பி.ஜே. தரப்பினரின் குற்றச்சாட்டுகளுக்கு பி.ஜே. தரப்பினரே தரும் பதில்கள்.

கண்ணியத்திற்குரிய சகோதரர் சாதிக் அவர்கட்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. நீங்கள் கேட்டுக் கொண்டுள்ளபடி பி.ஜே.யின் சி.டி.களைப் பார்த்து விட்டு தங்களுக்கு பதில் எழுதுவதற்கு முன் வெவ்வேறு விமர்சனங்கள் வந்து விடுகின்றன. எனவே உங்களுக்கு பதில் எழுத தாமதமாகிறது. 

எனது ஈ-மெயில்களை தொடர்ந்து பார்த்து வரும் நீங்களும் அறிவீர்கள். இப்பொழுதும் அண்ணன் இபுறாஹீம் அவர்கள் கேள்வி அனுப்பி உள்ளார்கள். அதில், பதில் எழுத முடியாத பசுலுல் இலாஹி அதில் இருந்து தப்பிக்க இஸ்லாமிய பிரச்சாரகர்களின் குறைகளை பகிரங்கப்படுத்தலாமா? என்று மெயில் அனுப்பி நழுவி உள்ளார் என்று குற்றம்சாட்டி உள்ளார். அவருக்கும் பதில் தருவோம். இன்ஷாஅல்லாஹ்.

புத்திசாலி பொறியாளர் கட்டிய கலைநயமிக்கக் கட்டிடம் என்ற தலைப்பிட்டு அதிராம் பட்டிணம் பாரூக் அவர்கள் கடிதம் அனுப்பி உள்ளார்கள். கட்டிடம் கலைநயமிக்கதா? இல்லையா? என்பது அல்ல பிரச்சனை. கட்டிடப் பொறியாளர்களில் ஒருவரான பி.ஜே. என்ற பொறியாளர் உண்மையாளரா? பொய்யரா? என்பதுதான் பிரச்சனை என்பதை விளங்காமல் எழுதி உள்ளார். 

தனது சுயநலனுக்காக அடிக்கடி கூடாரம் மாறும் அந்தப் பொறியாளர், சுய இலாபத்திற்காக புதிய புதிய பெயர்களில் அணி சேர்த்து கட்டிடங்கள் கட்ட திட்டமிடுவார். தனது சுயநல கூட்டணி கட்டிட விற்பனைக்காக தானும் சேர்ந்து கட்டிய முந்தைய கட்டிடம் இடிந்து விடும் என்று வியாபார நோக்குடன் பொய்களைப் பரப்பி பயமுறுத்துவார். 

எனவே (பி.ஜே. என்ற) அந்தப் பொறியாளர் நீண்ட கால பொய்யர். அந்த நீண்ட கால பொய்யரின் பின்னால் செல்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைத்தான் பி.ஜே. கூறிய உதாரணப்படி புத்தி இல்லாப் பொறியாளர் என்ற தலைப்பில் சுட்டிக் காட்டி இருந்தேன்.

இடியப் போகிறதா? இடிந்து விட்டதா?

அதில் எவ்வாறு எழுதி இருந்தேன்? ஒரு கட்டிடம் இடியப் போகிறது என்றாலே ஏற்படும் விளைவுதான் இது. அந்த இன்ஜினியர் கட்டிய கட்டிடமெல்லாம் இடியப் போகிறது, என்றால் அதன் விளைவு என்ன ஆகும்? அந்த இன்ஜினியர் ஊரில் தலைகாட்ட முடியுமா? அந்த இன்ஜினியர் வந்து அதுவும் நான் கட்டியதுதான் இடியப் போகிறது ... இவ்வாறுதான் எழுதி உள்ளேன். 

இடிந்து விட்டது, இடிந்து கொண்டிருக்கிறது, இடிந்திருந்தால் என்று எழுதவில்லை. இடியப் போகிறது என்று கூறியதைத்தான் எழுதி, இடியப் போகிறது என்று கூறிய பி.ஜே. என்ற பொறியாளர் பொய்யர் என்று உணர்த்தி இருந்தேன். மதிமயக்கமின்றி படித்திருந்தால்  அதிரை பாரூக் புரிந்திருப்பார்.

எல்லாக் கட்டிடங்களும் இன்றும் இருக்கிறன.

(பி.ஜே. என்ற) அந்தப் பொறியாளர் கூறிய உதாரணப்படி அவரும் சேர்ந்து உருவாக்கிய அந்நஜாத், அல்ஜன்னத், ஜாக் உட்பட எல்லாக் கட்டிடங்களும் இன்றும் இருக்கிறன. இப்பொழுது த.மு.மு.கவும் நன்றாகவே இருக்கிறது. 1988ல் இவர் ஆபத்து என்று கூறி விட்டு ஓடிய ஐ.ஏ.ஸி. என்ற கட்டிடமும் இல்லாமல் போய் விடவில்லை.

பி.ஜேயா முதலீடு செய்தார்?

தன் மகனை பப்ளிஷராகக் கொண்டு ஏகத்துவம்| என்ற பெயரில் மாத இதழ் நடத்துகிறாரே அதற்கு பி.ஜேயா முதலீடு செய்தார்? சங்கரன் பந்தல் மதரஸாவிலிருந்து பி.ஜே. வெளியேறினால் ஏற்படும் வருவாய் இழப்புக்கு உத்தரவாதம் அளித்து ஈடு செய்ததும் 1987ல் அந்நஜாத்திலிருந்து வெளியேறியபோது புரட்சி மின்னல் இதழிலும் 1998ல் அல்ஜன்னத்|திலிருந்து வெளியேறியபோது அல்முபீன் இதழிலும் அடைக்கலம் கொடுத்ததுமான ஐ.ஏ.ஸி. என்ற ஜமாஅத்துதான் முதலீடு செய்துள்ளது.

அவர்  இன்னும் தெளிவு அடையவில்லை.

எனவே நானும் சேர்ந்து உருவாக்கிய கட்டிடம்தான் இடியப் போகிறது என்று ஒவ்வொரு முறையும் பி.ஜே. கூறி வந்தது பொய் என்பதை உறுதிபடுத்தி எல்லா கட்டிடங்களும் இப்பொழுதும் இருக்கிறன. எந்தக் கட்டடிடமும் இடிந்து விடவில்லை, அழிந்துவிடவில்லை. த.மு.மு.க.வும் இருக்கிறது. எனவே சுயநலத்திற்காக பொய் கூறும் பொறியாளர் பி.ஜே. என்பதை அதிரை பாரூக் புரியாததற்கு, பி.ஜே. நாடக கம்பெனி ஏற்படுத்திய மதிமயக்கத்திலிருந்து அவர் இன்னும் தெளிவு பெறாததே காரணம். அவர்; இன்னும் தெளிவு அடையவில்லை மயக்கத்தில்தான் உள்ளார் என்று அவரின் புதிய கடிதம் முழுமையும் சாட்சியாக உள்ளது.

நீங்கள் வளைகுடா பொறுப்பாளராக பணியாற்றியபோது... என்று எழுதி பி.ஜே.க்கு போட்டியான சரியான பொய்யர் என்பதை நிரூபித்துள்ளாரா? விரபமில்லாதவர் என்று காட்டி உள்ளாரா? புரிவதற்காக பிஜே வழியில் ஒரு குற்றச்சாட்டு என்று எழுதியதைக் கூட புரியாதவராக உள்ளார். இவரைப் போன்ற விபரமுள்ளவர்கள் பி.ஜே. அணியில் இருப்பதால்தான் அவர்கள் இவ்வளவு துணிச்சலாக பொய்களை கூறி வருகிறார்கள். அப்பொறியாளர் பொறியியல் மட்டும் படித்தவர் அல்ல. கூடவே வானிலையும் படித்தவர் என்று எழுதி வானிலை பற்றி முன்னறிவிப்பு செய்ததாக பாரூக் குறிப்பிட்டுள்ளார்.

தெளிவடையும்போது விளங்கிக் கொள்வார்.

நாளை என்ன நடக்கும் என்பதை அல்லாஹ்வே அறிவான். மனிதனால் சரியாக சொல்ல முடியும் என்று நம்புபவன் முஷ்ரிக். வானிலை பற்றியும் அல்லாஹ் ஒருவனே சரியாக அறிவான். மனிதனால் சரியாகக் கணிக்க முடியாது. புயல் சென்னை நோக்கி வரும் என்பான் அது ஆந்திரா நோக்கி போய் விடும். இதுதான் அண்ணன் பி.ஜே. அவர்கள் அன்று முதல் இன்று வரை செய்துள்ள பிரச்சாரம். 

வானிலை பற்றிய பாரூக் கூற்றை உண்மை என்று அவர் வாதித்தால், அவர் கூற்றுப்படி பி.ஜே. பொய்யர். இதில் பி.ஜே. கூறியுள்ள சரியான கொள்கைப்படிப் பார்த்தால் அதிரை பாரூக் பொய்யர் மட்டுமல்ல முஷ்ரிக்காகவும் ஆகிறார் என்பதை அவர் தெளிவடையும்போது விளங்கிக் கொள்வார். 

எனவே பி.ஜே. ஏற்படுத்தி உள்ள மதிமயக்கத்திலிருந்து அவர்களை விடுபடச் செய்ய நீங்கள் கேட்டுள்ளபடி பி.ஜேயின் சி.டி.க்களைப் பார்ப்போம். அந்த சி.டி.யில் பி.ஜே. தரப்பினரின் குற்றச்சாட்டுகளுக்கு பி.ஜே. தரப்பினரே தரும் பதில்கள் உள்ளதை விளக்குவோம் இன்ஷh அல்லாஹ்.

பிரசுரமாக வெளியிட சாத்தியமில்லை.

பலர் சுருக்கமான பதில் எழுதுங்கள் என்கின்றனர். 40க்கு 40 போன்ற தலைப்புகளில் நூற்றுக்கணக்கான பக்கங்களில் தனக்கு எதிரான பிறரது கூற்றுக்களை பத்திரிக்கைகளில் தொடராக விமர்சித்து குற்றம்சாட்டி வந்தவர்  பி.ஜே. விஞ்ஞான முன்னேற்றத்தைப் பயன்படுத்தி அவர் கூறும் பொய்யான குற்றச்சாட்டுகளை வீடியோக்களாக வெளியிட்டார். இப்பொழுது சி.டிக்களாக வெளியிட்டு வருகிறார். 

பி.ஜே. வெளியிடும் சி.டி.க்கள் 2 மணி நேரத்திற்குள்ளானதாக சுருக்கப்பட்டிருந்தாலும் அவரது பொய் குற்றச்சாட்டுக்களை அரங்கேற்ற அவர் நடத்தும் நிகழ்ச்சிகளின் நேரங்கள் அதைவிட கூடுதலானவை. இப்படி பல மணி நேரங்கள் செலவழித்து பி.ஜே. செய்துள்ள பிரைன் வாஷ் நிகழ்ச்சிகள் பொய்யானவை என்பதை நிரூபித்து நாம் அளிக்கும் விளக்கத்தை ஓரிரு பக்கத்தில் சுருக்கமான பிரசுரமாக வெளியிட சாத்தியமில்லை. 

நமது விளக்கங்களை ஒட்டி கேள்வி கேட்பவர்கள் கூட 6,7 பக்கங்களில் எழுதுகிறார்கள். கேள்வியே பல பக்கங்களில் வரும்போது பதில்களை பல பக்கங்கள் அளவில் விளக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

எளிதில் ஏமாற்றி விடுவார்.

நமது விளக்கமே பி.ஜே. அவர்களை பொதுவாழ்வில் உண்மையாளர் என்று நம்பி ஏமாந்து தங்கள் வாழ்வை பாழாக்கிக் கொண்டிருக்கும் சகோதரர்களுக்காகத்தான். எந்த ஒரு கேள்விக்கும் நீண்ட நெடு நேரம் பதில் அளித்து பழக்கப்படுத்தி விட்டவர் பி.ஜே. எனவே அவரை நம்பி உள்ளவர்களை திருத்த நாம் அளிக்கும் விளக்கமும் விலாவாரியாக இருந்தாக வேண்டும். 

