நீங்கள் நியாயவான்கள் இறையச்சமுடைவர்கள் என்றால் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து வாருங்கள்.

                          பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.                     21-12-2005
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. தஞ்சாவூர் மாவட்டம் ஆவூரைச் சார்ந்த மன்சூர், சலீம் ஆகியவர்களுக்கு கா.அ. முஹம்மது பழுலுல் இலாஹி எழுதிக் கொள்வது bsaleem_storm2002@yahoo.com  என்ற முகவரியிலிருந்து வந்த உங்கள் இ.மெயிலை இன்று காலை கண்டேன். 

20 நாள் மருத்துவ லீவில் வந்த நான் பி.ஜே.யின் பகிரங்க அழைப்பை சந்திக்கத்தான் எனது பயணத்தை ஒத்தி வைத்தேன். அடுத்தடுத்து வந்த பணிகளால் பயணத்தை ஒத்தி வைத்த நான், இறுதியாக வரலாற்று சிறப்புமிக்க டிசம்பர் 10க்காக பயணத்தை ஒத்தி வைத்தேன். 

இப்பொழுது 25-12-2005 அன்று பயணம் செல்ல  உள்ளேன். இந்த நிலையில் உங்கள் மெயில் வந்துள்ளது. இலாஹியுடன் முபாஹலாவுக்குத் தயார் என்ற உங்கள் மெயிலைப் பார்த்ததும் சிரிப்புத்தான் வந்தது. இப்படிப்பட்ட அறிவாளிகள் உள்ளதால்தான் பி.ஜே.யால் த.த.ஜ. நடத்த முடிகிறது. 

ஒரு கொள்கைப் பிரச்சனையை ஒட்டிய பொதுவான முபாஹலா அழைப்பு என்றால் யாரும் வரலாம். இது பொதுவான முபாஹலா அழைப்பு அல்ல. இது குற்றச்சாட்டுக்களை ஒட்டி குறிப்பிட்டவர்களை நோக்கி விடுக்கப்பட்டுள்ள முபாஹலா அழைப்பு. எனவே இதில் சம்பந்தப்பட்டவர்கள்தான் முபாஹலா செய்ய வேண்டும். நான் யாருடனெல்லாம், எதற்கெல்லாம் முபாஹலா செய்யத் தயார் என்று முன்பு எழுதியுள்ளேனோ அவற்றை மீண்டும் உங்கள் பார்வைக்குத் தருகிறேன். 

இர்ஷாத் மாணவிகளை மாநாட்டுப் பணிகளுக்கு அனுப்ப மாட்டோம் என்றோம்.

1. 2000ல் நடந்த மதுரை மாநாட்டின் போது பிரச்சார மேடைக்கு வராமல் பெரும்பாலும் பெண்கள் நிறைந்த கண்காட்சிப் பகுதியிலேயே பி.ஜே. கிடந்தார். மதரஸா மாணவிகளையே சுற்றி சுற்றி வந்தார். மாணவிகளும் ஆலிம்ஸா ஆலிம்ஸா என அவரை சுற்றிச் சுற்றி வந்தார்கள். எல்லா மவுலவிகளும் வருந்தி பேசிக் கொண்டோம். இதனால்தான் சுலைமானும் நானும் இர்ஷாத் மாணவிகளை மாநாட்டுப் பணிகளுக்கு அனுப்ப மாட்டோம் என்றோம் என்று 2002ல் ஷம்சுல்லுஹா கூறினார். என்று நான் முபாஹலா பண்ணுவேன். இதை மறுத்து லுஹா முபாஹலா பண்ண வேண்டும்.

பொய்களை துணிந்து கூறி அசிங்கப்படுத்தி விடுவான்.

2. இனி பி.ஜே. முகத்தில் முழிக்கவே மாட்டேன், பி.ஜே. நான் என்ற அகம்பாவம் பிடித்தவன்,  எல்லோரையும் விமர்சிப்பான், அவன் செய்யும் தப்புத் தவறுகளுக்காக நியாய உணர்வு உள்ள நடு நிலையாளர்கள் யாராவது தட்டிக் கேட்டால் எதிரியாகி விடுவான், மீடியாக்கள் அவனிடம் உள்ளதால் பொய்களை துணிந்து கூறி அசிங்கப்படுத்தி விடுவான், இது அவனது இயல்பு, இதற்கு பயந்தே பெரும்பாலானவர்கள் அவன் விஷயத்தில் வாய் திறப்பதில்லை|| என்று ஷம்சுல் லுஹா கூறினார் என்று நான் முபாஹலா பண்ணுவேன். இதை மறுத்து லுஹா முபாஹலா பண்ண வேண்டும்.

