இவரை தமிழ்நாட்டு அத்வானி என்பதா? உமாபாரதி என்பதா?

                            பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.             18-02-2006
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. தவ்ஹீதை நிலைநாட்டப் போவதாகக் கூறி இளைஞர்களை ஏமாற்றி வயிற்று பிழைப்பு நடத்தி வரும் கூட்டத்தினர் துவங்கியதுதான் த.த.ஜ.  

இதற்கு தமிழ்நாடு தறுதலை ஜமாஅத் என்று அர்த்தம் என விபரமுள்ளவர்கள் கூறினார்கள். அந்த த.த.ஜ.வின் தலைவராக இருப்பவர் பி.ஜெ. ஒவ்வொருவருடைய இனிஷியலும் அவர்களது விபரத்தைக் கூறும். 

எனது இனிஷியலில் கா என்பது எனது குடும்ப பெயரை அடையாளம் காட்டும். அ என்பது எனது தந்தை அஹ்மது அலி என்பதை குறிக்கும். 

த.த.ஜ.வின் தலைவராக இருப்பவரின் தந்தை பெயர் பீர் முஹம்மது. இதை குறிக்கும் வண்ணம் பீ என்ற நெடிலை ததஜவினர் யாரும் பயன்படுத்த மாட்டார்கள். அவரும் அவரது கையெழுத்திலும் பயன்படுத்த மாட்டார். பி என்ற குறிலைத்தான் ததஜவினர் பயன்படுத்துவார்கள். அவரும் பயன்படுத்துவார். அப்படியானால் பி.ஜெ. என்றால் என்ன?

பிராடு பண்ணி ஜெயிப்பதில் வல்லவர்.

பி. என்றால் பிராடு, பித்தலாட்டம். ஜெ. என்றால் ஜெயிப்பவர் என்பதுதான் அர்த்தம்.  பிராடு, பித்தலாட்டங்கள் போன்றவற்றில் ஜெயிப்பவர் என்பதால்தான் அவர் பி.ஜெ. என அழைக்கப்படுகிறார். அவரும் அதை உண்மைப் படுத்தி தன்னை பி.ஜெ. என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறார். 

தவ்ஹீதுவாதி, தவ்ஹீதுவாதி என்று சொல்லிக்கும் கொள்ளும் அவர் தவ்ஹீதுவாதி அல்ல.  தவ்ஹீது வியாபாரிதான் என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை. குர்ஆனை வைத்தே அல்லாஹ் இல்லை என்று என்னால் வாதிட முடியும் என்று எவனாவது சொல்வானா? சொல்பவன் முஸ்லிமாக இருக்க முடியுமா? இப்படிச் சொல்லி உள்ளவர்தான் இந்த பி.ஜெ. இப்பொழுது சொல்லுங்கள் இவர் தவ்ஹீதுவாதியா? தவ்ஹீது வியாபாரியா?

நடு ரோட்டில் நின்று நாடகமாடினார்.

ஏர்வாடி காசிம் அவர்களிடம் ஸைபுத்தீன் ரஷாதியை கொலை செய்ய பத்வா கொடுத்தவர்தான் இந்த பி.ஜெ. ஸைபுத்தீன் ரஷாதியை எதிர்ப்பதுதான் தவ்ஹீது என்பது போலும் கடந்த ஆண்டு வரை படம் காட்டினார். 

ரமழானுக்கு முன் மண்ணடியில் ஸைபுத்தீன் ரஷாதி பேச இருந்த கூட்டத்தை போலீஸ் மூலம் தடை செய்தார். பிறகு விண் டி.வி. கேமராவை எடுத்துக் கொண்டு போய் நான் வந்திருக்கிறேன் ஸைபுத்தீன் ரஷாதியை காணவில்லை என்று நடு ரோட்டில் நின்று நாடகமாடினார். உண்மை தெரிந்த பொது மக்கள் காரி துப்பினார்கள். அந்த ஸைபுத்தீன் ரஷாதி இன்று அதே இடத்தில் கூட்டம் போடுகிறார். 

ஸைபுத்தீன் ரஷாதி காலை கழுவியும் குடிப்பார்.

இவர் கொள்கைவாதி, கொள்கையில் சமரசம் செய்யாதவர், சந்தர்ப்பவாதி இல்லை, நடிகர் இல்லை என்பது உண்மையானால் இந்த மேடையில் ஏறி பதில் சொல்லி இருக்க வேண்டும். தேர்தலுக்காக இவர் கட்சி இடம் பெற்றுள்ள கூட்டணியில் ஸைபுத்தீன் ரஷாதி இருக்கும் அமைப்பும் இடம் பெற்றுள்ளது. இதனால் சமரசமாகப் போய் விட்டார். 

