கடையநல்லூர் பேட்டையில் நடந்தது என்ன? சைபுல்லாஹ்வுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அன்புள்ளம் கொண்ட சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்........
   உங்களிடம் ஓர் உண்மையான நிகழ்வுகளை நான் பகிர்ந்து கொள்கிறேன்.இந்த நிகழ்வு நடந்து வெகு நாட்களாகிவிட்டதே இப்போது இது தேவைதானா என்ற கேள்வி தங்களுக்கு வரலாம். நடந்தது உண்மையான தகவல்களா?என்று கண்டறியவேண்டியதுள்ளதாலும் எனக்கு செய்திகள் வருவது உண்மையானதாக இருக்கிறதா என்று தெரிந்துகொள்வதற்கு சிலநாட்கள் கடந்துவிட்டது என்பதை தெரிவிக்கிறேன்.
 
            கடையநல்லூர் பேட்டையில் நடந்தது என்ன?
 
   தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திற்கு கடையநல்லூர் பேட்டைப் பகுதியில் ஒரு பள்ளிவேண்டும் என்று சுமார் இரண்டு வருடங்களுக்குப் பிறகு ஞானோதயம் ஏற்பட்டு அதற்காக அந்நூர் பள்ளிவாசல் என்று பெயரிட்டு இடம் வாங்குவதற்காக டவுண் கிளை,ரஹ்மானியாபுரம் கிளை,பேட்டைக்கிளை என்று மூன்று கிளைகளும் வசூலில் இறங்கினார்கள்.பேட்டையிலுள்ள ஹனபி ஜமாஅத்தார்களும் பள்ளிக்காக கேட்கிறார்கள் என்று இவர்கள் யார் என்றுகூட பாராமல் உதவி செய்தார்கள்.(இது த த ஜாவினரே தன்னுடைய சைட்டில் பதிவு செய்துள்ளார்கள்) சிலநேரங்களில் ததஜாவை சாராத யூசுப் பைஜியையும் அழைத்துக்கொண்டு சென்றார்கள்.
 
    ஒருநாள் நாங்கள் மஸ்ஜித் நூர் பள்ளிக்காக இடம் வாங்கிவிட்டோம்.அது இந்த இடம்தான் என்று சுட்டிக்காட்டியவுடன் பேட்டை சுன்னத் ஜமாஅத் சகோதரர்களுக்கு அதிர்ச்சிமேல் அதிர்ச்சி த த ஜாவினர் எங்கேயோ இடம் வாங்குவதாகத்தான் சொன்னார்கள் தற்போது நம்முடைய எல்லைக்குள் வாங்கி இருக்கிறார்களே அவர்களை அழைத்து நாம் பேசுவோம் என்ற முடிவுக்குவந்தார்கள்.
 
அதனடிப்படையில் ஹனபி ஜமாஅத் தலைவர் கோரி தலைமையில் செயலாளர் வழக்குறைஞர் முஹம்மது,பொருளாளர் திவான் மக்தூம் மற்றும் நிர்வாகிகளும், த த ஜாவைச் சார்ந்த அப்பாஸ்,நிம்பர் சுலைமான்,நிம்பர் ரஹ்மத்துல்லாஹ்,பிலால் மற்றும்சிலர் ஹனபி ஜமாஅத் பள்ளிவாசலில் பேச்சுவார்த்தை நடந்தது.
 
ஹனபி ஜமாஅத்தார்கள் இங்கு இந்த ஒரு பள்ளியைத்தவிர வேறு பள்ளி அமைக்கவில்லை நமக்குள் ஏன் இந்த பிரிவினை இங்கு ஒரே ஜமாஅத்துதான் இருக்கும்.நாம் ஒன்றுக்கு ஒன்றாய் இருக்கிறோம். வீட்டிற்கு வீடு குர்ஆன் வகுப்புகள் நடத்துகிறீர்கள்,தெருமுனைப் பிரச்சாரம் நடத்துகிறீர்கள் இதற்கெல்லாம் நாங்கள் என்ன தடையாகவா இருக்கிறோம்.அதனால்தான் நம் பகுதியின் ஒற்றுமையை குலைக்கவேண்டாம் என்று சொல்லுகிறோம்.
 