இல்லாவிட்டால் ஒரு ஹதீஸை எடுத்துக் கொண்டு கூடும் என்றும் அதே ஹதீஸைக் கொண்டு கூடாது என்றும் வாதிப்பதில் வல்லவர் என்று புகழ் பெற்ற பி.ஜே. நமது விளக்கத்தையே தனக்கு சாதாகமாக்கி அவரது ஆதரவாளர்களை எளிதில் ஏமாற்றி விடுவார். 

இப்பொழுது பி.ஜே. பின்னால் அணி வகுத்து நிற்பவர்கள் வரலாறு இல்லாதவர்கள். எனவே பி.ஜே.யின் எந்த ஒரு கூற்றாக இருந்தாலும் அது எந்த எந்த வழிகளில் எல்லாம் பொய்யாகிறது என்பதை விரிவாக எழுதியே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். எந்த வழியிலும் பி.ஜே.யின் கூற்றுக்கள் உண்மை அல்ல என்பதை பல கோணத்தில் நிரூபிக்கும்போது சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்வதுபோல் தோன்றினாலும் அது பி.ஜே.யை நம்பி ஏமாந்து கொண்டிருப்பவர்களை மனதில் கொண்டே அப்படி எழுதுகிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

பி.ஜே. போல் வெத்து வேட்டு சவால்களாக இல்லாமல் இவ்வளவு விரிவாக நாம் விளக்கம் அளித்த பின்னரும் பலர், திருச்சியில் பி.ஜே. அழுதுள்ளார் தெரியுமா? பாக்கர் என்ன மாதிரி தேம்பித் தேம்பி அழுதுள்ளார் பாருங்கள். காரணம் இல்லாமல் இப்படி அழுவார்களா? என்று கேட்கின்றனர். 

இப்படிப்பட்ட நிலையில் அவர்கள் வெளியிட்டுள்ள சி.டி.களில் உள்ள ஒவ்வொரு அசைவுகளிலும் உள்ள சதிகளை விளக்கியே ஆக வேண்டிய கடமை நமக்கு உள்ளது. எனவே விரிவான விளக்கத்தை தவிர்க் முடியாது என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மெஸ்மரிஸம் பண்ணுகிறார்கள்.

தவ்ஹீது கொள்கை பிரச்சனையால் த.மு.மு.க.விலிருந்து வெளியேறியது போல் சித்தரித்து பி.ஜே. வகையறாக்கள் தமிழ் கூறும் உலகில் விளக்க நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்கள். நீங்கள் குறிப்பிட்டுள்ள சி.டி.யில் பி.ஜேயும் அவரது வகையறாக்களும் உரையை துவங்கும்போதே மக்களின் கவனத்தை கவிழ்த்து மக்களை வசப்படுத்துவதற்காக திட்டமிட்டபடி மெஸ்மரிஸம் பண்ணுகிறார்கள் - மதி மயக்கத்தை ஏற்படுத்தும் செயல்களை செய்து வருகிறார்கள். 

அவர்களின் கூற்றை நிலை நாட்ட ரொம்ப உச்சகட்டத்தை சொல்கிறேன் என்று சொல்லும் பி.ஜே, முதன் முதலில் மிக முக்கிய சம்பவம்போல் அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம்போல் சொல்லிக் காட்டுவது பி.ஜே.யின் ஆதரவாளரான வட சென்னை சித்தீக்கிடம் ஜுனைது அவர்கள் சொன்ன செய்தி. இதைத்தான் பிரதானப்படுத்தி பூதகரமான பிரச்சனையாக ஆக்கி குழப்புகிறார். இதிலும் அதிரை பாரூக் குழம்பி உள்ளதை அவரது எழுத்து மூலம் அறிய முடிகிறது.

சுற்றி வளைக்கும் பொய்யன் யார்?

ஒரு விஷயத்தை சொன்னவர் ஒப்புக் கொள்ளவில்லை என்றால்தான் சாட்சிகளை கொண்டு வருவார்கள். சொன்னவர் சொன்னேன் என்று ஒப்புக் கொண்டுவிட்ட ஒன்றுக்கு, அவர் சாட்சி இவர் சாட்சி என நிகழ்ச்சி நேரத்தை அநியாயமாக வீணடித்து, நாடகமாக நடத்தி சுற்றி வளைக்கும் மதிமயக்க வேலை செய்துள்ளது ஏன்? 

கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நேரடியாக பதில் சொல்லாமல் சுற்றி வளைப்பவன் பொய்யன்| என்ற தத்துவத்தைக் கூறிய பி.ஜே.தான், சுற்றி வளைக்கும் அந்த நிகழ்ச்சிகளை நடத்தினார், சி.டிக்களாக நடத்திக் கொண்டுமிருக்கிறார். சுற்றி வளைக்கும் பொய்யன் யார்? என்று தெரிந்து கொண்டீர்களா? 

என்னதான் திட்டமிட்டு மதியை மயக்கும் வேலை செய்து திசை திருப்பும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் பொய்யர்கள் என்பதை அவர்கள் மூலமே அல்லாஹ் அவர்களை அடையாளம் காட்டச் செய்து விட்டான்.

பொய்யர் ஆவது யார்?

முக்கிய அறிவிப்பை எழுதிய பி.ஜே. திருச்சி நிகழ்ச்சியில் ஒரு முறை நான் கவனமாக எழுதியது என்கிறார். அதே நிகழ்ச்சியில் இன்னொரு முறை நான்தான் உணர்ச்சி வசப்பட்டு எழுதினேன் என்கிறார். 

உணர்ச்சி வசப்பட்டவன் கவனமாக எழுத மாட்டான். கவனமாக எழுதுபவன் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருக்க மாட்டான். இரண்டுமே முரண்பாடானவை. 

நான் கவனமாக எழுதியது| என்பது உண்மையானால் உணர்ச்சி வசப்பட்டேன் என்று பி.ஜே. சொன்னது பொய். உணர்ச்சி வசப்பட்டு எழுதினேன்| என்பது உண்மையானால் நான் கவனமாக எழுதியது| என்று பி.ஜே. சொன்னது பொய்;. இதில் பி.ஜேயின் எந்தக் கூற்றை ஏற்றாலும் பொய்யர் ஆவது யார்? பி.ஜே.தானே பொய்யராகிறார்.

அல்லாஹ் அடையாளம் காட்டி உள்ளான்.

இந்த வாசகத்தை நான்தான் எழுதினேன். தவ்ஹீது செயல்பாடு என்று எழுதியதை ஜமாஅத் என்ற வார்த்தையை சேர்த்து தவ்ஹீது ஜமாஅத் செயல்பாடு என்று திருத்தினார்கள். தவ்ஹீது என்று நான் குறிப்பிட்டது என்னோடு போகட்டும் என்று எழுதினேன்| என்கிறார். தவ்ஹீது என்றால் பி.ஜே, பி.ஜே.. என்றால் தவ்ஹீது என்ற இமேஜ் ஏற்பட வேண்டும் என்று பி.ஜே. திட்டமிட்டு செயல்பட்டுள்ளதை பி.ஜே.யின் இந்த வார்த்தை மூலம் வெளிப்படுத்தி பி.ஜே.யை அல்லாஹ் அடையாளம் காட்டி உள்ளான். அல்ஹம்துலில்லாஹ்.

நான் ஒரு முஸ்லிம்தான் தவ்ஹீதுவாதி அல்ல.

தவ்ஹீது ஜமாஅத் என்பது பொதுவான வார்த்தை. இயக்கங்களே கூடாது இஸ்லாமே எங்கள் இயக்கம் என்பதில் உறுதியாக உள்ள அபூ அப்துல்லாஹ் அவர்களையும் பொது மக்கள் தவ்ஹீதுவாதி, தவ்ஹீது ஜமாஅத்தைச் சேர்ந்தவர் என்றுதான் கூறுகின்றார்கள். நான் ஒரு முஸ்லிம்தான் தவ்ஹீதுவாதி அல்ல| என்று முற்றம்| என்ற பத்திரிக்கையில் பேட்டி அளித்துள்ள ஜே.ஏ.க்யூ.ஹெச் தலைவர் எஸ். கமாலுதீன் மதனி அவர்களையும் மக்கள் தவ்ஹீதுவாதி, தவ்ஹீது ஜமாஅத்தைச் சேர்ந்தவர் என்றுதான் கூறுகின்றார்கள். தாருத் தவ்ஹீத், தவ்ஹீது இயக்கம் மற்றும் பல பெயர்களில் ஊர்வாரியாக செயல்படுபவர்களையும் தவ்ஹீதுவாதிகள், தவ்ஹீது ஜமாஅத்தைச் சேர்ந்தவர் என்றுதான் குறிப்பிடப்படுகின்றார்கள்.

தவ்ஹீது ஜமாஅத் என்பது பொதுவான வார்த்தை. இந்த பொதுவான வார்த்தையை அவர்களுக்கே உரிய வார்த்தை ஜாலத்தால் திட்டமிட்டு பயன்படுத்திக் கொண்டுதான் பி.ஜே. வகையறாக்கள் மக்களை ஏமாற்றும் வேலையில் ஈடுபட்டுள்ளார்கள். ஜமாஅத் என்ற வார்த்தையை சேர்த்து தவ்ஹீது ஜமாஅத்தார்களே வேண்டாம் என்று கூறியதுபோல் சித்தரித்து பி.ஜே.யும் அவரது வகையறாக்களும் ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

அதே வார்த்தை ஜாலத்தால்.

தவ்ஹீது பிரச்சாரகர் என்பதற்காக எனது மனைவி மக்களைவிட கூடுதலாக பி.ஜே.யை நேசித்த நான் என்று ஜுனைது அவர்கள் கூறுவதைப் பார்த்த ஒவ்வொரு குடும்ப பெண்களும் கூறி வார்த்தை, எல்லா வீட்டு ஆண்களும் அப்படித்தான் இருந்தார்கள் என்று. அப்படிப்பட்ட ஜுனைது அவர்கள் தவ்ஹீது ஜமாஅத்தா? த.மு.மு.க.வா என வந்தால் த.மு.மு.க.தான் முக்கியம் என்பேன் என்று விழுப்புரத்தில் பேசியதை சொல்லிக் காட்டுகிறார்கள். 

அதை சொல்லிக் காட்டி தவ்ஹீது ஜமாஅத் என்ற அதே வார்த்தை ஜாலத்தால் ஜுனைது அவர்களையும் தவ்ஹீது கொள்கை விரோதிபோல் சித்தரிக்கிறார்கள். ஜுனைது அவர்களை தவ்ஹீது கொள்கை விரோதிபோல் நம்ப வைத்தால்தான் அவர் மூலம் செய்தி கிடைத்ததுபோல் இவர்கள் பரப்பும் பொய் தவ்ஹீது கொள்கைவாதிகளிடம் எடுபடும்.

ஜுனைது எந்த அடிப்படையில் சொன்னார்? ஸைபுல்லா தலைமையில் உள்ள தவ்ஹீது ஜமாஅத் என்ற இயக்கமா? ஜவாஹிருல்லாஹ் தலைமையில் உள்ள த.மு.மு.க. என்ற இயக்கமா? என்று வந்தால், ஸைபுல்லா தலைமையில் உள்ள அ.த.ஜ.கூ. என்ற இயக்கத்தைவிட சிறந்த இயக்கமான ஜவாஹிருல்லாஹ் தலைமையில் உள்ள த.மு.மு.க.வைத் தேர்வு செய்வேன் என்ற பொருள்பட கூறி உள்ளார். 