கூட்டணி என்றதுமே இப்படி கொள்கையில் சமரசம் ஆகிவிட்டவர் தேர்தலில் நின்றால் என்ன ஆகும். கொள்கை மாறி விடுவார். ஸைபுத்தீன் ரஷாதியை ஒலியுல்லாஹ் என புகழ்வார். அவர் காலிலும் விழுவார். இன்னும் கூடுதல் ஆதரவு கிடைக்கும் என்றால் ஸைபுத்தீன் ரஷாதி காலை கழுவியும் குடிப்பார். 

அல்லாஹ்வின் பள்ளி.யை அல்லோலப்படுத்தி விட்டார்.

ராமகோபலனின் தம்பி பி.ஜெ. விஷயத்தில் இதுவெல்லாம் கற்பனை என எண்ணாதீர்கள். பி.ஜெ.யை  ராமகோபலனின் தம்பி என விமர்சித்ததும் சிலர் கடும் கோபம் கொண்டனர். மன்னிக்கவும் நான் எழுதியது தவறுதான். 

ராமகோபலன் இது வரை தமிழகத்தில் எந்த பள்ளிவாசலிலும் கை வைத்ததில்லை. சுவரைக் கூட தொட்டதில்லை. இவர் பள்ளிவாசலில் புகுந்து குபிராட்டம் போட்டு விட்டார். அல்லாஹ்வின் பள்ளி.யை அல்லோலப்படுத்தி விட்டார். எனவே இவரை தமிழ்நாட்டு அத்வானி என்பதா? உமாபாரதி என்பதா? 

விண் டி.வி.யில் கதை விட்டுள்ளார் பிராடு பி.ஜெ.

மக்களை ஏமாற்றி வாங்கியுள்ள விண் டி.வி. மூலம் இந்த பள்ளிவாசல் சம்பந்தமாக பொய்ச் செய்தியையும் பரப்பியுள்ளார். கடையநல்லூர் மஸ்ஜிதுல் முபாரக் என்ற பள்ளி தலைவர் அப்துல் ஜலீல் மதனி சீரியஸாக கிடக்கிறார். 

இதை பயன்படுத்தி ஜாக் ரவுடிகள் அது ஜாக் பள்ளி என்று கல் வெட்டு வைத்து விட்டார்கள். எனவே மஸ்ஜிதுல் முபாரக் நிர்வாகிகள் த.த.ஜ. உதவியை கேட்டார்கள். அதனால் த.த.ஜ.வினர் போய் ஜாக் கல் வெட்டை அகற்றி கொடுத்தார்கள்| என்று விண் டி.வி.யில் கதை விட்டுள்ளார் பிராடு பி.ஜெ. 

அண்ணன் எப்பொழுது காலியாவார் திண்ணை எப்பொழுது காலியாகும்.

கடையநல்லூர் மஸ்ஜிதுல் முபாரக் ஜாக்குக்கு சொந்தமானது. அந்த இடம் ஜாக் சார்பாகத்தான் வாங்கப்பட்டது. அந்த பள்ளியை கட்டுவதற்காக ஜாக் சார்பாகத்தான் வசூல் நடந்தது. ஜாக் மாநில அமீர் கமாலுத்தீன் மதனிதான் பரிந்துரை கடிதம் கொடுத்தார். அதிகமான தொகைகளையும் கமாலுத்தீன் மதனிதான் ஜாக் சார்பாக வசூலித்து கொடுத்துள்ளார். 

அப்துல் ஜலீல் மதனியை கைக்குள் போட்டுக் கொண்டு ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் என த.த.ஜ.வினர் ஜும்ஆ குத்பா செய்ய நுழைந்தனர். அப்துல் ஜலீல் மதனி உடல் நிலை பாதிக்கப்பட்டார். அண்ணன் எப்பொழுது காலியாவார் திண்ணை எப்பொழுது காலியாகும். இப்படி  ரசூலுல்லாஹ் விஷயத்தில் ஸஹாபாக்கள் காத்து இருந்தார்கள்|| என்று ஸஹாபாக்களை கொச்சைப் படுத்திப் பேசிய பி.ஜெ. அப்துல் ஜலீல் மதனி விஷயத்தில் காத்து இருந்தார். 

தமிழக அரசே! த த.த.ஜ. குண்டர்களை கைது செய்.

