தொ(நொ)ண்டிக் குதிரைகளுக்கு சறுக்கியதுதான் சாக்காம்.

தமிழகத்தில் நடந்த குண்டுவெடிப்புகளுக்கெல்லாம் மூல காரணமானவர் பி.ஜே.தான் என்பதை அவரது துபை பயணம் மூலம் பெரும்பாலான மக்கள் புரிந்து கொண்டார்கள். எனவே இனி அவரைப் பற்றி எழுத வேண்டாம் என்று பலர் கேட்டுக் கொண்டார்கள். அதனால் நாமும் இனி அவரைப்பற்றி எழுத வேண்டாம் என்ற முடிவில் இருந்தோம். அந்த பி.ஜெய்னுல் ஆப்தீன் என்பவர் துபையில் இருந்தவரை எந்த பாகத்தில் இருந்தார் எங்கு தங்கி இருந்தார்? யாருடன் தங்கி இருந்தார்? என்ன செய்தார் என்பதையெல்லாம் மிக மிக ரகசியமாக வைத்திருந்தார். அவர் துபையில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த காலத்தில் அவரது பத்திரிக்கையில் துபை என்ற வார்த்தையையே எழுத பயந்து நடுங்கியவராக இருந்தார். அப்படிப்பட்ட மாவீரர் துபையை விட்டு போன பின்னர் நம்மைப் பற்றி பொய்களை எழுதி திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டுவிட்டார். எனவே மீண்டும் அவரைப்பற்றிய உண்மைகளை வெளியிட வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம் என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறோம்.
பொய்யர்கள் என்பதை நிரூபித்திடும் சிறப்பு இதழ்.
பி.ஜே.யின் துபை நிகழ்ச்சிகள் தடையானது குறித்து பாக்கர், லுஹா, ஸைபுல்லாஹ் போன்றவர்கள் கூறிய தகவல்களை பொய்ப்படுத்தி இந்த வார உணர்வு வெளியாகியுள்ளது. பி.ஜே.யின் வளைகுடாப் பயணம் பற்றி அவர்கள் கூறிய தகவல்களைப் பொய்ப்படுத்த வாந்தி எடுத்துள்ளார்கள் என்று எழுதப்பட்டுள்ளது. அதாவது பி.ஜே.யின் பின்னால் உள்ளவர்கள் அனைவர்களும் பொய்யர்களே என்பதை நிரூபித்து 2005 ஜனவரி 7 ஆம் தேதிய உணர்வு வெளியாகி உள்ளது. மொத்தத்தில் பி.ஜே.யின் ஆதரவாளர்களெல்லாம் பொய்யர்கள் என்பதை நிரூபித்திடும் சிறப்பு இதழாகவே அது வந்துள்ளது. அதில் முதல் பொய்யராக பி.ஜே. அடையாளம் காட்டப்பட்டுள்ளார். பி.ஜே. இடமுள்ள குறைகளை சுட்டிக் காட்டினால் அவரை எதிர்த்தால் உடனே எதிர்த்தவர்களை தவ்ஹீது கொள்கை விரோதிகளாக சித்தரித்து விடுவது அவரது குணம். இதை இப்பொழுது மீண்டும் நிரூபித்துள்ளார். அவரது வளைகுடா பயணம் சம்பந்தமாக அவரே வாந்தி எடுத்துள்ள 5 வது பக்கத்தில் இது தவிர நமது நாட்டைச் சேர்ந்த தவ்ஹீதுக்கு எதிரான பெரிய நிறுவனம் ஒன்று யு.ஏ.இல் செயல்பட்டு வருகின்றது என வாந்தி எடுத்துள்ளார்.
மேன்மக்கள் என்றும் மேன்மக்களே.
இவரை பேச அணுமதிக்காததற்கு காரணம் தவ்ஹீது கொள்கைப் பிரச்சனை அல்ல. மற்ற இடங்களில் தடையானதற்கு எந்த தீவிரவாதம் காரணமோ அதே காரணத்தால்தான் இங்கும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தீவிரவாதி தடுக்கப்பட்டார் என்பதற்காக தவ்ஹீதுக்கு எதிரான நிறுவனம் என வாந்தி எடுத்துவிட்டார். அவர்கள் மாற்று கருத்துடையவர்களாக இருந்தாலும் தவ்ஹீதுக்கு எதிரான வேலைகளில் ஈடுபடுபவர்கள் அல்ல மேன்மக்கள். இவரைப் போன்று சில்லரைகள் அல்ல. மேன்மக்கள் என்றும் மேன்மக்களே என்ற பழமொழிக்கு உதாரணமாக வாழ்பவர்கள். எதிர் கருத்துடையவர்கள் என்று தெரிந்தாலும் எதிரிகளாக பார்க்க மாட்டார்கள்.
ரசிகர்கள் ராஜினாமா செய்வார்களா?
டி.என்.டி.ஜே. மவுலவிகள் பிழைப்புக்காக கைப்பற்றியுள்ள தவ்ஹீது பள்ளிகளுக்கும் அள்ளி வழங்கி இருக்கிறார்கள். அது மாதிரியெல்லாம் நன்கொடை தரவில்லை என பி.ஜே. மறுத்தால். அந்த மவுலவிகளே கை நீட்டி வாங்கிய பணத்தை கணக்கில்; வரவு வைக்காமல் களவாடி விட்டார்கள் என்றோ ரகசிய கூலிக்கு கொடுத்து விட்டார்கள் என்றுதான் சொல்ல முடியும்.. அந்த நிறுவனத்தில் இவரது ரசிகர்கள் பலர் வேலை செய்கிறார்கள். இவரது ரசிகர் மன்றத்தின் துணைத் தலைவராக உள்ள கீழை ஜமீலும் அங்குதான் வேலை செய்கிறார். இவர் வாந்தி எடுத்துள்ளதுபோல் தவ்ஹீதுக்கு எதிரான நிறுவனம் என்றால் அதில் ஜமீல் ஏன் வேலை செய்ய வேண்டும். ஜமீலும் மற்றுமுள்ள ரசிகர்களும் ராஜினாமா செய்வார்களா? ஜமீல் அங்கு வேலை செய்வதும் அவர் வேலை செய்யும் நிறுவனத்தை மேடைகளில் விமர்சித்து பேசியது தெரிந்த பின்பும் அந்த நிறுவனம் அவரை நீக்கிவிடாமல் பெருந்தன்மையுடன் வேலையில் வைத்திருப்பதும் அது தவ்ஹீதுக்கு எதிரான நிறுவனம் அல்ல என்பதற்கும் அந்த நிறுவனம் பற்றி எழுதியுள்ள பி.ஜே. ஒரு பிராடு என்பதற்கும் உள்ள ஆதாரங்களாகும்.
