த.மு.மு.க. மாநில செயலாளர் மவுலவி ஜே.எஸ். ரிபாஈ அவர்களை கொலை செய்ய த.த.ஜ. முயற்சி, ரிபாஈ வீட்டுக்கு தீ வைத்தது த.த.ஜ

      பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.    15-07-2006
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..  மேலப்பாளையம் மஸ்ஜிதுர்றஹ்மான் ஜாக்குக்கு சொந்தமானது என்பதற்குரிய பத்திர ஆதாரத்துடன் அதை மீட்கும் முயற்சியில் ஜாக் சகோதரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். 

பள்ளித் திருடன்களான த.த.ஜ.வுக்கு ஆதரவாக அ.தி.மு.க. களத்தில் இறங்கி உள்ளது. எனவே தங்களின் நியாயமான கோரிக்கைக்கு த.மு.மு.க. சட்ட ரீதியான ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று ஜாக் சகோதரர்கள் கேட்டுக் கொண்டனர். 

அதற்கு இணங்கி த.மு.மு.க. மாநில செயலாளர் மவுலவி ஜே.எஸ். ரிபாஈ அவர்களும் நெல்லை மாவட்ட த.மு.மு.க. நிர்வாகிகளும் ஜாக்கின் பக்கம் உள்ள நியாயத்தை காவல் துறை, ஆர்.டி.ஓ. என எல்லா அரசு மையங்களிலும் கூறி உள்ளனர்.

தீ ஜுவாலை விட்டு எரிந்துள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த PJவின் தூண்டுதலால் த.மு.மு.க. மாநில செயலாளர் மவுலவி ஜே.எஸ். ரிபாஈ அவர்களை வீட்டோடு தீ வைத்து கொலை செய்ய த.த.ஜ. முயற்சி செய்துள்ளனர். 

ஜே.எஸ். ரிபாஈ அவர்களின் வீட்டுக்கு அடுத்து உள்ள அவரது தம்பி வீடு உள்ளது. அதில் உள்ள கார் பார்க்கிங்கில் சைக்கிலும் மோட்டார் பைக்கும் நின்றுள்ளது. கொலை வெறியர்கள் அதுதான் ரிபாஈ வீடு என நினைத்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர். 

சைக்கிள் டியூப் வெடித்து டப் என சப்தம் கேட்டுள்ளது. என்ன சப்தம் என கதவை திறந்து பார்த்தபொழுது தீ ஜுவாலை விட்டு எரிந்துள்ளது. 

12 வயது பையன் ஹுதைபாவை அடித்து நாடியை உடைத்தார்கள்.

உடனே தீயை அணைத்துள்ளனர். சைக்கிள் டியூப் வெடிக்காமல் மோட்டார் பைக் டேங் வெடித்து இருந்தால் சேதம் கடுமையாக இருந்திருக்கும். த.த.ஜ. திட்டப்படி உயிர் பலிகளும் ஏற்பட்டிருக்கும். த.த.ஜ.வினரின் சதி திட்டத்தை முறியடித்து த.மு.மு.க. மாநில செயலாளர் மவுலவி ஜே.எஸ். ரிபாஈ அவர்களையும் அவர்களது குடும்பத்தாரையும் காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். 

முன்பு ஜாக் செயலாளர் செய்யது அஹ்மது ஸலபி வீட்டில் தீ வைத்தார்கள். அப்பொழுதும் போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை. எனது தம்பியின் மகன் என்பதற்காக 12 வயது பையன் ஹுதைபாவை அடித்து நாடியை உடைத்தார்கள். அவர்கள் மீதும் போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த திமிரில்தான் த.த.ஜ.வினர் மவுலவி ஜே.எஸ். ரிபாஈ அவர்களையும் கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர். 
கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹி

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.