ஈமானுடைய ஒவ்வொருவரும் உஷார் அடைய வேண்டிய தருணமா இல்லையா?

தான் என்பதை நிலை நிறுத்த வேண்டும் என்றால் தனது இமேஜை கூட்ட வேண்டும். தனது இமேஜை கூட்ட வேண்டும் என்றால் தன்னை உயர்வாகக் காட்ட வேண்டும். தன்னை உயர்வாக காட்ட வேண்டும் என்றால் பிறரை குறைவுபடுத்த வேண்டும். பிறரை குறைவுபடுத்த வேண்டும் என்றால் பிறரிடம் இல்லாததை இட்டுக் கட்டிக் கூறி இழிவுபடுத்த வேண்டும். இந்த திட்டப்படி செயல்பட்டு தன்னை உயர்வானவர் போன்று காட்டி தனக்கு என தனி மாயையை ஏற்படுத்தி வந்தவர்தான் பி.ஜே.

அல்லாஹ்வின் வார்த்தைகளை நிராகரித்தால் அவன் காபிர். அல்லாஹ்வின் வார்த்தைகளை நீக்கினால் அவன் யார்அவனுடைய ஈமானின் நிலை என்னஈமானுடையவர்களே இவனிடத்தில் எப்படி இருக்க வேண்டும்?

குர்ஆனில் உள்ள சில வசனங்கள் தங்கள் மூளைக்கு ஒத்து வராததால் மூலத்திலிருந்து அந்த வசனங்களை நீக்க வேண்டும் என்று ராமகோபாலன்அத்வானிஉமாபாரதிமுரளிமனோகர் ஜோஷிஅருண்ஜேட்லிபால்தாக்ரே போன்ற பி.ஜே.பி.க்கள் சொல்லத்தான் செய்கிறார்கள். பி.ஜே.யோ மொழிக்கு தகுந்தவாறு மொழி பெயர்ப்பில்  சில வார்த்தைகளை நீக்க வேண்டும் என்று சொல்லி அல்லாஹ்வின் வார்த்தைகளை நீக்கியும் விட்டார். இதில் பி.ஜே.பி.க்கும் பி.ஜே.க்கும் என்ன வித்தியாசம்?

இந்த விஷயத்தில் அவரை ஆதரித்து நின்ற டி.என்.டி.ஜே.க்காரர்கள் ஆர்.எஸ்.எஸ்.காரர்களைவிட மகா மோசமானவர்கள் என்பதில் சந்தேகமா?

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதர்களை கடித்துக் குதறிய கதை போல் தன்னை உயர்வுபடுத்த குர்ஆன் மொழி பெயர்ப்பிலும் விளையாடிவர்தான் பீ.ஜே.

திருக்குர்ஆனில் நிச்சயமாக என்ற பொருள் தரக் கூடிய வார்த்தைகளில் மட்டும் சுமார் 2182 அல்லாஹ்வின் வார்த்தைகளை பி.ஜே. தனது மொழி பெயர்ப்பிலிருந்து நீக்கி விட்டார்  என்பதை முந்தைய வெளியீட்டில் கண்டோம். அதன் தொடரை இதில் காண உள்ளோம்.


சொல் சுருக்கம், மொழி நடை எனும் காரணங்களை உண்டு பண்ணி குர்ஆன் தர்ஜுமா மூலமும் தனக்கு ஒரு இமேஜை ஏற்படுத்த முயன்றுள்ளார். சீசன் வியாபாரியும் இப்பொழுதைய தவ்ஹீது வியாபாரியுமான பிரபல அமானித மோசடியாளர் பி.ஜே.


தனது இமேஜை  வரட்டு கவுரவத்தை நிலை நிறுத்த தமிழ் மொழியில் நடைமுறையில் உள்ள வார்த்தைகளை இல்லை என்பார். தமிழில் இல்லாத வார்த்தைகளை இருப்பதாகக் கூறுவார். இது இந்த வரட்டு கவுரவம் பிடித்தவரின் இயல்பு.