உலக மகாப் பொய்யர், பிராடு, பித்தலாட்டக்காரர்.
டிச 10–16 2004 உணர்வின் 8 வது பக்கத்தில் அமீரகத்தில் இஸ்லாமிய எழுச்சி! என ஒரு பெட்டிச் செய்தி இடம் பெற்றுள்ளது. அதில் எந்த நிறுவனத்தை தவ்ஹீதுக்கு எதிரான நிறுவனம் என இப்பொழுது எழுதி உள்ளாரோ அந்த நிறுவனத்திற்கு சொந்தமான 3 இடங்களில் கீழை ஜமீல், மவுலவி அஷ;ரபுத்தீன் பிர்தவ்ஸி ஆகியோர் பேசினார்கள் என்று உள்ளது. இதுவே அது தவ்ஹீதுக்கு எதிரான நிறுவனம் அல்ல என்பதற்குரிய மிகப் பெரிய ஆதாரமாகும். எனவே இப்பொழுது தவ்ஹீதுக்கு எதிரான நிறுவனம் என பி.ஜே. வாந்தி எடுத்துள்ளதன் மூலம் இவர் ஒரு உலக மகாப் பொய்யர், பிராடு தனது வாதத்தை நிலை நாட்ட எப்படிப்பட்ட அப்பட்டமான பொய்களையும் சொல்லக் கூடிய பித்தலாட்டக்காரர் என்பது நிரூபிக்கப்பட்டு விட்டது. அதுவும் இவர் வயிற்றுப் பிழைப்புக்காக கைப்பற்றியுள்ள உணர்வு வார இதழ் மூலமே நிரூபிக்கப்பட்டு விட்டது. அல்ஹம்துலில்லாஹ். உணர்வு இதழ் மூலமே பொய்யர், பிராடு, பித்தலாட்டக்காரர் என நிரூபிக்கப்பட்டுவிட்டவர்தான் தனது வாதத்தை நிலைநாட்ட என்னைப் பற்றியும் பொய்ச் செய்தி வெளியிட்டுள்ளார்.
மல்டிப் பேச்சாளராக ஆகிவிட்ட பல்டிப் பேச்சாளர்.
பி.ஜெய்னுல் ஆப்தீன் என்பவர் துபையில் எப்படி இருந்தார் என்ற உண்மையை அனைவரும் அறிவார்கள். இவரைக் கண் மூடித்தனமாய் பின்பற்றுவோர் இவரது தலைமறைவு வாழ்க்கையைப் பற்றி புரிந்து விடக் கூடாது என்பதற்காக வழக்கமான சவடால்களை விட்டு அவர்களது கவனத்தை திசை திருப்பி அவர்களது ஆதரவை தக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். துபையில் தடை செய்யப்பட்ட கிரசன்ட் ஸ்கூலின் அதே இடத்தில் 31-12-2004 அன்று பேசிவிட்டுத்தான் தாயகம் திரும்புவேன். மீண்டும் அதே இடத்தில் கூட்டம் நடத்தாவிட்டால் டி.என்.டி.ஜே.யையே கலைத்து விடுவேன் என்றார். பல்டி அடித்துப் பேசுவதில் வல்லலராக இருந்த பல்டிப் பேச்சாளர் ஜெய்னுல்ஆப்தீன் இப்பொழுது மல்டிப் பேச்சாளராக ஆகிவிட்டார். அந்த மல்டிப் பேச்சாளரின் சவடால்களை நம்பக் கூடிய தமிழ்நாட்டிலும் சவூதியிலும் உள்ள டி.என்.டி.ஜே.க்கள் .31 ஆம் தேதி கூட்டம் நடந்தே தீரும் என சவாலாக பேசி வந்தார்கள்.
டி.என்.டி.ஜே.யை கலைத்து விடுவீர்களா?
20 ஆயிரம் பேரைக் கூட்டி காட்டுவோம் என சில சின்ன பி.ஜே.க்கள் சவாலாக பேசித் திரிந்தனர். இறுதியில் சுருதி இறங்கிய பி.ஜே. அதே இடத்தில் பேசுவேன் என்பதிலிருந்து அந்தர் பல்யடித்து நான் ஒரு பெரிய கூட்டத்தில் பேசாமல் இங்கு இருந்து போகமாட்டேன் என்றார். இப்படி மல்டி சவால்களை விட்டுக் கொண்டிருந்தவர் 29 ஆம் தேதியே சொல்லாமல் கொள்ளாமல் ஓடி விட்டார். யாரிடமும் பயணம் கூட சொல்லவில்லை. அவர்களது இமாம் ஓடி விட்ட செய்தி அறியாத அவரது மஃமூம்கள் துபையில் இருப்பதாகவே நம்பிக் கொண்டிருந்தார்கள். உங்களது சவடால்படி 31-12-2004 அன்று துபையில் கூட்டம் நடத்தாமல் ஓடி வந்து விட்டீர்களே. டி.என்.டி.ஜே.யை கலைத்து விடுவீர்களா? என்ற கேள்விகளிலிருந்து தப்பிக்க பல பொய்களை புனைந்துள்ளார்.
மன நோயாளியாக ஆகிவிட்ட உண்மை.
அதில் நம்மை விவாதம் மற்றும் முபாஹலா ஒப்பந்தத்திற்கு கூப்பிட்டாதாகவும் நாம் வர மறுத்து விட்டாதகவும் செய்தி வெளியிட்டுள்ளார். அதற்கு ஆதாரமாக (42 நிமிடம் பேசப்பட்ட உரையாடலை அவர் விருப்பபடி எடிட் செய்து) அரை மணி நேரமாக ஆக்கியுள்ள ஆடியோ இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இவரை உலகுக்கு அறிமுகப்படுத்திய பத்திரிக்கையை மன நோயாளிகளின் பத்திரிக்கை எனவும் எழுதியுள்ளார். இதன் மூலம் அவர் மன நோயாளியாக ஆகிவிட்ட உண்மை வெளிப்பட்டுள்ளது. மன நோயாளியாக ஆகி விட்டவன் பார்ப்பவர்களையெல்லாம் மன நோயாளியாக கருதுவான் என்பது மருத்துவ உண்மை.
அவணுகனையெல்லாம் ஏன் பெரிய மனிதர்களாக ஆக்குகிறீர்கள்.
