அற்புதமாம் அல்குர்ஆனில் விளையாடும் அற்ப வியாபாரி செயலை ஷிர்க் என்பதா? இறை(வார்த்தை) நிராகரிப்பு என்பதா


பி.ஜே. அவர்கள் வெளியிட்டுள்ள தர்ஜுமாவில் உள்ள தவறுகளை சுட்டிக் காட்டி இதுவரை இரு இதழ்கள் வெளியிட்டுள்ளோம். இவற்றைப் படித்தவர்களில் நியாயவான்களெல்லாம் வரவேற்று இது ஒரு வித்தியாசமான ஆய்வு என்று பாராட்டினார்கள். பலர் காப்பிகளாக எடுத்து வினியோகித்துள்ளார்கள். சிலர் புத்தமாக வெளியிட உள்ளதாகவும் அதற்கு அனுமதி உண்டா என்றும் கேட்டார்கள். நான் ரகசிய ராயல்டியோ அந்தரங்க கூலியோ வாங்கும் கூட்டத்தைச் சார்ந்தவனல்லன். எனவே தாராளமாக வெளியிடுங்கள் என்று கூறினேன்.


அந்த அளவுக்கு நமது முந்தைய வெளியீடுகள் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இருந்தாலும் பி.ஜேயை கண் மூடித்தனமாக பின்பற்றக் கூடியவர்களிடம் கடுமையான எதிர்ப்பையும் பெற்றுள்ளது. இந்த எதிர்ப்பைக் கூட மொட்டைக் கடித கூட்டத்தினர் பப்ளிக் பூத்திலிருந்துதான் காட்டினார்கள். எழுத முடியாத கொச்சை வார்த்தைகள் அதிலும் பொறுக்கி எடுத்த பச்சை வார்த்தைகள்தான் அவர்களது எதிர்ப்பில் வெளிப்பட்டன.

அவர்கள் பேசுவதெல்லாம் பச்சையானது கொச்சையானது. பார்ப்பதெல்லாம் புளுவானது. படிப்பதும் எழுதுவதும் மஞ்சல்களானது என்பதற்கு அவர்கள் வெளியிட்டுள்ள சி.டி.க்களும் எழுதி வரும் பத்திரிக்கைகளும் ஆதாரங்களாக உள்ளன. அதை மென்மேலும் உறுதிப் படுத்தியுள்ளது அவர்கள் மே வருமானத்திற்காக எழுதி வரும் ‘ஏகத்துவம்’ 2005 மே மாத இதழ்.



பி.ஜே. தரப்பினரின் விமர்சனங்களில் எழுதிக் காட்டக் கூடிய அளவில் உள்ள விமர்சனங்கள் ஒரு சிலதான் அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். பி.ஜே. மீது உள்ள வெறுப்பால்தான் விமர்சிக்கிறாய் என்றார்கள். பி.ஜே. சொல்லக் கூடிய விஷயங்கள் அனைத்தையும் எவ்வித முகாந்திரமும் இன்றி ஒட்டு மொத்தமாக விமர்சித்தால்தான் வெறுப்பால் விமர்சிக்கிறோம் என்று கூற முடியும். 

வெளிநாட்டில் வேலைக்குச் சென்றுள்ளவர்களெல்லாம் 2வருஷம் 5 வருஷம் என தொடராக அங்கு இருந்தாலும் இரண்டு ரகஅத்கள்தான் தொழ வேண்டும் என்கிறார் அதற்கு ஆயத்து ஹதீஸ்கள் ஆதாரம் உள்ளது என்கிறார். அரபியில் உள்ள ஹதீஸ் கிதாபுகளை படிக்கும் திறன் நமக்கு இல்லை. எனவே அது பற்றி நாம் விமர்சிக்கவும் இல்லை. ஒட்டு மொத்தமாகவோ ஆதாரமின்றியோ எதையும் நாம் விமர்சிக்கவில்லை. ஆதாரத்துடன்தான் விமர்சித்துள்ளோம். அதுவும் பி.ஜே.யே குறிப்பிட்டுக் காட்டியுள்ளதைத்தான் ஆதாரமாக சுட்டிக் காட்டியுள்ளோம். நமக்கு தெரியாத விஷயங்களில் நாம் தலையிடவில்லை.