தொழுகையை பேணாதவன் சுபுஹு தொழாதவன்.

3. தொழாதவனை இப்னு ஹஸ்ம் என்ற அறிஞர் காபிர் என்கிறார். அதை எடுத்து எழுதினால் பி.ஜே. அல் முபீனில் போடுவாரோ? திருப்பி அனுப்பி விடுவாரோ? தெரியவில்லை. இவன் (பி.ஜே) என்ன தப்ஸீர் எழுதுகிறான்? அமல்களில் பேணுதல் இல்லாதவன். தொழுகையை பேணாதவன் சுபுஹு தொழாதவன் அவனோடு இனி எந்த உறவும் கிடையாது, அவனை வைத்து ஊரில் கூட்டம் போட மாட்டேன், பக்கத்து ஊர்களுக்கு வந்தால் எடுத்துக் கட்டி போகமாட்டேன்|| என்று ஷம்சுல் லுஹா கூறினார் என்று நான் முபாஹலா பண்ணுவேன். இதை மறுத்து லுஹா முபாஹலா பண்ண வேண்டும். 

அதே பெண்கள் கல்லூரியில் பி.ஜே.யின் பினாமி

4. இஸ்லாமிய பெண்கள் கல்லூரியில் ஆசிரியராக பணி புரிந்த எம்.ஐ. சுலைமான் பெண்ணை -மாணவியை முத்தம் இட்டார்.  அதே பெண்கள் கல்லூரியில் பி.ஜே.யின் பினாமி காதல் லீலைகள் பண்ணினார். அந்த பெண்ணை இரண்டாந்தரமாக திருமணம் செய்ய இருந்தார். திருமணம் நடந்தால் கேவலம் என பி.ஜே. போன்றவர்கள் தடுத்து நிறுத்தி விட்டார்கள்|| என்று  லுஹா சொன்னார் என்று நான் முபாஹலா பண்ணுவேன். இதை மறுத்து லுஹா முபாஹலா பண்ண வேண்டும்.

பி.ஜே, தான் என்பதை நிலை நாட்ட மதுரையில் பெண்கள் கல்லூரி துவங்கச் செய்தார்.

5.காதல் விவகாரத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கவும் காதல் விவகாரத்தையொட்டி களஞ்சியம் பெண்கள் கல்லூரியுடன் ஏற்பட்ட மோதலினால்தான் பி.ஜே. விருப்பப்படி மதுரையில் பெண்கள் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. இருக்கிற கல்லூரிக்கே உஸ்தாதாக்கள் இல்லை தேவையில்லாமல் பி.ஜே, தான் என்பதை நிலை நாட்ட மதுரையில் பெண்கள் கல்லூரி துவங்கச் செய்தார்.|| என்று  லுஹா சொன்னார் என்று நான் முபாஹலா பண்ணுவேன். இதை மறுத்து லுஹா முபாஹலா பண்ண வேண்டும். 

அவனை வைத்து இனி மேலப்பாளையத்தில் கூட்டம் போடக் கூடாது.

6.அப்துர் றஹ்மான் பிர்தவ்ஸி ஒழுக்கமானவன் கிடையாது. சினிமா தியேட்டர்களில் போய் செக்ஸ் படம் பார்க்கிறான். எனவே அவனது பிரச்சார கேஸட்களை மக்களிடம் கொடுத்து அவனுக்கு விளம்பரம் சேர்க்காதீர்கள். அவனை வைத்து இனி மேலப்பாளையத்தில் கூட்டம் போடக் கூடாது. நீங்கள் ஊர் வந்தாலும் அவனுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்|| என்று  லுஹா சொன்னார் என்று நான் முபாஹலா பண்ணுவேன். இதை மறுத்து லுஹா முபாஹலா பண்ண வேண்டும்.

தாஇயாக இருப்பவர்கள் பள்ளிவாசலில் கள்ளக் கணக்கு எழுதலாமா?