இந்த முபாஹலா பூச்சாண்டி துபை வருகிறார் என்றதுமே அவரை ஒரே மேடையில் சந்திக்க தயார் என்று குறிப்பிட்டு பல பிரசுரங்கள் வெளியிட்டோம். எதற்குமே பதில் தராமல் சுனாமி அடித்தவர்கள் போல் கிடந்தார்கள். அவர் ரகசியமாகக் கூட்டிய முதல் திருட்டுக் கூட்டத்தில் கூட நீங்கள் வந்ததோடு இந்த இலாஹிக்கும் பேட்மாநகரம் பாரூக்குக்கும் பதில் சொல்லி விட்டுப் போங்கள் என்று கூறி இருக்கிறார்கள். அதற்கு மழுப்பல் நாயகன் பி.ஜே. கூறிய மழுப்பல் பதில் என்ன தெரியுமா? அவணுகனையெல்லாம் ஏன் பெரிய மனிதர்களாக ஆக்குகிறீர்கள் என்பதுதான். உடனே அவரது சிஷ;யகோடிகளெல்லாம் பி.ஜே.யுடன் முபாஹலா பண்ண இலாஹி ஒன்றும் பெரிய ஆள் இல்லை என்று கூறித் திரிந்தார்கள்.
நழுவி உள்ளார் நழுவல் மன்னன்.
துபை வந்த நாளில் இருந்து நம்மை சந்திக்க மறுத்து வந்த பி.ஜே. ஒவ்வொரு ஆளிடமும் ஒவ்வொருவிதமான பொய்களைக் கூறி ஏமாற்றி வந்தார். லேண்ட் லைன் நம்பரை யாருக்கும் கொடுக்காமல் மொபைல் நம்பரில் கூட பேச பயந்து நடுங்கியவராக இருந்தார். அலாவுதீன் போனை எடுப்பார் முபாஹலா என்றால் டென்சனாகி போனை கட் பண்ணி விடுவார். சிலரிடம் நீ இலாஹியின் பினாமி நீ இலாஹியின் பினாமி என கத்தி இருக்கிறார். முபாஹலாவுக்கு தயார் இல்லை என்றும் சிலரிடம் கூறி இருக்கிறார். ஆதாரங்களெல்லாம் ஊரில் இருக்கு என்று கூறி ஒரு சிலரை ஏமாற்றி இருக்கிறார். இன்னும் சில ரகசிய நிகழ்ச்சிகளில் முபாஹலா பற்றி கேள்வி வந்தவுடன் கண்கலங்கிய நிலையிலும் கண்ணீர் வடித்தும் திசை திருப்பி கேள்வி கேட்வர்களையும் கூடி இருந்தவர்களையும் ஏமாற்றி இருக்கிறார். பழுலுல் இலாஹி பற்றி குற்றச்சாட்டுக் கூறி நான் பிரசுரம் வெளியிடவில்லை ஜவாஹிருல்லாஹ்தான் வெளியிட்டார். இன்று அவர் ஜவாஹிருல்லாஹ்வின் த.மு.மு.க.வில் சேர்ந்துவிட்டார் என்ற பொய்யையும் சிலரிடம் கூறி நழுவி உள்ளார் நழுவல் மன்னன் பி.ஜே. இந்த நழுவல் மன்னனின் இந்த மாதிரியான நழுவல்கள் இப்படி ஏராளமாக நடந்துள்ளன.
அணு அளவாவது மான உணர்வு இருந்தால்.
இவர் பேச எங்குமே அணுமதி கிடைக்கவில்லை என்றதும் இலாஹி கூட்டம் போடட்டும் அதில் வந்து குற்றச்சாட்டு பற்றி விளக்கம் கூறுகிறேன் என்று கூறி உள்ளார். குற்றச்சாட்டு என்ன என்பதை விளக்கித்தான் நோட்டீஸ் போட்டு விட்டாரே. இப்பொழுது அதை நிரூபிக்கத்தான் அவர் ஏகத்துவத்தில் எழுதி உள்ளபடி முபாஹலா பண்ண அழைக்கிறேன். விளக்கம் கூறுகிறேன் என்ற பெயரில் கூட்டத்தை ஏற்பாடு செய்ய வைத்து அதில் அவர் விரும்பியதை பேசிவிட்டு துபையில் பேசிவிட்டேன் என்று அறிவிக்க என் மீது குதிரை ஏற எண்ணுகிறார். அதற்கு நாம் இடம் கொடுக்க மாட்டோம். அவருக்கு அணு அளவாவது மான உணர்வு இருந்தால் முபாஹலாவுக்கு தேதி அறிவிக்கட்டும் என்று கூறி விட்டோம். எனவே வெறியின் உச்சத்திற்கு சென்று விட்ட அவர் இலாஹி ஊருக்கு வந்தால் கொலை செய்து விடுவோம் என்று கத்தி இருக்கிறார். துபையில் எங்களுக்கு எதிராக வேலை செய்தவர்கள் சென்னை வரும்போது கோட்டூர் ரபீக்கை வைத்து பாடம் புகட்டுவோம் என்று கோட்டூர் ரபீக் பெயரை குறிப்பிட்டே கூறி உள்ளார்.
மனைவி மக்கள் புரிந்து விட்டார்கள்.
இப்படி கொலை வெறி பிடித்தவராக ஆகிவிட்ட பி.ஜே .நம்மை ஒரே மேடையில் சந்திக்க திராணி இல்லாதவராக ஆகிவிட்ட பி.ஜே. முபாஹலா பிரச்சனையை திசை திருப்ப அவரது பினாமி ஏ. செய்யது அபூபக்கர் எனும் தொண்டியப்பாவைக் கொண்டு சதி திட்டத்துடன் போன் செய்ய ஏற்பாடு செய்துள்ளார். பி.ஜே.யின் சதி திட்டம் புரியாத துபை பி.ஜே. ரசிகர் மன்றத்தினர் சம்மதித்திருக்க மாட்டார்கள். இலாஹிக்கு போன் செய்தால் முபாஹலாவுக்காகத்தான் அழைப்பார். நாங்களெல்லாம் முபாஹலாவுக்கு தயார் இல்லை. எங்களை நம்பி எங்கள் மனைவி மக்கள் முபாஹலாவுக்கு வரத் தயார் இல்லை. எனவே இலாஹிக்கு போன் போட வேண்டாம் என்று துபை பி.ஜே. ரசிகர் மன்றத்து பொறுப்பாளர்கள் கெஞ்சி இருப்பார்கள். இதில் நமக்கு மாற்று கருத்து இல்லை. அதற்கு பி.ஜே, உங்கள் நிலை மட்டும் அப்படி அல்ல எங்கள் நிலையும் அப்படித்தான். பாக்கர் விவகாரம் ஆகட்டும் ஸைபுல்லாஹ் விவகாரம் ஆகட்டும் அவர்களது மனைவி மக்கள் வரமாட்டார்கள். இலாஹி சவால் விட்டுள்ள விஷயங்களில் நாங்களெல்லாம் பொய்யர்கள் என்பதை லுஹா, சுலைமான்களின் மனைவி மக்கள் புரிந்து விட்டார்கள். எனவே முபாஹலாவுக்கு அவர்களும் வரமாட்டார்கள்.