மற்ற மொழி பெயர்ப்பில் தவறுகளே இல்லையா? அவற்றை ஏன் விமர்சிக்கவில்லை என்றார்கள். தவறு என்பது தவறிச் செய்வது. தப்பு என்பது தெரிந்து செய்வது.  மற்ற மொழி பெயர்ப்புகளில் தவறு இருந்தால் சுட்டிக் காட்டுங்கள் என்றும், இப்பணியில் குற்றம், குறைகள் இருப்பின் அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுகிறோம். அவற்றைக் காண்பவர்கள், எங்களுக்குத் தெரிவித்தால் அடுத்த பதிப்பில் திருத்திக் கொள்கிறோம், இன்ஷா அல்லாஹ். என்றும் இது மாதிரி பணிவான வேண்டுகோள்களை இடம் பெறச் செய்துள்ளார்கள். 


சுட்டிக் காட்டிய பிறகு அடுத்தடுத்த பதிப்புகளில் திருத்தமும் வெளியிட்டுள்ளார்கள். மொழி நடை என நடை முறை பற்றி கூறி அல்லாஹ்வின் வார்த்தைகளை நீக்கியுள்ள பி.ஜே. மேற்கண்ட பணிவான வேண்டுகோள்கள் எனும் நடை முறையை பேணவில்லை. 


மற்ற மொழி பெயர்ப்பில் தவறுகள் உள்ளது என்று கூறித்தான் சரியான மொழி பெயர்ப்பு வெளியிட்டுள்ளதாகக் பி.ஜே. கூறினார். சரியான மொழி பெயர்ப்பு என்று கூறி பி.ஜே. வெளியிட்டுள்ள மொழி பெயர்ப்பில்  தவறுகள்  செய்யவில்லை. தப்புகள் செய்துள்ளார். அவர் செய்துள்ளது கடுமையான தப்புகளாக இருந்தாலும் தவறு என்று நளினப் படுத்திதான் கூறியுள்ளோம்.



அருளப்பட்ட வரலாறு தொகுக்கப்பட்ட வராலறு உட்பட பல குறிப்புகளை பி.ஜே. அரபி நூல்களிலிருந்தே தொகுத்து எழுதியுள்ளார். தலைப்பு வாரியான ஆயத்துகளின் பொருள் அட்டவனை வெளியிட அல்பாலுல் குர்ஆன் போன்ற அரபி நூல்களைத்தான் பி.ஜே. பயன்படுத்தினார். 


எந்த நூலாக இருந்தாலும் அது வடிவமைக்கப்பட துணை நின்றவர்கள் பெயர்களை நன்றியுணர்வோடு ஒவ்வொரு பதிப்பிலும் வெளியிட்டே வருவார்கள். என்ன என்ன நூல்களெல்லாம் தொகுக்க துணை புரிந்தனவோ அந்த நூல்களின் பட்டியல்களையும் நன்றியுணர்வோடு வெளியிடுவார்கள். இவையெல்லாம் உலக நடைமுறை. 


அந்த உலக நடைமுறைகளையும் பேணவில்லை ஏன்? எங்கும் எதிலும் தான் என்பதை நிலைநாட்ட வேண்டும் என்பதுதான் காரணம். இதற்கு இவைகளும் ஆதாரங்களாக உள்ளன. தான் என்பதை நிலைநாட்ட வேண்டும் என்ற அவரது எண்ணம் எந்த அளவுக்கு முற்றி விட்டது என்பதற்குரிய ஆதாரங்களை பி.ஜே. தர்ஜுமாவிலிருந்தே தர உள்ளோம். என்ன இருந்தாலும் பி.ஜே.யை ஒருமையில் விமர்சிக்கக் கூடாது என்று சொல்லக் கூடியவர்கள் இதைப் படித்து விட்டு எப்படிப்பட்ட வார்த்தைகளால் விமர்சிக்க வேண்டும் என்று சொல்லட்டும்.



எந்த மொழி பெயர்ப்புகளாக இருந்தாலும் மூல நூலின் பெயருக்கு கீழ் மொழி பெயர்த்தோன் என குறிப்பிட்டுத்தான் மொழி பெயர்த்தவரின் பெயரை இடம் பெறச் செய்வார்கள். மூல நூலின் ஆசிரியர் பெயரை இடம் பெறச் செய்வதாக இருந்தால்தான் எழுதியவர், ஆசிரியர் என குறிப்பிடாமல் பெயரை மட்டும் போடுவார்கள். இதுவும் உலக நடை முறை. இந்த உலக நடை முறையையும் பி.ஜே. தனது தர்ஜுமாவில் தகர்த்தெரிந்துள்ளார். 