7. அப்துர் றஹ்மான் பிர்தவ்ஸி இருக்கிறானே அவன் அயோக்கிய ராஸ்கல். தாஇ யாக இருப்பவர்கள் புகைப் பிடிக்கக் கூடாது|| என்று நான் கூட்டமைப்பு கூட்டத்தில் சொல்லியதற்காக, தாஇயாக இருப்பவர்கள் பள்ளிவாசலில் கள்ளக் கணக்கு எழுதலாமா|| என்று கேட்கிறான்|| என்று லுஹா சொல்லி உள்ளார் என்று நான் முபாஹலா பண்ணுவேன். இதை மறுத்து லுஹா முபாஹலா பண்ண வேண்டும்.

தலைமைப் பதவியை கேட்டு வாங்கியவர்.

8. எனது வீட்டில் இருந்த மஸ்ஜிதுர்றஹ்மான் பத்திரத்தை பொய் சொல்லி  திருட்டுத்தனமாக வாங்கிய பொய்யன் பத்திரத் திருடன் லுஹா. தலைமைப் பதவியை கேட்டு வாங்கியவர் லுஹா என்று நான் முபாஹலா பண்ணுவேன். இதை மறுத்து லுஹா முபாஹலா பண்ண வேண்டும்.

பொய் சாட்சி சொல்லி பொய் சத்தியம் செய்த பொய்யர்கள்.

9. ஜாக்குடைய கணக்கு கேட்டதற்கு கணக்குகளெல்லாம் என் மனைவி இடம் இருக்கு என்று கமாலுத்தீன் மதனி சொன்னார் என்று பொய்யான குற்றச்சாட்டைக் கூறிய பொய்யர் பி.ஜே. பொய்யர் பி.ஜே.யின் இந்த பொய்யை உண்மை போல் காட்ட அல்லாஹ்வுடைய பள்ளியான மேலப்பாளையம் மஸ்ஜிதுல்றஹ்மானில் வைத்து பொய் சாட்சி சொல்லி பொய் சத்தியம் செய்த பொய்யர்கள்  லுஹாவும் தென்காசி சுலைமானும். என்பதற்குரிய வீடியோ, ஆடியோக்களை போட்டுக் காட்டி முபாஹலா பண்ணுவேன். இதை மறுத்து பி.ஜே, தென்காசி சுலைமான், லுஹா மற்றும் அவரது வகையறாக்கள் முபாஹலா பண்ண வேண்டும்.

பொது மக்களுக்கு அடையாளம் காட்டியதால்.

10 இந்த பொய் சாட்சியத்தையும், பொய் சத்தியத்தையும் லுஹாவிடம் தட்டிக் கேட்டு லுஹாவின் பொய் சத்தியத்தை பொது மக்களுக்கு அடையாளம் காட்டியதால்தான் லுஹா பழுலுல் இலாஹியாகிய என்னை பகைத்தார் பி.ஜே.யுடன் சேர்ந்து பொய்க் குற்றச்சாட்டுக்கள் கூறினார்|| என்று நான் முபாஹலா பண்ணுவேன். இதை மறுத்து லுஹா முபாஹலா பண்ண வேண்டும்.

குற்றச்சாட்டுக் கூறியவர் பெயரையும் தொகையையும் அறிவிக்க வேண்டும்.

11. நான் டிசம்பர் ஆறுக்கு ஃபழுலுல் இலாஹியிடம் நிதியாகக் கொடுத்த பெருந்தொகை கிடைத்ததா? என்று  நம்மிடம் ஒரு சகோதரர் கேட்ட போது அதிர்ச்சி அடைந்தோம் என்று எழுதியவர் (துபைக்கு பேக்ஸ் பண்ணியவர்) பி.ஜே. அதை பிரிண்ட் போட்டு மேலப்பாளையத்தில் வினியோகித்தவர்கள் லுஹா வகையறாக்கள். இதில் இவர்கள் உண்மையாளர்கள் என்றால் பெருந்தொகை கொடுத்ததாக குற்றச்சாட்டுக் கூறியவர் பெயரையும் தொகையையும் அறிவிக்க வேண்டும். அதற்காக பி.ஜே.யும் அந்த நபரும் லுஹாவும் அவரது வகையறாக்களும் முபாஹலா பண்ண வேண்டும். இதில் இவர்கள் பொய்யர்கள் என்று நான் முபாஹலா பண்ணுவேன்.

