ஹிஜாப் இல்லாமல் விளையாட முடியாது ..கொரியாவில் அரங்கை விட்டு வெளியேறிய கத்தார் மகளிர் அணி





hijab 2
 
கொரியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இன்று கத்தார் மற்றும் மொங்கோலிய பெண்கள் அணிகளுக்கு இடையிலான பாஸ்கெட் பால் போட்டி நடைபெற இருந்தது.

போட்டியில் கலந்துகொள்ளும் கத்தார் வீராங்கனைகள் ஹிஜாபுடன் மைதானாத்துக்குள் நுழைந்தார்கள்.

ஆனால் ஹிஜாப் அணிந்து விளையாட நடுவர் தடை விதித்தார்.

அப்போது நடுவர்களுக்கும் போட்டியாளர்களுக்குமிடையில் நடந்த நீண்ட நேர வாக்குவாதத்திற்கு பிறகும் நடுவர் ஹிஜாப் அணிந்து விளையாட அனுமதி மறுத்ததால் தாம் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துவிட்டு அரங்கைவிட்டு வெளியேறியது பெண்கள் அணி.

போட்டி நடத்தமாலேயே மொங்கோலிய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஒரு சர்வதேச போட்டியை விடவும் ஹிஜாபுமும், மார்க்கமும் முக்கியம் என கருதி வெளியேறிய கத்தார் வீராங்கனைகள் பாராட்டுக்குரியவர்கள்.

இவ்வுலக வெற்றியை விட இறைவனின் மறுமை வெற்றியே பெரிதானது. இவ்வுலக தோல்வி கால் செருப்பு கூட சமமில்லை.

இறைவனிடம் வெற்றிப்பெற்றது கத்தார் பெண்கள் அணியே என்று 200 கோடி முஸ்லிம்களின் சார்பாக அறிவிக்கிறோம்.




ஹிஜாபுக்கு தடையா, போட்டிகளில் இருந்து வெளியேறிய கத்தார் வீராங்கனைகள்
தென் கொரியாவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள வந்திருந்த கத்தார் நாட்டுப் பெண்கள் கூடைப்பந்து அணியினர் போட்டிகளின் போது இஸ்லாமிய முறைப்படி அணியும் ஹிஜாப் உடையை
  அகற்றுமாறு கோரப்பட்டதை அடுத்து போட்டிகளிலிருந்து விலகி சென்றுள்ளனர்
ஹிஜாப்  அங்கியை அவர்கள் மங்கோலியாவுக்கு எதிராக நடந்த போட்டியின்போது அகற்றுமாறு கோரப்பட்டனர். அவர்கள் அதைச் செய்ய மறுத்து இந்தப் போட்டியில் கலந்துகொள்ளாமல் விலகி சென்றுள்ளனர்.    உலகக் கூடைப்பந்து விதிகள் இதுபோன்ற தலை அங்கிகளை அணிவதற்கு  இந்த விதியைத் தளர்த்த வேண்டுமா என்பது குறித்து இந்த விளையாட்டை நிர்வகிக்கும் அமைப்பு பரிசீலித்துக்கொண்டிருக்கிறது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் விளையாடப்படும் மற்ற விளையாட்டுகளில் இந்த ஹிஜாப் அணிவது தடை செய்யப்படவில்லை.என்பது குறிப்பிடத்தக்கது.