இந்த வரட்டு கவுரவம் பிடித்தவர் 2005(மார்ச்)ல் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டார். இது அவரது இமேஜுக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்று அஞ்சினார். உடனே என்ன செய்தார்?


சொந்த நாட்டிலிருந்து வெளியேற்றினால்தான் நாடு கடத்தல் என்று சொல்ல முடியும் என்று புது விளக்கம் கொடுத்தார். பொய்யான அவரது இந்த விளக்கத்தை உண்மைப்படுத்த பொது மக்களின் பணம் பல்லாயிரம் ரூபாய்களை மீடியாக்கள் மூலம்; வீணடித்தார். வழக்கம்போல் அவரது ரசிகர்கள் மட்டுமே இதை நம்பி ஏமாந்தார்கள்.


தென்னிந்தியாவைச் சார்ந்த பி.ஜெய்னுல் ஆபிதீன் என்பரை உடனடியாக நாடு கடத்த இலங்கை அரசு தீர்மானித்தது. இது இலங்கை சட்டம் ஒழுங்கு அமைச்சகத்தின் செயலாளர் திலக் ரணவிராஜா அறிக்கையில் உள்ள வாசகம். பி.ஜே. இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டார். இது இலங்கையில் உள்ள பத்திரிக்கைகள் வெளியிட்டுள்ள செய்தி.

இவற்றைக் காட்டி த.த.ஜ.வினரிடம் விளக்கம் கேட்டதும் அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. அவர்களது தலைமைப் பீடத்தை தொடர்பு கொண்டு அது இலங்கை மொழி வழக்கு என்று பதில் தந்தனர். 

குவைத்திலிருந்து வந்த பெண் தலால் ஆஸ்மியை நாடு கடத்த வேண்டும் என்றுதானே இந்திய கோர்ட் முதலில் தீர்ப்பளித்தது. இந்திய மொழி வழக்கில் இல்லாததையா இந்திய கோர்ட் கூறி விட்டது? என்று கேட்டோம். அதற்கு இதுவரை பதில் இல்லை.



தனது இமேஜை காக்க இலங்கை மொழி வழக்கு இந்திய மொழி வழக்கு என ஏமாற்ற தயங்காதவர் பி.ஜே. என்பது இதன் மூலமும் நிரூபணமாகிவிட்டது. 

அந்த பி.ஜே. தன்னை பெரிய தமிழ் பண்டிதர்போல் காட்டிக் கொண்டு தனது இமேஜை கூட்டிக் கொள்ள குர்ஆனையும் விட்டு வைக்கவில்லை. அவரது தர்ஜுமாவின் 1341 ஆம் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதைப் பாருங்கள்.

அரபு மொழியில் யார் உங்களை அடித்தார்களோ அவர்களை நீங்களும் அடியுங்கள்”  என்பன போன்ற சொற்றொடர்கள் சர்வ சாதாரணமாகவே பயன்படுத்தப்படும். அதுதான் அம்மொழியில் நல்ல நடைக்கு அடையாளமாகவும் இருக்கும். ஆனால் தமிழ் மொழியில் மிக மிக அரிதாகவே இது போன்ற சொற்றொடர்களைப் பயன்படுத்துவோம். எனவே உங்களை அடித்தவர்களை நீங்களும் அடியுங்கள்என்று இதைத் தமிழ்ப்படுத்துவது தான் தமிழுக்கு நெருக்கமான நடையாகும்.
யார் உங்களை ஏமாற்றினார்களோ அவர்கள்என்பதை உங்களை ஏமாற்றியவர்கள் என்று நாம் தமிழ்ப்படுத்தியுள்ளோம் என்று எழுதியுள்ளார்.