முபாஹலா பண்ணாமல் தப்பி விடுவோம்.
அதனால் முபாஹலாவுக்குப் பதில் விவாத நிகழ்ச்சி ஏற்பாடு செய்யலாம். அதில் டி.என்.டி.ஜே. மவுலவிகளை என்ன பொய் சொல்லச் சொன்னாலும் எப்படிப்பட்ட பொய் சொல்லச் சொன்னாலும் பொய் சத்தியம் செய்யச் சொன்னாலும் பொய் சாட்சி சொல்லச் சொன்னாலும் சொல்வார்கள். எனவே முபாஹலாவுக்கு அழைக்க மாட்டோம் விவாதத்திற்குதான் அழைப்போம். இலாஹி முபாஹலாவிலேயே உறுதியாக நின்றால் முதலில் விவாதம் பிறகு முபாஹலா என திசை திருப்புவோம். வந்து விட்டால் விவாதத்திலேயே நேரத்தை ஓட்டி விட்டு முபாஹலா பண்ணாமல் தப்பி விடுவோம் என்ற சதி திட்டத்தை கூறி இருப்பார். இதற்குப் பிறகுதான் துபை பி.ஜே. ரசிகர் மன்றத்தினர்; நமக்கு போன் போட ஒப்புக் கொண்டிருப்பார்கள். இதைத்தான் தனது மன்ற பொறுப்பாளர்களை சம்மதிக்க வைக்க ரொம்ப சிரமம் எடுத்துக் கொண்டோம் என குறிப்பிட்டுள்ளார். ஆம் சிரமப்பட்டிருப்பார்.
அப்பப்பா இவரல்லவோ பி.ஜே.யின் ஒரிஜினல்; பினாமி.
நடுநிலையாளர்களெல்லாம் முபாஹலாவுக்கு தயாரா என கேட்டு போன் போட்ட போது ஓடி ஒளிந்த தரப்பிலிருந்து 28 ஆம் தேதி திடீரென போன் வந்தது. இந்த நொண்டியப்பாக்களை காப்பாற்ற போன் போட்ட தொண்டியப்பா தன்னை த.த.ஜ.வின் மாநில துணைச் செயலாளர் என அறிமுகப்படுத்திக் கொண்டார். பி.ஜே.யுடன் ஒரே மேடையில் விவாதம் செய்யத் தயார் என்றீர்களே ஒப்பந்தம் செய்ய வாருங்கள் என்றார். முபாஹலாவுக்குத்தான் அழைத்துள்ளேன் விவாதத்திற்கு அழைக்கவில்லை என்றேன். 10 லட்ச ரூபாய் பரிசு அறிவித்து உள்ளீர்களே என்றார். அதைப் படித்தீர்களா என்றேன். ஆம் என்றார். அதில் முபாஹலாவுக்கு அழைத்துள்ளேனா விவாதத்திற்கு அழைத்துள்ளேனா என்று கேட்டேன். அந்தர் பல்டி அடிப்பதில் பி.ஜே.க்கு தான் ஒன்றும் சளைத்தவரில்லை என்பதை நிரூபிக்கும் வண்ணம் பல பல்டி அடித்தார் நொண்டியப்பாக்களுக்காக பேசிய தொண்டியப்பா. எல்லா மெயில்களையும் படித்ததாகவும் படிக்கவில்லை என்றும் மேலோட்டமாக படித்தேன் என்றும் மல்டி பல்டிகள் அடித்தாhர். அப்பப்பா இவரல்லவோ பி.ஜே.யின் ஒரிஜினல்; பினாமி.
பி.ஜே.யே இப்படி மோசமானவராக இருக்கிறாரே.
என்னுடனான டெலிபோன் உரையை சதி திட்டத்துடன் அவர்கள் பதிவு செய்வதையும் அருகில் பி.ஜே. இருப்பதையும் உணர்ந்த நாம் எனது பேச்சை பதிவு செய்கிறீர்கள் உங்களுடன் பி.ஜே.யும் இருக்கிறார் என்பதையும் சுட்டிக் காட்டினோம். நீங்கள் வேண்டுமானாலும் பதிவு செய்யுங்கள் என்றார். பி.ஜே.யின் சுய ரூபத்தை தெரிந்த பின், நான் மிக மிக உத்தமராக மகானாக நம்பிய பி.ஜே.யே இப்படி மோசமானவராக இருக்கிறாரே என வருந்தி இனி யார் போன்களையும் டேப் பண்ணுவது போன்ற வேலைகளை செய்யக் கூடாது என விட்டு விட்டேன் என்பதைக் கூறினேன். பிறகு 10 லட்ச ரூபாய் பரிசு என நாம் வெளியிட்ட பிரசுரத்தில் உள்ள கீழ் காணும் முக்கிய 2 பாராக்களை படித்துக் காட்டினேன்.