பாகிஸ்தான் தூதரகம் சென்றார். ஐ.எஸ்.ஐ. உளவாளிகளை சந்தித்தார்.

12. 1992ல் இலங்கை சென்ற பி.ஜே. அங்குள்ள பாகிஸ்தான் தூதரகம் சென்றார். ஐ.எஸ்.ஐ. உளவாளிகளை சந்தித்தார் என்று லுஹா சொன்னார் என்று நான் முபாஹலா பண்ணுவேன். இதை மறுத்து லுஹா முபாஹலா பண்ண வேண்டும்.

ஒழுக்கக் கேடர்கள்தான் இவர்கள்.

13. அல் இர்ஷாத் பெண்கள் கல்லூரி முதல்வர் தென்காசி சுலைமான் பெண்கள் கல்லூரி மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசி இருக்கிறார். ஓழுக்கத்தைப் பற்றி பேசும், எழுதும் லுஹா கல்லூரியில் ஆசிரியை பணிக்கு வந்தவரைப் பற்றி வேறு ஒரு ஆணிடம் வர்ணித்துப் பேசி இருக்கிறார். இப்படிப்பட்ட ஒழுக்கக் கேடர்கள்தான் இவர்கள் என்று நான் முபாஹலா பண்ணுவேன். இதை மறுத்து தென்காசி சுலைமான், லுஹா முபாஹலா பண்ண வேண்டும்.

தங்கைக்கு எதிராக ஜிஹாது.

14. சிறைக்கு சென்று வந்தபின் ஜிஹாது கூடாது என பகிரங்கமாக பேசி வரும் லுஹா ஜீனத் என்ற பெண் மீது குற்றம் கூறினார். சிறைக்கு சென்று வந்தபின் அல் உம்மாவினரை அனுகிய லுஹா மார்க்க ரீதியாக தண்டனை வழங்கும்படி கூறினார். ஜீனத் என்ற அந்தப் பெண் யார் என்றால் த.த.ஜ. மாநில பேச்சாளர் அலி றஹ்மானியின் மனைவியும் லுஹாவின்  தங்கையும் ஆவார் என்று நான் முபாஹலா பண்ணுவேன். இதை மறுத்து லுஹா முபாஹலா பண்ண வேண்டும்.

பி.ஜே.யும் பி.ஜே.யுடனிருக்கும் டிரஸ்டிகளும் பொய்யர்களே.

15.முஸ்லிம் டிரஸ்டு, முஸ்லிம் மீடியா டிரஸ்டுகள் யாவும் த.மு.மு.க.வுக்காக உருவாக்கப்பட்டது. த.மு.மு.க.வுக்கு உரியதே. மோசடி வழியில் உரிமை கொண்டாடிக் கொண்டிருக்கும் பி.ஜே.யும் பி.ஜே.யுடனிருக்கும் டிரஸ்டிகளும் லுஹா போன்ற அனைவர்களும் இதில் பொய்யர்களே|| என்று நான் முபாஹலா பண்ணுவேன். இதை மறுத்து அவர்கள் அனைவரும் முபாஹலா பண்ண வேண்டும்.

மொட்டை மெயில்கள் அனுப்பக் கூடியவர்கள்.

16. ஏகத்துவம் ஆசிரியர் குழுவில் உள்ள பி.ஜே, லுஹா, செய்யது இபுறாஹீம் ஆகியவர்களும் மற்றும் அவர்களுடனுள்ளவர்களும் மொட்டைக் கடித பேர்வழிகள், மொட்டை மெயில்கள் அனுப்பக் கூடியவர்கள் என்று நான் முபாஹலா பண்ணுவேன். இதை மறுத்தும் அவர்களுக்கும்  மொட்டைக் கடிதங்களுக்கும் மொட்டை மெயில்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அவர்கள் முபாஹலா பண்ண வேண்டும்.  

துபை மக்களை ஏமாற்றிய பிராடு.