இதற்கு முன்னால் அக்ஸா ஜமாஅத் என்று ஒரு பிரச்சனை வந்தது நாம் ஓர் எல்கை அமைத்துவிட்டோம் அக்சாவைச்சார்ந்தவர்கள் நமது ஜமாஅத்தில் இல்லை,மதினாநகரில் ஒரு பள்ளியை கட்டினார்கள் அவர்களும் இன்றுவரை நம் ஹனபி ஜமாஅத்தைச் சார்ந்தவர்கள்தாம் நாம்தான் எங்களுக்கென்று ஒரு எல்கை வகுத்துள்ளோம் அந்த பள்ளியை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்றும் சொல்லிவிட்டோம் 
 
ஆகவே நீங்கள் இடம் வாங்கிவிட்டீர்கள் ஒன்றும் பிரச்சனை இல்லை அந்த இடம் வாங்கியதற்கான தொகையை எங்களிடம் தாருங்கள் ஒரு பத்தடி தள்ளி ரோட்டைத்தாண்டி நான்கு மனை தருகிறோம் அதில் கட்டிக்கொள்ளுங்கள் அதற்கான உதவியும் செய்கிறோம்.என்று சொன்னதுமட்டுமில்லாமல் அப்பாஸுக்கு சொந்தக்காரர் டி எஸ் எ பாதுஷா அவர்கள் நான் உங்களுக்கு மனை தருகிறேன் அதில் கட்டிக்கொள்ளுங்கள் அதுவும் நீங்கள் நினைப்பதைப்போன்று அக்ஸா பள்ளிக்கு அருகில்தான் உள்ளது என்று சொன்னார்.
 
உங்களுக்கு அது முடியவில்லைஎன்றால் இந்த பள்ளியிலேயே தொழுங்கள் அதுவும் எங்களுக்குப் பின்னால் தொழ முடியாதென்றால் நீங்கள்தனியாகத் தொழுங்கள் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.அதற்கு அப்பாஸ் நாங்கள் இந்த இமாமுக்குப்பின்னால் தொழமாட்டோம்,இந்தப்பள்ளியிலே தொழமாட்டோம் என் மனைவி என்குடும்பம் தொழவேண்டியதிருக்கிறது அவர்களுக்கென்றே நான் பள்ளிவாசல் கட்டணும்
 
யார் வந்தாலும் எங்களை எதுவும் செய்துவிடமுடியாது எதையும் நாங்கள் சமாளிப்போம் என்று அந்த ஜமாஅத்தைப் பார்த்து பெரிய மனிதர்களென்று கூட பார்க்காமல் வரம்பு மீறி பேசியதினால்தான் அந்த ஹனபி ஜமாஅத்தார்களும் வரம்பு மீறியுள்ளனர்.அதாவது உங்களுக்கு அக்ஸா பள்ளிவாசல் உள்ளதே அங்கு போய் தொழுங்கள் என்று சொன்னதும் அமைதியாகிவிட்டார்கள்.(இதை வைத்துதான் அக்ஸாவிலுல்லோர்களும் பேட்டை ஜமாஅத்துடன் சேர்ந்துவிட்டார்கள் என்று த த ஜாவினர் சொல்கிறார்கள்.) 
 
 
      த த ஜாவினர் இரவோடு இரவாக ஆஸ்பெட்டாஸ் போட்டு அந்த இடத்தில் ஒரு கட்டடத்தை எழுப்பினார்கள்.மறுநாள் காலையில் பேட்டை ஜமாஅத்தினர் தலைவர் தலைமையில் கேட்கப்போனபோது கல்லால் எரிந்து காயப்படுத்தினார்கள். பேட்டை ஹனபி ஜமாஅத்தினர் தங்களிடம் பயந்துதான் பேசுகிறார்கள் என்று த த ஜ தப்புக் கணக்கு போட்டத்தினால்தான் இந்த விளைவுகள். ஜமாஅத்தினர் நம்முடைய பிள்ளைகள்தான் என்று இறங்கி பேசியிருக்கிறார்கள்.
 
இதை தவறாக த த ஜ கணித்துவிட்டது என்பதை மீண்டும் தெளிவு படுத்துகிறேன்.அவர்கள் நிதானமாக நடந்ததினால்தான் இவ்வளவு பெரிய கூட்டம் வந்து நீங்கள்(த த ஜாவினர்) தப்பிவிட்டீர்கள் ஒரு சமயம் அவர்கள் பின்பக்கமாக வந்திருந்தால் உங்கள் கதி அதோகதிதான்.
 
     இதை அழகான முறையில் கொண்டுசென்று எதிரியின் பலம் பார்த்து நடந்து கொள்ள தெரியாதவர்களுக்கு பொறுப்பைக் கொடுத்து நாசம் பண்ணிவிட்டார்கள்.
 
த த ஜ தலைமை கூட முதல்வர் வீடு முற்றுகை என்று சொல்லிவிட்டு வாபஸ் வாங்கவில்லையா? அவர்கள் அந்த முற்றுகையைச் செய்தால் என்ன நடக்குமஎன்று தெரியும் உடனே அவர்கள் எதிரியின் பலம் தெரிந்துள்ளார்கள் பின்வாங்கிவிட்டார்கள்.
 
இதேப்போல்தான்  D.I.G. அலுவலகம் முற்றுகையை பின்வாங்கியது. காரணம் அரசு சும்மாவிடாது அப்புறம் நாம் அதோகதிதான் கட்சி நடத்தமுடியாது என்று தெரிந்ததினால் பின்வாங்கி இருக்கிறார்கள்.  
 
