கூட்டுச் சேர்ந்து அபகரித்து விட்ட கூட்டுக் கொள்ளயைர்கள்

                          பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.                     18-08-2005
.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. த.மு.மு.க.வுக்கு சொந்தமான டிரஸ்டுகளை தனது சதிச் செயல்களால் அபகரித்து மோசடி செய்து விட்ட மெகா மோசடியாளர்தான் டவுசர் கட்சித் தலைவர் பி.ஜே. 

ஒவ்வொரு விஷயத்திலும் அவரது மோசடித் தன்மையை மறைத்து அவரை உத்தமர் போல காட்ட அவர் நம்பியுள்ள ஒரே ஆயுதம் திறமையான வாதம் என்ற ஆயுதம்தான். அதை பயன்படுத்தித்தான் சமுதாய சொத்தை கொள்ளையடித்து விட்டதையும் நியாயம்படுத்தி ஏமாற்றி வருகிறார். 

முஸ்லிம் டிரஸ்ட் த.மு.மு.க.வுக்கு சொந்தமானதுதான் என்பதற்கு பி.ஜே. கையெழுத்துடன் கூடிய ஆதாரத்தைக் காட்டி  மதுக்கூர் ஹாஜா அவர்கள் கேட்ட கேள்விக்கு சரியான பதில் சொல்ல முடியாமல் சொதப்பிய பி.ஜே.யால் அந்த கேஸட்டை இன்று வரை வெளியிட முடியவில்லை. 

பி.ஜே.யின் அந்த சொதப்பலை மறைக்க பி.ஜே. நாடக மன்றத்தினர் நடித்துள்ள சி.டி. வெளியிட்டுள்ளார்கள். அபுதாபியில் உள்ள யூசுப் அலி என்பவர் த.மு.மு.க.வுக்கு சொந்தமான டிரஸ்டுகள் பற்றி கேள்வி கேட்கும் பாத்திரத்திலும் அமானித மோசடியாளர்களின் தலைவர்  பி.ஜே. பதில் கூறும் பாத்திரத்திலும் நடித்துள்ளார். 

டவுசர் கட்சியினர் பரப்பி வருகின்றனர்.

அதில் பதில் விளக்கம் என்ற பெயரால் பி.ஜே. நடித்துள்ள அனைத்தும் பொய் பித்தலாட்டம் என்று தெளிவாகத் தெரிகிறது. இருந்தாலும் முஸ்லிம் டிரஸ்டுக்கு மதுரையில்  நிலம் கொடுத்த சிக்கந்தர் என்பவரது சாட்சியத்தால் குழப்பம் ஏற்படுகிறது. இதற்கு விளக்கம் தர வேண்டும் என்பது பலரது வேண்டுகோள். 

அந்த சாட்சியத்தையே ஆதாரமாகக் கொண்டு முஸ்லிம் டிரஸ்டு த.மு.மு.க.வுக்கு சொந்தமானதுதான் என்று நிரூபிக்க முடியும் என்று முன்பு எழுதி இருந்தோம். அடுத்தடுத்து தொடை காட்டி தொழும் டவுசர் போன்ற புதிய புதிய கேள்விகள் வந்ததால் முஸ்லிம் டிரஸ்டு சம்பந்தமானதை எழுத முடிந்ததில்லை. இந்த சந்தர்ப்பத்தை  பயன்படுத்திக் கொண்டு இதில் நமது தரப்பில் பலஹீனம் உள்ளது அதனால் எழுதாமல் விட்டு விட்டோம் என்று சவூதியில் உள்ள டவுசர் கட்சியினர் பரப்பி வருகின்றனர். எனவே சாட்சியை ஒட்டிய சுருக்கமான பதிலை மட்டும் தர விரும்புகிறோம். 

த.மு.மு.க.வின் பொறுப்பாளர்கள் என்ற முறையில்தான் வந்தார்கள்.

அந்த சி.டி.யில் 34வது நிமிடத்தில் சாட்சி சொல்லும் நிலத்துக்காரர் சிக்கந்தர் மதுரை பொறுப்பாளராக இருந்த சீனி நைனா முஹம்மது வந்துதான் 10க்கு 10 இடம் கேட்டதாகச் சொல்கிறார். அப்பொழுது சீனி நைனா முஹம்மது எதில் பொறுப்பாளராக இருந்தார். இதுதான் இங்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. 