17. 17-04-2002.தேதி அபுதாபி அப்துர்ரவூபுக்கு எழுதிய கடிதத்தில் 26-03-2002 என்று 20 நாள் முன் தேதி போட்டு அனுப்பிய உத்தம பேர்வழி பி.ஜே! இப்படிப்பட்ட உத்தமரும் மொட்டைக் கடித மன்னருமான பி.ஜே. லுஹாவைக் காப்பாற்ற 2002ல் ஒரு கடிதம் எழுதினார். அதை 2001லேயே எழுதியதுபோல் காட்ட ஓராண்டுக்கு முந்தைய பொய்யான தேதி போட்டு செட்டப் கடிதம் கொடுத்தார். இப்படி செட்டப் கடிதம் கொடுத்த கள்ளக் கடித பேர்வழிதான் பி.ஜே.  செட்டப் பேர்வழி பி.ஜே.யின் இந்தக் கள்ளக் கடிதக் காப்பியை  துபைக்கு அனுப்பி துபை மக்களை ஏமாற்றிய பிராடு பேர்வழிதான் லுஹா. என்று நான் முபாஹலா பண்ணுவேன். இதை மறுத்து பி.ஜே, லுஹா மற்றும் அவர்களது வகையறா முபாஹலா பண்ண வேண்டும்.

கள்ளக் கணக்கு எழுதிடும் யோசனையைச் சொன்ன கள்ள கணக்கர்.

18. மஸ்ஜிதுர் றஹ்மான் கணக்கில் லுஹா காணவில்லை என்று கூறிய ஒண்ணரை லட்சம் ரூபாய்க்கு சம்பளத்தின் பெயரால் கள்ளக் கணக்கு எழுதிடும் யோசனையைச் சொன்ன கள்ள கணக்கர் பி.ஜே. மஸ்ஜிதுர் றஹ்மான் கணக்கை லுஹா விரும்பியபடியெல்லாம் அடித்து திருத்தி கள்ளக் கணக்கு எழுதிய கள்ள எழுத்தாளர்தான் ஏகத்துவம் துணை ஆசிரியர் செய்யது இபுறாஹீம் என்று நான் முபாஹலா பண்ணுவேன். இதை மறுத்து பி.ஜே, லுஹா மற்றும் செய்யது இபுறாஹீம் முபாஹலா பண்ண வேண்டும்.

பி.ஜே. இப்பொழுது உண்டு பண்ணி கூறும் காரணம் பொய்யே.

19. இன்று தவ்ஹீதின் பெயரால் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் பி.ஜே. 1994லேயே இனி நான் தவ்ஹீது பிரச்சாரம் செய்ய மாட்டேன் என்றார். ராஜகோபாலன் கொலைக்குப் பிறகு தொடர்ந்து ஜிஹாது செய்யப் போகிறேன் இனி தவ்ஹீது பிரச்சாரம் செய்ய மாட்டேன் என்று பி.ஜே. கூறினார். அதனால்தான் பி.ஜே.யிடம் கமாலுத்தீன் மதனி ராஜினாமா கடிதத்தைப் பெற்றார். ஜாக்குக்கு ராஜினாமா கடிதம் கொடுத்தது சம்பந்தமாக பி.ஜே. இப்பொழுது உண்டு பண்ணி கூறும் காரணம் பொய்யே என்பதற்குரிய ஆதார ஆடியோவை போட்டுக் காட்டி நான் முபாஹலா பண்ணுவேன். இதை மறுத்து பி.ஜே. முபாஹலா பண்ண வேண்டும்.

பி.ஜே. செய்யும் ஜிஹாதுக்காக அரபிகளிடம் உதவி கேட்டு லுஹா கடிதம் அனுப்பினார்.

20. வெளிநாட்டு நிறுவனங்களிடமோ வெளிநாட்டவர்களிடமோ பண உதவி வாங்கக் கூடாது என்ற கொள்கை உடையவர்போல் தன்னை அடிக்கடி விளம்பரப்படுத்திக் கொள்ளுபவர் பி.ஜே. அந்த பி.ஜே.யின் விருப்பப்படி அஹ்மது அல் அஹ்மது, சுலைமான் குனைனி ஆகிய அரபிகளிடம் பி.ஜே. செய்யும் ஜிஹாதுக்காக உதவி கேட்டு லுஹா கடிதம் அனுப்பினார் என்று நான் முபாஹலா பண்ணுவேன். இதை மறுத்து பி.ஜே. லுஹா முபாஹலா பண்ண வேண்டும்.

பிரச்சாரம் செய்ததற்காக 50 ஆயிரம் ரூபாய் வாங்கியவர்.

