Monday, May 25, 2009

ம.ம.க.வினர் மீது பொய் வழக்குகள்

மனிதநேய மக்கள் கட்சியினர் சென்னையில் தாக்கப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் வெள்ளியன்று (15.6.09) தமுமுக, மமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இந்த ஆர்ப்பாட்டங் களில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். திமுக ரவுடிகளுக்கு எதிராகவும், காவல்துறையைக் கண் டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. எனினும் அனைத்து ஆர்ப்பாட் டங்களும் அமைதியான முறையில் நடந்து முடிந்தன.


ஆனால் திமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளின் தூண்டுதல் பேரில் காவல்துறையினர் மற்றும் ம.ம.க.வினர் மீது தொடர்ச்சியாக பொய் வழக்குகளை புனைந்து வருகின்ற னர். ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டத் தில் கலந்து ம.ம.க. வேட்பாளரும், மாவட்டச் செயலாளருமான சலிமுல்லா கான் உட்பட 100 பேர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வந்தவாசியில் ததஜ அலுவலகத்தை தாக்கியதாக 30 பேர் மீதும், சேலத்தில் 20 பேர் மீதும் என ம.ம.க.வினர் மீது வழக்குகளைப் பதிவு செய்யும் அடக்குமுறையைக் கையாள ஆரம்பித்துவிட்டது ஆளுங் கட்சியான தி.மு.க.


தமுமுகவின் ஆரம்ப காலங் களில் அடக்குமுறையைக் கட்டவிழ்த் தது இதே திமுகதான்.. ஆயினும் தமுமுக வீறு கொண்டு எழுந்தது. மக்களின் பேரியக்கமாக மாறியது. இப்போது ம.ம.க. மீதான வழக்கு களும், அடக்குமுறைகளும் ம.ம.க. வின் எதிர்கால அரசியல் எழுச்சி யையே காட்டுவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
from syed nawfal reply-to tamilmuslimbrothers@googlegroups.com
to tm

Monday, May 18, 2009

இஸ்லாத்தின் வழிகாட்டுதலில் உருவானதுதான் இந்திய சிவில் சட்டம்.

இனியாவது சட்டம் இயற்றும் அவைகளில் உயிருள்ள முஸ்லிம்கள் இடம் பெற்றிட முயற்சிகள் செய்வோம்.

இனில் ஹுகுமு இல்லாஹ் லில்லாஹ் (அல்குர்ஆன் 12:40) -அல்லாஹ் ஒருவனுக்கே அன்றி (வேறெவர்க்கும்) அதிகாரம் இல்லை. அல்லது அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் இல்லை. மொழி பெயர்ப்பை எப்படி வைத்துக் கொண்டாலும் ஜனநாயகம் நவீன கால இணை வைப்பு என்ற கொள்கையுடையவர்கள் சொல்லும் அதிகாரம் சம்பந்தமானது அல்ல இந்த ஆயத்து.

நபி யூசுப் (அலை) அவர்களுடைய அரசியல் வாழ்வு.

இருந்தாலும் அவர்கள் சொன்ன அந்த அதிகாரம் சம்பந்தமான அர்த்தத்திலேயே பொருள் கொண்டு ஆய்வு செய்தோம். அப்படி பொருள் கொண்டாலும் இதை ஒட்டி அவர்கள் கூறும் கருத்து தவறானது. இதற்கு ஆதாரமாக இனில் ஹுகுமு இல்லாஹ் லில்லாஹ் - அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் இல்லை என்று எந்த நபி பிரச்சாரம் செய்தாரோ அந்த நபி யூசுப் (அலை) அவர்களுடைய அரசியல் வாழ்வு இந்த வசனத்துக்கு விளக்கமாக அமைந்து விட்டது. தவறான கருத்துடையவர்களுக்கு பதிலாகவும் அமைந்து விட்டது. இதை முந்தைய வெளியீட்டில் விரிவாகவும் விளக்கமாகவும் தெளிவாகவும் கண்டோம்.

இந்த கருத்துடையவர்கள் அடுத்து வைக்கும் வாதம்.

யார் அல்லாஹ் அருளியதைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் இறைவனை மறுக்கக் கூடியவர்கள். இந்த கருத்துடையவர்கள் அடுத்து வைக்கும் வாதம் இது. அதற்கு ஆதாரம் (சூரத்துல் மாயிதாவில் உள்ள) 5:44 என்பதாகும். இப்படி குறிப்பிட்டு விட்டு 5:44.இன் முழு வசனத்தையும் கூறுவதில்லை. அல்குர்ஆன் 12:40இல் கூறியது போலவே 5:44.இல் உள்ள வமன் லம் யஹ்கும் பிமாh அன்ஸலல்லாஹு பவுலாயிக ஹுமுல் காபிரூன் என்று மட்டுமே சொல்வார்கள். இதுவும் 5:44யின் முழு வசனம் இல்லை. 5:44ஆவது ஆயத்தில் உள்ள ஒரு சிறு பகுதி மட்டுமே இது. இந்த ஒரு சிறு பகுதியான எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அவர்கள் நிச்சயமாக காஃபிர்கள்தாம். என்று அல்லாஹ் அல்குர்ஆன் 5:44இல் கூறி உள்ளான். எனவே எப்படி மனிதர்களின் சட்டங்களை கொண்டு செயல்படுத்த முடியும். தீர்ப்பளிக்க முடியும் என்பார்கள்.

காலமும் நேரமும் வரும்போதுதான் செயல்படுத்த முடியும்.

இந்த வசனம் யாரைப் பார்த்து பேசுகிறது? அல்லாஹ்வுடைய தூதரை மட்டும் பார்த்து பேசுகிறதா? ஒரு சில வசனங்கள் அல்லாஹ்வுடைய தூதரை மட்டுமே பார்த்து பேசும். ஒரு சில வசனங்கள் அல்லாஹ்வுடைய தூதரை மட்டுமே பார்த்து பேசுவது போல் இருக்கும். அப்படி இருந்தாலும் அது ஒவ்வொரு முஃமினுக்கும் பொருந்தும். ஒரு சில வசனங்கள் எல்லோரையும் பார்த்து பேசுவதுபோல் இருக்கும். அப்படி இருந்தாலும் அதற்கு தகுதி உடையவர்கள்தான் அதுவும் காலமும் நேரமும் வரும்போதுதான் செயல்படுத்த முடியும்.

நேரம் காலம் தகுதி இதுவும் அல்லாஹ் அளித்துள்ள அனுமதிதான்.

அல்லாஹ் நோன்பு நோற்கும்படி கட்டளை இட்டுள்ளான். எனவே ஏன் நோன்பு நோற்கவில்லை என எப்பொழுதுமே கேட்டுக் கொண்டிருக்க முடியுமா? ரமளான் மாதம் வந்தால் நோன்பு வையுங்கள் என்று அல்லாஹ்வே சொல்லி இருக்கிறான். ஏன் நோன்பு நோற்கவில்லை என ரமளான் மாதம் வந்தால்தான் கேட்க முடியும். அதுவும் நோன்பு காலத்திலும் இரவு நேரத்தில் இப்பொழுது ஏன் நோன்பு நோற்கவில்லை என கேட்க முடியுமா? நோயாளிகளிடமோ பிரயாணிகளிடமோ போய் ஏன் நோன்பு நோற்கவில்லை என கேட்க முடியுமா? நேரம் காலம் தகுதி இதுவும் அல்லாஹ் அளித்துள்ள அனுமதிதான்.

அத்தனை பேரும் ஆட்சி செய்யக் கூடியவர்களா?

யார் அல்லாஹ் அருளியதைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் இறைவனை மறுக்கக் கூடியவர்கள் என்று சொன்னால். இந்த வசனம் ஒவ்வொருத்தரையும் பார்த்து பேசுகிறது என்றால். இந்த உலகத்தில் உள்ள அத்தனை பேரும் நீதிபதிகளா? அத்தனை பேரும் ஆட்சி செய்யக் கூடியவர்களா? என்று கேட்கக் கூடியவர்களும் இருக்கிறார்கள்.

இந்த வாதத்தை ஏற்றால்.

அல்லாஹ்வுடைய தூதரை மட்டுமே பார்த்து சொல்லக் வசனம். எனவே அல்லாஹ்வுடைய தூதரை மட்டுமே பொருந்தும். என்று சொல்லக் கூடியவர்களும் இருக்கிறார்கள். இந்த வாதத்தை ஏற்றால் இந்த மாதிரி உள்ள வசனங்கள் மூலம் பாதி குர்ஆன் செயல்படுத்த முடியாமல் போய் விடும். எனவே இப்படியும் பார்க்கக் கூடாது. அப்படியும் பார்க்கக் கூடாது. அல்லாஹ்வுடைய தூதருக்கு சொன்னால் நமக்கும் பொருந்தும் என்றே இந்த வசனத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.

எப்படி பேசுகிறது என்பதை விளங்கி புரிய முடியும்.

இந்த வசனம் யாரைத்தான் பார்த்து பேசுகிறது எப்படி பேசுகிறது என்பதை அறிய இந்த வசனத்தை முழுமையாக படிக்க வேண்டும். தொடர்புடைய வசனங்களையும் படிக்க வேண்டும். அப்படி படிக்கும்போது இந்த வசனம் யாரைத்தான் பார்த்து பேசுகிறது. எப்படி பேசுகிறது என்பதை விளங்கி புரிய முடியும். எனவே இதற்கு தொடர்புடைய வசனமான இதே அத்தியாயத்தில் முன்பாக உள்ள வசனமான 38ஆவது வசனத்தை பார்க்க வேண்டும். ஏனெனில் அல்லாஹ் அந்த வசனத்திலிருந்து சட்டங்களை ஆரம்பிக்கிறான். இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஆட்சியில் அமர்ந்த பின் இறக்கியருளிய சட்டமாகும். அதனால் அந்த வசனத்திலிருந்து பார்க்க வேண்டும்.