அப்பொழுது சீனி நைனா முஹம்மது த.மு.மு.க.வில்தான் பொறுப்பாளராக இருந்தார். எனவே த.மு.மு.க. சார்பில்தான் அந்த இடத்தை கேட்டார் என்பதற்கு அவரது சாட்சியம் மூலம் வெளிப்படும் முதல் ஆதாரம் இது. 

சீனி நைனா முஹம்மதுக்குப் பிறகு அடுத்து அந்த பொறுப்புக்கு சிக்கந்தர் என்பவர் வருகிறார்  என்று கூறுகிறார். சிக்கந்தர் அவர்களும் எந்த அமைப்பின் பொறுப்பாளராக வந்தார். 

அவரும் த.மு.மு.க. பொறுப்பாளராகத்தான் வந்தார். இது இரண்டாவது ஆதாரம். சீனி நைனா முஹம்மது, சிக்கந்தர் ஆகிய இருவரும் த.மு.மு.க.வின் பொறுப்பாளர்கள் என்ற முறையில்தான் வந்தார்கள் என்பதையும் த.மு.மு.க.வில்தான் பொறுப்பாளர்களாக இருந்தார்கள் என்பதையும் இருட்டடிப்பு செய்து கூறியுள்ளது முஸ்லிம் டிரஸ்டு த.மு.மு.வுக்குரியதுதான் என்பதற்குரிய மூன்றாவது ஆதாரம். 

நிலம் கொடுத்தவர் கூறும் சாட்சியத்தின் மூலமான ஆதாரங்கள்.

பொதுக் கூட்டத்தில் பேச வந்த பி.ஜே.யிடம் பணம் கேட்டபொழுது,  "இவ்வளவு நாள் அசால்ட்டாக விட்டு விட்டீர்கள் இப்பொழுது நான் ஒன்றும் செய்ய முடியாது. எனவே மனு போடுங்கள்" என்று பி.ஜே. சொன்னார்|| என்கிறார் இது 4வது ஆதாரம். 

"நான் இப்பொழுது பொறுப்பில் இல்லை என்று பி.ஜே. சொன்னார் என்பது 5வது ஆதாரம். 

ஹைதர் அவர்கள்தான் பொறுப்பில் இருக்கிறார்கள் அவரிடம் பேசுங்கள் என்று பி.ஜே. சொன்னார் என்பது 6வது ஆதாரம். 

இவையெல்லாம் அந்த நிலம் கொடுத்தவர் கூறும் சாட்சியத்தின் மூலமான ஆதாரங்கள் என்பதை நன்கு நினைவில் கொள்ள வேண்டும். முஸ்லிம் டிரஸ்டின் ஆயுட் கால தலைவர் நான் என்றுதான் அந்த சி.டி.யின் ஆரம்பத்திலேயே பி.ஜே. வாக்கு மூலம் கொடுத்துள்ளார். சி.டி.யில் சாட்சி கூறுபவரிடம் நான் இப்பொழுது பொறுப்பில் இல்லை என்று கூறியது எந்த பொறுப்பு? முஸ்லிம் டிரஸ்டின் ஆயுட் கால தலைவர் என்று தன்னைப் பற்றிக் கூறிக் கொள்ளும் பி.ஜே.யிடம் பணம் கேட்டபொழுது பொறுப்பில் இல்லை என்று கூறியது எந்த பொறுப்பு புரிகிறதா? அதுதான் த.மு.மு.க. அமைப்பாளர் என்ற பொறுப்பு? இது 7வது ஆதாரம்.

த.மு.மு.க.வின் முஸ்லிம் டிரஸ்டுக்கு கொடுக்கப்பட்டதுதான்.

ஹைதர் அவர்கள்தான் பொறுப்பில் இருக்கிறார்கள் என்று கூறியது எந்த பொறுப்பை? த.மு.மு.க. பொதுச் செயலாளர் என்ற பொறுப்பைத்தானே. நிலம் கொடுத்தவரின் சாட்சியம் என பி.ஜே. படம் பிடித்துக் காட்டும் அந்த சாட்சியின் சாட்சியம் முஸ்லிம் டிரஸ்டு த.மு.மு.க.வுக்கு உரியதுதான் என்று எப்படியெல்லாம் நிரூபித்துக் கொண்டிருக்கிறது பார்த்தீர்களா? 