விவாத மன்னர் பி.ஜே. வார்த்தை விளையாட்டை பயன்படுத்தி அதற்கு என்று ஆட்களை செட் பண்ணி ரகசிய பேரம் பேசி 10 லட்சம் கேட்க தயங்க மாட்டார் என்பதால் வார்த்தைகளை முழுமையாக அமைத்து உள்ளோம். இங்கே நாம் விவாதத்திற்கு அழைக்கவில்லை. அவர் கூறிய குற்றச்சாட்டுகளை நிரூபிக்கவே அழைக்கிறோம். தனது சுய நலத்திற்காக ஒருவர் மீதோ ஒரு ஜமாஅத்தினர் - அமைப்பினர் மீதோ அநியாயமாக பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுவதும். அது சம்பந்தமாக ஒரே மேடையில் விவாதிக்கத் தயாரா? என சவடால் விட்டு ரசிகர்களை குஷpப்படுத்துவதும் அவரது வாடிக்கை. விவாதம் எதற்கு? ஒரு மஸாயில் பிரச்சனையில் இரண்டுவித கருத்து ஏற்பட்டால் விவாதிக்கலாம். ஒருவர் மீது குற்றச்சாட்டு கூறிவிட்டு ஒரே மேடையில் விவாதிக்கத் தயாரா? என்றால் என்ன அர்த்தம்? தனது வாதத் திறமையையும் மற்றவர்களின் மறதியையும் பயன்படுத்தி மக்களை ஏமாற்றி விடலாம் என்ற நம்பிக்கைதானே. பி.ஜே. விவாதத்தில் மன்னர் என்பதில் நமக்கு மாற்று கருத்து இல்லை. நாம் அவரை விவாதத்திற்கு அழைக்கவில்லை. குற்றச்சாட்டுகள் பற்றி விவாதம் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் நிரூபிக்கத்;தான் வேண்டும். அவர் கூறிய குற்றச்சாட்டுகளை நிரூபிக்கவும் அவர் மீது நாம் கூறி உள்ள குற்றச்சாட்டுகளை பொய்ப்படுத்தவுமே அழைக்கிறோம் என்பதை மிகத்தெளிவாகக் கூறிக்கொள்கிறோம். இதை நாம் படித்துக் காட்டும்போது நமது வார்த்தைகள் டேப்பில் தெளிவாக பதிந்து விடக் கூடாது என்பதற்காக இடை மறித்து தொண்டியப்பா ஏதேதோ உளறிக் கொண்டே இருந்தார்.
பூகம்பம் தாக்கியும் புத்தி வரவில்லையே.
பெருந்தொகை வாங்கியதாக நோட்டீஸ் போட்டாரே பி.ஜே. அந்த தொகை தந்த ஆள் யார் எவ்வளவு என அறிவித்து விட்டு முபாஹலா தேதியை அறிவிக்கச் சொல்லுங்கள் என்றேன். நான் அந்த நோட்டீஸை பார்க்கவில்லை. பி.ஜே.தான் அந்த நோட்டீஸ் போட்டார் என்பதற்கு என்ன ஆதாரம்? அதில் அவரது கையெழுத்து இருக்கிறதா? என்றார் நொண்டியப்பாக்களுக்காக பேசிய தொண்டியப்பா. பூகம்பம் தாக்கியும் உங்களுக்கு புத்தி வரவில்லையே, அல்லாஹ்வுடைய பயம் இன்றி பேசுகிறீர்களே. உங்கள் அருகில் இருக்கிறாரே அவரிடம் கேளுங்கள் அவர் நோட்டீஸ் போட்டாரா இல்லையா என்றேன்.
ஒப்பந்தத்தில் கையெழுத்திட நான் தயார்.
விவாதம் சம்பந்தமாக ஒப்பந்தம் செய்ய காத்து இருக்கிறோம் வாருங்கள் என்றார். முபாஹலா சம்பந்தமாக ஒப்பந்தம் செய்யத் தயார். ஆனால் நீங்கள் தங்கி உள்ள இடத்திற்கு இப்பொழுது வர முடியாது. நீங்கள் வந்தவுடன் அழைத்திருந்தால் வந்திருப்பேன். உங்கள் கூட்டங்களுக்கு இந்த நாட்டு அரசு அணுமதிக்கவில்லை என்ற செய்தி பரவும் முன் அழைத்திருந்தால் வந்திருப்பேன். நீங்கள் இந்த நாட்டு உளவுத் துறையாலும் காவல் துறையாலும் கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். எனவே உங்கள் இடத்திற்கு நான் வந்து சிக்கலில் மாட்ட மாட்டேன். என்னுடைய இடத்திற்கு வாருங்கள் முபாஹலா ஒப்பந்தம் செய்வோம் என்றேன். உண்மையிலேயே ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்ற நோக்கில் போன் போட்டிருந்தால் உடன் புறப்பட்டு வாருங்கள். முபாஹலா செய்வது சம்பந்தமாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட நான் தயார் என்றேன்.
மார்ச் ஏப்ரலில் ஏதாவது ஒரு தேதியை அறிவிக்கட்டும்.
திரும்பவும் முதலில் விவாதம் பிறகு முபாஹலா என்றார். கருத்து வேறுபாடு உடைய விஷயங்களுக்குத்தான் விவாதம். குற்றச்சாட்டுகளுக்கு முபாஹலாதான் தீர்வு என்றுதானே ஏகத்துவத்தில் எழுதி உள்ளீர்கள். ஏகத்துவத்தில் எழுதியுள்ளதின் அடிப்படையில் முபாஹலாவுக்கு வாருங்கள் என்றேன். முபாஹலா என்றால் உங்களிருவருக்கும் அல்லாஹ் ஆகிய மூவருக்கும்தான் தெரியும். விவாதம் என்றால் எல்லாருக்கும் தெரியும் என்று புதுக் காரணம் கூறினார். கொள்கை சம்பந்தமான விஷயத்திற்குத்தான் மக்கள் புரியும்படியான விவாதம் என்பது பொருந்தும். குற்றச்சாட்டுகளுக்குப் பொருந்தாது. நான் பெருந்தொகை பெற்றதாக நோட்டீஸ் போட்ட பி.ஜே. உண்மையாளர் என்றால் பெருந்தொகை கொடுத்ததாக கூறியவர் பெயரையும் தொகையையும் துபையில் அறிவித்துவிட்டு முபாஹலா தேதியையும் அறிவிக்கட்டும்.
தான்தோன்றித்தனமான தொண்டியப்பா.
தாயகம் சென்ற எனது குடும்பம் அடுத்த மாதம் இறுதிக்குள் வரவேண்டும். முபாஹலாவுக்காகவே நிறுத்தி வைத்துள்ளேன். 6 மாதம் முடிந்து விட்டாலும் பரவாயில்லை ஒரு நபருக்கு 100 திர்ஹங்கள் பணம் கட்டிக் கொள்ளலாம் என முபாஹலாவை எதிர் பார்த்து உள்ளேன். எனவே மார்ச் ஏப்ரலில் ஏதாவது ஒரு தேதியை அறிவிக்கச் சொல்லுங்கள் என்றேன். அவர் பேசும்பொழுதெல்லாம் குறுக்கிடாமல் அமைதியாகக் கேட்டேன். நொண்டியப்பாக்கள் புடைசூழப் பேசிய தொண்டியப்பாவோ நான் பேசும்போது குறுக்கிட்டுக் கொண்டே இருந்தார். நான் பாதிக்கப்பட்டவன் பாதிக்கப்பட்ட மன நிலையில் பேசுகிறேன் என்பதை கூட்டிக் காட்டினேன். தான்தோன்றித்தனமான தொண்டியப்பாவோ தனக்கு கிடைத்த மா.து.செ. பதவிக்கு நன்றி செலுத்தும் வகையிலேயே பேசிக் கொண்டிருந்தார். எனவே சிறிது நேரம் மவுனமாக இருந்தேன்.