திருடுபவன், திருடுபவள் ஆகியவர்களின் கைகளை வெட்டி விடுங்கள். இது அவர்கள் செய்ததற்குரிய கூலியும் அல்லாஹ்வின் தண்டணையுமாகும். அல்குர்ஆன் 5:38

திருடியவன் மனம் திருந்தி விட்டால்.

திருடுவது, அடுத்தவனது பொருளை அபகரிப்பது தீய செயல் - அநீதி. இந்த தீய செயலை அநீதியை இஸ்லாமிய ஆட்சியின் கீழ் உள்ள ஒருவன் செய்து விட்டான். அதாவது திருடி விட்டான் என வைத்துக் கொள்வோம். அவன்தான் திருடன் என்பது யாருக்குமே தெரியாது. அந்த திருடன் மனம் திருந்தி விட்டான். இப்பொழுது அவன் என்ன செய்ய வேண்டும். இஸ்லாமிய ஆட்சியாளரிடம் போய் என் கையை வெட்டுங்கள் என்று சொல்ல வேண்டுமா? என்று கேட்டால் என்ன சொல்வார்கள். வமன் லம் யஹ்கும் பிமாh அன்ஸலல்லாஹு பவுலாயிக ஹுமுல் காபிரூன் அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் ஏக இறைவனை மறுப்பவர்கள்தான்- காபிர்கள்தான். எனவே இஸ்லாமிய ஆட்சியாளரிடம் போய் என் கையை வெட்டுங்கள் என்றுதான் சொல்ல வேண்டும் என்பார்கள்.

அல்லாஹ் அடுத்து என்ன சொல்கிறான்.

திருடனோ திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கு, அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டணையாக அவர்களின் கரங்களைத் தரித்து விடுங்கள். அல்லாஹ் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாக இருக்கின்றான். என்று திருட்டுக்குரிய தண்டனை சட்டத்தை 5:38இல் சொல்லிய அல்லாஹ் அடுத்து என்ன சொல்கிறான். அநீதி இழைத்த பிறகு ஒருவர் அல்லாஹ்விடத்தில் மன்னிப்புக் கேட்டால் அல்லாஹ் மன்னிப்பான். என்று சொல்கிறான்.

அல்லாஹ்வே அதை மறைத்து விட்டான்.

திருடியவன் மனம் திருந்தி விட்டால் இஸ்லாமிய ஆட்சியாளரிடம் போய் என் கையை வெட்டுங்கள் என்று சொல்லத் தேவை இல்லை என்பதுதான் இந்த வசனத்தின் விளக்கமாகும். விபச்சாரம் செய்து விட்டவர் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து தண்டனை வழங்குங்கள் என்று கேட்ட உடன் வமன் லம் யஹ்கும் பிமா அன்ஸலல்லாஹு பவுலாயிக ஹுமுல் காபிரூன் அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் ஏக இறைவனை மறுப்பவர்கள்தான்- காபிர்கள்தான். எனவே தண்டனை வழங்குகிறேன் என்று கூறி விடவில்லை. மூன்று முறை முகத்தை திருப்பிக் கொள்கிறார்கள். அல்லாஹ்வே அதை மறைத்து விட்டான் நீ ஏன் அதை சொல்லிக் கொண்டிருக்கிறாய் என்று கூட சொல்கிறார்கள். மீண்டும் மீண்டும் கூறிய பின்தான் தண்டனை வழங்குகிறார்கள். இதை நாம் ஹதீஸ்களில் காண்கிறோம்.

முஸ்லிம்களின் கையில் முழுமையான ஆட்சி இருந்தால்.

எனவே திருடிவிட்ட எவரேனும் பிடிபடாத நிலையில், தம் தீச்செயலுக்காக மனம் வருந்தித் தம்மைச் சீர் திருத்திக் கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் (அவர் தவ்பாவை ஏற்று) மன்னிக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும், கருணையுடையோனாகவும் இருக்கின்றான். 5:39. பிடிபட்டவன் என்று சொன்னால் தக்க ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்ட பின் தண்டணை வழங்க வேண்டும். முஸ்லிம்களின் கையில் முழுமையான ஆட்சி இருந்தால் கையை வெட்ட வேண்டும் இதுதான் சட்டம்.

யூத கிறிஸ்தவர்கள் விஷயத்தில்.

இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஆட்சியின் கீழ் யூதர்களும் இருந்தார்கள். கிறிஸ்தவர்களும் இருந்தார்கள். அந்த சூழலில் இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஆட்சிக்கு சட்டங்களை சொல்லி வந்த அல்லாஹ் யூத கிறிஸ்தவர்கள் விஷயத்தில் எந்த மாதிரி சட்டங்களை சொல்கிறான் என்பதை பாருங்கள்.

யூத கிறிஸ்தவர்கள் பொய்யையே அதிகம் செவியுறுகின்றனர். தடுக்கப்பட்டதையே அதிகம் சாப்பிடுகின்றனர். (நபியே!) அவர்கள் உம்மிடம் வந்தால், அவர்களுக்கிடையே நீர் தீர்ப்பு வழங்கலாம். அல்லது அவர்களை அலட்சியம் செய்யலாம். இது அதே சூரத்துல் மாயிதாவில் உள்ள 42ஆவது வசனத்தின் ஒரு பகுதியாகும்.

இந்த வசனத்தில் அல்லாஹ் சிவில் சட்டத்தை அறிமுகப்படுத்துகிறான்.

நன்கு கவனிக்க வேண்டும். அவர்கள் உம்மிடம் வந்தால். அதாவது வந்தால்தான். தீர்ப்பு வழங்கலாம். அல்லது உங்கள் பிரச்சனையை நீங்களே உங்களுக்குள்ளேயே பேசி முடித்துக் கொள்ளுங்கள் என்றும் விட்டு விடலாம். நான் இஸ்லாமிய ஆட்சி செய்கிறேன். நான்தான் தீர்ப்பு சொல்வேன். இஸ்லாமிய முறைப்படிதான் தீர்ப்பு சொல்வேன் என கச்சை கட்டிக் கொண்டு நிற்கச்சொல்லவில்லை அல்லாஹ். இந்த வசனத்தில் அல்லாஹ் சிவில் சட்டத்தை அறிமுகப்படுத்துகிறான்.

இஸ்லாத்தில் இருந்துதான் திருடி இருக்கிறார்கள்.

இதுதான் இந்த அடிப்படையில் அமைக்கப்பட்டதுதான் இன்று இந்தியாவில் உள்ள தனியார் சட்டம் அதாவது சிவில் சட்டம். இஸ்லாத்தின் வழிகாட்டுதலில் உருவானதுதான் இந்திய சிவில் சட்டம். இதனால்தான் பி.ஜெ.பி. போன்ற இஸ்லாமிய விரோத அமைப்புகள் சிவில் சட்டம் இருக்கக் கூடாது. பொது சிவில் சட்டம் வேண்டும் என்கின்றன. நன்கு புரிய வேண்டும். இந்தியாவில் சட்டம் இயற்றிவர்கள் மக்களுக்கு பயன் தரக் கூடிய எல்லா சட்டங்களையும் இஸ்லாத்தில் இருந்துதான் திருடி இருக்கிறார்கள்.

பட்டம் பதவி பெயர் அவர்களுக்கு கிடைத்திருக்காது.

இது இஸ்லாத்தில் இருந்து எடுத்த சட்டம். குர்ஆனில் இப்படி கூறப்பட்டு இருக்கிறது. அதிலிருந்துதான் சிவில் சட்டங்களில் கிறிஸ்தவர்களுக்கு அவர்கள் மதப்படி சட்டம். முஸ்லிம்களுக்கு அவர்கள் மதப்படி சட்டம். என தனியார் சட்டம் கண்டு பிடித்தோம் என்று கூறி இருந்தால் சட்டம் இயற்றிய நிபுணர்கள் என்ற பட்டம் பதவி பெயர் அவர்களுக்கு கிடைத்திருக்காது. எனவே கூறாமல் மறைத்து விட்டார்கள். சட்டம் இயற்றும் அவையில் உயிருள்ள முஸ்லிம்கள் இடம் பெற்றிருந்தால் இந்த உண்மையை உலகுக்கு கூறி இருப்பார்கள். இனியாவது சட்டம் இயற்றும் அவைகளில் உயிருள்ள முஸ்லிம்கள் இடம் பெற்றிட முயற்சிகள் செய்வோம்.

அத்வானி கூட இஸ்லாத்தின் அடிப்படையில் தீர்ப்பு வேண்டும் என்று சொன்னார்.

அவர்களாக முன் வந்து இஸ்லாத்தின் அடிப்படையில் தீர்ப்பு தாருங்கள் என்று கேட்டால் இஸ்லாத்தின் அடிப்படையில் தீர்ப்பு கூறலாம். அவர்களாக முன் வந்து இஸ்லாத்தின் அடிப்படையில் தீர்ப்பு கேட்பார்களா? என்ற சந்தேகம் பலருக்கு வரும். பொது சிவில் சட்டம் பூச்சாண்டி காட்டி புதி சதி திட்டம் போட்ட அத்வானி கூட துணை பிரமராக இருந்தபொழுது என்ன சொன்னார். கற்பழிப்புக்கு மரண தண்டணை கொண்டு வர வேண்டும் என்று சொன்னார். இது யாருடைய சட்டம். இஸ்லாமிய சட்டம் அல்லவா. முஸ்லிம்களின் எதிரியாக தன்னைக் காட்டிக் கொண்டிருக்கும் அத்வானி கூட இஸ்லாத்தின் அடிப்படையில் தீர்ப்பு வேண்டும் என்று சொன்னார் அப்படி இருக்கும்பொழுது பொது மக்கள் சொல்ல மாட்டார்களா?