ஆசிய விளையாட்டு கூடைப்பந்து முக்காடு அணிய அனுமதி மறுத்ததால் கத்தார் வீராங்கனைகள் விளையாட மறுப்பு
கருத்துகள்
0
வாசிக்கப்பட்டது
3733
பிரதி
Share
மாற்றம் செய்த நாள்:
வியாழன் , செப்டம்பர் 25,2014, 2:27 AM IST
பதிவு செய்த நாள்:
வியாழன் , செப்டம்பர் 25,2014, 2:27 AM IST
இன்சியோன்,
17–வது ஆசிய விளையாட்டு போட்டியில் நேற்று நடந்த பெண்கள் கூடைப்பந்து லீக் ஆட்டத்தில் கத்தார்–மங்கோலியா அணிகள் மோத இருந்தன. இந்த போட்டியில் பங்கேற்கும் முஸ்லிம் நாடான கத்தார் அணியின் வீராங்கனைகள் முகத்தில் முக்காடு அணிந்து களம் இறங்க வந்தனர். இது சர்வதேச கூடைப்பந்து சம்மேளன விதிமுறைக்கு முரணானது. முக்காடை அகற்றினால் மட்டுமே களம் இறங்க முடியும் என்று போட்டி அமைப்பு குழுவினர் உறுதியாக தெரிவித்தனர். இதற்கு கத்தார் அணி நிர்வாகிகள் ஆட்சேபனை தெரிவித்தனர். தங்கள் மத நம்பிக்கைக்கு மாறாக தங்களால் செயல்பட முடியாது. முக்காடு (ஹிஜாப்) அணிந்து களம் இறங்க தடை விதித்து இருப்பது நியாயமற்றது என்று வாதிட்டதுடன் களம் இறங்க மறுத்து விட்டனர். ஆனால் அதற்கு போட்டி அமைப்பு குழுவினர் செவிசாய்க்கவில்லை. இதனால் ஆடாமலேயே மங்கோலியா அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த சர்ச்சை குறித்து கத்தார் அணியின் நிர்வாகி முகமது கூறுகையில், ‘ஹிஜாப்புடன் விளையாடலாம் என்று எங்களுக்கு முதலில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது ஹிஜாப்புடன் விளையாட எங்களை ஏன் அனுமதிக்க மறுக்கிறார்கள் என்பது புரியவில்லை. ஹிஜாப் அணிவதால் எதிரணிக்கு ஆபத்து ஏற்படுத்தும் என்றோ அல்லது எதிர்மறையான தாக்கத்தையோ ஏற்படுத்தும் என்றோ நான் நினைக்கவில்லை. ஹிஜாப் தடை விவகாரத்தில் தங்கள் முடிவை போட்டி அமைப்பாளர்கள் மாற்றி கொள்ளாவிட்டால் நாங்கள் இந்த போட்டியில் விளையாடமாட்டோம் என்ற நிலையில் உறுதியாக இருக்கிறோம்’ என்றார்.

தென்கொரியாவின் இன்சியான் நகரில் 17–வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இதில் கத்தார் அணியும் பங்கேற்றுள்ளது.இந்நிலையில், கத்தார் மற்றும் மங்கோலிய பெண்கள் அணிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி நடைபெற இருந்த போட்டியில் கலந்துகொள்ளும் கத்தார் வீராங்கனைகள் ஹிஜாபுடன் மைதானாத்துக்குள் நுழைந்தார்கள்.

 ஆனால் சர்வதேச கூடைப்பந்து கழக (FIBA) விதிப்படி தலையில் முக்காடு (ஹிஜாப்) அணிந்து விளையாட நடுவர் தடை விதித்தார்.
இதையடுத்து போட்டியின் நடுவர்களுக்கும், கத்தார் அணியின் போட்டியாளர்களுக்குமிடையில் நீண்ட நேர வாக்குவாதம் நடந்தது.

விளையாட்டிற்காக தங்களின் மதநம்பிக்கையை இழக்க முடியாது என அவர்கள் தெரிவித்தனர்.
இருப்பினும் நடுவர் அனுமதி மறுத்ததன் காரணமாக தாம் போட்டியிலிருந்து விலகுவதாக கத்தார் அணி அறிவித்துவிட்டு அரங்கைவிட்டு வெளியேறியது.

கத்தார் அணி வெளியேறியதை அடுத்து போட்டி நடத்தாமலேயே மங்கோலிய அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.கூடைப்பந்து தவிர்த்து மற்ற போட்டிகளில் ஈரான் நாட்டு வீராங்கனைகள் ஹிஜாபுடன் பதக்கங்களை வென்றுள்ள நிலையில் கூடைப்பந்து கழக விதிப்படி ஹிஜாபுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
போட்டியில் கலந்துகொள்ளும் கட்டார் வீரங்கனைகள் ஹிஜாபுடன் மைதானாத்துக்குள் நுழைந்தார்கள். ஆனால் ஹிஜாப் அணிந்து விளையாட முடியாது என நடுவர் தடைவிதித்தார்.
அப்போது நடுவர்களுக்கும் போட்டியாளர்களுக்குமிடையில் நடந்த நீண்டநேர வாக்குவாதத்தின்பின்னரும் நடுவர் ஹிஜாப் அணிந்து விளையாட அனுமதி வழங்காததால், தாம் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துவிட்டு அரங்கைவிட்டு வெளியேரியது கட்டார் பெண்கள் அணி. போட்டி நடத்தமாலேயே மொங்கோலிய அணி வெற்றியீட்டியதாக தீர்மாணிக்கப்பட்டது.
ஒரு சர்வதேச போட்டியை விடவும் ஹிஜாபுமும் மார்க்கமும் முக்கியம் என கருதி கட்டார் வீரங்கனைகள் பாராட்டுக்குரியவர்கள்.

விளையாட்டை விட

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.