பி.ஜே.யானிகளின் பித்தலாட்டங்கள் பாரீர்.

உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையடித்துக் கொண்டு நடக்காதே! கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் விரும்ப மாட்டான். (அல் குர்ஆன் 31:18)

பி.ஜே.யும் பி.ஜே.யானிகளும் பொய்யர்கள் என்பதை நிரூபித்திடும் சிறப்பு இதழாக இந்த வார உணர்வு வெளி வந்தது. அதில் பி.ஜே. முதல் பொய்யராக அடையாளம் காட்டப்பட்டிருந்தார். அந்த பொய்யரின் விவாத பித்தலாட்டங்களை முந்தைய இதழில் பார்த்தோம். பி.ஜே.யின் வளைகுடாப் பயணத்தில் முதல் நிகழ்ச்சியே தடையானது. 

அது பற்றி பி.ஜே.யானிகளும் பி.ஜே.யானிகளின் தலைமைப் பொறுப்பாளர்களும் கூறிய பொய்யான தகவல்களில் ஒன்று 40 கழியவில்லை என்பது. அந்த பொய்யான 40 ஒரு புறமிருக்க இன்னொரு புதுப் பொய்யை புனைந்துள்ளார் அபுல் வாந்தி பி.ஜே. அவரது பொய்யை நிலை நாட்ட மற்ற தகவல்களை வாந்தி எடுத்தல் என்ற வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். அவரது விமர்சனப்படி 40 போன்ற காரணங்களைக் கூறிய பி.ஜே.யானிகள்தான் வாந்தி எடுத்தவர்களாக ஆகிறார்கள். பாவம் பி.ஜே.யானிகள்.

பொய்யர்களுக்குள்ளான அந்த போட்டி.

10-12-2004 அன்று துபை கிரசண்ட் ஸ்கூலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பி.ஜே. கூட்டம் தடையானது. ஏன் தடையானது? எப்படி தடையானது? யாரால் தடையானது என்பது கூட்டத்தை ஏற்பாடு செய்த பி.ஜே.யானிகளுக்கு நன்கு தெரியும். பி.ஜே.யும் பி.ஜே.யானிகளும் உண்மையாளர்களாக இருந்தால், அந்த உண்மையை அப்பொழுதே வெளியிட்டிருப்பார்கள். அவர்கள் பொய்யையே மூலதனமாகக் கொண்டவர்கள், பொய் சொல்வதில் வல்லவர்கள் என்பதால் அவர்கள் அனைவரும் பொய்யர்கள் என்பதை நிரூபிக்கும் போட்டியில் ஈடுபட்டார்கள். பொய்யர்களுக்குள்ளான அந்த போட்டி இன்னும் முடிவடையவில்லை என்பதை உணர்வு சிறப்பு இதழ் மூலம் அறிய முடிகிறது.

எஞ்சியுள்ளவர்கள்.

டிசம்பர் 6 அன்று சென்னையில் 650 டி.என்.டி.ஜே.க்கள் கலந்து கொண்டார்கள் என்ற செய்தியை வெளியிட்ட ஷதி இந்து| என்ற ஆங்கில நாளேட்டில் தவறுதலாக ஒரு 0 கூடுதலாக இடம் பெற்று 6500 என ஆகிவிட்டது. இதை 10-16,2004 உணர்வு 32 ஆம் பக்கம் எடுத்துப் போட்டு எப்படிப்பட்ட பொய்யையும் துணிவுடன் சொல்வார்கள் என்று நிரூபித்திருந்தார்கள். 