5:42இன் தொடரை பாருங்கள். (நபியே!) அவர்கள் உம்மிடம் வந்தால், அவர்களுக்கிடையே நீர் தீர்ப்பு வழங்கலாம். அல்லது அவர்களை அலட்சியம் செய்யலாம். அவர்களை நீர் அலட்சியம் செய்தால் அவர்களால் உமக்கு எந்த தீங்கும் தர முடியாது. ஆனால், நீர் தீர்ப்பளித்தால் அவர்களிடையே நீதியான முறையில் தீர்ப்பளிப்பீராக. ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துவோரை நேசிக்கின்றான்.

இங்கும் நன்கு கவனிக்க வேண்டும். அவர்களிடையே தீர்ப்பு வழங்க வேண்டும் என்று சொல்லவில்லை. தீர்ப்பளித்தால் என்றுதான் சொல்லி உள்ளான். தீர்ப்பளித்தால் அவர்களிடையே நீதியான முறையில் தீர்ப்பளிப்பீராக என்று சொல்லி உள்ளான்.

அல்லாஹ்வும் அப்படி கட்டளையிடவில்லை.

இஸ்லாமிய ஆட்சிகளுக்கெல்லாம் முன் மாதிரியான இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூட எங்கு தப்பு நடந்தாலும் நான்தான் தீர்ப்பு கூறுவேன். இஸ்லாமிய சட்டப்படிதான் தீர்ப்பு கூறுவேன். நீ எந்த மதத்தவனாக இருந்தாலும் எனது ஆட்சியின் கீழ் இருக்கும்போது இஸ்லாமிய சட்டப்படிதான் தீர்ப்பு பெற வேண்டும் என்றெல்லாம் அதிகாரம் செலுத்தவில்லை. அல்லாஹ்வும் அப்படி கட்டளையிடவில்லை.

தொடரும் இன்ஷhஅல்லாஹ்

Saturday, May 16, 2009

இறுதி வெற்றி, பயபக்தியுடையவர்களுக்கே

இறுதியாகச் சிறந்த நிலை பயபக்தி(யுடையோரு)க்குத் தான்.

3:200 .முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள் (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்.

3:118 .நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் உங்(கள் மார்க்கத்தைச் சார்ந்தோர்)களைத் தவிர (வேறெவரையும்) உங்களின் அந்தரங்கக் கூட்டாளிகளாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்;. ஏனெனில் (பிறர்) உங்களுக்குத் தீமை செய்வதில் சிறிதும் குறைவு செய்ய மாட்டார்கள்;. நீங்கள் வருந்துவதை அவர்கள் விரும்புவார்கள்;. அவர்கள் உங்கள் மேல் கொண்டுள்ள கடுமையான வெறுப்பு அவர்கள் வாய்களிலிருந்தே வெளியாகிவிட்டது. அவர்கள் நெஞ்சங்கள் மறைத்து வைத்திருப்பதோ இன்னும் அதிகமாகும்;. நிச்சயமாக நாம் (இது பற்றிய) ஆயத்களைத் தெளிவு படுத்திவிட்டோம்;. நீங்கள் உணர்வுடையோரானால் (இதை அறிந்து கொள்வீர்கள்).

3:119 .(முஃமின்களே!) அறிற்து கொள்ளுங்கள்;. நீங்கள் அவர்களை நேசிப்போராய் இருக்கின்றீர்கள் - ஆனால் அவர்கள் உங்களை நேசிக்கவில்லை. நீங்கள் வேதத்தை முழுமையாக நம்புகிறீர்கள்;. ஆனால் அவர்களோ உங்களைச் சந்திக்கும் போது ''நாங்களும் நம்புகிறோம்'' என்று கூறுகிறார்கள்;. எனினும் அவர்கள் (உங்களை விட்டு விலகித்) தனியாக இருக்கும் போது, அவர்கள் உங்கள் மேலுள்ள ஆத்திரத்தினால் (தம்) விரல் நுனிகளைக் கடித்துக்கொள்கிறார்கள். (நபியே!) நீர் கூறும்; ''நீங்கள் உங்கள் ஆத்திரத்தில் இறந்து விடுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) உள்ளங்களில் உள்ளவற்றை அறிந்தவன்''.

3:120 .ஏதாவது ஒரு நன்மை உங்களுக்கு ஏற்பட்டால், அது அவர்களுக்கு வருத்தத்தை கொடுக்கிறது. உங்களுக்கு ஏதாவது தீமை ஏற்பட்டால், அதற்காக அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். நீங்கள் பொறுமையுடனும், பயபக்தியுடனுமிருந்தால் அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீமையும் செய்யாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை (எல்லாம்) சூழ்ந்து அறிகிறவன்.

2:45. மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும்.

2:153 .நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்

2:155 .நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்;. ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!

துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும்தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள்(பயபக்தியுடையவர்கள்).2:177

''எத்தனையோ சிறு கூட்டத்தார்கள், பெருங் கூட்டத்தாரை அல்லாஹ்வின் (அருள் மிக்க) அனுமதி கொண்டு வென்றிருக்கின்றார்கள்;. மேலும் அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்'' என்று கூறினார்கள்.2:249

3:146 .மேலும் எத்தனையோ நபிமார்கள், அவர்களுடன் ரிப்பிய்யூன்கள் (என்னும் இறையடியார்களும்) பெருமளவில் சேர்ந்து (அல்லாஹ்வின் பாதையில்) போர் செய்தனர்;. எனினும், அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களால் அவர்கள் தைரியம் இழந்து விடவில்லை, பலஹீனம் அடைந்து விடவுமில்லை. (எதிரிகளுக்குப்) பணிந்து விடவுமில்லை - அல்லாஹ் (இத்தகைய) பொறுமையாளர்களையே நேசிக்கின்றான்.

3:153 .(நினைவு கூருங்கள்! உஹது களத்தில்) உங்கள் பின்னால் இருந்து இறைதூதர் உங்களை அழைத்துக் கொண்டிருக்க, நீங்கள் எவரையும் திரும்பிப் பார்க்காமல் மேட்டின்மேல் ஏறிக் கொள்ள ஓடிக் கொண்டிருந்தீர்கள். ஆகவே (இவ்வாறு இறை தூதருக்கு நீங்கள் கொடுத்த துக்கத்தின்) பலனாக இறைவன் துக்கத்தின்மேல் துக்கத்தை உங்களுக்குக் கொடுத்தான். ஏனெனில் உங்களுக்குக் கிடைக்க வேண்டியது தவறி விட்டாலோ, உங்களுக்குச் சோதனைகள் ஏற்பட்டாலோ நீங்கள் (சோர்வும்) கவலையும் அடையாது (பொறுமையுடன் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்); இன்னும், அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கு அறிபவனாக இருக்கின்றான்.

3:154 .பிறகு, அத்துக்கத்திற்குப்பின் அவன் உங்களுக்கு அமைதி அளிப்பதற்காக நித்திரையை இறக்கி வைத்தான்;. உங்களில் ஒரு பிரிவினரை அந்நித்திரை சூழ்ந்து கொண்டது. மற்றொரு கூட்டத்தினரோ- அவர்களுடைய மனங்கள் அவர்களுக்குக் கவலையை உண்டு பண்ணி விட்டன. அவர்கள் அறிவில்லாதவர்களைப் போன்று, உண்மைக்கு மாறாக அல்லாஹ்வைப் பற்றி சந்தேகம் கொள்ளலாயினர்; (அதனால்) அவர்கள் கூறினார்கள்; ''இ(ப்போர்)க் காரியத்தில் நமக்கு சாதகமாக ஏதேனும் உண்டா?'' (என்று, அதற்கு) ''நிச்சயமாக இக்காரியம் முழுவதும் அல்லாஹ்விடமே உள்ளது'' என்று (நபியே!) நீர் கூறுவீராக! அவர்கள் உம்மிடம் வெளிப்படையாகக் கூற முடியாத ஒன்றைத் தம் நெஞ்சங்களில் மறைத்து வைத்திருக்கின்றனர்;. அவர்கள் (தமக்குள்) கூறிக்கொள்ளுகிறார்கள்; ''இக்காரியத்தால் நமக்கு ஏதேனும் சாதகமாக இருந்திருந்தால் நாம் இங்கு கொல்லப்பட்டு இருக்க மாட்டோம்;'' ''நீங்கள் உங்கள் வீடுகளில் இருந்திருந்தாலும், யாருக்கு மரணம் விதிக்கப்பட்டுள்ளதோ, அவர்கள் (தன் கொலைக்களங்களுக்கு) மரணம் அடையும் இடங்களுக்குச் சென்றே இருப்பார்கள்!'' என்று (நபியே!) நீர் கூறும். (இவ்வாறு ஏற்பட்டது) உங்கள் நெஞ்சங்களில் உள்ளவற்றை அல்லாஹ் சோதிப்பதற்காகவும், உங்கள் நெஞ்சங்களில் உள்ளவற்றை (அகற்றிச்) சத்தப்படுத்துவதற்காகவும் ஆகும் - இன்னும், அல்லாஹ் உள்ளங்களில் உள்ளவற்றை அறிபவன்.

