ஆர்.எஸ்.எஸ். வழியில் லுஹா தலைமையிலான ரவுடிகள்.

         பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.        14-07-2006

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..  மேலப்பாளையம் மஸ்ஜிதுர்றஹ்மான் ஜம்இய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் மேலப்பாளையம் கிளைக்கு சொந்தமானது என்பதற்குரிய பத்திர ஆதாரத்தைப் பார்த்து தீர்ப்பளித்தார் நீதிபதி.


த.த.ஜ.வின் தேர்தல் கூட்டணியினருக்கு 2 இலட்சம் லஞ்சம் கொடுத்து நீதிபதியை மிரட்டச் செய்துள்ளார் லுஹா. மிரட்டப்பட்ட நீதிபதி தான் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பை ரத்து செய்தார்.


இதை பயன்படுத்தி மஸ்ஜிதுர்றஹ்மான் தங்களுக்கே சொந்தம் என வீம்பு பேசியுள்ளார்கள் லுஹா தலைமையிலான ரவுடிகள்.



ஆதாரங்களின் அடிப்படையில் நியாயமாக தீர்ப்பளித்த நீதிபதியையும் ஆர்.டி.ஓ.வையும், சட்ட ஒழுங்கை நிலை நாட்ட வந்த காவல் துறையையும்  லுஹா தலைமையிலான ரவுடிகள்  ஆர்.எஸ்.எஸ். வழியில் மிரட்டியுள்ளார்கள்.

பாபரி மஸ்ஜித் முஸ்லிம்களுக்கு சொந்தமானது. அதற்கு உரிய ஆதாரங்களான பத்திர ஆவணங்களும் உள்ளன. எனவே ஆவணங்கள் அடிப்படையில் தீர்ப்பு கோருகிறோம் முஸ்லிம்களாகிய நாம். 



இதை எதிர்க்கும் ஆர்.எஸ்.எஸ்.ஸால் வார்க்கப்பட்ட சங்பரிவார்கள் என்ன செய்கிறார்கள். நாங்கள் மெஜாரிட்டி. எனவே மெஜாரிட்டியினரின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும். எங்களுக்கு எதிராக பத்திர ஆதாரங்கள் அடிப்படையில் தீர்ப்பளித்தால் கலவரம் வரும். சட்ட ஒழுங்கு பிரச்சனை வரும் என்று மிரட்டி வருகிறார்கள். அதே பஜ்ரங்தள்கள் வழியில்தான்  லுஹா தலைமையிலான ரவுடிகளும் மிரட்டியுள்ளார்கள். 



மேலப்பாளையத்தில் ஜாக் மைனாரிட்டி. நாங்கள்தான் மெஜாரிட்டி. ஜாக்குக்கு ஆள் கிடையாது. பள்ளி ஜாக் பெயரில் இருந்தாலும் ஜாக்குக்கு சொந்தமானதாக இருந்தாலும் கொடுக்கக் கூடாது. கொடுத்தால் கொந்தளிப்போம். சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்துவோம். ஊரையே ரண களமாக்கி விடுவோம் என லுஹா பாண்டியன் மிரட்டியுள்ளார். 

.

அத்துடன் நின்றாரா லுஹா பாண்டியன். சிவ சேனா வழியில் வழிபாட்டுத் தளத்தில் ஆயுதங்களை பதுக்கி வைத்துள்ளார். வீச்சரிவாள், சொரு கத்தி (குத்தினால் குடலை உருவிக் கொண்டு வரக் கூடிய மேலே ரம்பம் வடிவம் உடைய மூவர் கொலைக்கு பி.ஜே. ஏற்பாட்டில் வாங்கப்பட்ட கத்தி) உருட்டுக் கட்டைகள் என ஆயுதங்களை மஸ்ஜிதுர்றஹ்மானில் வைத்துள்ளார். 


இதை நமது சகோதரர்கள் கண்டு பிடித்து விட்டார்கள். இருந்தாலும் போலீஸில் புகார் செய்யவில்லை. புகார் செய்தால் பள்ளிக்கு போலீஸை பூட்ஸ் காலுடன் நுழைய வைத்து விட்டார்கள் என ஒப்பாரி வைத்து திசை திருப்பி விடுவார் லுஹா பாண்டியன். எனவே பள்ளியை மீட்க களத்தில் நிற்கும் ஜாக் அமைப்பினருக்கு தகவல் கூறி எச்சரிக்கையாக இருக்கச் செய்து விட்டார்கள். 



ஜாக் அமைப்பினர் பள்ளியை மீட்க வந்தால் அவர்களை அடித்து கை கால்களை ஒடித்து விட வேண்டும். மீறினால் பள்ளிக்குள் நுழைந்தால் நம்மீது ஜிஹாது கடமையாகி விட்டது என்று வெறியேற்றி பேசி அடியாட்களை தயாராக வைத்துள்ளார் லுஹா.


300க்கும் மேற்பட்ட அடியாட்களுக்கு இரவு பகலாக சாப்பாடு ஆக்கிப் போட்டு மஸ்ஜிதுர் றஹ்மானுக்குள்ளோயே தங்க வைத்துள்ளார். பால்தாக்ரே வழியில் கூலிப்படைகளை ஏவி விட்டிருக்கும் லுஹாவிடமிருந்து ஜாக் பள்ளியை மீட்போம். இதிலிருந்து பின் வாங்க மாட்டோம்| என்று ஜாக் அமைப்பினர் உறுதியாக உள்ளனர். 

.

ஊரில் சட்ட ஒழுங்கை நிலை நாட்ட போலீஸ் 145 போட்டுள்ளது. மஸ்ஜிதுர்றஹ்மான் சம்பந்தமாக மீண்டும் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு ஏற்பாடு செய்துள்ளது. மேலப்பாளையம் ஜாக் அமைப்பினருக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அத்வானி, உமாபாரதி, பால்தாக்ரே, முரளி மனோகர் ஜோஷிகள்களைவிட மோசமாகப் போய் விட்ட லுஹாவிடமிருந்து இளைஞர்கள் காக்கப்பட அனைவரும் துஆச் செய்யவும். 

1996இல் லுஹா செய்த ஜிஹாது பிரச்சாரத்தால்தான் மேலப்பாளையத்தில் தொடர் கொலைகள் நடந்தன. இந்த வரலாற்றைத் தெரிந்தவர்கள் லுஹாவின் இன்றைய ஜிஹாது பேச்சை அறிந்து கவலையுடன் உள்ளார்கள். 

கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹி


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.