மானமுள்ள ஜமாஅத்துகள் என்ன செய்யும்?
பிறகு கேட்டேன், ஒரு பெண்ணின் கற்புக்கு களங்கம் கற்பித்து ஒருவனுடன் சென்றதைப் பார்த்ததாக நம்பகமானவர் சொன்னார் என்று ஒருவன் குற்றச்சாட்டுச் சொன்னால், எப்பொழுது யாருடன் என்ற விபரத்தைக் கூறாமல் குற்றச்சாட்டைக் கூறுபவன் அது சம்பந்தமாக விவாதத்திற்கு தயாரா? என அழைத்தால் மானமுள்ள ஜமாஅத்துகள் என்ன செய்யும்? அவனை செருப்பால் அடிக்கும். உங்கள் டி.என்.டி.ஜே. என்ன செய்யும்? விவாதத்திற்கு வா என்றுதான் அழைக்குமா என்று கேட்டேன் பதில் இல்லை.
நொண்டியப்பாக்கள் சார்பில் பேசிய தொண்டியப்பா.
மிஸ்டர் அபுபக்கர் உங்கள் மனைவியை அல்லது உங்கள் குடும்பத்தில் உள்ள ஒரு பெண்ணை களங்கப்படுத்தி இதே பி.ஜே. என்பவர் இதே மாதிரி ஒருத்தனுடன் சென்றதாக நம்பகமான ஒருவர் கூறியபோது அதிர்ச்சியுற்றேன் என்ற குற்றச்சாட்டைக் கூறினால். எவன் சொன்னான் அதை ஆதாரத்துடன் நிரூபி அல்லது முபாஹலா பண்ண வா என்பீர்களா? எங்க வீட்டு பெண்களின் கற்பு சம்பந்தமாக மேடை போட்டு விவாதிக்க வாருங்கள் என்று அழைப்பீர்களா? என்று கேட்டதும் நொண்டியப்பாக்கள் சார்பில் பேசிய தொண்டியப்பா போனை கட் பண்ணி விட்டார். பிறகு கிளிப்பில் இருந்த நம்பரைப் பார்த்து பல முறை போன் போட்டும் அந்த நொண்டிக் குதிரைகள் போனை எடுக்கவே இல்லை. இதுதான் அந்த டெலிபோன் உரையாடலின் சுருக்கம். இதில் எழுத்து நடையில் மனைவி என எழுதி இருந்தாலும் போனில் பேச்சு நடையில் மிஸ்டர் அபுபக்கர் உங்கள் பொண்டாட்டியை என்றுதான் குறிப்பிட்டேன்.
அணு அளவாவது மானம் ரோஷம் சூடு சுரணை இருந்தால்.
நொண்டிக் குதிரைக்கு சறுக்கியதுதான் சாக்காம் என்பார்கள். அதுபோல் இந்த சவடால் தொ(நொ)ண்டி குதிரைகள், நீங்கள் இந்த நாட்டு உளவுத் துறையாலும் காவல் துறையாலும் கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். எனவே உங்கள் இடத்திற்கு நான் வந்து சிக்கலில் மாட்ட மாட்டேன் என்பதை மட்டும் எடுத்துப் போட்டு நாம் நழுவி விட்டதாக ஏமாற்று செய்தி வெளியிட்டுள்ளன. என்னுடைய இடத்திற்கு வாருங்கள் முபாஹலா ஒப்பந்தம் செய்வோம் என்று சொன்னதை தங்களுக்கு வசதியாக மறைத்து விட்டன. இவர்களுக்கு நம்மை முபாஹலா மேடையில் சந்திக்கும் தெம்பு இருந்தால் திராணி இருந்தால் அணு அளவாவது மானம் ரோஷம் சூடு சுரணை இருந்தால் இவர்களது மனைவி மக்கள் இவர்களை உண்மையாளர்கள் என்று நம்புவதாக இருந்தால் இந்த டெலிபோன் விளையாட்டு போட்டிருக்க மாட்டார்கள். நாம் கூறியுள்ள நிபந்தனைப்படி 3 மாத இடைவெளியுடன் முபாஹலா தேதியை அறிவித்து இருப்பார்கள். முதலில் பேச்சு வார்த்தை என்றால் டெலிபோன் கூத்தடிக்காமல் 2 தரப்புக்கும் பொதுவானவர்களை அணுகி அவர்கள் மத்தியில் பேச முயற்சி செய்திருப்பார்கள்.
ஹராமா? ஹலாலா?
1994 ஆம் ஆண்டு ஜனவரியில் இலங்கையில் உள்ள மருதமுனையில் விவாதம் செய்வதற்காக சென்றார் பி.ஜே. அல்லாஹ் அல்லாதவர்களுக்காக கந்தூரி வைபவங்களுக்கு அறுக்கப்படும் மாமிசங்களை உண்பது ஹராமா? ஹலாலா? நடைமுறையில் உள்ள கத்தமுல் குர்ஆனும் கபுராளிகளும். மவ்லிதும் இஸ்லாத்தின் தீர்ப்பும். கந்தூரிகளும் இஸ்லாமிய ஷரீஅத்தும். ஆகிய 4 தலைப்புகளில் பேசப் போவதாக ஒப்பந்தம் செய்திருந்தார்கள். முதல் தலைப்பின் ஆரம்பத்திலிருந்து அவ்லியாக்கள் பெயரால் நேர்ச்சை செய்துவிட்டு அறுக்கும்போது அல்லாஹ்வின் பெயரால் அறுத்தால் அதை உண்பது ஹராமா ஹலாலா என்று ஒரு வார்த்தையில் பதில் சொல்லுங்கள் என எதிர் தரப்பு கேட்க. அதற்கு ஹராம் அல்லது ஹலால் என நேரடியாக பதில் சொல்லாமலே ஜனவரி 31 பிப்ரவரி 1 ஆகிய 2 நாட்களையும் ஓட்டினார் பி.ஜே. இதனால் ஒரு தலைப்பே 2 நாளாக பேசப்பட்டு மற்ற தலைப்புகள் பேசாமல் விவாத அரங்கம் கலைந்தது. இது மாதிரி நேரத்தையும் காலத்தையும் ஓட்டி விட்டு முபாஹலாவிலிருந்து தப்பிக்கத்தான் இப்பொழுது விவாதம் என திசை திருப்பி உள்ளார் சவடால் மன்னர் பி.ஜே.