குர்ஆனில் உள்ள வசனத்தை குறிப்பிட்டுக் காட்டி அதை இப்படி எளிதாக்கியுள்ளேன் என்று எழுதவில்லை. குர்ஆனில் இல்லாத ஒரு வசனத்தை இவராகவே கற்பனை செய்துகொண்டு அதை இப்படி எழுதினால் (உம்மா வழியில்) தமிழுக்கு நெருக்கம். (வாப்பா வழியில் தமிழுக்கு தூரம்) என எழுதியுள்ளார். தனது மே(ல்)தாவித் தனத்தைக் காட்ட குர்ஆன் தர்ஜுமாவை பயன்படுத்தியுள்ளார்.



பி.ஜே. கற்பனை செய்துள்ள வசனத்தையே எடுத்துக் கொள்வோம். அதுவே பி.ஜே.யின் அறிவில் கோளாறு ஏற்பட்டுவிட்டது என்பதற்கு சான்றாக உள்ளது. அவர் கற்பனை செய்துள்ள இரண்டு வசனங்களுக்கும் இடையில் பெரிய வித்தியாசமே உள்ளது.


அடித்தவர்களை அடியுங்கள்என்பதை கட்டளையாகவோ அனுமதியாகவோ எடுத்துக் கொள்ளலாம். இதில் கட்டளை அனுமதி ஆகிய 2 நிலைதான் உள்ளது. கண்டிப்பு எதுவும் இதில் இல்லை.


யார் அடித்தார்களோ அவர்களை அடியுங்கள் என்பதில் அடித்தவர்களைத்தான் அடிக்க வேண்டும். மற்றவர்களை அடித்து விடக் கூடாது என்ற அழுத்தமும் அந்த வசனத்தில் அடங்கி இருக்கிறது. இந்த நடை எல்லா மொழிகளிலும் உள்ளது போல் தமிழ் மொழியிலும் உண்டு. தமிழ் மொழியில் மிக மிக அரிதாகவே பயன்படுத்துவோம் என பி.ஜே. குறிப்பிட்டுள்ளது பொய்யானது அறிவிலித்தனமானது என்பது அறிவுள்ளவர்களுக்குத் தெரியும்.



... அரபு மொழியில் தனது கைகளையும், தனது கால்களையும், தனது முகங்களையும், தனது தலையையும் கழுவினான்என்று குறிப்பிடுவார்கள். அவ்வாறு குறிப்பிடுவது  அம்மொழியில் சிறந்த நடை. ஆனால் தமிழ் மொழியில் இவ்வாறு குறிப்பிட்டால் மிகவும் கொச்சையாகத் தோற்றமளிக்கும் என்று எழுதி எழுத்து நடையின் பெயரால் குர்ஆன் நடையை கொச்சைப்படுத்தியுள்ளார். கொச்சைப்பட்டுப்போன பி.ஜே.


யாருடைய வார்த்தைகளை? அல்லாஹ்வின் வார்த்தைகளை அப்படியே மொழி பெயர்த்தால் கொச்சையாக இருக்குமாம். எனவே இந்த மே(ல்)தாவி நல்ல நடையில் திருத்தி எழுதியுள்ளாராம்.


தனது கைகள், கால்கள், முகம் மற்றும் தலையைக் கழுவினான்என்று கூறுவதுதான் நல்ல மொழி நடை எனப்படும். தனது என்ற சொல் நான்கு இடங்களில் இடம் பெற்றிருந்தாலும் தமிழுக்கு ஒரு தனது என்பதே போதுமானது. அவனது அவளது” ”அவர்களின்” “அவர்களுடையஎன்பன போன்ற சொற்கள் ஒரு வாக்கியத்தில் பல தடவை பயன்படுத்தப்பட்டாலும் ஒரு தடவைதான் அதைக் குறிப்பிட்டுள்ளோம் என்றும் எழுதியுள்ளார்.