இதைத்தான் ஜுனைதுக்கு தவ்ஹீது இரண்டாம் பட்சம் என்ற பொருள்பட பேசி வருகிறார்கள். ஒரு வாதத்திற்காக த.மு.மு.க. தவ்ஹீது கொள்கைக்கு விரோதமாகப் போகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது உங்கள் நிலை என்ன என்று கேட்டால் தவ்ஹீது கொள்கைதான் எனது உயிர் என்று ஜுனைது அவர்கள் தெளிவாக கூறி இருப்பார்கள். இதுதான் சலீமுல்லாகான் உட்பட த.மு.மு.க.வில் உள்ள எல்லா முஸ்லிம்களின் நிலையும் உள்ளது. வாக்கு மூலம் சி.டி.களைப் பார்த்தால் இந்த உண்மை தெரியும்.

நரித்தனமும் நரித் தந்திரமும் இருந்திருந்தால்.

பி.ஜே. கவனமாக எழுதியதாகக் கூறும் தவ்ஹீது செயல்பாடு என்ற வாசகம் என்ன பொருள் தரும்? தவ்ஹீது கொள்கை சம்பந்தமான செயல்பாடுகள் என்றுதான் பொருள் தரும். இங்கே தவ்ஹீது கொள்கை பிரச்சனை இல்லை. தவ்ஹீது ஜமாஅத்| என்று தங்களை கூறிக் கொள்ளும் அ.த.ஜ.கூட்டமைப்பு என்ற அமைப்பின் தலைமையுடன்தான் பிரச்சனை என்ற பொருளில்தான் ஜமாஅத் என்ற வார்த்தையை சேர்க்கிறார்கள். 

நரித்தனமும் நரித் தந்திரமும் த.மு.மு.க. தலைமையினரிடம் இருந்திருந்தால் சதித் திட்டத்துடன் அவர்கள் பயன்படுத்தி வரும் தவ்ஹீது ஜமாஅத் என்ற இந்த வார்த்தையை எழுத ஒப்புக் கொண்டிருக்க மாட்டார்கள். த.மு.மு.க. தலைமையினர் இயல்பாக எழுதி கொடுத்த கூட்டமைப்பு என்ற வார்த்தையிலேயே உறுதியாக இருந்திருப்பார்கள்.

பி.ஜே. மண்டையில் களி மண்ணா இருக்கிறது?

த.மு.மு.க. அ.த.ஜ.கூட்டமைப்பு ஆகிய இரண்டு இயக்கங்களுக்கு மத்தியிலான பிரச்சனையை தவ்ஹீது கொள்கைப் பிரச்சனைபோல் ஆக்கி தவ்ஹீது பெயரால் லாபம் தேடும் திட்டத்துடன் பி.ஜே. இருந்துள்ளார். அதனால்தான் அ.த.ஜ.கூட்டமைப்பு என்ற அமைப்புத் தலைமையுடனான பிரச்சனை என்ற உண்மையை குறிப்பிட்டு த.மு.மு.க. தலைமையினர் எழுதி கொடுத்த ஒப்பந்தத்தை படித்துப் பார்த்த பி.ஜே. என் மண்டையில் களி மண்ணா இருக்கிறது? என்று கேட்டு அதை நிராகரித்துள்ளார்.

பி.ஜே.யின் கூற்றே தரும் தெளிவு.

பேரணியை தோல்வியுறச் செய்யும் முயற்சி என்பது இரண்டு ஜமாஅத்துகளுக்கு மத்தியில் மோதல் ஏற்படுத்துகிற விஷயம் என்று சித்தீக்கிடம் சொன்னதாக பி.ஜே. சொல்கிறார். இங்கே பி.ஜே. குறிப்பிட்டுள்ள இரண்டு ஜமாஅத்கள் என்றால் என்ன? ஒரு ஜமாத் பேரணியை தோல்வியுறச் செய்யும் வேலையில் ஈடுபட்ட அ.த.ஜ.கூட்டமைப்பு என்ற அமைப்பு. இன்னொரு ஜமாஅத் பேரணியை ஏற்பாடு செய்த த.மு.மு.க என்ற அமைப்பு. பி.ஜே.யின் இந்த கூற்றே அ.த.ஜ.கூட்டமைப்பு த.மு.மு.க ஆகிய இரண்டு இயக்கங்களூக்கும் இடையே உள்ள பிரச்சனையே தவிர கொள்கை பிரச்சனை இல்லை என்ற பதிலைத் தெளிவாகத் தருகிறது.

பி.ஜே. ஏற்படுத்தும் மதி மயக்கம்.

திருச்சி நிகழ்ச்சியில் பி.ஜே, நான் சொல்வதை விட (தழு தழுத்த குரலில்) சம்பந்தப்பட்டவன் நான் சொன்னால் ஏதோ கூட குறைய சொல்லாம் என்று நீங்கள் நினைத்து விடலாம். எனவே நிர்வாக கூட்டத்தில் கலந்து கொண்ட சக நிர்வாகிகள் சொல்லட்டும்|| என்கிறார் மதி மயக்கத்தை ஏற்படுத்திடும் பி.ஜே.யின் இந்த பீடிகையால் வந்தவர்களில் அவரது வகையறாக்கள் வாயை ஆ.. என்று ஒரேயடியாக பிளக்க வைத்து விடுகிறார். 

பி.ஜே. எப்படி குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்டவராக உள்ளாரோ, அதுபோல்தான் பாக்கர், அலாவுத்தீன், அன்வர் பாஷா ஆகியவர்களும் குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்டவர்களாக உள்ளார்கள். எனவே பிஜே. சொன்னாலும் பி.ஜே. குறிப்பிடும் சக நிர்வாகிகளில் யார் சொன்னாலும் ஒன்றுதான் என்பதை பி.ஜே. வகையறாக்களில் கீழ்மட்டத்தில் உள்ள அப்பாவிகள் உணர்ந்திருந்தால் அங்கேயே கேள்வி கேட்டு இருப்பார்கள்.

நடுநிலையாளர்களே நிலைகுலைய வைக்கும் பாக்கர்.

பாக்கர் பேசும்போது, யா அல்லாஹ் என் இதயத்திலே எந்த விதமான வெறுப்பையும் கோபத்தையும் காழ்ப்புணர்வையும் ஏற்படுத்தி விடாதே. அன்று நடந்ததை உண்மையைத் தவிர வேறு எதையும் நாவிலே வரவைத்து விடாதே! என்று அல்லாஹ்விடம் பிரார்த்திப்பது போல் மக்கள் முன் பிரார்த்தித்துக் காட்டி, நடுநிலையாளர்களே சற்று நிலைகுலைய வைத்து விடுகிறார். கூடி இருந்தவர்களில் அவர்களது ஆதரவாளர்களை முகங்குப்புர விழ வைக்கிறார்.

அல்லாஹ்விடம் பிரார்த்திப்பது என்றால், அந்த பிரார்த்தனை இக்லாஸானதாக இருந்தால், சபைக்கு வரும் முன் தனிமையில் துஆச் செய்து அல்லாஹ்விடம் அழுது மன்றாடி இருப்பார். 

பேச துவங்கியதும் துஆச் செய்வதாக கூறிய வார்த்தை அல்லாஹ்விடம் செய்த துஆ அல்ல. அவ்லாஹ்விடம் துஆ செய்வது போல் காட்டினால்தான், பாக்கராகிய தான் கூற இருப்பவைகளை, அது எவ்வளவு பெரிய பொய்களாக இருந்தாலும் மக்கள் நம்புவார்கள் என்று பகிரங்கமாக துஆச் செய்து காட்டுகிறார். பி.ஜே. பாக்கர் ஆகியவர்களின் இந்த நடவடிக்கைகளே அவர்கள் தரப்பில் உண்மை இல்லை என்பதற்கு உரிய ஆதாரங்களாகும்.

உண்மை நிலை என்ன?

மலிவு விலை சி.டி.யான ஆலந்தூர் கூட்டத்தில் பேசும் பி.ஜே: நான், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்திலிருந்து விலகிக் கொள்ளக் கூடிய முக்கிய அறிவிப்பைப் பார்த்து விட்டு அது சம்பந்தமான உண்மை நிலவரத்தை அறிவதற்கு வந்துள்ளீர்கள். இந்த உண்மை நிலவரத்தை அறிய 4 மாதங்களுக்கு சொல்ல வேண்டி இருக்கின்றன என்று தனது உரையை துவங்குகிறார். 

திருச்சியிலும் உண்மை நிலை என்ன? என்று அறிய வேண்டும் என்ற நோக்கத்திலே வந்துள்ளீர்கள் என்றே கூறுகிறார். 4 மாதங்களுக்கு சொல்ல வேண்டி இருக்கின்றன என்ற பி.ஜே.யின் இந்தக் பீடிகை, ஆதாரமில்லாத ஒன்றை சபையில் அரங்கேற்றாதீர்கள் என்று எழுதி உள்ள அதிரை பாரூக்கை பொய்யராக்குகிறது. 

அடுத்து உணர்வில் கூறப்பட்டுள்ள காரணம் வேறு, உண்மை நிலவரம் வேறு. உணர்வில் பி.ஜே. தவ்ஹீது கொள்கைப் பிரச்சனை போல் வெளியிட்டுள்ளது பொய், தவ்ஹீது கொள்கை பிரச்சனை இல்லை என்பதே உண்மை என்றும் விளக்குகிறது. தவ்ஹீது கொள்கை பிரச்சனை இல்லை என்பதை பி.ஜே. அவர்களே நேரடியாக ஒப்புக் கொண்டுள்ளதை, அவர் வெளியிட்டுள்ள சி.டி.களிலேயே பி.ஜே. அவர்கள் அவரை அறியாமல் சொல்லிக் காட்டி உள்ளார்கள் என்பதை முன்னரே பார்த்தோம்.

நீதியான மனிதர் என்றால்?

இந்தச் செய்தி வரும்போது பி.ஜேயின் உள்ளத்தில் கள்ளம் கபடம் எதுவும் இல்லாதிருந்தால், முன்பாக எந்த சதி திட்டமும் நடக்கவில்லை என்பது உண்மையாக இருந்தால் பி.ஜே. என்ன செய்திருக்க வேண்டும்? என்ன இது அநியாயமாக இருக்கிறது? என் காதுக்கு வந்து விட்டது. இனி யாருக்கும் இதைக் கூற வேண்டாம். முக்கியமாக பாக்கர் அலாவுதீன் அன்வா பாஷா ஆகியவர்களுக்கு தெரிய வேண்டாம். தெரிந்தால் வருத்தப்படுவார்கள். தலைவர் அல்லது செயலாளரிடம் சொல்லி விசாரித்து நடவடிக்கை எடுக்கச் சொல்கிறேன் என்று கூறி இருப்பார். நடுநிலையான நியாய உணர்வு உள்ள நல்லெண்ணம் உடைய ஒரு நீதியான மனிதர் என்றால் பி.ஜே. இப்படித்தான் செய்திருப்பார். என்ன செய்தார் பி.ஜே?

சிந்திக்கக் கூடிய மக்களுக்கு இதுதான் தெளிவு.

தூண்டில் போட்டவன் மிதப்பிலே கண்ணாக இருந்து சுண்டி இழுப்பது போல் நடந்துள்ளார். இப்படி ஒரு செய்தியை இவர்களே பரவ விட்டு, பரப்பி விட்டு இவர்கள் பரவ விட்ட செய்தி எதிர்பார்த்தபடி இவர்களிடமே திரும்புகிறது. உடனே இதுதான் சமயம் என்று உடும்புப் பிடியாய் பிடித்து பிரச்சனை ஆக்கி விட்டார்கள். எந்த ஒரு சதிச் செயலும் இல்லாதிருந்தால் செய்தியை கேட்ட உடன் கோபம் வராது சிரிப்புதான் வரும். நாங்களெல்லாம் பொறுப்பில் இருக்கும்போது அமைப்பே எங்களுடையதாக இருக்கும் போது நாங்களே கைப்பற்ற முயற்சி என்பது கேலிக் கூத்து என்று இப்பொழுது மேடைகள் போட்டு கூறிக் கொண்டிருப்பதை பி.ஜே. அப்பொழுதே சித்தீக் இடம் கூறி முடித்து இருப்பார். சிந்திக்கக் கூடிய மக்களுக்கு இதுதான் தெளிவு.