அதே உணர்வில் 3 ஆம் பக்கம் பசியை மறந்த என்ற தலைப்பிலான பெட்டிச் செய்தியில் 600 பேருக்கு மட்டுமே சாப்பாடு வந்தது என எழுதிவிட்டு எஞ்சியுள்ளவர்களுக்கு என எழுதியுள்ளார்கள். எஞ்சியுள்ள என்ற வார்த்தை குறிப்பிட்டுவிட்ட எண்களுக்கு குறைவாக உள்ளதை குறிப்பிடத்தான் பெரும்பாலும் பயன்படுத்துவார்கள். ஆயிரக்கணக்கில் வந்தவர்களில் 600 பேருக்கு மட்டும்தான் உணவு வந்தது என்றால் ஆயிரக்கணக்கில் வந்திருந்தும் 600 பேருக்கு மட்டும்தான் உணவு வந்தது என்பதை குறிப்பிட்டு எழுதி இருப்பார்கள். எஞ்சியுள்ளவர்களுக்கு என எழுதி இருக்கமாட்டார்கள். இதுவே அவர்கள் கூற்றுப்படி 650க்குட்பட்டவர்களே கலந்து கொண்டார்கள் என்பதற்குரிய ஆதாரமாகும். அவர்களை அறியாமல் இந்த உண்மையை வெளியிட்டவர்கள் வேறு ஒரு இடத்தில் 3000 என்ற பொய்யையும் எழுதினார்கள்.

40 ஆம் நாள்
3000 என்ற அவர்களின் இந்தக் கூற்று பொய்யானாலும் பரவாயில்லை என்று 650க்கு 6500 என தவறாக இடம் பெற்றதையும் எடுத்துப் போட்டுக் கொண்டார்கள். இந்த பொய்களின் தொடராகத்தான் அவர்களது வளைகுடாப் பயண செய்திகளும் ஹோல்சேல் பொய்களாக இருக்கிறது. பி.ஜே.யின் துபை கூட்டம் தடையானது பற்றி பி.ஜே.யானிகளின் தலைமைப் பொறுப்பாளர்கள் கூறிய காரணங்களெல்லாம் வேடிக்கையானது. இறந்தவர்களுக்காக 40 ஆம் நாள் என்பதெல்லாம் இஸ்லாத்தில் இல்லை என்று பிரச்சாரம் செய்தவர்கள் இல்லாத அந்த 40 ஐ காரணமாகச் சொல்லி அவர்களது ஆதரவாளர்களை ஏமாற்றினார்கள். உண்மையாளர்களிடத்தில் அவர்கள் பொய்யர்கள் என்று நிரூபித்துக் கொண்டார்கள்.
அபுல் வாந்தி.
இந்த பொய்களைச் சொன்னவர்களையெல்லாம் வாந்தி எடுத்தவர்கள் என குறிப்பிட்டுள்ள அபுல் வாந்தி பி.ஜே. வேறு ஒரு பொய்யை வாந்தி எடுத்துள்ளார். அபுல் வாந்தி பி.ஜே.யின் வாந்தியில் உள்ள பித்தலாட்டங்களை பிறகு பார்ப்போம். பிராடு பி.ஜே.யின் பித்தலாட்டங்கள் என்ற தலைப்பில்தான் அவரது பித்தலாட்டங்களை முதலில் எழுத இருந்தோம். அவர் துபையில் இருந்தபோது நடந்தவைளையும் அதையொட்டி ஆங்காங்குள்ள பி.ஜே.யானிகளின் பொறுப்பாளர்கள் அடித்த கூத்துக்களையும் முதலில் தெரிந்து கொண்டால்தான், அபுல் வாந்தி பி.ஜே. வாந்தி எடுத்தார்கள் என்று எழுதியுள்ளது யாருக்கு மிக மிக பொருத்தம் என்பது தெளிவாகும் என்பதால் பி.ஜே.யானிகளின் பித்தலாட்டங்கள் பற்றி முதலில் பார்ப்போம்.
50 ஆம் நாள்.