திருக்குர்ஆன்: பி.ஜைனுல் ஆபிதீன். திருக்குர்ஆன் என போட்டு விட்டு பி.ஜைனுல் ஆபிதீன் என போட்டுள்ளார். இதற்கு உலக நடை முறையில் என்ன அர்த்தம். குர்ஆனை எழுதியவர் பி.ஜே. என்றுதான் அர்த்தம். 

திரு குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தைகள் என போட்டு விட்டு அவரது பெயரை போட்டிருக்க வேண்டும். திரு குர்ஆன், குர்ஆன் அறிமுகம், மூலம், தமிழாக்கம், விளக்கம், அட்டவணை பி.ஜைனுல் ஆபிதீன் என போட்டுள்ளாரே இதற்கு என்ன பொருள்? எல்லாமே பி.ஜே. என்பதுதானே பொருள். இதை முஸ்லிமல்லாதவர்கள் எவ்வாறு புரிவார்கள். இதைத்தான் முஸ்லிமல்லாதவர்களும் புரியும் வண்ணம் எழுதியுள்ளதாக பி.ஜே. கூறியுள்ளாரோ?  அதைத்தான் பாக்கர் காகா தனது வெண்கலக் குரலில் விளம்பரம் செய்கிறாரோ?



பி.ஜே.யின் தர்ஜுமாவை பார்க்கும் பிற மதத்தவர்கள்  கிராமவாசிகள், இஸ்லாம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் எவ்வாறு புரிவார்கள். திருக்குர்ஆனை பி.ஜைனுல் ஆபிதீன் என்பவர் எழுதியுள்ளார் என்றுதானே விளங்குவார்கள். எனவே இதை திருத்துங்கள். உங்கள் பெயருக்கு முன் மொழி பெயர்த்தவர், மொழி பெயர்ப்பு ஆசிரியர் என குறிப்பிடுங்கள் என்று முதல் பதிப்பு வெளி வந்ததிலிருந்து பலரும் பல முறை எழுதியும் கண்டு கொள்ளாமல் இருக்கிறாரே! இதிலிருந்து அவர் என்னதான் விரும்புகிறார் புரிகிறதா. சமுதாயத்தை எங்கே அழைத்துச் செல்கிறார்?

திரு குர்ஆனை எழுதியது பி.ஜைனுல் ஆபிதீனாஎல்லாம் பி.ஜே. என்ற பிரமிப்பு ஏற்பட வேண்டும் என்ற அவரது நோக்கம் மிகைத்து எங்கு போய் நிற்கிறது பார்த்தீர்களா? விபரம் தெரியாத ஒருவன் தெரிந்தோ தெரியாமலோ குர்ஆனை முஹம்மது எழுதினார் என்ற பொருள்பட எழுதினால் என்ன மாதிரி வார்த்தைகளால் விமர்சித்திருப்பீர்கள். 

தானே குர்ஆனை எழுதியது போன்ற மாயை ஏற்படும் வண்ணம் எழுதியுள்ளாரே, இப்படிப்பட்டவரை விமர்சிக்க நீங்கள் என்ன மாதிரியான வார்த்தைகளைப் பயன்படுத்துவீர்கள்? அந்த மாதிரி வார்த்தைகளையே பயன்படுத்தி அவருக்கு எழுதி எனக்கு காப்பி அனுப்புங்கள். ஒருமையில் நான் செய்த விமர்சனங்களை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்.



பி.ஜே.யுடன் இருந்த போது ஏன் விமர்சிக்கவில்லை என்கிறார்கள். தவறுகள் எப்பொழுது சுட்டிக் கட்டப்பட்டாலும் யார் சுட்டிக் காட்டினாலும் திருத்திக் கொள்ள வேண்டும். இதுதான் நல்லவர்களுக்குரிய சிறந்த பண்பு. அப்பொழுது ஏன் சொல்லவில்லை. அவர் ஏன் சொல்லவில்லை என கேட்பது சரியான வழி அல்ல. பி.ஜே. தர்ஜுமாவை எழுதிக் கொண்டிருக்கும்போதே நான் விமர்சனக் கடிதம் எழுதியுள்ளேன். 