3:186 .(முஃமின்களே!) உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள்;. உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்து, இணை வைத்து வணங்குவோரிடமிருந்தும் நிந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள்;. ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, (இறைவனிடம்) பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மையைத் தேடி தரும்) தீர்மானத்துக்குரிய செயலாகும;

3:165 .இன்னும் உங்களுக்கு (உஹதில்) ஒரு துன்பம் வந்துற்றபோது, நீங்கள் (பத்ரில்) அவர்களுக்கு இது போன்று இருமடங்குத் துன்பம் உண்டு பண்ணியிருந்த போதிலும், ''இது எப்படி வந்தது?'' என்று கூறுகிறீர்கள். (நபியே!) நீர் கூறும்; இது (வந்தது) உங்களிடமிருந்தேதான் - நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கிறான்,''

3:166 .மேலும், (நீங்களும் முஷ்ரிக்குகளும் ஆகிய) இரு கூட்டத்தினரும் சந்தித்த நாளையில் உங்களுக்கு ஏற்பட்ட துன்பங்கள் அல்லாஹ்வின் அனுமதி கொண்டே தான் (ஏற்பட்டன. இவ்வாறு ஏற்பட்டதும்) முஃமின்களை (சோதித்து) அறிவதற்காகவேயாம்.

8:46 .இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான்.

8:47 .பெருமைக்காகவும், மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகவும் தங்கள் வீடுகளிலிருந்து வெளிக்கிளம்பி (முஸ்லிம்களுக்கெதிராக பத்ரில்) மக்களை அல்லாஹ்வுடைய பாதையை விட்டுத் தடுத்தார்களே அவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள் - அவர்கள் செய்வதை அல்லாஹ் சூழ்ந்து அறிந்தவனாக இருக்கிறான்.

8:65 .நபியே! நீர் முஃமின்களை போருக்கு ஆர்வ மூட்டுவீராக உங்களில் பொறுமையுடையவர்கள் இருபது பேர் இருந்தால், இருநூறு பேர்களை வெற்றி கொள்வார்கள். இன்னும் உங்களில் நூறு பேர் இருந்தால் அவர்கள் காஃபிர்களில் ஆயிரம் பேரை வெற்றி கொள்வார்கள்; ஏனெனில் (முஃமின்களை எதிர்ப்போர்) நிச்சயமாக அறிவில்லாத மக்களாக இருப்பது தான் (காரணம்).

8:66 .நிச்சயமாக உங்களில் பலவீனம் இருக்கின்றது என்பதை அறிந்து, தற்சமயம் அல்லாஹ் (அதனை) உங்களுக்கு இலகுவாக்கி விட்டான் - எனவே உங்களில் பொறுமையும் (சகிப்புத் தன்மையும்) உடைய நூறு பேர் இருந்தால் அவர்கள் இருநூறு பேர் மீது வெற்றிக் கொள்வார்கள்; உங்களில் (இத்ததையோர்) ஆயிரம் பேர் இருந்தால் அல்லாஹ்வின் உத்திரவு கொண்டு அவர்களில் இரண்டாயிரம் பேர் மீது வெற்றிக் கொள்வார்கள் - (ஏனெனில்) அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.

11:11 .ஆனால் (துன்பங்களைப்) பொறுமையுடன் சகித்து எவர் நற்கருமங்கள் செய்கின்றார்களோ, அவர்களுக்கு மன்னிப்பும், மகத்தான நற்கூலியும் உண்டு.

7:128 .மூஸா தம் சமூகத்தாரிடம்; ''அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்; இன்னும் பொறுமையாகவும் இருங்கள்; நிச்சயமாக (இந்த) பூமி அல்லாஹ்வுக்கே சொந்தம் - தன் அடியார்களில், தான் நாடியவர்களுக்கு அவன் அதை உரியதாக்கி விடுகின்றான் - இறுதி வெற்றி, பயபக்தியுடையவர்களுக்கே கிடைக்கும்'' என்று கூறினார்.

11:49. (நபியே! உமக்கு) இது மறைவான நிகழ்ச்சிகளில் உள்ளதாகும்; நாம் இதனை உமக்கு (வஹீ மூலம்) அறிவித்தோம், நீரோ அல்லது உம்முடைய கூட்டத்தினரோ இதற்கு முன் இதனை அறிந்திருக்கவில்லை; நீரும் பொறுமையைக் கைக் கொள்வீராக! நிச்சயமாக இறுதியில் (நல்ல) முடிவு பயபக்தி உடையவர்களுக்குத் தான் (கிட்டும்).

11:115. (நபியே! எந்நிலையிலும்) பொறுமையைக் கடைப்பிடிப்பீராக! நிச்சயமாக அல்லாஹ் அழகிய செயல்கள் செய்வோரின் கூலியை வீணாக்கி விடமாட்டான்.
12:111 .(நிச்சயமாக) அவர்களின் வரலாறுகளில் அறிவுடையோருக்கு (நல்ல) படிப்பினை இருக்கிறது; இது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாக இருக்கவில்லை, மாறாக இதற்கு முன் உள்ள (வேதத்)தையும் இது உண்மையாக்கி வைக்கிறது. ஒவ்வொரு விஷயத்தையும் இது விவரித்துக் காட்டுவதாகவும், நம்பிக்கை கொண்ட சமூகத்தவருக்கு நேர்வழியாகவும், ரஹ்மத்தாகவும் இருக்கிறது


20:132. (நபியே!) உம் குடம்பத்தினரைத் தொழுது வருமாறு நீர் ஏவுவீராக! (தொழுகையின் மீது) நீர் பொறுமையும், உறுதியும் கொண்டிருப்பீராக! நாம் உம்மிடம் உணவு கேட்கவில்லை; ஆனால் உமக்கு உணவை நாம் கொடுக்கிறோம்; இறுதியாகச் சிறந்த நிலை பயபக்தி(யுடையோரு)க்குத் தான்.

Saturday, May 09, 2009

த.த.ஜ.வினர் அடித்த அடியில்.

அடிபட்ட இமாம் முஸ்லிமுக்கு எதிராக போலீஸில் புகார் கொடுக்க மாட்டேன் என்றார்.


Friday, May 08, 2009

ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி யார் முன் மாதிரி.

யாருக்கு யார் முன் மாதிரி. இவர்கள் யாரை முன் மாதிரி என்கிறார்கள்.

அல்லாஹ்வின் சட்டங்களையே அமுல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தும் ஆயத்துக்கள் அனைத்தும் முழுமையான ஆட்சி அதிகாரம் கிடைத்த பின் செயல்படுத்துவதற்கே சான்றாக உள்ளன. அவற்றையும் அடுத்தடுத்து பார்ப்போம் என்று முந்தைய வெளியீட்டை முடித்து இருந்தோம். அதன் தொடருக்கு முன்னதாக இப்பூமியின் கருவூலங்களுக்கு அதிகாரியாக என்னை நியமியுங்கள் நான் அறி;ந்தவன் பேணிக் காப்பவன் என்று( 12:55) கூறிய யூசுப் (அலை) அவர்களிடம் உள்ள அரசியல் முன் மாதிரிகளை நினைவு கூறுவது இன்றைய சூழலுக்கு பொருத்தமான ஒன்று. தேர்தல் நேரமாக - சாதனை பிரச்சார நேரமாக இருப்பதால் மிக பொருத்தமானது. எனவே அதனை முதலில் பார்ப்போம்.

ரேஷன் முறையை உலகுக்கு அறிமுகப்படுத்திய முன் மாதிரி அரசியல்வாதி.

ரேஷன் முறையை கொண்டு வந்தது காங்ரஸ் ஆட்சிதான். இல்லை திமு.க. ஆட்சிதான். இல்லை இல்லை அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில்தான் ரேஷன் முறையை கொண்டு வந்தார்கள். இப்படி வயதுக்கு தக்கவாறு வாதிடக் கூடியவர்கள் இருக்கிறார்கள். மக்களுக்கு தேவைப்படும் பொருள்களில் உற்பத்தி பற்றாக்குறை ஏற்பட்டால் பஞ்சம், தட்டுப்பாடு வரும். எனவே அந்த பொருள் எல்லோருக்கும் கிடைக்கும் வண்ணம் அரசாங்கமே வினியோகிக்க வேண்டும். இதைச் செய்யாவிட்டால் பணக்காரர்களுக்கு மட்டுமே அவை கிடைக்கும். ஏழைகளுக்கு கிடைக்காது. எனவே ரேஷன் முறை அவசியம். இந்த ரேஷன் முறையை உலகுக்கு அறிமுகப்படுத்திய முன் மாதிரி அரசியல்வாதி யூசுப் (அலை) அவர்கள்தான் என்பதை அறிகிறோம்.

முன் மாதிரி உணவு அமைச்சராக இருந்து காட்டியவர்.

பல்வேறு துறைகளுக்கு அமைச்சர்களை ஏற்படுத்த வேண்டும் என்ற வழி முறையை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர். உணவு அமைச்சர் என்று இன்று நாம் சொல்கிறோமே அந்த உணவு அமைச்சர் என்ற பதவியை முதலில் வகித்தவர். முன் மாதிரி உணவு அமைச்சராக இருந்து காட்டியவர் யூசுப் (அலை) அவர்கள்தான்.

தகுதி உடையயவர்கள் பதவியை கேட்டுப் பெற வேண்டும்.