பி.ஜே.யானிகளின் தலைமைப் பொறுப்பாளர்கள் இன்னும் என்னென்ன பொய்களைச் சொன்னார்கள் அதாவது வாந்தி எடுத்தார்கள் என்பதை அவர்கள் உண்மையாளர்கள் என்றால்... என்ற தலைப்பிலான வெளியீட்டில் குறிப்பிட்டிருந்தோம். கெட்டிக்காரனின் புழுகு 8 நாளில் என்பார்கள். இந்த கெட்டிக்காரர்களின் புளுகு 7 நாளில் வெளுத்தது. 17 ஆம் தேதி பசுமை நகர் அலைன் நிகழ்ச்சி, 18 ஆம் தேதி அபுதாபி நிகழ்ச்சி, 23 ஆம் தேதி புஜேரா நிகழ்ச்சி இப்படி பி.ஜே. வாந்தி எடுக்கும் பத்திரிக்கையில் பகிரங்கமாக அறிவித்திருந்த நிகழ்ச்சிகள் யாவும் தடையானது. (வாந்தி எடுத்தல் என்ற வார்த்தையை பி.ஜே.தான் அறிமுகப்படுத்தி இருந்தார். இது அவர்களுக்கே பொருந்தும் என்பது நிரூபணமாகிக் கொண்டிருக்கிறது. வாந்தி எடுத்தல் என்ற வார்த்தையை நாமாக எழுதவில்லை என்பதை வாந்தி என்ற வார்த்தை வரும்பொழுதெல்லாம் நினைவுபடுத்திக் கொள்ளவும்) 10 ஆம் தேதி தடைக்கு 40 ஐ காரணமாக காட்டியவர்கள் மற்ற நிகழ்ச்சிகளுக்கு 50 ஆம் நாள் முடியவில்லை என்று கூறி அவர்களது ஆதவாளர்களை ஏமாற்றி இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
200க்கு 77
குட்டி போட்ட பூனை மாதிரி 17-12-2004 அன்று அங்கும் இங்குமாக அலைந்தார்கள் என மக்களால் விமர்சிக்கப்பட்டவர்களின் 23 ஆம் தேதிய புஜேரா நேஷனல் தியேட்டர் கூட்டம் தடையானது. பிறகு விளையாட்டு திடலில் ஏற்பாடு செய்துள்ளார்கள். அதுவும் தடையாகவே ஒரு ரகசிய இடத்தில் கூடி உள்ளார்கள். 24 ஆம் தேதி ஷhர்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ரகசியமாக இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தார்கள். அதுவும் தடையானது. பிறகு துபை ஆஸ்பத்திரி அருகில் உள்ள பத்ரா ஹோட்டலில் என அறிவித்தார்கள் அதிலும் முடியாமல் இறுதியில் லேண்ட் மார்க் ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்தார்கள். 200 பேருக்குத்தான் இடம் கொள்ளும் எனவே வரும் கூட்டத்தை சமாளிக்க கட்டுப்பாடுகள் போட வேண்டும் என்றெல்லாம் பெருமையாக பீற்றிக் கொண்டார்கள். வந்தவர்களின் எண்ணிக்கையோ 77 பேர்தான். 10 ஆம் தேதிய உணவை சோனாப்பூர் லேபர் கேம்ப் உட்பட பல பகுதிகளுக்கு கொண்டு போய் இலவசமாக வினியோகித்தார்கள். அது மாதிரி லேண்ட் மார்க் உணவை நிர்வாகிகள் பகிர்ந்து கொண்டார்கள்.
சோத்து தட்டையை தூக்கு மைக்கை தூக்காதே.
லேண்ட் மார்க் ஹோட்டல் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சியில் அவர்கள் போட்ட திட்டத்தின்படி கீழை ஜமீல் அவர்கள் மைக்கை பிடித்திருக்கிறார். அங்கு இருந்த உளவுத்துறை அதிகாரிகள் மைக்கை பிடிக்காதே என்று கூறி இருக்கிறார்கள். கீழை ஜமீல் எவ்வளவோ கெஞ்சி இருக்கிறார். அங்கிருந்த பி.ஜே. ரசிகர் மன்றத்தின் மற்ற பொறுப்பாளர்களும் எவ்வளவோ கெஞ்சி கூத்தாடி இருக்கிறார்கள். அதிகாரிகள் நிகழ்ச்சி நடத்தக் கூடாது என தடுத்துவிட்டனர். தட்டையை பிடி மைக்கை பிடிக்காதே, சோத்து தட்டையை தூக்கு மைக்கை தூக்காதே என்று அதிகாரிகள் சொன்னதாக நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியவர்கள் நகைச்சுவையாக பேசிக் கொண்டார்கள். உளவுத்துறை அதிகாரிகள் வந்து தடுத்த தகவலை அறிந்த பி.ஜே. லேண்ட் மார்க் ஹோட்டல் பக்கமே வரவில்லை. வந்திருந்த 77 பேருக்கும் சாப்பாடு போட்டு அனுப்பினார்கள்.