அதில், தப்ஸீர் எழுதப் போவதாக பிரம்மாண்ட அறிவிப்பு வெளியிட்டு பிரபலப்படுத்தினீர்கள். அவதூறு பரப்பும் பணிகளில் ஈடுபட்டு விட்டீர்கள். அதனால் தப்ஸீர் பணிக்குரிய ஆய்வுகளில் உங்களால் ஈடுபட முடியவில்லை. எனவே ஏற்கனவே பேசியவற்றை தொகுத்து வெளியிட முயன்றீர்கள். அதுவும் சரிவரவில்லை. இறுதியில் முஸ்லிமல்லாதவர்களுக்குப் புரிந்திடும் வகையிலான தர்ஜுமா என அறிவித்து விட்டீர்கள் என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளேன். 

அவரது தர்ஜுமா வெளி வரும் முன்பே அவரை விட்டும் அல்லாஹ் எம்மைக் காப்பாற்றி விட்டான். இல்லை என்றால் வழி கேடன்களில் ஒருனாக நானும் ஆகி இருப்பேன். மஆதல்லாஹ்.



மரணத்தை எந்த எதிரி நம்ப மாட்டான் என்று கேட்டுள்ளாய். எதிரி என்ற வார்த்தைக்கு நேரடியான அர்த்தத்தை எடுத்துள்ளாய். எதிரி என்றால் எதிர் கருத்துடையவர்கள் என்றுதான் அர்த்தம். நிச்சயமாக என்பது தமிழில் எதிர் கருத்துடையவர்கள் நம்பவே மாட்டார்கள் என்ற சந்தர்ப்பத்தில் மட்டுமே பயன்படுத்தப்படும் வார்த்தை. குர்ஆனை அல்லாஹ்வுடைய வேதம் என்று ஒவ்வொரு முஸ்லிமும் நம்புகிறார்கள். எனவேதான் நிச்சயமாக என்ற வார்த்தையை பி.ஜே. தவிர்த்துள்ளார் என்றும் விளக்கம் கூறுகிறார்கள். 


அவர்களின் இந்தக் கூற்றும் தவறுதான். குர்ஆன் முஸ்லிம்களுக்காக மட்டும் அருளப்பட்டது அல்ல. ஒட்டு மொத்த மனித சமுதாயத்திற்காகவும்தான் அருளப்பட்டது. அது முஃமின்களே என்று மட்டும் அழைத்துப் பேசவில்லை. ஓ மனிதர்களே என்றும் அழைத்துப் பேசுகிறது. மனிதர்கள் என்றால் முஸ்லிம்கள் மட்டுமன்றி இந்து, கிறிஸ்து என உலகில் உள்ள அனைவரும் அடங்குவார்கள். 


முஸ்லிமல்லாதவர்களெல்லாம் குர்ஆனுடன் ஒத்த கருத்துடையவர்கள் அல்லவே. ஒத்த கருத்துக்கு வந்து விட்டால் அதற்குப் பெயர்தானே முஸ்லிம்கள். எனவே முஸ்லிமல்லாத அனைவரும் எதிர் கருத்துடையவர்களே. இந்த அடிப்படையிலும்  நிச்சயமாக என்ற வார்த்தையை ஒட்டு மொத்தமாக குர்ஆனிலிருந்து  நீக்கியது தவறுதான். முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் புரியும் வண்ணம் மொழி பெயர்த்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ள பி.ஜே.யின் கூற்றுப்படி பார்த்தாலும் தவறுதான். பி.ஜே.யின் கூற்றுக்கு பி.ஜே.யே முரண்பட்டுள்ளார்.



அல் குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தைகள் என்பதால் 1400 ஆண்டுகளாக எந்த அளவுக்கு உள்ளச்சத்துடன் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பதற்கு ஒரு எடுத்துக் காட்டு அதன் எழுத்து வடிவு. இன்று நம்மிடம் இருக்கும் குர்ஆன் வரிசை முறையை உஸ்மான் (ரலி) அவர்கள்தான் ஏற்படுத்தினார்கள். அந்த வரிசை முறையைத்தான் இன்றளவும் பயன்படுத்தி வருகிறோம். 