இந்த அடிப்படையில், உங்கள் செல்வங்களிலும் உங்கள் உயிர்களிலும் சோதிக்கப்படுவீர்கள் என்ற 3:186வது வசனத்தை உங்கள் செல்வங்களிலும் உயிர்களிலும் சோதிக்கப்படுவீர்கள்.. என்று மொழி பெயர்த்துள்ளார்.



உங்கள் மனைவியர் உங்கள் விளை நிலங்கள் ஆவார்கள்.  எனவே உங்கள் விருப்பப்படி உங்கள் விளை நிலங்களுக்குச் செல்லுங்கள்.. இது அல்குர்ஆன் 2:223வது வசனமாகும். 

இதில் 4 தடவை உங்கள் என்ற சொல் வருவதால் மே(ல்)தாவி பி.ஜே. அறிவுப்படி ஒரு தடவை மட்டும் உங்கள் என்ற சொல்லை இடம் பெறச் செய்து மனைவியர் விளை நிலங்கள் ஆவார்கள். எனவே உங்கள் விருப்பப்படி விளை நிலங்களுக்குச் செல்லுங்கள் என்று படித்தால் என்ன பொருள் வருகிறது புரிகிறதா? ஈமானுடைய ஒவ்வொருவரும் உஷார் அடைய வேண்டிய தருணம் இது புரிந்து கொள்ளுங்கள்.


சாதாரணமாக சொல்லும்போது உன் மனைவி மக்கள் உடன் பிறப்புக்கள் என்பார்கள். ஒரு விஷயத்தில் இவர்கள் அவனுக்கு பயன்படவில்லை என்ற நிலையில், விவகாரமாக பேசும்போதும், ஒவ்வொன்றும் உன்னுடையதாக இருந்தும் அவை உனக்கு பயன் தரவில்லை என்பதையும் பயன் தராது என்பதையும் உணர்த்தும் போதும், உபதேசிக்கும் போதும், ஒன்றை கவனமுடன் கேட்க வேண்டும் மனதில் ஆழமாக பதிய வைக்க வேண்டும் என்ற நோக்கில் அழுத்தத்துடன் சொல்லும்போதும்

உன் மனைவி உன் மக்கள் உன் உடன் பிறப்புக்கள் உன் செல்வம் இதுவா உனக்கு உதவியது என்றுதான் சொல்லுவார்கள்.


அதாவது ஒரு வாக்கியத்தில் ஒரு சொல்லை பல தடவை பயன்படுத்தத்தான் செய்வார்கள். எனவே ஒரு வாக்கியத்தில் ஒரு சொல் பல தடவை பயன்படுத்தப்படுவது என்பது எந்த மொழியிலும் கொச்சையாக ஆகாது. 

மே(ல்)தாவி பி.ஜே. ஒரு பொய்யர், பித்தலாட்டக்காரர், பிராடு, வரட்டு கவுரவம் பிடித்தவர் என்பதை முன்பு பல வழிகளிலும் நிரூபித்திருக்கிறோம். குறிப்பாக அவரது உரையிலிருந்தும் ஆதாரத்துடன் நிரூபித்திருக்கிறோம். இப்பொழுது அவரது தர்ஜுமாவில் அவர் வைத்துள்ள இந்த மே(ல்)தாவித் தனமான வாதம் மூலமும் நிரூபிக்க உள்ளோம். இன்ஷாஅல்லாஹ்.



உங்கள் அன்னையர்உங்கள் புதல்வியர்உங்கள் சகோதரிகள்உங்கள் அன்னையின் சகோதரிகள், சகோதரனின் புதல்விகள், சகோதரியின் புதல்விகள்உங்களுக்குப் பாலூட்டிய அன்னையர், பால்குடிச் சகோதரிகள்உங்கள் மனைவியரின் அன்னையர், நீங்கள் தாம்பத்திம் நடத்திய மனைவிக்குப் பிறந்த உங்கள் பொறுப்பில் உள்ள மனைவியின் புதல்விகள், ஆகியோர் (மணமுடிக்க) விலக்கப்பட்டுள்ளனர்... 4:23வது வசனத்திற்கு மே(ல்)தாவி பி.ஜே. செய்துள்ள மொழி பெயர்ப்பின் ஒரு பகுதி இது.