அறிவு உள்ள ஜீவன்கள் அவர் பின்னால் இல்லை.
லேண்ட் மார்க் நிகழ்ச்சி தடையானதும் மாற்று மதத்தவர்களுக்கு இஸ்லாத்தை சொல்லும் நிகழ்ச்சியையும் போலீஸை வைத்து தடுத்து விட்டார்கள் என ஷம்சுல்லுஹா லைவ் செய்துள்ளார். தடுத்தது உளவுத்துறை இருந்தாலும் யார் மீதாவது பழிp போட வேண்டும் என்பதற்காக போலீஸை வைத்து தடுத்து விட்டார்கள் என லுஹா கூறி இருக்கிறார். பி.ஜே.யின் வாதப்படி லைவ் வாந்தி எடுத்துள்ளார். அபுல்வாந்தி பி.ஜே. வாந்தி எடுத்துள்ள சிறப்பு இதழில் வசதியாகவே இதை மறைத்து விட்டார். பத்தாயிரம் பேர் கூடுவார்கள் என்பதற்காக கிரசண்ட் நிகழ்ச்சி உளவுத்துறை மூலம் தடை ஏற்;பட்டது என வாந்தி எடுத்தவர் 200 பேர்களை எதிர் பார்த்து 77 பேர்களே கூடிய இந்த நிகழ்ச்சியை உளவுத் துறையினர் நேரில் வந்து தடை செய்தது ஏன்? இப்படி கேட்கக் கூடிய அறிவு உள்ள ஜீவன்கள் அவர் பின்னால் இல்லை என்ற தைரியத்திலும் அவரைப் போன்ற பொய்யர்கள்தான் அவர் பின்னால் உள்ளார்கள் என்ற தைரியத்திலும் அவ்வாறு வாந்தி எடுத்துள்ளார் அபுல் வாந்தி பி.ஜே. எம்.பி.எம். கேம்ப், பலதியா கேம்ப், ஸாலிஹ் கண்ஷக்ஸன் கேம்ப் இப்படி பல இடங்களை அறிவித்து சோனாப்பூரில் எங்குமே நடத்த முடியாமல் ஆகி விட்டார். ராசல்கைமாவிலும் அவர்கள் அறிவித்த இடத்தில் நடத்த முடிந்ததில்லை.
வளைகுடாப் பயணச் செய்தி இல்லையே ஏன்?
பகிரங்கமாக அறிவிக்கப்பட்ட கூட்டங்கள் யாவும் தடையாகிவிட்ட நிலையில் துபை கூட்டத்தைத் தவிர அறிவிக்கப்பட்ட மற்ற நிகழ்ச்சிகள் யாவும் தொடராக நடந்து வருகிறது என்று மொட்டைக் கடித மன்னர்கள் மெயில் அனுப்பிக் கொண்டிருந்தனர். தங்களது பொய்களை அரங்கேற்றுவதற்கென்றே குத்பா மேடைகளை கைப்பற்றியவர்களும் இந்தப் பொய்களை பரப்பும் பணியில் அதாவது வாந்தி எடுப்பதில் பங்களிப்பு செய்தனர். த.த.ஜ.வினர் வீட்டுப் பூனை மதில் மீது பாய்ந்தால் அதையும் ஒரு செய்தியாக வெளியிட்டு பெருமைபடக் கூடிய நிலைக்கு சென்றுவிட்டவர்கள் வளைகுடாப் பயணத்தில் இருந்த கிரிமினல் தலைவர் பற்றிய எந்த செய்தியையும் துபையில் இருந்தவரை வெளியிடவில்லை. சிறு கூட்டம் கூடி இருந்தாலும் குலுங்கியது பூமி நடு:ங்கியது அரங்கம் என்று எழுதக் கூடிய பத்திரிக்கை மய்யித்து வீட்டு பேப்பர் மாதிரி வந்தது. எனவே சகாக்களெல்லாம் வளைகுடாப் பயணச் செய்தி இல்லையே ஏன்? என கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள். அதற்கு பதில் அளித்து அடுத்து ஒரு புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டார்கள்.
எத்தனை முழம் பூவை சுற்றினாலும்.