தகுதி உடைய பலர் உள்ளத்தில் ஒன்று வைத்துக் கொண்டு புறம் ஒன்று பேசக் கூடியதைப் பார்க்கிறோம். அப்படி செய்ய வேண்டும் இப்படிச் செய்ய வேண்டும் என வானளாவ ஆய்வுரை அறிவுரை வழங்குவார்கள். பிறரை ஏவி விடுவார்கள். பலன் கிடைத்தால் நான் சொன்ன யோசனை என்பார்கள். பிரச்சனை என்றாகி விட்டால் சொல்லைக் கேட்டு செயல்பட்டவனின் தலையில் கட்டி நழுவி விடுவார்கள். இதுதான் இன்றைய தகுதி உடையவர்கள் எனப்படுவோர் நிலையாக உள்ளது. மக்கள் நலன் காப்பதற்காக தகுதி உடையயவர்கள் பதவியை கேட்டுப் பெற வேண்டும். இதற்கு உளத்தூய்மைமிக்க முன் மாதிரி அரசியல்வாதியாக யூசுப் (அலை) அவர்கள் இருந்துள்ளார்கள்.

உங்களை சிறையில் அடைத்தவன் ஆட்சியில் பொறுப்பு வகிக்கலாமா?

நடுநிசியில் முன்னெச்சரிக்கை கைது செய்தவன் ஆட்சியில் பொறுப்பு கேட்கலாமர்? உங்களை தடாவில் தள்ளியவன் பொடாவில் போட்டவன் ஆட்சியிலா பொறுப்பு கேட்கிறீர்கள்? உங்களை சிறையில் அடைத்தவன் ஆட்சியில் பொறுப்பு வகிக்கலாமர்? என்றெல்லாம் கேள்விகள் உள்ளது. அசிங்கமான கற்பழிப்பு முயற்சி என்ற பொய் குற்றச்சாட்டுக் கூறி சிறையில் தள்ளப்பட்டவர் நபி யூசுப் (அலை) அவர்கள்.

எந்த ஆட்சி சிறையில் தள்ளியதோ அந்த ஆட்சியில் பதவி வகிக்கலாம்.

எந்த ஆட்சி சிறையில் தள்ளியதோ அந்த ஆட்சியின் போது பஞ்சம் வரும் என்பதை முதன் முதலில் தெளிவாக தெரிந்தார்கள் யூசுப் (அலை) அவர்கள். உடனே நம்மை சிறையில் தள்ளிய ஆட்சியில் பஞ்சம் வரட்டும். அதன் மூலம் அந்த ஆட்சிக்கு கெட்ட பெயர் வரட்டும் என பழி தீர்க்க நாடவில்லை. பஞ்சத்தை சமாளிக்கும் பொறுப்பை ஏற்றார்கள். நிரபராதியை சிறையில் அடைத்த ஆட்சியாக இருந்தாலும் சமுதாய நலன் கருதி அந்த ஆட்சியில் பங்கு வகிக்கலாம். எந்த ஆட்சி சிறையில் தள்ளியதோ அந்த ஆட்சியில் பதவி வகிக்கலாம். இந்த பரந்த மனப்பான்மையுடன் கூடிய தூய அரசியல் வழி காட்டலை சிறந்த அரசியல்வாதி யூசுப் (அலை) அவர்களிடம் காண்கிறோம்.

முஸ்லிம் அல்லாதவர் ஆட்சியில் முஸ்லிம்கள் பதவி வகிக்கலாம்.

முஸ்லிம் அல்லாதவர் ஆட்சியில் முஸ்லிம்கள் பதவி வகிக்கலாமா என்ற கேள்விகளும் உள்ளது. தான் ஒரு நபியாக இருந்தும் கவுரவம் பாராமல் சமுதாய நலன் கருதி முஸ்லிம் அல்லாத மன்னரின் கீழ் அமைச்சராக இருந்து சமுதாயத்துக்கு பணியாற்றினார் நபி யூசுப் (அலை) அவர்கள். இதன் மூலம் முஸ்லிம் அல்லாதவர் ஆட்சியில் முஸ்லிம்கள் பதவி வகிக்கலாம். அதன் மூலம் சமுதாயத்துக்கு பணியாற்றலாம் என்பதற்கும் நபி யூசுப் (அலை) அவர்கள் அரசியல் வாழ்வு முன்னுதாரணமாக உள்ளது.

அகில உலகுக்கும் முன் மாதிரி.

15ரூபாய்க்கு பெறுமான கிலோ அரிசியை இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என ஆரம்பித்து ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்குகிறார். இதைப் பார்த்து ஆந்திரா அறிவிக்கிறது. ஆந்திராவுக்கு முன் மாதிரி கலைஞர் கருணாநிதிதான். அகில இந்திய கட்சியினரும் அறிவிக்கிறார்கள். அகில இந்தியாவுக்கும் முன் மாதிரி கலைஞர் கருணாநிதிதான். ஏன் அகில உலகுக்கும் முன் மாதிரி கலைஞர் கருணாநிதிதான் என்று பேசுகிறார்கள். இப்படி மு.க. ஸ்டாலின், மு.க. அழகிரி, தயாநிதி மாறன் பேசினால் நாம் வருத்தப்பட வேண்டியதில்லை.

வேதனைப்படுகிறோம். வெட்கித் தலை குணிகிறோம்.

இப்படி யார் பேசுகிறார்கள். ஓட்டுப் போடுவது ஹராம், அரசியல் ஹராம், தேர்தல் களத்தில் ஈமான் போய் விடும் என ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒவ்வொரு அவதாரம் எடுத்தவர்கள். இட ஒதுக்கீடு தந்தாலும் கோவையில் 19 பேர் கொல்லப்பட்டதற்கு நியாயம் கிடைக்காதவரை கருணாநிதியை எந்தக் காலத்திலும் ஆதரிக்க முடியாது என்று பேசியவர்கள். அந்த சந்தர்ப்பத்துக்கு தகுந்தவாறு குர்ஆன் ஹதீஸ்களைக் கூறிய அந்த அறிஞர்கள்? 15ரூபாய்க்கு பெறுமான கிலோ அரிசியை ஒரு ரூபாய்க்கு தர கலைஞர் கருணாநிதிதான் அகில உலகுக்கும் முன் மாதிரி என்று பேசுவதால் நாம் வேதனைப்படுகிறோம். வெட்கித் தலை குணிகிறோம்.

வழி காட்டியவர் யார்?

வாங்கும் சக்தி குறைந்து வறுமையில் வாடும் மக்களிடம் குறைவான பணம் வாங்கி விட்டு ரேசன் மூலம் அரசாங்கத்தின் சார்பாக நிறைவாகக் கொடுக்கவும் தானமாகக் கொடுக்கவும் வழி காட்டியவர் யார்? ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசிக்கு மட்டுமல்ல ரூபாய்க்கு மூன்று படி அரிசிக்கும் யார் முன் மாதிரி. இதோ அல்குர்ஆன் கூறுகிறது.

அவர்கள் யூசுபிடம் வந்து அமைச்சரே எங்களுக்கும் எங்கள் குடும்பத்தினருக்கும் வறுமை ஏற்பட்டுள்ளது. அற்பமான சரக்குகளையே கொண்டு வந்து இருக்கிறோம். எனவே எங்களுக்கு முழுமையாக உணவுப் பொருள் தருவீராக. எங்களுக்கு தானமாகவும் தருவீராக. 12:88

யார் முன் மாதிரி. இவர்கள் யாரை முன் மாதிரி என்கிறார்கள்.

இன்று ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து பொருள் வாங்குகிறோம். மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு வரையிலும் கூட பண்டமாற்று முறை இருந்து வந்துள்ளது. இப்பொழுதும் கூட கிராமங்களில் பண்டமாற்று முறை இருக்கத்தான் செய்கிறது. நபி யூசுப் (அலை) அவர்கள் காலத்தில் பண்டமாற்று முறைதான். வாங்கும் சக்தி குறைந்து வறுமையில் வாடிய மக்களிடம் மிகக் குறைந்த சரக்குகளை பெற்றுக் கொண்டு (அதாவது மிகக்; குறைந்த விலையில்) உணவுப் பொருள் வழங்கி இருக்கிறார்கள். அதனால்தான் உரிமையுடன் அற்பமான சரக்குகளையே கொண்டு வந்து இருக்கிறோம். எனவே எங்களுக்கு முழுமையாக உணவுப் பொருள் தருவீராக. 12:88 என்று கேட்டுள்ளார்கள். ரூபாய்க்கு மூன்று படி அரிசி, ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என வழங்க அகில உலகுக்கும் யார் முன் மாதிரி. இவர்கள் யாரை முன் மாதிரி என்கிறார்கள்.

அரசு சார்பாக தானங்கள் செய்ய யார் முன் மாதிரி.

இது மட்டுமா அரசு சார்பாக வறுமையில் வாடிய மக்களுக்கு தானமும் செய்துள்ளார்கள். எனவேதான் எங்களுக்கு தானமாகவும் தருவீராக. 12:88 என்றும் கேட்டுள்ளார்கள். இன்று அரசு சார்பாக தானமாக இலவச வேட்டி, சேலை, என பல்வேறு தானங்கள் வழங்கப்படுகிறது. இப்படி அரசு சார்பாக தானங்கள் செய்ய யார் முன் மாதிரி. நபி யூசுப் (அலை) அவர்கள்தான் முன் மாதிரி. யாருக்கு யார் முன் மாதிரி புரிகிறதா? இவர்கள் யாரை முன் மாதிரி என்கிறார்கள். மானங்கெட்டவர்கள்.

இந்த இலவச வீடுகள் திட்டத்துக்கு முன் மாதிரி யார்?

நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா, வீட்டு வசதி வாரியம், குடிசை மாற்று வாரியம், சமத்துவபுரம், காவலர் குடி இருப்பு என அரசாங்கமே வீடுகளை அமைத்துக் கொடுப்பதை பார்க்கிறோம். இந்த இலவச வீடுகள் திட்டத்துக்கு முன் மாதிரி எது? அல்குர்ஆன் கூறுகிறது.