நீ இழுத்து விட்டு கூத்துப் பார்ப்பவனா?|

அமெரிக்க தூதர் வரும் நிகழ்ச்சி சம்பந்தமாக ஜவாஹிருல்லாஹ் அவர்களுக்கு போன் போட்டு பேசிய பி.ஜே, இது சம்பந்தமாக ஜவாஹிருல்லாஹ்வுக்கு போன் போடாதது ஏன்? வால்போஸ்ட்டரில் லுஹா பெயர் போட்டதற்காக ரிபாஈ ரஷாதிக்கு போன் போட்டு கண்டபடி தானே திட்டியதாகக் கூறிய பி.ஜே, ஜுனைதுக்கு போன் போட்டு பேசாதது ஏன்? 

பி.ஜே.யே கூறி உள்ள இந்த முன் மாதிரி சம்பவங்களுக்கு மாற்றமாக பாக்கருக்கு போன் போட்டது ஏன்? இது மாதிரி ஒரு வேலையை சாதாரண மனிதன் செய்தால் சாமான்யன் கூட நீ இழுத்து விட்டு கூத்துப் பார்ப்பவனா?| ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்களே அது போல் அல்லவா உன் செயல் உள்ளது என்று கேட்பான். அதைவிட மோசமான செயலைத்தான் பி.ஜே. செய்துள்ளார்.

தமிழகம் முழுவதும் பம்பரமாக சுழன்று பேசிய பி.ஜே.

பி.ஜே.யின் கூற்றில் உள்ள குறைபாடுகளை மேலும் அறியும் முன் உள்ளங்கை நெல்லிக்கனி போல் உண்மையை தெளிவுபடுத்தக் கூடிய ஒன்றைப் பார்ப்போம். த.மு.மு.க. துவங்கப்பட்ட காலத்திலிருந்து ஒவ்வொரு முக்கிய முடிவுகளையும் மக்களிடம் சேர்க்க பி.ஜே. பம்பரமாக சுழன்றார் என்று கூறி வருகின்றனர். பாடையில் ஏற்றுவோம் என்று குத்பா பண்ணும் லுஹாவுடைய பயானும் இதுவாகத்தான் இருக்கிறது. ஆரம்ப காலத்தில் இருந்து டிசம்பர் 6 விளக்கக் கூட்டமா, வாழ்வுரிமை மாநாடா, முந்தைய பாராளுமன்ற தேர்தலா, அதற்கு முந்தைய தேர்தல் புறக்கணிப்பா எதுவாக இருந்தாலும் ஒவ்வொன்றுக்கும் 50 பொதுக்கூட்டங்களுக்குக் குறையாமல் தமிழகம் முழவதும் பம்பரமாக சுழன்று பேசியுள்ளார்.

சிந்தித்தால் சதி செய்ததற்கான விடை கிடைத்து விடும்.

அது மட்டுமா? வெளிநாட்டில் உள்ள மக்களுக்கும் செய்திகள் சென்றடைய வேண்டுமே. அதற்காக 2 மாதங்களுக்கு முன்பே நிகழ்ச்சியின் அவசியத்தை விலவாரியாக விளக்கிப் பேசுவார். அது வீடியோ ஆடியோக்களாக வெளிநாட்டில் உள்ளவர்களை சென்றடையும். இப்படியெல்லாம் அவரது கடந்த கால செயல்பாடுகளை விளக்கி வருகின்றனர். இவற்றையெல்லாம் யாரும் மறுக்கவில்லை மறுக்கவும் முடியாது. அப்படிப்பட்டவர் அமைப்பின் முக்கிய நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட தஞ்சை பேரணியின் அவசியத்தை விளக்கி எத்தனை கூட்டங்களில் பேசினார்? சிந்தித்தால் சதி செய்தார்களா? இல்லையா? என்பதற்குரிய விடை எளிதில் கிடைத்து விடும்.

ரகசிய உத்தரவு புதிய செயல் அல்ல.

15-03-2004, திங்கட்கிழமை துறைமுகம் பகுதி 27 வது வட்ட த.மு.மு.க. சார்பில் பி.ஜே. கலந்து கொள்ளும் ஒரே ஒரு கூட்டம் பற்றிய விளம்பரம் மார்ச் 12-18 உணர்வில் வருகிறது. இதைப் பார்த்ததும் லுஹாவிடம் அவரது வகையறாக்கள், கூட்டமைப்பில் உள்ளவர்களையெல்லாம் த.மு.மு.க. பேரணிக்கு வர வேண்டாம் என்று சொல்லி விட்டு பி.ஜே. த.மு.மு.க. கூட்டத்தில் பேசுகிறாரே என்று கேட்டுள்ளனர். அதற்கு லுஹா நிர்ப்பந்தம் என்று பதில் கூறி உள்ளார். தஞ்சை பேரணியை தோழ்வியுறச் செய்ய பி.ஜே. ரகசிய உத்தரவு இட்டது ஒன்றும் புதிய செயல் அல்ல.

தனது வரட்டுக் கவுரவத்திற்காகவும் முரட்டு பிடிவாதத்திற்காகவும் தவ்ஹீது மாநாட்டையே நடத்த விடாமல் தடுத்து நிறுத்தியவர்தான் பி.ஜே. இவர் தடுத்த ஊரை விட்டு மாற்றி வேறு ஊரில் ஏற்பாடு செய்தார்கள். அப்போதும் பிடிவாதத்தை விடவில்லை. தஞ்சை பேரணியை தோழ்வியுறச் செய்ய எல்லா வேலைகளையும் செய்து விட்டு கடைசியில் கலந்து கொண்டது போல், அந்த தவ்ஹீது மாநாட்டுக்கு எதிராக எல்லா வேலைகளையும் செய்து விட்டு கடைசியில் கலந்து கொண்டவர்தான் பி.ஜே.

தவ்ஹீது மாநாட்டையே நடத்த விடாமல் ஆக்கியவர்.

1989ல் துபை ஐ.ஏ.ஸி. சார்பில் நாகூரில் தவ்ஹீது மாநாடு நடத்த ஏற்பாடு செய்தார்கள். பிப்ரவரி 18,19 சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள் என்று தேதியும் முடிவு செய்யப்பட்டது. பத்திரிக்கையில் வெளியிட்டு, நோட்டீஸ்கள் அச்சிட்டு வினியோகித்தும் விட்டார்கள். 

துபையில் உள்ள ஐ.ஏ.ஸி. பொறுப்பாளர்களில் இன்ன இன்னவர் பத்து பத்து நிமிடங்கள் பேசுவார்கள் என்று பி.ஜேக்கு கடிதம் எழுதினார்கள். இதில் இயக்வெறி உள்ளதாக எண்ணிய பி.ஜே. உடனே உறவை முறித்து கடிதம் எழுதினார். 

தமிழ்நாடு ஐ.ஏ.ஸி.யின் மாநில பொருளாளராக இருந்த அவர் அந்த பொறுப்பிலிருந்து விலகியதோடு, மாநாட்டு பொறுப்பிலிருந்தும் விலகினார். 


தான் விலகியதோடு நிற்கவில்லை. அந்த தவ்ஹீது மாநாட்டையே நாகூரில் நடத்த விடாமல் ஆக்கியவர்தான் பி.ஜே.

தவ்ஹீது மாநாட்டையே தோழ்வியுறச் செய்ய எல்லா வேலைகளையும் செய்தவர்.

பிறகு துபை ஐ.ஏ.ஸி.யினர் அந்த தவ்ஹீது மாநாட்டை 1989 மார்ச் 4,5 சனி, ஞாயிறு ஆகிய தேதிகளுக்கு மாற்றி பரங்கிப் பேட்டையில் ஏற்பாடு செய்தனர். அந்த மாநாட்டுக்கும் யாரும் போகக் கூடாது நானும் போக மாட்டேன் என்று அந்த தவ்ஹீது மாநாட்டையே தோழ்வியுறச் செய்ய எல்லா வேலைகளையும் செய்தவர் பி.ஜே. 

கடைசியில் அவர் போய் கலந்து கொண்டு இக்பால் மதனி எழுதிய முக்தஸர் ஸஹீஹ் முஸ்லிமை வெளியிட்டுப் பேசினார். அன்றைய துபை ஐ.ஏ.ஸி.யின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள் இன்றும் அதை மறந்திருக்க மாட்டார்கள். இறையச்சம் உடையவர்கள் அந்த உண்மையை மறைக்கவும் மாட்டார்கள்.

சிந்தனையாளர்கள் அப்பொழுதே புரிந்து கொண்டார்கள்.

2004 மார்ச் 12-18 உணர்வில் பி.ஜே. பேசுவதாக வந்த அந்த விளம்பரத்தில் கூட முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு ஏன்? விளக்கப் பொதுக் கூட்டம் என்றுதான் வாசகம் இருந்தது. அதே உணர்விலும் அதற்கு முன் பின் உள்ள உணர்வுகளிலும் மற்றவர்கள் பேசுவதாக வந்த விளம்பரங்களில் தஞ்சைப் பேரணி விளக்கக் கூட்டம் என்ற நிகழ்ச்சியின் நோக்கத்தை பிரதிபலிக்கும் முக்கிய வாசகம் இருந்தது. பி.ஜே. பேசுவதாக போடப்பட்ட விளம்பரத்தில் அந்த வார்த்தை தவிர்க்கப்பட்டிருந்தது. இதைக் கண்ட சிந்தனையாளர்கள் அப்பொழுதே புரிந்து கொண்டார்கள்.

தஞ்சையை வற்புறுத்தியதே ஒரு சதி திட்டம்தான்

இன்னும் சிலர் பேரணி வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தஞ்சையை பி.ஜேதானே வற்புறுத்தி உள்ளார். அப்படிப்பட்டவரை பேரணி தோழ்வியுற முயற்சித்தார் என்று கூறுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என்கின்றனர். கேள்வி நியாயமானதுதான். தஞ்சையை வற்புறுத்தியதே ஒரு சதி திட்டம் என்பதுதான் உண்மை. உண்மையிலேயே பேரணி வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கதின் அடிப்படையில் கால்குலேட் பண்னி இருந்தால், எல்லாரும் வந்து சேரும் பகுதியாக இருக்க வேண்டும் என்று எண்ணி இருந்தால். அவர் திருச்சியைத்தான் வற்புறுத்தி இருக்க வேண்டும். எல்லாப் பகுதி மக்களும் வந்து போக வசதியான திருச்சி;தான் மாநில தலைநகராக ஆக்கப்பட வேண்டும் என்று ஆட்சியாளர்களாலேயே தீர்மானிக்கப்பட்ட இடம். பி.ஜே. அவர்களும் தான் கூட்டும் முக்கிய கூட்டங்கள் ஒவ்வொன்றையும் திருச்சியில்தான் கூட்டியுள்ளார். இப்பொழுதும் மாநிலம் தழுவியஅவரது நாடக நிகழ்ச்சியை திருச்சியில்தான் அரங்கேற்றினார். அதுதான் எல்லாரும் வருவதற்கு பொதுவான இடம்.

பி.ஜே. தஞ்சையை வற்புறுத்தியதே பேரணி தோழ்வியுற வேண்டும் என்ற நோக்கத்தில்தான். ஏனெனில் அதுதான் மாநிலத்திலேயே ஒதுங்கிய பகுதி. சரியான ரோடுகள் இல்லாத வாகன வசதிகள் குறைவான பகுதி. சென்னை தலைநகராக இருப்பதால் எல்லா பகுதி மக்களும் எளிதில் வருவார்கள். அவர் தஞ்சையை வற்புறுத்தியதே பேரணி தோழ்வியுற வேண்டும் என்ற நோக்கில்தான் அல்லாஹ் வெற்றியை கொடுத்து விட்டான். எனவே வெற்றியில் உரிமை கொண்டாடுகிறார்.

எதிர் பார்த்து காத்து இருந்துள்ளார்.

