடித்து உளவுத் துறையில் கொடுத்துள்ளார்கள். தமிழ்நாட்டில் தீவிரவாத பயிற்சி கொடுத்து அந்த கேஸட்டைப் போட்டுக் காட்டி பணம் வசூலித்தார் என்று ஊதி விட்டுள்ளார்கள். அது புஸ் வாணம் ஆகி விட்டது. அதன் வெளிப்பாடுதான் பெற்ற தாயை இழிவுபடுத்தி தங்களை நரகத்துக்கு உரியவர்களாக ஆக்கிக் கொண்ட அந்த வக்கிரக நோட்டீஸ்.

டவுசர் கட்சிக்காரர்களுக்கு இனி தொடர்ந்து தோழ்விதான்.

டவுசர் கட்சிக்காரர்கள் கொடுத்த கேஸட் உயர் அதிகாரிக்கு போய் விட்டது. அதை இன்னொரு அதிகாரிக்கு கொடுத்து விபரம் சேகரிக்க கூறி இருக்கிறார். அந்த அதிகாரி தமிழக பிரமுகர் ஒருவரை அணுகி கேஸட்டை போட்டுப் பார்க்கக் கூறி தீவிரவாத பயிற்சி காட்டப்படுகிறதா? என்று கேட்டுள்ளார். அதை போட்டுப் பார்த்த தமிழக பிரமுகர் ஒன்றும் இல்லை. சாதாரணமான தற்காப்பு கராத்தே பயிற்சிதான் என விளக்கம் கூறி உள்ளார். 

மொத்தத்தில் டவுசர் கட்சிக்காரர்கள் செய்த சதி தமிழக பிரமுகரால் முறியடிக்கப்பட்டது. அந்த தமிழக பிரமுகருக்கு அல்லாஹ் நீடித்த ஆயுளைக் கொடுத்து ஈருலகிலும் வெற்றி பெற்ற நல்லடியாராக ஆக்கி வைப்பானாக ஆமீன். ஆமீன். 

த.மு.மு.க.வினருடன் தொடர்புள்ளவர்தான் அந்த நல்ல மனிதர். த.மு.மு.க.வினருக்கு மன ரீதியாக பாதிப்பு ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக இப்படி சதி செயல்கள் நடந்துள்ளதை த.மு.மு.க.வினருக்கு அவர் கூறவில்லை. எனவே ஸஹாபாக்களை இழிவுபடுத்திய டவுசர் கட்சிக்காரர்களுக்கு இனி தொடர்ந்து தோழ்விதான் என்பதில் சந்தேகம் இல்லை. 

தொடரட்டும் த.மு.மு.க.வின் எழுச்சி.

துபை ஜே.டி.யின் துணைத் தலைவராக இருப்பவர் கீழக்கரையைச் சார்ந்த ஜமீல் என்பவர். இவர் முபாஹலா பூச்சாண்டி பி.ஜே. வழியில் முபாஹலா சவால் விடுத்து 13-07-2005 அன்று http://www.pjvstmmk.com என்ற வெப் சைட்டுக்கு அனுப்பியுள்ளார். இது அந்த வெப் சைட்டில்  http://www.pjvstmmk.com/rep_jameel.htm  என்ற முகவரியில் பிரசுரமாகியள்ளது. 

இதை 17-07-2005 அன்றுதான் நான் பார்த்தேன். பார்த்த உடன் ஜுனியர் ஜமீலின் முபாஹலா சவாலை ஏற்கிறேன் என்ற தலைப்பில் பதில் அனுப்பி விட்டேன். இது அதே வெப் சைட்டில் http://www.pjvstmmk.com/accept.htm  என்ற முகவரியில் பிரசுரமாகியுள்ளது. முபாஹலா சவால் விட்ட ஜமீல் அவர்களிடமிருந்து ஒரு வாரத்திற்குள் தேதி அறிவிப்பு வர வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தேன். 

இது வரை பதில் இல்லை. பெற்ற தாய், தந்தையை கேவலப்படுத்தி தங்களுக்குரிய இடமாக நரகத்தை ரிசர்வு செய்து கொண்ட பிரசுரம்தான் வெளியாகியுள்ளது. அந்த பிரசும் யு.ஏ.இ.யின் த.மு.மு.க. எழுச்சியையும் டவுசர் கட்சியின் வீழ்ச்சியையும்தான் காட்டுகிறது.  தொடரட்டும் த.மு.மு.க.வின் எழுச்சி. 
                               வெளியீடு: கா.அ. முஹம்மது பழுலுல் இலாஹி.



Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.