நீங்கள் இருவரும் உங்கள் சமூகத்துக்காக எகிப்து நகரில் வீடுகளை அமைத்துக் கொடுங்கள்; உங்கள் வீடுகளை ஒன்றையொன்று எதிர் நோக்கும் வகையில் ஆக்குங்கள் என்று மூஸாவுக்கும் அவரது சகோதரருக்கும் வஹீ அறிவித்தோம். 10:87. என்று அல்லாஹ் கூறுகிறான். அனைத்துக்கும் முன் மாதிரியாக இஸ்லாமும் இஸ்லாமிய அரசியலும்தான் இருக்கிறது.

முஸ்லிம் சமுதாயத்தை மூலையில் முடங்க வைத்து விட்டார்கள்.

சமுதாயத்தின் மூலம் பிரபலமடைந்தவர்கள், பிரபலமானவர்கள் என்ற ஒரே பலத்தை சந்தர்ப்பத்துக்கு தக்கவாறு தவறாக பயன்படுத்தி விட்டார்கள். இஸ்லாமிய விரோதிகளும் இவர்களை சரியாக பயன்படுத்திக் கொண்டார்கள். பேண்டு போடுவது ஹராம். ஆங்கிலம் ஹராம். அரசியல் ஹராம். ஓட்டுப் போடுவதும் ஓட்டுக் கேட்பதும் தேர்தலில் நிற்பதும் ஹராம் என முஸ்லிம் சமுதாயத்தை மூலையில் முடங்க வைத்து விட்டார்கள்.

அரசியல் சாக்கடை என்று சொன்னது யார்?

அதோடு மட்டுமன்றி அரசியல் சாக்கடை என்ற பிரச்சாரம் வேறு. அரசியல் என்றால் என்ன? ஆட்சி அதிகாரத்தில் இருந்த, இருக்கின்ற, இருக்க முயற்சிக்கின்ற கட்சிகளை அரசியல் கட்சி என்போம். தேர்தலில் போட்டியிடாத கட்சிகளை அரசியல் சார்பற்றது என்போம். அவர்கள் தங்களை சமுதாய அமைப்பு என்பார்கள். இவர்கள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொள்ளும் அரசியலை சாக்கடை என்று அதிகமாகவே பிரச்சாரம் செய்வார்கள். அரசியல் சாக்கடை என்று சொன்னது யார்? அன்றைய அண்ணன் சொன்னார் அரசியல் சாக்கடை என்று. அரசியல் பற்றி அல்லாஹ் என்ன சொல்கிறான்.

அரசியல் பற்றி அல்லாஹ்.

அல்லாஹ் தனது அருளை இம்மக்களுக்கு வழங்கியதற்காக அவர்கள் பொறாமை கொள்கிறார்களா? இப்றாஹீமின் குடும்பத்தாருக்கு வேதத்தையும் ஞானத்தையும் கொடுத்தோம். இன்னும் அவர்களுக்கு மகத்தான ஆட்சியையும் வழங்கினோம்4:54.

வேதத்தை ஞானத்தை தனது அருள் என்று சொன்ன அல்லாஹ் நன்கு கவனிக்க வேண்டும் அதே வரிசையில் ஆட்சி அதிகார அரசியலை தனது அருள் என்று குறிப்பிட்டுள்ளான்.

அண்ணன் வழியா? அல்லாஹ் காட்டிய வழியா? எது சரி சிந்தியுங்கள்.

இப்பூமியில் விரும்பிய இடத்தில் வசித்துக் கொள்ளும் வகையில் இவ்வாறே யூசுபுக்கு அதிகாரம் அளித்தோம். நாம் நாடியோருக்கு நமது அருளை வழங்குவோம். 12:56 முஸ்லிம் அல்லாதவர் ஆட்சியில் நபி யூசுப் (அலை) அவர்கள் வகித்த அமைச்சர் பதவியையும் தனது அருள் என்றே அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான்.

அல்லாஹ் சொல்கிறான் அரசியல் தனது அருள் என்று. அண்ணன் சொன்னார் அரசியல் சாக்கடை என்று. அரசியல் சாக்கடை என்பவர்கள் யார் வழியில் நடக்கிறார்கள். அண்ணன் வழியா?அல்லாஹ் காட்டிய வழியா? எது சரி சிந்தியுங்கள்.

உழுபவனுக்கே நிலம் சொந்தம் யார் முன் மாதிரி.

திராவிட கட்சிகள் பிரபலமாக வேகமாக வளர விளம்பரமாக மக்களிடம் வரவேற்பை பெற மூல காரணமாக இருந்தது எவை. உழுபவனுக்கே நிலம் சொந்தம். இடைத் தரகு இன்றி விவசாயியே நேரடியாக விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காக உழவர் சந்தை. இது போன்ற திட்டங்களுக்குரிய சட்டங்கள். ஏழையின் சிரிப்பில் இறைவன் என்பன போன்ற தத்துவங்கள்தான். உழுபவனுக்கே நிலம் சொந்தம் யார் முன் மாதிரி. இடைத் தரகு இன்றி விவசாயியே நேரடியாக விற்பனை செய்ய வேண்டும் (அதாவது உழவர் சந்தை) என இவை யாவும் இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஆட்சி காலத்தில் போட்ட சட்டமாகும். ஏழையின் சிரிப்பில் இறைவன் என்பது ஹதீஸ் குத்ஸியில் இருந்து எடுத்த தத்துவமாகும்.

ரூபாய்க்கு மூன்று படி அரிசி என்றார்கள் ஆட்சிக்கு வந்தார்கள்.

முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இஸ்லாத்தை சொல்ல வேண்டிய முஸ்லிம்கள் பல்வேறு பெயர்களில் இஸ்லாமிய பிரச்சார மேடை அமைத்தார்கள். இஸ்லாமிய பிரச்சாரத்துக்கு யாரை அழைத்தார்கள் அண்ணாத்துரை, கருணாநிதி, நெடுஞ்செழியன் என திராவிட கட்சியினரை அழைத்தார்கள். இவர்கள் முஸ்லிம்களிடம் போய் பேச வேண்டுமே என்று இஸ்லாமிய நூல்களை படித்தார்கள். இஸ்லாம் கூறும் அரசியலை ஆட்சி முறையை அறிந்தார்கள். வாங்கும் சக்தியற்று வறுமையில் வாடும் மக்களுக்கு குறைந்த விலையில் ரேசன் மூலம் அரசாங்கத்தின் சார்பாக உணவு பொருள் கொடுக்கும் திட்டத்தை உணர்ந்தார்கள். ரூபாய்க்கு மூன்று படி அரிசி என்றார்கள் ஆட்சிக்கு வந்தார்கள்.

அல்லாஹ் சொல்வது இஸ்லாமா? அண்ணன்கள் சொல்வது இஸ்லாமா?

பாய்மார்கள் (முஸ்லிம்கள்) விழித்துக் கொள்ளக் கூடாது தலையணை போட்டு உறங்க வேண்டும் என்பதற்காக அரசியல் சாக்கடை என்றார்கள். அரசியல் தனது அருள் என்று அல்லாஹ் சொன்னதை விட்டு விட்டு அரசியல் சாக்கடை என்று அண்ணன் சொன்னதை இஸ்லாமிய பிரச்சாரமாக செய்து கொண்டிருக்கிறார்கள். அல்லாஹ் சொல்வது இஸ்லாமா? அண்ணன்கள் சொல்வது இஸ்லாமா?

முஸ்லிம்கள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொண்டால்தான் இவை மக்கள் நலனுக்கான இஸ்லாமிய சட்டங்கள் என்பதை பகிரங்கப்படுத்தி செயல்படுத்த முடியும். அதுவும் இஸ்லாமிய பிரச்சாரமாக அமைந்து விடும். இஸ்லாம் வளரும். இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஆட்சியாளராக ஆன பின்தான் இஸ்லாம் வேகமாக வளர்ந்தது. இன்ஷhஅல்லாஹ் விழித்தெழுவோம். அரசியலில் முழுமையாக ஈடுபட்டு ஆட்சி அதிகாரம் மூலம் செயல்படுத்தி அனைத்துக்கும் முன்மாதிரி இஸ்லாம்தான் என்பதை உலகுக்கு உணர்த்துவோம்.
தொடரும் இன்ஷhஅல்லாஹ்.



Monday, May 04, 2009

இனில் ஹுகுமு இல்லாஹ் லில்லாஹ்

ஜனநாயகம் நவீன கால இணை வைப்பு என்ற இந்த வாதம் வைக்கக் கூடியவர்களில் அதிகமானவர்கள் தங்கள் கருத்துக்கு ஆதாரமாக முதலில் கூறக் கூடிய குர்ஆன் வசனம் 12:40என்பதாகும்.

இப்படி குறிப்பிட்டு விட்டு 12:40இன் முழு வசனத்தையும் கூறுவதில்லை. 12:40இல் உள்ள இனில் ஹுகுமு இல்லாஹ் லில்லாஹ் என்று மட்டுமே சொல்வார்கள்.

இது 12:40யின் முழு வசனம் இல்லை. 12:40ஆவது ஆயத்தில் உள்ள ஒரு சிறு பகுதி மட்டுமே இது என்பதை முந்தைய வெளியீட்டில் குறிப்பிட்டிருந்தோம்.

இனில் ஹுகுமு இல்லாஹ் லில்லாஹ் என்ற வார்த்தை இதே அத்தியாயத்தில் 67ஆவது வசனத்திலும் சூரத்துல் அஃராப் 57ஆவது வசனத்திலும் இடம் பெற்றுள்ளது.