இந்த மாதிரி இடங்களிலெல்லாம் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இருந்தால் த த ஜ நன்றாக வளரும்.....ஏற்கனவே நான் குறிப்பிட்டதுபோல் அவர்களாகவே த த ஜாவை அழித்துவிடுவார்கள். அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.
 
     இந்தப் பிரச்சனை ஆர் டி ஒ உக்குப் போனபிறகுதான் ஒரு முடிவுக்கு வந்தது ஆர் டி ஓ வும் எப்படி தீர்ப்பளித்திருக்கிறார் என்றுபாருங்கள்.தொழுகை நடத்தக்கூடாது,ஒழு செய்வதற்கூட தண்ணீர் வைக்கக் கூடாது,மதப் பிரச்சாரம் செய்யக்கூடாது, சிறு குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கக்கூடாது ஐந்து நபர்கள் மட்டுமே உள்ளே செல்லவேண்டும் அதை ஒரு வீடாகத்தான் பயன்படுத்தவேண்டும் இப்படித்தான் எழுதப்பட்டுள்ளது பார்க்க அட்டாச் பைலை.
 
பின்பு எதற்காக நெல்லை  எஸ் பி ஆபீஸ் முற்றுகை,
 
சென்னை டி ஐ ஜி ஆபீஸ் முற்றுகை என்று சொல்லி பின்வாங்கியது.
 
கடையநல்லூரில் ஒரு வாத்தியாரை தீண்டாமை வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.அடைக்கப்பட்டவரை அவரின் குடும்பத்தார்கள் பெரும் முயற்சி எடுத்து ஜாமீனில் வெளியே கொண்டுவந்தார்கள். அவர் வெளியே வரும்போது காலை 11:30 மணி த த ஜாவினர் அவருக்காக ஆர்ப்பாட்டம் நடத்தியது மாலை 4:30 மணி நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதனால்தான் அவரை வெளியே விட்டார்கள் என்று போட்டார்களே ஒரு போடு.
 
தீண்டாமை வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் கைது என்பது அவரை ஜாமீனில் எடுப்பது சாதாரண விசயமில்லை அதற்காக அவர்கள் எவ்வளவு செலவு செய்திருப்பார்கள்.இது அவரின் குடும்பத்தார்களுக்கு நன்றாகத் தெரியும்.அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதனால்தான் ஜாமீனில்  வந்தாரென்றால்,கடையநல்லூர் பேட்டையில் நடந்த சாதாரண கேஸில் பிடிபட்ட ஆறு நபர்களுக்காக நெல்லை எஸ் பீ ஆபீஸ் முற்றுகையிட்டீர்களே ஏன் அவர்களை உடனே விடவில்லை அதற்குமேல் ஒருவாரம் சென்றபிறகுதான் ஜாமீனில் வந்தார்கள்.அன்று நீங்கள் செய்தது பில்டப்புதான் என்று சில நாட்களிலேயே அல்லாஹ் காட்டிவிட்டான்  பாருங்கள்.
 
     எதற்கெடுத்தாலும் வயிற்றெரிச்சலால் பொறுக்கமுடியாமல்   கடையநல்லூர் பேட்டையில் நடந்த சம்பவங்களுக்கு அக்ஸாகமிட்டி,சைபுல்லாஹ் தான் காரணம் என்று கூறுகிறார்கள்.இவர்கள் ஒரு ஆதாரத்தையாவது தரமுடிந்ததா? நாங்கள் தருகிறோம் த த ஜ வாங்கிய இடம் போறம்போக்குதான் அதில் அவர்கள் கட்டுமானம் கட்டக்கூடாது தடுத்து நிறுத்துங்கள் என்று நகராட்சிக்கு புகார்கொடுத்தவர்கள் யார்?என்பதை நகராட்சி ஆணையாளர் அவர்கள் காவல்துறைக்கு த த ஜ வாங்கிய இடத்திற்கு தடைவிதிக்கவேண்டும் என்று புகார் கொடுத்த மனுவை அட்டாச் பைலில் இணைத்துள்ளேன்.சகோதரர்களே அதில் அக்ஸாகமிட்டி,சைபுல்லாஹ் சம்பத்தப்பட்டிருக்கிரார்களா நீங்களே பாருங்கள். இப்படித்தான் எல்லாவிசயத்திலும் இவர்கள் குற்றவாளியாக்கப்படுகிரார்கள்.   
       