அவர்களிடம் உண்மை இல்லை.
விவாதம் என்றால் எல்லாருக்கும் தெரியும் என்ற காரணம் கூறி திசை திருப்பி உள்ள பி.ஜே.யின் இந்த வார்த்தை ஜாலத்தில் ரசிகர்கள் மதிமயங்கலாம். அறிவுடைய மக்கள் இவர்கள் பொய்யர்கள் என புரிந்து விட்டார்கள். கொள்கை சம்பந்தமான விஷயத்தில் கூட ஜலீல் மைதீன் என்பவரிடம் இவர் இப்பொழுது கூறும் மக்கள் புரியும்படியான விவாதம் செய்யாமல் முபாஹலா மட்டும்தான் செய்தார் என்பதை வரலாறு உள்ளவர்கள் அறிவார்கள். அந்த முபாஹலா மூலம்தான் மக்களுக்கு உண்மை புரிந்தது என எழுதியதும் இந்த பி.ஜே.யானிகள்தான். அந்த பி.ஜே.யானிகள்தான் நம்முடன் முபாஹலா நடந்தால் மக்களுக்கு உண்மை புரியாது என பிதற்றுகிறார்கள். இதிலிருந்தே அவர்களிடம் உண்மை இல்லை என்பதையும் முபாஹலா என்றால் மக்களுக்கு புரியாது என்பது பித்தலாட்டமே என்பதையும் புரிந்து கொள்ளலாம்.
விவாதம் இல்லாத முபாஹலா அழைப்பு.
எனக்கும் பி.ஜே. வகையறாக்களுக்கும் ஏற்பட்டுள்ள பிரச்சனையில் பி.ஜே.ன் சவாலை ஏற்றுக் கொண்டு நான் 2002லேயே முபாஹலாவுக்கு அழைத்தேன். அப்போது பதில் தராமல் பின்னங்கால் பிடரியில் அடிபட ஓடி ஒளிpந்த பி.ஜே.யானிகள் மார்க்க ரீதியான விஷயங்களுக்குத்தான் முபாஹலா என கூறினார்கள். த.மு.மு.க.விலிருந்து வெளியேறியதும் முபாஹலா கொள்கையில் உடன்பாடு இல்லாத த.மு.மு.க.வை கோவை அப்துல் ரஹீம் மூலம் முபாஹலாவுக்கு அழைத்தார்கள். அது விவாதம் இல்லாத முபாஹலா அழைப்பாகத்தான் இருந்தது.
பிராடுகள், பித்தலாட்டக்காரர்கள், போர்ஜரிகள், பொய்யர்கள்.
முபாஹலா கொள்கையில் உடன்பாடு இல்லாதவர்களிடம் போய் விவாதம் வேண்டாம் முபாஹலாவுக்கு வா என அழைக்கிறார்கள். முபாஹலாவுக்குத் தயார் என்பவர்களைக் கண்டால் காட்டுக்கழுதைகள்போல் வெருண்டோடி விவாதத்தின் போர்வையில் ஒளிந்து கொள்கிறார்கள். இவர்களது இந்த நிலையும் டெலிபோன் விளையாட்டும் இவர்கள் பிராடுகள், பித்தலாட்டக்காரர்கள், போர்ஜரிகள், பெய்யர்கள் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. உங்களைப் பற்றி பி.ஜே. குற்றச்சாட்டு கூறி இருந்தால் அது பற்றித்தானே முபாஹலாவுக்கு அழைக்க வேண்டும். நீங்கள் ஏன் பழைய விஷயங்களையெல்லாம் தோண்டுகிறீர்கள் என்ற சில பி.ஜே.யானிகள் கேட்கிறார்கள்.
பாவத்திற்கு பரிகாரமாக.
பழைய விஷயங்கள் என்றால் இவர் பலசரக்கு கடை வைத்திருந்த ஊரிலிருந்து விரட்டி அடிக்கப்பட்டதாக கூறப்படும் அந்த சமாச்சாரங்களையா தோண்டி எடுக்கிறோம். இவர் பொது வாழ்;க்கைக்கு வந்த பின் பிறர் மீது பகிரங்கமாக கூறியுள்ள குற்றச்சாட்டுகள் பற்றியே முபாஹலா பண்ண அழைக்கிறேன். இந்த உலக மகாப் பொய்யரை ஒரு காலத்தில் உத்தமராக நம்பி இருந்தேன். அப்பொழுது இவர் அபுஅப்துல்லா, கமாலுத்தீன் போன்றவர்கள் பற்றி கூறியவைகளை நம்பி நானும் பரப்பினேன். இவரது சமுதாய துரோகச் செயல் பற்றி அறிந்ததும் அதற்கு எதிராக நான் அந்தரங்கத்தில் போராட ஆரம்பித்தேன். உடனே என்னைப் பற்றி அபாண்டங்களை வெளியிட்டார். அதற்குப் பிறகுதான் அவரது முந்தைய கூற்றுகளை ஆய்ந்து அவை யாவும் பொய் என உணர்ந்தேன். எனவே இவரது பொய்களை உண்மை என நம்பி பரப்பிய பாவத்திற்கு பரிகாரமாக அந்த விஷயங்களுக்காகவும் அவர்களுக்காகவும் முபாஹலா பண்ண நான் தயாராக உள்ளேன்.
முபாஹலா மூலம் மக்கள் உண்மைகளை எளிதில் புரிய முடியும்.
கடந்த காலங்களில் நடந்த விவாதங்கள் தெளிவுக்குப் பதிலாக குழப்பத்தைத்தான் ஏற்படுத்தி உள்ளது. இயக்கம் சம்பந்தமாக நடந்த விவாதத்தால்தான் தமிழகத்தில் அஹ்லே குர்ஆன்கள் உருவானதாக பி.ஜே.யே கூறியுள்ளார். முபாஹலாவில் இந்த குழப்பங்கள் வராது. பி.ஜே. அந்நஜாத்தில் இருந்து விலக காரணமாக அபுஅப்துல்லாஹ் மோசடி செய்து வாங்கியதாகக் கூறிய நிலம் எங்கு உள்ளது என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். அதை பொய் என அபு அப்துல்லாஹ் கூறினால் பி.ஜே. முபாஹலா பண்ண வேண்டும் பின் வாங்கினால் பி.ஜே. பொய்யர் என்பதை மக்கள் எளிதில் விளங்கிக் கொள்வார்கள்.