சித்தீக் சொன்ன செய்தியை கேட்டதும் பி.ஜே. ஏற்கனவே நடந்து கொண்ட முன் மாதிரிப்படி ஜவாஹிருல்லாஹ்வுக்கோ ஜுனைதுக்கோ போன் போடாமல் என்ன செய்கிறார்? அவரே சொல்கிறார் ||இதை விடக் கூடாது என்று பாக்கருக்கு போன் போட்டு நிர்வாகக் குழு கூட்டத்தை கூட்ட வற்புறுத்துங்கள் என்றேன்|| என்கிறார். இதை விடக் கூடாது என்ற வார்த்தை அவர் எதிர் பார்த்து காத்து இருந்துள்ளார் என்பதற்கு ஆதாரமாகிறது. நிர்வாகக் குழு கூட்டத்தை கூட்ட வற்புறுத்துங்கள் என்ற கூற்று அவர் எதிர் பார்த்து காத்து இருந்துள்ளார் என்பதற்கு மேலும் வலு சேர்க்கிறது. எப்பொழுது வற்புறுத்துவார்கள்? ஓரிரு முறை சொல்லி கூட்டவில்லை என்றால்தான் வற்புறுத்த வேண்டிய நிலை வரும். எடுத்த எடுப்பிலேயே வற்புறுத்துங்கள் என்று பி.ஜே.கூறி உள்ளார் என்றால் என்ன அர்த்தம்? மண்டையில் மசாலா இல்லாதவர்களுக்கு எப்படி புரியும்.

ஆம்புலன்ஸ் லுஹா கூறிய காரணம்.

சண்டையாமே பேச மாட்டார்களாமே என்று சொன்னால் ஓ.கே. என்றும் பி.ஜே. சொல்கிறார். இதிலிருந்து ஏற்கனவே சண்டையாக உள்ளார்கள். பேசமாட்டார்கள் என்பதை பி.ஜே. ஒப்புக் கொள்கிறார். 18.01.2004 அன்று லுஹா ஆம்புலன்ஸ் அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக தென்காசிக்கு புறம்படும்போது ஒப்புக் கொண்டதாகவும், உள்ளத்தில் ஏற்பட்ட உறுத்தலால் வாவர் பள்ளி இமாம் ஹைதர் அலி கலந்து கொள்வதால் நான் கலந்து கொள்ள மாட்டேன் என்று 10 நிமிடத்திற்குப் பின் தெரிவித்ததாகவும் லுஹா கூறி உள்ளார்.

கொதித்து போய் உள்ள சமுதாய மக்கள் துஆ.

இந்த உறுத்தல் என்பது உண்மையாக இருக்குமானால் அல்லாஹ் அவருக்கு நல்லருள் புரிய துஆச் செய்வோம். 10 நிமிடத்திற்குள் பேச வேண்டிய ஷய்த்தான்களிடம் பேசி விட்டு கொள்கைப் பிரச்சனை என கூறும் பொய்யாக இருக்குமானால், பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டும் என்று நபி(ஸல்) சபித்துள்ளதால், சமுதாயத்தை கூறு போடுவதற்கு ஒரு பிரச்சனையாக ஆகிவிட்ட இதில் லுஹா பொய்யராக இருந்தால் பொய்யரான லுஹா மீது அல்லாஹ்வின் லஃனத்து - சாபம் இறங்கட்டும் என்று கொதித்து போய் உள்ள சமுதாய மக்கள் துஆச் செய்யாமல் இருப்பார்களா?

ஆம்புலன்ஸ் அறிமுக நிகழ்ச்சிக்கு த.மு.மு.க. மாநில பொதுச் செயலாளர் எஸ். ஹைதர் அலி அவர்களை அழைக்கக் கூடாது என்று பி.ஜே. சொன்னார் என்பதை ஜே.எஸ். ரிபாஈ இப்பொழுதுதான் பகிரங்கப் படுத்தி உள்ளார்.

ஆம்புலன்ஸ் லுஹா கூறிய உண்மைக் காரணம்.

லுஹா வகையறாக்களான ஏகத்துவம் துணை ஆசிரியர் செய்யது (குளம்) இபுறாஹீம், மஸ்ஜிதுர்றஹ்மான் செயலாளர் அஸதுல்லாஹ், காடை பஷீர் போன்றவர்களிடம் ஆம்புலன்ஸ் அறிமுக நிகழ்ச்சிக்கு முன்னதாகவே லுஹா என்ன கூறி உள்ளார்? பி.ஜே.க்கும் த.மு.மு.க. மாநில பொதுச் செயலாளர் எஸ். ஹைதர் அலிக்கும் மோதலாக உள்ளது. இந்த நிலையில் த.மு.மு.க. மாநில பொதுச் செயலாளர் எஸ். ஹைதர் அலி கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் நாம் கலந்து கொள்ள முடியாது என்று கூறி உள்ளார். இதுதான் லுஹாவும் அவரது வகையறாக்களும் ஆம்புலன்ஸ் அறிமுக கலந்து கொள்ளாததற்கு உள்ள உண்மைக் காரணம்.

சமுதாய உணர்வு உள்ள ஒவ்வொரு முஸ்லிமின் துஆ.

மேற்கண்டவாறு லுஹா கூறியதாக சொல்வது பொய்யாக இருக்குமானால் நாம் ஏற்கனவே கூறி உள்ள நிபந்தனைப்படி லுஹாவும் அவரது வகையறாக்களும் மறுக்கட்டும். அவர்கள்தான் முபாஹலா பண்ணலாம் என்ற கொள்கையில் உள்ளார்களே. லுஹா கூறியது உண்மையாக இருந்து அதை அவர்கள் மறைக்கிறார்கள் என்றால், பொய்யர்களான லுஹா, செய்யது (குளம்) இபுறாஹீம்;, அஸதுல்லாஹ், காடை பஷீர் போன்றவர்கள் மீது அல்லாஹ்வின் லஃனத்து - சாபம் இறங்கட்டும் என்று சமுதாய உணர்வு உள்ள ஒவ்வொரு முஸ்லிமும் துஆச் செய்யாமல் இருக்க மாட்டார்கள். எனவே மனம் திருந்தி உண்மையை ஒப்புக் கொள்ளாவிட்டால் இதற்குரிய ஜெஸாவை - கூலியை அவர்கள் அடைந்தே தீருவார்கள். பாதிக்கப்பட்டவர்(களான சமுதாயமக்)களின் பிரார்த்தனைக்கும் அல்லாஹ்வுக்கும் திரை இல்லை.

முஸ்லிம்கள் போக முடியுமா?

பாக்கர் கூட செய்தியை கேள்விப்பட்டதும், என்ன ஹைதர்ஸாப் விளையாடுகிறாரா?| என்று கேட்டேன் என்கிறார். சித்தீக் செய்தி சொன்னபோது பி.ஜே.யும், சண்டையாமே பேச மாட்டார்களாமே என்று சொன்னால் ஓ.கே.| என்கிறார். இருவரின் இந்த வாக்கு மூலங்களே முன்பே விவகாரம் இருந்து வந்துள்ளது என்பதற்கு ஆதாரமாக உள்ளது. இதற்குப் பிறகும் தவ்ஹீது பிரச்சனை, வாவர் பள்ளி இமாம் ஹைதர் அலி பிரச்சனை என்றால் மண்டையில் மசாலா இல்லாதவர்கள், பனைபோல் வளர்ந்து கெட்டவர்கள், சுய நலமிகள், வட்டம், குளம், குட்டங்கள் பெயரால் பதவி பெற்றுள்ள பதவி பித்தர்கள் தலையை ஆட்டி விட்டுப் போவார்கள். முஸ்லிம்கள் போக முடியுமா?

பி.ஜே.யும் பாக்கரும் பரப்பியதற்கு பலர் சாட்சி.

பி.ஜே. தரப்புதான் சதி திட்டம் தீட்டி பொய்களை பரப்பி உள்ளார்கள் என்பதற்குத்தான் ஏராளமான சாட்சிகளும் தெளிவான ஆதாரங்களும் உள்ளன. பி.ஜே.யின் ஆதரவாளரான வட சென்னை சித்தீக் சொன்ன செய்தி தஞ்சை பேரணிக்கு சுமார் 20 நாட்களுக்கு முன்பாக என்று பி.ஜே. கூறுகிறார். 20 நாளுக்கு முன்பாக என்பது எப்பொழுது? முஸ்லிம் டிரஸ்ட் நிகழ்ச்சி முடிந்து ஞாயிற்றுக்கிழமை என்ற பி.ஜே.யின் வாக்கு மூலப்படி பிப்ரவரி 29ஆம் தேதிதான் இந்தச் செய்தி பி.ஜேக்கு கிடைத்திருக்கிறது. அதற்கு முன்பாகவே பிப்ரவரி 8 ஆம் தேதியே தொண்டி நிகழ்ச்சியின்போது பி.ஜே.யும் பாக்கரும் த.மு.மு.க. வை விட்டு விலகப் போகிறோம் என்று கூறி அதற்கு பொய்க் காரணங்களை பரப்பியதற்கு பலர் சாட்சி கூறி உள்ளார்கள். இதை பி.ஜே.யோ பாக்கரோ இன்று வரை மறுக்கவில்லை.

பாக்கரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

ராமநாதபுரம் மாவட்ட தலைவர் சலீமுல்லாகானுக்கு போன் போட்ட பாக்கர், என்னை தலைவராகவும் பொதுச் செயலாளராக அலாவுதீனையும், பொருளாளராக அன்வர்பாஷாவையும் போடப் போவதாக நீனே சொன்னியாமுல்லே என்று கேட்டுள்ளார். உடனே மெட்ராஸுக்கு புறப்பட்டு வருகிறேன். அந்த மாதிரி நான் சொல்லி இருந்தால் தலைமையகத்தில் வைத்து என்னை செருப்பால் அடியுங்கள். இல்லை என்று ஆகிவிட்டால் இந்த பித்னாவை கிளப்பியவனை என்னிடம் ஒப்படையுங்கள் என்று சலீமுல்லாகான் கூறியுள்ளார். இதற்குப் பிறகு பாக்கரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

இப்பொழுது புரிகிறதா? பித்னாக்களை கிளப்பி விட்ட பித்னாக்காரன்கள் யார்? பொய்களை பரப்பிவிட்ட பொய்யன்கள் யார்? செருப்பால் அடிக்கப்பட வேண்டியவன்கள் யார்? அந்த அயோக்கியன்களை மறைத்து பாதுகாத்து வருபவர்கள் யார்? செருப்பால் அடிக்கப்பட வேண்டிய அயோக்கிய கூட்டத்தை ஆதரித்து நிற்பவர்கள் யார்?

அழுது ஒப்பாரி வைக்கும் காட்சியில் பாக்கர் பேசும் வசனம்.

அரங்கத்தில் இருந்தவர்களின் சி.டி.க்களாக பார்ப்பவர்களின் மதியை மழுங்கச் செய்ய டைரக்டர் பாக்கர் தோன்றிய காட்சிகளில் உச்சகட்டமானது. அழுது ஒப்பாரி வைக்கும் காட்சிக்கு முன்பாக பேசும் வசனம். மதுரையிலே 25 தடவை போயிருப்பேன். அண்ணே பாபரி மஸ்ஜிதை இடிச்சிட்டாங்க. இப்ப பாம் பிளாஷ்ட்லெ அரஷ்டு பண்ணிக்கிட்டு இருக்காங்க. நம்மளை பாதுகாக்க எந்த இயக்கமும் இல்லையண்ணே. கேள்வி கேக்கிறதுக்கு யாரும் இல்லையண்ணே. நீங்களே இப்படி இருந்தால் எப்படியண்ணே?