           சைபுல்லாஹ்வுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்
 
      கடையநல்லூர் பேட்டை பிரச்னைக்கு ஹனபி ஜமாத்திலுள்ளவர்கள் ஆதரவும் யோசனையும் தாருங்கள் என்று சைபுல்லாஹ் அன் கோஷ்டியிடம் கேட்டதற்கு பள்ளிவாசல் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது குற்றம்.என்று அவர்களை சந்திக்காமல் ஒதுங்கியது,மேலும் அக்ஸா பள்ளி ஜமாஅத்தை இதில் நீங்கள் தலையிடக்கூடாது என்று சொன்னது.இப்படியெல்லாம் செய்தது என்பது அல்லாஹ் ஒருவனுக்குத்தெரியும்.
 
ஆனால் அவர்கள் சும்மா விட்டார்களா?எதற்கெடுத்தாலும் சைபுல்லாஹ்வைத்தான் சொல்லுகிறார்கள். சைபுல்லாஹ்வே இப்போ நல்ல மாட்டிக்கொண்டு முளிங்க உங்களுக்கு இந்த சூடு பத்தாது இனிமேல் பாருங்கள் பீ ஜேக்கு கேன்சர் வந்தது சைபுல்லாஹ்வால்தான் வந்தது என்றும் சொல்லுவார்கள்.நீங்களும் பேட்டை ஜமாஅத்தோடு சேர்ந்திருந்தால் சில யோசனைகள் சொல்லியிருக்கலாம்.சூடுபோட்டாலும் திருந்தாத ஜென்மங்கள்தான் நீங்கள். உங்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்.
 
      பள்ளிவாசலை இடிக்கவந்து விட்டார்கள் என்று சொல்லக்கூடிய த த ஜ தெப்பக்குளத்திற்கு கிழக்கேயுள்ள முபாரக்பள்ளிவாசலால் அங்குள்ள மக்களுக்குக்காக தொழுகை மற்றும் சிறு குழந்தைகளுக்கு மதரஸா நடப்பதற்கு கட்டியிருந்த பள்ளியை இதே த த ஜாவினர்தான் இடித்தார்கள்.அல்லாஹ் அவர்களுக்கு அதற்குப் பரிகாரமாக பேட்டையில் புறம்போக்கு இடத்தில் கட்டிய கட்டடத்திற்கு இந்தபிரச்சனை வந்துள்ளது என்பது அவர்களுக்கு தெரியும்   
 
                                                   
        த த ஜாவினர் பேட்டை ஜமாஅத்தோடு இணக்கமாக போய் நிதானத்தை கடைபிடித்திருந்தால் இன்று தெருமுனைப் பிரச்சாரமும் நடந்துகொண்டிருக்கும்,
 
பயமில்லாமல் வீடுகளில் பெண்கள் பயான் நடத்திக்கொண்டிருக்கலாம்.
 
என்னவோ உலகளாவிய அதிகாரம் படைத்தவர்கள் போல் நடந்ததினால் அல்லாஹ் குப்புறவிழவைத்துள்ளான்.
 
மாநிலமே அதிகாரத்திற்கு பயந்துபோய் இருக்கிறது. நாங்கள் ஆர்பாட்டம் நடத்தினோம் ஏதாவது சேதம் விளைவித்தோமா? கைது பண்ணினால் எந்த எதிர்ப்பும் பண்ணாமல் போலீஸ் வேனில் ஏறிக்கொள்கிறோம்.(ஏறாமல் அடம்பிடித்துப் பாருங்களேன்.துவைத்து எடுத்துவிடுவார்கள் அதற்குப் பயந்துதான் எதிர்ப்பும் தெரிவிக்காமல் வண்டியில் ஏறுகிறீர்கள்)என்று சொல்லுவார்கள்.
 
இடம் பொருள் ஏவல் தெரியனும்.த த ஜாவினரே பரசுராமபுரம் தெருவில் உங்களின் அதிகாரத்தைக் காட்டுங்களேன்.ஏன் டவுண் கிளையிலிருந்து பேட்டை கிளைக்குச் செல்கிறீர்கள்.உங்கள் கிளையின் பரசுரமபுரம் தெருவுக்கு வாருங்கள்.மக்கட்டி முஹம்மதலியிடம் கேளுங்கள் அவர் வீட்டிற்குமுன்னால் ஒரு தெருமுனைப்பிரச்சாரம் செய்யுங்கள்.உங்களின் தைரியத்தைப் பார்ப்போம். தன்னை பெற்றெடுத்த தாய்,தந்தை இறந்தபிறகு அவர்களுக்காக ஜனாஸா தொழுகை நடத்த மக்கட்டி அலியால் முடியவில்லை இவர் கிளித்துவிடுவாராம்.அட போங்கடா நீங்களும் உங்கள் கொ(ல்)ள்கையும்..
 
                                           இப்படிக்கு  காதிர் கனி எம் ஐ எஸ் சீ
                                   munici (2).jpg
 rdo.jpg
 
 rdo 1.jpg
 
 
 
 
 
 
 

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.