“இக்ரஉ பிஸ்மி ரப்பிக்கல்லரீ கலக்“ என்பதுதானே முதலில் அருளப்பட்ட வசனம் எனவே அதை முதலில் அமைத்தால் என்ன என்று யாரும் மூக்கை நுழைக்கவில்லை. அதுபோல் கைப்பட எழுதி பிரதி எடுக்கும் காலத்தில் ஏற்பட்ட மாறிய சில எழுத்துக்ளைக் கூட அதன் மேல்தான் குறிப்பிட்டு காட்டப்பட:டுள்ளதே தவிர அதைக் கூட மாற்றுவோம் என்று யாரும் ஈடுபடவில்லை. 

அதனால்தான் ஊருக்கு ஒரு குர்ஆன் நாட்டுக்கு ஒரு குர்ஆன் என்ற வேறுபாடுகள் இல்லாமல் உலகம் முழுவதும் ஒரே வடிவில் குர்ஆன் உள்ளது. மாறிய எழுத்துக்ளைக் கூட அப்படியே வைத்துள்ளதிலிருந்து எந்த அளவுக்கு திருமறையை பாதுகாப்பதில் முஸ்லிம்கள் பேணுதலாக உள்ளார்கள் என்பதை உணரலாம்.


அப்படிப்பட்ட குர்ஆனின் மொழி பெயர்ப்பிலிருந்து அல்லாஹ்வின் வார்த்தைகளை பி.ஜே. நீக்கி உள்ளார். ஆனால் அவரது ஆதவாளர்களோ நீக்கியதற்கு தக்க காரணமும் கூறித்தானே உள்ளார் என்கிறார்கள். அவர் கூறியுள்ள காரணம் தவறானது என்பதை முதல் வெளியிட்டிலேயே விளக்கி விட்டோம். 

தங்கள் அறிவுக்கு ஒத்து வராத வசனங்ககளை குர்ஆனிலிருந்து நீக்க வேண்டும் என்றுதான் சல்மான் ருஷ்டி, தஸ்லிமா நஸ்ரின் போன்றவர்கள் மூலம் காலம் காலமாக இஸ்லாமிய விரோதிகள் வைத்து வரும் வாதமாகும் அவர்களது இந்த வாதத்திற்கு வக்காலத்து வாங்கி வலு சேர்த்து ஒத்து ஊதும் வண்ணமாகத்தான் பி.ஜே.யின் இம்மாபாதகச் செயல் உள்ளது. 

பி.ஜே.யின் இம்மாபாதகச்; செயல் பரவினால் மொழி நடைக்கு ஒத்து வராததை மொழி பெயர்ப்புகளிலிருந்து நீக்கலாம் என்றால் உலக நடை முறைகளுக்கு ஒத்து வராது என்று நாங்கள் கூறும் வசனங்களை மூலத்திலிருந்து ஏன் நீக்கக் கூடாது என்ற கூற்று வலுப் பெற்று விடும். எனவே இம்மாபாதகச்; செயல்களுக்கு துணை போவதிலிருந்து அல்லாஹ் நம் அனைவரையும் காப்பானாக.



பி.ஜே. தர்ஜுமாவில் குறை காண வேண்டும் என்பதற்காக 3 வருஷமாக முயற்சி பண்ணியும் நிச்சயமாக என்ற வார்த்தையில் 225, 226 ஆகிய இருவசனங்களுக்கிடையிலான ஒரு வித்தியாசம் மட்டும்தான் உனக்கு கிடைத்துள்ளது  என்று கூறினார்கள். 

குறை காண வேண்டும் என்ற ஆய்வில் நாம் ஈடுபடவில்லை. அல்குர்ஆன் 3:7வது வசனத்திற்கு  பி.ஜே. செய்துள்ள மொழி பெயர்ப்பு ஷிர்க்கானது என்று சிலர் கூறுகிறார்கள். 

நபி(ஸல்) அவர்களைப் பார்த்து  ”அல்லாஹ்வும் நீங்களும் நாடினால்என்று ஸஹாபாக்கள் கூறி வந்ததை இணை வைப்பு-ஷிர்க் என்று யூதர்கள் சுட்டிக் காட்டினார்கள். அதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள்  "அல்லாஹ்வும் நாடி அதன்பின் நீங்களும் நாடினால்" என்று தம்மை நோக்கி கூறும்படி நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள் என்று பீ.ஜே. கூறும் இந்த ஹதீஸின் அடிப்படையில் அல்லாஹ்வும் தூதரும் என்று ஒரே தரத்தில் கூறுவதே ஷிர்க் என்றால் அல்லாஹ்வும் அறிஞரும் என்று ஒரே தரத்தில் கூறுவது நிச்சயமாக ஷிர்க்தானே என்று கூறுகிறார்கள். 