பப்ளிக் கூட்டத்திற்கு அணுமதி கிடைக்கவில்லை அதனால் இன்டோர் மீட்டிங் மட்டும் நடந்து வருகிறது என்று கூறி ஏமாற்றி இருக்கிறார்கள். பி.ஜே.யின் கூற்றுப்படி வாந்தி எடுத்திருக்கிறார்கள். எல்லாரும் கலந்து கொள்ளலாம் என்றுள்ள பொதுவான கூட்டத்திற்குதான் பப்ளிக் கூட்டம் (அதாவது பொதுக் கூட்டம்) என்று பெயர். கூட்டங்கள் போடுவதற்கென்றே உள்ள திறந்தவெளி திடல் கூட்டத்தை மட்டும் பப்ளிக் கூட்டம் என்று சொல்லும் வழக்கம் நமது நாட்டில் உள்ளது. நமது நாடு மாதிரி பொதுக் கூட்ட திடல்களெல்லாம் இங்கு கிடையாது. எல்லாமே இண்டோரில்தான் நடக்கும். துபை கிரசண்ட் ஸ்கூல், அலைன் Nஷக்ஸாயித் லைப்ரரி, அபுதாபி ஜஸீரா கிளப், புஜேரா நேஷனல் தியேட்டர் என்று அவர்கள் செய்த விளம்பரங்களே அதற்குரிய ஆதாரங்களாகும். அவர்கள் வெளியிட்டுள்ள ஆதார விபரங்களை புரிந்து கேள்வி கேட்காவிட்டாலும் இண்டோர் மீட்டிங்காக இருந்தால் அதை செய்தியாக வெளியிடக் கூடாதா? என்று கேட்கிற அளவுக்கு கூட சிந்தனை உடையவர்கள் அவர்கள் பின்னால் இல்லை. அதனால்தானே எத்தனை முழம் பூவை சுற்றினாலும் காதை கொடுத்து சுற்ற விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் சுற்றும் பூவுக்கு காதை கொடுப்பவர்கள்.
அவர்கள் நடத்திய கூட்டங்கள் யாவும் இந்த நாட்டில் அணுமதிக்கப்படாத திருட்டுத்தனமான ரகசிய கூட்டங்கள். அதனால்தான் அதை அப்பொழுதே அவர்களால் பத்திரிக்கையில் வெளியிட முடிந்ததில்லை. ஒரு உண்மையை மறைக்க பல பொய்க் காரணங்களைக் கூறி ஏமாற்றி வந்தார்கள். தடைக்கான உண்மைக் காரணத்தை கூறாமல் இக்பால் மதனி தடுத்து விட்டார். கமாலுத்தீன் மதனி போன் போட்டு தடுத்து விட்டார். இலாஹி, ஈமான், ஜமாஅத்துல் உலமா என்று பரப்பி வந்தார்கள். அரசு அணுமதியுடன் நடக்கும் ஒரு நிகழ்ச்சியை ஒரு தனி நபரோ அல்லது அமைப்போ நினைத்தால் தடுத்து நிறுத்தி விட முடியுமா? அதுவும் சட்டம் கடுமையாக உள்ள நாட்டிலா? இவர்கள் சுற்றும் பூவுக்கு காதை கொடுப்பவர்கள் இருக்கும் வரை இவர்கள் சுற்றிக் கொண்டுதான் இருப்பார்கள். இன்னும் சிலர் ஸ்டேய் ஆர்டர் வாங்கி விட்டார்கள் என்றும் கள்ளக் கடித நாயகர் எழுதியுள்ளது போல் மொட்டைக் கடிதம் போட்டு விட்டார்கள் என்றும் பொய்களை கூறி உள்ளார்கள். அதாவது வாந்தி எடுத்துள்ளார்கள். மொட்டைக் கடிதம் அவர்களது குலத் தொழில் ஆயிற்றே. அவர்களைப் போல்தான் மற்றவர்களும் இருப்பார்கள் என்று எண்ணிக் கொண்டுள்ளார்கள்.
ரகசியமோ ரகசியம்.
