சம்சுத்தீன் காஸிமி அவர்களிடம் அதிரை நிஜாமுத்தீன் பேட்டி.

                    பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.             08-03-2006
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. முதல்வரை சந்திக்கச் சென்ற த.த.ஜ. தலைவர் பி.ஜெ. செய்துள்ள பித்தலாட்டங்களை மாங்கா மடையர்கள்தான் நம்ப வேண்டும்

முனாபிக்கை - காட்டி கொடுக்கும் கயவனை அடையாளம் கண்டு விட்ட காஸிமி| ஷசம்சுத்தீன் காஸிமி அவர்களிடம் பழுலுல் இலாஹி ஐ.எஸ்.டி. பேட்டி| ஆகிய தலைப்புகளில் அடையாளம் காட்டி இருந்தோம். உண்மை வெளிப்பட்டு விட்டதை பொறுக்க முடியாத பொய்யர்கள் எம்மை மிக கீழ் தரமாக  வசைபாடி விமர்சித்துள்ளார்கள். 

 நபி வழியில் நாம் செய்யும் ஜிஹாது.

அவர்கள் செய்துள்ள விமர்சனங்கள் யாவும் அவர்களுக்கே பொருந்தும் என்று மட்டும் கூறிக் கொள்கிறோம். பி.ஜெ.யின் கொலை மிரட்டல்களுக்கே அஞ்சாத நாம், இவர்களின் வசைபாடல்களுக்கு அஞ்சி ஒதுங்க மாட்டோம். உண்மையை வெளிக் கொண்டு வந்து இந்த சமுதாய துரோகிகளை, ஒட்டு மொத்த சமூகங்களின் விரோதிகளை அடையாளம் காட்டிக் கொண்டே இருப்போம். இந்த அக்கிரமக்காரர்களுக்கு முன் சத்தியத்தை எடுத்துச் சொல்லிக் கொண்டே இருப்போம். இதுதான் நபி வழியில் நாம் செய்யும் ஜிஹாது. 

பி.ஜெ. விட்ட உடான்ஸ்.

பி.ஜெ.யின் பச்சை சாயம் வெளுத்து வருவதால் நிமிடத்திற்கு ஒரு பொய் சொல்லி அவரது சிஷ்யர்களை ஏமாற்றி வருகிறார். இன்று விண் டி.வி.யில் சம்சுத்தீன் காஸிமி பேசப் போகிறார். பழுலுல் இலாஹியின் கூற்றை பொய் என நிரூபிக்கப் போகிறார் என பி.ஜெ. விட்ட உடான்ஸ் விட்டுள்ளார். பி.ஜெ. விட்ட இந்த உடான்ஸைத்தான் அவரது ரசிகர்களும் 2 நாளாக விட்டுக் கொண்டிருக்கின்றனர்.  

பணிய வைத்து மறுக்க வைத்து விட பி.ஜெ. தலை கீழாக நின்று வருகிறார்.

நமது வெளியீடுகளைப் பார்த்த சகோதரர்களில் பலர் சம்சுத்தீன் காஸிமி அவர்களை தொடர்பு கொண்டு போன் மூலம் பேசி உறுதி செய்திருக்கிறார்கள். நமது வெளியீட்டில் உள்ளவை உண்மைதான் என்பதற்கு சமுதாயம் சாட்சி ஆகி விட்டது. காஸிமியை மிரட்டி, மக்கா மஸ்ஜித் நிர்வாகம் மூலம் அவரை பணிய வைத்து மறுக்க வைத்து விட பி.ஜெ. தலை கீழாக நின்று வருகிறார். 

விடுபட்டுள்ள தகவல்களை தந்தார்கள்

எனவே சம்சுத்தீன் காசிமி அவர்களிடம் பேசியவர்கள் ஆதாரத்துடன் தகவல் தந்தால் அவற்றை வெளியிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டோம். தரப்படும் தகவல்களில் இதுவரை வெளியிட்டதில் விடுபட்டவைகளையே வெளியிடுவோம். பேசியவர்கள் ரிக்கார்டு செய்து இருக்க வேண்டும் என்பது நிபந்தனை. அப்படி பேசியவர்களில் ஒருவர்தான் அதிராம்பட்டிணம் நிஜாமுத்தீன் அவர்கள். சைட்டில் உள்ளதை பார்வையிட்ட அதிரை நிஜாமுத்தீன் அவர்கள் அதில் விடுபட்டுள்ள தகவல்களை தந்தார்கள் அவற்றைப் பார்ப்போம். 

12 கட்சியினர்  போய் சந்தித்தீர்களா?

அதிரை நிஜாமுத்தீன்:- 12 கட்சியினர்  போய் சந்தித்தீர்களா? 

காஸிமி:- 12 கட்சியினர்  சென்று சந்தித்ததாக கூறுவது பொய். இ.வி.க, தே.லீக், த.த.ஜ. ஆகிய கட்சிகளே வந்தன.

நன்றி சொல்லத்தான் போனீர்களா?

அதிரை நிஜாமுத்தீன்:- ஆணையம் அமைத்ததற்கு நன்றி சொல்லப் போனதாக சொல்கிறார்களே! நன்றி சொல்லத்தான் போனீர்களா? 

காஸிமி:- நன்றி சொல்ல போகவில்லை. போவதற்கு முன் ஆணையம் பற்றி எந்த தகவலும் தெரியாது. போன இடத்தில்தான் (ஏற்கனவே இருந்து காலாவதியாகி விட்ட) ஆணையம் (நீடிக்கப்பட்டுள்ளது) சம்பந்தமான பேப்பரை காட்டினார். 