நாம் இது மாதிரி அவரது மொழி பெயர்ப்பினுள் நுழைந்து ஆய்வு செய்யவில்லை. பி.ஜே. மொழி பெயர்ப்பிலுள்ள அது மாதிரியான தவறுகளை சுட்டிக் காட்டப் போனால் உனக்கு அரபி  தெரியுமா? அரபு மொழி இலக்கணம் தெரியுமா? என்று கேட்பார். புறச் சான்று அகச் சான்று என்று பேசுவார். எனவே அந்த மாதிரி ஆழமான ஆய்வுக்கு நாம் போகவில்லை. பி.ஜே.யே கூறியுள்ள காரணங்களையும் அவர் கூறியுள்ள காரணங்களிலிருந்து அவரே முரண்பட்டுள்ளதையும்தான் சுட்டிக் காட்டி உள்ளோம். அதுவே பி.ஜே. அணியினரை நிராகரிப்பாளர்களாக அடையாளம் காட்டிக் கொண்டிருக்கிறது.

.

மேலும் ஒரு வித்தியாசம்தான் என்பதும் தவறு. நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவன்என்பதை அல்லாஹ் மன்னிப்பவன்என்று தமிழ்ப்படுத்தியுள்ளோம் என்று பி.ஜே. குறிப்பிட்டுள்ளார். எனவே பி.ஜே. குறிப்பிட்டுக் கூறியுள்ளதிலிருந்தே உதாரணத்திற்காக ஒரு வித்தியாசத்தை மட்டும் சுட்டிக் காட்டி உள்ளோம். வித்தியாசம் என்பதை பட்டியலிட்டால் நிச்சயமாக என்பதில் மட்டும் சுமார் 2180 வித்தியாசங்களை காட்ட முடியும். 


ஈஸா(அலை) அவர்களைப் பற்றி கூறும் ஆயத்துக்களை எடுத்துக் கொள்வோம். 36 ஆயத்துகளில் அல்லாஹ் ஈஸா(அலை) அவர்கள் பற்றி சொல்லிக் காட்டியுள்ளான். இவற்றில் பெரும்பாலான இடங்களில் ஈஸா என்றும் ஈஸப்னு மர்யம் என்றும்தான் குறிப்பிட்டுள்ளான். 


4:171வது வசனத்தில் மட்டும்தான் “இன்னமல் மஸீஹிப்னு மர்யம ரஸுலுல்லாஹி“ நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா எனும் மஸீஹ் அல்லாஹ்வின் தூதர்தான் என்று கூறியுள்ளான். 

இத்தனை வசனங்களில் நிச்சயமாக என்ற வார்த்தையை ஈஸா(அலை) அவர்கள் பெயருக்கு முன் பயன்படுத்தாத அல்லாஹ் இந்த வசனத்தில் மட்டும் ஏன் பயன்படுத்தியுள்ளான். இதை மிகச் சாதாரணமான நாம் சிந்திக்கும்போது திருவாளர் பி.ஜே.யால் சிந்திக்க முடியாமல் போனது ஏன்?

.

இந்த வசனத்தின் துவக்கமே வேதமுடையோரே! என்று எதிர் கருத்துடையவர்களை அழைத்துத்தான் பேசுகிறது. அதிலும் குறிப்பாக முக்கடவுள் கொள்கை, ஈஸா(அலை)அவர்களை கடவுளின் குமாரர் என்று கூறும் கொள்கை ஆகிய எதிர் கருத்துக்களை மறுத்துத்தான் பேசுகிறது. 

ஈஸா(அலை) கடவுளின் குமாரர் அல்ல என்பதை உறுதிப்படுத்தி அழுத்தத்துடன் சொல்லத்தான் இன்னமல் மஸீஹிப்னு மர்யம ரஸுலுல்லாஹி: 

நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா எனும் மஸீஹ் அல்லாஹ்வின் தூதர்தான்: என்று கூறியுள்ளான்.  