எங்குமே கூட்டம் நடத்த முடியாதவர்கள் எப்படியாவது 31-12-2004ல் ஏதாவது ஒரு இடத்தில் யார் பெயரிலாவது அணுமதி பெற்று நிகழ்ச்சி நடத்த அதி தீவிர முயற்சிகளை மிக மிக ரகசியமாக செய்தனர். அஜ்மான் அவ்காபில் செல்வாக்குள்ள Nஷக் அப்துல் மஜீத் அலி என்பவரை அணுகினர். அவர் ஷhர்ஜா கிரிகெட் ஸ்டேடியத்தை அவர் பெயரிலேயே பதிவு செய்தார். Nஷக் அப்துல் மஜீத் அலி அவர்கள் மூலம் 31-12-2004க்கு ஷhர்ஜா கிரிகெட் ஸ்டேடியம் புக் செய்யப்பட்ட விபரம் ரசிகர் மன்ற தலைமைப் பொறுப்பாளர்கள் ஓரிருவரைத் தவிர வேறு யாருக்குமே தெரியப்படுத்தாமல் அவ்வளவு ரகசியமாக வைத்திருந்தார்கள். காரணம் அவர்களையே அவர்களால் நம்ப முடியவில்லை.
நான் தப்பி விட்டேன்.
Nஷக் அப்துல் மஜீத் அலி அவர்கள் துபை அவ்காபுடன் தொடர்புடைய ஒரு அதிகாரி இடம், பி.ஜே.க்கு துபை அவ்காப் ஏன் அணுமதி கொடுப்பதில்லை? பி.ஜே. எவ்வளவு பெரிய முஸ்தஹித் தெரியுமா என கேட்டு இருக்கிறார். அந்த அதிகாரி, பி.ஜே. யார்? எப்படிப்பட்டவர்? என்ற எல்லா விபரங்களையும் கூறி இருக்கிறார். உடனே நான் தப்பி விட்டேன். உங்களை சந்திக்காவிட்டால் நானும் சிக்கலில் மாட்டி இருப்பேன் என்று Nஷக் அப்துல் மஜீத் அலி அவர்கள் கூறி இருக்கிறார்கள். பிறகு ஷhர்ஜா கிரிகெட் ஸ்டேடியம் சென்று தான் பதிவு செய்திருந்த 31-12-2004 தேதிய நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டார்.
உண்மையான கொள்கைவாதிகளாக இருந்ததால்.
பி.ஜே. தரப்பு கூட்டம் என்பதால் தடை போடப்படுள்ளது ஒன்றும் துபையில் புதிது அல்ல. 1996 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நாள் திங்கள்கிழமை அன்று பர்துபை பிளாசா சினிமா தியேட்டரில் தமிழக முஸ்லிம் பேரவைப் பணி விரிவாக்க நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை 9 மணிக்கு நிகழ்ச்சி என அறிவித்து இருந்தோம். காலை 8 மணிக்குத்தான் நிகழ்ச்சி தடை செய்யப்பட்ட செய்தி கிடைத்தது. ஏன் தடை செய்யப்பட்டது? தமிழ்நாட்டில் பி.ஜே. என்ற தீவிரவாதி இருக்கிறார் அவரை தலைவராகக் கொண்டு துவங்கப்பட்ட முஸ்லிம் பேரவை என்ற அமைப்பின் கிளைதான் இது என்று குற்றச்சாட்டுகள் வந்துள்ளது என்றார்கள். அன்றைக்கு பொறுப்பில் இருந்தவர்கள் உண்மையான கொள்கைவாதிகளாக இருந்ததால் பி.ஜே. தீவிரவாதி என்பது அன்றைய பொறுப்பாளர்களுக்கு அன்று தெரியாததால் அவர்கள் களத்தில் நின்றார்கள். தடை செய்யப்பட்ட விபரத்தை மக்களிடம் பரப்பாமல் உடனடியாக மாற்று இட ஏற்பாடு செய்தார்கள். திட்டமிட்டபடி தடையை மீறி பகிரங்கமாக நிகழ்ச்சியை நடத்திக் காட்டினார்கள்.
கொள்கைக்காக வெளியேறவும் இல்லை. அவருடன் இருப்பவர்கள் கொள்கைவாதிகளும் இல்லை.