21. அந்நஜாத்தில் ஆசிரியர் வேலை செய்ததற்கு சம்பளம் வாங்கியுள்ள பி.ஜே. வாங்கவில்லை என்று பொய் சொல்லியுள்ளார். முஸ்லிம் டிரஸ்ட்டில் பிரச்சாரம் செய்ததற்காக 50 ஆயிரம் ரூபாய் வாங்கியவர் பி.ஜே. மேலப்பாளையம் பொதுக் கூட்டங்களில் பேசி விட்டு 500(ஐநூறு) முதல்  10000 (பத்தாயிரம்) ரூபாய் வரை வாங்கியவர் பி.ஜே. இப்படி ரகசிய கூலி வாங்கி விட்டு பணமே வாங்கவில்லை என மேடை தோறும் பொய் சொல்லும் பொய்யர்தான் பி.ஜே. என்று நான் முபாஹலா பண்ணுவேன். இதை மறுத்து பி.ஜே. லுஹா முபாஹலா பண்ண வேண்டும்.
மாநபி மண வாழ்க்கையும் மாற்றாரின் குற்றச் சாட்டுக்களும் என்ற தலைப்பில் பி.ஜே. பேசியதற்காக பத்தாயிரம் ரூபாய் பி.ஜே. வாங்கிதற்காக லுஹா எனது கணக்கில் எழுதியுள்ள பற்று 10,000


திரும்பத் திரும்ப திரும்பத் திரும்ப பொய் சொன்ன மெகா பொய்யர்.

22. 10-4-2004 அன்று எல்லாரும் கையெழுத்திடாத நிலையில் எல்லாரும் கையெழுதிட்டுள்ளது போல் முக்கிய அறிவிப்பு வெளியிட்ட பொய்யர் பி.ஜே. நான் கவனமாக எழுதி சனிக்கிழமை மஃரிபில் கொடுத்தேன். எல்லாரும் கையெழுத்திட்டு திங்கள் கிழமை மஃரிபில்தான் தந்தார்கள். 48 மணி நேரம் கால அவகாசம் எடுத்து எல்லாரும் கையெழுத்திட்டு தந்துள்ளார்கள் என்று அழுத்தம் திருத்தமாகவும் திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப பொய் சொன்ன மெகா பொய்யர் பி.ஜே. என்று நான் முபாஹலா பண்ணுவேன். இதை மறுத்து பி.ஜே. முபாஹலா பண்ண வேண்டும்.

வெளி நாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் கீழ்தரமான தொழில்.

23. பணத்திற்காக ஒருத்தன் மனைவியை  இன்னொருத்தன் மனைவியாக செட் பண்ணி அந்நிய இருவரை கணவன் மனைவியாக  வெளி நாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் கீழ்தரமான தொழில் செய்பவனை பி.ஜே. தன் அணியில்  சேர்த்துக் கொண்டார். அவரை தவ்ஹீதுக்காக அள்ளிக் கொடுத்த வள்ளல் என பி.ஜே. வர்ணித்தார் என்று நான் முபாஹலா பண்ணுவேன். இதை மறுத்து பி.ஜே. முபாஹலா பண்ண வேண்டும்.

கொலை பத்வா

24. யாரையெல்லாம் கொலை செய்து விடும்படி பி.ஜே. கூறினார். யாருக்கெல்லாம் பத்வா கொடுத்துள்ளார் என்பதை லுஹா மூலம் நான் அறிந்ததைக் கூறி முபாஹலா பண்ணுவேன். பி.ஜே. இதுவரை யாரையும் கொன்றுவிடும்படி கொலை பத்வா கொடுத்ததே இல்லை என்று லுஹாவும் லுஹாவுடன் இருப்பவர்களும் ஏகத்துவத்தில் எழுத்தாளர்களாக இருப்பவர்களும் முபாஹலா பண்ண வேண்டும்.

 கொலைகளுக்கு மூல காரணமானவர் ஜிஹாதை தூண்டி பேசியவர்.