நிச்சயமாக என்பது தமிழில் எதிரி நம்பவே மாட்டான் என்ற சந்தர்ப்பத்தில் மட்டுமே பயன்படுத்தப்படும் வார்த்தை என்ற கூற்றில் பி.ஜே. உண்மையளராக இருந்தால் இந்த ஆயத்திலுள்ள நிச்சயமாக என்ற வார்த்தையை ஏன் நீக்கினார். வியாபரா நோக்கத்திற்காக இலாப நோக்கோடு ஏதாவது வித்தியாசமாக பண்ண வேண்டும்  என்றால் அதற்காக குர்ஆன் வசனங்களையா நீக்க வேண்டும்.


வியாபரா நோக்கம் இலாப நோக்கம் என்பதை கற்பனையாகச் சொல்லவில்லை. ஜான் டிரஸ்ட் தர்ஜுமா சில்லரை விலை 115 மொத்த விலை 90. 

மாஹின் பிரிண்டர்ஸ் 120- 100, 
பஷாரத் 120-110, 
அப்துல் ஹமீது பாக்கவி 120-100. 

இப்படி எல்லாத் தர்ஜுமாக்களின் விலையிருக்க பி.ஜே. தர்ஜுமாவின் விலை 200ரூபாய். மொத்தமாக வாங்கினால் 10 தள்ளுபடி. பி.ஜே. தர்ஜுமாவின் அடக்க விலை என்ன தெரியுமா? 110 மட்டும்தான். டெல்லியிலிருந்து பிரிண்டாகி சென்னை வந்து சேர்ந்த பின்னர்தான் அடக்க விலை 110. ஒரு தர்ஜுமா மூலம் 90 ரூபாய் சம்பாதிக்கும் ஒரே வியாபாரி பி.ஜே. மட்டும்தான். 

முஸ்லிம் பெண்மணி ஸாஜிதா புக் சென்டருடன் உறவாக இருந்தால் பெரும்பாலான தர்ஜுமாக்கள் ஜகரிய்யா மூலம்தான் விற்பனையாகும். எனவே அந்த வருவாயும் தனக்கே வர வேண்டும் என்பதற்காக தொலை (அற்ப) நோக்கு திட்டத்தோடு ஜகரிய்யாவை பகைத்துக் கொண்டார். பி.ஜே. என்ன சாதாரண வியாபாரியா? அற்புதமாம் அல்குர்ஆனில் விளையாடும் அற்ப வியாபாரி அல்லவா.



பி.ஜே.யை விட நீ என்ன பெரிய அறிவாளியா? நீ கபாப் கம்பியை மட்டும் பிடி இல்லை சால்னா ஆப்பையை பிடி தர்ஜுமாவில் தலையிடாதேஎன்றார்கள். 

பி.ஜே.யை விட நான் அறிவாளி என்று நான் சொல்லவில்லை. அவர்தான் அறிவாளி. நான் மிகச் சாதாரண ஆள்தான் ரெஸ்ட்ராரண்ட் ஊழியன்தான். நான் கேட்டுள்ளது அல்லாஹ்வுக்குத் தெரியாதது பி.ஜே.க்கு தெரிந்து விட்டதா

அல்லாஹ்வை விட பி.ஜே. என்ன பெரிய அறிவாளியா என்பதுதான். அல்லாஹ்வுக்குத் தெரிந்ததெல்லாம் நல்லடியார்களுக்கும் தெரியும் என்பது நிரந்தர நரகில் கொண்டு போய் சேர்க்கும் ஷிர்க். அந்த ஷிர்க்கிலிருந்து மக்களை மீட்கப் போகிறோம் என்றார்கள். ஆனால்ஷிர்க்கைவிட மோசமான ஷிர்க்குக்கு முந்தைய குபுரின் பக்கம்தான் இழுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை சிந்தித்தால் விளங்கலாம்.



பி.ஜே. அல்லாஹ்வின் வார்த்தைகளை நீக்கி விட்டார் என்கிறாயே குர்ஆனின் மூலத்திலிருந்தா நீக்கி விட்டார். மொழி பெயர்ப்பிலிருந்துதானே நீக்கியுள்ளார். அதை எப்படி அல்லாஹ்வின் வார்த்தைகளை நீக்கி விட்டதாகக் கூற முடியும் என்றும் கேட்டார்கள். 