பி.ஜே. எந்த தீவிரவாத செயலிலும் ஈடுபட்டது கிடையாது. யாரையும் தூண்டி விட்டு மோசம் பண்ணியது கிடையாது என்று அவருடன் இன்று இருப்பவர்கள் அவரை நம்பி இருந்தால், உண்மையான கொள்கைவாதிகளாக இருந்தால் அதற்காக முபாஹலா பண்ணி நிரூபித்து இருப்பார்கள். லேண்ட் மார்க் ஹோட்டல் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சியை நேரில் வந்து தடுத்தவர்களிடம் கெஞ்சி இருக்க மாட்டார்கள். டின்னர் நிகழ்ச்சிகளில் பெரிய பார்ட்டியாக (ஹப்லாவாக) இருந்தால் உரை நிகழ்த்துவது நடைமுறைதானே இதற்கு ஏன் தடை? என கேட்டு அந்த நிகழ்ச்சியையாவது நடத்தி இருப்பார்கள். பி.ஜே. எங்கிருந்தும் கொள்கைக்காக வெளியேறவும் இல்லை. அவருடன் இருப்பவர்கள் கொள்கைவாதிகளும் இல்லை என்பதைத்தான் அவரது துபை பயணம் நிரூபித்துள்ளது.
மதுரையில் அடிபட்டு மானாமதுரையில் மீசை முறுக்கிய மாவீரன்.
துபையில் இருந்தவரை அவர்கள் திருட்டுத் தனமாக நடத்திய கூட்டங்கள் பற்றிய எந்தச் செய்திகளையும் பத்திரிக்கையில் வெளியிடவில்லை என்பது உலகறிந்த உண்மை. மதுரையில் அடிபட்டு மானாமதுரையில் மீசை முறுக்கிய மாவீரன் என்பார்களே அது போல தாயகம் சென்று சேர்ந்த பின் செய்திகளை வெளியிட்டு பெருமையடித்து மீசையை முறுக்குகிறார் அபுல்வாந்தி பி.ஜே. அவ்காப்கள் அணுமதி இன்றி அவர்கள் நடத்தியதாகக் காட்டும் கூட்ட செய்தி உடைய பத்திரிக்கையை யாராவது அவ்காபில் காட்டினால் அபுல் வாந்தி பி.ஜே. பாதிக்கப்பட மாட்டார். பாவம் அப்பாவிகள்தானே பாதிக்கப்படுவார்கள். எனவேதான் அபுல் வாந்தி பி.ஜே. துபையிலிருக்கும் வரை திருட்டுக் கூட்டம் பற்றி எந்த செய்தியும் வெளியிடவில்லை. இது மாதிரிதான் கோவையிலிருந்து மேலப்பாளையம் வரை பிரச்னைகளை பண்ணி விட்டு அப்பாவிகளை மாட்டி விட்டு தான் மட்டும் தப்பி விட்டார். இனியாவது அவருடன் இருப்பவர்கள் புரிய வேண்டும்.
அவர் தீவிரவாதிதான் என அடையாளம் காட்டி விட்டார்கள்.
அவரை அழைத்;து வந்தவர்களுக்கு அவர் தீவிரவாதி இல்லை என்ற நம்பிக்கை இருந்தால் அவர்களாவது முபாஹலா பண்ண முன் வந்திருப்பார்கள். அவர் தீவிரவாதி இல்லை என்பது உண்மையானால் குற்றச்சாட்டுகளுக்கு தீர்வாக அவர்கள் ஏகத்துவத்தில் பல முறை எழுதியுள்ள முபாஹலா மூலம் முறியடித்து காட்டி இருப்பார்கள். நொண்டிச் சாக்கு சொல்ல கூலிப்படையைச் சார்ந்த கேடுகெட்ட தொண்டியப்பாவை நாடி இருக்க மாட்டார்கள். யார் இந்த தொண்டியப்பா? மகா மட்டமான அற்பமான பதவிக்காக பொய் சாட்சி சொல்லி சி.டி.யில் நடித்தவர். அந்த தொண்டியப்பாவைக் கொண்டுதான் டெலிபோன் உரையாடலில் நடிக்க வைத்து ரிகார்டிங் பித்தலாட்டம் செய்துள்ளார்கள். அவரது துபை பயணம் மூலம் அவரும் தன்னை தீவிரவாதி என ஒப்புக் கொண்டு விட்டார். அவருடன் இருப்பவர்களும் அவர் தீவிரவாதிதான் என அடையாளம் காட்டி விட்டார்கள்.