அண்ணன் பி.ஜெ. வழியில் அண்ணனின் தங்க கை ஜெ. போட்டுள்ள நாடகம்.

ஜெயலலிதா யார்? எப்படிப்பட்டவர்? இவரால் பிற்படுத்தப்பட்டோருக்கு குறிப்பாக முஸ்லிம்களுக்கு சலுகை கிடைக்குமா? என்பது பற்றியெல்லாம் பெட்டி வாங்குவதற்கு முன் அதாவது 2004 ஏப்ரல் 10க்கு முன் பி.ஜெ. பேசியுள்ளதை கேட்டுப் பாருங்கள். 

பெட்டி வாங்கி விட்ட பி.ஜெ.யின் இன்றைய பேச்சுக்கு அன்றைய பேச்சிலேயே  பதில்கள் இருக்கிறது. இப்பொழுது நீட்டிக்கப்பட்டுள்ள இந்த கமிஷன் கூட அண்ணன் பி.ஜெ. வழியில் அண்ணனின் இன்றைய தங்(க)கை ஜெ. போட்டுள்ள நாடகம் என்று முதல் நாளே எழுதி விட்டோம். 

பி.ஜெ.யின் நரம்பில்லாத நாக்கு எப்படி வேண்டுமானாலும் பேசும்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் உள்ள அரசு அதிகாரம் இல்லாத காப்பந்து அரசுதான். இதை கடற்கரையில் சுண்டல் விற்கும் வியாபாரியும் அறிவான். இது கூட தெரியாதவர்கள்தான் இந்த விண் டி.வி. வியாபாரிகளா? அதிகாரம் இல்லாத அரசு நீட்டடித்த இந்த ஆணையத்தை தேர்தல் அதிகாரி நரேஷ; குப்தா ரத்து செய்து விட்டார். பெட்டி வாங்கிய பி.ஜெ.யின் நரம்பில்லாத நாக்கு எப்படி வேண்டுமானாலும் பேசும். அதிரை நிஜாமுத்தீன் அவர்களிடம் காஸிமி மேலும் கூறி உள்ளதை பாருங்கள். 

யாருடைய தர்ஜுமா என பிரச்சனை வரும்.

முதல்வரை சந்திக்கச் செல்லும் முன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வருக்கு என்ன அன்பளிப்பு கொடுக்கலாம் என்ற பேச்சு வந்தது. குர்ஆன் தர்ஜுமாவும் புகாரி மொழி பெயர்ப்பும் கொடுக்கலாம் என்று மற்றவர்கள் சொன்னார்கள். பி.ஜெ. அதுவெல்லாம் வேண்டாம். தர்ஜுமா கொடுக்கனும் என்றால் யாருடைய தர்ஜுமா என பிரச்சனை வரும். பாக்கர் தன்னுடையதை கொடுக்கனும் என்பார். எனவே எதுவும் வேண்டாம் என்றார். சரி என முடிவு செய்யப்பட்டது. ஆனால் சந்திக்கச் சென்ற இடத்தில் பி.ஜெ. தனது தர்ஜுமாவை கொடுத்து விட்டார்.

ஒரு லட்சமா? பத்து லட்சமா?

முதல்வரிடம் பேசிய பி.ஜெ. நாங்கள் குடந்தையில் நடத்திய பேரணியில் ஒரு லட்சம் முஸ்லிம்கள் கூடினார்கள் என்றார். உடனே நான் ஒரு லட்சமா? பத்து லட்சமா? என கேட்டேன். ஒரு லட்சம்தான் என்றார். முதல்வரிடம் ஒரு லட்சம் என்று சொன்ன பி.ஜெ. வெளியில் வந்து டி.வி.யில் பேட்டி கொடுக்கும்பொழுது 10 லட்சம் என்றார் என்றும் சம்சுத்தீன் காஸிமி அவர்கள் கூறி உள்ளார்கள். முதல்வரிடம் 10 லட்சம் என்று கூறி இருந்தால் அந்த அம்மா இவர் மூஞ்சை உடைத்து அனுப்பி இருக்கும். 

சமுதாய மக்கள் உஷாராக இருக்க வேண்டும்.

இவை யாவும் அதிரை நிஜாமுத்தீன் அவர்கள் மூலம் கிடைத்த தகவல்தானா என்பதை அறிய விரும்புவோர். 0091-4373242550 என்ற நம்பருக்கு தொடர்பு கொண்டு ஊர்ஜிதம் செய்து கொள்ளவும். 

நடந்தது என்ன என்பது பற்றி சம்சுத்தீன் காஸிமி அவர்கள் இன்று விண் டி.வி.யில் பேசப் போகிறார் என்று விளம்பரம் செய்தவர்கள் மூஞ்சியில் பி.ஜெ. கரி பூசி விட்டார். 

இருந்தாலும் கான் பாகவியை பேச விட்டு மக்களை ஏமாற்றி விடலாம் என்ற திட்டத்தில் உள்ளதாகவும் அறிகிறோம். அண்ணனுக்கு ரகசியமாக பெட்டி கொடுத்தால் வட்டிக் கடையை திறந்து வைத்து பேசவும் தயங்க மாட்டார். எனவே சமுதாய மக்கள் உஷாராக இருக்க வேண்டும் என தெரிவித்துக் கொள்கிறோம். 
வெளியீடு: கா.அ.முஹம்மது பழுலுல் இலாஹி, துபை 


Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.