அவர் சொல்றாரு எனக்கு ஆன்மீகத்தை தவிர வேறு எதுவும் தெரியாதுப்பா. எனக்கு சரியா வராது பாக்கரு. என்னை வுட்டுங்க இந்த விஷயத்திலே. எனக்கெல்லாம் சரியா வராது பாக்கருங்கிறாரு இழுத்திட்டு வந்தய்யா. அவரு கேவலப்பட்டு நிக்கிறாரு என்று ஒப்பாரி வைத்து அழுகிறார். அழுது இயக்குனர் பாக்கர் நடிகர் பாக்கராகவும் ஆகிறார். பாக்கரின் இந்த நடிப்பு ஒன்றே அவர்கள் நாடகம் நடத்தி வருகிறார்கள் என்பதற்கு ஆதாரமாகும்.

பாக்கரைப் பொய்படுத்தும் பாக்கரின் கூற்றுக்கள்.

வாழ்வில் சாவைவிட பேரிழப்பு எதுவும் இல்லை. அப்படி இருக்க செத்தவன் வீட்டில் ஒப்பாரி வைப்பதையே இஸ்லாம் தடுத்து ஹராமாக்கி இருக்கிறது. இது இயக்குனர் பாக்கருக்கும் அவரது இயக்கத்தில் உள்ளவர்களுக்கும் தெரியாதா? அவர்கள் நோக்கமே மக்களை ஏமாற்றுவதுதானே. பாக்கர் ஒப்பாரி வைத்து சொன்னது பூராவும் பொய் என்பதை பிறகு பார்ப்போம். அவரது கூற்றே அவரை பொய்படுத்துகிறது என்பதை முதலில் பார்ப்போம்.

அறிவுடையவர்கள் செயலா?

எந்த ஒரு பிரச்சனை என்றாலும் தட்டிக் கேட்கக் கூடிய வீரனாக யார் இருக்கிறார்களோ அவர்களிடம்தான் அறிவுள்ளவர்கள் போய் முறையிடுவார்கள். பாக்கர் கூற்றுப்படி எதிலும் தலையிடாதவராக இருந்த பி.ஜே. இடம் போய் பாக்கர் முறையிட்டதாக கூறுவதை நம்ப முடிகிறதா? நம்பினால் அவர் முறையிட்டது அவரது கூற்;றுப்படி அறிவுடையவர்கள் செயலா? பாபரி மஸ்ஜிதை இடிச்சிட்டாங்கன்னு போய் சொன்னது சரி. பாம் பிளாஷ்ட்லெ அரஷ்டு பண்ணிக்கிட்டு இருக்காங்கன்னு சொன்னது ஏன்? கோவை பாம் பிளாஸ்டை ஒட்டிய கைதை நியாயப்படுத்திய பாக்கர், பம்பாய் பாம் பிளாஸ்ட்டை ஒட்டி நடந்த கைதைப் பற்றி கவலைப்பட்டுள்ளது ஏன்? இந்த கேள்வியை நாம் கேட்கவில்லை. அவரது கூற்றில் இந்த கேள்வி தொக்கி நிற்கிறது. ஆக பாக்கரின் கூற்றே பாக்கரை பொய்படுத்துகிறது.

பாக்கரைப் பொய்படுத்தும் பி.ஜேயின் கூற்றுக்கள்.

பாபரிமஸ்ஜித் பிரச்சனைக்கு சரியான தீர்வு காணனும் என்ற எண்ணம் தனக்கு ஏற்பட்டதாக பி.ஜே. பல முறை சொல்லி உள்ளார். பாபரி மஸ்ஜித் பிரச்சனைகளை ஒட்டி நான் எழுதிய அரசியல் தலையங்கங்கள் அல்ஜன்னத்தின் சந்தாக்கள் கூடுவதற்கு காரணமாக இருந்தது என்று பலர் சாட்சியாக பி.ஜே. கூறி அது ஆடியோ ஆதாரத்துடன் உள்ளது. பி.ஜே.யின் இந்த கூற்றுக்கள் பாக்கரை பொய்ப்படுத்துகிறது.

இதுதான் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்தோ?

பாக்கர் சொன்னதுதான் உண்மை என்றால் பி.ஜே. பொய்யர். பி.ஜே. சொல்லாததை பாக்கர் சொல்லி இருந்தால் பாக்கர் பொய்யர். ஆக இருவரில் ஒருவர் பொய்யர். அந்த பொய்யரின் இப்போதைய இருப்பிடம் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத். பொய்யர்களின் கடைசி புகலிடம்தான் த.த.ஜ. ஓ. இதுதான் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்தோ? பி.ஜேயின் கூற்றுப்படி தவ்ஹீது ஜமாஅத்தைப் பொறுத்த வரை பாக்கர் நேற்று வந்த அது. நேற்று வந்த அதுவான பாக்கர் பி.ஜேயின் வீடியோ கேஸட்கள் விற்பனை ஆகும் நிலை ஏற்படாவிட்டால் தவ்ஹீது ஜமாஅத் மேடையே ஏறி இருக்க மாட்டார் என்பது தனி விஷயம். தவ்ஹீது ஜமாஅத்தில் வரலாறு இல்லாதவர் பாக்கர் என்று பாக்கரைப் பற்றி பாக்கரே அடையாளம் காட்டி உள்ளதையும் பாக்கர் கூற்றுக்கள் பொய் என்பதற்குரிய ஆதாரங்களைப் பார்ப்போம்.

பி.ஜே. பாபரி மஸ்ஜித் என்ற தலைப்பில் 1988 லேயே நாகர்கோயில் கலாச்சாரப்பள்ளியில் பேசி, ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் தந்தி போஸ்ட் கார்டுகள் அனுப்பக் கூறி உள்ளார். அல்ஜன்னத்திலும் எழுதி உள்ளார். அல்ஜன்னத் ஏட்டைப் புரட்டிப் பார்த்தால் பாக்கர் குட்டு உடையும் புரட்டும் வெளிப்படும். 1992 டிசம்பருக்குப் பிறகு பி.ஜே. எழுதிய அரசியல் கட்டுரைகள் இன்னுமா உறக்கம்| தலைப்பில் நூலாக 1994லேயே வந்து விட்டது. அந்த ஒரு நூலே பாக்கர் பொய்யர் என்பதை பறை சாற்றும் என்றாலும் இது 92க்குப் பிறகு உள்ளது என்று கூறி பாக்கரை உண்மையாளராக காட்ட முற்படலாம். எனவே 92 க்கு முன்பாக உள்ளதைப் பார்ப்போம்.

பி.ஜே.யின் அரசியல் ஆய்வுரைகள்.

1989 சட்டமன்ற தேர்தலில் பாளைத் தொகுதியில் ஒட்டக சின்னத்தில் போட்டி இட்ட காதர் மைதீன் அவர்களை ஆதரித்து 18.1.1989 ல் மேலப்பாளையம் ஜின்னா திடலில் தமிழக அரசியல் கட்சிகள் என்ற தலைப்பில் பேசினார். இதுபோல் பாராளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் சேர்த்து 1991ல் நடந்த தேர்தலில் கோவையில் போட்டியிட்ட முஸ்தபா கமால், மதுரையில் போட்டியிட்ட சீனி நைனா முஹம்மது ஆகியவர்களை ஆதரித்து தெருமுனை கூட்டங்களில் அரசியல் பேசினார். இந்தியாவை உலுக்கிய பிரச்சனையான மண்டல் கமிஷன் பற்றி 27.4.1991ல் மேலப்பாளையம் பசார் திடலில்; மண்டல் கமிஷன் யாருக்காக? என்ற தலைப்பில் பேசினார்.

பாவம் இந்நாட்டு மன்னர்கள், தமிழக முதல்வரின் கவனத்திற்கு, இதுவல்லவோ சமத்துவம், நெஞ்சு பொறுக்குதிலையே, முதல்வர் கவனிப்பாரா? ஒருசமுதாயம் அடகு வைக்கப்படுகிறது, ஏ தாழ்ந்த தமிழமே! இப்படி பல தலைப்புகளில் 1988லிருந்து அல்ஜன்னத்தில் பி.ஜே. எழுதி உள்ள அரசியல் தலையங்கங்கள் அரசியலில் பி.ஜே. சாணக்கியர் என்பதற்கு சாட்சியாக உள்ளன. பி.ஜேயின் வழியில் சொல்வது என்றால் தவ்ஹீது ஜமாஅத்துக்கு பாக்கர் நேற்று வந்த அதுதானே. நேற்று வந்த அதுவான பாக்கருக்கு இதுவெல்லாம் எப்படி தெரியும்? தன்னைப்போல் அதுவாகத்தான் பி.ஜேயுடன் இருப்பவர்கள் அனைவரும் இருப்பார்கள் என்று எண்ணிக் கொண்டு பேசி உள்ளார் போலும்.

உலகளாவிய அரசியல் ஆய்வுரைகள்.

நாட்டளவிலான அரசியல் மட்டும்தானா? 23.2.1991ல் மேலப்பாளையம் பசார் திடலில்; வளைகுடாப் போர் ஏன்? என்ற தலைப்பில் உலகளாவிய அரசியலும் பேசினார். அதே தலைப்பில் அல்ஜன்னத்திலும் எழுதினார். 1991ல் பன்னாட்டுப் படைகள் ஈராக்கை தாக்கியதைத்தான் பெரும்பாலானவர்கள் வளைகுடாப் போர் என்று விளங்கி உள்ளார்கள். அதற்கு முந்தைய ஈரான் ஈராக் போர் பற்றியும் வளைகுடாப் போர் என்ற தலைப்பில் புரட்சி மின்னலிலும் குமைனியின் இருபக்கங்கள் என்று அல் ஜன்னத்திலும் தலையங்கம் எழுதினார். இவ்வளவு விரிவான ஆதாரங்களை கூறிய பின்னரும் இதுவெல்லாம் பத்திரிக்கை ஆசிரியர் என்ற அடிப்படையிலானது. இதை வைத்து பி.ஜே.யை அரசியல்வாதி என்று கூற முடியுமா? என்று த.த.ஜ.க்கள் சமாளிக்கலாம்.

தேர்லில் போட்டியிடும் அரசியல் கட்சி மாநாட்டில் பி.ஜே.

1984 ஆம் ஆண்டு ஐயம்பேட்டை - சக்கராப்பள்ளி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இளைஞர் அணி மாநாடு நடந்தது. இன்றய மாநில தலைவர் பேராசிரியர் காதர் மைதீன் எம்.பி. அவர்கள் அன்றைய இளைஞர் அணியின் மாநில தலைவராக இருந்தார். அந்த மாநாட்டில் கட்சியின் மாநில தலைவர்களைவிட கூடுதல் நேரம் பேசியவர். கொடுத்த நேரத்தைவிட கூடுதல் நேரம் எடுத்து பேசியவர். எல்லோரை விடவும் கூடுதலாக கை தட்டல்களை பெற்றவர் யார் என்றால், தம்பி பி.ஜே.தான். (அப்பொழுது அவர் எல்லாருக்கும் தம்பியாகத்தான் இருந்தார்) ஏதோ மாநாடு என்பதால் கலந்து கொண்டு பேசி இருப்பார் என்றும் த.த.ஜ.க்கள் சமாளிக்க முற்படலாம்.

ஓட்டுக் கேட்டு தெருத் தெருவாய் அலைந்த பி.ஜே.

தாத்தாவாக ஆகிவிட்டாலும் என்றைக்கும் பாப்பா என்றழைக்கப்படும் தஞ்சை மாவட்ட மு.லீக் தலைவர் ஜமால் மைதீன் பாப்பா அவர்கள் சட்டமன்ற தேர்தலில் போட்டி இட்டார்கள். அப்போது முஸ்லிம் லீக்குக்காக தெருத் தெருவாய் அலைந்து ஓட்டுக் கேட்டு தேர்தல் பிரச்சாரம் செய்தவர் பி.ஜே. எந்த அளவுக்கு என்றால் வாய் வழியாக ரத்தம் ரத்தமாக கக்கும் அளவுக்கு பிரச்சாரம் செய்தார்.