தான் அகம்பாவத்தை மமதையை நிலை நாட்ட வந்தார்.
பி.ஜே. எதற்காக துபை சென்றார் கொள்கைப் பிரச்சாரம் செய்யத்தானே சென்றார். சமுதாயத்திற்காகத்தானே சென்றார். அவரது நிகழ்ச்சிகளை தடை செய்து விட்டார்களே என்று கூறி தமிழக மக்களிடம் அனுதாபம் தேட முயன்று வந்தார்கள் பி.ஜே.யானிகளின் தலைமைப் பொறுப்பாளர்கள். அவர் கொள்கைப் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்ற நோக்கில் வருவதாக இருந்தால் பிரச்சாரம் செய்ய யாருமே இல்லாத காலத்தில் வந்திருப்பார். 1986 ல் முஹம்மது இக்பால் மதனி, நெல்லை பேட்மாநகரம் மீரான், பொதக்குடி குத்புத்தீன், கள்ளக்குறிச்சி சுலைமான் ஹாஜியார் போன்றவர்களெல்லாம் துபைக்கு பிரச்சாரம் செய்ய வாருங்கள் என கெஞ்சி கூத்தாடி அழைத்தபோது வந்திருப்பார். சமுதாயத்திற்காக என்றால் அவர் நீங்கி விட்டதாக கூறிடும் இருண்ட காலமான தடா பொடா காலத்தில் 1992லிருந்து 2003க்குள் வந்திருப்பார். இப்பொழுது அவர் வந்தது கொள்கைக்காவோ சமுதாயத்திற்காகவோ அல்ல. தான் என்ற அகம்பாவத்தை கர்வத்தை மமதையை நிலை நாட்ட வந்தார்.
மமதைக்கு விழுந்த மரண அடிகள்.
பெருமை எனது மேலாடை. கர்வம் எனது கீழாடை இரண்டையும் யாருக்கும் விட்டுத் தரமாட்டேன் என்று அல்லாஹ் கூறியுள்ளதாக இறைத் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அருளியுள்ளார்கள். கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் விரும்ப மாட்டான் என்று திருக்குர்ஆனின் 31 வது அத்தியாயம் 18வது வசனத்தில் சொல்லிக் காட்டப்பட்டுள்ளது. எனவே அல்லாஹ்தான் நான் என்ற அகம்பாவத்தை மமதையை வரட்டு கவுரவத்தை நிலை நாட்ட வந்தவரின் நிகழ்ச்சிகளுக்கு தடைகளை போட்டுள்ளான். தடைகள் யாவும் மமதைக்கு விழுந்த மரண அடிகள்தானே தவிர வேறில்லை.
அவன் கொடுக்கும் மரண அடிகளை தொடர்ந்தால் இவர்கள் கதி என்ன ஆகும்.
எங்கோ இருந்தவரை அந்நஜாத் பத்திரிக்கை மூலம் வெளி உலகுக்கு கொண்டு வந்து உயர்வை நோக்கி செல்ல அஸ்திவாரம் இட்ட இடம் துபை. அந்த துபையில்தான் மமதைக்குரிய மரண அடிகளுக்கும் அஸ்திவாரம் இடப்பட்டுள்ளது. இத்துடன் திருந்தி மனம் வருந்துவது, பழகியவர்களிடமிருந்து தன் முகத்தை திருப்பிக் கொண்டும் பூமியில் பெருமையடித்துக் கொண்டும் நடப்பதை விட்டு விடுவது அவருக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் நல்லது. தனது சுயநலத்தை கொள்கைப் பிரச்சனையாக சித்தரித்து சமுதாயத்தைக் கூறு போட்டு சீரழிக்கும் மமதையான அவரது பணிகள் இனியும் தொடருமானால் பாதிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனைகளை ஏற்கும் அல்லாஹ், கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் விரும்பாத அல்லாஹ், அவன் கொடுக்கும் மரண அடிகளை தொடர்ந்தால் இவர்கள் கதி என்ன ஆகும்?

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.