அவரால் காத்து இருக்க முடியவில்லை. கும்பகோண கும்பாட்டம் முடிந்ததும் கடையநல்லூரில்தான் குபிராட்டம் என த.த.ஜ. ரவுடிகளுக்கு உத்தரவிட்டு விட்டார். குபுராளி பி.ஜெ.யின் கட்டளைப்படி கும்பகோணம் முடிந்ததும் ஜாக்குக்கு சொந்தமான மஸ்ஜிதுல் முபாரக்கில் த.த.ஜ. குண்டர்கள் நுழைந்தார்கள். சுவற்றில் பதிக்கப்பட்டிருந்த ஜாக் கல்வெட்டை உடைத்தார்கள். அந்த இடத்தில் த.த.ஜ. என்ற கல் வெட்டை வைத்து சிமெண்ட் பூசி கட்டி விட்டார்கள். தமிழக அரசே! ஜாக் பள்ளியில் நுழைந்து கல் வெட்டை உடைத்த த.த.ஜ. குண்டர்களை கைது செய் என ஜாக் சார்பாக வால் போஸ்ட்டர்கள் ஒட்டினார்கள். 

பொய்யனின் செய்தியே வேகமாக பரவியுள்ளது.

குபுராளி என்ன செய்தார். அவருக்கு மீடியா பலம் இருப்பதால், சுன்னத் ஜமாஅத் பள்ளியில் போய் ஜாக் சகோதரர்கள் கல் வெட்டு வைத்த மாதிரியான மாயை ஏற்படும் வண்ணம் செய்தியை பரப்பி விட்டார். இப்பொழுது அவருடன் கூட்டணி வைத்துள்ள மானங்கெட்ட கட்சியினரும் கூட்டணி தர்மப்படி(?) இந்த செய்தியை பரப்பி வருகிறார்கள். 

அந்த மானங்கெட்ட கட்சியினர்தான் இந்த பள்ளி விஷயத்தில் த.த.ஜவுடன் கைகோர்த்து நிற்கின்றனர். உண்மையில் நடந்தது என்ன என்பது தமிழ் உலகுக்கு முழுமையாக போய்ச் சேரவில்லை. பொய்யனின் செய்தியே வேகமாக பரவியுள்ளது. சுன்னத் ஜமாஅத் பள்ளியை பி.ஜெ. மீட்டுக் கொடுத்து விட்டார் என்ற செய்திதான் அதிகம் பரவியுள்ளது. உண்மையில் நடந்தது என்ன?

பள்ளிச் சாவியை ஜாக்கிடம் கொடுக்க வேண்டும் ஆர்.டி.வோ. தீர்ப்பு.

பொய்யன் பி.ஜெ.யின் பித்தலாட்ட திட்டப்படி த.த.ஜ. குண்டர்கள் ஜாக் கல் வெட்டை உடைத்தார்கள். த.த.ஜ. கல்வெட்டை பொருத்தினார்கள். பிரச்சனை போலீஸுக்குப் போனது. போலீஸார் ஜாக் கல் வெட்டை உடைத்த த.த.ஜ.வினரைக் கொண்டே ஜாக் கல் வெட்டை பொருத்தச் செய்தார்கள். த.த.ஜ. கல் வெட்டை எடுக்கச் செய்தார்கள். 

கடையநல்லூரில் முகாமிட்டிருந்த பி.ஜெ. உடைத்தவர்கள் மீது வழக்கு பதியாமல் தடுக்கும் பணியில் தலைகீழாக நின்றார். பள்ளியை பூட்டி விட்டு சாவியை த.த.ஜ. ரவுடிகள் வைத்திருந்தனர். பள்ளிச் சாவியை ஜாக்கிடம் கொடுக்க வேண்டும் ஆர்.டி.வோ. தீர்ப்பு கூறி விட்டார். 

ஷய்த்தான் அவனது நோக்கத்தில் வெற்றி பெற்று விட்டான்.

நெல்லை போலீஸ் எஸ்.பி.யிடம் போய் தங்கள் த.த.ஜ. மக்கள் சக்தி மிக்கது. ஜாக்குக்கு மக்கள் செல்வாக்கு கிடையாது. சாவியை ஜாக்கிடம் கொடுக்கச் சொன்னால் சட்ட ஒழுங்கு பிரச்சனை வரும் என என்ன என்ன கதைகளையெல்லாமோ அளந்து விட்டிருக்கிறார். எல்லாவற்றையும் கேட்டு விட்டு ஜாக்கிடம் பள்ளிச் சாவியை கொடுத்து விடனும் என போலீஸ் எஸ்.பியும் கூறி விட்டார். 