இந்த ஆயத்தின் மேற்கண்ட ஒரு பகுதியில் மட்டும் உங்கள் என்ற சொல்லை ஆறு தடவை இடம் பெறச் செய்துள்ளார். மீதமுள்ள பகுதியில் மேலும் மூன்று தடவை உங்கள் என்ற சொல்லை இடம் பெறச் செய்துள்ளார். 

ஒரு சொல் நான்கு இடங்களில் இடம் பெற்றிருந்தாலும் தமிழுக்கு ஒரு சொல் போதுமானது என்று எழுதியது என்ன ஆயிற்று? அவரது இமேஜைக் கூட்ட செய்துள்ள வரட்டு வாதம்தானே. 

எந்த கை, கால், முகம் சம்பந்தமாக உதாரணம் காட்டி  எழுதியுள்ளாரோ அந்த கை, கால், முகம் சம்பந்தமான ஆயத்தை பி.ஜே. எப்படி மொழி பெயர்த்துள்ளார் என்பதையும் பார்ப்போம்.


நம்பிக்கைக் கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காக தயாராகும்போது உங்கள் முகங்களையும், மூட்டுக்கள் வரை உங்கள் கைகளையும், கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள்! உங்கள் தலைகளை (ஈரக்கையால்) தடவிக் கொள்ளுங்கள்! குளிப்புக் கடமையானவராக நீங்கள் இருந்தால் (குளித்து) தூய்மையாகிக் கொள்ளுங்கள்! நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால், அல்லது உங்களில் ஒருவர் கழிப்பறையிலிருந்து வந்தால், அல்லது (உடலுறவின் மூலம்) பெண்களை தீண்டினால் தண்ணீர் கிடைக்காத போது தூய்மையான மண்ணைத் தொட்டு அதில் உங்கள் முகங்களையும், கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. மாறாக நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப் படுத்தவும், தனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தவுமே விரும்புகிறான்.


இதுதான் 5:6வது வசனத்திற்கு பி.ஜே. செய்துள்ள மொழி பெயர்ப்பு. அப்படியானால், ஒரு வாக்கியத்தில் ஒரு சொல் பல தடவை பயன்படுத்தப்பட்டாலும் ஒரு தடவைதான் அதைக் குறிப்பிட்டுள்ளோம் என்று பி.ஜே. எழுதியுள்ளது எப்படிப்பட்ட செயல்? தர்ஜுமா மூலம் அவரது இமேஜைக் கூட்ட செய்துள்ள மேல்தாவித் தனமானமான செயல்தானே அன்றி வேறில்லை.


5:6வதான இந்த வசனத்தில் நான்கு இடங்களில் நீங்கள் என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளார். ஐந்து இடங்களில் உங்கள்  என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளார் உங்களில், உங்களுக்கு போன்றவற்றை சேர்த்தால் எட்டு இடங்களில் உங்கள்  என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளார்.


அவருக்கு மூளை வரண்டு போய் விட்டதா? பைத்தியமாக ஆகி விட்டாரா? ஷைத்தானாக மாறி விட்டாரா? ஷைத்தான் பி.ஜே.யாக மாறி விட்டானா?