பள்ளி வாசலுக்கு என்று கொடுக்கப்பட்டிருந்தால் நேரடியாக அந்தப் பகுதியில் உள்ளவர்கள் பெயருக்கு அல்லவா கொடுத்திருக்க வேண்டும். ஏன் முஸ்லிம் டிரஸ்டு பெயரில் எழுதி கொடுக்க வேண்டும். அதே கால கட்டங்களில் தமிழகத்தின் மற்ற மற்ற பகுதிகளில் வாங்கப்பட்ட பள்ளி நிலங்கள் முஸ்லிம் டிரஸ்டு பெயரில் வாங்கி அதற்குப் பிறகுதான் டிரஸ்டிலிருந்து பள்ளிவாசலுக்கும் மதரஸாக்களுக்கும் எழுதி கொடுக்கப்பட்டதா? 

அது த.மு.மு.க.வின் முஸ்லிம் டிரஸ்டுக்கு கொடுக்கப்பட்டதுதான். அதனால்தான் (பி.ஜே.யாகிய) நான் இப்பொழுது பொறுப்பில் இல்லை. த.மு.மு.க.வின் பொதுச் செயலாளராக உள்ள ஹைதர் அலி அவர்களிடம் கேள் என கூறி இருக்கிறார். 

 உணர்வு யாவும் த.மு.மு.க.வுக்குரியதே என்று சாட்சி கூறிக் கொண்டிருக்கிறது.

அது ஒட்டு மொத்த முஸ்லிம்களின் சமுதாய அமைப்பான த.மு.மு.க.வுக்காக கேட்டு வாங்கப்பட்டது அல்ல பி.ஜே.யின் பிழைப்பாக ஆகி விட்ட தவ்ஹீதின் பெயரால்தான் வாங்கப்பட்டது என்றால் என்ன செய்திருக்க வேண்டும். பி.ஜே.யின் அன்றைய பினாமி ஹாமித் பக்ரி இடம் போய் கேள் என கூறி இருக்க வேண்டும். அல்லது ஸைபுல்லாஹ் இடம் போய் கேள் என கூறி இருக்க வேண்டும். அப்படிக் கூறாமல், த.மு.மு.க.வின் பொதுச் செயலாளர் ஹைதர் அலி அவர்களிடம் கேள் என கூறியிருக்கிறார். 

இதிலிருந்து முஸ்லிம் டிரஸ்டு த.மு.மு.க.வுக்கு உரியது. த.மு.மு.க.வுக்காகத்தான் அந்த இடம் கேட்டு வாங்கப்பட்டது என்பது தெளிவாக நிரூபணமாகின்றது. நிலத்துக்காரரின் சாட்சியம் பற்றி கேட்டுள்ளதால்தான் அந்த சாட்சியத்தின் மூலம் மட்டும் நிரூபணமாகும் உண்மையை சுருக்கமாக தந்துள்ளோம். 

பி.ஜே. அன் கோ அபகரித்து விட்ட த.மு.மு.க. சொத்துக்களை பி.ஜே. அன்கோவுக்கு உரியது போல் சித்தரித்து வெளியிட்டுள்ள அந்த 53 நிமிட சி.டி. முழுவதையும் பற்றி  எழுதுவதாக இருந்தால் அதன் ஒவ்வொரு நிமிடமும் முஸ்லிம் டிரஸ்டு த.மு.மு.க.வுக்கு உரியது என்று எப்படியெல்லாம் சான்று பகறுகின்றது என்று எழுத முடியும். அந்த அளவுக்கு அந்த சி.டி. முஸ்லிம் டிரஸ்டு, முஸ்லிம் மீடியா டிரஸ்டு, உணர்வு யாவும் த.மு.மு.க.வுக்குரியதே என்று சாட்சி கூறிக் கொண்டிருக்கிறது.

நாஸர் அலிகான் அணுவும் பின் வாங்கவில்லை என்பதுதான் உண்மை.

நிலத்துக்காரரோ, சீனி நைனா முஹம்மதுதான் 10க்கு 10 நிலம் கேட்டார் என்கிறார். அமானித மோசடியாளர் பி.ஜே.யோ நிலத்துக்காரர்  தானாக முன் வந்துதான் நிலத்தை தந்தார் என்கிறார். இது மாதிரியான முரண்பாடுகளும் பொய்களுமாகத்தான் முஸ்லிம் டிரஸ்டு சம்பந்தமாக பி.ஜே. நாடக மன்றத்தினர் நடித்து வெளியிட்டுள்ள சி.டி. உள்ளது. 