25. குண்டு வெடிப்பு வழக்குகளால் சிறையில் உள்ளவர்கள்; அப்பாவிகள் (அதாவது அம்புகள்) மூலகாரணமானவர் பி.ஜே.தான். என முபாஹலா பண்ணுவேன். அதற்கு ஆதாரமாக பி.ஜே.யின் வாக்கு மூலத்தையே போட்டுக் காட்டுவேன். அதுபோல் மேலப்பாளையத்தில் நடந்த தொடர் கொலைகளுக்கு மூல காரணமானவர் ஜிஹாதை தூண்டி பேசியவர் லுஹாதான். தன் நிழலைக்  கண்டு பயப்படக் கூடிய லுஹாவின் தம்பி பூலி காஜா இந்திய ராணும் என்ன செய்யும் இந்திய ராணும்  நம் முன் நூலாம் பூச்சிகள் என்று வெறியூட்டி ஜிஹாதை தூண்டி பேசினார் என முபாஹலா பண்ணுவேன்.  இதை மறுத்து பி.ஜே, லுஹா, காஜா மற்றும் அவர்களது அணியில் உள்ள தலைவர்கள் முபாஹலா பண்ண வேண்டும். 

தீலிரவாதிகள் என அறிவிக்கப்பட்டவர்களுக்கு பி.ஜே. பணம் கொடுக்கச் சொன்னார்.

26. தேடப்படக் கூடிய நிலையில் அரசாங்கத்தால் தீவிரவாதிகள் என அறிவிக்கப்பட்டவர்களுக்கு தங்க வீடு ஏற்பாடு செய்து கொடுத்து தேவைக்கு பணமும் கொடுத்து வந்தவர்தான் இன்று போலீஸ் தரப்பு சாட்சியாக உள்ள பி.ஜே. என்று முபாஹலா பண்ணுவேன். அரசாங்கத்தால் தீலிரவாதிகள் என அறிவிக்கப்பட்டவர்களுக்கு பி.ஜே. பணம் கொடுக்கச் சொன்னார். அவர்கள் மஸ்ஜிதுர் றஹ்மானுக்கு வந்தார்கள், தங்கினார்கள் என்று லுஹா சொன்ன தகவல்களைக் கூறி முபாஹலா பண்ணுவேன். இதை மறுத்து பி.ஜே, லுஹா மற்றும் அவர்களது அணியில் உள்ள தலைவர்கள் முபாஹலா பண்ண வேண்டும். 

அபுஅப்துல்லாஹ்வுக்கும் பி.ஜே.க்கு கருத்து மோதல்.

27. அந்நஜாத்தில் இருந்து விலக அபுஅப்துல்லாஹ் செய்துள்ள மேசாசடியே காரணம் என போலீஸில்  பி.ஜே.  கூறியுள்ளது பொய். பத்திரிக்கை துவங்கும் முன்பே அபுஅப்துல்லாஹ்வுக்கும் பி.ஜே.க்கு கருத்து மோதல் ஏற்பட்டு விட்டது என்று நான் முபாஹலா பண்ணுவேன். இதை மறுத்து பி.ஜே. முபாஹலா பண்ண வேண்டும்.

தவ்ஹீது பிரச்சாரத்திலிருந்து ஒதுங்கி இருந்தார் லுஹா.

28. ஆலிம்களுக்கு 1000 ரூபாய் என சம்பளம் பேசி சுன்னத் ஜமாஅத் மதரஸாவில் இருந்து விலகி அந்நஜாத்துக்கு பி.ஜே. லுஹா போன்றவர்கள் வேலைக்கு  வந்தார்கள். அவர்களில் லுஹா போன்றவர்கள் பசை ஒட்டத்தான் லாயக்கு என்று அந்நஜாத் மேனேஜர் சம்பளம் 750 ரூபாய்தான்  என்றார். அதனால் லுஹா அந்நஜாத்திலிருந்து விலகி 1000 ரூபாய் சம்பளத்திற்கு சுன்னத் ஜமாஅத் பள்ளியில் இமாமாகப் போய்ச் சேர்ந்தார். 1980லிருந்தே கொள்கைவாதியாக இருந்து வருவதாக லுஹா கூறி வருவது விளம்பர நோக்கமே. 1987 நஜாத் வாசகர் வட்ட மாநாடு முதல் 1990 நாகூர் மாநாடு வரை எந்த மாநாட்டிற்கும் பிரச்சாரம் செய்ய லுஹா வரவில்லை. தான் வேலை செய்த சுன்னத் ஜமாஅத் பள்ளிக்கு பயந்தே தவ்ஹீது பிரச்சாரத்திலிருந்து ஒதுங்கி இருந்தார் லுஹா என்று நான் முபாஹலா பண்ணுவேன். இதை மறுத்து பி.ஜே. முபாஹலா பண்ண வேண்டும்.