அல்லாஹ்வின் வார்த்தைகளை அப்படியே மொழி பெயர்த்தால் கொச்சையாக இருக்கும் என கிறுக்கித்தனமாக எழுதிவிட்டடார். அதை நிலை நிறுத்த .. தூய்மையான மண்ணைத் தொட்டு அதில் உங்கள் முகங்களையும்உங்கள்  கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்! என்று வரும் தொடரில் உள்ள இரண்டில் ஒரு உங்கள் என்பதை மட்டும் நீக்கி விட்டு உங்கள் முகங்களையும், கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்! என மொழி பெயர்த்துள்ளார். கொச்சைப் பட்டுப் போன மே(ல்)தாவியின் மனோ இச்சையைப் பார்த்தீர்களா? ஏன் இந்த வரட்டு வேதாந்த வேலை.


அல்லாஹ்வின் வார்த்தைகளை நிராகரித்தால் அவன் காபிர். அல்லாஹ்வின் வார்த்தைகளை நீக்கினால் அவன் யார்? அவனுடைய ஈமானின் நிலை என்ன? ஈமானுடையவர்களே இவனிடத்தில் உஷாராக இருங்கள்.



மற்ற விஷயங்களில்  பி.ஜே. செய்துள்ள வரம்பு மீறிய செயல்களை, அநியாயங்களை, அயோக்கியத் தனங்களை, மோசடிகளை விமர்சிக்கும்போது பைத்தியம் என்றோ ஷைத்தான் என்றோ ஷைத்தானாக மாறி விட்டவர் என்றோ யாரும் திட்டமாக கூற முடியாது. திருக்குர்ஆன் மொழி பெயர்ப்பில் பித்தலாட்டம் செய்துள்ளதால்  நிச்சயமாக ஷைத்தானால் பிடிக்கப்பட்டுள்ளார் என்பதில் சந்தேகம் இல்லை.


குர்ஆனில் உள்ள சில வசனங்கள் தங்கள் மூளைக்கு ஒத்து வராததால் மூலத்திலிருந்து அந்த வசனங்களை நீக்க வேண்டும் என்று ராமகோபாலன், அத்வானி, உமாபாரதி, முரளிமனோகர் ஜோஷி, அருண்ஜேட்லி, பால்தாக்ரே போன்ற பி.ஜே.பி.க்கள் சொல்லத்தான் செய்கிறார்கள். பி.ஜே.யோ மொழிக்கு தகுந்தவாறு மொழி பெயர்ப்பில்  சில வார்த்தைகளை நீக்க வேண்டும் என்று சொல்லி அல்லாஹ்வின் வார்த்தைகளை நீக்கியும் விட்டார். இதில் பி.ஜே.பி.க்கும் பி.ஜே.க்கும் என்ன வித்தியாசம்?


அவர்கள் தங்களை இஸ்லாத்தின் எதிரிகள் என பகிரங்கமாக அடையாளம் காட்டிக் கொண்டவர்கள். ஆனால் உடன் இருந்து கழுத்தறுத்தவர்கள் இல்லை. 

அவர்கள் சொல்லிக் காட்டியதைவிட பி.ஜே. செய்து காட்டியுள்ளது மகா மோசடியானது. அவரது இந்த செயலை ஆதரித்து நிற்பவர்களும் மகா மோசடியாளர்களே. இந்த விஷயத்தில் அவரை ஆதரித்து நிற்கும் டி.என்.டி.ஜே.க்காரர்கள் ஆர்.எஸ்.எஸ்.காரர்களைவிட மகா மோசமானவர்கள் என்பதில் சந்தேகம் இல்லை.



அல்லாஹ்வின் வேதத்தை அப்படியே மொழி பெயர்த்தால் கொச்சையாக இருக்கும் எனக் கூறி குர்ஆன் மொழி பெயர்ப்பிலிருந்து சில வார்த்தைகளை பி.ஜே. நீக்கி விட்டதற்கு காரணம். பி.ஜே. தர்ஜுமா பணியில் ஈடுபடும்போது அல்குர்ஆன் 16:98 வசனப்படி விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேட தவறி விட்டார்.