பி.ஜே.யும் அவரது சாட்சிகளும் பொய்யர்கள் என்பதை மக்கள் விளங்கிக் கொள்வார்கள்.
கணக்கு கேட்டதற்கு கணக்குகளெல்லாம் என் மனைவி இடம் இருக்கு என்று கமாலுத்தீன் மதனி சொன்னார் என்று கூறியதை பி.ஜே, தான் சொன்ன சாட்சிகளுடனும் ஆடியோ ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். இல்லாவிட்டால் முபாஹலா பண்ண வேண்டும். முபாஹலா பண்ணாமல் பி.ஜே. பின் வாங்கினால் இதில் பி.ஜே.யும் அவரது சாட்சிகளும் பொய்யர்கள் என்பதை மக்கள் விளங்கிக் கொள்வார்கள்.
பி.ஜே. ஒரு தீவிரவாதி;; என்பதை மக்கள் விளங்கிக் கொள்வார்கள்.
சில தீவிரவாத காரியஞ் செய்வதற்காக வேண்டித்தான் பி.ஜே.ஜாக் ஷ_ராவிலிருந்து ரிஸைன் பண்ணினார் என்பதற்கும் தமிழகத்தில் நடந்த குண்டுவெடிப்புகளுக்கெல்லாம் மூல காரணமானவர் பி.ஜே.தான் என்பதற்கும் ஆதாரமான பி.ஜே.யின் ரகசிய வாக்கு மூல கேஸட்டை போட்டுக் காட்டுவேன். அதை பி.ஜே. பொய் என்று வாதித்தால் முபாஹலா பண்ணட்டும். பி.ஜே. முபாஹலா பண்ணாமல் பின் வாங்கினால் தமிழகத்தில் நடந்த குண்டுவெடிப்புகளுக்கெல்லாம் மூல காரணமாக இருந்தவர் பி.ஜே.தான் என்பதை பி.ஜே. ஒரு தீவிரவாதி;; என்பதை மக்கள் எளிதில் விளங்கிக் கொள்வார்கள்.
லுஹா, பி.ஜே. பொய்யர்கள் என்பதை மக்கள் எளிதில் விளங்கிக் கொள்வார்கள்.
மேடையில் பேசிவிட்டு காசு வாங்கியதே இல்லை என சத்தியம் செய்து வரும் பி.ஜே. 500 முதல் 10,000 பத்தாயிரம் வரை மேடையில் பேசிவிட்டு பணம் வாங்கி உள்ளார் என்பதற்கு லுஹா அனுப்பிய ஆதாரத்தைக் காட்டுவேன். அந்த கணக்கு பொய் என்றால் லுஹா, பி.ஜே. முபாஹலா பண்ண வேண்டும் மறுத்தால் லுஹா பி.ஜே. பொய்யர்கள் என்பதை மக்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள். ஷம்சுல்லுஹா, தென்காசி சுலைமான் ஆகியவர்கள் பொய் சத்தியம் செய்து பொய் சாட்சி கூறி உள்ள கேஸட்டை போட்டு காட்டுவேன். மறுத்தால் அவர்கள் முபாஹலா பண்ண வேண்டும். பின் வாங்கினால் ஷம்சுல்லுஹா, தென்காசி சுலைமான் ஆகியவர்கள் பொய் சத்தியம் செய்து பொய் சாட்சி கூறியுள்ள பொய்யர்;கள் என்பதை மக்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள்.
பி.ஜே. கள்ளக்கடித பேர்வழி என்பதை மக்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள்.
லுஹாவைக் காப்பாற்ற 2002ல் கடிதம் எழுதி ஓராண்டுக்கு முன்பு 2001லேயே எழுதியதுபோல் ஓராண்டுக்கு முந்தைய தேதி போட்டு பி.ஜே. கைப்பட எழுதி கொடுத்த கள்ளக் கடிதக் காப்பியை காட்டுவேன். அதற்கு முபாஹலா செய்ய மறுத்தால் பி.ஜே. கள்ளக்கடித பேர்வழி என்பதை மக்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள்.
முபாஹலா மூலம் மக்கள் உண்மைகளை புரிய முடியாது என்பவர்கள் பித்தலாட்டக்காரர்களே.
பாக்கர் சம்பந்தமான செய்திகளை எனக்குச் சொன்னவர்; லுஹாதான் என்று முபாஹலா பண்ணுவேன். முஸ்லிம் டிரஸ்டு த.மு.மு.க.வுக்காகத்தான் உருவாக்கப்பட்டது என்றும் 48 மணி நேரம் டயம் எடுத்து எல்லாரும் கையெழுத்திட்டு தந்து விட்டார்கள் என்று ஆலந்தூர் கூட்டத்திலும் திருச்சி கூட்டத்திலும் வெட்கமின்றி பொய் சொன்ன பொய்யர் பி.ஜே. என்று முபாஹலா பண்ணுவேன். அதுபோல் மொட்டைக் கடிதங்கள் உட்பட அனைத்து விஷயங்களிலும் யார் முபாஹலாவிலிருந்து பின் வாங்குகிறார்களோ அவர்கள் பொய்யர்கள் என்பதை மக்கள் எளிதில் விளங்கிக் கொள்வார்கள். எனவே முபாஹலா மூலம் மக்கள் உண்மைகளை புரிய முடியாது என்பவர்கள் பித்தலாட்டக்காரர்களே என்பதை மக்கள் புரிந்து விட்டார்கள். பி.ஜே.யானிகள் பொய்யர்கள் என்பதால்தான் முபாஹலா கூடாது என்ற கொள்கை உடையவர்களிடம் விவாதம் வேண்டாம் முபாஹலாவுக்கு வாருங்கள் என்றும் முபாஹலாவுக்கு தயார் என்பவர்களிடம் விவாதம்தான் முதலில் என்று விதாண்டாவாதம் பண்ணித் திரிகிறார்கள். எனவே இந்த போலிகளை போர்ஜரிகளை அடையாளம் காட்டும் நமது பணிகள் தொடரும். பிராடு பி.ஜே.யின் பித்தலாட்டங்கள் என்ற தலைப்பிலான நமது அடுத்த இதழில் சந்திப்போம்.

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.