இருந்தாலும் ஜனநாயகம் நவீன கால இணை வைப்பு என்ற கருத்துடையவர்கள் அனைவருமே 12:40தையே ஆதாரமாக கூறுவார்கள். அதில்தான் அவர்களுடைய ஆய்வும் கருத்தும் தவறானது என்பதற்குரிய ஆதாரமும் உள்ளது.

குர்ஆனில் ஒரு சில வசனங்களை அந்த ஒரு வசனத்தின் மூலமே முழுமையாக விளங்கலாம். ஒரு சில வசனங்களில் அந்த ஒரு வசனத்தின் ஒரு சிறு பகுதி பகுதியிலேயே முழுமையான விளக்கம் கிடைத்து விடும். பல வசனங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகவே இருக்கும்.

குர்ஆனுக்கு விளக்கம் குர்ஆன் என்பதை அனைவருமே ஏற்றிருக்கிறோம். குர்ஆனின் ஒரு வசனத்துக்கு இன்னொரு வசனம் விளக்கமாக இருக்கும். ஒரு வசனத்துக்கு இன்னொரு வசனம் தொடர்புடையதாக இருக்கும். அந்த வசனங்கள் வெவ்வேறு அத்தியாயங்களிலும் இடம் பெற்றிருக்கும். முன் பின் வசனங்களாகவும் இடம் பெற்றிருக்கும். ஒரு வசனத்தை முழுமையாக விளங்க அதன் முன் பின் வசனங்களையோ, வெவ்வேறு இடங்களில் இடம் பெற்றுள்ள அந்த கருத்துடன் தொடர்புடைய வசனங்களையோ பார்க்க வேண்டும். 12:40ஆவது வசனத்தை பொருத்தவரை முழுமையாக விளங்க அதன் முன் வசனமான 39ஆவது வசனத்தையும் படிக்க வேண்டும்.

குர்ஆன் அல்லாஹ்வுடைய கலாம்தான் குர்ஆன் முழுவதுமே அல்லாஹ்வுடைய வார்த்தைகள்தான் என்பதில் யாருக்குமே மாற்றுக் கருத்து கிடையாது. அன ரப்புக்குமுல் அஃலா என்று பிர்அவ்ன் சொன்னதை அல்லாஹ் சொல்லிக் காட்டியுள்ளான். இதை பிர்அவ்ன் சொன்னான் என்றே சொல்லுவோம்.

மனிதர்களின் முன்னும் பின்னும் வலமும் இடமும் வந்து வழிகெடுப்பேன் என்று சைத்தான் சபதம் ஏற்றதை அல்லாஹ் குர்ஆனில் சொல்லிக் காட்டியுள்ளான். இதை சைத்தான் சொன்னான் என்றுதான் சொல்லுவோம். அல்லாஹ் சொன்னான் என்று சொல்ல மாட்டோம். குர்ஆனில் அல்லாஹ் சொல்லிக் காட்டியுள்ளதையெல்லாம் அல்லாஹ் சொன்னான் என்று சொன்னால் பல இடங்களில் அர்த்தம் அனர்த்தனமாக ஆகி விடும்.

12:40இல் இனில் ஹுகுமு இல்லாஹ் லில்லாஹ் -அல்லாஹ் ஒருவனுக்கே அன்றி (வேறெவர்க்கும்) அதிகாரம் இல்லை என்று அல்லாஹ் சொல்லவில்லை. யூசுப் அலை அவர்களே தங்களது பிரச்சாரத்தின் போது இப்படி குறிப்பிடுகிறார்கள். இதைக் கூட சரியாகப் புரியாமல்தான் 12:40இல் அல்லாஹ் சொல்லி உள்ளதாக அவசர கோலத்தில் இந்தக் கருத்துடையவர்கள் அனைவரும் சொல்லி வருகிறார்கள்.

யூசுப்(அலை) அவர்களின் பிரச்சாரத்தை பாருங்கள்.
''சிறையிலிருக்கும் என் இரு தோழர்களே! வெவ்வேறான பல தெய்வங்கள் இருப்பது நல்லதா? அல்லது (யாவரையும்) அடக்கி ஆளகின்ற ஒருவனான அல்லாஹ்வா? (12:39 )

''அவனையன்றி நீங்கள் வணங்கிக் கொண்டிருப்பவை யாவும் நீங்கள் உங்கள் மூதாதையரும் வைத்துக் கொண்ட (வெறும் பற்பனைப்) பெயர்களேயன்றி வேறில்லை அவற்றுக்கு அல்லாஹ் யாதொரு ஆதாரத்தையும் இறக்கி வைக்கவில்லை அல்லாஹ் ஒருவனுக்கே அன்றி (வேறெவர்க்கும்) அதிகாரம் இல்லை. அவனையன்றி (வேறு எவரையும்) நீங்கள் வணங்கக் கூடாது என்று அவன் (உங்களுக்குக்) கட்டளையிட்டிருக்கின்றான். இதுவே நேரான மார்க்கமாகும் ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் இதனை அறிந்து கொள்வதில்லை.(12:40)

இதுதான் யூசுப்(அலை) அவர்கள் செய்த பிரச்சாரம். இப்படி பிரச்சாரம் செய்த நபி யூசுப்(அலை) அவர்கள்தான் ''(இந்த) பூமியின் களஞ்சியங்களுக்கு என்னை (அதிகாரியாய்) ஆக்கிவிடுவீராக் நிச்சயமாக நான் (அவற்றைப்) பாதுகாக்க நன்கறிந்தவன்.'' 12:55 என்று உணவு அமைச்சர் என்ற ஒரு பொறுப்பை கேட்டுப் பெற்றுள்ளார்.

இப்படி பதவியை கேட்டுப் பெற்ற யூசுப் (அலை) அவர்கள் அல்லாஹ் ஒருவனுக்கே அன்றி (வேறெவர்க்கும்) அதிகாரம் இல்லை என்று பிரச்சாரம் செய்த யூசுப் (அலை) அவர்கள் நபியாக இருந்தும் முழு ஆட்சி அதிகாரத்தையும் கேட்டுப் பெறவில்லை. ஏற்கனவே ஆட்சியில் இருக்கும் மன்னரின் ஆட்சியில்தான் ஒரு துறையை மட்டும் கேட்டுப் பெற்றார்கள். அந்த மன்னரின் கீழ்தான் மந்திரியாக இருந்துள்ளார்கள். அந்த நாட்டு மன்னரின் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு அதை செயல்படுத்தக் கூடிய பொறுப்பிலும்தான் நபி யூசுப் (அலை) அவர்கள் இருந்துள்ளார்கள். இதற்குரிய ஆதாரமும் இந்த அத்தியாயத்தில்தான் உள்ளது.

அந்த மன்னரின் சட்டப்படி தமது சகோதரரை எடுத்துக் கொள்ள முடியாதவராக இருந்தார் என்பது அல்குர்ஆன் 12:76இல் உள்ள ஒரு சிறு பகுதியாகும். இதன் மூலம் நபி யூசுப்(அலை) அவர்கள் ஏனைய விஷயங்களில் அந்த நாட்டின் சட்டங்களையே செயல்படுத்தி வந்திருக்கிறார். அவரது சகோதரரை எடுத்துக் கொள்ள அந்த நாட்டின் சட்டத்தில் இடமில்லை. ஆனால் அல்லாஹ்வின் சட்டத்தில் இடமிருக்கிறது.

அதனால்தான் திருடர்களுக்குரிய தண்டனை என்ன? (அல்குர்ஆன் 12:74) என்று அவர்களிடம் கேட்டுள்ளார்கள். நபி யாகூப் (அலை) அவர்கள் சமுதாயத்துக்கு அல்லாஹ் அருளிய சட்டத்தை கேட்டு செயல்படுத்தி இருக்கிறார். அல்லாஹ் ஒருவனுக்கே அன்றி (வேறெவர்க்கும்) அதிகாரம் இல்லை என்ற வசனப்படி அல்லாஹ்வின் சட்டத்தைத்தான் அமுல்படுத்த வேண்டும் என்ற நோக்கில் கேட்ட கேள்வி அல்ல. அந்த மன்னரின் சட்டப்படி தமது சகோதரரை எடுத்துக் கொள்ள முடியாதவராக இருந்தார் அதனால்தான் என்பதும் குர்ஆன் மூலமே மிகத் தெளிவாக ஆகி விட்டது.

ஒரு ஆட்சியாளரின் கீழ் இருக்கும்போது அந்த ஆட்சியாளரின் சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடக்கலாம். அந்த சட்டத்தை அமுல்படுத்தக் கூடிய அமைச்சர்கள் போன்ற பொறுப்புகளில் இருக்கலாம். இது இனில் ஹுகுமு இல்லாஹ் லில்லாஹ் -அல்லாஹ் ஒருவனுக்கே அன்றி (வேறெவர்க்கும்) அதிகாரம் இல்லை என்ற ஆயத்துக்கு முரணானது இல்லை என்பதற்குரிய தெளிவான ஆதாரமாகும்.

எந்த நபி இனில் ஹுகுமு இல்லாஹ் லில்லாஹ் -அல்லாஹ் ஒருவனுக்கே அன்றி (வேறெவர்க்கும்) அதிகாரம் இல்லை என்று பிரச்சாரம் செய்தார்களோ அந்த நபி யூசுப் (அலை) அவர்களைக் கொண்டே நிரூபிக்கப்பட்டுவிட்ட உண்மையாகும்.

அல்லாஹ்வின் சட்டங்களை அமுல்படுத்தாமல் அமுல்படுத்த முடியாமல் ஒரு நாட்டின சட்டத்தை அமுல்படுத்தக் கூடிய அமைச்சர் பதவியையும் அல்லாஹ் தனது அருள் என்றே குறிப்பிட்டுள்ளான்.