அதனால் தர்ஜுமா பணியில் அவருடன் ஷைத்தானும் சேர்ந்து கொண்டான். அதன் வெளிப்பாடுகள்தான் தர்ஜுமா எழுதிய காலகட்டத்தில் ஜம்இய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் அமைப்பு பற்றியும் தனி நபர்கள் பற்றியும்  அவதூறு பிரசுரங்களும் கேஸட்களும் சி.டி.க்களுமாக அவர் வெளியிட்டார். 

அல்லாஹ்வின் சாபத்துக்குரிய பொய்யர்களான A.S.அலாவுதீன், அன்வர்பாஷா, பாக்கர், லுஹா, எம்.எஸ்.சுலைமான் போன்றவர்கள் பொய் சாட்சி சொன்னார்கள்.  அப்பொழுதிருந்தே திட்டமிட்டுதான் த.மு.மு.க.வின் டிரஸ்டுகளையும் பத்திரிக்கைகளையும் அபகரித்துள்ளார். 
-------------------------------------------------------------------------
மேற்கண்டவை 20-05-2005அன்று வெளியிட்டது. இதில் உள்ளதை மறுத்தால் அவரும் அவருடன் இப்பொழுது இல்லாதவர்கள் போல் காட்டிக் கொள்ளும் ததஜவினர் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக! 

பி.ஜே.யும் தனித்து விட்டது போல் காட்டிக் கொள்ளும் ததஜவினரும் தவ்ஹீது பெயரால் மோசடி செய்துவிட்ட டிரஸ்ட்டுகளும் பத்திரிக்கைகளும் த.மு.மு.க.வுக்கு சொந்தமானவை என்பதை மறுத்தால் லுஹாவை தலைவராக ஏற்று இருப்பவர்கள் மானமுள்ளவர்களாக இருந்தால் மோசடியாளர்கள் இல்லை என்றால் உண்மையான முஸ்லிம்களாக இருந்தால் அல்லாஹ்வின் சாபத்தை கேட்டு மறுக்கட்டும். மறுக்க மாட்டார்கள். எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.

ததஜ தலைமையில் உள்ளவர்கள் (லுஹா போன்றோர்) பல வழிகளில் வருமானம் பார்த்தார்கள் என்ற பீ.ஜே. ஒரே நேரத்தில் எத்தனை நிறுவனங்களில் வருமானம் பார்த்தார்கள். மஸ்ஜிதுர்றஹ்மான், அல்இர்ஷாத் பெண்கள் கல்லூரி, அல்இர்ஷாத் நர்சரி, இஸ்லாமிய ஆண்கள் கல்லூரி, ஏகத்துவம், உணர்வு என எவ்வளவு என்ற விபரம்  இதுவரை  பீ.ஜே. வெளியிடவில்லை.

மஸ்ஜிதுர்றஹ்மான், மஸ்ஜிதுஸ் ஸலாம் போன்றவற்றில் லுஹா தம்பி காஜா பெற்ற சம்பளம், லுஹா மகன் உஸாமா பெற்ற சம்பளம், மாநில நிர்வாகிகள் என்ன என்ன மாதிரியான சம்பளம் அலவன்ஸ் பெற்றார்கள் விபரங்களைபீ.ஜே.  இதுவரை ஏன்  வெளியிடவில்லையே ஏன்?
                              இதற்கிடையில்
                      
பதவியை_கொடுத்து
_வாயடைத்த_YMJ பீஜேயின் அத்தனை அந்தரங்க ரகசியங்களையும் தெரிந்த பீஜேவின் முன்னால் ஊழியர் ஆசிக் (919940363327) என்பவனுக்கு சென்னை மாவட்ட துனை செயலாளர் பதிவியை கொடுத்து பீஜேவின் அத்தனை அந்தரங்க ரகசியங்களும் வெளிவராமல் தடுத்த Ymj ...."கண்ணை நம்பாதே , உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம் ...உண்மை இல்லாதது 

என்ற விமர்சனங்களும் வந்த வண்ணம் உள்ளன. 

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.