குர்ஆனிலிலுள்ள எந்த வசனமாக இருந்தாலும் அதை எந்த மொழியில் மொழி பெயர்த்துக் கூறினாலும் அல்லாஹ் சொல்கிறான் என்று சொல்வார்களாமொழி பெயர்ப்பில் கூறப்பட்டுள்ளது என்று கூறுவார்களா?

ஜகாத்தை எடுத்துக் கொள்வோம். ஜகாத் கொடுக்க வேண்டும் என்று மொழி பெயர்ப்பில் கூறப்பட்டுள்ளது என்றா கூறுவார்கள்? 

அல்லாஹ் சொல்லி உள்ளான் என்றுதானே சொல்லிக் காட்டுவார்கள். அப்படி சொல்லிக் காட்டும்பொழுது நீக்கப்படுகிற வார்த்தை யாருடையது

அல்லாஹ்வின் வார்த்தைதானே. நீக்கப்பட்டது அல்லாஹ்வின் வார்த்தை ஆயிற்றே என்பதைவிட நீக்கியவர் பி.ஜே. அல்லவா என்ற எண்ணம்தான் த.த.ஜ.வினரிடம் மேலோங்கி நிற்கிறது. அதாவது அல்லாஹ்வைவிட பி.ஜே. மேலோங்கி நிற்கிறார். இதை ஷிர்க் என்பதா? இறை(வார்த்தை) நிராகரிப்பு என்பதா?



தனிமனிதர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முபாஹலாதான் தீர்வு விவாதம் தேவை இல்லை. மார்க்க மஸாயில்களுக்குத்தான் விவாதம் தீர்வு என்றாய். பி.ஜே. தர்ஜுமா சம்பந்தமாக விவாதிக்கத் தயாரா என்று கேட்டார்கள். 


இளையான்குடி த.த.ஜ. பொருளாளர் பொறுப்பில் உன்ன அக்பர் மூலம் பேசப்பட்டதற்கே உங்கள் தலைமையிடமிருந்து ஒழுங்கான பதில் வரவில்லை. பெயர் சொல்லாமல் மொட்டைக் கடித வழியில் அவ்வப்போது பப்ளிக் பூத்களில் நின்று பேசும் உங்களை எப்படி நம்ப முடியும்?

பி.ஜே. தர்ஜுமா ஓர் வழி கேடே என்று விவாதம் பண்ண நாம் தயார். அதற்கு முன்னதாக பி.ஜே. ஏற்கனவே சவால் விட்டுள்ளபடி அந்நஜாத் அபூ அப்துல்லாஹ் விவகாரத்திலிருந்து அலாவுதீன் விவகாரம் வரை அனைத்திற்கும் முபாஹலா பண்ண வேண்டும். 

குணங்குடி ஹனீபா ஜெயலலிதாவிடம் இரண்டு லாரியும் தகுதியில்லாத இரண்டு பையன்களுக்கு டாக்டர் சீட்டும் வாங்கி விட்டார் என்பது உட்பட பி.ஜே. பரப்பிய  அனைத்து விஷயங்களுக்கும் முபாஹலா பண்ணி முடிந்ததும் அந்த மேடையிலேயே பி.ஜே. தர்ஜுமா ஓர் வழி கேடே என்ற  விவாதத்தை ஆரம்பித்து விடுவோம். 

த.மு.மு.க.வுக்கு சொந்தமான பத்திரிக்கைகளையும் டிரஸ்டுகளையும் மோசடி செய்து விட்ட மெகா மோசடியாளர் பி.ஜே.யிடம் தேதி அறிவிக்கச் சொல்லுங்கள் என்றோம். சரி ஒரு மணி நேரத்தில் பி.ஜே.யின் ஒப்புதல் கடிதத்துடன் வருகிறோம் என்றார்கள். இன்று இந்த நொடி வரை வரவில்லை. வரவே மாட்டார்கள் பி.ஜே.யும் ஒப்புதல் அளிக்கவே மாட்டார். ஏனென்றால் முபாஹலாவுக்கு வந்தால் பி.ஜே.யும் அவருடன் உள்ளவர்களும் பொய்யர்கள், மார்க்கப் பிரச்சாரத்தை தொழிலாகக் கொண்டவர்கள் என்பது நிரூபிக்கப்பட்டு விடும். அவர் வருவாரா?
                              வெளியீடு: கா.அ. முஹம்மது பழுலுல் இலாஹி
                                 31-05-2005
                                                  அல் கிஸஸ், துபை, யு.ஏ.இ. 


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.