எம்.ஜி.ஆர். உடல்நிலை பாதிக்கப்பட்ட பின், இந்ரா காந்தி சுடப்பட்ட நிலையிலான அந்த அனுதாப அலை தேர்தலில் மேலப்பாளையத்தை உள்ளடக்கிய பாளையங்கோட்டை சட்ட மன்ற தொகுதியில் வி.எஸ்.டி.ஷம்சுல் ஆலம், மேலப்பாளையம் மக்கள் நிறைந்து வாழும் திருவல்லிக்கேணி தொகுதியில் மறைந்த தலைவர் ஆ.கா.அ.அப்துஸ்ஸமது ஸாஹிப் ஆகிய இரண்டு பேர் மட்டுமே மு.லீக் சார்பில் வெற்றி பெற்றார்கள். பி.ஜே. தெருத் தெருவாhய் அலைந்து ஓட்டுக் கேட்ட பாப்பா தோற்றார். இதுவெல்லாம் எப்படித் தெரியும்? என்றால் அப்பொழுது நாமும் மு.லீக் இளைஞர் அணியில் இருந்தோம். தி.க.வினருடன் சேர்ந்து நாத்திகராக இருந்த பி.ஜே. ஆத்திகரானதும் அவர் சேர்ந்த முதல் அமைப்பே அரசியல் அமைப்புதான்.

நடிகர்களுக்குப் பின்னால் போகக் கூடியவர்கள் யாராக இருப்பார்கள்?

எனவே எனக்கு ஆன்மீகத்தை தவிர வேறு எதுவும் தெரியாது என்று பி.ஜே. சொல்லி இருந்தால் பி.ஜே. பொய்யர். பி.ஜே. சொல்லவில்லை என்றால், பி.ஜே. இப்படி சொன்னார் என்று சொல்லி பாக்கர் அழுதது நடிப்பு என்று நிரூபணம் ஆகிறது. எனவே பாக்கர் ஒப்பாரி வைத்து அழுதது கூடி இருந்தவர்களையும் சி.டி.களைப் பார்க்கும் ஒட்டு மொத்த சமுதாயத்தையும் ஏமாற்றத்தான் என்பதும் நிரூபணம் ஆகிவிட்டது. இனியும் இந்த நடிகர்களுக்குப் பின்னால் போகக் கூடியவர்கள் யாராக இருப்பார்கள்? அவர்களைப் பற்றி அவர்களே முடிவு செய்து கொள்ளட்டும்.

ரசிகர்கள் என்பதை உணராத ரசிகர்கள்.

நடிகர் நடிகைகளின் ரசிகர்களைவிட மோசமானவர்கள என்று முன்பு குறிப்பிட்டுள்ள வார்த்தை ஒரு வகையறாவின் மனதை நோகடித்து விட்டதாம். இதில் நாம் எந்த வகையறாவின் பெயரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. இந்த நிலையில் ஒரு வகையறாவின் மனதை புண் படுத்தி இருந்தால், அவர்கள்தான் அப்படி உள்ளார்கள் என்று அவர்களே சாட்சி கூறுகிறார்கள். இன்னும் சொல்லப் போனால் நடிகர் நடிகைகளின் ரசிகர்களாவது தங்களை ரசிகர்கள் என்று விளங்கி இருக்கிறார்கள். அவர்களை விட மோசமானவர்கள்தான் இந்த வகையறாக்கள். ஏனெனில் தாங்கள் ரசிகர்கள் என்பதை உணராது உள்ள ரசிகர்கள் இவர்கள். த.மு.மு.க.விலிருந்து விலகிய பி.ஜே. விடுத்த சவாலை ஏற்ற நாம் அப்பொழுது அவர் இருந்த அமைப்பு பெயரை குறிப்பிடாமல் பி.ஜே. வகையறாக்கள் என்று குறிப்பிட்டிருந்தோம். காரணம், அந்த பிரசுரத்தை பிரிண்ட் எடுத்து வெளியிடுவதற்கு முன் அங்கிருந்து வெளியேறி வேறு அமைப்புக்கு ஓடி விட்டால் பிரசுரத்தில் உள்ள இயக்கப் பெயரை திருத்த வேண்டி வரும். எனவே அவர் கண்டு பிடித்துள்ள வார்த்தைப்படி பி.ஜே. வகையறாக்கள் என்று குறிப்பிடுள்ளேன் என்று விளக்கி இருந்தோம்.

அவர்களாலேயே ஜீரணிக்க முடியவில்லை.

அதைப் பார்த்த அவரது வகையறாக்களுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. நாம் குறிப்பிட்டு எழுதியதுபோலவே, அடிக்கடி அமைப்புகளை விட்டு மாறி ஒடிக் கொண்டிருந்தவர் இப்பொழுது இருந்த அமைப்பை கலைத்து விட்டு த.த.ஜ. என்று புதிய அமைப்பு துவங்கி இருக்கிறார். ஒவ்வொரு ஊரிலும் கூட்டாக இருந்தவர்களின் கூட்டமைப்பை உடைத்தவர்கள் இப்பொழுதும் உடைத்துக் கொண்டுமிருப்பவர்கள் தாங்கள் இருக்கும் அமைப்புக்கு கூட்டமைப்பு என்ற பெயர் இருப்பது அவர்களாலேயே ஜீரணிக்க முடியவில்லை. எனவே புதிய அமைப்பு துவங்கி விட்டார்கள் என்று கூறப்படும் கருத்தும் பொருத்தமானதே.

புதிய அமைப்பு கண்டதற்கு காரணம்.

கூட்டமைப்பை விட்டு விலகி புதிய அமைப்பு கண்டதற்கு காரணம். கூட்டமைப்பு பெயரால் பி.ஜே. அவிழ்த்து விட்ட பொய்களில் இருந்து தப்பிக்கத்தான். பி.ஜே.யின் சுயநலத்திற்காகவும் வரட்டு கவுரவத்திற்காகவும் ஏதாவது ஒன்றை செய்து விடுவார். செய்து விட்டு, அவர் செய்த தப்பை நியாயப்படுத்தி மக்களை ஏமாற்ற பைலாவில் இருக்கிறது என்று கூறிவிடுவார். அதுபோல்தான் சமீபகாலமாக கூட்டமைப்பு பெயரால் கூத்தடித்து வந்த பி.ஜே. அவரது வரட்டு கவுரவத்திற்காக சுயநலத்திற்காக செய்த செயல்களை நியாயப்படுத்த கூட்டமைப்பு துவங்கும் போதே பைலாவில் இருக்கிறது. அந்த பைலாவுடன்தான் துவங்கிபட்டது என்று பல பொய்களை அவிழ்த்து விட்டார். இப்படி அவர் அவிழ்த்து விட்ட பொய்களை பட்டியலிட்டு அவரது வகையறாக்களிடம் கூறினோம்.

குறிப்பாக சமீபத்தில் வெளியிட்டுள்ள சி.டிகளில் உள்ளதையே பட்டியிலிட்டோம். சி.டிகளில் பி.ஜே. கூறி உள்ளவை துவக்கும் போது உள்ள பைலாவில் இருந்தால் கூட்டமைப்பை துவக்கும்போது துவக்க தலைவராகவும் ஒருங்கிணைப்பாளாரகவும் இருந்த எனது கையையழுத்து அந்த பைலாவில் இருக்கும். எனவே அதற்குரிய ஆதாரத்தை வெளியிடச் சொல்லுங்கள் என்றோம். அதற்கு ஏதாவது காரணம் கூறி சமாளிப்பு மன்னர் சமாளிக்கலாம். எனவே 2 ஆண்டு காலம் தலைவராக இருந்த ஹாமித்பக்ரி கையைழுத்து இருக்க வேண்டும். அதன் காப்பியை வாங்கி தாருங்கள் என்றேன். இதை அறிந்த பி.ஜே. தன்னை காத்து கொள்ள அந்த அமைப்பையே குளோஸ் பண்ணி விட்டார்.

உணர்வில் ஆதாரத்துடன் வெளியிடட்டும்.

எதையெல்லாம் துவக்கும் போதே உள்ள பைலாவில் இருக்கிறது என்று சமீபத்தில் அவர் வெளியிட்ட சி.டிகளில் கூறி உள்ளாரோ அதில் அவர் பொய்யர் இல்லை என்றால், பைலா காப்பியை அவர் கைப்பற்றி உள்ள உணர்வில் ஆதாரத்துடன் வெளியிடட்டும். குறிப்பாக மேலப்பாளையம் ஜமாஅத்தை தேர்தல் என்ற பெயரால் 2 கூறுகளாக ஆக்கி விட்டு தன்னை கிளைகளின் தேர்தல் அதிகாரியாக பைலாவில் கூறப்பட்டுள்ளது என்கிறாரே அதை வெளியிடட்டும்.

தவறுதான் என ஒப்புக் கொள்ளமாட்டார்.

குர்ஆன் ஹதீஸ்தான் தனது கொள்கை என்பார். குர்ஆன் ஹதீஸ்களுக்கு முரணாக அவர் செயல்பட்டிருந்தால் தனது செயலை தவறுதான் என ஒப்புக் கொள்ளமாட்டார். அமைப்பில் இப்படி ஒரு பாலிஸி வைத்திருக்கிறோம். இப்படி ஒரு முடிவு செய்திருக்கிறோம் என்று சமாளிப்பார். பீஸ் நிகழ்ச்சியில் போய் இஸ்லாமிய பிரச்சாரம் செய்ய மறுத்த, குர்ஆன் ஹதீஸுக்கு மாற்றமான அவரது இந்த செயலை மேற்கண்டவாறு கூறிதான் நியாயப்படுத்தினார்.

இவர்தான் கொள்கையில் சமரசம் செய்யாதவராம்?

பாளையங்கோட்டையில் பிறமத நண்பர்களுக்கான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. ஏற்பாடு செய்தவர்கள் குர்ஆன் ஹதீஸ்தான் மார்க்கம் என்ற கொள்கை உடையவர்கள். பீஸ் நிகழ்ச்சிக்கு தனது வரட்டுக் கவுரவத்தினாலும் முரட்டு பிடிவாதத்தினாலும் சுயநலத்திற்காகவும் போகாமல் கொள்கை சாயம் பூசியதுபோல், பாளையங்கோட்டை பிறமத நிகழ்ச்சிக்கு போகாத அவரால் அதற்கு கொள்கை சாயம் பூச முடியவில்லை. எனவே அதற்கு அவர் கூறிய காரணங்களில் ஒன்று. தான் மனக் கசப்புடன் இருக்கும் அபூ அப்துல்லாஹ், ரஹ்மதுல்லா இம்தாதி, கமாலுத்தீன் மதனி, ஹாமித் பக்ரி போன்றவர்கள் அந்த நிகழ்ச்சிக்கு வருவதால் வர முடியாது என்றார். பிற மதத்தவர்களுக்கு தன் மூலம் இஸ்லாத்தை சொல்ல முடியாமல் போனாலும் தனக்கு தனது வரட்டு கவுரவம்தான் முக்கியம் என்றிருக்கும் இவர்தான் கொள்கையில் சமரசம் செய்யாதவராம்?

பூ தினம் - மீலாது விழாவில் பி.ஜே.

1997 க்குப் பிறகு ஜாக் மேடையில் பேசாத பி.ஜே. 26.6.2000 திங்கள் அன்று தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு எனும் ஊரில்; உள்ள மெஹ்தவிகள் நடத்திய பூ தினத்தில்-மீலாதுவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். யார் அந்த மெஹ்தவிகள்? காதியானிகள் மிர்ஸா குலாமை எப்படி மஹ்தி என்று நம்புகிறார்களோ அதுபோல் மெஹ்தவிகளும் ஒருவரை மஹ்தி என்று ஈமான் கொண்டுள்ளார்கள். ரபியுல் அவ்வலில் நபி(ஸல்) பிறந்தநாளை கொண்டாடுவார்கள். ஆயிரக்கணக்கில் பிரியாணி ஆக்கிப் போடுவார்கள். அந்த நாளை மெஹ்தவி பெண்கள் பூதினம் என்பார்கள்.