இவ்வளவு நாட்களாக பணம் எதுவும் கொடுக்காமல் இந்த சி.டி.க்காக படம் பிடிக்கும்பொழுது 50ஆயிரத்தை அட்வான்ஸ் என்று கொடுக்கும் அந்தக் காட்சியும் பி.ஜே. அன்கோவினர் மெகா மோசடியாளர்களே என சாட்சி கூறிக் கொண்டிருக்கின்றது. 

பணம் கொடுக்கும் இந்தக் காட்சியின் ஷ{ட்டிங்கள் கூட பி.ஜே.யும் அபுதாபி யூசுப் அலியும் நடித்து முடித்த பிறகுதான் எடுத்து இணைத்துள்ளார்கள் அந்த சி.டி.யின் துவக்கத்தில் (நாஸர் அலிகான் என்ற) ஒரு சகோதரர் சவால் விட்டார். சவாலை சந்திக்கத் தயார் என்றதும் நான் கேள்விப்பட்டதைத்தான் சொன்னேன். ஏன்னிடம் எந்த ஆதராமும் கிடையாது என்று சொன்னார் என்ற பொய்யுடன்தான் டவுசர் கட்சித் தலைவர் பி.ஜே.யின் நடிப்பு துவங்குகிறது. 

முஸ்லிம் டிரஸ்டும் உணர்வு பத்திரிக்கையும் த.மு.மு.க.வுக்கு சொந்தமானதுதான் என்று என்னால் நிரூபிக்க முடியும் என்று சொன்ன சொல்லிலிருந்து நாஸர் அலிகான் அணுவும் பின் வாங்கவில்லை என்பதுதான் உண்மை. 

அவர்கள் கொள்ளையர்களா இல்லையா என்பதை நிரூபிக்க அருமையான ஒரு வாய்ப்பு.

எது உண்மை எது பொய் என்பதற்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சி.டி.களையும் அறிக்கைகளையும் வெளியிட்டுக் கொண்டிருக்கத் தேவை இல்லை. முபாஹலா மூலம் எளிதில் முற்றுப் புள்ளி வைத்து விடலாம் என முபாஹலா அழைப்பு விடுத்த பி.ஜே.யின் முபாஹலா அழைப்பை நான் ஏற்கிறேன். முஸ்லிம் டிரஸ்டும், முஸ்லிம் மீடியா டிரஸ்டும் த.மு.மு.க.வுக்கு உரியது இல்லை என்று வாதிக்கும் பி.ஜே.யும் பி.ஜே.யுடனிருக்கும் டிரஸ்டிகளும் அவர்கள் கூற்றை உண்மைபடுத்திட முபாஹலா செய்ய வரட்டும். முஸ்லிம் டிரஸ்டு த.மு.மு.க.வுக்கு சொந்தமானதுதான் என்று கூறி முபாஹலா பண்ண நான் தயாராக இருக்கிறேன். 

எனவே பி.ஜே.யும் பி.ஜே.யுடனிருக்கும் டிரஸ்டிகளும் உண்மையாளர்கள் என்றால் உடனே முபாஹலா தேதியை அறிவிப்பார்கள். முபாஹலா தேதியை அறிவிக்காமல் வாதம் வாதம் என பிடிவாதம் செய்தால் அவர்கள் அனைவரும் பொய்யர்கள், மோசடியாளர்கள், திருடர்கள், த.மு.மு.க. சொத்தை அபகரிக்க கூட்டுச் சேர்ந்து அபகரித்து விட்ட கூட்டுக் கொள்ளயைர்கள் என்பதை விளங்கிக் கொள்ளுங்கள். ஒருவன் தனியாகத் திருடினால், அபகரித்தால், அமானித மோசடி செய்தால்  அதற்குப் பெயர் திருட்டு அவனுக்குப் பெயர் திருடன். கூட்டாகத் திருடினால், அபகரித்தால், அமானித மோசடி செய்தால் அதற்குப் பெயர் கொள்ளை. அவர்களுக்குப் பெயர் கொள்ளையர்கள். எனவே அவர்கள் கொள்ளையர்களா இல்லையா என்பதை நிரூபிக்க அருமையான ஒரு வாய்ப்பு அவர்கள் சொன்ன முபாஹலா. அவர்கள் சொன்ன முபாஹலாவிலிருந்து அவர்கள் பின் வாங்கினால் அவர்கள் யார் என்பதை நீங்கள் விளங்கிக் கொள்ளுங்கள் வஸ்ஸலாம். அன்புடன்: கா.அ.முஹம்மது பழுலுல் இலாஹி.



Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.