காலம் தாழ்ந்தாலும் கடமை தவறாத முயற்சிக்கு நல் வாழ்த்துக்கள்.

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.


அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்; இன்னும் பொறுமையாகவும் இருங்கள்; நிச்சயமாக (இந்த) பூமி அல்லாஹ்வுக்கே உரியது. தன் அடியார்களில், தான் நாடியவர்களுக்கு அவன் அதை உரியதாக்கி விடுகின்றான் - இறுதி முடிவு இறைவனை அஞ்சுவோர்க்கே சாதகமாக இருக்கும். அல்குர்ஆன் 7:128.

ஆட்சி அதிகாரத்தை வழங்குபவன்.

அல்லாஹ்வே ஆட்சியின் அதிபதியே நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியை பறித்துக் கொள்கிறாய். நீ நாடியோரைக் கண்ணியப்படுத்துகிறாய். நீ நாடியோரை இழிவுபடுத்துகிறாய் நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன் என்று கூறுவீராக. அல்குர்ஆன் 3:26


தான் நாடியோருக்கு அல்லாஹ் (ஆட்சி) அதிகாரத்தை வழங்குவான். அல்குர்ஆன் 2:247.

ஆட்சி அதிகாரம் அல்லாஹ்வின் அருள்களில் ஒன்றாகும்.

இப்பூமியில் விரும்பிய இடத்தில் வசித்துக் கொள்ளும் வகையில் இவ்வாறே யூசுபுக்கு (ஆட்சி) அதிகாரம் அளித்தோம். நாம் நாடியோருக்கு நமது அருளை வழங்குவோம். நன்மை செய்தோரின் கூலியை வீணாக்க மாட்டோம். அல்குர்ஆன் 12:55.


அல்லாஹ் தனது அருளை இம்மக்களுக்கு வழங்கியதற்காக அவர்கள் பொறாமை கொள்கிறார்களா? இபுறாஹீமின் குடும்பத்தாருக்கு வேதத்தையும் ஞானத்தையும் கொடுத்தோம். அவர்களுக்கு மகத்தான ஆட்சியையும் வழங்கினோம். அல்குர்ஆன் 4:54

ஓட்டு போடுதல்.

அழகிய பரிந்துரை (ஓட்டு) செய்பவருக்கு அதில் பங்கு உள்ளது. தீய பரிந்துரை (ஓட்டு) செய்பவருக்கு அதில் பங்கு உள்ளது. அல்குர்ஆன் 4:85

தகுதி உடையவர் பதவியை கேட்டுப் பெறுதல்.

இப்பூமியின் கருவூலங்களுக்கு அதிகாரியாக என்னை நியமியுங்கள். நான் அறிந்தவன் பேணிக் காப்பவன் என்று அவர் (யூசுப் நபி) கூறினார். அல்குர்ஆன் 12:55.

ஆட்சி அதிகாரத்தை வேண்டுதல்.

ஏன் இறைவா என்னை மன்னித்து விடு. எனக்குப் பின் யாருக்கும் கிடைக்காத ஆட்சியை எனக்கு வழங்கு நீயே வள்ளல் என (ஸுலைமான் நபி) கூறினார்.

மனித நேய மக்கள் கட்சிக்கும் கிடைக்க துஆச் செய்கிறோம்.

இறைத்தூதர்களும் இறுதி இறைத்தூதரும் அரசியலில் ஆட்சி அதிகாரத்தை பெற்று இருக்கிறார்கள். அரசியலில் ஆட்சி அதிகாரம் என்பது அல்லாஹ்வின் அருள் என்று அல் குர்ஆன் கூறுகிறது. எனவே அந்த அருள் மனித நேய மக்கள் கட்சிக்கும் கிடைக்க துஆச் செய்து, காலம் தாழ்ந்தாலும் கடமை தவறாத முயற்சிக்கு நல் வாழ்த்துக்கள் கூறுகிறோம்..

அன்புடன்:-

காஅ.முஹம்மது பஸ்லுல் இலாஹி,

ஹுதா, நிஃமத், இஸ்ரா.

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.