இதற்குப் பிறகும் பள்ளிச் சாவியை கொடுக்கவில்லை. ஜாக் சகோதரர்கள் பள்ளியின் கீழ் தளத்தில் ஐவேளையும் தொழுது வருகிறார்கள். பள்ளியின் மேல் தளத்தில் நின்று த.த.ஜ.வினர் தனியாக தொழுகிறார்கள். ரகசிய கூலிகளின் தலைவன் ஷய்த்தான் பெட்டி வாங்கியதன் நோக்கமே சமுதாயத்தை கூறு போடுவதுதானே. ரகசிய கூலிகளின் தலைவன் ஷய்த்தான் அவனது நோக்கத்தில் வெற்றி பெற்று விட்டான்.

கள்ள டாக்குமெண்டுகளை உருவாக்கி ஏமாற்றிட முடிவு செய்துள்ளார் பி.ஜெ.

ஜாக்கிடம் சாவியை கொடுக்காமல் பள்ளி தங்களுக்குத்தான் சொந்தம் என உரிமை கொண்டாடி த.த.ஜ. வம்பு செய்து வருகிறது. எனவே இரண்டு தரப்பிடமும் டாக்குமெண்டுகளை கேட்டுள்ளார் ஆர்.டி.வோ. ஜாக் உடனடியாக டாக்குமெண்டுகளை கொடுத்து விட்டது. 

பித்தலாட்ட அமைப்பான பிராடு பி.ஜெ.யின் த.த.ஜ. டாக்குமெண்டுகளை தர ஒரு மாதம் அவகாசம் கேட்டுள்ளது. மேலப்பாளையம் மஸ்ஜிதுர்றஹ்மானில் லுஹா களவாடியதில் பங்கு போட்டுக் கொண்டு கள்ளக் கணக்கு எழுத வழி காட்டியவர்தானே இந்த பி.ஜெ. 

எனவே மேலப்பாளையம் மஸ்ஜிதுர்றஹ்மானில் கள்ளக் கணக்கு எழுதி ஏமாற்றிய மாதிரி கள்ள டாக்குமெண்டுகளை உருவாக்கி ஏமாற்றிட முடிவு செய்துள்ளார் பி.ஜெ. அதனால்தான் ஒரு மாதம் அவகாசம் கேட்டுள்ளார். 

பள்ளிவாசல் சாவி போலீஸ் கஸ்டடியில்.

ஆர்.டி.வோ.வுக்கும் போலீஸுக்கும்  பி.ஜெ.யின் கூட்டம் பிராடு கூட்டம் பித்தலாட்டக் கூட்டம் பெட்டி வாங்கிய கூட்டம் என்று தெரிந்தாலும்  சட்டப்படி அவகாசம் கொடுத்துள்ளார்கள். த.த.ஜ. உண்டாக்கி கொண்டு வரவிருக்கும் டாக்குமெண்டுகள் வரும் வரை பள்ளிவாசல் சாவி போலீஸ் கஸ்டடியில் இருக்கும். ஒரு மாத காலத்திற்கு ஒரு வாரம் ஜாக் ஜும்ஆ, ஒரு வாரம் த.த.ஜ. ஜும்ஆ என போலீஸ் கூறியுள்ளது. அதன்படி நேற்று த.த.ஜ. ஜும்ஆ நடந்துள்ளது. உண்மைக்கு வெற்றி கிடைக்கத் துஆச் செய்வோம். வஸ்ஸலாம்.

வெளியீடு: கா.அ.முஹம்மது பழுலுல் இலாஹி.

கடைசிச் செய்தி:- கடையநல்லூருக்கு --- கமாலுத்தீன் மதனி வந்தால் எப்படியாவது அடித்து விடுங்கள். கடையநல்லூர் பள்ளிவாசலை இழுத்துப் பூட்டினாலும் சரி இனி அந்த பள்ளி ஜாக்குக்கு போய் விடக் கூடாது|| என்று பெட்டி வாங்கிய ஷய்த்தான் கூறி உள்ளானானம். சண்டாளன் உருப்படவே மாட்டானா? திருந்தவே மாட்டானா? கமாலுத்தீன் மதனி பெயரைக் கூறும் முன் ஒரு கெட்ட வார்த்தையையும் குறிப்பிட்டுள்ளான். எனவே அந்த இடத்தில் --- இப்படி காலியாக விட்டுள்ளோம். 


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.