அழைத்து வரும் பொறுப்பை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள்.

இவை யாவும் புதிதாக உங்களுக்காக எழுதியவை அல்ல. ஏற்கனவே நாம் வெளியிட்டுள்ள வெளியீடுகளிலிருந்துதான் முடிந்தவரை எடுத்து எழுதியுள்ளோம். சந்தேகமிருந்தால்  சைட்டில் நமது முந்தைய வெளியீடுகள் உள்ளன பார்த்துக் கொள்ளவும். விடுபட்டுள்ளவற்றை சேர்த்துக் கொள்ளவும். 

சுருக்கமாகச் சொல்வதென்றால் 1986 முதல் 2005 வரை பி.ஜே, லுஹா கோஷ்டியினர் பிறர் மீது கூறி வந்துள்ள குற்றச்சாட்டுக்களில் நாம் பொய் என்று கூறியுள்ள அனைத்துக்கும் முபாஹலா பண்ண நான் தயார். 

பி.ஜே. சவாலை ஏற்று முபாஹலா செய்ய மனைவி மக்களுடன் 14.9.2005 அன்று  மேலப்பாளையம் பசார் திடலுக்கு வருகிறேன் என்றேன். பசார் திடல் கூட்டத்தையே பி.ஜே. ரத்து செய்து விட்டார். 

14.9.2005 சம்பந்தமான முழு விபரங்களும் டு ஸல்லி என்ற பைலிலும்  வெப் சைட்டிலும் உள்ளது பார்த்துக் கொள்ளவும். நீங்கள் நியாயவான்கள் இறையச்சமுடைவர்கள் என்றால் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து வாருங்கள். அழைத்து வரும் பொறுப்பை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள். 

25-12-2005 ஞாயிறு அன்று காலை 9 மணிக்கே நிகழ்ச்சியை வைத்துக் கொள்வோம். சென்னை மண்ணடி பகுதியில் பொது மக்கள் அனைவரும் கலந்து கொள்ளும் வண்ணம் நிகழ்ச்சியை அமையுங்கள். இடத்தை முடிவு செய்து 23ஆம் தேதி ஜும்ஆவுக்குள் தகவல் தாருங்கள். 

முபாஹலா கூடாது என்ற கொள்கை உடையவர்களை அழைத்து வா என வம்பு செய்யக் கூடாது.

இதற்கான ஏற்பாடுகளை பி.ஜே. அணியை நல்லவர்களாக நம்பிக்கொண்டுள்ள நீங்கள் உடனடியாகச் செய்ய வேண்டும். தேவையில்லாமல் தட்டிக் கழிப்பதற்காக முபாஹலா கூடாது என்ற கொள்கை உடையவர்களை அழைத்து வா என வம்பு செய்யக் கூடாது. 

இப்படி டிமாண்ட் வைத்துள்ளதின்  நோக்கம் நீங்கள் உண்மையை ஒப்புக் கொள்ள வேண்டும். அதாவது முஸ்லிம் சமுதாயத்திற்கும் தவ்ஹீது ஜமாஅத்திற்கும் பி.ஜே. செய்த துரோகத்தை ஒப்புக் கொண்டு பி.ஜே.யால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நீக்க முன் வர வேண்டும். 

அல்லது முபாஹலா செய்யலாம் என பிரச்சாரம் செய்து கொண்டு மேற்கண்ட விஷயங்களுக்கு முபஹாலா செய்ய வர மறுக்கும் சமுதாயத்தின் சாபக் கேடான அவர்கள் மீது  அல்லாஹ்வின் லஃனத்து -சாபம் இறங்க வேண்டும். வஸ்ஸலாம். 

அன்புடன்: கா.அ.முஹம்மது பழுலுல் இலாஹி.


From: mohamed saleem bsaleem_storm2002@yahoo.com
asalamu   alaikum. 
Avoor tntj ready to mupala with Elahi i am from tanjore district my name is mohamed saleem. i say one challange against tntj members. R U  READY TO MUPALA WITH ELAHI?this is my challange. avoor tntj says"we r ready"..  
this after what can i do . please reply..they r say ready to mupala with elahishall i want to write letter from his side..if u have elahi address or phone number or mail id  please forward me..THIS IS       MY MAIL ID.
                                          WASALAM.
                                               BY,
                                   MANSOOR&SALEEM



Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.