அன்றைய தினம் சிறுமிகளிலிருந்து பெரிய பெண்கள் வரை எல்லாரும் பூக்களால் அலங்கரித்துக் கொள்வார்கள். அன்று மாலை நடக்கும் விழா மேடையும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். மேடையில் பேச்சாளர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே மேடையின் முன்னால் அமைக்கப்பட்டிருக்கும் இடத்தில் கோயில் சிலை சப்பரங்கள் மீது பூக்களைப் போர்த்துவது போல் அதன் மீது ஆண்களும் பெண்களுமாக வந்து பூக்களை போர்த்திவிட்டுப் போவார்கள். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பி.ஜே. பேசினார். அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே மேடையின் முன் மக்கள் பூக்களை போர்த்திய வண்ணம் இருந்தனர்.

நான் எங்கு போய் பேசினாலும் அவர்களிடம் உள்ள அடிப்படையான தவறுகளைத்தான் சுட்டிக்காட்டிப் பேசுவேன் என்று வீராப்பாக பேசிவரும் பி.ஜே. மெஹ்தவிகளிள் முக்கிய கொள்கையான அடிப்படை கோளாறான மஹ்தி(அலை) கொள்கை பற்றிய எந்த விமர்சனமும் செய்யவிi;லை. தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை மகன் பெயரால் சி.டிகளாக்கி அவரது பேச்சுக்களை விற்று வரும் பி.ஜே. மெஹ்தவிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை வெளியிடவில்லை. அதை மீடியா வேல்டுக்காக வீடியோ செய்த முஸ்லிம் டிரஸ்ட் பணியாளர் செல்வம் அவர்களிடம் அதை காப்பி பன்ண கொடுக்க வேண்டாம் என்று கூறி விட்டார். குற்றம் உள்ள நெஞ்சம் குறு குறுத்துள்ளது. பி.ஜே. கொள்கை அடிப்படையில் செயல்படலில்லை, மனோ இச்சையை பின்பற்றி சுயநல அடிப்படையில் செயல்பட்டு வருகிறார் என்பதற்குரிய ஆதாரங்களில் மெஹ்தவிகளின் மீலாது நிகழ்ச்சியில்; பங்கு கொண்டதும் ஒன்றாகும்.

அன்று பிரியம் காட்டியவர் இன்று வலிய செல்வது ஏன்?

பிரச்சாரத்திற்காக ஆர்வத்தோடு கொள்கைச் சகோதரர்கள் பி.ஜே.யை அழைத்தபோதெல்லாம் பிரியம் காட்டி தேதி தர மறுத்ததை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். இப்பொழுது கிராமம் கிராமமாக வலிய சென்று தனது பிரதிநிதிகளை முகாமிடச் செய்து இன்ன தேதியில் உங்களூரில் மாநாடு என்று சொல்லச் செய்கிறார். அன்று பிரியம் காட்டியவர் இன்று வலிய செல்வது ஏன்? அன்று கொள்கைச் சகோதரர்கள் அழைத்தது மக்களை கொள்கையின்பால் ஈர்க்க. இன்று இவர்கள் வலிய சென்று தேதி கொடுப்பது மக்களை தங்கள்பால் ஈர்க்க

பி.ஜே. சி.டி.க்கள் பற்றிய நமது நிலை.

பி.ஜே. வெளியிட்டுள்ள சி.டி.க்கள் பி.ஜே. அணியினருக்கே பாதகமாக உள்ளது. பி.ஜே. அணியினரை பி.ஜே. மிகவும் மட்டமானவர்களாக அடையாளம் காட்டி உள்ளார். அதில் பொய்களும் மார்க்க விரோத பேச்சுக்களும்தான் நிறைந்து உள்ளன என்று தெளிவாகவும் விரிவாகவும் ஆதாரத்துடனும் பல தலைப்புகளில் சுட்டிக் காட்டி விட்டோம். பி.ஜே. அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட அந்த வகையறாக்கள் பி.ஜே. சி.டி. மூலம் தெளிவு கிடைத்து விட்டது. பி.ஜே. சி.டி. தெளிவாக உள்ளது என்று திரும்பத் திரும்பக் கூறி கோயபல்ஸ் தத்துவத்தை நிலை நாட்டி வருகின்றனர். பி.ஜே. சி.டி. பற்றிய முதல் விமர்சன கடிதத்திலேயே அறிவுள்ளவர்களுக்கு இவ்வளவு போதும் என்று குறிப்பிட்டிருந்தோம். அதற்கு பிறகும்தான் ரசூல்மைதீன் அதிரை பாரூக் போன்றவர்கள் கேள்வி கேட்டிருந்தார்கள்.

இங்குள்ள பி.ஜே. வகையறாக்கள், பி.ஜே. சி.டி.களிலிருந்து ஒரு சில குறைகள்தான் சொல்ல முடிந்துள்ளது என்று கூறி உள்ளனர். அவர்களின் இந்த வார்த்தை என்னால் ஒரு சில குறைகள்தான் சொல்ல முடிந்துள்ளது. இன்னும் ஏராளமான குறைகள் பி.ஜே.யின் சி.டி.களில் உள்ளன என்ற கருத்தையும் பிரதிபலிக்கிறது. எனவே இன்னும் அதில் உள்ள குறைகளை தெளிவாக அடையாளம் காட்ட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளோம். நாம் அடையாளம் காட்டியது ஒரு சில குறைகளாக இருக்கலாம். அந்த சி.டிக்கள் முழுமையும் உண்மைக்கு புறம்பானது என்பதுதான் பி.ஜே. சி.டி.க்கள் பற்றிய நமது நிலை. பி.ஜே. தரப்பில் உள்ள பொய்களையும் அவர் வெளியிட்டுள்ள சி.டிகளில் உள்ள பொய்களையும் அடையாளம் காட்டியதால் அவர்கள் நம்மை ஒரு பக்க சார்பு உடையவராக சித்தரிக்கிறார்கள்.

நமது நிலை நடுநிலையே.

முக்கிய அறிவிப்பைப் பார்த்ததும் பி.ஜே.யின் முந்தைய வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு யூகித்து எழுதியதுதான் முக்கிய அறிவிப்பில் உள்ள முக்கிய வாசகம் என்ற விளக்க இதழ். அதில் நாம் மிக முக்கியமாக அடையாளம் காட்டியது ஒவ்வொரு அமைப்பை விட்டும் வெளியேறும் போது முதலில் ஒன்றைச் சொல்வார், பிறகு ஒன்றைச் சொல்வார் என்பதாகும். இந்த உண்மையை புதிய மக்கள் அறிய வெகு நாளாகும் என்று எண்ணினோம். அவ்வளவு கால அவசகாசத்தை கொடுக்காமல் மிகக் குறுகிய சில மணித் துளிகளிலேயே போன்களில் பேசிய பி.ஜே. அறிய வைத்து விட்டார். உண்மையான சமுதாய உணர்வு உள்ளவர்களை உணர வைத்து விட்டார்.

ஒன்று தவ்ஹீது அமைப்பில் இருங்கள் அல்லது த.மு.முக.வில் இருங்கள். உங்கள் தவ்ஹீது பிரச்சாரத்தால் த.மு.மு.க. வளர்ச்சி பாதிக்கிறது என்று ஜவாஹிருல்லாஹ் ஹைதர் அலி கூறியதால் பி.ஜே. ராஜினாமா செய்துவிட்டார் என்ற செய்தியை பி.ஜே. தரப்பினர் வேகமாக பரப்பினர். தவ்ஹீது கொள்கைப் பிரச்சனையால் விலகல் என்ற அந்த வதந்தி செய்தியாக நம்மை அடைந்ததும் ஜவாஹிருல்லாஹ் ஹைதர் அலி ஆகியவர்கள் மீது கடுங் கோபம் கொண்டோம். சோழபுரம் ஸல்லி நஸீர் வி. களத்தூர் தாஜுத்தீன், திருச்சி அப்துர்றஹ்மான், அப்துல்ரவூப் உட்பட இன்னும் பலநண்பர்களுடன் தொடர்பு கொண்டு, உணர்வு வந்ததும் செய்தியைப் பார்த்துவிட்டு ஒவ்வொருவரும் போன் போட்டு ஜவாஹிருல்லாஹ் ஹைதர் அலியை எப்படியெல்லாம் திட்ட முடியுமோ அப்படியெல்லாம் ஒவ்வொருவரும் திட்ட வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருதேன். உணர்வைப் படித்ததும்தான் நமது நிலையில் மாற்றம் ஏற்பட்டது.

முக்கிய அறிவிப்பில் உள்ள வாசக அமைப்பு, எழுத்து நடை முழுக்க முழுக்க பி.ஜே. உடையது என்று உணர்த்தியது. மேற்கண்ட காரணத்தைதான் சொல்ல வேண்டும் என்ற வார்த்தையும் பி.ஜே. குணத்தில் நின்றும் உள்ளது. அந்த பெரிய எழுத்தில் இடம் பெற்ற சிறிய அறிப்பில் 5 இடங்களில் தவ்ஹீது தவ்ஹீது என்ற வார்த்தை திரும்பத் திரும்ப இடம் பெற்றிருந்தது. அது அதில் உள்ள சதியை விளக்கியது. பி.ஜே. சாதாரணமான அறிஞர் அல்ல பேரறிஞர். உதாரணமாக ஒரு இடத்தில் சொன்னார் என்று எழுதினால் அடுத்து வரும் இடத்தில் அதே சொன்னார் என்ற வார்ததையை பயன்படுத்தமாட்டார். அடுத்து வரும் இடத்தில் கூறினார் - நவின்றார் - பகன்றார் என்றுதான் எழுதுவார். கூறியது கூறல் குற்றம் என்று கூறிய குஞ்ஞாலி மரைக்காயரிடம் பாடம் பயின்றவர் பி.ஜே. அதனால் அவரது எழுத்து மிகவும் எளிய நடையில் உயர்ந்த தரத்தில் இருக்கும். தவ்ஹீது தவ்ஹீது என்று திரும்ப திரும்ப இடம் பெறச் செய்துள்ளதே இதில் தவ்ஹீது பிரச்சனை இல்லை. தவ்ஹீது என்ற வார்த்தை திட்டமிட்டு திணிக்கப்பட்டுள்ளது என்பதை உணர்த்தியது. நாம் உணர்ந்த நியாயத்தை உணர்த்துவதுதான் நடுநிலை. எனவே நமது நிலை நடுநிலையே.

நாம் இதுவரை சுட்டிக் காட்டி உள்ள யாவும் மறுக்க முடியாத ஆதாரப்பூர்வமான உண்மைகள் என்பதால்தான் சவால் மன்னர் பி.ஜே. அவர்கள் மவுனியாக உள்ளார்கள். பெங்களூர் ஸைபுத்தீன் ரஷாதி போன்றவர்களை ஒரே மேடைக்கு வருமாறு விரட்டி விரட்டி அழைத்தவர்தான் பி.ஜே. அதுவும் பி.ஜே. ஒரு பொய்யர் என்ற தலைப்பிலும் விவாதிக்கத் தயார் என்று விரட்டிப் பிடித்தவர்தான் பி.ஜே. என்பதையும் நினைவுபடுத்திக் கொள்கிறேன்.

பி.ஜே. சி.டிக்கள் பற்றி நாம் விளக்கி எழுதி உள்ளதை நூலாக வெளியிடும்படியும் அதற்கு தேவையாகும் நிதியை தருவதாகவும் பலர் போன் செய்கின்றனர். நாம் யாரிடமும் நிதி பெற விரும்பவில்லை. நூலாக வெளியிட விரும்புகிறவர்கள் நீங்களே வெளியிட்டுக் கொள்ளுங்கள். பாக்கி உள்ள விளக்கங்களும் வந்த பின் முழுமையான நூலாக வெளியிடுங்கள். அதுவரை பொறுத்தருக்கவும் வஸ்ஸலாம்.
அன்புடன்:
கா.அ.முஹம்மது பழ்லுல் இலாஹி
06-07-2004

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.