யூஸுஃப் தான் விரும்பிய விதத்தில காரியங்கள் செய்து வர அந்த நாட்டில் யூஸுஃபுக்கு நாம் இவ்வாறே வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தோம். இவ்வாறே நாம் நாடியவருக்கு நமது அருள் கிடைக்கும் படிச் செய்கின்றோம். நன்மை செய்பவர்களின் கூலியை நாம் வீணாக்க மாட்டோம். (அல் குர்ஆன் 12:56)

ஜனாதிபதி, பிரதமர், எம்.பி, எம்.எல்.ஏ. என கவுன்சிலர் வரை அனைத்துமே அல்லாஹ்வுடைய அருள்தான். அல்லாஹ்வே தனது அருள் என்று சொன்ன பிறகு யார்தான் இதை ஹராம் என கூற முடியும். எனவே முஸ்லிம் அல்லாதவர்கள் ஆட்சி புரியும் நாடுகளில் இஸ்லாத்தின் வணக்க வழிபாடுகள் சம்பந்தமான சட்டங்களை தவிர மற்ற மற்ற சட்டங்களில் அந்த ஆட்சிக்கு கட்டுப்படலாம். அதை நடைமுறைப்படுத்தலாம். அவற்றை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளாக அமைச்சர்களாக இருக்கலாம். அவை அல்லாஹ்விடத்தில் குற்றமாக ஆகாது. இதற்கு சான்றாகத்தான் சகோதரர்கள் ஆதாரம் என காட்டியுள்ள 12:40இல் இனில் ஹுகுமு இல்லாஹ் லில்லாஹ் -அல்லாஹ் ஒருவனுக்கே அன்றி (வேறெவர்க்கும்) அதிகாரம் இல்லை என்பதன் முன் பின் வசனங்களும் தொடர்புடைய வசனங்களும் உள்ளன.

அல்லாஹ்வின் சட்டங்களையே அமுல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தும் ஆயத்துக்கள் அனைத்தும் முழுமையான ஆட்சி அதிகாரம் கிடைத்த பின் செயல்படுத்துவதற்கே சான்றாக உள்ளன. அவற்றையும் அடுத்தடுத்து பார்ப்போம். இன்ஷhஅல்லாஹ்.

Friday, May 01, 2009

ஜனநாயகம் நவீன கால இணை வைப்பு என்ற கருத்து தவிடுபொடியாகிவிடும்.

சொத்தை வாதங்கள் மெத்தை போட்டு நடு வீட்டில் படுத்துக் கொள்ளும்.

ஜனநாயகம் என்பது நவீன கால இணை வைப்பு என்று 1995ஆம் ஆண்டு எழுதிய அருட்செல்வன் ஜவாஹிருல்லாஹ் இப்பொழுது தேர்தலில் போட்டியிடுவதால் அவர் இப்பொழுது அந்தக் கருத்தில் இல்லை என்பது உறுதியாகி விட்டது.

அருட்செல்வன் எழுதுவதற்கு முன்பே இந்த வாதம் வைக்கக் கூடியவர்கள் நீண்ட நெடுங்காலமாக இருந்து வருகிறார்கள். ஜனநாயகம் என்பது நவீன கால இணை வைப்பு என்ற வாதத்தை நிலை நாட்ட நீண்ட நெடுந் தொடர்களையும் எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களது வாதத்தின் மூலம் ஜனநாயகம் என்றாலே ஷpர்க். ஜனநாயகம் என்ற வார்த்தையே ஷpர்க். ஜனநாயகம் என்றாலே ஹராம் என்பது போன்ற மாயையை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இளைஞர்களிடையே பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

அதற்கு முதல் காரணம் ஜனநாயகம் என்ற வட மொழி சொல்லுக்கு நமது தாய்மொழியான தமிழில் என்ன அர்த்தம் என்பது தெரியாததுதான். ஜனநாயகம் என்பதை ஒரு மந்திரச் சொல்லாகவே பயன்படுத்தி வருகிறார்கள். எனவே ஜனநாயகம் என்ற வட மொழி சொல்லுக்கு நமது தாய்மொழியான தமிழில் என்ன அர்த்தம் என்பதை தெரிய வைத்து விட்டால் அந்த மாயை தமிழ் மக்களை விட்டும் விலகி விடும். அந்த தாக்கம் தனாக தகர்ந்து விடும் இன்ஷhஅல்லாஹ். எனவே ஜனநாயகம் என்பதற்கு என்ன அர்த்தம் என்பதை முதலில் பார்ப்போம்.

ஜனம் என்றால் மக்கள் என்று அர்த்தம். நாயகம் என்றால் தலைவர், தலைமை என்று அர்த்தம். ஜனநாயகம் என்றால் மக்கள் தலைவர், மக்கள் தலைமை என்று அர்த்தம். தமிழ் மக்களுக்கு புரியும்படியான மக்கள் தலைமை என்ற வார்த்தையை பயன்படுத்தி ஹராம், ஷpர்க் என்ற வாதம் வைத்திருக்க வேண்டும் அப்படி வைத்திருந்தால் மக்கள் தலைமை ஹராமா? மக்கள் தலைமை ஷpர்க்கா? எப்படி என்ற எதிர் கேள்வி விரைவாக வந்திருக்கும்.

ஜனநாயகம் நவீன கால இணை வைப்பு என்பவர்கள் தங்கள் வாதத்துக்கு வலு சேர்க்க இஸ்லாமிய சட்டம்தான் ஆள வேண்டும் என்பார்கள். இஸ்லாமிய ஆட்சி என்ற கோஷத்தையும் வைப்பார்கள். கோஷம் நன்றாகத்தான் இருக்கிறது. மார்க்கத்தை பேணக் கூடிய பேணாத எல்லா தரப்பு முஸ்லிம்களையும் எளிதில் ஈர்க்கக் கூடிய கோஷம்தான் இது. எல்லா முஸ்லிம்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய விரும்பக் கூடிய கோஷமாகத்தான் இருக்கிறது.

ஒரு நாட்டை இஸ்லாமிய சட்டம்தான் ஆள வேண்டும் என்றால் முதலில் சட்ட திட்டங்களை வகுக்கக் கூடிய அதிகாரத்துக்கு முஸ்லிம்கள் வர வேண்டும். அதற்கு முதல்படி ஆட்சியில் அமர்வது. இந்த வாதக்காரர்கள் கூற்றுப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஜனநாயக முறையில் ஆட்சிக்கு வருவது ஹராம், ஷpர்க் என்றாகி விட்டது. அப்படியானால் இஸ்லாமிய முறைப்படி ஆட்சிக்கு வருவது எப்படி? ஆட்சியில் அமர்வது எப்படி? எந்த முறையில் ஆட்சிக்கு வர வேண்டும் என்று இஸ்லாம் கூறி இருக்கிறது என்பதை இந்த வாதக்காரர்கள் கூற வேண்டும். இது பற்றி அவர்கள் இதுவரை பகிரங்கப்படுத்தவில்லை.

யூதர்களும், கிறிஸ்தவர்களும் வாழ்ந்த மதீனாவில் இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஆட்சியாளராக ஆனது எப்படி? இந்தக் கேள்விக்கு ஜனநாயகம் நவீன கால இணை வைப்பு என்பவர்கள் என்ன பதில் கூறப் போகிறார்கள். அனைத்து தரப்பு மக்களாலும் குறிப்பாக பெரும்பான்மை மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மக்கள் தலைவராக இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஆட்சிக்கு வந்தார்களா? பலாத்கார முறையில் மக்களை அடக்கி மதீனாவின் ஆட்சியை கைப்பற்றினார்களா? இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்றும் முஹம்மது நபி ஒரு சர்வாதிகாரி என்றும் இஸ்லாத்தின் எதிரிகள் கூறுவது போலவா.

இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் பிறந்து வளர்ந்து வாழ்ந்த மக்காவில் அவர்கள் குடும்பத்தார் நிறைந்து இருந்த மக்காவில் இருந்தவரை ஆட்சியாளராக ஆகவில்லை. இறுதி நபி ஆட்சிக்கு வந்த முறையை ஆய்வு செய்தாலே போதும். ஜனநாயகம் நவீன கால இணை வைப்பு என்ற கருத்து தவிடுபொடியாகிவிடும். ஜனநாயகம் நவீன கால இணை வைப்பு என்பது இஸ்லாத்திற்கு விரோதமான கொள்கை என்பதும் விளங்கி விடும். இஸ்லாத்தை களங்கப்படுத்த இஸ்லாத்தின் எதிரிகள் கட்டி விட்ட புத்தக கதையை நம்மவர்கள் தூக்கி சுமக்கிறார்கள் என்பது புரிந்து விடும்.

மதீனாவில் இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஆட்சியாளராக ஆனதே ஜனநாயக(ம் எனும் மக்கள் தலைமை) வழியில்தான். அப்படி இருக்கும்போது ஜனநாயகம் என்பது நவீன கால இணை வைப்பு என்ற வாதம் தவறானது என்பதை நிரூபிக்க நீண்ட நெடுந் தொடர்களை எழுத வேண்டியதில்லை. இருந்தாலும் வாதம் என்ற பெயரில் வலம் வந்து விட்டதால் அந்த வாதங்கள் எப்படியெல்லாம் சொத்தையானது என்பதை விளக்கியே ஆக வேண்டும். பதில் அளிக்கா விட்டால் அந்த சொத்தை வாதங்கள் மெத்தை போட்டு நடு வீட்டில் படுத்துக் கொள்ளும். எனவே அந்த சொத்தை வாதங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.